Jump to content

பௌத்தம்'; இந்தியா, சீனாவின் கெடுபிடி யுத்தம் அம்பலம்


Recommended Posts

Tuesday, 29 November 2011 06:12 Hits: 822

  • emailButton.png
  • printButton.png

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த விசேட பிரதிநிதிகளின் சந்திப்பானது திடீரென இச் சந்திப்பிற்கு முதல் நாள் கைவிடப்பட்டிருப்பது "பௌத்தம்' தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான கெடுபிடி யுத்தத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான உலக புத்தபிக்குகள் மாநாட்டில் திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா பங்கேற்பதற்கு அனுமதிப்பதை மறுத்து விடுமாறு பெய்ஜிங் விடுத்திருந்த கோரிக்கையை புதுடில்லி நிராகரித்ததைத் தொடர்ந்து இருநாட்டு விசேட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பைக் கைவிடுவதென சீனா தீர்மானித்துள்ளது. இந்த விடயமானது டிசம்பர் 89 இல் இருநாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் இடம்பெறும் பாதுகாப்பு செயலாளர் மட்டத்திலான சந்திப்பையும் ஒத்திவைக்கும் நிலைமைக்கு தானாகவே இட்டுச் செல்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் "அமத்தி வாசித்தாலும்' திரைமறைவில் இந்த விடயம் தீவிரமடைந்துள்ளதாக ஐ.ஏ.என். செய்திச்சேவை நேற்றுக் குறிப்பிட்டது.

பௌத்தத்தில் வலுவான சக்தியுடைய நாடாக சீனாவை உருவாக்குவதென்ற தீர்மானத்தை சீனத்தலைமைத்துவம் எடுத்திருக்கின்றது. மதம் தொடர்பாக மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திலும் பார்க்க திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவுடன் தொடர்புபட்ட விடயங்களின் அடிப்படையிலேயே பௌத்தத்தில் கொண்டிருக்கும் திடீர் பரிவானது மேலெழுந்திருக்கிறது.

தலாய்லாமா இறப்பதற்கு முன்னராக அவரின் "மறுபிறவியை' தெரிவு செய்யும் விவகாரத்தில் தாங்கள் கரிசனையுடன் ஈடுபட்டிருக்கின்றனரென்ற நம்பகத்தன்மையை சர்வதேச ரீதியாக பௌத்த சமூகத்தினர் மத்தியில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் சீனாவின் கம்யூனிஸ ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

நட்புறவுடன் கூடிய தலாய்லாமாவே தமது திபெத்தியச் சிக்கலுக்கு தீர்வைக் காண்பாரென சீனர்கள் நம்புகின்றனர். 1951 இலிருந்து பொதுமக்கள் கிளர்ச்சி, தீக்குளிப்பு போன்றவற்றின் மூலம் திபெத்தின் கிளர்ச்சி வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

1989இல் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திபெத்திய கிளர்ச்சியானது தலாய்லாமாவை திபெத்திய மக்களின் அப்போதைய தலைமுறையினர் ஒருபோதுமே கண்டதில்லை என்பதையும் கம்யூனிஸ பிரசாரமானது குற்றமான விடயமென்ற தினசரி "தீனி'யுடன் அவர்கள் வளர்ந்ததையும் சீனத்தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.

1991 இல் மூன்றாவது செயற்பாட்டு மாநாட்டில் தீவிரமான முறையில் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் திபெத் தொடர்பான புதிய கொள்கையை சீனா உள்ளீர்த்தது. மனங்களை வென்றெடுக்கும் கருவியாக மதம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதே அக் கொள்கையாகும்.

இந்தத் தந்திரோபாயத்தின் ஓரங்கமாக 1993 இலும் 1995 இலும் கர்மா பா, பஞ்சன்லாமா ஆகிய இரு உயர்மட்ட லாமாக்களின் மறுபிறப்புகளைத் தெரிவு செய்யும் நடவடிக்கையை சீனக் கம்யூனிஸ்ட்டுகள் ஆரம்பித்திருந்தன.

ஹெட்கூன் சோக்சி றிய்மா என்ற 6 வயதுப் பையன் டலியா லாமா வினால் "உண்மையான' பஞ்சன்லாமா என்று அடையாளம் காணப்பட்டதுடன் 18 வருடங்களாக இப்போதும் சீனாவின் காவலிலேயே இருந்து வருகிறார்.

சீனாவின் வேட்பாளரான ஜியான்சின் நோர்வூ திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவிருக்கும் நிலையில் 2000 ஆம் ஆண்டு புத்தாண்டு வாரத்தில் கர்மாபா தலாய்லாமாவுடன் இணைந்து கொள்ள இந்தியாவுக்குத் தப்பியோடிவிட்டார்.

மதம் தொடர்பான மாவோவின் விருப்பமின்மையை புறந்தள்ளிவிட்டு செஜ்ஜியின் மாகாணத்தில் 2006 இல் முதலாவது உலகப் பௌத்த மாநாட்டை சீனா நடத்தியது. இரண்டாவது மாநாடு 2009 மார்ச்சில் வூக்ளியில் இடம்பெற்றது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த 1700 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இரு மாநாடுகளிலும் ஜியான்சின் நோர்வூ உலகிலுள்ள பௌத்த அதியுயர் மட்டப் பிரதிநிதியாகக் காட்சிப்படுத்தப்பட்டார்.

உண்மையில் பௌத்த வல்லாதிக்கம் மிகுந்த நாடாக சீனா இருக்கின்றதென ஆக்ரோஷமான முறையில் சீனா காட்சிப்படுத்துவதை கௌதம புத்தர் பரிநிர்வாணம் பெற்ற இந்தியா சிறப்பான முறையில் வரவேற்கவில்லை. சிங்கப்பூர், இலங்கை, கம்போடியாவில் பௌத்த மாநாடுகளை நடத்துவதை டில்லியும் ஆரம்பித்திருந்தது. இந்த மாதிரியான காட்சிகள் நேபாளம், வியட்நாமிலும் இடம்பெறவுள்ளது என்று ஐ.ஏ.என் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.

சீனா எச்சரிக்கை

இது இவ்வாறிருக்க தலாய்லாமாவுக்கும் அவரின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எந்த நாடும் இடமளிப்பதைத் தான் எதிர்ப்பதாக சீனா நேற்று திங்கட்கிழமை எச்சரித்துள்ளது.

புதுடில்லியில் இடம்பெற்று வரும் சர்வதேச புத்தபிக்குகள் மாநாட்டில் உரையாற்றவுள்ள தலாய்லாமா தூய்மையான சமயப் பிரமுகர் அல்ல என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மதத்தின் போர்வையில் நீண்டகாலமாக பிரிவினைவாத நடவடிக்கைகளில் தலாய்லாமா ஈடுபட்டு வருபவர் என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொங் லீயீ கூறியுள்ளார்.

இதேவேளை, பௌத்த மக்களை அதிகளவில் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் இந்தியாவை தளமாகக் கொண்ட புதிய சர்வதேச அமைப்பொன்றை உருவாக்கும் விடயத்தை நெருங்கி வந்திருப்பதாகவும் ஐ.நா.போன்ற சர்வதேச மட்டத்தில் பௌத்தம் தொடர்பாக ஒருமித்து குரல் கொடுக்கவல்ல அமைப்பை உருவாக்கத் தீர்மானித்திருப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று தெரிவித்திருந்தது.

http://www.thinakkural.com/news/all-news/india/9735-2011-11-29-00-43-17.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.