Jump to content

எனது கலண்ட‌ர் பொன்மொழிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 1

மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால்

உயிரொளி வீச‌ உலகில் வாழலாம்.

திகதி 2

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி

போல் இனிதாவதெங்கும் காணோம்.

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

திகதி 4

உயர்ந்த விச‌யங்கள் எல்லோரையும்

நிமிர்ந்து பார்க்க செய்யும்.

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 6

சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்:

சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும்.

திகதி 7

அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன்

சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?

திகதி 8

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

திகதி 9

அர்த்தமற்ற‌ கண்ட‌றியாத புதுப் பெயர்களை விட‌

அழகு தமிழ் பழைய பெயர்களே மேல்.

திகதி 10

சுதந்திர‌ம் தருபவர் முன் அட‌ங்கி இரு:

அட‌க்குபவர் முன் சுதந்திர‌மாய் இரு.

திகதி 11

சின்னத் திரைக்குள் தொலைக்கும் மாந்தரே!

சிந்தித்து எழா விட்டால் சிதையும் குடும்பம்.

திகதி 12

புகையிலையைப் பற்ற வைத்தால் அது நெஞ்சின் மேல் புற்று

வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்.

திகதி 13

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.

திகதி 14

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு.

Link to comment
Share on other sites

  • Replies 730
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நாட்காட்டி பகிர்வுக்கு மிக்க நன்றிகள்...தொடருங்கோ..

Link to comment
Share on other sites

திகதி 5

கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை

இவன் அவளை அடிக்கலாமா?

திகதி 3

யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள்

நம்மை பார்க்கிறார்.

இங்கை தான் ரதியக்கா நிக்கிறா :D:D தொடருங்கோ :):icon_idea: 1 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா ரொம்ப அற்ராகிற்றிவ்வா இருக்கு...பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்

வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு

எனக்குப் பிடித்தது, இது தான் ரதி!

தொடருங்கள், உங்கள் கலண்டர் பொன்மொழிகளை!!!

Link to comment
Share on other sites

மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை

அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.

மனச்சாட்சி பலருக்கு இல்லாததால் தான் இன்று உலகமே ஒரு பதட்ட நிலையில் உள்ளது.

நாட்காட்டி பொன்மொழிகளை தொடருங்கள்,ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 15

உள்ளங்கள் பொங்க- உணர்வுகள் பொங்க

-உவகைகள் பொங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

பெண் சுதந்திர‌ம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,

கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு. :D :D :D

இதை விட சிறப்பாக சொல்ல இயலாது,,,,,,,,,,,

நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது.

ரதி இது உங்கள் சொந்த ஆக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 16

பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்

பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட‌ அனைவருக்கும் மிக்க நன்றிகள்...தப்பிலி எனக்கும் இப்படி எல்லாம் எழுத வேண்டும் எனத் தான் ஆசை ஆனால் எழுதத் தெரியாதே :) ...இதை நான் சொந்தமாக எழுதியிருந்தேன் என நினைத்து யாராவது பாராட்டியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ...இதை நான் வாக்கிய பஞ்சாங்க கலண்ட‌ரில் இருந்து சுட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு :rolleyes: .

இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.

அப்படியும் ஒன்று இருக்கின்றதா சிறீ அண்ணா ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 17

சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம்

காதலின் அருமை காணா வெறுமணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் பொன்மொழிப் பகிர்வுக்கு பாராட்டுக்கள் .............ஒரு பச்சை

..........மேலும் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எல்லாமே நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 18

அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;

இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகதி 19

விவாஹ சுப முகூர்த்தத்தின் நோக்கம்,மணமக்களின் நல்வாழ்வே தவிர,

விருந்தினர்கள் விருந்துண்ணும் பொழுதோ,விடுப்பெடுக்கும் நாளோ அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலா அக்கா,பூந்தோட்டம்

அங்கேயும் ..............

இங்கேயும்............

என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.

நான் நினைக்கிறேன் அங்கே என்டால் ஊரில்,இங்கே என்டால் புலத்தில்...இங்கே பொண்ணுங்கள் புடவை உடுப்பதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் என நினைக்கிறேன் :unsure::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.