Jump to content

8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணிகிராமில் அனுப்புவதற்கு வசதியாக குழப்பம் இல்லாமல் இருப்பதற்காக

அவருடைய பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் அல்லது ஏதாவது மட்டும் தனியே எழுதி தனிமடலிடுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

மேற்படி உறவுக்கு தேவைப்பட்ட உதவியும் கிடைத்த உதவி விபரக்கணக்கு

உதவியோர் விபரம் :-

விசுகு – 500,00€

ஜீவா – 500,00€

சாந்தி – 600,00€

உதயம் - 116,42€ + 69,84€ = 186,26€

நுணாவிலான் - 96,45€

அயந்தன் - 246,65€

மொத்தம் - 2129,36€

தன்னை எண்ணாமல் தனது குடும்பத்தை எண்ணாமல் இன்றும் மற்றவர்களையே நேசிக்கிற உறவின் பிணைக்காக உதவியை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

சற்று முன்னர் வரையும் இருந்த அந்தரம் மாறி ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

5352.jpg

20ம் திகதி நீதிமன்றுக்கு அந்தத்தோழன் நிம்மதியாய் சென்றுவருவார். 25ம் திகதி வழக்கு முடிவு கையில் கிடைக்கும். முடிவு கிடைத்ததும் உதவியவர்கள்களுக்குத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மணிகிராமில் அனுப்புவதற்கு வசதியாக குழப்பம் இல்லாமல் இருப்பதற்காக

அவருடைய பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம் அல்லது ஏதாவது மட்டும் தனியே எழுதி தனிமடலிடுங்கள். நன்றி.

தனிமடல் அனுப்பிவிட்டேன்.

Link to comment
Share on other sites

உதவிய அனைவருக்கும் மிக மிக நன்றிகள். குறுகிய காலத்தில் செய்த உதவி அளப்பெரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன். ஆனால் நீங்கள் தந்த தொலைபேசி ரிங் போகுது. எடுக்கிறார்கள் இல்லை. உடனடியாக செயற்படவும். இலக்கம் கொடுப்பதற்கு. நன்றி.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன். ஆனால் நீங்கள் தந்த தொலைபேசி ரிங் போகுது. எடுக்கிறார்கள் இல்லை. உடனடியாக செயற்படவும். இலக்கம் கொடுப்பதற்கு. நன்றி.

விபரம் கொடுத்துவிட்டேன். நாளைதான் எடுக்க முடியும். மீதி விபரங்கள் தனிமடலில் போடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி, எனது நண்பன் தர வேண்டிய தொகையை தானும் ஐம்பது போட்டு அனுப்பி உள்ளார்.

தகவல்களை அவர் நேசக்கரம் ஈமைளுக்கு அனுப்பி உள்ளார். 651.83 euro.

Link to comment
Share on other sites

சகோதரி, எனது நண்பன் தர வேண்டிய தொகையை தானும் ஐம்பது போட்டு அனுப்பி உள்ளார்.

தகவல்களை அவர் நேசக்கரம் ஈமைளுக்கு அனுப்பி உள்ளார். 651.83 euro.

குழவி உங்கள் நண்பர் அனுப்பி வைத்த 651,83€உதவி பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றிகள்.

சாந்தியக்கா

மணி கிராம்மூலம் பணம் அனுப்பியுள்ளேன்.

உங்கள் உதவி நேற்று உரியவரின் மனைவி பெற்றுக்கொண்டுள்ளார். மிக்க நன்றிகள்.

புலிக்குரல் - 5000.00ரூபா

கருத்தக்கந்தசாமி - 5000.00ரூபா

உதவிய அனைவருக்கும் நன்றிகள். நேற்று அவர்களுக்கு மொத்தம் 3லட்சரூபா கொடுக்கப்பட்டுவிட்டது. சில தினங்களில் முடிவு அறியத்தருவார்கள். கிடைத்ததும் அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

அக்கா....நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.......குறுகியகாலத்தில் விரைவாக சேர்க்கப்பட்ட மிகப்பெறுமதியான உதவி யாழ் உறவுகள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்!!!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

Link to comment
Share on other sites

யாழில் இணைந்திருப்பதில், இவ்வாறான செயற்பாடுகளால், உங்களால், பெருமை.

அனைவருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை இங்கும் எங்கும் கூறுவது இதைத்தான்

புலம் பெயர் தமிழர் நாம் பொறுப்பெடுக்க முடிவெடுத்தால்(சிறியளவில் என்றாலும் எல்லோரும்)

ஈழத்தில் இல்லாமை என்பதை விரட்டிடலாம்.

நன்றி

ஓடி வந்து உதவிய மற்றும் கருத்தால் ஊக்குவித்த உறவுகள்; அனைவருக்கும்.

தாயகத்திலிருந்து உதவிய புலிக்குரலுக்கு என் பிரத்தியேக நன்றிகள்

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா..... என் மக்களுக்கான பணிகளில் என் பங்கு சிறியதே.... நிமிர்வான நிலைக்கு தாயகமக்கள் நிமிர்ந்தெழும் வரை உங்கள் பணிகள் மிக அவசியம், அவசரம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா,  இத்தனை தேசிய தூண்கள் இருக்கும் போது வாய் பேச்சு தேசிய பொல்லுகளை பற்றி ஏன் கவலை?

பொல்லுகள் தாமும் ஒன்றும் செய்யாமல் மற்றவரின் காலையும் வாருவார்கள்.

எல்லா தமிழ் கருணை உள்ளங்களுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

நான் இன்று தான் இந்த‌ திரியை பார்த்தேன். உத‌விய‌ அனைத்து உள்ளங்க‌ளுக்கும் ந‌ன்றி!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மேற்படி உறவுக்கு உதவியவர்களுக்கு மீண்டும் நன்றிகள். நீங்கள் உதவிய உறவின் வழக்கு 20ம் திகதி விசாரணைக்க எடுக்கப்பட்டது. வழக்கிற்கான முடிவு அறிவிப்பதாக வழங்கப்பட்ட 24ம் திகதி திடீரென மகசீன் சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த உறவின் முடிவு வருகிற கிழமை 6ம் திகதி அறிவிக்கப்படுமென நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் திகதிக்குப் பின்னர் முடிவு பற்றி அறியத்தரப்படும்.

24ம் திகதி ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட 220 கைதிகளுக்கான அவசர நிவாரண உதவிகள் ஒழுங்குகளில் நேரம் போனமையால் உடன் கருத்திடம முடியவில்லை. தாமதமான பதிலுக்கு உறவுகள் மன்னிக்கவும். 6ம் திகதிக்காக அந்த உறவின் குடும்பத்தோடு நானும் காத்திருக்கிறேன்.

அவரது விடுதலைக்கான இதர ஒழுங்குகள் செய்தாயிருற்கு. சட்டமாதிணைக்களத்தின் முடிவு தான் மீதமிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலை எதிர்பார்த்தபடி இருந்தோம்

நல்ல முடிவை எதிர்பார்க்கின்றோம். அதற்காக பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

நானும் பல தரம் நல்ல முடிவை எதிர்பார்த்து இப்பகுதிக்கு பல தரம் வந்து போனேன்......ம்...ம்.......அந்த உறவின் விடுதலைக்காக பிரார்த்திக்கின்றேன் நல்லதொரு முடிவு கிடைக்கும்!

Link to comment
Share on other sites

உதவி தந்து ஒரு உயிரை மீளப்பெற்றுத்தந்த அனைத்து உறவுகளுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். உங்கள் அனைவரையும் கையடுத்து வணங்குகிறேன். நாங்கள் விடுதலை வேண்டிய உறவின் மீட்சிக்கான பலன் கிடைத்துவிட்டது. தகவல் கிடைத்த இந்நிமிடமே இக்கருத்தை இடுகிறேன்.

மேலதிகமாக ஒருலட்சம் கட்டுமாறு திடீர் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டரை மணித்தியால அவகாசத்தில் அதையும் ஒழுங்குபடுத்தி எடுத்த முயற்சி வெற்றியாகியிருக்கிறது. நீண்டகாலம் நாட்டுக்காக வாழ்ந்த உறவின் தியாகம்தான் அந்த மீட்டெடுத்துள்ளது. கடவுள்கள் இருந்தால் அவர்களது கருணை இன்னும் சிறையில் அடைபட்டிருக்கிற எல்லோருக்கும் கதவு திறக்க வேண்டும்.

உங்கள் உதவி பெற்ற உறவு விரைவில் உங்களிடம் பெற்ற உதவிக்கான நன்றிக்கடிதம் அனுப்புவார் கிடைத்ததும் உதவியவர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன். கடைசி நாள் வரையும் நம்பிக்கை தந்து ஏமாற்றத்தை பரிசளித்தவர்கள் மத்தியில் கேட்டவுடன் ஓடிவந்து உதவிய உறவுகளே உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி என்ற வார்த்தை சொல்லி இதை குறுக்கிவிடமுடியாது

அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டாது விட்டாலும் நரகத்திலிருந்து மீட்டுவிடுவதையாவது எம்மால் செய்யமுடியும் என்பதற்கொரு உதாரணம் இது. தொடரட்டும் தங்கள் பணி. நிச்சயம் ஒரு மண்துளியளவாவது இருக்கும் என் பங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி என்ற வார்த்தை சொல்லி இதை குறுக்கிவிடமுடியாது

அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டாது விட்டாலும் நரகத்திலிருந்து மீட்டுவிடுவதையாவது எம்மால் செய்யமுடியும் என்பதற்கொரு உதாரணம் இது. தொடரட்டும் தங்கள் பணி. நிச்சயம் ஒரு மண்துளியளவாவது இருக்கும் என் பங்கு.

விசுகு அண்ணாவின் கருத்தே எனதும்... :)

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி அந்த உறவின் விடுதலையோடு மட்டும் நின்று விடாமல் அவர்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் விதத்தில் ஏதாதவது செய்யவேண்டும் அப்போதுதான் யாழ்கள உறகளின் (விடுதலைக்காக பாடுபட்ட) உதவியின் அர்த்தம் நின்றுநிலைக்கும்!

மிக்க நன்றி நேசக்கரத்திற்க்கு!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி அந்த உறவின் விடுதலையோடு மட்டும் நின்று விடாமல்

அவர்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் விதத்தில் ஏதாதவது செய்யவேண்டும் அப்போதுதான் யாழ்கள உறகளின் (விடுதலைக்காக பாடுபட்ட) உதவியின் அர்த்தம் நின்றுநிலைக்கும்!

மிக்க நன்றி நேசக்கரத்திற்க்கு!!

தாயகத்திலிருந்து

நீலவன்.

இதையும் பாருங்கள் சாந்தியக்கா

என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.