Jump to content

லெப். கேணல் அப்பையா அண்ணா


Recommended Posts

மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா

evtu_ltcolappaiyaa.gif

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர்.

மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவையான வாகனங்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982-ஆம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் வாகனம் ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி வாகனம் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கணும் பிரபல்யமாகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் "களத்தில்" என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

"1983ம் ஆண்டு யுூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தைவிட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்@ர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்? என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு இராணுவப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார்.

அவரது விடுதலைப் பணிக்கு இராணுவப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. ஆரம்ப காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

நன்றி: விடுதலைப் புலிகள்

http://www.yarl.com/...s/ltcolappaiyaa

Edited by akootha
  • Like 1
Link to comment
Share on other sites

அப்பையா அண்ணைக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பையா அன்னைக்கும் மற்றும் இந்நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

இவரது மாணவன் நான் இவர் பற்றி பழைய பதிவொன்று

http://www.yarl.com/...pic=11201&st=20

Posted 07 January 2007 - 09:02 PM

appg0.png

நிழலாடும் நினைவுகள்

சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக

லெப் கேணல் அப்பையா அண்ணை

அப்பையா அண்ணை புலிகள் இயக்கத்தின் தலைவரிலிருந்து புதிதாய் சேர்ந்த போராளிகள் வரை அவரை அழைப்பது அப்படித்தான் இயக்கங்கள் பல ஆரம்பித்த எண்பதுகளில் இயக்க பெடியள் என்றாலே இருபதுவயது கார இளைஞர்கள் மட்டுமே என்கிற எல்லாரது எண்ணங்களையுமே மாற்றியமைத்து புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே 50 வயதான ஒரு மனிதர் இருந்தார் என்றால் அது அப்பையா அண்ணைதான்.

ஈழ பொராட்ட வரலாற்றில் ஆரம்பங்களில் இலங்கையில் எங்கு கண்ணிவெடி தாக்குதல் நடந்தாலும் மக்களிற்கு புலிகள் இயக்கம் தான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் புலிகள் இயக்கத்தினரிற்கோ உடனே ஞாபக்திற்கு வருபவர் அப்பையா அண்ணை காரணம் அண்றைய காலகட்டத்தில் இலங்கை அரசபடைகளிற்கு எதிராக நடாத்த பட்ட அத்தனை கண்ணி வெடித்தாக்குதல்களிலும் அப்பையா அண்ணையின் பங்கு இருந்தது. 1982ம் ஆண்டு யாழ் காரைநகர் வீதியில் பொன்னாலை பாலத்தில் வைத்து புலிகளால் நடாத்தபட்ட கண்ணிவெடித்தாக்குதல் ஒன்று சரியாக வெடிக்காததால் இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த தாக்குதல் பற்றி புலனாய்வு செய்ததில் அதில் அப்பையா அண்ணையின் பங்கு இருந்ததை தெரிந்து கொண்டு அன்றிலிருந்து அவரும் அரசபடைகளால் தேடப்பட அவரும் மற்றைய போராளிகள் போல தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளபட்டார்.

ஆனால் புலிகள் மீண்டும் இன்னொரு கண்ணிவெடித்தாக்குதலிற்கு திட்டமிட்டு அதற்கான கண்ணிவெடி மற்றும் வெடிக்கவைக்கும் பொறிமுறைகளை தயாரிக்கும் பணி அப்பையா அண்ணையிடம் ஒப்படைக்கபட்டது.அப்பையா அண்ணையும் அந்த பணியை செய்துமுடித்து விட்டு மற்றைய போராளிகளிடம் அதை ஒப்படைக்கும் போது சொன்னார் சொன்னார் தம்பியவை இந்த முறை பிழைக்காது என்றார். அவர் சொன்னது போலவே அந்த தடைவை பிழைக்கவில்லை1983 ம்ஆண்டு யூலை மாதம் 23 ந் திகதி இரவு 11 மணியளவில் திருநெல்வேலி தபால்பெட்டி சந்தியடியில் இலங்கை வரலாற்றையே புரட்டிபோட்ட அந்த கண்ணி வெடி வெடித்தது.

அந்த தாக்குதலில் அப்பையா அண்ணையும் பங்களித்திருந்தார். அதன்பின்னர் கண்ணிவெடிகள் செய்வது மட்டுமின்றி வெவ்வேறு என்னென்ன வடிவங்களில் எல்லாம் வெடிபொருட்களை பயன்படுத்தி எதிரிக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்று சிந்தித்து புதிது புதிதாய் ஏதாவது ஆராச்சிகளில் ஈடுபட்டு கொண்டேயிருப்பார் அது மட்டுமல்ல பல போராளிகளிற்கும் வெடிபொருட்கள் பற்றிய அறிவை ஊட்டி பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குவார்.அது மட்டுமல்ல போராட்டத்தின் ஆயுதபாவனையில் புதியமுறைகளை புகுத்தவேண்டும் என்கிற ஆர்வமும் அவரிடம் இருக்கும்.

இன்று புலிகளின் இராணுவ அணியில் கிட்டு பீரங்கி படையணி குட்டிசிறி மோட்டார் என்று தனி படை பிரிவுகள் இயங்குகின்ற வேளை இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக அப்பையா அண்ணை இருந்தார் என்றாலும் மிகையாகாது. புலிகள் மோட்டார் செல்களை தயாரிக்க தொடங்கிய காலம் அப்பையா அண்ணை மானிப்பாய் பகுதிகளில் இரு ஆயுததொழிற்சாலைகளை நிறுவி கண்ணிவெடிகள் மோட்டார் ஏவும் குளாய்கள் செல்கள் என்று என்று தாயாரிப்பில் இறங்கினார். அந்த காலகட்டங்களில் குறைந்தளவு தொழில் நுட்பவசதிகளுடன் உள்ளுரில் கிடைக்கும் பொருட்களை கொண்டே இவைகளையெல்லாம் தயாரிக்கவேண்டிய கட்டாயம்.

எனவே எங்கு பழுதடைந்த ( C.T.B ) இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துவண்டிகள் இருந்தாலும் அவற்றை கட்டியிழுத்து வந்து வெட்டி உடைத்து உருக்கி செல்லாக வடிவமைத்து கொண்டு போய் யாழ் கோட்டைபகுதியில் காவல் கடைமையில் இருக்கும் போராளிகளிடம் கொடுத்து சொல்லுவார் இண்டைக்கு யாரோ சிங்களவனுக்கு காலம் சரியில்லை தம்பி அடியடா என்பார் போராளிகளும் அதை வாங்கி செல்லை குளாயில் போட்டு பின்பக்கம் திரியை கொழுத்தி விடுவார்கள் அதுவும் அவை உள்ஊரிலேயெ குறைந்தளவு தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கபட்டிருந்ததால் சீறியபடி எழுந்து அங்கும் இங்கும் ஆடியபடிபோய் கோட்டை பகுதிக்குள் விழும் வீழ்ந்ததம் சில வினாடிகளில் வெடித்து சத்தம் கேட்கும் போராளிகளும் அப்பையா அண்ணையும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து துள்ளி குதிப்பார்கள்.

சில நேரங்களில் அவை வெடிக்காமலும் போகும் ஆனாலும் சோர்ந்து போக மாட்டார் அடுத்தடைவை வெடிக்கும் என்று போராளிகளிற்கு நம்பிக்கையூட்டிவிட்டு போவார்.யாழில் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் முதன் முதலில் நடந்த கைதி பரிமாற்றம் ஒன்றின் போது அன்றைய புலிகளின் யாழ்மாவட்ட தளபதி கிட்ண்ணாவிடம் யாழ் கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கொத்தளாவளை சொன்னார் நிங்கள் அனுப்பிய அலுமினியம் கோட்டைக்குள் நிறைந்து கிடக்கிறது முடிந்தால் இரண்டு வாகனம் அனுப்புங்கள் எற்றி அனுப்பிவிடுகிறேன் அதுமட்டுமல்ல உங்கள் செல்லுங்கு பயந்து இருபத்தி நாலு மணி நேரமும் ஆமிகாரர் பாவங்கள் பங்கருக்குள்ளையே தான் வாழ்க்கை என்று சொல்லி சிரித்தார்.

ஒரு நாள் மானிப்பாய் வீதியில் தன்னுடைய 90 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு போராளியுடன் போய் கொண்டிருந்தார். அங்கு ஒரு வாகனங்கள் திருத்துமிடத்தின் முன்னால் சில இரும்பு கழிவுபொருட்கள் குவித்து வைக்கபட்டிருந்தது அப்பையா அண்ணை பின்னால் இருந்த போராளியிடம் தம்பிடேய் ஒடிப்போய் கராச்காரரிட்டை அந்த இரும்புகள் தேவையா எண்டுகேள் தேவையில்லாட்டி ஒரு பையிலை அள்ளிகொண்டுவா என்றார்.அந்த போராளியோ அண்ணை எதுக்கு அந்த கறள்பிடிச்ச இரும்புகள் பேசாமல் நடவுங்கோ என்றான் .ஆனால் அவரோ விடுவதாய் இல்லை தம்பி அதுகளை வெட்டி பண்டிக்கை ( பண்டி சாச் என்பது ஒரு கண்ணிவெடியின் பெயர்) போட்டு அடிச்சா ஆமிகாரன் உடைனை சாகாட்டிலும் பிறகு ஏற்பாக்கி வருத்தம் வந்து சாவான் என்றார்.

இப்படி தமிழீழத்தின் பகுதிகளில் கிடைத்த சிறிய ஆணிகள் கம்பிகள் இரும்புகள் என்று எல்லாவற்றையுமே எதிரிக்கு எதிராய் எப்படி திருப்பலாம் என்று சிந்தித்து செயல்பட்டவர். அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் புலிகளிற்கு விமானப்படை ஒன்றை உருவாக்கும் கனவும் ஒன்று அவரிடம் இருந்தது அதற்கான தயாரிப்பு வேலைகளிலும் அவர் இறங்கி இரு விமானங்களையும் தயாரித்திருந்தார் அவையின் பரீட்சாத்தமான பறப்புகள் வெற்றியை தரவில்லை பின்னர் இந்திய படையின் வருகை அவரின் தொடர் முயற்சிக்கு முட்டுகட்டையாக அமைந்து விட்டது மட்டுமல்ல மானிப்பாயில் அமைந்திருந்த இவரது தொழிற்சாலையும் இந்திய படைகளால் தாக்கியழிக்கபட்டது. ஆனாலும் இவரது தொடர் முயற்சியின் பயனாக கிடைத்த பல கண்டுபிடிப்புகளான கண்ணி வெடிகள் கடல்கண்ணிகள் மோட்டார் செல்கள் என்று புலிகள் இயக்கத்தின் போராட்டகாலத்தில் அவைகளிற்கு பெரிதும் உதவியது.

பின்னர் 1997ம் அண்டு யெயசுக்குறு காலப்பகுதியில் அவரது தள்ளாதவயதில் மல்லாவி பகுதியில் வைத்து கடத்திகொண்டுபோய் கொலைசெய்யபட்டார். இன்று புலிகளின் படையணியினர் ஏவியதும் சீறியெழுந்து சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கு தவறாமல் துல்லியமாக எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஆட்லெறி செல்களை பார்க்கும் போது அன்று அப்பையாண்ணை செய்து ஏவியதும் ஆகாயத்தில் ஆடியாடி போகும் அந்த அலுமினிய செல்களையும் அதன் பின்னால் இருந்த அவரது உழைப்பையும் அவரையும் ஒரு கணம் நினைவு கூருவோம்.

Edited by sathiri
  • Like 1
Link to comment
Share on other sites

நினைவு நாள், வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • 8 years later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா நினைவில்...

லெப்.கேணல் அப்பையா

ஐயாத்துரை இராசதுரை

மானிப்பாய், யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு:16.12.1933

வீரச்சாவு:24.12.1997

நிகழ்வு:வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா அரசின் கூலிப்படையினால் கடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவு


1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில் என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

 

 

1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

 

NyuGW4uJXED7WyFSUr3t.jpg

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

2PGn6fA1x72vfGxfr9gY.jpg

 

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

ஊர் வாழ உறவு வாழ
உற்றம் சுற்றம் உரிமையோடு வாழ
வீரமறவர்களாக வேங்கையின் மைந்தனாக
மானிடத்தின் அதி உச்ச ஈகமாக

எதிரிகளின் தமிழின அழிப்பு கூட்டுச்சதியில்
நெருப்பாற்றிலும் இரசாயன குண்டுமழையிலும்
துரோகத்தனங்களையும் எதிர் கொண்டு
எம் மறவர் நிற்க

சதிகார இந்திய அரசின் வழிநடத்தலில்
ஐ.நா. வும் அமெரிக்காவும்
ஐரோப்பிய ஒன்றியமும் ஆசியப் பேய்களும்
சிங்களப் பிசாசுகளுடன் இணைந்து
மானிட தர்மத்தையும் மனிதநேயத்தையும்
அழித்துக் கொன்றன

எம் உறவுகளைக் காப்பாற்று என
பாலரும் பிஞ்சுமாக எம்மினம்
இரவு பகலாக தெருவெங்கும்
கதறித் துடித்து நிற்க
சிங்களத்தின் பாதுகாப்பு வலயத்தில்
தெருவெங்கும் பிய்த்தெறியப்பட்ட உடலங்களாகவும்
உயிரோடு புதைக்கப்பட்டது போக
சித்திரவதை முகாமிலும் எம் துயரம்

எம்மைக்காக்க எம் தேசம்காக்க ஈகம் ஆனவரே
உங்கள் உணர்வோடு எங்கள் தலைவன் வழியில்
இறுதி வெற்றிவரை உறுதியோடு போராடுவோம்
உங்கள் உணர்வுகளை வெல்லும்வரை
நாம் ஓயமாட்டோம் என உறுதி கூறுகின்றோம்.

-எரிமலை இதழ்

https://www.thaarakam.com/news/7733ee96-3697-4548-8b8c-e39c23ec282a

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன்ட் கேணல் அப்பையா

Commander-Lieutenant-Colonel-Appaiya-Ann

மூத்த உறுப்பினர் லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணா.

எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில் என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

நன்றி: சூரியப் புதல்வர்கள் 2004.

 

https://thesakkatru.com/lieutenant-colonel-appaiya/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவில் நீங்காத லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணர்

 
lt_col_appaiya2.jpg
 81 Views

24.12.2020 அன்று விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான அப்பையா அண்ணரின் 23ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

மானிப்பாயைச் சேர்ந்த இராசதுரை அல்லது இராசையா என அழைக்கப்பட்ட அப்பையா அண்ணர் 1978 காலப்பகுதியில் தேசியத் தலைவர் அவர்களோடு இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்க முன்வந்திருந்தார். ஆரம்பத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் மட்டக்களப்பு, வவுனியா என சில இடங்களில் பணியாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்பெடுப்பதற்கு முன்பே திருமணமாகி இருந்த போதிலும், இயக்கத்தில் இணைந்து கொண்டிருந்தார். விடுதலைப்புலிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு தங்கும் இடங்களை ஏற்படுத்திக் கொடுத்து, போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து, அவர்களது முக்கியமான பணிகளை நிறைவு செய்து வந்தார். அவர் அரச ஊழியராக இருந்த காரணத்தினால் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு போராளிகளைப் பாதுகாத்து வந்தார்.

1981 ஜூன் மாதம் முதல் வாரம் தேசியத் தலைவரும் மற்றும் சில போராளிகளும் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்த பின், ஈழத்தில் தங்கி நின்று செயற்பட்ட போராளிகளோடு  சேர்ந்திருந்து அவர்களது பாதுகாவல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அப்பையா அண்ணர்.

1982 செப்டம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்முகமாக பொன்னாலை பாலத்தில் வைத்து அவ்வழியே வரும் கடற்படை வாகனங்களுக்கு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. புலிகள் கண்ணிவெடி களைப் புதைத்துவிட்டு காத்திருந்தனர். பார்சல் குண்டுத் தாக்குதல்கள், கண்ணி வெடிச் செயற்பாடுகள், வெடிமருந்துப் பாவனை என்பனவற்றில் ஆரம்ப காலப் பகுதியில் இருந்தே மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த அப்பையா அண்ணரும், பொன்னாலைத் தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தார். மின்பிறப்பாக்கி ஒன்றின் மூலம் மின்சார இணைப்புகள் பொருத்தப்பட்டு, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

அதிகாலை 6.30 மணியளவில் மிகப் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்தன. ஆயினும் அதில் ஏற்பட்ட சிறு தவறு ஒன்றின் காரணமாக வாகனங்கள் சேதங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொண்டன. உடனடியாக வாகனங் களை விட்டிறங்கிய கடற்படையினர்  போராளிகளைத் துரத்திச் சென்றனர். போராளிகள் தப்பிச் சென்றுவிட்ட போதிலும் அவர்கள் பாவித்த மின்பிறப்பாக்கி கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது. அந்த மின்பிறப்பாக்கி அப்பையா அண்ணரின் சொந்தப் பெயரில் வல்வெட்டித்துறையில் உள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பையா அண்ணனும் தலை மறைவு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார்.

ஈழத்தில் இருந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்பதனால், அப்பையா அண்ணரும் தமிழகம் வந்து சேர்ந்தார். அக்காலப் பகுதியில் தேசியத் தலைவர் அவர்களும் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினைத் தொடர்ந்து மதுரையில் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டிருந்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பழைய சத்திரம் ஒன்றில் போராளிகள் சிலர் தங்கியிருந்தனர். அப்பையா அண்ணரும் அவர்களோடு இணைந்து கொண்டார்.

download-2.jpeg

82ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி லெப்டினன்ட் சங்கர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 25ஆம் திகதி அளவில் தமிழகம் கொண்டு வரப்படுகின்றார். மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சைகள் பலன் அளிக்காது சங்கர் உயிர் துறக்க நேரிட்டது.

1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் உயிர்நீத்த சங்கரின் உடல் மதுரையில் உள்ள மயானம் ஒன்றில் தீயோடு சங்கமித்தது. அப்பையா அண்ணரே சங்கரின் உடலுக்குக் கொள்ளி வைத்தார். 1983இன் முற்பகுதியில் தலைவர் அவர்கள்  நாட்டுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து அப்பையா அண்ணர் உட்பட்ட போராளிகளும் தமிழீழம் திரும்பினர். 1983ஆம் ஆண்டு இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீதான திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலில் தேசியத் தலைவர் உட்பட்ட மற்றைய போராளிகளோடு அப்பையா அண்ணரும் பங்கேற்றிருந்தார். ஐம்பது வயதான அப்பையா அண்ணர் இளைஞர்களோடு இணைந்து மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டார். கண்ணிவெடி புதைப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும். தார்ரோட்டில் கிடங்கு வெட்டி அதனுள்ளே வெடி மருந்தை அடைக்கும் பணியில் லெப்டினன்ட் செல்லக்கிளி, லெப்டினன்ட் கேணல் விக்டரோடு இணைந்து அப்பையா அண்ணரும் ஈடுபட்டார்.

83 ஆடிக் கலவரத்தை தொடர்ந்து இந்திய அரசு ஈழப்போராளிகள் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்க முன்வந்தது. ஆயுதப் பயிற்சிக்கென ஈழத்தில் இருந்து தமிழகம் வந்திருந்த விடுதலைப்புலிப் போராளிகளோடு அப்பையா அண்ணரும் வந்திருந்தார்.அவரது வயது காரணமாக இந்தியப் பயிற்சிகளுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் அப்பையா அண்ணனை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் பயிற்சி பெற்றிருக்காவிடினும் இயக்கத்தின் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் அப்பையா அண்ணர் பங்குபற்றியிருந்தார்.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படையினரோடு யுத்தம் ஆரம்பமாகி நடைபெற்ற காலப்பகுதியில் தேசியத் தலைவரும் இயக்கமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனால் தேசியத் தலைவர் அவர்களும் குறிப்பிட்ட சில மூத்த போராளிகளும் மணலாற்றுக் காட்டுக்கு சென்றனர். தேசியத் தலைவர் மணலாற்றுக் காட்டில் புனித பூமியில் வாழ்ந்த காலப்பகுதியில் அப்பையா அண்ணரும் அங்கு வாழ்ந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்தார். பிரேமதாசா அரசு இயக்கத்திற்கு ஆயுத உதவிகள் வழங்கிய காலப்பகுதியில் மணலாற்றுப்  பிரதேச எல்லையில் உள்ள சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் வழியாக ஆயுதங்களும் போர்த் தளபாடங்களும் புலிகளிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புனிதபூமி முகாமில் யாரெல்லாம் சென்று ஆயுதங்களைப் பெற்று வருவதென பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது, அப்பையா அண்ணரும் தேவர் அண்ணாவும் தங்கள் பெயர்களை வழங்கியிருந்தார்கள். மறுநாள் காலையில் ‘கம்பால’ (முகாம் வாழ்வுக்கு தேவையான பொருட்களை தொங்கு பைகளில் மரத்தடி அல்லது கம்பு ஒன்றில் கட்டி காவும் நடைமுறை )   செல்வதற்காக பழசுகள் இரண்டும் கம்பு ஒன்றுடன் தயாராக நின்றிருந்தனர். அங்கு வந்த தலைவர் அவர்கள் “என்ன நீங்களும் போறீங்களோ?காட்டுக்குள்ளை கனதூரம் நடந்து போய் தூக்கிக் கொண்டு வரவேணும். உங்களுக்கு கஷ்டமாய் இருக்கும். போகவேண்டாம்” என்றார். “இல்லைத் தம்பி எங்களுக்கு கஷ்டம் இல்லை.நைன்ரியள் நாங்களும் எல்லா வேலையும் செய்வம் எண்டதை இங்கை சிலருக்கு காட்ட வேணும். எங்களை மறியாதையுங்கோ” என்று சொல்லி ‘கம்பால’ சென்று  ஆயுதப் பெட்டி ஒன்றை சுமந்து கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். இப்படி அப்பையா அண்ணர் வயதில் மூத்தவராக இருந்தாலும் தன்னையும் ஈடுபடுத்தி உழைத்து வந்தார்.

இயக்கத்தின் கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில் 90 களில் அப்பையா அண்ணர் தயாரித்த நெல்லி ரசம் யாழில் பிரபல்யம் பெற்று விளங்கியது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் ஒருபகுதியை இயக்கத்திற்கு வழங்கி வந்தார். தனது இறுதிக்காலம் வரை இயக்கத்தின் கொடுப்பனவைப் பெறாமல் தனது ஓய்வூதியப் பணத்தின் உதவியோடு வாழ்ந்து வந்தார். இறுதிக் காலப்பகுதியில் இயக்கப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது மனைவியோடு மல்லாவிப் பகுதியில் வாழ்ந்து வந்தார். 24.12.97 அன்று மல்லாவியில் இருந்து வவுனியாவில் தங்கியிருந்த வளர்ப்பு மகளை சந்திப்பதற்காக தனது சிறியரக மோட்டார் வண்டியில் காட்டுப் பாதையினூடாகச் சென்றபோது எதிரிகள் அவரது உயிரைப் பறித்தெடுத்திருந்தனர். விடுதலைப்புலிகள் இருக்கும்வரை என்றென்றும் போராளிகளின் மனங்களில் அப்பையா அண்ணரின் பெயர் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

  -தேவர் அண்ணா

 

https://www.ilakku.org/?p=38003

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.