Jump to content

என் தங்கை இசைப்பிரியா....(.படித்ததும பகிர்வும்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் தங்கை இசைப்பிரியா

empty.gif

கண்ணுக்கு எதிரிலேயே

கற்பழித்துக் கொல்லப்பட்ட

அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு

ஒரு கையாலாகாத அண்ணனின்

கண்ணீர் அஞ்சலி.

என்ன அழகடி

உன் தமிழும்

தைரியமும்!

சின்னஞ்சிறு இதழ் விரித்து

சிங்கார உச்சரிப்பில்

செய்திகள் வாசிப்பாயே!

இப்போது நீயுமொரு

செய்தியாகிப் போவாய் என்று

கனவிலேனும் யோசித்தாயா?

இப்போதுதான் பூத்த

பனித்துளிகூட விலகாத

ஒரு காலைரோஜாவின்

அழகைக் கொண்டவளே!

எப்படியடி சிக்கிக் கொண்டாய்

திமிர் பிடித்த சிங்களனின்

திணவெடுத்த கரங்களுக்குள்?

ஆடையின்றி பிணமாக

ஒரு சிங்கள காட்டுக்குள்

நீ படுத்திருந்த காட்சி...!

நீ துடிதுடிக்க

கொல்லப்பட்ட போதும்,

உன் துணிமணிகள்

அவிழ்க்கப்பட்ட போதும்,

தொலைக்காட்சிப் பெட்டியிலே

உன் தொலைதூர ஓலங்கள்

ஒலித்த போதும்

சத்தியமாய் அழுதேனடி

அழுது புலம்புவதைத் தவிர

இந்த அண்ணனால்

ஆவதென்ன தோழி?

ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்

தொகுப்பாளராய் பணியாற்றி

தன் வாழ்க்கை

தொகுக்கப்படும் முன்பே

ஒரு சிங்கள காட்டுக்குள்

சிதைந்து போய் கிடக்கும்படி

தவறு என்ன செய்தாயடி?

தட்டி கேட்க துப்பு இல்லா

அண்ணனுக்கு தங்கச்சியாய்

தரம் கெட்ட தேசத்திலே

போராடும் தமிழச்சியாய்

பிறந்து வந்ததைத் தவிர

தவறு என்ன செய்தாயடி-வேறு

தவறு என்ன செய்தாயடி?

_________________

வாழ்ந்த எவனையும் விட

வரப்போகும் எவனையும் விட

வலிமை வாய்ந்தவன் நான்

இறந்தகாலமும்

எதிர்காலமும்

கைகுலுக்கி கொள்ளும்

நிகழ்காலத்திற்குரியவனென்பதால்.

1945-5.jpg

சுந்தரபாண்டி

அவை வெறும் வரிகள் அல்ல தோழி.

உண்மையில் நெஞ்சுருகி எழுதியதுதான் அது.

ஒரு ஆண்மகனாய் இருந்தும் என் சகோதரிகளைப்

பாதுகாக்க முடியவில்லையே என்று ஏங்கி எழுதிய வரிகள்தான் அவை.

வாழ்த்துக்கு நன்றி தோழி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

Link to comment
Share on other sites

நெஞ்சம் கனக்கிறது.

பகிர்வுக்கு நன்றி நிலாமதியக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிக்கேட்பேன் சகோதரி

என் உயிர் உள்ளவரை

தட்டிக்கேட்பேனடி

எனது பிள்ளைக்கும்

அவனது பிள்ளைக்கும்

உன்னை அழித்தவனை

இனம் காட்டிச்செல்வேனடி

Link to comment
Share on other sites

இந்திய சேவல்கள் ஏறிமிதித்த போதும்,

சட சடத்தபடி போராடிக்கொண்டிருந்த...

ஈழத்தின் காவல் குஞ்சுகள்

எங்கே போனார்கள்?

தீர்ப்பெழுதி வன் தலையெடுத்த தளபதிகள்

எங்கே போனார்கள்?

வடிந்தகுருதி மண்ணீரோடு கரைந்து,

மறுபடியும் கண்ணீராய் வருகிறதே...

உம் கதைகளை மீள நினைக்கையிலே!

எங்கே போனீர்?

சாட்சி சொல்ல சட்டம் முன்னால்...

சடலங்கள்தான் வரும்,

அதுவும் நிர்வாணமாய்...!

சங்கடங்களை தாண்டிய

கோபமொன்று... இன்னும் தீயாய் எரிகின்றது!

கண்ணீர் வேண்டாம்! செந்நீரும் உதிர்ப்போம்!

மீண்டுமொரு காலம் வரட்டும்!

மறுபடியும் பழிதீர்ப்போம்...!!!!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

*****************************************************************************************************************

இணைப்புக்கு மிக்க நன்றி அக்கா!

அந்த சகோதரனிற்கும் எம் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை தந்தமைக்கு நன்றிகள் சகோதரி :) :)

Link to comment
Share on other sites

இந்திய சேவல்கள் ஏறிமிதித்த போதும்,

சட சடத்தபடி போராடிக்கொண்டிருந்த...

ஈழத்தின் காவல் குஞ்சுகள்

எங்கே போனார்கள்?

தீர்ப்பெழுதி வன் தலையெடுத்த தளபதிகள்

எங்கே போனார்கள்?

வடிந்தகுருதி மண்ணீரோடு கரைந்து,

மறுபடியும் கண்ணீராய் வருகிறதே...

உம் கதைகளை மீள நினைக்கையிலே!

எங்கே போனீர்?

சாட்சி சொல்ல சட்டம் முன்னால்...

சடலங்கள்தான் வரும்,

அதுவும் நிர்வாணமாய்...!

சங்கடங்களை தாண்டிய

கோபமொன்று... இன்னும் தீயாய் எரிகின்றது!

கண்ணீர் வேண்டாம்! செந்நீரும் உதிர்ப்போம்!

மீண்டுமொரு காலம் வரட்டும்!

மறுபடியும் பழிதீர்ப்போம்!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

இனியொருமுறை அவலங்கள்

எங்கள் வீட்டு வாசற்படி மிதிக்காதபடி!!!!

*****************************************************************************************************************

இணைப்புக்கு மிக்க நன்றி அக்கா!

அந்த சகோதரனிற்கும் எம் நன்றியைத் தெருவித்துவிடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றியக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள்கொடி உறவுகளின்,

தூய்மையான உணர்வுகளின்,

அடையாளமாய்,

ஒரு முத்துக்குமாரன்!

புலத்துத் தமிழனின்,

பொங்கி எழுந்த உணர்வுகளின்,

புனிதச் சின்னமாய்,

ஒரு முருகதாசன்!

ஈழத்தின் பெண்கள்,

இரையாகிப் போன,

வேள்விக்கிடங்கில்.

வீழ்ந்து மடிந்த,

வீராங்கனைகளின்,

அடையாளமாய், நீ!

எங்கள் நினைவுகளில்,

என்றும் நீ,

இசைப்பிரியாவாக,

இனிய தங்கையாக,

இடம் பிடித்திருப்பாய்!

இணைப்புக்கு நன்றிகள்,நிலாமதியக்கா!>>>>

Link to comment
Share on other sites

நெஞ்சம் கனக்கிறது

நெறி கெட்ட மாந்தரின்

நடத்தையில் மனம் துவள்கிறது!

சகோதரனாய் வடித்த

வேதனையின் சாரங்கள் மிக துயரத்தைத் தருகிறது. நிஜத்தின் வார்த்தைகளில் கோர்த்த கவிதையின் இணைப்பிற்கு மிக்க நன்றி

கலாமதி அக்கா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாமதி, நிலாமதியைவிட நல்லாத்தான் இருக்கு, கல்கி! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நிலாமதி அக்கா

இவர்கள் போன்ற உறவுகள் இருக்கும் வரை

எங்கள் வலிகள் உலகம் எங்கும்

ஒலித்துக் கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சம் கனக்கிறது

இணைப்பிற்கு நன்றியக்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.