Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

ரொறான்ரோவுக்கு அதிர்ஷ்டம்! 50 மில்லியன் டாலர் பரிசுச் சீட்டு விற்பனையானது இங்குதான்!

 

கிறிஸ்துமஸ் ரொறாண்ரோ வாசிகளுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.


50 மில்லியன் டாலர்களுக்கான லோட்டோ மேக்ஸ் ஜாக்பாட் பரிசுச் சீட்டு ரொறான்ரோவில்தான் விற்பனையாகியுள்ளதாக ஒண்டோரியோ பரிசு சீட்டு மற்றும் சூதாட்ட வாரியத் தகவல் தெரிவிக்கிறது.

 

பரிசு சீட்டின் எண் 7,8,17,18,20,40,41. போனஸ் 33.

 

மூன்று இரண்டாம் பரிசு சீட்டுக்களும் ரொறாண்ரோ பகுதியில்தான் விற்பனை ஆகியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டாம் பரிசுகளின் மொத்த தொகை 149,887 டாலர்கள்.

 

முதல் பரிசான 50 மில்லியன் டாலர்களை வென்றவர் இன்னும் வாரியத்தை தொடர்புக் கொள்ளவில்லை. அந்தச் சீட்டு கேம்பிரிட்ஜ் பகுதியில் விற்பனையானதாக தெரிகிறது.

 

http://ekuruvi.com/50M%20lottery%20ticket%20sold%20in%20Toronto

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

THE WINNER IS

 

It will be a very happy holiday indeed for a woman from Thornhill, Ont.

Susan Flam won the $50-million Lotto Max draw from Dec. 21.

The homemaker and fundraiser said she discovered she had won when she stopped into check her ticket as she bought some groceries.

Flam, in her 60s, said she is still shocked by the win.

“For me, this is the best pay it forward I could ask for," Flam said. "This is not going to change my life — it’s what I can do for others that will make me happy.”

Flam accepted her prize today, in the company of her husband and close friends, in Toronto at the OLG headquarters, where she was presented with her cheque.

The mother of two and grandmother of five had her winning ticket scanned at a supermarket in the town of Innisfil, near Barrie, Ont., over the weekend.

“We were heading up north for a holiday visit and stopped to get some supplies," she said. "We didn’t expect anything like this to happen. When we discovered we had won $50 million, I couldn’t breathe and my husband couldn’t speak. It still hasn’t sunk in."

Cashier Haileigh McDonald saw Flam scan her ticket at a self-check machine on Saturday. Minutes later the machine started indicating that a large prize had been won.

McDonald said the woman called her husband over, thinking she had won $50,000. He checked it again.

"He checked the ticket again, and I was like, 'That's $50 million dollars,' and she was like, 'No, no that can't be right,'" McDonald said. "I said, 'Count the zeroes, that's $50 million you just won.'"

Even though she is very excited and grateful, Flam says what is truly important is health and happiness.

“Money isn’t important," she said. "This is a very wonderful gift we’ve been given, but I’m not an extravagant person. As long as I know everyone is well, that’s what matters to me."

 

http://www.cbc.ca/news/canada/toronto/story/2012/12/24/toronto-lotto-max-winners.html

 

winn-600x358.jpg

 

 

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தின் எதிர்பாராத அதிஷ்டம் ரொறாண்ரோ பெண்ணுக்கே கிடைத்துள்ளது. அவரின் பெயர் Susan Flam. ஒன்ராறியோவின் Thornhill பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் தனது கணவருடன் சென்று 50 மில்லியன் டாலர்களுக்கான Lotto Max காசோலையை வாங்கிச் சென்றுள்ளதாக OLG prize centre என்ற அதிஷ்டலாபச் சீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு இரண்டு வயது வந்த பிள்ளைகளும், ஐந்து பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

வெற்றி பெற்ற அதிஷ்டலாபச் சீட்டை Fairview Mall இல் தான் குறித்த பெண் வாங்கி இருக்கிறார்.

50 மில்லியன் டாலர்களுக்கான லொட்டோ மேக்ஸ் ஜாக்பாட் பரிசுச் சீட்டு ரொறான்ரோவில்தான் விற்பனையாகியுள்ளதாக ஒண்டோரியோ பரிசு சீட்டு மற்றும் அதிஷ்டலாபச் சீட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

http://www.canadamirror.com/canada/3922.html

Link to comment
Share on other sites

குட்வில் விற்பனை நிலையத்தில் கிரனைட்

எர்ரோபிக்கோ பகுதியில் டன்டாஸ் வீதியில் கிப்பிளிங்கிற்கு அண்மையில் அமைந்துள்ள குட்வில் என்ற பெயரையுடைய பாவித்த பொருட்களை மக்கள் அன்பளிப்புச் செய்யும் நிலையத்திற்கு திங்கட்கிழமை மாலை வந்த பொருட்களில் ஒரு வித்தியாசமான பொருள் காணப்பட்டது.

இவ்வாறு தாங்கள் பெறும் பொருட்களை குட்வில் நிறுவனம் சுத்தமாக்கி இரண்டாந்தரப் பொருட்களாக விற்பனைக்கு விடும். இவ்வாறு வழங்கப்பட்ட பொருளானது கிரனைட் எனப்படும் கையெறி குண்டாகும்.

இந்தப்ப கையெறி குண்டைக் கண்ட பணியாளர்கள் பாதுகாப்புத் துறையிருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து விரைந்த குண்டுகளை வெடிக்கவைக்கும் பணிப்பிரிவினர், அங்கு பணியில் நின்ற சகலரும் வெளியேற்றி அந்த விற்பனை நிலையத்iதில் இருந்த கிரனைட்டைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரியவருக்pன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்வில் விற்பனை நிலையத்தில் கிரனைட்

எர்ரோபிக்கோ பகுதியில் டன்டாஸ் வீதியில் கிப்பிளிங்கிற்கு அண்மையில் அமைந்துள்ள குட்வில் என்ற பெயரையுடைய பாவித்த பொருட்களை மக்கள் அன்பளிப்புச் செய்யும் நிலையத்திற்கு திங்கட்கிழமை மாலை வந்த பொருட்களில் ஒரு வித்தியாசமான பொருள் காணப்பட்டது.

இவ்வாறு தாங்கள் பெறும் பொருட்களை குட்வில் நிறுவனம் சுத்தமாக்கி இரண்டாந்தரப் பொருட்களாக விற்பனைக்கு விடும். இவ்வாறு வழங்கப்பட்ட பொருளானது கிரனைட் எனப்படும் கையெறி குண்டாகும்.

இந்தப்ப கையெறி குண்டைக் கண்ட பணியாளர்கள் பாதுகாப்புத் துறையிருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து விரைந்த குண்டுகளை வெடிக்கவைக்கும் பணிப்பிரிவினர், அங்கு பணியில் நின்ற சகலரும் வெளியேற்றி அந்த விற்பனை நிலையத்iதில் இருந்த கிரனைட்டைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரியவருக்pன்றது.

 

ரொரொன்ரோவை... நினைக்கவே... பயமாயிருக்கப்பா...

அது கிடக்கட்டும், ஆருக்கு... எறிய வைச்ச.. குண்ண்டு... வீணாகிப் போச்சே.... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

நீதிமன்றத்தில் பர்தா அணியலாம்! கனடிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் பெண்கள் தங்கள் மத நம்பிக்கைபடி முகத்தை மூடும் பர்தா உடையை அணியலாம் என்று கனடிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


ஒரு வழக்கில் ஒரு இஸ்லாமிய பெண் தன்னுடைய உறவினர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு வரவேண்டி இருந்தது. அப்போது கண்கள் மட்டும் தெரியக் கூடிய நிக்காப் என்றழைக்கப்படும் பர்தா உடையை அணிந்து வர அனுமதி கேட்டார். அது ஒரு பாலியியல் வன்முறை வழக்கு.  தன் மதக் கோட்பாடுபடி பெண்கள் பொது இடத்துக்கோ அல்லது ஆண்கள் இருக்கும் இடத்துக்கோ வரும்போது முழுவதும் மூடிய உடையை அணிந்து இருக்க வேண்டும் அதனால் தன்னை அந்த உடை அணிய அனுமதிக்குமாறு கோரினார்.

 

ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லுபவர்களின் முகத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என்றும் அப்போது அவரின் முக உணர்ச்சிகளைக் காண வேண்டும் என்றும் அது தங்கள் உரிமை என்றும் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார்கள்.

 

ஆனால் அந்த்ப் பெண்ணின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், பாலியியல் பலாத்காரத்துக்கு உள்ளான இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று கூறினால் அவர்கள் புகார் கொடுக்கவே தயங்குவார்கள் என்று வாதாடினார்கள்.

கனடிய மக்கள் உரிமைகளின்படி பர்கா அணிவது தனி மனித உரிமை. ஆனால் குடியுரிமை சட்ட விதிகளின் படி குடிமகனாக பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது முகத்தை மூடியிருக்கக் கூடாது.

 

தற்போது நீதிமன்றத்தில் பர்தா அணியலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 

http://ekuruvi.com/Canadian%20Supreme%20Court%20rules%20women

Link to comment
Share on other sites

ரொரொன்ரோவை... நினைக்கவே... பயமாயிருக்கப்பா...

அது கிடக்கட்டும், ஆருக்கு... எறிய வைச்ச.. குண்ண்டு... வீணாகிப் போச்சே.... :D  :lol:  :icon_idea:

 

விளையாட்டுக்கு மரண அறிவித்தல் விடுபவர்களுக்காகவிருக்கலாம்

Link to comment
Share on other sites

நீதிமன்றத்தில் பர்தா அணியலாம்! கனடிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரும் பெண்கள் தங்கள் மத நம்பிக்கைபடி முகத்தை மூடும் பர்தா உடையை அணியலாம் என்று கனடிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு வழக்கில் ஒரு இஸ்லாமிய பெண் தன்னுடைய உறவினர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு வரவேண்டி இருந்தது. அப்போது கண்கள் மட்டும் தெரியக் கூடிய நிக்காப் என்றழைக்கப்படும் பர்தா உடையை அணிந்து வர அனுமதி கேட்டார். அது ஒரு பாலியியல் வன்முறை வழக்கு.  தன் மதக் கோட்பாடுபடி பெண்கள் பொது இடத்துக்கோ அல்லது ஆண்கள் இருக்கும் இடத்துக்கோ வரும்போது முழுவதும் மூடிய உடையை அணிந்து இருக்க வேண்டும் அதனால் தன்னை அந்த உடை அணிய அனுமதிக்குமாறு கோரினார்.

 

ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லுபவர்களின் முகத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என்றும் அப்போது அவரின் முக உணர்ச்சிகளைக் காண வேண்டும் என்றும் அது தங்கள் உரிமை என்றும் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார்கள்.

 

ஆனால் அந்த்ப் பெண்ணின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், பாலியியல் பலாத்காரத்துக்கு உள்ளான இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று கூறினால் அவர்கள் புகார் கொடுக்கவே தயங்குவார்கள் என்று வாதாடினார்கள்.

கனடிய மக்கள் உரிமைகளின்படி பர்கா அணிவது தனி மனித உரிமை. ஆனால் குடியுரிமை சட்ட விதிகளின் படி குடிமகனாக பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது முகத்தை மூடியிருக்கக் கூடாது.

 

தற்போது நீதிமன்றத்தில் பர்தா அணியலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 

http://ekuruvi.com/Canadian%20Supreme%20Court%20rules%20women

 

ஒரு பாக்கிஸ்தானியப் பெண் சமுக நல நிதிக்கொடுப்பனவுக்கு ஒரே மாதத்தில் மூன்று ஆண்களுக்கு மனைவி போல் சமூகம் அளித்துள்ளார்.கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டார்.இதே போல வகனச்சாரதிப்பயிற்சி நிலையத்திலும் அனுமதிப்பத்திரத்திற்காக பல களவுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
 
Link to comment
Share on other sites

பிரிட்டிஸ் கொலம்பியாவில் பூமி நடுக்கம்.

புனித நத்தார் தினத்திற்கு அடுத்த நாளாகிய நேற்றைய தினம் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் தென் பகுதியில் காலையில் 10:36 பூமி நடுக்கம் ஒன்று உணரப்பட்டிருக்கின்றது. கனடிய இயற்கை வளத்திணைக்களமானது 3.3 மக்னைடூட் அளவில்தான் அந்த பூமி அதிர்ச்சியிருந்ததெனக் கூறுகின்றது.

இது கல்வ் என்று அழைக்கப்படும் தீவில் ஏற்பட்டிருபதாகவும், இதனால் மக்களுக்கு எந்ந விதமான சேதங்கள் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒரு இணையத்தள அறிக்கையின் படி 247 பேரளவில் அந்த பூமியதிர்ச்சியை உணர்ந்துள்ளதாக வெளியிடப்பட்டீருக்கின்றது.

அதே இணையத்தளமானது பிரிட்டிஸ் கொலம்பிய கடலேரமாக டிசம்பர் மாதத்திலிருந்து ஏறக்குறைய 70 பூமி நடுக்கங்கள் 0.9 – 4.8 வரையான மக்னைடூட் அளவுகளில் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றது. ஆனால் இவைகள் சேதங்களை ஏற்படுத்தியதாக எவ்வித அறிவித்தல்கள் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

http://www.canadamirror.com/canada/3985.html

Link to comment
Share on other sites

இந்த கனேடிய மாநிலமும், அமெரிக்க பசுபிக் மாநிலங்களும் ஒருநாள் பாரிய நில அதிர்வை சந்திக்கும்.

Link to comment
Share on other sites

கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல் விழா

 

கனடாவில் — தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா — சனவரி 14, 2013 (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது

கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வழமைபோல, தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறது.

இந்த விழா எதிர்வரும் சனவரி 14, 2013 (திங்கட்கிழமை) அன்று மாலை 5.30—9.00 மணி வரை, கனடா முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

மண்டபத்தின் ஓரத்தில் தரையை மெழுகிக் கோலமிட்டு, மாவிலை தோரணங் கட்டி, வாழை, கரும்பு நட்டு, அடுப்பு மூட்டி அதன்மேல் நீர் நிறைத்த புதுப்பானை வைத்து, அதன் கழுத்தில் மா, இஞ்சி, மஞ்சள் இலை கட்டி, விறகிட்டுத் தீ மூட்டி, நீர் கொதித்த பின்னர் ஆவின்பால் சிறிதளவு விட்டுப் பொங்கி வரும் போது நன்கு தீட்டிய கைக்குற்றல் பச்சை அரிசியைப் போட்டு வேக வைத்து, வெந்ததும் அதில் மரமுந்திரி, முந்திரிப்பழ வற்றல், சர்க்கரை, ஏலம், கறுவா, கராம்பு என்பவற்றை இட்டு, எல்லாவற்றையும் நன்கு துளாவிக் கலந்து அடிப்பிடிக்கவிடாமல், மெல்லிய நெருப்பில் தொடர்ந்து துளாவித் துளாவி வேகவிட்டு, வெந்ததும் அடுப்பிலிருந்து பானையை இறக்கி வைப்பர். பொங்கல் செய்முறை இதுவாகும்.

இந்நிகழ்வனைத்தும் பொங்கல் விழாவில் பங்குபற்றவரும் குழந்தைகள், ஆர்வலர்கள் எல்லோரும் கண்டு களிக்குமாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விழா உழவர்களின் அறுவடை விழா. வேளாண்மைச் செய்கைக்கு உறுதுணையாக இருந்த ஞாயிறுக்கு உழவர் பொங்கிப் படைத்து வணங்கும் நாள். அடுத்த நாள் பட்டிப் பொங்கல். இது உழவுத் தொழிலுக்குப் பக்கத்துணையாக இருந்த மாடுகளுக்கு எடுக்கும் விழா. இந்த இரண்டும் சேர்ந்தது அறுவடை விழா. மேற்குலகில் இதனை Harvest Festival என்று அழைப்பர். பொங்கல் விழா தமிழ் மக்கள் அனைவரையும் மத அடிப்படையில் அல்லாது, இன அடிப்படையில் ஒன்று சேர்க்கிறது.

Thai-ponga-600x472.jpg

திருவள்ளுவர் பிறந்த நாளே தமிழர் ஆண்டுப் பிறப்பாகும்

தமிழ்ஆண்டுப் பிறப்பன்றுதான் தைப் பொங்கல்; நாளாகும்

“– இவற்றின் அடிப்படையில் நோக்கும் பொழுது தைப்பொங்கல் விழா ஒன்று மட்டுமே தமிழ் மக்களது ஒப்புயர்வற்ற நாட்டுடை நல்விழாவாகும். எனவே தமிழினப் பண்பாட்டை ஒட்டிய சுறவம் முதல் நாளில் வரும் பொங்கலை, உற்றார் உறவினர் புடைசூழ இன்பம் பொங்கப் பொங்குவீராக” எனத் தமிழ்மக்களுக்குத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

1500 கனடா வெள்ளி பரிசு 

மேலும் தமிழரது முதன்மைப் பெருநாளன்று, தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், இவ்வாண்டும், தூயதமிழ்ப்; பெயர் வைத்துள்ள பிள்ளைகளுக்கு 1500 கனடா வெள்ளிகளை பரிசாக வழங்க இருப்பதாக அதன் தலைவர், வேலுப்பிள்ளை தங்கவேலு (‘நக்கீரன்’) அவர்கள் அறிவித்துள்ளார். பரிசு பெறுவோர் குடவோலை மூலம் தெரிவு செய்யப்பெறுவர். 2007 இல் இருந்து 2012 வரை பிறந்த பிள்ளைகளே விண்ணப்பிக்கலாம். 2013 சனவரி 13ஆம் நாளுக்கு முன்னர் விண்ணப்பித்தல் வேண்டும். தொடர்புக்கு: தொலைபேசி எண்  416 281 1165.

பொங்கலன்று, பொங்கல் பொங்;குவதோடு, தமிழ் மரபுக் கலைகளான ஆடல் பாடல் கோலாட்டம் முதலியவையும்; நிகழும். அந்நாளில் சிறார்க்கு ஏடுதொடக்கலும் இடம்பெறும்.

 

http://www.canadamirror.com/canada/4078.html

Link to comment
Share on other sites

ஆங்கில புத்தாண்டு தின உறுதி மொழி.

 

 இனியாவது நாம் தமிழ்ப் புத்தாண்டை முதன்மையாக, பெருமையாக, சிறப்பாக கொண்டாடுவோம்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் மன்னாருக்கு ஆர்டர் ஆப் கனடா என்ற உயர்ந்த விருது.

 

 

resize_20130101095423.jpghttp://www.thedipaar.com/news/news.php?id=56105

 

 

சென்னையை சேர்ந்த மைக்ரோ நியூட்ரியன்ட் எம். ஜி வெங்கடேஷ் மன்னார் என்பவர் கனடாவின் உயரிய விருதை பெறுகிறார். இவருக்கு சமூக சேவைக்காக, கனடாவின் உயரிய விருதான, ஆர்டர் ஆப் கனடா என்ற விருது வழங்கப்படுவதாக கனடாவின் கவர்னர் ஜெனரல் அறிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக வெங்கடேஷ் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னையில் பிறந்த வெங்கடேஷ் மன்னார், சென்னை ஐ.ஐ.டி.,யில் பிடெக் பட்டம் முடித்துள்ளார். பின்னர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை.,யில் மேல்படிப்பை முடித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


 

 

Link to comment
Share on other sites

இந்த கனேடிய மாநிலமும், அமெரிக்க பசுபிக் மாநிலங்களும் ஒருநாள் பாரிய நில அதிர்வை சந்திக்கும்.

 

 

கனடா, அமெரிக்க மக்களை பீதியடைய வைத்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது 

 

 

கனடியக் கடலோரத்திலும் அலாஸ்காவிலும் சுனாமி ஏற்படுமென விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்iயானது தற்சமயம் நீக்கப்பட்டுள்ளது. பாதிப்பை ஏற்படுத்தக்கூடியளவிற்கு அலைகளின் உருவாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்தே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அலைகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக தற்சமயம் இல்லை என அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்திருக்கின்றது. சில கடல்கரைப் பகுதிகளில் மட்டும் கடல் நீர்மட்டத்தில் சிறிது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றது.

அலாஸ்கா நில நடுக்க தகவல் நிலையத்தின் இறுதி அறிக்கைப்படி நில நடுக்கம் பெரிதாக உணரப்பட்டதாகவும் ஆனால் இதுவரையில் எந்தவொரு சேதம் பற்றிய விபரம் கிடைக்கவில்லையெனவும் கூறுகின்றது.

 

http://www.canadamirror.com/canada/4348.html

Link to comment
Share on other sites

cold-and-fever-293x150.jpgமொன்றியல் மருத்துவமனைகளின் அவசரகாலப் பிரிவு நிரம்பிவழிகின்றன

 

மொன்றியல் மாகாணத்திலுள்ள மருத்துவ மனகளும் அவற்றின் காத்திருக்கும் அறைகளும் தொடர்ந்து மக்கள்கூட்டமாகவே காட்சியளிக்கின்றது. பெரும்பாலான நோயாளர்கள் குளிர் சுரத்தாலும் இரைப்பை குடல் சம்பந்தமான வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

பொதுவாக டிசம்பர் மாதத்தில் மக்கள் குளர் சுரம் அல்லது அதுபோன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் அவற்றிற்கு வீடுகளிலேயே தம்மாலான வைத்திய முறைகளைக் கடைப்பிடிப்பதுண்டு. அனேகமாக ஏதாவது அவசர காரணம் இல்லாவிடின் வைத்தியசாலைகளை நாடுவதை தவிர்த்துக்கொள்வார்கள் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மனைகளிலுள்ள காத்திருக்கும் அறைகளும் மக்களால் நிரம்பியுள்ளது. இதேமாதிரியன நிலமைதான் வைத்திய கிளினிக்குகளிலும் காணப்படுகின்றது. அதிகமான மக்கள் கிளினிக்குகள் திறபடுவதற்கு முன்பே வந்து காத்திருக்கின்றார்கள்.

மொன்றியலிலுள்ள குயின் எலிசபெத் வைத்தியசாலையின் அவசரப் பிரிவானது நோயாளர்கள் அன்றே வைத்தியரைச் சந்திக்க வேண்டுமாயின் பிற்பகல் 1மணிக்கு முன்னதாகவே வைத்திசாலையல் சமுகமளிக்கவேண்டும் என கேட்கப்படுகின்றார்கள். இன்னமும் இந்தச் சுரத்தினுடைய காலம் முடிவடைவதற்கு எட்டுக்கு மேற்பட்ட கிழமைகள் இருக்கின்றனவெனவும் இந்த அவசரப்பிரிவுகளில் இன்னும் சில நாட்களுக்கு அதிகமான மக்கள் தொடர்ந்து அனுமதிக்கப்படத்தான் செய்வார்கள் என்பது தெரிகின்றதென மொன்றியல் பொது நல சுகாதார அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

 

http://www.canadamirror.com/canada/4363.html.

 

ஆயிரக் கணக்கான கனடியர்களுக் விடுமுறைகாலங்களில் குளிர்காய்ச்சல்.

 

கனடிய பொதுமக்கள் சுகாதரா ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் கடைசி வெளியீடானது கடந்த வருடம் டிசம்பர்மாதத்தின் முதற்கிழமையிலேயே சகல மாகாணங்கள் ரெறிற்ரொறிகள்; போன்ற சகல பகுதிகளிலும் குளிர் காய்ச்சல் தென்படத் தொடங்கியுள்ளதெனத் தெரிவித்திருக்கின்றது.

கனடிய சுகாதரப்பகுதிக்குக் கிடைத்த தகவல்களின்படி கிட்டத்தட்ட டிசம்பர் 15ம் திகதியளவில் நாடுபூராவும் 35000 பேர் குளிர்;காய்ச்சலினால் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் இதே நேரம் 2011ல் நாடு முழுவதிலும் 182 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

புதிய கணக்கெடுப்பு அறிக்கையின்படி இம்முறை வன்கூவர் குவிபெக் ஆகிய மாகாணங்களில் தோற்றம் பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இருமல் பெருமளவில் நாட்டின் சகல பகுதிகளிலும் பரவுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தச் சுரமானது வளமையைப்போல நவம்பர் தொடக்கம் ஏப்பிரல் வரை நிலவும் இதன் அதிஉச்சக் காலம் தை மாக இறுதியாகும். மிக மிகப் பெரும்தொகையான எண்ணிக்கையானோர் அவசர மருத்துவப் பிரிவுக்கு கடந்த இரண்டு கிழமைகளாக வருகிறார்கள் என ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் சுகாதரப்பகுதில் தொற்றுநோய் ஆலோசகர் கூறியிருக்கின்றார்.

இதே மாதிரியானதொரு நிலமைதான் கனடாவிலுள்ள ஏனைய மாகாணங்களிலும் காணப்படுவதாகத் தெரியவருகின்றது.

 

http://www.canadamirror.com/canada/4354.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

resize_20130107095755.jpg

 

 

ஃபேஸ்புக் இணையதளத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன்முதலில் கனடாவில் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி, ஸ்மார்ட் மற்றும் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் பயன் அடையலாம்.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய தொழில்நுட்பத்தில் இணையத்தின் வழியே கட்டணம் ஏதுமின்றி தொலைபேசி அழைப்புகளை அழைத்து பேசிக்கொள்ளலாம். மேலும் வாய்ஸ் மெயில் எனப்படும் குரல் பதிவையும் இலவசமாக அனுப்பும் வசதியும் உள்ளது. இவையிரண்டிற்கும் கட்டணம் ஏதும் இல்லை. உலகின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் இலவசமாகவே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த வசதி சாதாரண போன் வைத்திருப்பவர்கள் உபயோகிக்க முடியாது. ஆண்ட்ராய்டு,ஆப்பிள், மற்றும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த புதிய வசதியின் மூலம் பயன்பெறலாம்.

கனடாவில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 18 மில்லியன் மக்களில், எத்தனை பேர்களை இந்த புதிய வசதி கவர்ந்து இழுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கனடாவில் இந்த புதிய வசதிக்கு ஏற்பட இருக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக உலகம் முழுவதும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

http://www.thedipaar.com/news/news.php?id=56336

Link to comment
Share on other sites

இலவசம் என்றால் நல்லது தான். ஆனால் எவ்வளவு நாளுக்கு அப்படி இருக்கும்?

 

ஏனெனில் ஒன்றுமே இலவசம் இல்லை  :D

Link to comment
Share on other sites

உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர்களும் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!

 

ஒன்றாரியோவின் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் நாளை பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆந் திகதி தாமும் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர்கள் அறிவித்தார்கள்.

 

நாளைய தினம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானதென அறிவித்துள்ள மாகாண அரசு, அதற்கு எதிராக ஒன்றாரியோ தொழிலாளர் உறவுகள் சபையிடம் முறையிடவுள்ளது.

 

ஆனால், நாளைய போராட்டம், வேலை நிறுத்தம் அல்லவெனவும், அரசியல் ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கையெனவும் சங்கம் தெரிவித்தது. டிசம்பர் மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அத்தகைய ஒருநாள் போராட்டத்தை நடத்துவதற்கு 92 சதவீதமான ஆசிரியர்கள் ஆதரளித்தார்களென ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களின் சங்கம் சுட்டிக் காட்டுகிறது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13464

 

Link to comment
Share on other sites

வாகானில் மண்டை ஓடு! காவல் துறை விசாரணை.

 

வாகனில் உள்ள கோல்ஃப் மற்றும் ஸ்கீ சங்கப் பகுதியில் மரங்களடர்ந்த இடத்தில் ஒரு மண்டை ஒடு கிடைத்துள்ளது. அந்த மண்டை ஓரு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,


அந்தப் பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொண்ட ஒரு உள்ளூர்வாசி இந்த மண்டை ஒட்டைக் கண்டுபிடித்து காவல் துறைக்கு தகவல் தந்தார்.

‘இந்த மண்டை ஓட்டை குறித்த விசாரணையை காவல் துறையினர் தீவிரமாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஆணின் மண்டை ஓடா அல்லது பெண்ணின் மண்டை ஒடா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.’ என்று காவல் துறை அதிகாரி ஜான் ப்ரேப்ரூக் தகவல் தெரிவித்தார். அதை தீர்மானிக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மண்டை ஓடு மட்டும் கிடைத்திருப்பதால் உடலின் மற்ற பாகங்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மிகப் பெரிய பரப்பு என்பதால் தேடுதலுக்கு நாட்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

 

http://ekuruvi.com/human-remains-richmond

Link to comment
Share on other sites

தமிழர்களின் மரபு நாளை கொண்டாடுவதில் சென்னையும் மார்க்கம் நகரமும் கை கோர்க்கின்றன
Markham Joins Chennai, India in Celebrating Tamil Heritage Days
 
“The City of Markham is thrilled to be ringing in Thai Pongal and this important occasion with the City of Chennai,” remarked Mayor Scarpitti. “This is a great time to reflect on the tremendous benefits both Markham and India have gained as a result of our past and current trade missions. The strong partnerships and alliances we have built with Chennai and other cities during our visit reinforce the significant mutual value these joint initiatives provide to our cities.”


As part of the visit the delegation toured Apollo Hospital today. Markham Stouffville Hospital’s official representative and Chief of Obstetrics and Gynecology, Dr. George Arnold was also present to tour this world-renowned institute.
 

In collaboration with the Indo-Canada Chamber of Commerce (ICCC), the City of Markham embarked for its six-city India Mission 2013 on January 2. The 2013 trade mission is the largest ever organized by the ICCC and comprises over 120 members including several prominent dignitaries, such as Hon. Jason Kenney, Canada’s Minister for Citizenship, Immigration and Multiculturalism.

 

http://www.markham.ca/wps/portal/Markham/AboutMarkham/NewsRoom/NewsReleases/!ut/p/c5/rdDJboMwEAbgZ-kL4DFhPTrYKU7BrQFTwgXRKkKQOkFVxPb0JYce01w6c_z0axZUorXP9dA29bW9nOsvVKDSqazX5yCIck-aiQXAOc1tQSWOQ2f1w83dxIzUJib0hQBXxIYwCkxwnQfpd1SAVaXd3PPltCQdTLH4rseU8jFmJyw6NsX0uKSUzRnD0VU1kII1Z4s0IfZxvpOMsKkfFXtCe1S2H9oYP7UBxsY1sYc9D8B2sY8xKrbrsPKPdbxk88Dh1-8fe3O4UwTQAZVuZXkJCXYCpMh9c80zFWzDcC8VRtk_vkOEF31EvVaD9nn7pofmB_Rkwfw!/dl3/d3/L2dBISEvZ0FBIS9nQSEh/?pcid=ac388b004e3440768d21efe8a6cb7a30

Link to comment
Share on other sites

72209_10200133041666773_1136188072_n.jpg

Link to comment
Share on other sites

ரொறன்றோவில் இவ்வாண்டில் காய்ச்சல் பெருமளவு பரவியுள்ளதாக தெரிவிப்பு!

 

ரொறன்றோவில் இவ்வாண்டில் காய்ச்சல் பெருமளவு பரவியுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தாரக்ள்.

 

 

இந்த பருவ காலத்தில், இதுவரை 1000 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக ரொறன்றோ பொதுச் சுகாதார சேவை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இரண்டு வயதான சிறுவன் ஒருவன் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இறந்தமை குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது.


இந்தப் பருவகாலத்தில் ரொறன்றோவைச் சேர்ந்த சுமார் இருபதாயிரம் பேர் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார்கள். அது வழமையான அளவிலும் குறைவானது.

 

பெப்ரவரி மாதமளவில் மீண்டும் காய்ச்சல் பரவுவதற்கு முன்பாக தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் நேரம் உள்ளதென அதிகாரிகள் கூறினார்கள்.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13499

Link to comment
Share on other sites

கனேடிய பூர்வகுடியினர் இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்கள்!

 

பூர்வ குடியினரின் உரிமைகளை வலியுறுத்தி கனடாவில் இடம்பெற்று வரும் Idle No More போராட்ட இயக்கம் இன்று நாடளாவிய ரீதியிலான போராட்டங்களை நடத்தவுள்ளது.

 

ஒன்றாரியோவின் வின்சர் நகரை, அமெரிக்காவுடன் இணைக்கும் அப்பாசிடர் பாலத்தில் மறியல் செய்வது, வீதி மறியல் போராட்டங்கள், வழிபாடுகள் பேரணிகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் பல நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


ஒப்பந்த ரீதியிலான தமது உரிமைகளை கனேடிய அரசு மீறி வருவதாக பூர்வகுடியினர் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13498



main_13498.jpg

Link to comment
Share on other sites

Toronto math tutor charged with sexually assaulting two children

 

A 47-year-old man from Toronto faces charges in connection with a sexual assault involving two children.

 

The man is known within the Toronto Tamil community as an academic tutor and allegedly assaulted the two children between 1999 and 2003 while he was tutoring them in math.

 

Lakshmikanthan Kumarasamy has been charged with two counts of sexual assault, two counts of sexual interference and two counts of invitation to sexual touching.

 

Police believe there may be more victims.

 

Anyone with information is asked to call 416-808-5100.

 

http://www.thestar.com/news/gta/article/1316093--toronto-math-tutor-charged-with-sexually-assaulting-two-children

Link to comment
Share on other sites

ரொறன்றோ மாநகரசபையின் வரவு செலவுத் திட்டப் பொறுப்பதிகாரி பதவி விலகினார்.

 

நேற்று நிறைவேற்றப்பட்ட ரொறன்றோவின் வரவு செலவுத் திட்டம் குறித்துத் தமது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ள மாநகரசபை உறுப்பினர் மைக் டெல்கிறான்டே, வரவு செலவுத்திட்டப் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து விலகினார்.

 

வரவு செலவுத்திட்டத்தில், தரவுகளின் அடிப்படையில் அல்லாது, உணர்ச்சிகளின் அடிப்படையில் செலவினத்தை மேற்கொள்வதற்கு மாநகரசபை உறுப்பினர்கள் முயற்சிப்பது கவலை தந்ததென அவர் கூறினார்.


இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் டிசம்பர் மாதம் தயார் செய்யப்பட்டபோது, செலவினத்தை அதிகாரித்தால் பதவி விலகவுள்ளதாக அவர் எச்சரித்திருந்தார். நேற்று செலவினத்தை 12 மில்லியன் டொலரால் அதிகரிப்பதென மாநகரசபை தீர்மானித்தது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13510

Link to comment
Share on other sites

Lakshmikanthan Kumarasamy has been charged with two counts of sexual assault, two counts of sexual interference and two counts of invitation to sexual touching.

 

 

http___1www.torontopolice.on_-200x250.jp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.