Jump to content

பழமொழிக்கான விளக்கம்.


Recommended Posts

அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது

கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?

பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*******

அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது

கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?

கற்பூரத்துக்கு வாசனையில்லையா, உண்டா என்பது கூடத் தெரியாது விட்டால் கொஞ்சம் கடினம் தான், இருந்தாலும் முயற்சிக்கிறேன். :lol: கற்பூரத்துக்கு அதற்கேயுரித்தான சிறப்பான வாசனையுண்டு ஆனால் கழுதைக்கு அதைப்பற்றித் தெரியாது. கழுதைக்கு ஏன் கற்பூரம் கொழுத்துகிறார்கள் அல்லது அதன் மணம், குணத்தைப் பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. என்னமோ எரியுது என்று மணந்து விட்டு மூக்கைச் சுழித்துக் கொண்டு போய் விடும்.அதைப் போல் தான் இங்கு சிலரும், ÁüÈÅ÷¸¨Çò ¾í¸Ç¢ý «È¢Â¡¨Á¡ø ¾¡ì̸¢È¡÷¸û. மற்றவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக தாக்குகிறார்கள். அதே போல் தான் " நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ற" பழமொழியும், செக்கிலும் எண்ணெய் வடியும், சிவலிங்கத்திலும் எண்ணெய் வடியும், நாய்க்கு வித்தியாசம் தெரியாது, அது தன்பாட்டுக்கு நக்கி விட்டுப் போகும் :roll:

வளமான தமிழின் பழமொழிகளின் தாற்பரியம் தெரியாமல் நேரடி மொழிபெயர்ப்புச் செய்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய விதி.:lol:

******* நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது தான் கோத்தை வித்த கோணல் புளியங்காய்,அதன் விளக்கம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் முதல்லயே சொல்லிட்டாரே ஒனியன் சார்.

நீங்கள் ஒனியன் சாரின் அறிமுகப்பகுதியை ஒரு முறை போய் பாருங்கோ...

டோன்ட் வேஸ்ட் த டைம்.

Link to comment
Share on other sites

இதில் எனக்கு ஒரு சந்தேகம் கழதை ஒரு மிருகம் தானே அதற்கு ஜந்தறிவுள்ளது ஆறவது அறிவான பகுத்தறிவில்லை இல்லை இந்த பகுத்தறிவில்லாத மிருகத்திடம் பகுத்தறிவுள்ள மனிதர் ஏன் கற்பூரத்தை கொழுத்துகிறார்கள் அதனால் என்ன பயன்

ஒவ்வரு மிருகத்திற்கும் ஒவ்வரு சிறப்பு அந்த சிறப்புகளை வெளிக்கொணர்வதை விட்டுவிட்டு அதற்கு முன்னால் கற்பூரத்தை கொழுத்தி மனிதர்களின் மதிப்பை குறைக்கிறார்கள்

இதிலிருந்து நான் விளங்கிக் கொள்வது கழதைக்கு கற்பூரம் கொழுத்தும் அந்த மனிதர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒனியன் சார்...அவங்க கேக்குறது,,,கழுதைக்கு எதுக்காக கற்பூர வாசனை தெரியணுங்குறதே... கழுதை தெரிஞ்சு என்ன செய்ய போகுது??? எதுக்காக கழுதைக்கும் கற்பூரத்துக்கும் தொடர்பு வந்திசு... ஏன் குதிரைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு வச்சுக்கல.... அப்படித்தானுங்களே நர்மதா???

:):lol::lol:

Link to comment
Share on other sites

கழதைக்கு கற்பூரம் கொழுத்துவது விழலுக்கிறைத்த நீர் போல என கூறலாம்

இதனால் ஒரு பயனும் இல்லை

நாயிற்கு கொழத்தினாலும் அது கற்பூரத்தை முகர்ந்து பிடிக்கும்

Link to comment
Share on other sites

இப்பழமொழிக்கான விளக்கத்தினை மறந்துவிட்டேன் ஆயினும் இது கழுதைக்கு கற்பூரம் கொழுத்துவதனுடன் எவ்வகையிலும் தொடர்பு இல்லாதது என்பதை மட்டும் கூறிக்கொள்ளலாம். சரியான விளக்கத்தினை வழங்குவதை விட்டு இவ்வாறு தேவையில்லாது கிண்டல் செய்வதனை நிறுத்திவிடலாம். ஒன்று தெரியாதவிடத்து அது தெரியவில்லை என்று ஒதுங்கிவிடுவது சிறந்தது. :idea:

Link to comment
Share on other sites

கழதைக்கு கற்பூரம் கொழுத்துவது விழலுக்கிறைத்த நீர் போல என கூறலாம்

இதனால் ஒரு பயனும் இல்லை

நாயிற்கு கொழத்தினாலும் அது கற்பூரத்தை முகர்ந்து பிடிக்கும்

ம்ம் நர்மதா....கழுதைக்கு கொழுத்துவது பயனில்லை. பழையவர்கள் கழுதைக்கு என்னவென்றே தெரியாத ஒன்றை காட்டி விட்டு.அது பேசாமல் போனதும்..ஒரு பழமொழியை உண்டாக்கி இருக்கிறார்கள்.. இதை என்னவென்று சொல்வது..

:roll:

Link to comment
Share on other sites

ப்ரியசகி நீங்கள் சொல்வது சரி சில பழமொழிகள் ஏற்புடையதல்ல

பல பழமொழிகளின் கருத்துக்களை நம்மவர்கள் மழங்கடித்து விட்டார்கள் (அர்த்தங்களை மாற்றிவிட்டார்கள்)

Link to comment
Share on other sites

உண்மை அர்த்தம் எனக்கு தெரியாது எனக்கு புரிந்த்வரைக்கும்.

கற்பூரமென்பது அருமையான, வாசனையுடைய ஒருபொருள் கடவுளுக்கு ஏற்புடையது, கெட்ட வாசனைகளை ஈர்த்து அளிக்கக்கூடியது, இறைவனுக்கு ஆரத்தி காட்டுவதால் உயர் பொருளாக கருதப்படுவது, கழுதை எனப்பட்டது மிருகங்களில் இழிவானது அதன் பயன் பாட்டைவைத்து அழுக்குமூட்டை சுமக்கத்தான் லாயக்கானது, பசு, குதிரை, யானை போன்று பயனும் அற்றது, பெறுமதியும் அற்றது, யாரையும் திட்டும்போதுகூட கழுதை போண்று லாயக்கற்றது எனத்தான் திட்டுகிறார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட கழுதை இறைவனுக்கு ஏற்றும்போது பயன்படுமெழும் வாசனையை அறியுமா? என்பதே பொருள். ஒரு அருமையான விடயத்தை மூடர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதே அதன் பொருள், ஏனெனில் அது அவர்களுக்கு எட்டாப்பொருள் என பொருள்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன் கூறிய விளக்கமே சரியானது.

ஓர் அருமையான விடயத்தை அதனை விளங்கிக்கொள்ள முடியாதவர்களிடம் சொல்லுவதால் எதுவித பயனுமில்லை.

பழமொழிகள் சந்தத்துடனேயே எழுதப்பட்டிருக்கின்றன.

"க" கழுதை, "க" கற்புூர வாசனை என்று பொருத்தமாக அமைந்ததால் அப்படி எழுதியிருக்கலாம்.

பழமொழிகளில் இருக்கும் சொற்களுக்கு நேரடிக் கருத்துக்களைப் பாராமல் அவற்றின் உட்கருத்துக்களையே நாம் உள்வாங்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்தவரை கல்லால் செய்த நாய் சிலையை.....

சிற்பி பார்த்தால் ஆகா எப்படி அழகாக செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுவான்...அதயே ஒரு சாதாரண மனிதன் பார்த்தால் ஆகா நாய் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பான்.

ஒரு பொருளை ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வையிலேயே...இருக்கின்றது.

அது கல்லா இல்லை நாயா என்று சிற்பிக்கும் மற்றவர்களூக்கும் உள்ள வித்தியாசம் போல....

எங்கேயோ படித்த ஞாபகம்.

பின்னாளின் அது திரிந்து கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் என்று சாதாரண அர்த்தமாகிவிட்டது.

சரியா தவறோ...நான் எங்கேயோ படித்ததை சொல்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்ன விளக்கம் சரி ஆனால் சின்ன திருத்தம். அதாவது சிற்பி கல்லில் ஒரு சிலையை செய்து வைத்திருக்கும் போது அதை சிலையாக பார்ப்பவன் அதில் உள்ள நாய் உருவத்தை காண்பான். ஆனால் அதை வெறும் கல்லாக பார்த்தால் அங்கு நாய் தென்படாது.

Link to comment
Share on other sites

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப் படுகிறது.

இதன் உண்மைப் பொருள்.

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம் தஞ்சை காஞ்சி... சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று.

அதற்குச் சுவைஞன் சொன்ன பதில்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

இது மனிதரின் பார்வையில்தான் ஒவ்வொன்றும் என்பதைக் குறிக்கிறது.

Link to comment
Share on other sites

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு...

என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

Link to comment
Share on other sites

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

என்ற பழமொழியின் அர்த்தம் என்ன?

(அதன் உட்கருத்து தற்போது திரிபடைந்துள்ளது என கூறுகிறார்கள்)

உண்டி என்பது "உணவு" என்பதாய் படித்த ஞாபகம்... உணவைச் சுருக்கினால் உடல் சிறுத்து பெண்கள் அழகாக காட்ச்சி தருவார்கள் என்பதைத்தான் ஔவை அப்படிச்சொன்னார் போலும்... ஒரு பெண்ணான ஔவை வேறுவிதத்தில் சொல்ல வளி இல்லை...!

Link to comment
Share on other sites

முகத்தாரின் பார்வையில்

வழமையா சாப்பாட்டு விசயத்திலை பெண்கள் பாத்தி கட்டி சாப்பிடக்கூடியவர்கள் சின்ன வயசிலை இப்பிடி சாப்பிட்டா ஆள் பெரிய சைஸ் ஆகிவிடும் அதோடை எவனும் திரும்பிப் பாக்கமாட்டான் ஆனபடியாலை சாப்பாட்டை குறைச்சு பெண்கள் சாப்பிட்டால் (உண்பதை சுருக்குதல்) அவர்களை சூப்பர். பிகருகளாக. . .ஆகக் காட்டும் (பெண்டிர்க்கு அழகு) யாரும் விளக்கம் பிழை எண்டா அடிக்க வராதைங்கோ . .சொல்லித்தாங்கோ. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தாரின் பார்வையில்

வழமையா சாப்பாட்டு விசயத்திலை பெண்கள் பாத்தி கட்டி சாப்பிடக்கூடியவர்கள் சின்ன வயசிலை இப்பிடி சாப்பிட்டா ஆள் பெரிய சைஸ் ஆகிவிடும் அதோடை எவனும் திரும்பிப் பாக்கமாட்டான் ஆனபடியாலை சாப்பாட்டை குறைச்சு பெண்கள் சாப்பிட்டால் (உண்பதை சுருக்குதல்) அவர்களை சூப்பர். பிகருகளாக. . .ஆகக் காட்டும் (பெண்டிர்க்கு அழகு) யாரும் விளக்கம் பிழை எண்டா அடிக்க வராதைங்கோ . .சொல்லித்தாங்கோ. .

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

எனது அம்மம்மாவின் காலத்தில் பெண்கள் ஒல்லியாக இருந்தால் அவர்களை வருத்தக்காரர் என சொல்லி திருமணம் செய்ய மறுப்பார்களாம் (அம்மம்மா கூறியது எதற்கும் ஒருக்கால் உங்கள் பெற்றேரிடமு கோளுங்கள்)

அப்படி இருந்த காலத்தில் ஔவையார் இப்படி கூறியிருப்பாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.

உண்மை அர்த்தம்: பகையாளன் குடியை உறவாடி[அவனிடம் உனக்குள்ள பகையை] கெடு.

[எங்கேயோ கேட்டது]

Link to comment
Share on other sites

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு பழமொழியா?? எப்பவிலை இருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா...நர்மதா தப்பா சொல்லிட்டாங்க...

அது திருக்குறள் இல்ல.....!!!

Link to comment
Share on other sites

வயிறு தொப்பையாக இல்லாமல், சுருங்கி.. அதாவது ஒட்டி இருத்தல் பெண்களுக்கு அழகு என்பதாகத்தான், இதன் பொருளை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் உண்மைப் பொருள்

உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு

இப்படி வலைப்பதிவில் சந்திரவதனா அக்கா எழுதியிருக்கார் :?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.