Jump to content

தனி நபர் தாக்குதல்கள் யாழ் களத்தில் தொடர் கதையா?


Recommended Posts

வணக்கம் அனைவருக்கும்,

இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன்.

இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது.

மேலும் அனைவரும் பட்டி மன்றக் கருத்துக்களை வாசித்திருப்பீர்கள் அதில் ரசிகையின் வேண்டுகோளுக்காக எதிர் அணியில் நான் வாதாடினாலும்,இங்கே தூயவன் கூறியதைப் போல் நிதர்சனமாகத் தெரிவது சில பேர் இணயம் கொடுக்கும் அனாமதேயத்தை தவறுதலாகப் பாவிகிறார்கள் என்பதுவே.கட்டுப் பாடுகளும் விதி முறைகளும் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு அவசியமாகின்றன.தண்டனைகள் அற்ற விதிமுறைகள் மீண்டும் மீண்டும் அவ் விதி முறைகளை மீறச் செய்யும். நான் இங்கே நிர்வாகத்திடம் கேட்கும் கேள்வி இவ்வாறான தனி நபர் தாக்குதல்களை நிப்பாட்டக் கூடிய பலமான காத்திரமான நடவடிக்கைகளை உங்களால் எடுக்க முடியாதா என்பதுவே?இங்கே விதி முறைகள் இன்னார் இவர் என்பவற்றிற்காக வளைக்கப் பட்டால் அவை விதிமுறைகளாக இருக்காது.இங்கே வந்து ஒரு தனி நபருக்காக நட்பின் பாசத்தின் அடிப்படயில் வந்து எழுத விரும்புபவர்கள் வந்து தாராளமாகக் கருத்து எழுதலாம்.

அதோடு தேவை கருதி நான் எனது சொந்தக் கருத்தை நடுவர் தீர்ப்பிற்கு முன்னர் எழுதியதற்கு ,எனது அணியினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த காலம் வருசபிறப்பன்று நடக்கும் பட்டி மன்றங்களிலை...ஒருஇடத்திலை இராமன் வீரன் என்பார். அதே நபர். அடுத்த ஒரு இடத்தில் இராமன் கோழை என்பார். குறிகிய மணி இடைவளியில்.. குமரன் வாத்தி போன்ற பட்டிமன்ற பண்டிட்டுகள் இப்படி செய்ததை கண்டிருக்கிறன்...இதைத்தான் பட்டி மன்றமென்பது.. ....என்ன இருந்தாலும் நாரதர் சேம் சைட் கோல் போட்டிருக்க கூடாது... :lol::lol:

Link to comment
Share on other sites

ஆகா..! நாரதர் அண்ணா என்ன ஒரு அருமையான இணையத்தை பார்த்து சீரளிவு எண்டு சொல்லீட்டீங்களே உங்களுக்கே இது நல்லாருக்கா...??? என்னதான் பிரச்சினை எண்டாலும் உங்களை நம்பியவர்களை இப்பிடி ஏமாத்திப் போட்டீங்களே...!

( இது நாரதர் அண்ணாவுக்காக அல்ல)

தனிநபர் தாக்குதல் தொடரக்கூடாது என்பதில் எனக்கு இன்னும் ஒரு கருத்து இல்லை....! அதனால் எங்களுக்குள் வரும் சஞ்சலங்கள் கருத்துக்கள் கூறவிருப்பமில்லாத ஒரு விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்பது ஏற்றுக்கொள்ளபடவேண்டியது. அதனால் களம் நல்லதொரு உறுப்பினர்களை இளந்து விடக்கூடாது...... யாழ்களத்தின் நன்மை கருதியாவது ஒருவரை விளித்து எழுதும் போது அவரின் மனம் நோகாதவாறு தயவு செய்து எழுதுங்கள்.....! இது எல்லோரிடமும் எனது தனிப்பட்ட வேண்டுகோள்....!

(ஆனால் தாயை பளித்தவனையும் தாய்நாட்டைப் பளித்தவனுக்கும் மரியாதை குடுத்து உயரவைக்காதீர்கள்....! )

Link to comment
Share on other sites

ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,

Link to comment
Share on other sites

ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் தங்கள் முகமூடிகளை தாங்களே கிழித்துக் கொள்கிறார்கள். அதனை யாழ் அனுமதிக்க வேண்டும். :lol:நானும் சொல்கிறேன்! செயலில் இறங்குவது என்பது கதகதப்பான அறைக்குள் இருந்து கணணியில் எழுதுவது போல சுலபமானது அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய கருத்து என்னவெனில்! தமிழ் இளையோர் அமைப்பு என்ற ததலைப்பில் குருவி எழுதிய எல்லாக் கருத்துக்களையும் மீள வெளியிட வேண்டும். வேண்டுதமானால் அந்தக் கருத்தக்களளுக்கு நாம் எழுதிய பதில் எதிர்க் கருத்துக்களை வேண்டுமானால் நிர்வாகம் பகுதிக்கு மாற்றி விடுங்கள். குருவிகள் எழுதியவற்றை அனைவரும் பார்க்க வேண்டும். பயன்பெற வேண்டும்

Link to comment
Share on other sites

கதை அப்படிப்போகுதா..எனது சர்வேக்கு நல்ல உதவி கண்ணாளங்களா..

Link to comment
Share on other sites

கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னர் யாழ்களத்தில் கருத்தாடிய மூத்த கருத்தாளனின் வண்டவாளங்களை தண்டவாளத்திலை ஏத்தச் சொல்லி பொறுப்பில்லாமால் கேக்காதேங்கோ. மனிசர் என்ற ஒரு புரிந்துணர்வு இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னர் யாழ்களத்தில் கருத்தாடிய மூத்த கருத்தாளனின் வண்டவாளங்களை தண்டவாளத்திலை ஏத்தச் சொல்லி பொறுப்பில்லாமால் கேக்காதேங்கோ. மனிசர் என்ற ஒரு புரிந்துணர்வு இருக்க வேணும்.
அண்ணா.. உங்கள எந்த குறூப்பில சேர்க்கிறது.. நாரதர் குறூப்பா? குருவி குறூப்பா?
Link to comment
Share on other sites

இண்டையிலை இருந்து உம்மடை குறூப்பிலை சேரலாம் எண்டு யோசிச்சு இருக்கிறன். உம்மடை வசதி எப்படி எண்டு சொல்லுமன் என்ன :P :wink:

Link to comment
Share on other sites

தாராளமா சேரலாம்.. நீங்க எனக்கு ஜால்ரா சத்தமா போடணும்.. நானும் உங்களுக்கு பதிலுக்கு ஜால்ரா சத்தமா போடறனே.. ஜென்டில்மன் அகிறீமன்ட்.. சரியா

இண்டையிலை இருந்து உம்மடை குறூப்பிலை சேரலாம் எண்டு யோசிச்சு இருக்கிறன். உம்மடை வசதி எப்படி எண்டு சொல்லுமன் என்ன :P :wink:
Link to comment
Share on other sites

நேரம் கிடைக்கும் பொழுது எங்கடை அகிறீமண்ட்டை காப்பாற்ற உழைப்பை நோ வொறீஸ்

சரியண்ணா.. நானும் பாட்டைமர்தான்.. எகிறீமன்ட். கன்பார்ம்ட்..

(Sorry no imocon for Handshaking)

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தல நீர் இளயவர் தலைப்பில் எழுதப்படவற்றை வாசித்து விட்டா எழுதுகிறீரா என்று தெரியவில்ல ,ஏனெனில் அது இப்போது நிர்வாகப் பகுதிக்கு நகர்த்தப்படுள்ளது.பனியிலும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

குருவி, இளையோர் பகுதியில் எழுதியிருந்த கருத்துக்களை நீங்கள் படித்திருந்தீர்களா எனக்கு தெரியாது. ஆனால் விசமத்தனமான முறையில் அவர்களின் செயற்பாடுகளை கொச்சைப் படுத்தி சிறு சிறு விடயங்களை ஒருவித எல்லாம் தெரிந்த சுயதம்பட்ட நிலையில் நின்று குருவி எழுதிய அந்தக் கருத்துக்கள் குருவியின் உண்மை நிலையை பலருக்கு படம் போட்டுக் காட்டியிருக்கும். அவரின் அந்தக் கருத்துக்களின் தாக்கம் எந்தளவானது என்பதை உணர்த்தவே அவர் எழுதியவற்றையே ஜெர்மன் தொடர்பான செய்திகளின் கீழ் இணைத்திருந்தோம்.

ஆனால் நீங்கள் அடி எது நுனி எது என்று தெரியாமால் முழுக்கருத்தையும் வாசித்துப் பார்க்காமல் இடையில் நுழைந்து உங்கள் கருத்துக்களை எழுதியிருந்தீர்கள். உண்மையில் அவை குருவியின் கருத்துக்களுக்கு எதிராக எழுதப்பட்டவையே என்ற வகையில் என்னுடைய கருத்துக்களுக்கு வலுச் சேர்த்திருந்தன. நன்றி..

மற்றும் எனது பெயர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தீர்கள். தமிழ்ல பெயர் வைக்க வக்கில்லை என்று. அதற்கும் நான் பதில் சொல்லியிருந்தேன். தூக்கி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனில் நடந்த அந் நிகழ்வு தொடர்பாக குருவி தெரிவித்திருந்த ஒரு குற்றச்சாட்டு.. அங்கே ஒரு சகோதரி வைத்திருந்த போஸ்ரரில் Tharshini என்ற பெயரில் h என்பது இடையில் செருகப்பட்டிருக்கிறது. நாலு வரி கையாலை எழுதத் தெரியாத இவர்கள் எல்லாம் என்ன செய்யினம் என்ற மாதிரி குருவியின் குற்றச் சாட்டு இருந்தது.

உண்மையில் மனம் திறந்து சொல்லுங்கள்.. விமர்சனம் என்பது இதுதானா..? விமர்சனத்துக்கும் ஒரு தகுதி வேண்டாமா? கொஞ்சமாவது அறிவு பூர்வமாக விமர்சிக்க வேண்டாமா?

தயவு செய்து நிர்வகமே.. குருவி எழுதிய அத்தனை கருத்துக்களையும் மீண்டும் வெளியிடுங்கள்.

Link to comment
Share on other sites

இங்கே பகிரங்கமாய் - எதுதான் உங்கள் வழி என்று தெளிவுபடுத்தணும் - வாக்குவாத படுறவங்க-!

மதில்மேல் பூனையாய் இருந்து- கருத்து எழுதி - ஏதும் கெளரவம் கொள்ளமுடியுமா?

முதல்ல சும்மா - அங்க ஒண்டு இங்க ஒண்டு பேசுறவங்க -தெளிவான நிலைப்பாடு - ஒன்று சொல்லணும்-!

உங்க நிலைப்பாடு:

1)தேசியத்துக்கு துணையாவா?

2)தேசியத்துக்கு எதிராவா?

3)இரு சார்பு நிலையும் இல்லையா?

4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?

முதல்ல தெளிவு படுத்தணும்- இவ்ளோ - விபரம் - தெரியும் எண்ட ரீதியில பேசிகொள்ளும் நீங்க - முதல்ல - நீங்க - என்ன கொள்கையை கொண்டு இருக்கிங்க எண்டு தெளிவு படுத்தணும்-! 8)

இதை சொல்ல நீ யார் என்றும் நீங்க கேக்கலாம்- அதே நேரம்- தெளிவா - யார் நீங்க - எண்டு சொல்லாமலே-

அநியாயத்துக்கு - அளந்து விடுறீங்களே- பொது இடத்தில்-

அதை நானும் கேக்கலாம் என்ற நம்பிக்கையில்-! 8)

Link to comment
Share on other sites

ஆஹா இவங்க என்னம் கோள்மூட்டுற தொழிலை விடல்லையா? இளையோர் அமைப்பு பிரிவை மூடவைச்ச பெருமை யாரை சாரும் எண்டு ஒரு பட்டிமன்றம் வைச்சால் தப்பே இல்லை? 6,7 பக்கத்தில் குருவி, இவோன் என்னம் பலர் கருத்துகள் எழுதி இருந்தார்கள், அது பல நாட்களாக இருந்தது, நேற்று வந்து சூடா 2 வார்த்தை கதைச்ச சிலரால் கருத்து திசை மாறிச்சென்று வெட்டுறுத்தினர்களின் கையில் சிக்கிவிட்டது அந்த பிரிவு,,

கருத்துக்களம் என்றால் அது ஒரு பக்கச்சார்பாகத்தான் இருக்கனும் எண்டு எதிர்பார்க்கிறது தவறு,, ஒரு பொருளை எடுத்து அதனை ஒவ்வொருக்கும் காட்டும்பொழுது ஒவ்வொருவரினதும் மனதில் ஒரே மாதிரியான என்னம் வராது, அதேமாதிதித்தான் குருவி தன்னுடைய கருத்தை சொல்லுறார், அதற்கு பலர் தங்களின் (எதிர்)கருத்தை சொன்னார்கள், அதை வாசித்த அனைவருக்கும் விளங்கும் யாருடைய கருத்தில் அர்த்தம் இருக்கு என்று,

சரி இளையோர் அமைப்பைப்பற்றி விவாதிக்கும் இடத்தில அசினுக்கும் பிசினுக்கும் என்னவேலை? அல்லது பேடிக்கும் ஆண்மையற்றவனுக்கும் என்ன வேலை? இதை யார் முதல்ல அங்க செருகினது? குருவியா? அல்லது நீரா? அது எப்படி இவோன், குருவி சண்டைபிடிக்கும்பொழுது மூடாத அந்த பக்கம் நீர் வந்த உடன மூடினது? நானும் அங்கே பல கருத்துக்களை முன்வைத்தேன், இவோன், குருவி, நான், என்னம்பலர் கருத்துக்களை முன்வைக்காத பொழுது மூடாத களத்தை உம்முடைய கருத்தின் மூலம் மூடவைத்துவிட்டு எதற்கு இந்த கோள் மூட்டுகை?? :roll: :? :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் அந்தக் கருத்துப் பகுதி ஏன் மூடப்பட்டதென்று எனக்கு தெரியாது. நாரதர் எழுதியவற்றை நான் பார்க்கவில்லை. ஒருவர் எழுதுகின்ற கருத்துக்களின் விசமத்தனத்தை உணர்ந்து எதிர்க்கருத்துக்களை வைத்த போது அதை ஏன் தூக்கினார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய வேண்டுகோள் இதுதான்.. நான் நீங்கள் எழுதியவற்றை தண்க்கை செய்யட்டும். ஆனால் குருவி எழுதியவற்றை மீளவும் வெளியிட வேண்டும்.

வர்ணன்.. உங்களது கோரிக்கை எதை சொல்கிறதென்றால்.. அதாவது அவர் யார் என்பது முதலே தெரிந்து விட்டால் அவர் உங்களுக்கு சார்பானவரென்றால் அவருடை எல்லாக் கருத்துக்களும் அற்புதம் என்றும் அவர் உங்கள் கருத்துக்கு சார்பானவராய் இல்லயென்றால் அவரது அத்தனை கருத்துக்களும் பொய்யானவை என்று முடிவெடுக்கவே.

ஐயா.. சிலநேரங்களில் உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்.. தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம். அதே நேரம் தேசியத்திற்கு சார்பானவரும் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம். ஆகவே அந்தக் கருத்ததுக்களை வாசித்து விட்டு அது தொடர்பில் தீர்மானியுங்கள்.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

ஐயா.. சிலநேரங்களில் உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால்..

தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம்.

அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??

தயவு செய்து உடனடியா சொல்லுங்க- நழுவி போக மாட்டிங்க எண்டு நம்புறன் ! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா - தேசியத்துக்கு எதிரானவர் வைக்க கூடிய- சரியான கருத்து - எது??

புலம் பெயர் நாடுகளில் புலிகளின் பெயரால், தமிழீழ விடுதலைப் போரை தமது சொந்த சுயநலத் தேவைகளுக்கு யாரும் பயன்படுத்தினால் அது தொடர்பான தகவல்களை அவர்களால் வெளிப்படுத்த முடியும்..

அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே? தயவு செய்து உடனடியாக பதில் சொல்லுங்க.. நழுவி போய்விடுவீர்கள் என நான் நம்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே நேரம் தேசியத்துக்கு சார்பானவர் பிழையான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே?

இதற்கு அண்மைக்கால உதாரணங்களை யாழ் களத்திலேயே கண்டிருப்பீர்கள் தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.