Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம் உரிய திருத்தம் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன். இந்த தொடருக்கு ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள். தொடருக்கு முன்னால் பின்னால் என்று காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

அறிமுகம்

மன்னர் ஹரியின் ஆட்சி ஏறியதில் இருந்து கதை ஆரம்பமாகிறது. அதுற்கு முதலானவை தவிர்க்கப்படுகின்றன. (இந்தப்பாகம் கதையில் வரும் பாத்திரங்களை அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது)

பாகம் 1

மன்னர் சபைக்கு வருகிறார் இது தான் மன்னர் ஹரி முடி சூட்டிய பின்னர் நடைபெறும் முதலாவது அசர ஒன்று கூடல். எல்லோரும் எழுந்து நிக்கிறார்கள். மன்னரிற்கு வாழ்த்து கூறுகிறார் அவையில் இருந்த ஒரு சேவகன்.

சேவகன்1 : மன்னாதி மன்னர்.. இன்னும் புறமுதுகு காட்டாதா.. தோல்வியைக்கண்டிராத.. ஏன் போர்க்களத்தை அறிந்திராத யாழ்களத்தின் மன்னர் ஹரி அவர்கள் வருக வருக.. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!!!!!

மன்னர் ஹரி அவையோரிற்கு வணக்கம் கூறி அனைவரையும் அமரச்சொல்கிறார். எல்லோரும் அமர்கிறார்கள். தானும் அமர்ந்து அருகில் இருந்த மந்திரியின் காதலி எதையோ குசுகுசுக்கிறார்.

மன்னர்: மந்தி மந்திரிரி

மந்திரி: மன்னா என்ன பதறுகிறீர்கள்.

மன்னர்: யாரப்பா அந்த சேவகன் றொம்ப நல்லாவே பாராட்டிறார். புதிசாய் ஆட்சியேறிய மன்னர் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.. கேட்பவர்கள் என்னை தப்பாய் நினைக்கப்போகிறார்கள். :)

மந்திரி: கவலை வேண்டாம் மன்னா அவை உறுப்பினர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இருக்கிறது அதில் நானே கூறிவிடுகிறேன்.

மன்னர்: அப்பாடா கவலை தீர்ந்திச்சு.. :lol:

இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு சந்தேகம் வர.. நாங்களும் இங்கால இருக்கிறம் என்று கத்துகிறார். அந்த குடிமகன் யார் என்பதை பின்னால் பாருங்கள். இப்போது சுதாரித்த மன்னரும் மந்திரியும் அசடு வழிகிறார்கள்.

மந்திரி: (கையில் ஒரு ஏட்டை எடுத்து.) மன்னருக்கு அவை பிரமுகர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கப்போகிறது. நான் பெயர் கூறி அழைக்க ஒவ்வொருவரும் எழுந்து அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மன்னர்: யோவ் மந்திரி மன்னர் இருக்கட்டும்.. புதிய மன்னர் என்று கூறும் ஐயா.. (இந்த மந்திரி சேவகனோட சேந்திட்டார் போல)

மந்திரி: மன்னா கவலைவிடுங்கள் இதோ பல்டி அடிக்கிறேன்.

மந்திரி: முதலில் நமது புதிய மன்னருக்கு என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன்.

எனது பெயர் கவிதன் அந்த அரசசபையின் ஒரே ஒரு அறிவுள்ள திறமையுள்ள ஆற்றல் உள்ள அற்பணிப்புள்ள பட்டியல் நீள..

குடிமக்கள் பிரதிநிதி: ஓய் கவிதன் இதை எல்லாம் பின்னாடி வாற குடிமக்கள் பிரதிநிதிக்கு சொல்றதுக்கு இப்ப எதுக்கு சொல்றீர்

மந்திரி: சரி சரி நான் தான் கவிதன் இந்த நாட்டின் மந்திரி. :lol: (பொறாமை பிடிச்சவங்க என்ர அருமை பெருமையை இப்படி எடுத்துவிட்டாத்தான் உண்டு)

மன்னர்: ஓய் மந்திரி உம்மட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும் அடுத்தாளை கூப்பிடும் எத்தனை நேரமாய் இதையே ஓதுவீர்.

மந்திரி: உங்கள் சித்தம் என் பாக்கியம் மன்னரே. அடுத்ததாக எங்கள் தளபதி தல அவர்களை அறிமுகப்படுத்திறன்.

தல: வணக்கம் மன்னா.. நான் தான் இந்நாட்டு தளபதி இந்நாட்டில நடக்கிற வீரதீர செயல்களிற்கு சொந்தக்காரன். நானே நானே தானே.... (மந்திரி தளபதியைப்பார்த்து ஒரு வாறு முறைக்க தளபதி அமருகிறார்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பர். புலநாய்களின் நண்பர். புலனாய்வாளர் டண் அவர்கள். இவரது புலனாய்வானது... உலக புலனாய்வு இயந்திரங்களுடன் போட்டி போடுது. எங்கள் நாட்டில் இப்படி ஒரு புலனாய்வாளர் இருப்பது மகிழ்ச்சி. (கொஞ்சம் கனக்கவே ஐஸ் வைப்பம் பிறகு பிரியோசனப்படும் என்று மனதுக்குள் எண்ணுகிறார்.)

டன்: வணக்கம் மன்னா... நன்றி கவிதன். (ரொம்ப ஓவராய் ஐஸ் வைக்கிறீர் எதுக்கென்று தெரியல) மன்னா எனது புலனாய் அறிக்கையின் படி உங்கள் அரண்மனையில் வெகுவிரைவில் கெட்டிமேளம் கொட்ட இருப்பதாய் அறிந்தேன்.............. (இழுக்கிறார்..)

எல்லாரும் முனுமுனுக்கிறார்கள்.

மன்னர் : ஓய் மந்திரி உவரைக்கொஞ்சம் சும்மா அடக்கி வாசிக்கச்சொல்லும் இப்பான் அடிமடியிலையே கையை வைக்கிது..

மந்திரி எழுகிறார் டன் அமர்கிறார்.

மந்திரி: மன்னா அடுத்து வருபவர் சிறுவர் பிரதிநிதி வெண்ணிலா.. எங்கள் நாட்டு சிறுவர்கள் பற்றி இந்த சுட்டியிடம் அறிந்து கொள்ளலாம். குறுக்காக கேள்விகேட்பார்.. குறுக்கெழுத்துப்போட்டி வைப்பார். மூளைக்கு வேலை வைப்பர். பார்த்து பிறகு அவஸ்த்தைப்பட வேண்டி வரும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மன்னர்: என்ன மந்திரி மானத்தை வாங்கிறீர்.

வெண்ணிலா: வணக்கம் மன்னா நான் தான் சுட்டி வெண்ணிலா.. சுட்டித்தனம் பண்ணும் சுட்டிகளின் சார்பில் அவை வந்திருக்கிறேன். நன்றி வணக்கம்.

மந்திரி: அடுத்ததாக நான் அறிமுகப்படுத்த இருப்பவர்.... எங்கள் அரசசபையின் சட்டத்தரணி.. நித்திலா அவர்கள்...

நித்திலா: வணக்கம் மன்னா... நான் நித்தி என்று அழைக்கப்படும் நித்திலா.. எங்கள் அரசசபை சட்டத்துறையை பொறுப்பெடுத்துள்ளேன். வாழ்த்துக்கள் மன்னா என அமர்கிறார்.

மந்திரி: நன்றி நித்திலா.. அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. தூயா.. தூயா பபா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தான் எங்கள் கதாசிரியர் பல கதைகளை எழுதி எம்மக்களிடம் பாராட்டுப்பெற்றவர்.

தூயா: வணக்கம் மன்னா. நான் தூயா.. இப்பொழுது.. புலத்துப்புலம்பல்கள் என்ற தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.. பல்வேறுபட்ட அனுபவங்களையும் கதையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். நன்றி வணக்கம்.

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. எங்க ஊருப்பாட்டுக்காரன். பந்தும் கையுமாய்திரிந்தாலும். இளையராஞா தேவா ஏர் ரகுமான் தரதத்தில் பாடல்களை எடுத்துவிடுவார்.

மன்னர்: நிஜமாகவா..??

மந்திரி: சொல்ல மறந்திட்டன் அவர்களின் பாடல்களை வாரி வழங்குவார் என்று சொல்லவந்தன்.

விஸ்ணு: கவிதன் அண்ணா காலை வாருறியளே.... வணக்கம் மன்னா நான் தான் உங்க ஊருப்பாட்டுக்காரன் விஸ்ணு உங்களுக்கு போரடிக்காமல் இருக்க.. சுட்ட பாடல்களை பகிர்ந்து கொள்ள முடியும் தேவைப்பட்டால் கூறுங்கள்.

மன்னர்: நன்றி விஸ்ணு

மந்திரி: மன்னா அடுத்து அறிமுகமாக இருப்பவர் பிரச்சார பிரதிநிதி தூயவன்.

மன்னர்: ஓய் மந்திரி இப்படி எல்லாம் எங்க நாட்டில இருக்கா என்ன..??

மந்திரி: மன்னா உங்களுக்குத்தெரியாது இவரிடம் வாய் கொடுத்தால் தப்பவே முடியாது பிரச்சாரம் பண்ணியே கலைச்சிடுவாங்க.. ஆக்கள.. நாட்டப்பற்றி யாராவது கதைச்சா கதை கந்தல் தான்.

மன்னர்: அப்ப நான்கொஞ்சம் கவனமாய் இருக்கணும் என்றீர்.

தூயவன்: வணக்கம் வந்தனம் மன்னா. சதிகள் நடக்கும் அடுத்த கணம் தடுத்து நிறுத்துவேன். ஓடி ஒழியேன் ஒதுங்கிப்போகேன்.. போர் போர் போர்.. சொற்போர்..

மன்னர்: பாத்து பாத்து உங்கட சொற்போர்.. அப்பாவி மக்களை விட்டு வைக்கட்டும். எதிரிகளோட தொடரட்டும்.

(உங்கட சொற்போர்ல சிக்கியிருப்பவர்கள் அப்பாவிகள் என்று அறிஞ்சன்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் வினித். சினிமாத்துறையின் சிங்கம்.. சினிமாத்துறையை குத்தகைக்கே எடுத்து விட்டார் அப்பப்ப பிரச்சாரத்துறையிலும் களம் இறங்குவார்.

மன்னர்: அரண்மனைக்க எப்படி சினிமா போஸ்டர் வந்தது என்று இப்பான் புரிஞ்சிச்சு.. யாரு அந்த பொண்ணு..??

மந்திரி: மன்னா அது வந்து வந்து.. அழகுராணி அசின்.

வினித்: வணக்கம் மன்னா வணக்கம். எஙகள் மக்களிற்கு பொழுது போக்கும் வேணும் அல்லவா அது தான் சினிமா.. அது தான் வீணாய்ப்போன நான் வினித்தாக மாறி சேவை செய்கிறேன். மன்னர்ளிற்கெல்லாம் சினிமா இல்லை.. அந்த பொண்ணு பற்றிய விசாரணை காணும்.

மன்னர்: மந்திரியின் காதில்.. என்னையா இவரு நமக்கே கட்டளை இடுறார் :) .

மந்திரி: அசினின் தீவிர ரசிகராம் நீங்க அவாவைப்பத்தி விசாரிக்க கோவம் வந்திட்டு.. கீழாழ விட்டிடுங்க..

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் எங்கள் அருவி.. தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கிறார்.

மன்னர்: தகவல் தொழில் நுட்பமா ??? எதுக்கையா நமக்கு அது

மந்திரி: இன்னும் புறாவிலையும் கழுகிலையும் நில்லுங்கோ.. இவர் புதிய தொழில்நுட்பங்களை நம்மட நாட்டிற்கு அறிமுகப்படுத்துவார்.

மன்னர்: பொறுத்திருந்து பார்ப்பமே

அருவி: வணக்கம் மன்னா நன் அருவி.. உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அருவி பேசிக்கொண்டு அமர்கிறார்.

தொடரும்..!

அடுத்த பகுதியும் அறிமுகமே

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையில் எல்லோரும் ஏதோ முனுமுனுக்கிறார்கள்.

மன்னர்: அங்கே என்ன கூச்சல் அமைதி!! அமைதி!!

"குடி"மக்கள் பிரதிநிதி ஒருவர் தள்ளாடி தள்ளாடி வருகிறார். அவையில் இருந்த ஒரு பெண் பிரதிநிதி முறைக்கிறார்.

மன்னர்: மந்திரி யாரது அவை மரியாதை தெரியாத அந்த நபர் யார்? ஏன் தாமதமாய் வந்திருக்கிறார்.

மந்திரி: (ரகசியமாய் அவை மரியாதையா அப்படி என்றால் என்ன புதுசு புதுசா சொல்றாங்கப்பா) மன்னா இவர் சபையில் ஒரு முக்கியமான நபர் இவர் குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவர். இவர் பொய் முகத்தார்.

மன்னர்: "குடி" மக்கள் பிரதிநிதியில் ஒருவரா..?? பார்க்கவே தெரிகிறது. முகத்தாரே சபைக்கு ஏன் தாமதம்..??

முகம்ஸ்: வணக்கம் மன்னா.. நான் தான் "தீ கிறேரட் முகத்தார்". நமது யாழ்தேவி சே எனது கழுதை காலைவாரி கல்லுக்கொட்டிலுக்குள் தள்ளிவிட்டது அதுதான் லேட் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மன்னாதி மன்னர் புறூஸ்லி சுந்தரர் எங்கள் மன்னர் ஹரி வாழ்க வாழ்க வாழ்க!!

மன்னர்: வாழ்த்துக்கள் இருக்கட்டும் நீர் குடிமக்கள் பிரதிநிதி என்பதால் சபைக்கு குடித்துவிட்டு வரவேண்டும் என்பது அர்த்தமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்கிறேன்.

முகம்ஸ்: சோ வாழ்த்துக்கள் என்ற பெயரில பொய் பொய்யா அள்ளிவிட்டும் அந்த மனிசன் குளிரேல்ல.. ம் ம் பாத்திக்கிறன்.

மந்திரி: அடுத்ததாக நாங்கள் அறிமுகப்படுத்த இருப்பது.. "ஒரு யென்டில் அப்பு" அவர் ஒரு குடிமகன் அதைவிட குடிமக்கள் பிரதிநிதி அவர் தான்.. சீ சீ சீ சீ சின்னப்பு..

மன்னர்: இந்த மந்திரிக்கு வேறை வேலையில்லை.. அர்ஜீன் கோவிக்கப்போறர். (மனசுக்குள்)

சின்னப்பு : ஓய் கவி நன்றி மேன். வணக்கம் மன்னா... நான் நான் நான் நான்.. தான் சின்னப்பு குடி குடியைக்கெடுக்கும் என்ற பழமொழியை பொய்யாக்க வந்த குடிமக்கள் பிரதிநிதி. என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது பிறர் சொல்வார் கேட்டு அறிந்து கொள்ளும். மன்னர் வாழ்க குடி வாழ்க குடிமக்கள் வாழ்க.!!

அமர்கிறார் குடிமகன். பெண்கள் பகுதியில் இருந்து ஒருவர் மகிழ்ச்சி பொங்க சின்னப்புவை வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார

Link to comment
Share on other sites

ஜோரா இருக்கு...சிந்திக்க மட்டுமில்ல சிரிக்கவும் வைப்பீங்க...ம்ம்..தொடர்ந்து எழுதுங்கோ...! வாழ்த்துக்கள்..! :P

Link to comment
Share on other sites

அடி சக்கை எண்டானாம் தமிழும் தூள் கிளப்பப்போறா போல கிடக்கு ...........அறிமுக அரச சபையே நல்லா இருக்கும் தொடர் நல்லா இருக்கும் என நினைக்கிறன் ( சா முகத்தார் வீட்டுக்கு வேலை இல்லாமல் போட்டுது பரவாயில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்ஸ் நக்கல் தானே வேணாங்கிறது.. முகத்தார் வீட்டிற்கு கிட்டவும் வராது நம்ம அரசசபை.. நக்கல் பண்ணாமல் முகத்தார் வீட்டை தொடருங்கோ.. எல்லாம் நீங்கள் கொடுத்த தைரியம் தான்.. :wink: :P

Link to comment
Share on other sites

ஆரம்பமே அசத்தலாயிருக்கு தமிழ் அக்கா :P

எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா :P :P

தொடருங்கள் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறம் (மன்னரின் தங1;கை காசி போன காட்சிக்காக பலர் காத்துக் கொண்டிருக்கினம் 8) :) )

என்ன இருந்தாலும் மன்னர் ஆரம்பத்திலேயே மந்திரியை மந்தி மந்திரி எண்டு உண்மையான பெயரை சொல்லியிருக்காரே தைரியம் தான் :):lol:

Link to comment
Share on other sites

ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....! :P :P

Link to comment
Share on other sites

ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.

முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி

Link to comment
Share on other sites

ஆகா தொடர், அதுகும் அரச குடும்பம், நல்லா இருக்கே அக்கா தொடருங்க.

மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே :P

Link to comment
Share on other sites

அக்கா அசத்திட்டீங்கள் தொடர்ந்து எழுத வாழத்துக்கள்

அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா? :?: :?: :?: :roll: :roll:

பாவம் மன்னர் :):lol::):lol:

Link to comment
Share on other sites

ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா

வருவாங்க வருவாங்க பின்னாடி வருவாங்க :P

ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....!

நன்றி அனி.. எழுதிப்போட்டுப்பாத்தன் இதை பொறுமையா வாசிக்க முடியுமா என்று.. நினைத்தேன். :D

ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.

முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி

முகத்தார் தொடர்போல அற்புதமாய் வராது.. ஏதோ சிரிக்க பழைய நினைவுகளை மீட்ட ஒரு தொடர்.. நன்றி மதன். :P

உங்கள் நகைச்சுவை தொடர் நன்றாக உள்ளது தொடர்ந்து தாருங்கள்

நன்றி ரசிகை.. :P

அது சரி எப்ப இளவரசி அரன்மனைக்கு வருவா

நானே இப்பான் தேடிறன் அவா எங்கை என்று வருவா வருவா.. :wink: :P

மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே

நன்றி குளம்.. இதைப்படிக்கவாவது வரணும்ல.. :wink: :P

அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா?

அட நீங்க வேறை அண்ணாவைப்பத்தி தங்கை எடுத்தி விட்டா ஒரு மகிழ்ச்சி தானே..??

:wink: :P

ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

நன்றி றமா.. :P

þо¡ý ¦º¡øÖÈÐ ±ó¾ôÒò¾¢ø ±ó¾ôÀ¡õÒ þÕ츢ñÎ ¦¾Ã¢Â¡..Â째¡ õ........

என்ன விது திட்டிறியளா..?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!

Link to comment
Share on other sites

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ' date=' ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â![/color']

:lol::D:lol:

நல்லா இருக்கு அக்கா....அடுத்தது எப்பொ வரும்..? :lol:

Link to comment
Share on other sites

அக்கி, அருமை அருமை ;) தொடருங்கள். பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள் :lol:

Link to comment
Share on other sites

அக்கா அறிமுகப்படலம் சூப்பர்.

ஆமா அக்கா இனி காசி யாத்திரை படலம் , இளவரசி இளவரசனை தேடிய சுயம்வர காண்டம் எல்லாம் எப்ப அக்கா? அக்கா நல்லாக சிரிக்க வைத்து பழையனவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. பழைய இனிய நினைவுகள் தாலாட்டை விட சுகமாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் :P

ஆமா அவைக்கு ஏன் குருவியண்ணா தாமதமாக வந்தவராம்? மலர் அண்ணி விடல்லையாமோ? :roll:

Link to comment
Share on other sites

அக்கா அறிமுகப்படலம் சூப்பர்.

ஆமா அக்கா இனி காசி யாத்திரை படலம் , இளவரசி இளவரசனை தேடிய சுயம்வர காண்டம் எல்லாம் எப்ப அக்கா? அக்கா நல்லாக சிரிக்க வைத்து பழையனவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. பழைய இனிய நினைவுகள் தாலாட்டை விட சுகமாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் :P

ஆமா அவைக்கு ஏன் குருவியண்ணா தாமதமாக வந்தவராம்? மலர் அண்ணி விடல்லையாமோ? :roll:

மன்னரின் அழைப்பு தாமதமா வைத்திச்சுதா...அதுதான் தங்கையே..! பாவம் மலரண்ணி அவா அச்சா..! :wink: :P

Link to comment
Share on other sites

மன்னரின் அழைப்பு தாமதானா வைத்திச்சுதா...அதுதான் தங்கையே..! பாவம் மலரண்ணி அவா அச்சா..! :wink: :P

ஓஹோ. எதுவானாலும் மலரண்ணியை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே. :lol:

ஐயோ அண்ணா அக்கா வந்தால் திட்ட போறா. அரச சபைக்குள் மலரண்ணியும் மாந்தோப்பும் பற்றி கதைக்கிறதுக்கு. :cry: :wink:

அண்ணா அக்காட்டை சொல்லி "மலரண்ணியும் மாந்தோப்பும்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத சொல்லுவமா? :roll: :wink: :?: :arrow: :idea:

Link to comment
Share on other sites

அடடே...! அரசவை களைகட்டீட்டுதுபோல கிடக்கு.... மன்னர்பாடுதான் பாவம்........ எங்களை எல்லாம் கட்டி மேய்க்கிற பொறுப்பாளர் எல்லே....

மன்னரின் மானத்தை வாங்கினால் இளவரசி எண்டு கூட பாக்காமல் த..ள(ல)பதி நடவடிக்கை எடுக்கவேண்டிவரும்..... இது மன்னர் கட்டளை....... :evil: :evil: :evil: ((((( மன்னா சம்பளத்தை இப்பவாவது தாங்கோ))))))

தமிழ் சூப்பர் மிச்சம் எப்பவரும்.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØ즸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!

_________________

சாணக்கியன்.. பாவம் உங்க தாத்தா.. நம்ம அரச குடும்பத்தில சீதனச்சந்தையும் இல்லை சுயம்வரச்சந்தையும் இல்லை.. ஆதலால் உங்கள் தாத்தாவிற்கு பொருத்தமாய் ஒரு பாட்டியைத்தேடுங்க.. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.