Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

டொராண்டோவை அண்மித்த பெர்லிங்க்டனில் புகையிரதம் தடம்புரண்டதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் ஊழியர்கள் (இருவர் பொறியியளார்கள், ஒருவர் வேலை பழகுபவர்), இதில் மொத்தமாக எழுபத்தி ஐந்து பேர் பயணிகள் இருந்தனர், பத்து பேர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.

http://www.680news.com/news/local/article/334967--three-dead-in-via-train-derailment-in-burlington

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

நாளை காலை டொராண்டோவில் பனியும் பனிமழை பொழியும் சாத்தியமும் உள்ளது :(

Special weather statement issued for GTA, potential for freezing rain

http://www.680news.com/weather/article/335553--special-weather-statement-issued-for-gta-potential-for-freezing-rain

Freezing%2BRain.jpg

Link to comment
Share on other sites

டொராண்டோவில் வாழ்பவர்கள் எவ்வாறு உயரும் எரிபொருள் செலவை கட்டுப்பத்தலாம் என பல வழிகள் இதில் ஆராயப்பட்டுள்ளது : http://www.wheels.ca/columns/article/805353

Link to comment
Share on other sites

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

Link to comment
Share on other sites

டொராண்டோ பெரும்பாகத்தில் போக்குவரத்து ஒரு பாரிய பிரச்சனை. அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதியுடன் நிலக்கீழ் இல்லை நிலமேல் போக்குவரத்து சேவையால் ஒப்பீடளவில் பெரிதாக இணைக்கப்படவில்லை.

ஆளும் நகரபிதா சமர்ப்பித்த நிலக்கீழ் திட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு 200 மில்லியன்கள் தேவைப்படும் என்பதால் சில திட்டங்கள் நிலத்திற்கு மேலாகவும் சிலதிட்டங்கள் இரத்தாகும் நிலையும் உள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11250

Link to comment
Share on other sites

கனடாவில் கடந்த தேசிய பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது. ஆனால், சில இடங்களில் அது சொற்ப வித்தியாசத்தில் வென்றது.

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் அந்த கட்சி சில சட்டவிரோத முறைகளை பாவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக தமது கட்சி ஆதரவாளர்கள் அல்லாதவர்களின் தொலைபேசியை கணணி ஊடாக (robo call) அழைத்து :

- உங்கள் வாக்களிப்பு நிலையம் பல மைல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

- இன்று வாக்களிப்பு நடக்காது

இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க இருந்த வாக்குப்பலத்தை குறைத்துள்ளது. ஆனால்,ஆளும் கட்சி இதை மறுக்கின்றது.

கனேடிய சனநாயக பண்புகளை காப்பாற்ற நேற்று மக்கள் வான்கூவரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அது வரும் நாட்களில் டொராண்டோவை அடையும் !

Protests against 'robo-calls' begin in Vancouver, expected to reach Toronto

http://www.680news.com/news/local/article/337455--protests-against-robo-calls-begin-in-vancouver-expected-to-reach-toronto

Link to comment
Share on other sites

கனடா: சர்வதேச பெண்கள் நாள் பற்றி இராதிகா சிற்சப ஈசன்

Link to comment
Share on other sites

இந்த வார இறுதியில், சனி இரவு, ஒரு மணி நேரத்தை இழக்க உள்ளோம்.

வருடாந்த நேர மாற்றம் இந்த சனிக்கிழமை இடம்பெறும். இது பொருளாதார வலுவை கூட்டவும் எரிசக்தியை சேமிக்கவும் உதவும் ஒரு நடைமுறை.

daylight_savings_2012.jpg

Link to comment
Share on other sites

டொராண்ரோ காவல்துறை இனவாதம் கொண்டதா?

உலகிலேயே அதிகளவு பலகலாச்சார மக்களை கொண்டது டொராண்டோ மாநகரம். இந்த அருமையான நகரத்திலே புகலிடம் தேடிவந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட பலரும்

நல்ல பாதுகாப்பான சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். ஆனால், அதன் அர்த்தம் எல்லாம் சமமாக எல்லோருக்கும் கிடைப்பது என்றில்லை.

கனடாவின் மிகப்பெரிய பத்திரிகையும் டொராண்டோவில் வெளிவருவதுமான டொராண்டோ ஸ்டார் இந்த மாநகரத்தின் காவல்துறை பற்றியும் அதன் சில புள்ளிவிபரங்களையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி காவல்துறையினர் வழமையாக ஆட்களை வாகனங்களில் மறிப்பதும் அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும் வழமை. இவை எந்தவொரு பிரச்சனையற்ற சூழலிலும் நடப்பது வழமை. ஆனால், இந்த புள்ளிவிபரங்களின் படி இவ்வாறு நடப்பது வெள்ளைகள் அல்லாதோர் மீது, அதாவது கருப்பு நிற இல்லை மண்ணிற தோலை கொண்டவர்கள் மீது அதிகமாக நடப்பதாக புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி ரொறொண்ட ஸ்டார் கருத்து வெளியிட்டுள்ளது.

Toronto police stop and document black and brown people far more

http://www.thestar.com/specialsections/knowntopolice

Link to comment
Share on other sites

$ 3,150 CAD மையமாகக் கொண்ட பிரச்சினையில் ரொரன்ரோ(கனடா) மேயர் றெப் போட்டின் பதவி பறிபோகலாம்??

இவர் முன்னராக மாநகரசபையின் உறுப்பினராக இருந்த காலத்தில் இவர் ஒரு விளையாட்டு கழகத்திற்கு தனது உத்தியோகபூர்வ எழுத்து படிவத்தை பாவித்து பணம் சேர்த்ததாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அதனால் இவர் நகரபிதாவாக வர முடியாது எனவும் தாக்கீது செய்தவர்களால் கூறப்பட்டுள்ளது.

பலத்த ஆதரவுடன் பதவிக்கு வந்த இந்த நகரபிதா தந்து கடும்போக்கால் பல எதிரிகளை சம்பாதித்துள்ளார், அவர்கள் எதையும் காரணம் காட்டி இவரை பதவியில் இருந்து அகற்ற முயற்சிக்கின்றனர்.

Lawyer Clayton Ruby alleges Ford breached the act in February when he asked council to remove a year and a half old sanction placed upon him by the city’s integrity commissioner. Ford had been ordered to repay $3,150 worth of donations to his football foundation he solicited using councillor letterhead. Ford then voted on the issue, which passed.

http://www.thestar.c...ict-of-interest

Link to comment
Share on other sites

இராதிகா, முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், மீதும் அவர் வெற்றி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆளும் பழமைவாத கட்சியின் இந்த தொகுதி உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதேவேளை இந்த ஊடக அறிக்கையில் மாநில லிபரல் கட்சி உறுப்பினரும் தமிழர்கள் கள்ள வாக்குகள் போட்டனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

Marlene Gallyot, a federal Conservative candidate who lost to the NDP’s Rathika Sitsabaiesan, has complained to Elections Canada, alleging ineligible voters “by the dozens” turned up on voting day and filed ballots illegally.

"They came with a Future Shop bill,” she told CBC News. “They came in with a Canadian Tire bill. They were coming in without proper identification."

http://www.cbc.ca/ne...carborough.html

Link to comment
Share on other sites

சூதாட்ட விடுதிகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு நிலவுவதை கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.

சூதாட்ட விடுதிகளை விரிவுபடுத்தும் ஒன்றாரியோ அரசின் செயற்பாட்டிற்கு ஒன்றாரியோ மக்களின் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதாக கருத்துக் கணிப்பொன்று காட்டுவதாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு குறிப்பிடுகிறது.

தமது ஏட்டிற்கென Forum Research நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கருத்து வெளியிட்டவர்களில் 69 சதவீதமானவர்கள், ரொறன்றோ, ஒட்டாவா போன்ற நகரங்களில் புதிய சூதாட்ட விடுதிகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

OLG நிறுவனத்தின் புதிய திட்டத்தினை 24 சதவீதமானவர்கள் மட்டும் ஆதரித்தார்கள்.

1.3 பில்லியன் டொலர் மேலதிக வருமானத்தைத் தரக்கூடிய இந்தத் திட்டம் காரணமாக, சிறுபான்மை லிபரல் அரசுக்கு ஆதரவு குறைந்துள்ளதென அந்த ஏடு குறிப்பிடுகிறது.

புறோகிறசிவ் கொன்சவேற்றிவ் கட்சிக்கு 40 சதவீத ஆதரவும், லிபரல் கட்சிக்கு 28 சதவீத ஆதரவும், என்டீபீக்கு 23 சதவீத ஆதரவும் நிலவுவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் மேலும் தெரியவந்துள்ளது.

Link to comment
Share on other sites

பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது

குபெக்கை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் பிரபல தொலைபேசி நிறுவனமான பெல் கனடா, Astral Media கொள்வனவு செய்ய முடிவாகியுள்ளது.

3.38 பில்லியன் டொலர்களுக்கு இந்த ஒப்பந்தம் முடிவாக்கப்பட்டுள்ளது.

CFTK,TV, CFJW FM and EZ Rock Radio Stations போன்ற பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை Astral Media கனடா முருவதும் நடத்தி வருகின்றது. இவற்றுள் பல்வேறு பிரென்ஞ்சு மொழியிலான தொலைக்காட்சி மற்றும் மற்றும் வானொலிச் சேவைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11414

Link to comment
Share on other sites

ஒவ்வொருவருடமும் கனடாவின் மாநிலமான ஒன்ராறியோவில் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக மாநில அரசால் உழைப்பவர்களின் பெயர் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் இன்று அந்தப்பட்டியால் வெளியானது.

மொத்தம் 78914 பேர் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாக கடந்த உழைத்துள்ளார்கள். அவர்களின் பெயர்களை அவர்கள் வேலைசெய்யும் துறை சார்ந்து பார்க்கலாம் : http://www.fin.gov.on.ca/en/publications/salarydisclosure/2012/

Link to comment
Share on other sites

ஓன்றாரியோவின் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது

உள்ள செலவு தாக்கம் 16 பில்லியன்கள்

சமர்ப்பித்த வரவு செலவு 2015 அளவில் சமநிலைப்படுத்தும்

பல மாநில அரச தொழிலாளர்களும் சம்பள ஏற்றம் பல வருடங்களுக்கு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.theglobeandmail.com/news/politics/ontarios-austerity-budget-sets-up-public-sector-showdown/article2383082/

Link to comment
Share on other sites

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

Link to comment
Share on other sites

ஒன்ராரியோவில் பாலியல் விடுதி அமைக்கப் போகினமாமே.. :D அதுகுறித்த செய்தி ஒன்றும் இல்லையா? :lol:

அது ஒரு குழப்பமான செய்தி :D

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 136.8 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise 2.8 cents to 136.8 cents a litre

http://www.680news.com/news/local/article/276513--gas-prices-expected-to-rise-2-8-cents-to-136-8-cents-a-litre

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

Link to comment
Share on other sites

ஒன்ராறியோவின் வட பகுதியில் ஏற்பட்ட பெருந்தெரு விபத்து ஒன்றில் 3-5 மில்லியன்கள் நாணய குத்திகள் வீதிகளில் சிதறுண்டு கிடந்தது.

si-brinks-coins-300.jpg

http://www.cbc.ca/news/canada/sudbury/story/2012/03/28/sby-hwy11-crash.html

Link to comment
Share on other sites

நாளை மத்திய அரசின் வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படுகின்றது!

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/news/canada/story/2012/03/29/federalbudget-main.html

Link to comment
Share on other sites

April 1, 1958 க்கு பிறகு பிறந்தவர்கள் தற்பொழுது 65 வயதில் பெரும் முதியோர் பண சலுகையை பெற 67 வயதாக வேண்டும் !!

பலரும் கூடிய வயது வரை வாழ்வதால் இந்தமாற்றத்தை கொண்டுவருகின்றது, ஓய்வூதிய பணத்தை சேமிக்க.

http://www.cbc.ca/ne...udget-main.html

இந்த வருடத்துடன் கனடாவில் ஒரு சதம் (சதக்குத்தி) உருவாக்கப்படமாட்டாது. அதை செய்ய சதம் முடிகின்றதாம்.

எனவே வாங்கும் பொருட்கள் கிட்ட உள்ள இலக்கத்துடன் சேர்க்கப்படும் (குறையும் இல்லை கூடும்) அதாவது ஐந்து இல்லை பத்துசதமாகும் .

Link to comment
Share on other sites

ஒரு லீட்டர் எரிபொருள் (காஸ்) 140.1 ஆக நள்ளிரவு உயருகின்றது!

Gas prices expected to rise by 4.5 cents to 140.1 cents a litre

Link to comment
Share on other sites

இலண்டன் என்ற ஒன்ராரோயோ நகரில் நடக்கும் எட்டு வயது சிறுமியின் கொலைவழக்கு பலரையும் உலுக்கும்.

இந்தச்சிறுமியை ஒரு ஆணும் பெண்ணும் பாடசாலை முடிந்த நேரத்தில் தந்திரமாக கதைத்து அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலைசெய்து மறைத்தனர்.

பல நாட்களாக தொடரும் இந்த விசாரணை இன்று மூன்று வருடங்களுக்கு முன்னராக தொண்டு எடுக்கப்பட்ட உடலை ஆராய்ந்த வைத்தியரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஒரு பக்கம் இரக்கத்தையும் மறுபக்கம் ஆத்திரத்தையும் வரச்செய்யும் கூற்றுக்கள்.

http://www.theglobeandmail.com/news/national/tori-staffords-body-too-badly-decomposed-to-determine-if-sex-assault-occurred-jury-told/article2390767/

Link to comment
Share on other sites

இன்று எரிபொருளின் விலை கிட்டத்தட்ட ஒரு லீட்டர் 1.40

இது 1.70 ஆக உயர்ந்தால் என்ன நடக்கும்??

- பலருக்கு வேலை இல்லாமல் போகும்

- மீண்டும் வட அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலைக்குள் தள்ளப்படும்

- அமெரிக்கா கூடுதலாக பாதிக்கப்படலாம், அது கனடாவையும் பாதிக்கும்

- பங்குச்சந்தைகள் சரியும்

http://www.theglobea...article2391729/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.