Jump to content

நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?


Recommended Posts

அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.

நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படிஇ குழந்தைகள்இ சிறுவர்கள் மட்டுமன்றிஇ வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில்இ தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில்இ தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம்இ தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.

ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போதுஇ நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

திலீபன் செல்வகுமாரன்

சுட்டது

தீலீபனின் வுலக்கில்

ஆமா இங்கு யார் நகம் கடிக்கிறது?

Link to comment
Share on other sites

ஆகா உங்கள் தகவலுக்கு நன்றி சந்தியா.....

எனக்கு நிகம் கடிக்கிற பழக்கமெல்லாம் இல்லை ... :roll: நிகம் பெருசா வளரனும் எண்டு, ஆசை ஆசையா வளக்குறது.. அத எப்படி கடிக்க மனம் வரும் ..... :wink: :P

Link to comment
Share on other sites

நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .)

நிகம் பெருசா வளரனும் எண்டு ஆசை ஆசையா வளக்குறது..

ஏன் ஆக்களை பிறான்டுறத்துக்கா?? யங் போய்ஸ் வெறி அலேட்டா இருங்கப்பா................

Link to comment
Share on other sites

ஏன் ஆக்களை பிறான்டுறத்துக்கா?? யங் போய்ஸ் வெறி அலேட்டா இருங்கப்பா................

:shock: அப்படியெல்லாம் இல்ல முகத்தார் அங்கிள், அது ஒரு ஆசைக்கு வளக்குறது.. ஸ்டைல்லுக்குன்னும் சொல்லலாம்... :wink: சரி நீங்க சொல்லுறமாதிரியே ஆரும் சண்டைக்கு வந்தால் பிறாண்ட வேண்டியத்தான் வேற வழி.... :wink: :)

நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .)

அது சரி..... :lol::)

Link to comment
Share on other sites

ம்ம் எனக்கும் அனி போல..நகம் கடிக்கும் பழக்கம் சுத்தமாக இல்லை..வளர்க்கும் பழக்கம் தான் இருக்கு. :P

நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .)

ஏன் ஆக்களை பிறான்டுறத்துக்கா?? யங் போய்ஸ் வெறி அலேட்டா இருங்கப்பா................

உண்மையை ஒத்துக்கொண்டுட்ட்டார் மு.அங்கிள்..வாழ்த்துக்கள் அங்கிள்..

Link to comment
Share on other sites

நகம் வளர்க்க ஆசை தான் ஆனால் வேலையில் அவர்களுக்கு விளக்கம் சொல்லி ஆகணுமே :cry:

Link to comment
Share on other sites

ஆகா உங்கள் தகவலுக்கு நன்றி சந்தியா.....

எனக்கு நிகம் கடிக்கிற பழக்கமெல்லாம் இல்லை ... :roll: நிகம் பெருசா வளரனும் எண்டு, ஆசை ஆசையா வளக்குறது.. அத எப்படி கடிக்க மனம் வரும் ..... :wink: :P

ஆம் அக்கா எனக்கும் அதே பிரச்சனை ஆனால் என் தங்கைகளுக்கு நகம் கடிப்பதே வேலை அதனாலை அடி கூட வாங்குவார்கள்

நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் அதன் உண்மை வடிவாய் தெரியாது

Link to comment
Share on other sites

நமக்குத்தான் இந்த பிரச்சனை இல்லையே பிறகென்ன (பல் இருந்தாதானே நகம் கடிக்கிறத்துக்கு. . . .)

ஏன் ஆக்களை பிறான்டுறத்துக்கா?? யங் போய்ஸ் வெறி அலேட்டா இருங்கப்பா................

அடடா எங்க மு. சித்தப்பா எப்படி ஒத்துக் கொள்கிறார் என்று

Link to comment
Share on other sites

நகம் வளர்க்க ஆசை தான் ஆனால் வேலையில் அவர்களுக்கு விளக்கம் சொல்லி ஆகணுமே :cry:

ஓம் எனக்கும் இதே பிரச்சனை தான் :cry: :cry:

மருந்து ஏதும் செய்ய வேண்டி வர..கன காலமா வளர்த்த நகத்தை ஒட்ட வெட்டிட்டு நிக்க வேணும்.. :cry: :cry:

Link to comment
Share on other sites

ஓம் எனக்கும் இதே பிரச்சனை தான் :cry: :cry:

மருந்து ஏதும் செய்ய வேண்டி வர..கன காலமா வளர்த்த நகத்தை ஒட்ட வெட்டிட்டு நிக்க வேணும்.. :cry: :cry:

அக்கா எங்களை மாதிரி விடுமுறையில் மட்டும் வளருங்கள் :lol::lol::lol::lol::D

Link to comment
Share on other sites

அக்கா எங்களை மாதிரி விடுமுறையில் மட்டும் வளருங்கள்

ம்ம்..நல்ல ஐடியா தான்..இனி அப்படியே செய்யலாம்..தங்கையே..அதுசரி என்னை அக்கா அக்கா எண்டுகிறீர்களே..உங்களுக்கென்

Link to comment
Share on other sites

ஆம் அக்கா எனக்கும் அதே பிரச்சனை ஆனால் என் தங்கைகளுக்கு நகம் கடிப்பதே வேலை அதனாலை அடி கூட வாங்குவார்கள்

நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் அதன் உண்மை வடிவாய் தெரியாது

ஆகா நகம் கடித்தால் அடிவிழுமா ... :lol:

ம்ம் நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று நானும் யாரோ சொல்லி கேள்விப் பட்டிருக்கன் .... அதெல்லாம் இங்க பெருசா பாக்குறயில்லை எண்டு நினைக்குறன்,,,, :roll:

Link to comment
Share on other sites

ஓம் எனக்கும் இதே பிரச்சனை தான் :cry: :cry:

மருந்து ஏதும் செய்ய வேண்டி வர..கன காலமா வளர்த்த நகத்தை ஒட்ட வெட்டிட்டு நிக்க வேணும்.. :cry: :cry:

சரி இதுக்கேன் 2 பேரும் அழுகுறீங்க பேந்து நானும் அழுதுடுவன்.... :wink: :lol:

சரி இருக்கவே இருக்கு ஒட்டு நிகம் அத வாங்கி ஒட்டி விட்டால் போச்சு.... :wink: எண்ட நிகமும் சில நேரம் உடைந்து விட்டால் :lol: ஒட்டு நிகம் தான் ஒட்டிவிடுறனான்.. இருந்தாலும் அது நம்மட (ஒரிஜினல்) நிகம் மாதிரி வராது .... :roll: என்ன செய்யுறது... ஆசையா இருந்தால் வாங்கி ஒட்டலாமே.... :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நகம் கடித்தால் அடிவிழுமா ... :lol:

ம்ம் நகம் கடிப்பது வீட்டிற்கு கூடாது என்று நானும் யாரோ சொல்லி கேள்விப் பட்டிருக்கன் .... அதெல்லாம் இங்க பெருசா பாக்குறயில்லை எண்டு நினைக்குறன்,,,, :roll:

பின்ன சும்மாவோ!!

தங்கைமார் கடிப்பது இவரது நகத்தை அல்லவோ!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட..அப்பிடியா சந்தியா.. :shock:

அப்படி இல்லை என்று சொன்னால் அவரை என்ன செய்யப் போகின்றீர்கள்? :oops: :wink:

Link to comment
Share on other sites

எனக்கும் நகம் கடிக்கும் பழக்கம் உண்டு....

என்ன கால் நகத்தையாா????? :evil: :evil: :evil: :evil:

ஓய் வேற யாருக்கப்பா கால் நகம் கடிக்கிற பழக்கம் இருக்கு

கடவுளேளளள!!

:shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

வீட்டில் நகம் கடிக்கும்போது அம்மா என் பல் மீதே ஒன்று போடுவார்.....

ம் சந்தோசப்படும் உம்மட முகத்தில குத்தேல்லை எண்டு

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.