Jump to content

8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணிகிராமில் அனுப்புவதற்கு வசதியாக குழப்பம் இல்லாமல் இருப்பதற்காக

அவருடைய பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் அல்லது ஏதாவது மட்டும் தனியே எழுதி தனிமடலிடுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

மேற்படி உறவுக்கு தேவைப்பட்ட உதவியும் கிடைத்த உதவி விபரக்கணக்கு

உதவியோர் விபரம் :-

விசுகு – 500,00€

ஜீவா – 500,00€

சாந்தி – 600,00€

உதயம் - 116,42€ + 69,84€ = 186,26€

நுணாவிலான் - 96,45€

அயந்தன் - 246,65€

மொத்தம் - 2129,36€

தன்னை எண்ணாமல் தனது குடும்பத்தை எண்ணாமல் இன்றும் மற்றவர்களையே நேசிக்கிற உறவின் பிணைக்காக உதவியை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

சற்று முன்னர் வரையும் இருந்த அந்தரம் மாறி ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

5352.jpg

20ம் திகதி நீதிமன்றுக்கு அந்தத்தோழன் நிம்மதியாய் சென்றுவருவார். 25ம் திகதி வழக்கு முடிவு கையில் கிடைக்கும். முடிவு கிடைத்ததும் உதவியவர்கள்களுக்குத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மணிகிராமில் அனுப்புவதற்கு வசதியாக குழப்பம் இல்லாமல் இருப்பதற்காக

அவருடைய பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் அல்லது ஏதாவது மட்டும் தனியே எழுதி தனிமடலிடுங்கள். நன்றி.

தனிமடல் அனுப்பிவிட்டேன்.

Link to comment
Share on other sites

உதவிய அனைவருக்கும் மிக மிக நன்றிகள். குறுகிய காலத்தில் செய்த உதவி அளப்பெரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன். ஆனால் நீங்கள் தந்த தொலைபேசி ரிங் போகுது. எடுக்கிறார்கள் இல்லை. உடனடியாக செயற்படவும். இலக்கம் கொடுப்பதற்கு. நன்றி.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன். ஆனால் நீங்கள் தந்த தொலைபேசி ரிங் போகுது. எடுக்கிறார்கள் இல்லை. உடனடியாக செயற்படவும். இலக்கம் கொடுப்பதற்கு. நன்றி.

விபரம் கொடுத்துவிட்டேன். நாளைதான் எடுக்க முடியும். மீதி விபரங்கள் தனிமடலில் போடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி, எனது நண்பன் தர வேண்டிய தொகையை தானும் ஐம்பது போட்டு அனுப்பி உள்ளார்.

தகவல்களை அவர் நேசக்கரம் ஈமைளுக்கு அனுப்பி உள்ளார். 651.83 euro.

Link to comment
Share on other sites

சகோதரி, எனது நண்பன் தர வேண்டிய தொகையை தானும் ஐம்பது போட்டு அனுப்பி உள்ளார்.

தகவல்களை அவர் நேசக்கரம் ஈமைளுக்கு அனுப்பி உள்ளார். 651.83 euro.

குழவி உங்கள் நண்பர் அனுப்பி வைத்த 651,83€உதவி பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றிகள்.

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன்.

உங்கள் உதவி நேற்று உரியவரின் மனைவி பெற்றுக்கொண்டுள்ளார். மிக்க நன்றிகள்.

புலிக்குரல் - 5000.00ரூபா

கருத்தக்கந்தசாமி - 5000.00ரூபா

உதவிய அனைவருக்கும் நன்றிகள். நேற்று அவர்களுக்கு மொத்தம் 3லட்சரூபா கொடுக்கப்பட்டுவிட்டது. சில தினங்களில் முடிவு அறியத்தருவார்கள். கிடைத்ததும் அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அக்கா....நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.......குறுகியகாலத்தில் விரைவாக சேர்க்கப்பட்ட மிகப்பெறுமதியான உதவி யாழ் உறவுகள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்!!!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

Link to comment
Share on other sites

யாழில் இணைந்திருப்பதில், இவ்வாறான செயற்பாடுகளால், உங்களால், பெருமை.

அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை இங்கும் எங்கும் கூறுவது இதைத்தான்

புலம் பெயர் தமிழர் நாம் பொறுப்பெடுக்க முடிவெடுத்தால்(சிறியளவில் என்றாலும் எல்லோரும்)

ஈழத்தில் இல்லாமை என்பதை விரட்டிடலாம்.

நன்றி

ஓடி வந்து உதவிய மற்றும் கருத்தால் ஊக்குவித்த உறவுகள்; அனைவருக்கும்.

தாயகத்திலிருந்து உதவிய புலிக்குரலுக்கு என் பிரத்தியேக நன்றிகள்

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா..... என் மக்களுக்கான பணிகளில் என் பங்கு சிறியதே.... நிமிர்வான நிலைக்கு தாயகமக்கள் நிமிர்ந்தெழும் வரை உங்கள் பணிகள் மிக அவசியம், அவசரம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா,  இத்தனை தேசிய தூண்கள் இருக்கும் போது வாய் பேச்சு தேசிய பொல்லுகளை பற்றி ஏன் கவலை?

பொல்லுகள் தாமும் ஒன்றும் செய்யாமல் மற்றவரின் காலையும் வாருவார்கள்.

எல்லா தமிழ் கருணை உள்ளங்களுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

நான் இன்று தான் இந்த‌ திரியை பார்த்தேன். உத‌விய‌ அனைத்து உள்ளங்க‌ளுக்கும் ந‌ன்றி!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மேற்படி உறவுக்கு உதவியவர்களுக்கு மீண்டும் நன்றிகள். நீங்கள் உதவிய உறவின் வழக்கு 20ம் திகதி விசாரணைக்க எடுக்கப்பட்டது. வழக்கிற்கான முடிவு அறிவிப்பதாக வழங்கப்பட்ட 24ம் திகதி திடீரென மகசீன் சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த உறவின் முடிவு வருகிற கிழமை 6ம் திகதி அறிவிக்கப்படுமென நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் திகதிக்குப் பின்னர் முடிவு பற்றி அறியத்தரப்படும்.

24ம் திகதி ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட 220 கைதிகளுக்கான அவசர நிவாரண உதவிகள் ஒழுங்குகளில் நேரம் போனமையால் உடன் கருத்திடம முடியவில்லை. தாமதமான பதிலுக்கு உறவுகள் மன்னிக்கவும். 6ம் திகதிக்காக அந்த உறவின் குடும்பத்தோடு நானும் காத்திருக்கிறேன்.

அவரது விடுதலைக்கான இதர ஒழுங்குகள் செய்தாயிருற்கு. சட்டமாதிணைக்களத்தின் முடிவு தான் மீதமிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலை எதிர்பார்த்தபடி இருந்தோம்

நல்ல முடிவை எதிர்பார்க்கின்றோம். அதற்காக பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

நானும் பல தரம் நல்ல முடிவை எதிர்பார்த்து இப்பகுதிக்கு பல தரம் வந்து போனேன்......ம்...ம்.......அந்த உறவின் விடுதலைக்காக பிரார்த்திக்கின்றேன் நல்லதொரு முடிவு கிடைக்கும்!

Link to comment
Share on other sites

உதவி தந்து ஒரு உயிரை மீளப்பெற்றுத்தந்த அனைத்து உறவுகளுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். உங்கள் அனைவரையும் கையடுத்து வணங்குகிறேன். நாங்கள் விடுதலை வேண்டிய உறவின் மீட்சிக்கான பலன் கிடைத்துவிட்டது. தகவல் கிடைத்த இந்நிமிடமே இக்கருத்தை இடுகிறேன்.

மேலதிகமாக ஒருலட்சம் கட்டுமாறு திடீர் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டரை மணித்தியால அவகாசத்தில் அதையும் ஒழுங்குபடுத்தி எடுத்த முயற்சி வெற்றியாகியிருக்கிறது. நீண்டகாலம் நாட்டுக்காக வாழ்ந்த உறவின் தியாகம்தான் அந்த மீட்டெடுத்துள்ளது. கடவுள்கள் இருந்தால் அவர்களது கருணை இன்னும் சிறையில் அடைபட்டிருக்கிற எல்லோருக்கும் கதவு திறக்க வேண்டும்.

உங்கள் உதவி பெற்ற உறவு விரைவில் உங்களிடம் பெற்ற உதவிக்கான நன்றிக்கடிதம் அனுப்புவார் கிடைத்ததும் உதவியவர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன். கடைசி நாள் வரையும் நம்பிக்கை தந்து ஏமாற்றத்தை பரிசளித்தவர்கள் மத்தியில் கேட்டவுடன் ஓடிவந்து உதவிய உறவுகளே உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி என்ற வார்த்தை சொல்லி இதை குறுக்கிவிடமுடியாது

அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டாது விட்டாலும் நரகத்திலிருந்து மீட்டுவிடுவதையாவது எம்மால் செய்யமுடியும் என்பதற்கொரு உதாரணம் இது. தொடரட்டும் தங்கள் பணி. நிச்சயம் ஒரு மண்துளியளவாவது இருக்கும் என் பங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி என்ற வார்த்தை சொல்லி இதை குறுக்கிவிடமுடியாது

அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டாது விட்டாலும் நரகத்திலிருந்து மீட்டுவிடுவதையாவது எம்மால் செய்யமுடியும் என்பதற்கொரு உதாரணம் இது. தொடரட்டும் தங்கள் பணி. நிச்சயம் ஒரு மண்துளியளவாவது இருக்கும் என் பங்கு.

விசுகு அண்ணாவின் கருத்தே எனதும்... :)

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி அந்த உறவின் விடுதலையோடு மட்டும் நின்று விடாமல் அவர்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் விதத்தில் ஏதாதவது செய்யவேண்டும் அப்போதுதான் யாழ்கள உறகளின் (விடுதலைக்காக பாடுபட்ட) உதவியின் அர்த்தம் நின்றுநிலைக்கும்!

மிக்க நன்றி நேசக்கரத்திற்க்கு!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி அந்த உறவின் விடுதலையோடு மட்டும் நின்று விடாமல்

அவர்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் விதத்தில் ஏதாதவது செய்யவேண்டும் அப்போதுதான் யாழ்கள உறகளின் (விடுதலைக்காக பாடுபட்ட) உதவியின் அர்த்தம் நின்றுநிலைக்கும்!

மிக்க நன்றி நேசக்கரத்திற்க்கு!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

இதையும் பாருங்கள் சாந்தியக்கா

என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.