Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம் உரிய திருத்தம் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன். இந்த தொடருக்கு ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள். தொடருக்கு முன்னால் பின்னால் என்று காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

அறிமுகம்

மன்னர் ஹரியின் ஆட்சி ஏறியதில் இருந்து கதை ஆரம்பமாகிறது. அதுற்கு முதலானவை தவிர்க்கப்படுகின்றன. (இந்தப்பாகம் கதையில் வரும் பாத்திரங்களை அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது)

பாகம் 1

மன்னர் சபைக்கு வருகிறார் இது தான் மன்னர் ஹரி முடி சூட்டிய பின்னர் நடைபெறும் முதலாவது அசர ஒன்று கூடல். எல்லோரும் எழுந்து நிக்கிறார்கள். மன்னரிற்கு வாழ்த்து கூறுகிறார் அவையில் இருந்த ஒரு சேவகன்.

சேவகன்1 : மன்னாதி மன்னர்.. இன்னும் புறமுதுகு காட்டாதா.. தோல்வியைக்கண்டிராத.. ஏன் போர்க்களத்தை அறிந்திராத யாழ்களத்தின் மன்னர் ஹரி அவர்கள் வருக வருக.. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!!!!!

மன்னர் ஹரி அவையோரிற்கு வணக்கம் கூறி அனைவரையும் அமரச்சொல்கிறார். எல்லோரும் அமர்கிறார்கள். தானும் அமர்ந்து அருகில் இருந்த மந்திரியின் காதலி எதையோ குசுகுசுக்கிறார்.

மன்னர்: மந்தி மந்திரிரி

மந்திரி: மன்னா என்ன பதறுகிறீர்கள்.

மன்னர்: யாரப்பா அந்த சேவகன் றொம்ப நல்லாவே பாராட்டிறார். புதிசாய் ஆட்சியேறிய மன்னர் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.. கேட்பவர்கள் என்னை தப்பாய் நினைக்கப்போகிறார்கள். :)

மந்திரி: கவலை வேண்டாம் மன்னா அவை உறுப்பினர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இருக்கிறது அதில் நானே கூறிவிடுகிறேன்.

மன்னர்: அப்பாடா கவலை தீர்ந்திச்சு.. :lol:

இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு சந்தேகம் வர.. நாங்களும் இங்கால இருக்கிறம் என்று கத்துகிறார். அந்த குடிமகன் யார் என்பதை பின்னால் பாருங்கள். இப்போது சுதாரித்த மன்னரும் மந்திரியும் அசடு வழிகிறார்கள்.

மந்திரி: (கையில் ஒரு ஏட்டை எடுத்து.) மன்னருக்கு அவை பிரமுகர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கப்போகிறது. நான் பெயர் கூறி அழைக்க ஒவ்வொருவரும் எழுந்து அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மன்னர்: யோவ் மந்திரி மன்னர் இருக்கட்டும்.. புதிய மன்னர் என்று கூறும் ஐயா.. (இந்த மந்திரி சேவகனோட சேந்திட்டார் போல)

மந்திரி: மன்னா கவலைவிடுங்கள் இதோ பல்டி அடிக்கிறேன்.

மந்திரி: முதலில் நமது புதிய மன்னருக்கு என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன்.

எனது பெயர் கவிதன் அந்த அரசசபையின் ஒரே ஒரு அறிவுள்ள திறமையுள்ள ஆற்றல் உள்ள அற்பணிப்புள்ள பட்டியல் நீள..

குடிமக்கள் பிரதிநிதி: ஓய் கவிதன் இதை எல்லாம் பின்னாடி வாற குடிமக்கள் பிரதிநிதிக்கு சொல்றதுக்கு இப்ப எதுக்கு சொல்றீர்

மந்திரி: சரி சரி நான் தான் கவிதன் இந்த நாட்டின் மந்திரி. :lol: (பொறாமை பிடிச்சவங்க என்ர அருமை பெருமையை இப்படி எடுத்துவிட்டாத்தான் உண்டு)

மன்னர்: ஓய் மந்திரி உம்மட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும் அடுத்தாளை கூப்பிடும் எத்தனை நேரமாய் இதையே ஓதுவீர்.

மந்திரி: உங்கள் சித்தம் என் பாக்கியம் மன்னரே. அடுத்ததாக எங்கள் தளபதி தல அவர்களை அறிமுகப்படுத்திறன்.

தல: வணக்கம் மன்னா.. நான் தான் இந்நாட்டு தளபதி இந்நாட்டில நடக்கிற வீரதீர செயல்களிற்கு சொந்தக்காரன். நானே நானே தானே.... (மந்திரி தளபதியைப்பார்த்து ஒரு வாறு முறைக்க தளபதி அமருகிறார்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பர். புலநாய்களின் நண்பர். புலனாய்வாளர் டண் அவர்கள். இவரது புலனாய்வானது... உலக புலனாய்வு இயந்திரங்களுடன் போட்டி போடுது. எங்கள் நாட்டில் இப்படி ஒரு புலனாய்வாளர் இருப்பது மகிழ்ச்சி. (கொஞ்சம் கனக்கவே ஐஸ் வைப்பம் பிறகு பிரியோசனப்படும் என்று மனதுக்குள் எண்ணுகிறார்.)

டன்: வணக்கம் மன்னா... நன்றி கவிதன். (ரொம்ப ஓவராய் ஐஸ் வைக்கிறீர் எதுக்கென்று தெரியல) மன்னா எனது புலனாய் அறிக்கையின் படி உங்கள் அரண்மனையில் வெகுவிரைவில் கெட்டிமேளம் கொட்ட இருப்பதாய் அறிந்தேன்.............. (இழுக்கிறார்..)

எல்லாரும் முனுமுனுக்கிறார்கள்.

மன்னர் : ஓய் மந்திரி உவரைக்கொஞ்சம் சும்மா அடக்கி வாசிக்கச்சொல்லும் இப்பான் அடிமடியிலையே கையை வைக்கிது..

மந்திரி எழுகிறார் டன் அமர்கிறார்.

மந்திரி: மன்னா அடுத்து வருபவர் சிறுவர் பிரதிநிதி வெண்ணிலா.. எங்கள் நாட்டு சிறுவர்கள் பற்றி இந்த சுட்டியிடம் அறிந்து கொள்ளலாம். குறுக்காக கேள்விகேட்பார்.. குறுக்கெழுத்துப்போட்டி வைப்பார். மூளைக்கு வேலை வைப்பர். பார்த்து பிறகு அவஸ்த்தைப்பட வேண்டி வரும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மன்னர்: என்ன மந்திரி மானத்தை வாங்கிறீர்.

வெண்ணிலா: வணக்கம் மன்னா நான் தான் சுட்டி வெண்ணிலா.. சுட்டித்தனம் பண்ணும் சுட்டிகளின் சார்பில் அவை வந்திருக்கிறேன். நன்றி வணக்கம்.

மந்திரி: அடுத்ததாக நான் அறிமுகப்படுத்த இருப்பவர்.... எங்கள் அரசசபையின் சட்டத்தரணி.. நித்திலா அவர்கள்...

நித்திலா: வணக்கம் மன்னா... நான் நித்தி என்று அழைக்கப்படும் நித்திலா.. எங்கள் அரசசபை சட்டத்துறையை பொறுப்பெடுத்துள்ளேன். வாழ்த்துக்கள் மன்னா என அமர்கிறார்.

மந்திரி: நன்றி நித்திலா.. அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. தூயா.. தூயா பபா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தான் எங்கள் கதாசிரியர் பல கதைகளை எழுதி எம்மக்களிடம் பாராட்டுப்பெற்றவர்.

தூயா: வணக்கம் மன்னா. நான் தூயா.. இப்பொழுது.. புலத்துப்புலம்பல்கள் என்ற தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.. பல்வேறுபட்ட அனுபவங்களையும் கதையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். நன்றி வணக்கம்.

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. எங்க ஊருப்பாட்டுக்காரன். பந்தும் கையுமாய்திரிந்தாலும். இளையராஞா தேவா ஏர் ரகுமான் தரதத்தில் பாடல்களை எடுத்துவிடுவார்.

மன்னர்: நிஜமாகவா..??

மந்திரி: சொல்ல மறந்திட்டன் அவர்களின் பாடல்களை வாரி வழங்குவார் என்று சொல்லவந்தன்.

விஸ்ணு: கவிதன் அண்ணா காலை வாருறியளே.... வணக்கம் மன்னா நான் தான் உங்க ஊருப்பாட்டுக்காரன் விஸ்ணு உங்களுக்கு போரடிக்காமல் இருக்க.. சுட்ட பாடல்களை பகிர்ந்து கொள்ள முடியும் தேவைப்பட்டால் கூறுங்கள்.

மன்னர்: நன்றி விஸ்ணு

மந்திரி: மன்னா அடுத்து அறிமுகமாக இருப்பவர் பிரச்சார பிரதிநிதி தூயவன்.

மன்னர்: ஓய் மந்திரி இப்படி எல்லாம் எங்க நாட்டில இருக்கா என்ன..??

மந்திரி: மன்னா உங்களுக்குத்தெரியாது இவரிடம் வாய் கொடுத்தால் தப்பவே முடியாது பிரச்சாரம் பண்ணியே கலைச்சிடுவாங்க.. ஆக்கள.. நாட்டப்பற்றி யாராவது கதைச்சா கதை கந்தல் தான்.

மன்னர்: அப்ப நான்கொஞ்சம் கவனமாய் இருக்கணும் என்றீர்.

தூயவன்: வணக்கம் வந்தனம் மன்னா. சதிகள் நடக்கும் அடுத்த கணம் தடுத்து நிறுத்துவேன். ஓடி ஒழியேன் ஒதுங்கிப்போகேன்.. போர் போர் போர்.. சொற்போர்..

மன்னர்: பாத்து பாத்து உங்கட சொற்போர்.. அப்பாவி மக்களை விட்டு வைக்கட்டும். எதிரிகளோட தொடரட்டும்.

(உங்கட சொற்போர்ல சிக்கியிருப்பவர்கள் அப்பாவிகள் என்று அறிஞ்சன்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் வினித். சினிமாத்துறையின் சிங்கம்.. சினிமாத்துறையை குத்தகைக்கே எடுத்து விட்டார் அப்பப்ப பிரச்சாரத்துறையிலும் களம் இறங்குவார்.

மன்னர்: அரண்மனைக்க எப்படி சினிமா போஸ்டர் வந்தது என்று இப்பான் புரிஞ்சிச்சு.. யாரு அந்த பொண்ணு..??

மந்திரி: மன்னா அது வந்து வந்து.. அழகுராணி அசின்.

வினித்: வணக்கம் மன்னா வணக்கம். எஙகள் மக்களிற்கு பொழுது போக்கும் வேணும் அல்லவா அது தான் சினிமா.. அது தான் வீணாய்ப்போன நான் வினித்தாக மாறி சேவை செய்கிறேன். மன்னர்ளிற்கெல்லாம் சினிமா இல்லை.. அந்த பொண்ணு பற்றிய விசாரணை காணும்.

மன்னர்: மந்திரியின் காதில்.. என்னையா இவரு நமக்கே கட்டளை இடுறார் :) .

மந்திரி: அசினின் தீவிர ரசிகராம் நீங்க அவாவைப்பத்தி விசாரிக்க கோவம் வந்திட்டு.. கீழாழ விட்டிடுங்க..

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் எங்கள் அருவி.. தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கிறார்.

மன்னர்: தகவல் தொழில் நுட்பமா ??? எதுக்கையா நமக்கு அது

மந்திரி: இன்னும் புறாவிலையும் கழுகிலையும் நில்லுங்கோ.. இவர் புதிய தொழில்நுட்பங்களை நம்மட நாட்டிற்கு அறிமுகப்படுத்துவார்.

மன்னர்: பொறுத்திருந்து பார்ப்பமே

அருவி: வணக்கம் மன்னா நன் அருவி.. உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அருவி பேசிக்கொண்டு அமர்கிறார்.

தொடரும்..!

அடுத்த பகுதியும் அறிமுகமே

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையில் எல்லோரும் ஏதோ முனுமுனுக்கிறார்கள்.

மன்னர்: அங்கே என்ன கூச்சல் அமைதி!! அமைதி!!

"குடி"மக்கள் பிரதிநிதி ஒருவர் தள்ளாடி தள்ளாடி வருகிறார். அவையில் இருந்த ஒரு பெண் பிரதிநிதி முறைக்கிறார்.

மன்னர்: மந்திரி யாரது அவை மரியாதை தெரியாத அந்த நபர் யார்? ஏன் தாமதமாய் வந்திருக்கிறார்.

மந்திரி: (ரகசியமாய் அவை மரியாதையா அப்படி என்றால் என்ன புதுசு புதுசா சொல்றாங்கப்பா) மன்னா இவர் சபையில் ஒரு முக்கியமான நபர் இவர் குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவர். இவர் பொய் முகத்தார்.

மன்னர்: "குடி" மக்கள் பிரதிநிதியில் ஒருவரா..?? பார்க்கவே தெரிகிறது. முகத்தாரே சபைக்கு ஏன் தாமதம்..??

முகம்ஸ்: வணக்கம் மன்னா.. நான் தான் "தீ கிறேரட் முகத்தார்". நமது யாழ்தேவி சே எனது கழுதை காலைவாரி கல்லுக்கொட்டிலுக்குள் தள்ளிவிட்டது அதுதான் லேட் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மன்னாதி மன்னர் புறூஸ்லி சுந்தரர் எங்கள் மன்னர் ஹரி வாழ்க வாழ்க வாழ்க!!

மன்னர்: வாழ்த்துக்கள் இருக்கட்டும் நீர் குடிமக்கள் பிரதிநிதி என்பதால் சபைக்கு குடித்துவிட்டு வரவேண்டும் என்பது அர்த்தமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்கிறேன்.

முகம்ஸ்: சோ வாழ்த்துக்கள் என்ற பெயரில பொய் பொய்யா அள்ளிவிட்டும் அந்த மனிசன் குளிரேல்ல.. ம் ம் பாத்திக்கிறன்.

மந்திரி: அடுத்ததாக நாங்கள் அறிமுகப்படுத்த இருப்பது.. "ஒரு யென்டில் அப்பு" அவர் ஒரு குடிமகன் அதைவிட குடிமக்கள் பிரதிநிதி அவர் தான்.. சீ சீ சீ சீ சின்னப்பு..

மன்னர்: இந்த மந்திரிக்கு வேறை வேலையில்லை.. அர்ஜீன் கோவிக்கப்போறர். (மனசுக்குள்)

சின்னப்பு : ஓய் கவி நன்றி மேன். வணக்கம் மன்னா... நான் நான் நான் நான்.. தான் சின்னப்பு குடி குடியைக்கெடுக்கும் என்ற பழமொழியை பொய்யாக்க வந்த குடிமக்கள் பிரதிநிதி. என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது பிறர் சொல்வார் கேட்டு அறிந்து கொள்ளும். மன்னர் வாழ்க குடி வாழ்க குடிமக்கள் வாழ்க.!!

அமர்கிறார் குடிமகன். பெண்கள் பகுதியில் இருந்து ஒருவர் மகிழ்ச்சி பொங்க சின்னப்புவை வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார

Link to comment
Share on other sites

ஜோரா இருக்கு...சிந்திக்க மட்டுமில்ல சிரிக்கவும் வைப்பீங்க...ம்ம்..தொடர்ந்து எழுதுங்கோ...! வாழ்த்துக்கள்..! :P

Link to comment
Share on other sites

அடி சக்கை எண்டானாம் தமிழும் தூள் கிளப்பப்போறா போல கிடக்கு ...........அறிமுக அரச சபையே நல்லா இருக்கும் தொடர் நல்லா இருக்கும் என நினைக்கிறன் ( சா முகத்தார் வீட்டுக்கு வேலை இல்லாமல் போட்டுது பரவாயில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ் நக்கல் தானே வேணாங்கிறது.. முகத்தார் வீட்டிற்கு கிட்டவும் வராது நம்ம அரசசபை.. நக்கல் பண்ணாமல் முகத்தார் வீட்டை தொடருங்கோ.. எல்லாம் நீங்கள் கொடுத்த தைரியம் தான்.. :wink: :P

Link to comment
Share on other sites

ஆரம்பமே அசத்தலாயிருக்கு தமிழ் அக்கா :P

எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா :P :P

தொடருங்கள் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறம் (மன்னரின் தங1;கை காசி போன காட்சிக்காக பலர் காத்துக் கொண்டிருக்கினம் 8) :) )

என்ன இருந்தாலும் மன்னர் ஆரம்பத்திலேயே மந்திரியை மந்தி மந்திரி எண்டு உண்மையான பெயரை சொல்லியிருக்காரே தைரியம் தான் :):lol:

Link to comment
Share on other sites

ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....! :P :P

Link to comment
Share on other sites

ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.

முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி

Link to comment
Share on other sites

ஆகா தொடர், அதுகும் அரச குடும்பம், நல்லா இருக்கே அக்கா தொடருங்க.

மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே :P

Link to comment
Share on other sites

அக்கா அசத்திட்டீங்கள் தொடர்ந்து எழுத வாழத்துக்கள்

அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா? :?: :?: :?: :roll: :roll:

பாவம் மன்னர் :):lol::):lol:

Link to comment
Share on other sites

ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா

வருவாங்க வருவாங்க பின்னாடி வருவாங்க :P

ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....!

நன்றி அனி.. எழுதிப்போட்டுப்பாத்தன் இதை பொறுமையா வாசிக்க முடியுமா என்று.. நினைத்தேன். :D

ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.

முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி

முகத்தார் தொடர்போல அற்புதமாய் வராது.. ஏதோ சிரிக்க பழைய நினைவுகளை மீட்ட ஒரு தொடர்.. நன்றி மதன். :P

உங்கள் நகைச்சுவை தொடர் நன்றாக உள்ளது தொடர்ந்து தாருங்கள்

நன்றி ரசிகை.. :P

அது சரி எப்ப இளவரசி அரன்மனைக்கு வருவா

நானே இப்பான் தேடிறன் அவா எங்கை என்று வருவா வருவா.. :wink: :P

மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே

நன்றி குளம்.. இதைப்படிக்கவாவது வரணும்ல.. :wink: :P

அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா?

அட நீங்க வேறை அண்ணாவைப்பத்தி தங்கை எடுத்தி விட்டா ஒரு மகிழ்ச்சி தானே..??

:wink: :P

ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

நன்றி றமா.. :P

þо¡ý ¦º¡øÖÈÐ ±ó¾ôÒò¾¢ø ±ó¾ôÀ¡õÒ þÕ츢ñÎ ¦¾Ã¢Â¡..Â째¡ õ........

என்ன விது திட்டிறியளா..?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!

Link to comment
Share on other sites

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ' date=' ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â![/color']

:lol::D:lol:

நல்லா இருக்கு அக்கா....அடுத்தது எப்பொ வரும்..? :lol:

Link to comment
Share on other sites

அக்கி, அருமை அருமை ;) தொடருங்கள். பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

அக்கா அறிமுகப்படலம் சூப்பர்.

ஆமா அக்கா இனி காசி யாத்திரை படலம் , இளவரசி இளவரசனை தேடிய சுயம்வர காண்டம் எல்லாம் எப்ப அக்கா? அக்கா நல்லாக சிரிக்க வைத்து பழையனவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. பழைய இனிய நினைவுகள் தாலாட்டை விட சுகமாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் :P

ஆமா அவைக்கு ஏன் குருவியண்ணா தாமதமாக வந்தவராம்? மலர் அண்ணி விடல்லையாமோ? :roll:

Link to comment
Share on other sites

அக்கா அறிமுகப்படலம் சூப்பர்.

ஆமா அக்கா இனி காசி யாத்திரை படலம் , இளவரசி இளவரசனை தேடிய சுயம்வர காண்டம் எல்லாம் எப்ப அக்கா? அக்கா நல்லாக சிரிக்க வைத்து பழையனவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. பழைய இனிய நினைவுகள் தாலாட்டை விட சுகமாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் :P

ஆமா அவைக்கு ஏன் குருவியண்ணா தாமதமாக வந்தவராம்? மலர் அண்ணி விடல்லையாமோ? :roll:

மன்னரின் அழைப்பு தாமதமா வைத்திச்சுதா...அதுதான் தங்கையே..! பாவம் மலரண்ணி அவா அச்சா..! :wink: :P

Link to comment
Share on other sites

மன்னரின் அழைப்பு தாமதானா வைத்திச்சுதா...அதுதான் தங்கையே..! பாவம் மலரண்ணி அவா அச்சா..! :wink: :P

ஓஹோ. எதுவானாலும் மலரண்ணியை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே. :lol:

ஐயோ அண்ணா அக்கா வந்தால் திட்ட போறா. அரச சபைக்குள் மலரண்ணியும் மாந்தோப்பும் பற்றி கதைக்கிறதுக்கு. :cry: :wink:

அண்ணா அக்காட்டை சொல்லி "மலரண்ணியும் மாந்தோப்பும்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத சொல்லுவமா? :roll: :wink: :?: :arrow: :idea:

Link to comment
Share on other sites

அடடே...! அரசவை களைகட்டீட்டுதுபோல கிடக்கு.... மன்னர்பாடுதான் பாவம்........ எங்களை எல்லாம் கட்டி மேய்க்கிற பொறுப்பாளர் எல்லே....

மன்னரின் மானத்தை வாங்கினால் இளவரசி எண்டு கூட பாக்காமல் த..ள(ல)பதி நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்..... இது மன்னர் கட்டளை....... :evil: :evil: :evil: ((((( மன்னா சம்பளத்தை இப்பவாவது தாங்கோ))))))

தமிழ் சூப்பர் மிச்சம் எப்பவரும்.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!

_________________

சாணக்கியன்.. பாவம் உங்க தாத்தா.. நம்ம அரச குடும்பத்தில சீதனச்சந்தையும் இல்லை சுயம்வரச்சந்தையும் இல்லை.. ஆதலால் உங்கள் தாத்தாவிற்கு பொருத்தமாய் ஒரு பாட்டியைத்தேடுங்க.. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.