Jump to content

15 வருடங்களின் முன் நான் எழுதி பிரசுரமான ஒரு கவிதை


Recommended Posts

வேற ஒன்றை தேடும் போது இன்று நான் 1996 இல் 22 வயதில் எழுதிய ஒரு கவிதையை Google ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார்.

poemg.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை, நிழலி!

உங்களின் ஏக்கமும், ஆதங்கமும் மிகவும் உறுதியாக, அந்த வயதிலும் ( :D) நன்றாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது!>>>

Link to comment
Share on other sites

22 வயதிலேயே ஆற்றல் உள்ளவராக இருந்துள்ளீர்கள் நிழலி. தொடர்ந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நிழலி.

அந்தக்கவிதையை இப்போது காணும்போது ஏற்படும் மகிழ்வை உணர்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளாண்டவரிடம் கவிதை பத்திரமாக இருந்ததால்...

கவிதையின் வரிகளும், அப்படியே... இருந்திருக்கின்றது.

இல்லாவிட்டால்... அதனை 15 வருடங்களின் பின், ஞாபகமீட்டி எழுதும் போது வரிகளும், அர்த்தமும் மாறி இருக்கலாம்.

நிழலியின், மகிழ்ச்சியில்... நாமும் பங்கு கொள்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளாண்டவரிடம் கவிதை பத்திரமாக இருந்ததால்...

கவிதையின் வரிகளும், அப்படியே... இருந்திருக்கின்றது.

:)

சரியாச் சொன்னீங்க.. அப்ப எழுதினதுகளை இப்ப வாசிக்கிறப்போ.. நானா.. எழுதினேன்னு.. வியப்பாக இருக்கும். :icon_idea:

தொலைந்த எழுத்துக்கள் மீள்கின்ற சந்தோசம் ஒரு தனி வகை. அது நிழலி அண்ணருக்கும் கிடைச்சிருப்பது மகிழ்ச்சி. :)

Link to comment
Share on other sites

பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைத் தொகுப்பின் பெயர் மறந்து போய் கூகுள் ஆண்டவரிடம் முறையிட்டு தேடிக்கொண்டு இருக்கும் போது, அவரது கவிதையுடன் எனது கவிதையும் பிரசுரமான சிற்றிலக்கிய அரசியல் சஞ்சிகையான 'மூன்றாம் மனிதன்' இன் பக்கம் ஒன்றை ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார். நெடுக்கும் தமிழ்சிறியும் குறிப்பிட்டு சொல்லி இருப்பது போன்று தொலைந்து போன எழுத்தை மீண்டும் காணுவது ஒரு அலாதியான விசயம்.

இந்தக் கவிதையை வாசிக்கும் போது இது எல்லாம் ஒரு கவிதையா என்று மனம் கேள்வி கேட்பதையும் சொல்லத்தான் வேண்டும்

எல்லாம் இருக்க, என் மனிசிக்கு இந்தக் கவிதையை காட்டும் போது அவா சொன்னது...."ம்ம்ம்... நீங்கள் போர்வைக்குள் புகுந்து 22 வயதில் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தான் தெரியும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்க, என் மனிசிக்கு இந்தக் கவிதையை காட்டும் போது அவா சொன்னது...."ம்ம்ம்... நீங்கள் போர்வைக்குள் புகுந்து 22 வயதில் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தான் தெரியும்"

:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o

இதுக்கெல்லாம்.... அதிர்ச்சி அடையாதீர்கள் சுபேஸ்.

சாத்திரியார், நிழலி போன்றோரின்.. ஒளிவு, மறைவு இல்லாத எழுத்து வலிமை, எம்மைக் கவர்ந்ததற்க்கும் அதுதான்.... காரணம். :rolleyes::)

Link to comment
Share on other sites

பழைய பெட்டியை தூசு தட்டி நினைவுகளை அகழ்ந்து வரும் அனுபவம் சுகமானது.

நிழலியின் எழுத்துக்களில் (படைப்புகளில்) மரணத்தைக் குறித்த உணர்வு ஓங்கியிருக்கும். முன்னைய ஆக்கங்களிலும் அதே தாக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை திரும்பக் கிடைத்ததற்கு கூகிள் ஆண்டவருக்கு நன்றி. இன்னும் சில மீளவும் வாய்ப்புண்டுதானே!

Link to comment
Share on other sites

பழைய உங்கள் கவிதையை இரை மீட்டியதற்கு நன்றி. நிழலி, ஏன் இப்போ கவிதை எழுதுவதில்லை?

Link to comment
Share on other sites

தங்களின் கவிதை அருமை நிழலி அண்ணா! பழசு என்றாலும் பசுமையாக இருக்குது! :) 7

ஆனால்... இந்தக் கவிதையை எழுதும் போது ..... தங்களுக்கு, கவிதையின் வடிவமைப்பு, கவிதையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஏதாவது மனதளவில் இருந்தனவா? தங்களின் மனநிலை அந்தக் கவிதையினை எழுதும்போது எப்படி இருந்தது?

தற்பொழுது... (கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றவாறு நவீனக் கவிதைகள் முளைக்கும் தற்காலத்தில்) ஒரு கவிதையினை எழுதும்போது எப்படியான மனநிலை தங்களிடம் இருக்கின்றது???

இந்த 15 வருடங்கள் என்பது, கவிதை மற்றும் தங்களின் எழுத்துக்களில்.... எவ்விதமான மாற்றங்களைக் ( முற்றிலும் அரசியல் மாற்றங்கள் தவிர்த்து ) கொண்டுவந்திருக்கின்றது என ..... சுருக்கமாக ஒரு சிறு குறிப்பினை எழுதினால் நன்றாய் இருக்கும். முடிந்தால் தயவுசெய்து எழுதுங்கள். எங்களுக்கும் அனுபவங்களைப் படித்ததாய் இருக்கும்.

நன்றி நிழலி அண்ணா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய உங்கள் கவிதையை இரை மீட்டியதற்கு நன்றி. நிழலி, ஏன் இப்போ கவிதை எழுதுவதில்லை?

முந்தி அவருக்கு நிறைய நேரமிருந்தது கவிதை எழுதினார் இப்ப அவருக்கு மனிசியோடும்,பிள்ளைகளோடுமே நேரம் போகிறது பிறகு எப்படி கவிதை எழுத நேரமிருக்கும் :lol: ...நிழலி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை தொடர்ந்து புதிதாய் கவிதை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

தங்களின் கவிதை அருமை நிழலி அண்ணா! பழசு என்றாலும் பசுமையாக இருக்குது! :) 7

ஆனால்... இந்தக் கவிதையை எழுதும் போது ..... தங்களுக்கு, கவிதையின் வடிவமைப்பு, கவிதையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஏதாவது மனதளவில் இருந்தனவா? தங்களின் மனநிலை அந்தக் கவிதையினை எழுதும்போது எப்படி இருந்தது?

தற்பொழுது... (கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றவாறு நவீனக் கவிதைகள் முளைக்கும் தற்காலத்தில்) ஒரு கவிதையினை எழுதும்போது எப்படியான மனநிலை தங்களிடம் இருக்கின்றது???

இந்த 15 வருடங்கள் என்பது, கவிதை மற்றும் தங்களின் எழுத்துக்களில்.... எவ்விதமான மாற்றங்களைக் ( முற்றிலும் அரசியல் மாற்றங்கள் தவிர்த்து ) கொண்டுவந்திருக்கின்றது என ..... சுருக்கமாக ஒரு சிறு குறிப்பினை எழுதினால் நன்றாய் இருக்கும். முடிந்தால் தயவுசெய்து எழுதுங்கள். எங்களுக்கும் அனுபவங்களைப் படித்ததாய் இருக்கும்.

நன்றி நிழலி அண்ணா! :)

இப்படியான ஆழமான கேள்விகளை ஒரு நல்ல கவிஞரிடம் கேட்பதே சரியாக இருக்கும். சேரனிடமோ அல்லது ஜெயபாலனிடமோ அல்லது தீபச்செல்வனிடமோ கேட்கவேண்டிய கேள்விகளை என்னிடம் போய்க் கேட்கின்றீர்களே

அன்றும் இன்றும் எனக்கு கவிதையின் வடிவமைப்பு பற்றிய எந்த வித பிரக்ஞையும் இருந்ததில்லை. அதன் உள்ளடக்கம் கூட முற்றிலும் என் உணர்வு சார்ந்து மட்டுமே இருக்கும். அந்த நிமிடத்தில் எழும் 'கவிதையை எழுது' என்ற வெடிப்பு மட்டுமே கவிதையை எழுத தூண்டுகின்றது.

இந்தக் கவிதையை மீண்டும் கண்ட பின் தான் இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன் என்று தெரியவந்தது. அதனால் அன்று எழுதும் போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று நினைவில் இல்லை

15 வருடங்களில் எனக்குத் தெரிகின்ற மாற்றம், இந்த இடைவெளியில் அதிகம் வாசித்துள்ளேன் என்பதே. அதன் பாதிப்பு இப்ப எழுதும் கவிதைகளில் வருகின்றது என நினைக்கின்றேன்.

...நிழலி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை தொடர்ந்து புதிதாய் கவிதை எழுதுங்கள்

இது கொஞ்சம் ஓவர் ரதி.... கவிதைகளை ரசிக்கும் எவருக்கும் எவரது கவிதைகளையும் ரசிக்கும் தகுதி இருக்கின்றது.

Link to comment
Share on other sites

பழைய உங்கள் கவிதையை இரை மீட்டியதற்கு நன்றி. நிழலி, ஏன் இப்போ கவிதை எழுதுவதில்லை?

முள்ளிவாய்க்காலின் பின்பு நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை வெறும் 4 தான். இந்த 4 கவிதைகளும் தான் நாட்டு அரசியல் பற்றிய உணர்வு கொஞ்சமும் கலக்காமல் எழுதிய கவிதைகள் (நாட்டு அரசியல் என்று குறிப்பிட்டு எழுதியமைக்கு காரணம் எந்த ஒரு கவிதையிலும், படைப்பிலும் ஏதாவது ஒரு அரசியல் இருக்கும் பெண்ணியம், பாலியல் சுதந்திரம், கடவுள் ஆதரவு மறுப்பு என..).. போராட்ட அரசியல் சார்ந்த விடயங்களே கவிதைகளாக எழுதக் கூடியதாக இருந்தது அல்லது கவிதை எழுதும் வெடிப்பு உணர்வை தந்தது. இப்ப இருக்கும் வெறுமையும் தமிழ் தேசியத்துக்குள் இருக்கும் துரோக அரசியலும் கவிதைக்கு பதிலாக படு தூசனம் நிறைந்த வார்த்தைகளைத் தான் தருகின்றது

Link to comment
Share on other sites

இப்படியான ஆழமான கேள்விகளை ஒரு நல்ல கவிஞரிடம் கேட்பதே சரியாக இருக்கும். சேரனிடமோ அல்லது ஜெயபாலனிடமோ அல்லது தீபச்செல்வனிடமோ கேட்கவேண்டிய கேள்விகளை என்னிடம் போய்க் கேட்கின்றீர்களே

அன்றும் இன்றும் எனக்கு கவிதையின் வடிவமைப்பு பற்றிய எந்த வித பிரக்ஞையும் இருந்ததில்லை. அதன் உள்ளடக்கம் கூட முற்றிலும் என் உணர்வு சார்ந்து மட்டுமே இருக்கும். அந்த நிமிடத்தில் எழும் 'கவிதையை எழுது' என்ற வெடிப்பு மட்டுமே கவிதையை எழுத தூண்டுகின்றது.

இந்தக் கவிதையை மீண்டும் கண்ட பின் தான் இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன் என்று தெரியவந்தது. அதனால் அன்று எழுதும் போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று நினைவில் இல்லை

15 வருடங்களில் எனக்குத் தெரிகின்ற மாற்றம், இந்த இடைவெளியில் அதிகம் வாசித்துள்ளேன் என்பதே. அதன் பாதிப்பு இப்ப எழுதும் கவிதைகளில் வருகின்றது என நினைக்கின்றேன்.

வாசிப்பு என்பது எழுத்துக்களை மேம்படுத்தும் என்பது உண்மைதான் அண்ணா! ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உள்ளே பல அனுபவ முதிர்ச்சிகள் இருக்கும். தங்களது அடுத்த பசுமைக் கவிதையையும் படித்தேன். மிக அருமையான கவிதைக் கோர்ப்பு. காலங்கடந்தும் நிலைத்துநிற்கும் கவிதை.

மனநிலை, சூழ்நிலை மாற்றங்கள் எம் எழுத்துக்களையும் மாற்றுகின்றன.

இப்பொழுதும் தங்கள் புதுக் கவிதைகளை எதிர்பார்க்கின்றோம்!

நன்றி நிழலி அண்ணா! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் 96 இல் இக்கவிதையை எழுதி இருக்கிறீர்கள்..

நான் அப்போதுதான் கவிதையே எழுத ஆரம்பித்தேன்...

இந்தக்கவிதையைப் பார்க்கும்போது இப்போது உங்கள் வளர்ச்சி எங்கேயோ போயிருக்கவேண்டும் ஆனால் போகவில்லை என்ன காரணம்? சோம்பேறித்தனம் கூடிவிட்டதா?

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்காலின் பின்பு நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை வெறும் 4 தான். இந்த 4 கவிதைகளும் தான் நாட்டு அரசியல் பற்றிய உணர்வு கொஞ்சமும் கலக்காமல் எழுதிய கவிதைகள் (நாட்டு அரசியல் என்று குறிப்பிட்டு எழுதியமைக்கு காரணம் எந்த ஒரு கவிதையிலும், படைப்பிலும் ஏதாவது ஒரு அரசியல் இருக்கும் பெண்ணியம், பாலியல் சுதந்திரம், கடவுள் ஆதரவு மறுப்பு என..).. போராட்ட அரசியல் சார்ந்த விடயங்களே கவிதைகளாக எழுதக் கூடியதாக இருந்தது அல்லது கவிதை எழுதும் வெடிப்பு உணர்வை தந்தது. இப்ப இருக்கும் வெறுமையும் தமிழ் தேசியத்துக்குள் இருக்கும் துரோக அரசியலும் கவிதைக்கு பதிலாக படு தூசனம் நிறைந்த வார்த்தைகளைத் தான் தருகின்றது

ஆத்திரம் நியாயமானதே.ஆயினும் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப கவிதைகளை எழுத வேண்டுகிறேன்.சகாறா சொன்னதையும் கவனத்தில் எடுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.