Jump to content

15 தமிழ்ப் படங்களுடன் 5 நாட்கள் நடக்கும் நார்வே தமிழ் திரைப்பட விழா!


Recommended Posts

ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது.

சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார்.

சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது.

கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். ஆனால், ஒரு படத்தினை உருவாக்கும் கேப்டனான இயக்குநர்களை கவுரவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்திருந்தார்கள் (ஆனால் இந்த அளவு தாங்கு தாங்கென்று தாங்கியும் கூட வெற்றி மாறன் போன்ற சில இயக்குநர்கள் தங்கள் 'வேலையைக்' காட்டிவிட்டது வேறு விஷயம்!!)

இந்த முறை நிகழ்ச்சியை முற்றிலும் மாறுபட்ட முறையில் நடத்துகிறது நார்வே தமிழ் திரைப்பட விழாக் குழு.

இதுகுறித்து விழாவின் இயக்குநரான வசீகரன் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பில், "சர்வதேச அளவில் தமிழ் திரைப்படங்களுக்காக நடக்கும் ஒரே நிகழ்வான 'நார்வே தமிழ் திரைப்பட விழா' வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நார்வே நாட்டின் தலைநகர் 'ஆஸ்லோ' மற்றும் 'லோறன்ஸ்கூ' நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு சிறப்பாக நடக்கவிருக்கிறது.

இந்த 5 நாள் விழாவில், கடந்த இரு ஆண்டுகளையும் விட முற்றிலும் வேறுபட்ட பல புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.

இந்த விழாவில் வழங்கப்படும் பெருமைக்குரிய தமிழர் விருது மற்றும் இதர பிரிவுகளுக்கான விருதுகளுக்கு தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

* நல்ல தரமான தமிழ்த் திரைப்படங்களை நார்வேயில் வாழும் தமிழர்களுக்கும், நார்வே நாட்டு குடிமக்கள் மற்றும் சர்வதேச மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லுதல்.

* உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு வருடமும் வெளியாகும், நல்ல தரமுள்ள தமிழ்ப் படங்களிலிருந்து 15 படங்களைத் தேர்வு செய்து 25 பிரிவுகளில் 'தமிழர் விருது' வழங்குதல்.

* தமிழர் வாழ்வியலைப் பேசுகின்ற 10 குறும் படங்களை உலகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்து அவற்றில் 5 குறும் படங்களுக்கு தமிழர் விருது வழங்குதல்.

* தமிழ் சினிமாவில் பணியாற்ற ஆர்வமும், திறமையும், ஆற்றலும் உள்ள இளைஞர்களைத் தேர்வு செய்து தமிழ் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்துதல்.

* நார்வே தமிழ்த் திரைப்படவிழாவில் தமிழர் விருது பெறுகின்ற நல்ல திரைப்படங்களை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைத்தல். நார்வே நாட்டில் நடைபெறுகின்ற திரைப்படவிழாகளுக்கும் அறிமுகம் செய்தல்.

* திரைப்பட விழாவிற்கு வருகின்ற மக்களின் பொழுதுபோக்கினை கருத்தில் கொண்டு இசைக் கச்சேரி, நடனங்கள், நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்வுகளோடு, பல இன மக்களின் கலை வடிவங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இந்த விழா நடக்கிறது.

திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள்:

- தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

- திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.

- உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.

- தமிழ் இலக்கியங்கள், தமிழர் வரலாறு சார்ந்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

- போட்டிக்கு வரும் திரைப்படங்கள் 01.01.2011 இல் இருந்து 31.12.2011 தேதிக்கு முன் வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும்.

- நார்வேயில் உள்ள திரை அரங்கங்களில் வெளியிடப்படாத, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

- தேர்வு செய்யப்படும் சில திரைப்படங்கள் "தமிழர் விருதுக்கான" போட்டியில் திரையிடப்படாமல், சிறப்புக் காட்சிகளாகவும் காண்பிக்கப்படும்", என்று அறிவித்துள்ளார்.

குறும்படங்கள்

இந்த விழாவில் குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. இந்தக் குறும்படங்கள் - தமிழ் மொழி , தமிழர்கள் சார்ந்தவையாகவும், இணைய தளங்களில் ஏற்கெனவே வெளியாகாதவையாகவும் இருக்க வேண்டும்.

நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாகவும், 25 நிமிடங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும்.

5.02.2012 தேதிக்குள் இந்த குறும்படங்கள் வெளியாகியிருக்க வேண்டும்.

திரைப்படங்களை 10.01.2012 முன்னதாக பதிவுசெய்து / அனுப்பவேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் (

www.ntff.no

) இணையத்தளத்திலும், தமிழ் நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட திரைப் படங்கள் குறித்த விவரம் ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படுகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.