Jump to content

Buddhism - A Tamils' Contribution


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கிருபன்.

நிறையத் தகவல்கள். சிங்களவர்களால் மட்டுமல்ல தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய தகவல்கள்

Link to comment
Share on other sites

மதுரையில் சமணம்

உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மதுரையும் ஒன்று. மதுரையில் சங்க காலத்திலிருந்து இன்று வரை பல்வகை சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மதுரையை சுற்றியுள்ள மலைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள் இரண்டாயிரம் ஆண்டு பழமையானவை. அவை சமணர்கள் தங்கியிருந்த மலைகளில் காணப்படுகின்றன என்பதால் சமணர்கள் தமிழகத்திற்கு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே வந்து விட்டனர் என்பதை இக்கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

madurayil-samanam.jpg?w=614&h=383

பள்ளிப்பாடப்புத்தகங்களில் இருந்தெல்லாம் சமணம் மீதான ஆர்வம் வரவில்லை. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘சமணமும் தமிழும்’, தொ.பரமசிவனின் ‘பண்பாட்டு அசைவுகள்’, வெ.வேதாச்சலத்தின் ‘எண்பெருங்குன்றம்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ மற்றும் மதுரைப் புத்தகத்திருவிழா, சித்திரைப்பொருள்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சி மூலம் சமணம் மீதான ஆர்வம் அதிகமாகியது. இவர்கள் எழுத்துக்களை மட்டும் வாசிக்காமல் இருந்திருந்தால் இந்தளவுக்காவது சமணம் குறித்து தெரிந்திருக்குமா எனத்தெரியாது. ஏனென்றால் வெகுநாள் வரை மதுரையில் கடைகள் வைத்திருக்கும் ஜைனர்களை முகமதியர்கள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அதைவிடக் கொடுமை என்னவென்றால் நான் படித்த தொழில்நுட்ப கல்லூரிக்கிட்ட உள்ள குன்னத்தூரில் சமணர்படுகை இருந்திருக்கிறது; நான் போய் பார்த்ததில்லை.

கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே சமணர்கள் தமிழகம் வந்து விட்டனர். மதுரையில் சமணம் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்துள்ளது. பௌத்தமதம் சமணம் அளவு மதுரையில் பரவவில்லை. அதற்கு காரணம் உள்ளூர் வணிகர்கள் சமணத்தை ஆதரித்தனர். வெளியூர் வணிகர்கள் பௌத்தத்தை ஆதரித்தனர். எனவே, கடற்கரையோரங்களில் பௌத்தமும், நாட்டிற்குள் சமணமும் அக்காலத்தில் சிறந்திருக்கின்றன. இதனாலேயே, பௌத்தமதம் பலநாடுகளில் இன்றும் பின்பற்றப்படுகிறது. இந்தளவு சமணமதம் மற்ற நாடுகளில் பரவவில்லை. இன்றும் பௌத்த மடாலயங்கள் கடற்கரையோர மாவட்டங்களில் காணப்படுகிறது. சமணர்கள் பெரும்பாலும் குன்றங்களில் தான் வசித்திருந்திருக்கின்றனர். எனவே, சமணத்தின் சுவடுகள் தமிழகத்தில் உள்ள மலைகளில்தான் நிறைய காணப்படுகிறது. பின் தோன்றிய பக்தி இயக்கத்தின் சூழ்ச்சிகளால் சமணம் மெல்ல நசியத் தொடங்கியது. திருஞானசம்மந்தர் காலத்தில் சமணர்களை puthukkottai-painting.jpg?w=614&h=383கழுவேற்றம் செய்திருக்கிறார்கள். இதை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதை கதையாக சொல்கிறார்கள். மதுரைக்கு அருகிலுள்ள சாமநத்தம் என்னும் ஊரில்தான் சமணர்களை கழுவேற்றியிருக்கிறார்கள். இவ்வூரில், திருஞானசம்மந்தருக்கு கோயில் கூட இருக்கிறதாம். புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் இதற்கான சித்திரச்சான்று உள்ளது. இதைக்குறித்த படம், தகவல் நட்பூ.இன் தளத்தில் மணா பக்கத்தில் இருந்து எடுத்தேன். மணாவிற்கு நன்றிகள் பல (மதுரையில் உள்ள கிராமதெய்வங்கள் குறித்தும் இத்தளத்தில் அவர் எழுதியுள்ளார்) ஆனால், சமணம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை சமணத்தின் சுவடுகள் நமக்கு கிடைக்கின்றன.

சமணர்கள் நிறைய பேர் இந்து சமயத்திற்கு மாறினர், மாற்றப்பட்டனர். சமண, பௌத்த தளங்கள் எல்லாம் சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்டன. சமணத் தீர்த்தங்கரர், இயக்கியர் சிலைகள் நிறைய இடங்களில் நாட்டார் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகிறது. ஐயனார், முனியாண்டி எல்லாம் பெரும்பாலும் சமண, பௌத்த துறவிகளின் சிற்பங்கள்தான்.

தமிழகத்தில் ஆசிவகம் என்ற மதம் இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆசிவகத்தின் அடையாளம் யானையென்றும், ஐயனார் ஆசிவகமுனிவர் என்றும் க.நெடுஞ்செழியன் ‘தமிழரின் அடையாளங்கள்’ என்ற நூலில் கூறுகிறார். எல்லாமே ஆய்வுக்குரியது. இதைக்குறித்தும் வாசிக்க வேண்டும். இன்றும் வடதமிழகத்தில் தமிழ்ச்சமணர்கள் வசிக்கிறார்கள். மதுரையிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த சமணர்கள் வசிக்கிறார்கள்.

மதுரையில் உள்ள சமணம் குறித்த தொல்லிடங்களைத் தேடித்தேடி முடிந்த இடங்களைப் போய் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிறைய இடங்களைப் போய் பார்க்க முடியாதபடி இருக்கிறது. அதைக்குறித்தெல்லாம் நான் எழுதுவதாயில்லை. ஆனால், நாம் இழந்தவைகளை மீண்டும் தேடிப்பெற வேண்டுமானால் அதிக விலை கொடுக்கவேண்டிருக்கும். உதாரணமாக வேதாசலம் மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர். அவரது ‘எண்பெருங்குன்றம்’ என்னும் நூல் மதுரையில் உள்ள புத்தகக்கடைகளிலேயே தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. அதை ஒரு நூலகத்தில் இருந்து எடுத்து நகலெடுக்க ஆன செலவு அந்நூலின் விலையான அறுபதைத் தாண்டிவிட்டது. புத்தகத்திற்கே இந்நிலை என்றால் நாம் இழக்கும் தொன்மங்களை மீண்டும் அப்படியே பெற எவ்வளவு செலவழித்தாலும் சிலவற்றை அப்படியே பெற முடியாது. நிறைய சமணர் படுகைகளில் நம்மவர்கள் அவர்களின் சுவடுகளை பதித்து நாசம் செய்கின்றனர். அந்தக் கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை.

மதுரையில் சமணர்கள் இருந்த இடங்கள்: அழகர்மலை, யானைமலை, மேல்குயில்குடி, கீழ்க்குயில்குடி சமணமலை, கொங்கர் புளியங்குளம், திருப்பரங்குன்றம், திருவாதவூர் மலை, கீழவளவு மலை, அரிட்டாபட்டி, கரடிப்பட்டி பெருமாள் மலை, மாங்குளம் மீனாட்சிபுரம் மலை, விக்கிரமங்கலம், குரண்டி, அணைப்பட்டி சித்தர்மலை, உத்தம்பாளையம் குன்று. குரண்டியிலும் கீழ்குயில்குடி சமணமலையிலும் பெரும்பள்ளிகள் இருந்திருக்கின்றன . ஆனால், சங்க காலத்தில் சிறப்புடன் விளங்கிய குரண்டி திருக்காட்டாம்பள்ளி இருந்த ஊரில் இன்று சமணத்தின் சுவடுகளே இல்லையாம்.

முன்காலங்களில் சமணர்களை அமணர்கள் என்றே மக்கள் அழைத்தனர். சமணதுறவிகள் அம்மணமாக இருந்ததால் அமணர்கள் என்று அழைத்தனர் போலும். திருப்பரங்குன்றத்தில் உள்ள படுகைக்கு போகும் வழியில் அமண் பாழி என்றே பதாகை உள்ளது. சம்மணம் போட்டு அமர்வதையே சமணர்கள் போல் அமர்வதைத்தான் குறிக்குமாம். சைவ உணவுப்பழக்கமே சமணர்களிடமிருந்து நாம் பின்பற்றத் தொடங்கியதுதான். அடிதொழுதலும் (கால்ல விழுந்து வணங்குவது) சமணர்களின் பழக்கம்தான். இப்படி சமணர்களின் பழக்கவழக்கங்கள் நம்மிடம் புகுந்துவிட்டன. அதைக்குறித்தும் தேடிப்புடிச்சு எழுதுவோம். சமணம் குறித்து நான் எழுதுவதெல்லாம் வாசிப்பு மற்றும் செவிவழிச் செய்தியில் இருந்துதான்.

சமணம் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஏராளம். சமணர்கள் மதுரை மற்றும் அதைச் சுற்றியிருந்த இடங்கள், சமண முனிவர்கள் இயற்றிய நூல்கள், சமணம் குறித்த நூல்கள் பற்றி “மதுரையில் சமணம்” என்ற தலைப்பின் கீழ் எழுதவிருக்கிறேன். எல்லாம் உருப்படியாக இருக்க மகாவீரர் அருளட்டும். சமணமுனிவர்கள் எல்லோருமே மகாவீரர்கள் தான். ஏனென்றால், இம்மலைகளுக்கு இன்று ஏறிச்சென்று பார்ப்பதற்கே சிரமமாயிருக்கிறதென்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் எப்படி ஏறியிருப்பார்கள் என்றெண்ணும்போது வியப்பாயிருக்கிறது. மயிலை.சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன், வெ.வேதாசலம் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்நால்வருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

http://maduraivaasagan.wordpress.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் கிருபன்....தமிழன் பெளத்தத்தை தழுவியிருந்தான் என்பதை சிங்களவன் நம்பி தமிழனை வாழவிட்டால் சரி......

சமண, பௌத்த தளங்கள் எல்லாம் சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்டன. சமணத் தீர்த்தங்கரர், இயக்கியர் சிலைகள் நிறைய இடங்களில் நாட்டார் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகிறது. ஐயனார், முனியாண்டி எல்லாம் பெரும்பாலும் சமண, பௌத்த துறவிகளின் சிற்பங்கள்தான்

அந்த ஆத்திரத்தில்தான் சி ங்களவர்கள் இப்ப தமிழனை அழிக்கிறானோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.