Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

டொராண்டோவில் இன்று

இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday :icon_mrgreen: )

இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை

காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன்

விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து :o

0cfff6b0-5ae1-4c87-baab-855e38f1e33f_500.jpg

12eb0c92-f46d-47b1-aac8-c8d2d5fd5169_500.jpg

23a55957-951d-4794-86e4-bae273bc50fc_500.jpg

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

Link to comment
Share on other sites

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

நானே வெளியிட்ட புத்தகத்தில் அன்றே கூறியிருந்தேன். இதற்கு ஒரு வழி சொல்கின்றேன் கேளுங்கள் என. ஆனால் யூதர்கள் கேட்கவில்லை.

உலக நடப்புக்களைக்கவனிக்கவில்லை.

இன்று தமக்குள் அதுவும் தமது குடும்பத்துக்குள் குத்துப்பட்டு அழிகின்றனர்.

நான் அன்றே எழுதினேன்......................................தொடரும்..................

:( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, சைக்கிள்ள ஆர் எங்கட அர்ஜுன் ரணதுங்க அண்ணையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் வேலைக்குப் போகும் வழியில் ஒரு ட்ரக் மோதி பெண்ணொருவர் அபாயநிலையில் இருந்தார் வழிகள் அடைக்கப்பட்டதால் வேலைக்கு லேட்

இன்று நேற்று நான் கண்ட விபத்திற்கு அடுத்த இரு சந்திகளில் இருவேறுவாகனவிபத்துகள் இன்று வேலைக்கு லேட்.... :(

Link to comment
Share on other sites

சமூக விரோதிகளுக்கு எம்மவர் செய்யும் இப்படியான செய்கைகளை சுட்டிக்காட்டும் போது கடுப்பு ஏறத்தான் செய்யும் .

90 களில் டொரான்டோவில் இடம் பெற்ற எம்மவரின் வன்முறைகளால் ஒரு கலைநிகழ்ச்சி வைக்க மண்டபம் எடுக்க முடியாத நிலையும் ,சில மண்டபங்கள் பொலிஸ் பாதுகாப்பு இருந்தால் மாத்திரம் என்றும் (அதற்கு இரண்டாயிரம் டொலர் வரும் )உதைபாந்தட்டம் வைக்க மைதானம் கொடுக்கமாட்டதாத நிலையும் ,எம்மவர் ஆட்டத்திற்கு நடுவர்கள் வரமாட்டம் என்ற நிலையும் இருந்தது .மைதானம் எடுக்க ,மண்டபம் எடுக்க அலைந்தவ்ர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்

அதைவிட பாடசாலைகளில் ,வேலைத்தளங்களில் தமிழன் என்றால் வன்முறையாளன் என்ற பெயர் கூட உருவாகி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர்கள்தான்இருக்கின்றார்கள்.

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .அதைவிட 2009 இற்கு பின் எதற்கெடுத்தாலும் நாட்டில போராட்டம்,விடுதலை ,தேசியம் என்று சுத்தி திரிந்தவர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது

சர்வதேசம் நாட்டில் செய்தது ? அதை ஏன் எழுதுவான் .

Link to comment
Share on other sites

இவ்வளவும் எழுதும் அர்சுனுக்கு அமெரிக்க ஈரூந்து படை ஆப்கான மக்களின் பிணத்துக்கு மேல் என்ன நடந்தது (சரி அல்லது பிழை) என எழுத பயம் அல்லது பக்தி இருக்க வேண்டும்(அமெரிக்கர்களிடம்).

மற்றைய இனத்தின் கெட்டவைகள் இவருக்கு தெரியாதது போல் நடிப்பது இவர் எப்படியான நடிகர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Link to comment
Share on other sites

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

இல்லை வந்திருக்கின்றது, இருந்திருக்கின்றது.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற 9/11 க்குப்பிறகான காலத்தில் உண்மையான போராட்டம் அகப்பட்டுவிட்டது. கன்சவேட்டிவ் அரசு இன்று ஓரளவுக்கு எமக்காக குரல் கொடுக்கின்றது, ஏமாந்தது சிங்களத்திடம்.

Link to comment
Share on other sites

ரொறன்றோ காவல்துறை போதைப் பொருட் தடுப்புப் பிரிவினருக்கு எதிரான வழக்கு இன்று ஆரம்பமாகிறது

main_10749.jpg

ரொறன்றோ காவல்துறையின் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிறது.

சந்தேக நபர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தையும், போதைப் பொருட்களையும் கொள்ளையிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

காவல்துறை ஆவணங்களில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, தமது குற்றங்களை மறைத்த குற்றச்சாட்டில் அவர்கள் மீது வழக்கு இடம்பெறம்.

தம்மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளார்கள்.

2004 ஆம் ஆண்டு அவர்கள் மீது முதன் முறையாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை மிகுந்த கால தாமதமாக இடம்பெறுவதாக முடிவு செய்த நீதிமன்றம், 2008 ஆம் ஆண்டு அவர்கள் மீதான வழக்கை நிறுத்தி வைத்தது.

ஆனால், அந்த முடிவை ஒன்றாரியோவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாற்றி, வழக்கு விசாரணை இடம்பெறவேண்டுமென உத்தரவிட்டது.

கனடாவில் காவல்துறையில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் ஊழல் குறித்த மிகப் பெரும் வழக்காக இது அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/...l.aspx?ID=10749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் பணமுள்ளவனும், அதிகாரத்தில் உள்ளவனும் செய்யும் ஊழல்கள் கொஞ்சமா நஞ்சமா? வெளியில் வருவதில்லை. பணமில்லாத ஏழைகள் செய்துவிட்டால் பிடித்து பெரிதாகப்போட்டுக்காட்டி தண்டனையும் வழங்கி சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என்று பறைசாற்றுகின்றார்கள். ஆதிவேகமாக வாகனம் செலுத்தி பிடிபட்டால் ஒரு சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது இது 95வீதம் தள்ளுபடியாகின்றது.. நீங்களாகச்சென்று வாதிடடால் வாதிட விடமாட்டார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த அபராதம் என்று சொல்லி குறைந்த கட்டணம் அறவிடுவார்கள். எப்படிப் பார்த்தாலும் கூண்டில் நிற்பவர் பணத்தை இழந்தாகவேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் சட்டமா?

நான் நினைக்கின்றேன் சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது சட்டவல்லுனருக்குக் கொடுத்தபணத்தில் ஒரு பங்கு அங்கும் செல்கிறது என்று. இது பற்றி ஒரு ஆராய்ச்சி செய்யவேண்டும். எங்கும் அபத்தம் எதிலும்; அபத்தம். உலகம் அழிந்து புது உலகம் உருவாகக் கடவுளை வேண்டுகின்றேன். காப்பதற்கு நல்ல மனிதரே இல்லாததால் கடவுள் ஆவதாரம் எடுக்கவில்லைப்போலும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளுக்கால் நுழையத்தெரிந்தவன் தான் கனடாவில் வாழலாம். அதற்கு பணமும் வேண்டும். முடிந்தால் பாருங்கள் ஆமலே இருக்கும் வழக்கு ஒரு வகையாக தள்ளப்பட்டுவிடும்

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

மிக முட்டாள்தனமான யோசனை.... புதிதாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு ஒரு புது பெயர் (அளவீடு சம்பந்தமான) பெயர் வைக்காமல், முன்னம் இருந்த அனைத்தின் பெயரையும் மாற்ற வேண்டிய தேவை ஏன் 'ரிம்' இற்கு வந்தது

வழக்கமான வாடிக்கையாளர்களை முற்றாக குழப்ப போகின்றது இந்த அளவீடுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கொஞ்சம் வித்தியாசமான இடமா இருக்கும் போல கிடக்கு!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கனடாவின் கடற்படை அதிகாரி ஒருவர் இரகசியங்களை வெளிநாடு ஒன்றிற்கு கொடுத்ததாக அரசால் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

A Halifax-area Royal Canadian Navy sub-lieutenant and intelligence officer has been charged under this country’s secrets law with passing secret government information to “a foreign entity.”

Jeffrey Paul Delisle of Bedford, N.S., has been charged under the 2001 Security of Information Act with criminal breach of trust and communicating “to a foreign entity information that the government of Canada is taking measures to safeguard.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

நீங்கள் உங்கள் குவளையை கொண்டு சென்றால், ஐந்து சதம் மிச்சம் + குழப்பத்தையும் குறைக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

Link to comment
Share on other sites

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

ஆமாம். இங்கே மூலைக்கு மூலை இருக்கும் கடை. கோப்பி மட்டுமல்லாது, குளிர்பானங்கள், உணவுகளையும் வழங்குகின்றனர்.

இது கனேடியர்களின் அடையாள சின்னமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கனடிய துருப்புக்கள் சண்டையிட சென்ற பொழுதும் அங்கே ஒரு கடை போட்டார்கள்.

Link to comment
Share on other sites

இன்று கனடாவின் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார் ஐரோப்பாவின் தொடரும் யூரோ பிரச்சனையால் நாட்டுக்கு இந்த ஆண்டு பத்து பில்லியன்கள் (10,000,000,000 CAD ) பொருளாதார நட்டம் வரும் என்று.

http://www.theglobea...article2306524/

இன்றைய உலகமயமாக்கலில் புலம்பெயர் கனடாவாழ் மக்கள் 250,000 என வைத்தாலும் இதில் ஒவ்வொரு தமிழனின் பங்கும் / இழப்பு 40,000 CAD :o

Link to comment
Share on other sites

கடந்த வார இறுதியில் ஒரு பிரபல்ய தொடரடுக்கு வர்த்த சாவடியில் ஒருவர் சில ஆயிரம் டாலர்களுக்கு ஆப்பிள் பொருட்களை வாங்கி தனது மோட்டார்வண்டியில் வைத்துவிட்டு மீண்டும் வேறு பொருட்கள் வாங்க திரும்பியுள்ளார். பின்னால் வந்த திருடர்கள் தமது கைவரிசையை கா ட்டி விட்டனர்.

பொருட்களை தொலைத்தவர் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு போட்டுள்ளார் ( வசதியானவர் போலுள்ளது). காரணம் - ஆப்பிள் நிறுவனம் இந்தப்பொருட்களை திருடர்கள் அபகரிப்பார்கள் என எச்சரிக்கவில்லையாம் என்பதே

ஆப்பிள் நிறுவனம் அவருக்கு அவரின் பணத்தை திரும்பி தந்ததுடன் மேலதிக பணத்தையும் கொடுத்துள்ளது.

இதுவே ஒரு தமிழருக்கு நடத்திருந்தால், அம்போ தான் இப்படி வழக்கு போடலாம் என்பதும் தெரியாது, தெரிந்தாலும் பண / நேர வசதிகள் இருக்காது :wub:

Link to comment
Share on other sites

உங்க ஆசை ஓவரா தெரியல ? மோடார்வன்டி பொருட்களை திருடியது தமிழாரய் இருககூடாது என்டு ஆசைபடுங்க அஆ :unsure:

Link to comment
Share on other sites

:Dஇலவசம் இலவசம் முற்றிலும் இலவசம் :D

கனடாவில் வரும் ஒரு தேசியப்பத்திரிகையான நசனல் போஸ்ட்டை இலவசமாக மூன்று மாதங்கள் பெறலாம். இது அரசியல் ரீதியாக வலதுசார் கொள்கை உடைய பத்திரிகை, ஆனால் பொருளாதார செய்திகளை தரம் வாய்ந்ததாக தருகின்றது.

https://subscriptions.nationalpost.com/parknfly/

மூன்று மாதம் முடிய 'வேண்டாம்' என கூற மறக்காதீர்கள் :D

Link to comment
Share on other sites

கனடாவின் சனத்தொகை அண்ணளவாக 34 மில்லியன்கள். அதில் தமிழர்கள் அண்ணளவாக 250,000 - 300,000

கனடாவில் கிட்டத்தட்ட 33% பேர் வாடகை வீட்டில் வாழுகின்றனர். தமிழர்கள் எவ்வளவு பேர் வாழுகிறார்கள் வாடகை வீட்டில் எனத்தெரியவில்லை. ஆனால், எமது சமூகத்தில் அதிகளவில் வீடு முகவர்கள் உள்ளனர். அந்த வகையில் எமது மக்கள் வீடுகளில் முதலீடு அதிகளவில் செய்கிறார்கள்.

ஒரு வீடு விற்கப்போட்டு அது எவ்வளவு காலத்தில் விலைபோனது என்பதை வைத்து எந்தெந்த இடங்கள் முறையே 'கொதிப்பாக' 'சூடாக' 'குளிராக; உள்ளது என்பதை டொராண்டோ பெரும்பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.thestar.com/news/article/1119423--toronto-real-estate-watch-is-your-neighbourhood-hot-or-not?bn=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.