Jump to content

படித்ததும் பகிர்ந்ததும் - வீணா


Recommended Posts

  • Replies 61
  • Created
  • Last Reply

இசைஞானி இளைய ராஜா பற்றி அவரின் இரசிகர் ஒருவரினால் உருவாக்கபட்ட வீடியோ இது கேட்டு பாருங்கள் எப்பிடி இருக்கு என்று

)

****************************************************************************************************

இன்று face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க..

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!

என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது

... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு

கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்

சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது

குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...

அழுவதும்... அணைப்பதும்...

கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...

இடைகிள்ளி... நகை சொல்லி...

அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...

எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...

என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!

இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்

நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...

தேவை அறிந்து... சேவை புரிந்து...

உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...

தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...

இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்

விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?

பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்

ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ ) :(

******************************************************************************************************

.

கனடா நாட்டின் ‘இயல் விருது’ பெற்றதற்காக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு உயிர்மைப் பதிப்பகம் நடத்திய பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

சென்னைக் காமராஜர் அரங்கத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் முதல் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் 20 நிமிடத்திற்கும் மேலாக பலத்த ஆரவாரங்களுக்கிடையே ரஜினி சிறப்புரையாற்றினார். உடல் நலம் தேறிய பின் ரஜினி கலந்து கொண்டு அதிக நேரம் பேசிய விழாவாக உயிர்மை பதிப்பகத்தாரின் “எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைக் கெளரவப்படுத்தும் விழா” இருந்தது

விழாவில் ரஜினிகாந்த் பேசிய வசீகரிக்கும் உரை:

ந்த விழாவின் நாயகர் என் நண்பர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களே, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே-

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

நேற்று என் நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்தபோது, என்ன ரஜினி காலம் ரொம்ப கெட்டுப் போச்சு… பொய்யெல்லாம் சொல்லிப் பேசுவாங்க… ஆனா பொய்யா போஸ்டர்லாம் அடிக்கிறாங்களே..? ன்னு ஆரம்பிச்சார்.

அப்படியா என்ன சமாச்சாரம்?ன்னேன்.

இல்ல… ஏதோ ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு விழாவாம்… அதுல நீங்க கலந்துக்கறீங்கன்னு போஸ்டர் அடிச்சிருக்காங்க..? ன்னார்.

இல்லப்பா நான் கலந்துக்கறேன்… ன்னு சொன்னேன் நான். அவருக்கு ஆச்சர்யம்!

ஆக்சுவலா, எனக்கே இது ஆச்சர்யம். ஒரு எழுத்தாளர் என் நண்பர். அவருக்கு ஒரு பாராட்டு. அதுக்கு நான் வந்து பாராட்டறேன். அதும் இந்த மாதிரி ஒரு சபையில அப்படீங்கறது… எனக்கு சந்தோஷம்… ஆச்சர்யம், அதே நேரம் பயமும்கூட.

ஏன்னா, இந்த சபை, இதற்கு முன் நான் பார்த்த விழாக்களோ, இல்ல சபைகளோ, இல்ல சந்திச்ச கூட்டங்களோ இல்ல… அது வேற. ஆனா இங்க எல்லாமே அறிவுஜீவிகள். இங்க உட்கார்ந்த உடனே எஸ் ராமகிருஷ்ணன் வேற சொன்னாங்க. எல்லாருமே பெரிய பெரிய எழுத்தாளர்கள்லாம் வந்திருக்காங்க… மீடியாவிலிருந்து பெரிய பெரிய ஆளுங்கள்லாம் வந்திருக்காங்க. இங்க இருக்கிறவங்க பத்தில்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன். இதுக்கப்புறம் என்னமோ லாஸ்ட்ல வந்து பேச சொல்றாங்க… நான் என்னத்தப் பண்ணப்போறேன்…

(அவருக்கே உரித்தான் ஸ்டைலில் கைகளே மேலே தூக்கி விரிக்கிறார்- கூட்டம் ஆர்ப்பரிக்கிறது-விசில் பறக்கிறது)

அதில்லாம எனக்கு ஒரு வீக்னஸ் இருக்கு. இந்த பரசுராமர் கர்ணனுக்கு கொடுத்த சாபம் மாதிரி. கர்ணன் வந்து பிராமணன்னு பொய் சொல்லி வித்தைக் கத்துக்கிட்டு, அவன் சத்ரியன் தெரிஞ்சதும், பரசுராமர் கர்ணனுக்கு ஒரு சாபம் கொடுத்துடறார். மிகுந்த நெருக்கடியான நேரத்துல நான் சொல்லிக்கொடுத்த அஸ்திரங்கள் மந்திரங்கள்லாம் மறந்து போகணும் அப்டீன்னு. அந்த மாதிரி எனக்கு ஒரு சபை, மீட்டிங்ல மைக் முன்னாடி நின்னா உனக்கு தெரிஞ்ச தமிழ் வார்த்தைகள் எல்லாம் வரக்கூடாது மறந்துடனும்னு யாரோ சாபம் கொடுத்த மாதிரிதான் எனக்கு ஆயிடறது.

பேசும்போது என்னன்னு ஒரு குழப்பம்… பல லாங்குவேஜ் வேற தெரியுமா…எந்த லாங்வேஜும் சரியா தெரியாது.. ரொம்ப குழப்பமாயிடும். இது தமிழா தெலுங்கா கன்னடமா என்னான்னு தெரியாது. சரி பொதுவா இங்கிலீஷ்ல அடிச்சி விட்டுடலாம்னு நினைச்சா… அதுல கொஞ்சம் கொஞ்சம் வீக்குதான்… ஹாஹாஹா!

எனி வே… இப்போ ராமகிருஷ்ணன் வந்து எப்படி எனக்கு நண்பரானார் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால… எனக்கு உடம்பு சரியாகி, மெட்ராஸ் வந்த பிறகு, நிறையப் பேர், நம்ம முத்துராமன் சார் உள்பட, வந்து பார்க்கணும் வந்து பாக்கணுனு சொல்லும்போது, நானே வேண்டாம்னு சொன்னேன். ஏன்னா வீட்லயே உட்கார்ந்து நான் என்ன பண்ணப் போறேன். நானே வர்றேன்னு சொல்லி அவாய்ட் பண்ணேன்.அப்புறம் எதை சாக்கா வைச்சு வெளியே சுத்தமுடியும்…என்ன…

நான் குணமடைஞ்ச பிறகு நானே ராமகிருஷ்ணனுக்கு போன் பண்ணேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலிருந்தார். ஒரு முறை ரஷ்யாவில இருக்கேன்னு சொன்னார்.. ஒரு முறை ராமேஸ்வரத்தில் இருக்கேன்னார். அதுக்கப்புறம் ஒரு ஏழுநாளைக்கு முன்னால நான் சென்னையில இருக்கேன்னு சொன்னார். நான் வந்து அவர் வீட்டுக்குப் போய், அவரை பிக்கப் பண்ணிக்கிட்டு, அப்படியே சென்னையையெல்லாம் காரில் ஒரு ரவுண்ட் அடிச்சி, அரசியல், சினிமா, கலை, புத்தகங்கள்லருந்து எல்லா விஷயமும் பேசிட்டு, ராகவந்திரா மடத்துக்குப் போய் சாப்பிட்டுவிட்டு போவது வழக்கம்.

அப்ப நான் கேட்டேன், இந்த மாதிரி விருது கிடைச்சிருக்காமேன்னு. ஆமா கிடைச்சிருக்குன்னாரு. உடனே வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, ‘இவ்வளவு பெரிய விருது கிடைச்சிருக்கே, யாருக்குமே தெரியலியே அது. எப்டி அது எனக்கு தெரியாம போச்சு… எதுவும் விழா எடுக்கலையா’ன்னு கேட்டேன். ‘இல்ல இல்ல ஒண்ணும் பண்ணல.. நீங்க வந்தா செய்யறேன்’னார். நான் சரின்னு சொன்னேன். அப்டிதான் இந்த விழா நடந்தது. இதில் கலந்துகிட்டதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

ராமகிருஷ்ணனை எனக்கு பத்து வருஷம் முன்னாடி, அதாவது 2002 லன்னு நெனக்கிறேன். அப்ப வந்து பாபா படம் எடுக்கணும்னு நான் முடிவு பண்ணபோது, நானே அந்தப் படத்துக்கு கதாசிரியர். கதையை நான்தான் எழுதினேன். அதுல வந்து ஒரு சீக்வென்ஸ் இருந்தது… சொர்க்கத்தை காண்பிக்கறது. அப்கோர்ஸ், அது படத்தில இல்ல. எடுக்கல அதை. நரகத்தை வந்து விஷுவலைஸ் பண்ணலாம்… இமேஜின் பண்ணலாம். ஆனா சொர்க்கத்தை எப்படிக் காட்டறது? அது ரொம்ப கஷ்டமா இருந்தது. எழுத்தாளர் சுஜாதாகிட்ட நான் கேட்டேன். ரஜினி அது எனக்கும் கூட கஷ்டமான விஷயம்தான். ஷங்கர் கிட்ட ஒரு பையன் இருக்கான். ராமகிருஷ்ணன்னு சொல்லிட்டு. அவன் ரொம்ப அறிவாளி. நெறைய விஷயம் தெரியும், அவனை நீங்க கான்டாக்ட் பண்ணுங்கன்னார்.

Iyal-Viruthu-18-300x190.jpg

அதுக்கப்புறம் ஷங்கரை நான் மீட் பண்ணேன். ஷங்கர் சொன்னாங்க, ‘ராமகிருஷ்ணனுக்கு ரொம்ப விஷயம் தெரியும் சார். அப்படியே அள்ளி வீசுறாரு. நாமதான் எடுத்துக்கணும்’னாரு. அதன் பிறகு ராமகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினார். பேசினேன். அப்படி பேசின பிறகு, அவர் சொன்ன சில விஷயங்கள்லாம் கேட்டு நான் பிரமிச்சுப் போனேன். நான் கேள்விப்படாதது, பார்க்காதது, படிக்காததுன்னு பல விஷயங்களை அவர் சொன்னார். இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சிருக்காரேன்னு நான் ஆச்சர்யப்பட்டேன். அந்த நட்பு அப்படியே ஆழமான பிறகு, ரொம்ப பர்சனலா ஆன பிறகு, அந்த பாபா படம் ரிலீஸ் ஆகி, அதுக்கப்புறம், பாபாவிலருந்து சந்திரமுகி வரைக்கும் அது ஒரு சின்ன காலகட்டம்… என் வாழ்க்கையில அது ஒரு மறக்கமுடியாத காலம்.

எப்பவும் கஷ்டம் வரும்போதுதான் நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியும். சந்தோஷமா இருக்கும்போது ஒண்ணுமே தெரியறதில்ல. யோசிக்கிற சக்தியே துன்பங்க்கள் வரும்போதுதான் வரும். மூளைக்கு வந்து வேலை கொடுக்கற மாதிரி.

ஸோ… பாபாவிலருந்து சந்திரமுகி வரைக்கும் நடந்த சம்பவங்கள், விஷயங்கள் எனக்கே வந்து ஒரு நல்ல அனுபவம்தான். அப்ப வந்து அது கஷ்டமா இருந்தது. ஆனா பின்னாடி, நான் அதை நினைச்சி ரசிக்க ஆரம்பிச்சேன்.

அதை வந்து ஒரு தொடரா, ஒரு ஆட்டோபயாக்ரபி மாதிரி எழுதுனா எப்படியிருக்கும்னு சொல்லி அவர்கிட்ட கேட்டேன். அவரும் முயற்சி பண்றேன் சார்னார்.

ஏன்னா.. எனக்கு தமிழ் எழுத தெரியாது (அதாவது புத்தகம் எழுதுகிற அளவுக்கு இலக்கியத் தமிழ்). இங்கிலீஷ்ல அவ்வளவு ப்ளூயன்ஸி கிடையாது. கன்னடா மறந்தே போயிருச்சு, எழுதறது மறந்து போய்ட்டேன். சரி, ராமகிருஷ்ணன், நான் சொல்றேன். அதை நீங்க எழுதிட்டு வாங்க. கரெக்ஷன் பார்த்துட்டு அந்த புக்கை ரிலீஸ் பண்ணலாம்னு நினைச்சேன். இந்த புக் யாருக்கும் மனசு நோகற மாதிரியில்ல. அதாவது என்னுடைய மனநிலையில எது எப்படி இருந்ததுன்னு சொல்றதுக்காக. யாரையும் தப்பு சொல்றதுக்காக இல்ல.

திருப்பதில என் நண்பரோட பண்ணை வீட்ல ஒரு பத்துப் பனிரெண்டு நாள் நான் சொல்லி அவர் எழுதி, ஒரு பதினைஞ்சி நாளைக்கப்புறம் அதை என்கிட்ட காண்பிச்சார். மிக அருமையாக வந்திருந்தது.

ஆனா, உண்மை இருந்ததினால, சில பேருக்கு டெபனிட்லி (Definitely) அது நோகடிக்கும். ஸோ, அதை கண்டிப்பா பேப்பர்ல போட்டு, காண்ட்ராவர்சியாகி (Controversy) , அதுக்கு பதில் சொல்லி… அதனால இப்ப அது வேண்டாம். அதை அப்படியே வெச்சிட்டு, நாம கொஞ்ச நாள் கழிச்சி நேரம் வரும்போது ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டு, அந்த வேலைக்கு அவருக்கு பணம் எவ்வளவு தரலாம்னு கேட்டேன்.

உடனே அவர் நீங்க எனக்கு பணம் கொடுத்தா அவமானப்படுத்தற மாதிரி. தயவு செஞ்சி இனி அதைப்பத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டார்.

What is History? For each and every one His Story is history…

இப்ப அவர் நல்ல வசதியா இருக்காரு. ஆனா அப்போ அவர் கொஞ்சம் கஷ்டப்படற டைம். அவர் வந்து என்னைப் பாத்து, ரொம்ப ஆச்சர்யப்பட்டாரு. இவ்வளவு பேரு, பணம், புகழ் இருந்தும் எளிமையா இருக்காரேன்னு சொல்லி. நான் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். வசதி இல்லேன்னாலும் ஒரு குடும்பம் இருந்தும் கூட, அதைப் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம, எழுத்து எழுத்து எழுத்து, படிக்கிறது எந்த விஷயமா இருந்தாலும் – அவர் கூட நான் திருப்பதி போயிருக்கேன், கர்நாடகா போயிருக்கேன், ஆந்திரா போயிருக்கேன், நிறைய இடங்கள்ல சுத்தியிருக்கேன்.

அவர் பார்க்கறது.. அந்த த்ருஷ்டி… யதா த்ருஷ்டி ததா சிருஷ்டின்னு சொல்லுவாங்க… கம்ப்ளீட்டா.. ஒருத்தர பாக்கும்போது, ஹிஸ் ஸ்டோரி ஈஸ் எ ஹிஸ்டரி. ஹிஸ்டரின்னா ஹிஸ் ஸ்டோரி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஹிஸ்டரி இருக்கு.

ஒருத்தரப் பாக்கும்போது, அவர் தொடர்பான சம்பவங்கள் இப்படி இருக்கலாம்… இவன் ஏன் இப்படி சைலன்டா இருக்கான்… சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கதையா பண்றார். வாழ்க்கையை அப்படியே ரசிக்கிறார், ஒரு மூணு வயசு குழந்தை மாதிரி.

அந்த ‘ஓ’ என்கிற ஆச்சர்யமிருக்கே… வயசான பிறகு நமக்கு எல்லாமே மரத்துப்போகுது. இதானே எல்லாமே பாத்துட்டோம்… எல்லாமே தெரிஞ்சிக்கிட்டோம்னு லைப்பே போரடிச்சிப் போகுது. பட் But, அவருக்கு சின்னச் சின்ன விஷயம் கூட அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அவரால வந்து ரசிக்க முடியுது. அந்த ரசிக்கிறத அப்டியே அழகாக பேனா மூலம் பேப்பரில் எழுத முடிகிறது. இமாஜின் விஷுவலைஸ் பண்ண முடிகிறது. நல்ல விஷயங்களை புதுசு புதுசா தமிழ் மக்களுக்கு கொடுக்கணுங்கற ஆர்வம் இருக்கு.

தாஸ்தாயேவ்ஸ்கியிருந்து, ஷேக்ஸ்பியரிலிருந்து, ப்ரெஞ்சில் பெரிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கார். எத்தனை பேர் படிச்சிருக்கீங்களோ தெரியாது. நிஜமா சொல்றேன்.. இந்த யங்க்ஸடர்ஸுக்கு அது நல்ல விஷயம்.

நான் படிக்காதவன்… ஆனா நிறையப்புத்தகங்களைப் படிச்சவன்!

நான் எஸ்எஸ்எல்சிதான். எகனாமிக், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேதமேடிக்ஸ் படிச்சதெல்லாம் கம்மிதான். ஆனா எனக்கு படிப்பு (புத்தகம் வாசித்தல்) ரொம்ப ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்கு. இப்பவும் ஹெல்ப் பண்ணிட்டிருக்கு. கண்டிப்பா இளைஞர்கள் படிக்கணும். இப்ப அந்த புத்தக கண்காட்சியில வருஷா வருஷம் விற்பனை அதிகமாகி, நிறைய பேர் வர்றாங்கன்ணு கேள்விப்பட்டப்போ, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரியலி…

பாட்டில் சத்தத்தைவிட புத்தகங்கள் பிரிக்கப்படும் போது வந்த சத்தம் என்னை யோசிக்க வைத்தது.

ஒரு பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி டொமஸ்டிக் ப்ளைட்ல (Domestic Flight) மது அருந்தறது – இப்ப கட் பண்ணிட்டாங்க – இருந்தப்போ, நைட் பத்துமணிக்கு மேல டேக் ஆப் ஆனதும், நீங்க ரிலாக்ஸ் ஆகலாம்னு சொன்ன உடனே, எல்லாம் டக் டக்னு சவுண்ட் வரும். எல்லாம் பாட்டிலு, சோடாதான் எடுப்பாங்க.

ஏர் ஹோஸ்டஸ்கள் ஐஸ், கிளாஸுன்னு பிஸியா போயிட்டே இருப்பாங்க. அதே பாரின்ல (Foreign) பாத்திங்கன்னா டக் டக்குன்னு சத்தம் வரும்… புத்தகங்களை எடுப்பாங்க. படிக்கிறதுக்கு சிந்திக்கிறதுக்கு புத்தகங்களை எடுப்பாங்க.

புத்தகங்கள் எப்படின்னா… இப்போ விஷுவலைஸா நீங்க பாத்தீங்கன்னா, ஒரு டைரக்டர் ஒரு பிக்சரை காண்பிக்கிறார்னா, அந்த டைரக்டர் அவர் பார்வையில் அதை எப்படி விஸுவலைஸ் பண்ணாரோ அதைத்தான் நீங்க பார்க்க முடியும். ஆனா, நீங்க விஷுவலைஸ் பண்ண ஆரம்பிச்சிங்கன்னா.. நீங்களே ஒவ்வொரு காட்சியையும் உங்க மனசுக்குள்ள படமாகப் பார்க்க முடியும். படிக்கிறதுல அவ்வளவு சுகம், ஆனந்தம் இருக்கு.

(திடீரென்று, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற தலைப்புக்குச் சென்றவர்…)

ஒரு பெரிய விஞ்ஞானி டிரயின்ல போய்கிட்டு இருக்கார்…அவருக்கு எதிரில் ஒருவர் பைபிள் படிச்சுக்கிட்டே வர்றார்… அந்த விஞ்ஞானி பைபிள் படிப்பவரிடம், “ விஞ்ஞானத்தை நம்பாம கடவுள் பைபிள்ன்னு படிச்சி காலத்தை வீணாக்குகிறீர்களே..” அப்படி இப்படி என்று பேசிக்கொண்டே வர இறங்க வேண்டிய நிலையம் வந்தாச்சு.. சரி இது என்னோட விசிட்டிங் கார்ட் உங்களுக்கு பிரயோஜனமா ஏதாவது பண்ணனும்னா என்னை வந்த பாருங்க உங்க கார்ட் எதாவது இருக்கா என்று சொல்ல…பைபிள் படித்தவர் ஒரு கார்டினைக்கொடுக்க வாங்கிப்பார்த்த விஞ்ஞானிக்கு அதிர்ச்சி… அதில் தாம்ஸ் ஆல்வா எடிசன்ல போட்டிருக்கு… அப்படியே உறைஞ்சு போனவர் நான் உங்களை வந்து ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று கேட்க… சரி ஒரு நாள் வாங்க என்று எடிசன் சொல்ல.. அவரும் இன்னொரு நாள் எடிசனோட லேப் (Lab) க்குச் செல்கிறார். உள்ளே ஒரு பிரமாண்டமான கண்டுபிடிப்பு… அது எப்படி சாத்தியம் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்க… ஒரு நாள் கதவைத் திறந்தேன்… அதுவா தோன்றியது… என்று எடிசன் சொல்ல வந்த விஞ்ஞானிகு ஒரே குழப்பம்… “வானத்துல எரிகல் தோன்றியது புதிதா ஒரு கிரகம் தோன்றியது என்று நீங்கள் சொல்கிறீர்களே அதேபோல் இந்த கண்டுபிடிப்பும் தானே தோன்றியிருக்கக் கூடாதா…? என்று எடிசன் கேட்கிறார்…

இவற்றில் இருந்து என்ன தெரிகிறது என்றால்… படைத்தவை என்று இருக்கிறதென்றால் படைத்தவனும் இருக்கான்..ஹா ஹா

(அரங்கம் விசில்-கைதட்டல்களால் அதிருகிறது)

இவ்வளவு ஏன் நம்ம கண்ணதாசனை எடுத்துக் கொள்வோம்…கம்பராமாயணத்தை தீயிட்டுக் கொளுத்தப் போகும் போதுகிடைத்த கொஞ்ச நேரத்தில் சரி அதைப் படித்துதான் பார்ப்போமே அப்படி என்ன இருக்குன்னு… என்று படிக்க ஆரம்பித்த கண்ணதாசன் முழுதும் படிக்க… படித்து முடித்தவுடன் அந்தப் புத்தகத்திற்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நாத்திகராக இருந்த கண்ணதாசன் அதன்பின் ஆத்திகரான கதை நமக்கெல்லாம் தெரியும்…

சுவாமி விவேகானந்தரைப் பற்றி..

நரேந்திரன்.. சுவாமி விவேகானந்தா… ஒரே ஒரு ஸ்பீச்.. அவருடைய ஒரே ஒரு ஸ்பீச் அப்படியே உலகத்தையே மாத்திடுச்சி. அதன் பிறகுதான் கல்கத்தாவில் அவருக்கு மரியாதையே வந்தது. எப்படி ரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு வந்த பிறகுதான் கல்கத்தாவிலேயே அவரை அடையாளம் கண்டுகொண்டார்களோ அப்படி…

அந்த மாதிரி இப்ப கனடாவிலிருந்து அவார்ட் கொடுத்திருக்காங்க. நிஜமா மிக மிக சந்தோஷமான விஷயம். ராமகிருஷ்ணனுக்கு இன்னும் வயதிருக்கிறது. இன்னும் அவர் நிறைய எழுதி தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்க வாழ்த்துகள்…அத்தோடு ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் … நிறையப் படியுங்க… அதற்கு நிறையப் புத்தகங்கள் வாங்குங்க… எழுத்தாளர்களை வாழவைங்க… அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வந்தார்களானால் நிம்மதியான-அதிகமாக-புதுமையாகச் சிந்திப்பார்கள்…அதன் மூலம் நமக்குப் புதிய படைப்புகள் கிடைக்கும்…

.நன்றி..

**************************************************************************************************************************

via http://www.mysixer.com, face book,

Link to comment
Share on other sites

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி

408931_303660016336535_100000776168716_745914_1497900112_n.jpg

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ...),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு

என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada

20-29: In-Store Functions

30-37: France

40-44: Germany

45: Japan (also 49)

46: Russian Federation

471: Taiwan

474: Estonia

475: Latvia

477: Lithuania

479: Sri Lanka

480: Philippines

482: Ukraine

484: Moldova

485: Armenia

486: Georgia

487: Kazakhstan

489: Hong Kong

49: Japan (JAN-13)

50: United Kingdom

520: Greece

528: Lebanon

529: Cyprus

531: Macedonia

535: Malta

539: Ireland

54: Belgium & Luxembourg

560: Portugal

569: Iceland

57: Denmark

590: Poland

594: Romania

599: Hungary

600 & 601: South Africa

609: Mauritius

611: Morocco

613: Algeria

619: Tunisia

622: Egypt

625: Jordan

626: Iran

64: Finland

690-692: China

70: Norway

729: Israel

73: Sweden

740: Guatemala

741: El Salvador

742: Honduras

743: Nicaragua

744: Costa Rica

746: Dominican Republic

750: Mexico

759: Venezuela

76: Switzerland

770: Colombia

773: Uruguay

775: Peru

777: Bolivia

779: Argentina

780: Chile

784: Paraguay

785: Peru

786: Ecuador

789: Brazil

80 – 83: Italy

84: Spain

850: Cuba

858: Slovakia

859: Czech Republic

860: Yugoslavia

869: Turkey

87: Netherlands

880: South Korea

885: Thailand

888: Singapore

890: India

893: Vietnam

899: Indonesia

90 & 91: Austria

93: Australia

94: New Zealand

955: Malaysia

977: International Standard Serial Number for Periodicals (ISSN)

978: International Standard Book Numbering (ISBN)

979: International Standard Music Number (ISMN)

980: Refund receipts

981 & 982: Common Currency Coupons

99: Coupons

*******************************************************************************************************

3.jpg

மேலே உள்ள படத்திலிருப்பவரின் பெயர் கிரேய் லெவிஸ். 55 வயதான அவருக்கு இதயநோய் காரணமாய் உயிரிழக்கும் தருணத்திற்கு வந்துவிட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அகற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய 'contunuos flos' எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தினர். இதயத்தை போன்று இந்த உபகரணம் துடிப்பதில்லை.

5.jpg

ஆனால் இதயம் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறது. இந்த முயற்சி வெற்றியளித்ததுடன், சிகிச்சை முடித்த அடுத்த நாளே குறித்த நபர் மருத்துவர்களின் பேசக்கூடியளவு போதிய உடல் நலம் பெற்றார். கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த ஆப்பரேஷனை செய்திருக்கிறார்கள்.

4.jpg

முதல் முயற்சியாக காளை மாடு மீது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மனிதனிடமும் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் இதயமில்லாது நடமாடும் முதன் மனிதன் எனும் பெயரை கிரேய் லெவிஸ் எனும் அந்நபர் பெற்றுள்ளார்.

*********************************************

பார்த்ததில் பிடிச்ச காணொளி

http://www.youtube.c...&v=qkHdmLRGQk8#!

***********************************************************************************

எப்பொழுதெல்லாம் வாழ்க்கையில் சலிப்பு வருகிறதோ...அப்பொழுதெல்லாம் இந்த வீடியோவைப் பாருங்கள்!

************************************************************************************

படித்ததில் பகிரும் பயனுள்ள விஷயங்கள்.

WARREN BUFFET (World 's Richest Man ) Shares his Lessons as-

EARNINGS: Never depend on a Single Income. Make Investment to Create a Second Source.

SPENDING: If you buy things you do not need, soon u wil Have to Sell things you need.

SAVINGS: Don't save what is left after spending but spend what is left After Savings.

TAKING RISK: Never test the. Depth of the river with Both Feet.

INVESTMENT: Dont put all your Eggs in Single basket.

யூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்

http://www.listentoyoutube.com/

via facebook, twitter., cablesangarblogspot.com

Link to comment
Share on other sites

424402_290513557678638_100001599881709_785173_36644748_n.jpg

இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் கொடியை நாட்டிய ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார...்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! .

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது ,இதை நிர்வகிப்பவர் " கனாதிபதி " . . "கன்னி" (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்) ,இதை நிர்வகிப்பவர் உயரிய "கலபதி", "கன்னி" என்பது தமிழில் "பொறி" என்று கூட பொருள் படும் ,இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து ( எலி பொறியில் சிக்குவதைப்போல ) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் ! .அடுத்து "ஜதளம்" சுருக்கமாக "தளம்" (நிரந்தரப்போர் பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "ஜலதலதிபதி",இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. "மண்டலம்" (பாதி நிரந்தர போர்ப்பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "மண்டலாதிபதி" இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும் , இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள் ! ."கனம்" (நிரந்தர பிரிவு ) 100 முதல்150 கப்பல்கள் கொண்ட பிரிவு , மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம் ! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது !."அணி" இதை நிர்வகிப்பவர் 'அணிபதி" மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது ! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது. "பிரிவு" மிக முக்கியமான பிரிவு இது , இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் " கீழ்பிரிவு-அதிபதி / தேவர் " என்று அழைத்தனர் .இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது,உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று. இந்த கப்பல் பட்டையை வைத்து தான் "இலங்கை","இந்தோனேசியா","ஜாவா","மாலைதீவு",மலேசியா",சிங்கப்பூர் " போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான் ! .இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன் ! .இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம் !! இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் " NAVY " என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் !! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும்

******************************

மனதை நெருடிய கவிதை...

கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்த்துவன்.

நெற்றியில் பட்டை இட்டால் இந்து.

தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.

ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.

கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்.

இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே.!!!

எதனை இட்டுக் கொண்டால், அணிந்து கொண்டால்

நீங்கள் 'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் ...

**********************************************

சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பிரகாஷ் ராஜின் தோணி பட இசைவெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது..அதில் பாடலாசிரியர் நா முத்துகுமார் ஆற்றிய உரை

இசைஞானி அவர்களுக்காக முதல்முறையாக நான் தோணி திரைப்படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஜூலி கணபதி படத்துக்காகத்தான் அவரை நான் முதல் முறையாக என் குருநாதர் பாலுமகேந்திராவுடன் சந்தித்தேன். அந்த சந்திப்பு மறக்க முடியாதது. ஒரு பரீட்சை எழுதப்போகும் மாணவனின் பதைப்புடன் அவர் அறைக்குச் சென்றேன்.

எனக்குத் தந்த மெட்டுக்கு...

‘எனக்குப் பிடித்தப் பாட்டு அது உனக்குப் பிடிக்குமே

என் மனது போகும் வழியை உன் மனது அறியுமே

எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’

என்ற பல்லவியை அவருக்குக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு ‘நன்றாயிருக்கிறது பல்லவி..! ஒரு சின்ன திருத்தம் செய்யலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாக ஐயா’ என்று சொன்னேன்.

‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’ என்ற வரியை ‘என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே’ என்று மாற்றினால் அர்த்தம் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார். நான் எழுதிய வரிகளை விட பத்துமடங்கு சிறப்பாக இருக்கிறது என்று பரவசப்பட்டுப் போனேன்.

அன்று எனக்கு ஒன்று புரிந்தது. பாடலில் திருத்தம் என்பது சிதைப்பது அல்ல; செதுக்குவது என்று. அதன் பின்னர் நிறைய பாடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறை அவர் அறைக்குள் நுழையும்போதும் என் கைகால்கள் நடுங்கத் துவங்கும்.

அவர் எப்போதும் என்னை அமரவைத்து, நகைச்சுவையாகப் பேசி என்னை இயல்புக்குக் கொண்டுவருவார். ஒவ்வொரு முறை பாடல் எழுதும்போதும் அவரிடம் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக்கொள்வேன். எப்படி எளிமையாக எழுத வேண்டும்… எப்படி மக்களுக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும்… போன்ற பல விஷயங்களை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.

‘தோணி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்கு "முத்துக்குமாரையும் கூட்டி வாருங்களேன்," என்று சொல்லியனுப்பியிருந்தார். போயிருந்தேன். அது ஒரு பரவச அனுபவம். முதல் முறை அவருடன் கம்போசிங்கில். ஒரு முக்கால் மணி நேரத்தில் வரிசையாக 5 டியூன்களைப் போடுகிறார். நான் கண்களை மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடவுளிடம் நேரடியாகப் பேசுபவர்கள் குழந்தைகளும் இசைக் கலைஞர்களும் என்று சொல்வார்கள். அந்த தருணத்தில் அதை நான் கண்டுகொண்டேன்.

என் மகனுக்கு தினமும் கண்ணே கலைமானே...

இன்றைக்கும் நான் இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை. என் மகனுக்கு நான் தினமும் பாடும் தாலாட்டு ‘கண்ணே கலைமானே’ பாடல்தான். ஒரு பாடலாசிரியராக என்னுடைய குருவாக அவரை நினைக்கிறேன். ஒரு சில பாடல்களே அவர் திரைப்படத்திற்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு இன்றைக்கும் நான் ரசிகன். அழகி திரைப்படத்தில் எழுதியிருப்பார்…

"கோயில் மணிய யாரு ஏத்துறா?

தூண்டா வெளக்க யாரு ஏத்துறா ?

ஒரு போதும் அணையாம நின்று எரியணும்..”

அதே படத்தின் வேறொரு பாடலில்...

“இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு

இன்னும் இருப்பது எதற்கு?

ஒளி தொடங்கிடும் கிழக்கு

உண்டு பொதுவினில் ஒரு விளக்கு”

இதை எந்தக் கவிஞனும் எழுதி விடலாம். ஆனால் அதன்பின்னர் வரும் 'ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை' என்ற வரிகள் அத்தனை சிறப்பானவை. அதே போல நாடோடித் தென்றல் படத்தில்,

'யாரும் விளையாடும் தோட்டம்

தினந்தோறும் ஆட்டம் பாட்டம்

போட்டாலும் பொறுத்துக் கொண்டு

பொன்னு தரும் பூமி இந்த மண்ணு நம்ம சாமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு

ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு'

என்ற வரிகள். இந்த பூமியை, மண்ணை அவர் நேசிக்கும் அழகை அத்தனை அற்புதமாக்ச சொல்லியிருப்பார்.

நான் சிறுவயதில் தாயை இழந்தவன். அந்தத் தனிமை எப்போதும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் ஒரு பாடல் கேட்டேன்.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..!

அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே..!

தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு

இந்த வரிகளைக் கேட்டவுடன் அவரின் இசைக் கரங்களை நான் பிடித்துக்கொண்டேன். அதன் பின்னர் வரும்,

தாய் இழந்த துன்பம் போலே

துன்பம் அது ஒன்றுமில்லை

பூமி என்ற தாயும் உண்டு

வானம் என்ற தந்தை உண்டு

நீங்கிடாத சொந்தம் என்று

நீரும் காற்றும் எங்கும் உண்டு

என்ற வரிகள் எனக்கு தன்னம்பிக்கை அளித்தன. அன்று பிடித்த அவரின் இசைக் கரங்களை இன்றுவரை நான் விடவில்லை," என்றார்.

**************************************************************************************

பிரகாஷ் ராஜ் இன் தனி பட்ட வாழ்கையை தவிர்த்து ஒரு நடிகர் ஆக கலைஞர் ஆக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இயக்கி நடிச்சு இருக்கும் படம் தோணி இந்த வாரம் வெளி ஆகி இருக்கு நல்ல படம் என பாராட்டையும் பெற்றுள்ளது

நடிகர் பிரகாஷ்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்தி பார்த்தால் அவர் மீது பலருக்கும் பலவித விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவரது டூயட் மூவிஸின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானவை என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் இந்தப் படமும் நிச்சயமாகப் பேசப்படக் கூடியது.

பல ஆண்டுகளாக நான் மறந்து போயிருந்த என் வாழ்க்கை நினைவுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது இப்படம். எனக்கு மட்டுமல்ல.. படம் பார்க்கும் அனைவருக்குமே நிச்சயமாக இதுவொரு ஆட்டோகிராபாகத்தான் இருக்கும்..!

2010-ல் வெளிவந்த மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மராத்தி மொழிப் படமான Shikshanachya Aaicha Gho -வின் தழுவல்தான் இப்படம்..!

சப் ரிஜிஸ்தர்ர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கும் சுப்பு என்னும் பிரகாஷ்ராஜ் மனைவியை இழந்தவர். 9-ம் வகுப்பு படிக்கும் பையனும், 7-ம் வகுப்பு படிக்கும் பெண்ணும் உண்டு. சம்பளத்திற்கு மட்டுமே கை நீட்டும் பழக்கம் கொண்ட சுப்பு, அதற்கு மேல் நியாயமான முறையில் சம்பாதிக்க விரும்பி வீட்டிலேயே ஊறுகாய் தயாரித்து அதனையும் விற்பனை செய்து வருகிறார்.

தானே சமையல் செய்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து, மாலையில் மீண்டும் சமையல் செய்து அக்மார்க் பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருந்துவரும் அவருக்கு ஒரே பிரச்சினை அவருடைய பையன் கார்த்திக்குதான். தோனி மீது பைத்தியம் பிடித்தாற்போல் இருக்கும் அவரது பையன் கார்த்திக் படிப்பில் மக்காக இருந்தாலும், கிரிக்கெட்டில் புலியாக இருக்கிறான். அந்தப் பள்ளியோ பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்வுகளைக் காண்பிக்க வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் நிர்வாகிகளைக் கொண்டது.

கார்த்திக் கணிதத்தில் ஆர்வம் இல்லாமலும், மண்டையில் ஏறவில்லை என்றும் சொல்லி அதில் தோல்வியடைந்து கொண்டே வர, கடைசி மாதாந்திர தேர்விலும் அவன் தோல்வியடைகிறான். 9ம் வகுப்பில் அவனுக்கு பாஸ் போட முடியாது என்று பள்ளி நிர்வாகம் உறுதியுடன் சொல்லிவிட, கிரிக்கெட் மீதான அவனது பைத்தியத்தைக் கண்டு கோபமடையும் பிரகாஷ்ராஜ் கார்த்திக்கை தாக்கிவிடுகிறார். அந்தத் தாக்குதல் கோரமாகி, கார்த்திக்கை மரணப் படுக்கையில் போட்டுவிடுகிறது..! துயரத்திலும், துயரமாக தனது பையனை மீட்கப் போராடும் ஒரு அக்மார்க் மிடில் கிளாஸ் மாதவனின் கதைதான் மீதிக் கதை..!

கதை தேர்விலும், இயக்கத்திலும் செஞ்சுரி அடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். சிற்சில இடங்களில் அவருடைய அழுகையும், செயலும் ஓவர் ஆக்டிங்கோ என்று சொல்லவும் வைக்கிறது. பிள்ளைகளிடம் கெஞ்சல், பாச உணர்ச்சி, பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் போராட்டம், கிரிக்கெட் கோச் நாசரிடம் தோழமையுணர்வு, நீயா நானாவில் தனது கருத்தை, தனது மன அழுத்த்த்தை பகிரங்கமாக பதிவு செய்தல், அலுவலகத்தில் சிரித்த முகம், கந்து வட்டிக்காரனிடம் பயப்படுதல், முதல்வரை சந்திக்க முனைப்பு காட்டி சாதித்தல்.. என்று அத்தனையிலும் பிரகாஷ்ராஜே சாதித்திருக்கிறார். மனிதரின் நடிப்புத் திறனை பற்றி யாருக்கும் சந்தேகமில்லை என்பதால் இப்படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பது அவரது நடிப்பும், இயக்கமும்தான்..!

'ரத்தச் சரித்திரம்' படத்தில் விவேக் ஓபராய் மனைவியாக நடித்து நம் கண்களை கொள்ளை கொண்ட ராதிகா ஆப்தேயை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரகாஷ். அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் திடுக்கிட வைத்தது. ஆனாலும் அவரது செயலுக்கு நியாய, காரண காரியங்களை அடுத்தடுத்து திரைக்கதையில் சாமர்த்தியமாக திணித்திருக்கிறார். பாராட்டுக்கள்..! இவருடைய சிரிப்பு அபாரம்தான்.. போட்டோஜெனிக் முகம்..! அசத்தல்..! அதிகம் நடிப்புக்கு இடமில்லை என்பதால் அடுத்து யாராவது முழுமையாக நடிக்க வைப்பார்கள் என்று நம்புவோமாக..!

கந்துவட்டிக்காரரின் திடீர் ஸ்டண்ட்டும், அதனால் விளையும் நன்மையுமாக பிரகாஷ்ராஜுக்குக் கிடைக்கும் அந்தப் பாசத்தையும் கச்சிதமாக அளித்திருக்கிறார் அவர். திரையுலகத்துக்குப் புதுமுகமா அவர்..? பாராட்டுக்கள்..! இன்னும் எத்தனை படங்களில்தான் பிரம்மானந்தம் இதே கேரக்டரில் நடிக்கப் போகிறார்..? தெலுங்கிலேயே 50 படங்களில் நடித்திருப்பார். கதைக்கு உதவாது என்றாலும், தெலுங்கிலுகில் படத்திற்கு ஒரு விளம்பரமாக இணைக்கப்பட்டிருக்கிறார்..!

கார்த்திக்காக நடித்த சிறுவன் ஆகாஷ்பூரி இடைவேளைக்கு பின்பு கோமா ஸ்டேஜில் இருக்கும்போது எப்படித்தான் நடித்தானோ தெரியவில்லை.. பொதுவாக இவன் வயதுக்கார்ர்களால் இது போன்ற காட்சிகளில் ஒன்றிப் போய் நடிக்க இயலாது. ஆனால் பையன் பின்னியிருக்கிறான். கணிதம் வரவில்லையே என்று தங்கை திட்டும்போது தோனியின் கிரிக்கெட் வரலாற்றையே எடுத்துவிடும் காட்சியில் என்னை மறந்து கை தட்டினேன்..!

பள்ளியில் கார்த்திக்கின் லாக்கரை திறந்து பார்த்துவிட்டு பிரகாஷ்ராஜின் அந்த ஆக்சன், தொடர்ச்சியான காட்சிகளின் வேகம் செம பரபரப்பு..! ஹிஸ்டரி டீச்சர் ஹேமாவிடம் அவர் கேட்கும் கேள்வியும், கிடைக்கப் பெறாத பதில்களும்தான் இப்படத்தின் முக்கிய காட்சி. இதில்தான் நாம் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் கல்வித் துறை பற்றிய கொள்கை அடங்கியிருக்கிறது.

பாடங்களை வெறுமனே மனனம் செய்து பரீட்சை எழுதி ரேங்க் எடுத்து தேர்வு செய்து சர்டிபிகேட்டை வாங்கி வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வதுதான் லட்சியமா..? அல்லது படிப்பு இல்லாமல் வேறு திறமையை வைத்து வாழ்க்கையில் உயர விரும்புவது தவறா..? இதில் அந்தப் பள்ளிகளின் சுயநலத்தன்மையையும் சுட்டிக் காட்டியுள்ளார் பிரகாஷ். பையன் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.. பிளேயராக இருந்தாலும் கவலையில்லை. நூறு சதவிகிதம் தேர்ச்சி மட்டுமே எங்களது குறிக்கோள் என்று சொல்லும் பள்ளிகளை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் பிரகாஷ். பதில் சொல்லத்தான் யாருமில்லை..!

இதே கேள்வியைத்தான் இறுதியில் முதல்வரிடமும் கேட்கிறார். கொஞ்சம், கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும் என்கிறார் அவர். ஆனால் நிச்சயமாக மாற்ற மாட்டார்கள்..! நேர்மையாக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் அது கிடைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதிக்கும் அளவுக்கு படிப்பாற்றல் வேண்டும். அவ்வளவுதான். இது ஒன்றை மையமாக வைத்துதான் தமிழ்நாட்டில் இத்தனை பொறியியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. இவைகள் நல்ல மாணவர்களை உருவாக்கியிருக்கலாம்.. ஆனால் தரம் குறைந்த கல்லூரிகளில் இருந்து வெளிவந்திருக்கும் குறைவான சதவிகித்த்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் உயரத்தைத் தொட முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள்..!

விளையாட்டு சோறு போடாது என்றாலும், அது ஒரு தனி திறமை. அதனை வளர்த்துக் கொள்ள குழந்தைகளுக்கு நாம் அனுமதியளிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ். ஆனால் இது எத்தனை பேருக்கு பிடிக்கும் என்றுதான் தெரியவில்லை. யதார்த்த நிலைமை தனது அண்டை வீட்டாரைவிட, தனது உறவினர் குழந்தைகளைவிட தன் குழந்தை நன்கு படித்து, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். அடுத்த டோனியாக, யுவராஜ்சிங்காக, சேவாக்காக வளர எந்தப் பெற்றோரும் அனுமதியளிப்பதில்லை..! ஏன் கூடாது..? அவன் போக்கிலேயே விடுவோமே என்கிறார் பிரகாஷ்..!

பிரபல பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் வசனங்களை ஈர்ப்பாய் எழுதியிருக்கிறார். “இந்த டோனி, சச்சின், சேவாக் இவனுகளையெல்லாம் மொத்தமா நாடு கடத்திரணும் ஸார்..” என்ற பிரகாஷின் வெறுப்பான ஆசைக்கு தியேட்டரில் என்ன கை தட்டல் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் இப்படி ஒவ்வொரு அப்பனும் நாட்டில் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதையும் மறுப்பதற்கில்லை..! “இனிமே பிள்ளைக போடுற ஜட்டியகூட ஸ்கூல் கலர்ல போடச் சொல்வானுங்க போலிருக்கு..” என்ற வரியில் இருக்கும் நக்கல் நாடு தழுவியது..! போகிறபோக்கில் ராதிகாவிடம் டேட் ஊறுகாய் செய்து தருவதாகச் சொல்வதும், அதற்கு ராதிகாவின் ரியாக்ஷனும் அசத்தல்..!

இளையராஜாவின் இசை என்றார்கள். வாங்கும் பணத்துக்கும் பாடலுக்கு மட்டுமே இசை தெரிகிறது..! அதிலும் பிரபுதேவா சம்பளம் வாங்காமல் நட்புக்காக ஆடிக் கொடுத்திருக்கிறார். அதிகம் வெளியூரெல்லாம் பறக்காமல் பாண்டிச்சேரியிலேயே பாதி படத்தை முடித்திருக்கிறார்கள். வாழ்க..!

இந்தப் படத்தை பார்த்துவிட்டு அந்தத் தாக்கத்துடன் இருந்த வேளையில் இன்று காலை சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியரை மாணவரொருவன் குத்திக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. காரணம், படிப்பு டார்ச்சர். பையனுக்குப் பிடிக்கவில்லை. பெற்றோர்களிடம் சொல்லி மாட்டிவிட்டாரே என்கிற கோபம்..! இதில் யாரைக் குற்றம் சொல்வது..? பையனையா..? ஆசிரியையா..?

ஒவ்வொருவரும் அவரவர் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது..! எந்தப் படிப்பு வரவில்லையோ அதனை வேண்டா வெறுப்பாகவே இருந்தாலும் படித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தைத்தான் இப்போதைய கல்வி முறை நமக்குள் புகுத்தி வருகிறது.. இந்த முறை நிச்சயமாக மாற வேண்டும்..!

அதற்கான துவக்கத்தை முதன்முதலில் ஒரு திரைப்படம் மூலமாக நமக்குள் உருவாக்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். தழுவலான படம் என்றாலும்கூட, இந்த நேரத்தில், தனது பொன்னான நேரத்தை கைவிட்டு, தனது சொந்தப் பணத்தில் இப்படியொரு படத்தை எடுத்துத் தந்திருக்கும் அவருக்கு எனது அன்பான வணக்கங்கள். ஹாட்ஸ் அப் பிரகாஷ் அண்ணே..!

தோனி - அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!

VIA.....thatstamil.com,truetamilanblogspot.com,facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா, நீங்கள் படித்தை எம்முடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி :) .

மோலோட்டமாக :rolleyes: வாசித்ததில், அருமையான பதிவுகளாக உள்ளது.learning.gif

நேரம் கிடைக்கும் போது.. ஆழ்ந்து, வாசிக்கக் கூடிய மாதிரியான சஞ்சிகை இது. reading05.gif

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

KODAK எனும் சகாப்தம் அதன் முடிவை நோக்கி....

ஜனவரி 19, 2012 நாள் கொடாக் (Kodak)நிறுவனம் ஒரு அதிர்ச்சியை உலகத்தாருக்கு கொடுத்தது. அந்நிறுவனம் 950 மில்லியன் டாலர், வங்கி பாதுகாப்பு கேட்டு கொடுத்த (bankruptcy protection) நோட்டிஸ் தான் அந்த அதிர்ச்சி. அது கொடாக் நிறுவனத்திற்கு மட்டுமான துயரம் இல்லை. உலகத்தின் பெருவாரியான புகைப்படக்காரர்களின் துயரம் கூட.

1880-இல் துவங்கப்பட்ட கொடாக் நிறுவனம், நூற்றாண்டு கடந்தும் பல புகைப்படக்காரர்களின் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. சொல்லப்போனால் பல புகைப்படக்காரர்களை உருவாக்கியதே அதுதான் எனலாம். புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே கொடாக் தான். அது கண்டுபிடித்த படச்சுருள் தான் புகைப்படம் பிடித்தலை உலகத்தாரிடையே பரப்பியது, அதிகரித்தது.

முதல் படச்சுருள் , முதல் கேமரா, முதல் டிஜிட்டல் கேமரா என அது கண்டுபிடித்த பல 'முதல்'கள் உலகெங்கும் பிரபலமாகியன. புகைப்படம் பிடித்தலை எல்லாருக்குமானதாக மாற்றி காட்டியது அதன் பெரும் சாதனை .

1920s-A-girl-taking-a-pho-018.jpg

ஒரு வகையில் எல்லாருடைய வாழ்க்கையிலும் கொடாக் சம்பந்தப்பட்டிருக்கிறது. சிறுவயதிலிருந்து நாம் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவை கண்டிப்பாக கொடாக் படச்சுருளைப் பயன்படுத்தி( பெரும்பாலும்) எடுக்கப்பட்டவைகளாகத்தான் இருக்கும். புகைப்படம் என்பதை சாமானியனுக்கும் உரியதாக மாற்றிக் காட்டியது கொடாக் தான்.

'Eastman Kodak Company' என்னும் கொடாக் நிறுவனம் 1880-இல் 'ஜியார்ஜி ஈஸ்ட்மேன்' (George Eastman) என்பரால் நிறுவப்பட்டது. வடஅமெரிக்காவின் நியுயார்க் நகரை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டது. பல ஆயிரம் ஊழியார்களையும் பல கோடி பயனாலார்களையும் கொண்டது.

1885-இல் 'roll of Eastman’s photo plates'-ஐ கண்டுபிடித்ததிலிருந்து பல நிலைகளை கடந்து 1889-இல் மக்கள் பயன்பாட்டிற்கான படச்சுருளை அந்நிறுவனம் தயாரிக்கத் துவங்கியது. அப்படச்சுருள் தான் திரைப்படம் என்னும் கலை உருவாக காரணமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

east-ed-640x520.jpg

எடிசனும் (Thomas Edison) அவரின் 'Kinetoscope' என்னும் கருவியும், கொடாக்கின் படச்சுருளும் சேர்ந்து திரைப்படம் என்னும் கலையை/துறையை உருவாக்கியது என்பது தனிக் கதை .

'kodak' நிறுவனத்தின் முதல் கேமரா 1888-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 'நீங்கள் பொத்தானை அழுத்துங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்ற விளம்பர வாசகத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இக்கேமராவில் 'paper film' படச்சுருள் இணைக்கப்பட்டிருந்தது. அதைப்பயன்படுத்தி நூறு புகைப்படங்களை எடுக்கலாம். புகைப்படம் எடுத்தவுடன் கேமராவையே கொடாக் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கே அவர்கள் கேமராவில் இருக்கும் படச்சுருளை எடுத்து டெவலப் செய்தும், மாற்று படச்சுளை கேமராவில் இணைத்தும் கொடுப்பார்கள். இக்கேமராவே 'amateur photography'-இன் துவக்கமாக இருந்தது.

1897- 'box' கொடாக் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது. மடித்து வைக்க கூடிய சிறிய கேமரா அது. 1900-இல் 'Brownie' என்னும் விலை குறைந்த கேமராவை கொடாக் அறிமுகப்படுத்தியது. இக்கேமராவின் விலை ஒரு டாலருக்கும் குறைவாக இருந்ததும் பயன்படுத்த மிக எளிமையாக இருந்ததும், இக்கேமராவை பிரபலமாக்கியது, பெரும் வெற்றியும் அடைந்தது.

அங்கே துவங்கிய கொடாக்கின் வெற்றி பயணம், உலகின் மூலை முடுக்கு எல்லாம் போய் சேர்ந்தது. உலகம் புகைப்படங்களாக எடுத்து தள்ளியது. கொடாக் பெரும் பணம் பார்த்தது.

1935-இல் 'Kodachrome' என்னும் வண்ண படச்சுருளை கொடாக் நிறுவனம் கண்டுபிடித்து புழக்கத்திற்கு கொண்டுவந்தது. வண்ணமயமான உலகத்தை சிறைபிடிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டு உலகம் அதிசயத்தது. கொடாக் எல்லோருடைய இதயங்களும் இடம் பிடித்தது. இதுவும் பெரும் வெற்றியை அடையவே, அப்படச்சுருள் 8mm, 16mm, 35mm, 120, 116, 828 என எல்லா format-லும் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 74 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த 'கொடாக் குரோம்' படச்சுருள் 2009-இல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

'The Afghan Girl' என்னும் ஒரு ஆப்கானிய அகதிப் பெண்ணை 'National Geographic Magazine' -க்காக 'Steve McCurry' 1985-இல் படம் எடுத்தப்போது, 'Kodachrome' பெரும் புகழ் அடைந்தது. உலகப் புகழ் பெற்ற அப்புகைப்படம் Kodachrome படச்சுருளை பயன்படுத்தி எடுக்கப்பட்டது.

x-ray படச்சுருளில் துவங்கி CT, MRI ஸ்கேன் வரை கொடாக்கின் கைகள் நீண்டு இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிறிய 'microfilm' மற்றும் தீப்பெட்டி அளவே உள்ள சிறிய கேமராவை கண்டுபிடித்து படைகளுக்கு உதவியது

.

1960-இல் கொடாக் பெரும் நிறுவனமாக வளர்ந்து இருந்தது. 4 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் 50 பில்லியன்) வருமானம் ஈட்டக் கூடிய நிறுவனமாக இருந்தது. ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தார்கள். வட அமெரிக்காவின் விண்வெளி பரிசோதனைகளுக்கு இந்நிறுவனமே கேமராக்களை தயாரித்து கொடுத்தது. 'நீல் ஆம்ஸ்ட்ராங்' நிலவில் கால் வைத்த போது நிலவை படம் படிக்க பயன்பட்டது கொடாக் தயாரித்த கேமராதான்.

earth-deep-space-lunar-orbiter-640x190.jpg

பூமியின் முதல் படம், விண்வெளியில் இருந்து - Lunar Orbiter program in 1966

நாம் நினைக்க கூடும் Samsung,Canon,Nikon, அல்லது sony நிறுவனங்களில் ஒன்று தான் டிஜிட்டல் கேமராவை கண்டுபிடித்து இருக்கும் என்று..உண்மையில் டிஜிட்டல் கேமராவைக் கண்டுபிடித்தது கொடாக் நிறுவனம் தான்.

1975-இல் 'Steven Sasson' என்னும் கொடாக் நிறுவனத்தின் அறிவியலாளர் CCD(0.1 megapixels) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். 1991-இல் உலகின் முதல் digital SLR camera(1.3-megapixel CCD sensor)-ஐ கொடாக் அறிமுகப்படுத்தியது.

புதிய டிஜிட்டல் புகைப்படத்துறை பிறந்தது. கொடாக் துவங்கி வைத்து அத்துறை, அதன் பிறகு ஜப்பானின் கைகளில் விழுந்தது. Canon,Sony,Fuji போன்ற பெரும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளால் கொடாக்கையும் உலகத்தையும் ஆக்கரமித்தன. இந்நிறுவனங்களின் போட்டிகளிடையே கொடாக் தன் ஆளுமையை கொஞ்சம் கொஞ்சமாக அத்துறையில் இழந்தது. ஒருவகையில் தான் துவக்கி வைத்த தொழில்நுட்பத்தினாலேயே கொடாக் தன் முடிவை நோக்கி நகர வேண்டியதாயிற்று எனலாம்.

kodak-dcs-1000-and-DSU.jpg

முதல் டிஜிட்டல் கேமரா

OLED display, Bayer color filter array(RGGB Bayer filter) என பல தொழில்நுட்பங்களை கொடாக் தான் கண்டுபிடித்தது. RGGB Bayer filter-ஐப் பயன்படுத்திதான் இன்று இருக்கும் எல்லா டிஜிட்டல் கேமரா சென்சர்களும் படம் பிடிக்கின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொடாக் கண்டு பிடித்திருந்தாலும், 70,80,90 -களில் அதன் கவனம் படச்சுருள் சார்ந்த துறையிலேயே இருந்தது. அதன் வியாபாரங்கள் யாவும் அதை சார்ந்தே அமைந்திருந்தது. டிஜிட்டல் துறை தன் வேர்களை ஆழமாக பரப்பிக்கொண்டிருந்ததை, ஏனோ கொடாக் கவனிக்க தவறியது. பிற்காலத்தில் விழிப்படைந்து சுதாரிக்க முயன்றபோது காலம் கடந்து விட்டிருந்தது. Sony,Canon போன்ற நிறுவனங்கள் வெகு தூரம் தங்கள் கரங்களைப் பரப்பி விட்டிருந்தன.

கொடாக்கின் 'EasyShare' வகைக் கேமராக்கள் பெரும் வெற்றி பெற்றவை, ஆனால் அவை மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. காலம் கடந்து பல முயற்சிகளை செய்து பார்க்கிறது. Apple, BlackBerry போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சில தொழில்நுட்பங்களை முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை கொடாக்கின் சரிவை தடுத்து நிறுத்த கூடியதாக இருக்க போவதில்லை என்றுதான் படுகிறது.

1971-Women-hold-Kodak-cam-022.jpg

புகைப்படத்துறைத்தான் இப்படி என்றால், மறுபுறம் திரைத்துறையும் கொடாக்கின் கையை விட்டுபோக துவங்கி விட்டது. இங்கேயும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் விரிவடைய துவங்கி பல காலம் ஆகிவிட்டது. 90% படங்கள் கொடாக் படச்சுருளை பயன்படுத்திதான் எடுக்கப்பட்டு வந்தன. டிஜிட்டலின் வளர்ச்சி கொடாக்கிற்குதான் கேடாக முடிந்திருக்கிறது. திரைத்துறையில் அதன் ஒரே போட்டியாளர் 'Fuji' இழகப்போவது பெரிதாக ஒன்றும் இல்லை.

இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் மஞ்ச நோட்டிஸ் கணக்காய் அறிக்கை கொடுத்து, அதிர்ச்சி கொடுத்திருக்கிறது கொடாக். இப்போதைக்கு பதினெட்டு மாதங்களுக்கு கடனாக 'சிட்டி குருப்' பணம் கொடுத்திருப்பதால் கொடாக்கின் தலை தப்பி இருக்கிறது.

பிப்ரவரியில் கொடாக் அறிவித்திருக்கிறது, இந்த ஆண்டின் துவக்க பகுதிக்குள்ளாக தன் டிஜிட்டல் கேமரா, சிறிய வடிவ விடியோ கேமரா மற்றும் டிஜிட்டல் பிரேம் தயாரிப்புகளை நிறுத்தப்போவதாக. லட்சக்கணக்காக இருந்த அதன் தொழிலாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது சில ஆயிரங்களாக சுருங்கி இருக்கிறது. பெரும் மதிப்புகளைக் கொண்டிருந்த அதன் பங்குகள் ஒரு டாலருக்கும் குறைவாய் சரிந்து இருக்கிறது.

இவ்வுலகில் பல கண்டுபிடிப்புகள் தோன்றி இருக்கின்றன. நல்லதும் கொட்டதுமாக பல மாற்றங்களை அவை ஏற்படுத்தி இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் விட கொடாக்கின் சாதனைகள் ஈடு இணையற்றது. இப்பூவுலகம் இருக்கும் வரை 'Kodak'-ஐ யாரும் மறந்து விட முடியாது. உலகம் தன்னை நினைவில் கொள்ளவும் கொடாகின் உதவியைத்தான் நாடவேண்டியதாக இருக்கும்..!

பல சாதனைகளைப் புரிந்த கொடாக்கின் இன்றைய நிலை..ஒரு புகைப்படக்காரனாக என்னை மிகவும் பாதிக்கிறது. மனதோடு நெருங்கி நண்பனின் துயர முடிவைப்போல் மனமெங்கும், சொல்லொன்ன துயரம் பரவுகிறது. கடந்து வந்த பாதைகளில் உடனிருந்த பலவற்றை நாம் இழந்திருக்கிறோம், அவற்றில் ஒன்றாக கொடாக்கும் மாறிப்போவதை கண்டு கையாலாகாதவனாக நிற்பதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை எனக்கு.

http://blog.vijayarm...2/02/kodak.html

வீணா, நீங்கள் படித்தை எம்முடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி :) .

மோலோட்டமாக :rolleyes: வாசித்ததில், அருமையான பதிவுகளாக உள்ளது.learning.gif

நேரம் கிடைக்கும் போது.. ஆழ்ந்து, வாசிக்கக் கூடிய மாதிரியான சஞ்சிகை இது. reading05.gif

நன்றி தமிழ் சிறி அண்ணா

Link to comment
Share on other sites

ஃபிஜி பிற்காலப் போட்டியாளர். அக்ஃபா, கொனிக்கா, போலறேயிட் போன்றவை கொடாக்குடன் போட்டியிட்ட மற்றைய கம்பனிகள்(நாமறிந்தவை) சில. கொடாக், கட்டுரையில் காணப்படுவது போன்று நியு யோர்க் நகரில் இல்லை. நியு யோர்க் மானிலத்தின் வடமேற்கு பகுதில் காணப்படும் றொசெஸ்ரர் எனப்படும் நகரத்தில்த் தான் காணப்படுகிறது. இது நயாகரா, பஃபலோ போன்ற நகரங்களிலிருந்து தென் கிழக்கே 60 மைல் தூரத்தில் காணபடும் நகரம். நியு யோர்கிலிருந்து 360 மைல் தூரம். கொடாக்கின் சரிவு அந்த நகரத்தின் சரிவு போலத்தான். ரொசெஸ்ட்ர் இன்ஸ்டிடூட் பிரபலமான ஒரு பல்கலைக் கழகம். அங்கே ஒரு சிவன் கோவிலும் உண்டு. சிவராத்திரி காலம் (இந்த வருடம்-நேற்று) நம்மவர்கள் போவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று க...ட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக........

**********************************************************************************************

ஈழத்து அகதியாய் சக்திமுற்றப் புலவர் இருந்திருந்தால்....

காக்காய்..... காக்காய்.....

கரியநிறக் காக்காய்!

ஊரைக் கூட்டி சேதி சொல்லும்

உளவாளி வேடமிட்ட

கரியநிறக் காக்காய்!

நீயும் நின் கூட்டத்தோடும்

தென் திசை நோக்கி

சற்றுத் தாழப் பறந்தால்

மாந்தை எனும் நகரடைவாய்..

அங்கே சற்று

களைப்பாறி விட்டு

வடதிசை நோக்கி ஏகின்

யாழ்ப்பாணம் எனும்

மா நகரைக் காண்பாய்.....

அங்கே தென்மராட்சி நகரெனும் பதியில்

சாவகச்சேரி எனும் ஊரில்

சற்றே கிழக்காய் அமைந்த

பிள்ளையார் கோவிலின் அருகே

வேப்பமர நிழலோடு

ஓடு வேய்ந்த வீடொன்று

குண்டு மழையில் நனையாமல்

இற்றைக்கும் இருக்கிறதா என்று

அறிந்து வா - என்

கரிய நிறக் காக்காவே!

Pedro_Ugarte_TC_0224.jpg

கூடவே

அருகிருக்கும்

பிள்ளையாருக்கு

உன் பக்தன்

தமிழகத்தின்

தென்கோடி தனில்

இராமேச்சரம் எனும் ஊரில்

அகதியோடு அகதியாக

உன் துணையின்றி தவிப்பதாக

சேதியொன்று

சொல்லிவிட்டு வா - என்

கரிய நிறக் காக்காவே!

******************************************************************************************************

பெண்...

கடக்க வேண்டிய தூரம் அதிகம்...

தகர்க்க வேண்டிய தடைகள் ஏராளம்...

அடைய வேண்டிய எல்லைகள் நிறைய..

போராடித்தான் பெறவேண்டும் பெண்..

என்றும் துணை நிற்போம் நாம்..

ஒரு பெண்!..............

o நான் ஒரு பெண் என்பதால் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவள்.

...

o நான் ஆண்களின் உலகில் பிறந்தேன். ஆண்களின் மொழியை கற்றுணர்ந்தேன். ஆண்களின் இல்லங்களில் வசிக்கிறேன். ஆண்களின் பள்ளிகளில் படித்து, ஆண்களின் அலுவலங்களில் பணிபுரிந்து, ஆண்கள் விதிக்கும் விதிகளைக் கடைபிடித்து வாழ்கிறேன்.

o திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைத்தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். பிடிவாதம் பிடிக்காதே. விட்டுக்கொடு!

o என் இளைய சகோதரனும்கூட என் மீது அதிகாரம் செலுத்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

o நான் அதிகம் தூங்கக்கூடாது. ருசியான உணவை நாடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது.

o நான் வீட்டு வேலைகளை பழகிக்கொள்ளவேண்டும். என் சகோதரர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

o எனக்கு மட்டும் Good Touch, Bad Touch கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். என்னை அணுகுபவர்களிடம் நான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

o நான் அணியும் ஆடைகளில் கவனமாக இருக்கவேண்டும்.

o நான் யார் என்பதை என் தோற்றத்தால் நிர்ணயம் செய்கிறார்கள்.

o நான் பலவீனமானவள். பாதுகாக்கப்பட வேண்டியவள்.

o உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரியாதவர்கள் என்று யாரும் எப்போதும் என்னை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கலாம்.

o எனக்கு நேரும் அவமானங்களை நான் மென்று விழுங்கவேண்டும்.

o எனக்கு மூன்று வயதாகும்போதே என் திருமணம் குறித்த கவலைகள் என் பெற்றோரை ஆக்கிரமித்துவிடுகின்றன.

o வீட்டில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டால், முதலில் என் படிப்பு நிறுத்தப்படுகிறது.

o வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் என்னைக் கட்டுப்படுத்த என் சமூகத்துக்கு முழு உரிமையுண்டு.

o வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என் மீது அதிகாரம் செலுத்தப்படுவதை நான் முழு விழிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

o கட்டளைகள் பிறப்பிப்பது ஆண்களின் இயல்பு என்பதை நான் அறிவேன். கீழ்படிவது என் உரிமை.

o நான் எத்தகைய உயர் பதவி வகித்தாலும் தொடக்க நிலையில் இருக்கும் எந்தவொரு ஆண் ஊழியரைக் காட்டிலும் நான் தாழ்ந்தவள்தான்.

o என் கணவனின் கல்வித் தகுதியைவிட என்னுடையது ஒரு படியேனும் கீழானதாக இருக்கவேண்டும். தவறினால், நான் அகந்தை கொண்டவளாகச் சித்தரிக்கப்படுவேன்.

*****************************************************************************************************************************

13 Best moments of life:

-To fall in love.

-To clear your last exam.

...

-To wake up and realize its still possible to sleep.

-To get a phone call saying class is cancelled.

-To feel butterflies every time you see THAT PERSON..

-To see an old friend again and to feel that things have not Changed..

-To touch the fingers of newly born child..

-Speaking to an old friend on sunday evening..

-Waiting for a call or message from your loved one when you are alone..

-Walking alone on a silent road at night and listening to your favourite songs..

-Riding on a highway while its raining

-and the last one is 'rite now'..

while reading this there was constant smile on your

face..

which was one of the best moments I believe..!

Keep smiling

********************************************************************************************

தகவல்கள் முக நூல் மூலம் கவிதை இங்கிருந்து(http://nilaakkaalame...og-post_24.html) எடுக்கபட்டது

ஃபிஜி பிற்காலப் போட்டியாளர். அக்ஃபா, கொனிக்கா, போலறேயிட் போன்றவை கொடாக்குடன் போட்டியிட்ட மற்றைய கம்பனிகள்(நாமறிந்தவை) சில. கொடாக், கட்டுரையில் காணப்படுவது போன்று நியு யோர்க் நகரில் இல்லை. நியு யோர்க் மானிலத்தின் வடமேற்கு பகுதில் காணப்படும் றொசெஸ்ரர் எனப்படும் நகரத்தில்த் தான் காணப்படுகிறது. இது நயாகரா, பஃபலோ போன்ற நகரங்களிலிருந்து தென் கிழக்கே 60 மைல் தூரத்தில் காணபடும் நகரம். நியு யோர்கிலிருந்து 360 மைல் தூரம். கொடாக்கின் சரிவு அந்த நகரத்தின் சரிவு போலத்தான். ரொசெஸ்ட்ர் இன்ஸ்டிடூட் பிரபலமான ஒரு பல்கலைக் கழகம். அங்கே ஒரு சிவன் கோவிலும் உண்டு. சிவராத்திரி காலம் (இந்த வருடம்-நேற்று) நம்மவர்கள் போவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நன்றி மல்லையூரான் உங்களின் மேலதிக தகவல்களுக்கு

Link to comment
Share on other sites

கோடாக் மற்றும் பிளாக்பெரியின் வியாபார வீழ்ச்சி வட அமெரிக்க நிறுவன அதிகாரிகளுக்கு ஒரு பாடம்..!

இங்குள்ள நிறுவன அதிகாரிகள் காலத்திற்கேற்ப மாறாமல் ஏற்கனவே கண்டுபிடித்து வெற்றிபெற்ற சமன்பாட்டையே பின்பற்ற முயல்கிறார்கள்..! இதனால் அவர்களது நிறுவனங்களின் முன்னேற்றத்தில் தேக்கம் ஏற்படுகிறது..! :rolleyes:

கோடாக் இவ்வளவு காலமும் தாக்குப்பிடிக்கக் காரணம் அவர்கள் தொண்ணூறுகளிலேயே கண்டுபிடித்து Patent பண்ணிய தொழில்நுட்பங்களின்மூலம் வந்த வருமானம் என அண்மையில் கேள்விப்பட்டேன்..! அந்த வருமானமும் முடிய இப்போது வங்குரோத்துநிலைக்கு வந்துவிட்டார்கள்..!

இதில் கொடுமை என்னவென்றால் புத்துப்புது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தபோதெல்லாம் அங்கே பணியாற்றிய தொழில்நுட்பவியலாளர்களின் ஆலோசனையைக் காதில் வாங்காது படச்சுருள் வியாபாரத்திலேயே கவனத்தைச் செலுத்தியிருந்தார்கள் நிறுவன அதிகாரிகள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழின் தலை சிறந்த நாவல்கள்

1.விஷ்ணுபுரம்- ஜெயமோகன்

இந்த நூற்றாண்டின் தலை சிறந்த நாவல் என அசோகமித்திரன் குறிப்பிட்டார். இந்திய வரலாற்றையும் தத்துவ மரபியலையும் விரிவான கோணங்களில் ஆராய்கிறது இந்நாவல்.இதை படிப்பதற்கே மாபெரும் உழைப்பை கோரும் நூல். ஆழ்ந்த குறியீடுகள் மூலம் நம் சிந்தனைகளை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது. (தமிழினி)

2.பதினெட்டாவது அட்சக்கோடு- அசோகமித்திரன்

சென்னையும் செகண்டரபாத்துமே இவரின் கதைக்களங்கள். வார்த்தைகளை எண்ணி எண்ணி எழுதி நகரத்து வாழ்க்கையை இரு புள்ளிகளில் சொல்ல ஆரம்பித்து ஒரே நேர்கோட்டில் இணையும் இக்கதை தமிழின் பெரும் படைப்புகளுள் ஒன்று. (கிழக்கு பதிப்பகம்)

3.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் அழகியல் உச்சத்தை தொட்ட படைப்பு. ஹென்றி கதாப்பாத்திரத்தை லட்சியவாத அம்சத்துடன் படைத்திருப்பார்.ஒரு இலக்கிய வாசகன் தன் பயணத்தை தொடங்க வேண்டியது இந்நாவலில் இருந்துதான். (காலச்சுவடு)

4.ஒரு புளியமரத்தின் கதை- சுந்தர ராமசாமி

சுவாரஸ்யமான நடை. அழகிய சித்தரிப்புகள். புளிய மரமொன்றின் பின்னணியில் வாழ்வையும் வீழ்ச்சியையும் அலசும் இக்கதை அரசியலை கச்சிதமாக அணுகுகிறது. (காலச்சுவடு)

5.துயில்- எஸ்.ராமகிருஷ்ணன்

நோய்மையின் தீவிரத்தை பல்வேறு காலங்களில் சித்தரிக்கும் இப்படைப்பு எஸ்.ராவின் Masterpiece. (உயிர்மை)

6.மோகமுள்- தி.ஜானகிராமன்

தமிழின் சிறந்த பத்து நாவல்களை எவர் தேர்வு செய்தாலும் இதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. இன்னும் கொஞ்சம் நாவலை எடிட் செய்திருக்கலாம். (ஐந்திணை பதிப்பகம்)

7.நாளை மற்றுமொரு நாளே-ஜி.நாகராஜன்

நாம் காண மறுக்கும் வாழ்வின் அவல நிலைகளை தைரியமாக சுட்டிக்காட்டிய நாவல். பரபரப்பாக செல்லும் இக்கதை பதற்றமில்லாத நடையில் எழுதப்பட்டுள்ளது.

8.தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில் நாடன்

கதாபாதிரங்களையும் சூழலையும் நம் கண் முன்னே நிறுத்தும் நாஞ்சில் நாடனின் கூரிய நடை. வீட்டு மாப்பிள்ளையாகி அவமானப்படும் சிவதாணு, விவசாய வாழ்வின் வீழ்ச்சி என மாறி மாறி நம் ஞாபக இடுக்குகளில் இணைந்து கொள்கிறது. தங்கர்பச்சான் "சொல்ல மறந்த கதை"யாக்கினார். (காலச்சுவடு)

9.தண்ணீர்- அசோகமித்திரன்

நகரத்து குடிநீர்ப்பஞ்சம் தான் மையக்கதை.ஆனால் வெறும் தண்ணீர்க் கதை மட்டுமல்ல. ஜமுனாவின் பாலியல் வாழ்க்கையும் அதனுடன் இணைந்து கொள்ள கதை மேலும் விரிவடைகிறது. (கிழக்கு பதிப்பகம்)

10.பின் தொடரும் நிழலின் குரல்- ஜெயமோகன்

சோவியத் ரஷியாவின் உடைவை அரசியலுக்கும் கருத்தியல் நிலைக்கும் உள்ள மோதலை பின்புலமாக வைத்து அமைக்கப்பட்ட இந்நாவல் வெறும் அரசியல் படைப்பு மட்டுமல்ல. (தமிழினி)

11.புயலிலே ஒரு தோணி- ப.சிங்காரம்

நுட்பமான பல தருணங்களை தனது அங்கத நடையில் கூர்மையாக அவதானிக்கிறார் ஆசிரியர். தமிழில் எழுதப்பட்ட சாகச கதைகளில் இதுவே உச்சகட்ட படைப்பு. (தமிழினி)

12.அஞ்ஞாடி- பூமணி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரு சாதிகளுக்கிடையே நிகழ்ந்த கலவரத்தை உறவுகளின் பிரிவை மண் மீதுள்ள நேசத்தை அற்புதமான காட்சி பின்புலத்தில் நமக்கு விருந்தாக்குகிறது. தமிழின் முதல் "நாவல்" என்கிறார் பூமணி."பிறகு", "வெக்கை" முதலியன நாம் வாசிக்க வேண்டிய இவரின் மற்ற ஆக்கங்கள்.நாவல் குறித்து மேலும் வாசிக்க Clashing by நைட் (க்ரியா)

13.கோபல்ல கிராமம்- கி.ராஜநாராயணன்

கரிசலின் வாழ்வை உதிரிக்கதைகள் மூலம் ஒன்று திரட்டி அச்சமூக சிக்கல்களை கரிசலின் மணத்தை வெளிக்கொணரும் இந்நூல் சாஹித்ய அகாதமி விருது பெற்றது. (அன்னம்)

14.தலைமுறைகள்- நீல.பத்மநாபன்

இந்தியாவின் சிறந்த பத்து நாவல்களில் தேர்வான ஒரே தமிழ் நாவல். நேரடியான கதைசொல்லல் முறையில் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை சித்தரிக்கிறது. (வானதி)

15.கிருஷ்ண பருந்து- ஆ.மாதவன்

கடைத்தெருவின் கதைசொல்லி என ஜெயமோகன் ஆ.மாதவனை குறிப்பிடுகிறார். இக்கதையும் அதைப்பற்றியதே. (தமிழினி)

16.ஜே.ஜே.சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி

பின்நவீனத்துவ காலகட்டத்தை துவக்கிவைத்தது.அழகிய நடையாலும் கவித்துவத்தாலும் இன்றளவும் கவனம் பெறும் நாவல். அசோகமித்ரனின் "இன்று" மற்றுமொரு துவக்கப்புள்ளி. (காலச்சுவடு)

17.காகித மலர்கள்- ஆதவன்

மத்தியதர நகர வாசிகளின் அலுப்பையும் செக்குமாடு வாழ்க்கையையும் நிதானமான சுவாரஸ்யமான நடையில் அழுத்தமாக படைத்திருக்கிறார். டெல்லியை களமாக கொண்டிருக்கும் இக்கதை நமது சுய மையப் போக்கை எள்ளலுடன் முன்வைக்கிறது. (உயிர்மை)

18. சுதந்திர பூமி- இந்திரா பார்த்தசாரதி

அரசியல் சூதாட்டங்களை அரசியல்வாதிகளின் மனப்போக்குகளை இ.பா. அளவுக்கு தமிழில் எடுத்துரைத்த எழுத்தாளர்கள் குறைவே. இந்நாவல் தமிழக அரசின் பரிசு பெற்றது. உரையாடல்களின் துல்லியம்,மெல்லிய நகைச்சுவை , எதையும் ரசிக்கும்படியாக அலுப்புத்தட்டாமல் விவரிப்பது இவரின் ஆகச்சிறந்த பலம். (கிழக்கு பதிப்பகம்)

19.அபிதா- லா.ச.ராமாமிருதம்

கவித்துவமான நடையில் அரிய சாதனைகள் செய்தவர்.தனக்கு சாதரணமாக ஒரு சிறுகதை எழுதவே மூன்று மாதங்களாகும் என்றார்.. ஒரு வார்த்தையை கூட நம்மால் துண்டித்துவிட்டு தாண்டி செல்ல முடியாதபடி நம்மை கணங்களால் கட்டிப்போடும் சொற்களின் விற்பன்னர். (உயிர்மை)

20.பயணக்கதை- யுவன் சந்திர சேகர்

யுவனின் ஆக்கங்களிலேயே சிறந்ததென இவரது இச்சமீபத்திய நாவலை தைரியமாக சொல்லுவேன். கதை மாந்தர்களை, அவர்களது குணாதிசியங்களை விவரமாக அறிந்து கொள்ள இவரது சிறுகதைகளை முதலிலேயே வாசிப்பது நல்லது. (காலச்சுவடு)

21.பொய்த்தேவு - க.நா.சுப்பிரமணியம்

ஒரு மைய கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தி அவனின் பார்வையில் ஒட்டுமொத்த வாழ்வையும் அள்ளி பருகிட முயன்ற அற்புதமான முயற்சி.நாம் வாசிக்க வேண்டிய இவரின் பிற நாவல்கள் - ஒரு நாள் மற்றும் வாழ்ந்தவர் கெட்டால் (காலச்சுவடு)

22.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

காளை மாடுகளுடன் உயிரை துச்சமென மதித்து அவற்றுடன் மோதும் சில இளைஞர்களின் கதையை அதீத திகிலடிக்கும் வர்ணனைகளுடன் நேர்த்தியாக சொல்லாப்பட்ட கதை.(காலச்சுவடு)

23.,சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

"அக்கினி பிரவேசம்" சிறுகதைக்கு எழுந்த அசட்டுத்தனமான சர்ச்சைகளுக்கு பின் அதை பெரும் நாவலாக்கினார். மழை பெய்து ஓய்ந்த மாலை பொழுதொன்றில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் அனுபவம் அவளது வாழ்வை திசைமாற்றிய கதையை அழகியலோடு பதிவு செய்திருக்கிறார் தமிழின் முன்னோடி இலக்கிய ஆளுமையான ஜெயகாந்தன். சாஹித்ய அகாடமி விருது பெற்றது.(மீனாட்சி புத்தக நிலையம்)

24.நாகம்மாள் - ஆர்.சண்முகசுந்தரம்

தமிழில் வட்டார வழக்கில் எழுதப்பட்ட முதல் நாவல். கொங்கு மொழியை மிக இயல்பாக கையாண்டிருப்பார்.(காலச்சுவடு)

25.தூர்வை - சோ.தர்மன்

தலித் மக்களின் வாழ்க்கையை வெற்று கூச்சல்களாக கோஷங்களாக முன்வைக்காமல் அவர்களின் மரபுகளையும் சடங்குகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் பதிவு செய்ததில் கவனம் ஈர்க்கிறார். (காலச்சுவடு)

26.கள்ளம் - தஞ்சை பிரகாஷ்

நேரிடையான கதை சொல்லும் முறையை முற்றிலுமாக தவிர்த்து சம்பவங்களையும் காட்சிகளையும் கலைத்து போட்டு நம் மனதின் ஆழங்களை ஊடுருவி செல்கிறது.

27.மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

தமிழின் "முதல்" நேர்மையான வரலாற்று நாவல் என்று கொண்டாடப்படும் இக்கதை இந்திய மனங்கள் ஐரோப்பிய சிந்தனைகளால் எங்கனம் மாற்றம் அடைந்தது என்பதையும் விவரிக்கிறது.இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது. (தாகம்)

28.உபபாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

மகாபாரத கதைகளால் Inspire ஆகாத எழுத்தாளர்கள் எவரேனும் உண்டா என்பதே ஐயமாக இருக்கிறது. இ.பா.வின் "கிருஷ்ணா கிருஷ்ணா", ஜெயமோகனின் "பத்மவ்யூகம்", எம்.வி.வெங்கட்ராமின் "நித்யகன்னி" என நிறைய உதாரணங்களை அடுக்கலாம். எஸ்.ரா.வின் இப்புனைவு தமிழ் இலக்கிய உலகின் சாதனைகளுள் ஒன்று. (விஜயா பதிப்பகம்)

29. சாயாவனம்- சா.கந்தசாமி

தொழிற்சாலைகள் அமைப்பதற்காக வெட்டப்படும் மரங்களை பற்றிய கதை. நம் அகத்தின் மாற்றங்களை குறைபாடுகளை ஆழ்ந்த குறியீடுகள் மூலம் கவனம் பெறசெய்கிறார் (காலச்சுவடு)

30. தாகம் - கு.சின்னப்ப பாரதி

தமிழின் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்று என சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டார். மார்க்சசிய கோட்பாடுகளை அதன் பிரச்சார நெடியை குறைத்திருக்கலாம்.

31.ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திரா பார்த்தசாரதி

நாற்பது வயதை நெருங்கும் ஆணின் மனது சலிப்புகொள்கிறது. புதியதொரு இணையை தேடுகிறது. அதற்காக ஏங்குகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆணின் கதை. ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. (கிழக்கு பதிப்பகம்)

32.சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்

சாஹித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல் மீரானின் தெளிவான கதைசொல்லல் முறைக்கு சிறந்த உதாரணம். இஸ்லாமிய வழக்கு, எளிமையான சொல்லாடல்கள், கூர்ந்த அவதானிப்பு என நாம் அவசியம் வாசிக்க வேண்டியது. (காலச்சுவடு,மறுபதிப்பு)

33.பள்ளிகொண்டபுரம்-நீல பத்மநாபன்

அனந்த நாயரின் வாழ்க்கையை குறைந்த சித்தரிப்புகள் மூலம் நம் மனதில் ஆழமான பாதிப்பை உருவாக்குகிறார்.திருவனந்தபுரத்தை கதைக் களமாக கொண்டு முன்னகரும் இப்புனைவு அதையே குறியீடாக்குவது சிறப்பானதொரு அம்சம். (காலச்சுவடு)

34.பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு

தமிழின் முதல் ஓரின சேர்க்கையை பற்றிய நாவல். மனிதனின் அடிப்படை இச்சைகளை முன்வைத்து அசாதாரமான பின்புலத்தில் காமம்,அதிகாரம், பணம் போன்றவற்றின் இறுதி மதிப்பெண்ண என்ற கேள்வியை எழுப்புகிறது. வெறுமையே என்ற பதிலையும் அளிக்கிறது. (காலச்சுவடு)

35.பகடையாட்டம் - யுவன் சந்திர சேகர்

தலய் -லாமா இந்தியாவிற்கு தப்பித்து வர ,அவருக்கு உதவிய(?) மேஜர், என விரிவடையும் கதை. வாசிப்பின்பத்தின் உச்சங்களை வாசகன் உணரும் தருணங்கள் இந்நாவலில் ஏராளம். (தமிழினி,கிழக்கு பதிப்பகம் )

36. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

ரெயினீஸ் ஐயர் தெரு, கம்பா நதி போன்ற குறிப்பிடத்தக்க ஆக்கங்களை புனைந்தவரின் ஆகச்சிறந்த படைப்பிது. (கிழக்கு பதிப்பகம்)

37. நினைவுப் பாதை - நகுலன்

இதை தமிழின் முக்கியமான ஆக்கமாக அறுதியிட்டு கூற முடியாவிடினும் நகுலனின் படைப்புகளில் நாம் வாசிக்க வேண்டிய புனைவிது. மொழியின் அற்புதமான வீச்சு, அங்கதம் பொங்கும் நடை ஆகியவற்றிற்காக படிக்கலாம். (காலச்சுவடு)

38. நித்யகன்னி - எம்.வி.வெங்கட்ராம்

மாதவியின் கதாப்பாத்திரத்தை மிக நேர்த்தியாக அழகியலை குழைத்து கையாண்டிருக்கிறார். நாம் வாசிக்க வேண்டிய இவரது பிற ஆக்கங்கள்- வேள்வித்தீ, காதுகள். சாஹித்ய அகாடமி விருது பெற்றவர். (காலச்சுவடு)

39. புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

நாம் பார்த்தோ படித்தோ சலித்துப்போன கிராமத்து காதல் கதைதான். ஆனால் எந்தவித மேல்பூச்சுகளுக்கும் இடமளிக்காமல் நேரடியாக கதை சொல்லிய விதத்தில் தமிழின் முக்கியமான புதினங்களில் இதுவும் ஒன்று. (காலச்சுவடு)

40 ஆழி சூழ் உலகு- ஜோ டி க்ரூஸ்

கடல்சார் மக்களின் வாழ்க்கையை மிக விரைவாக எடுத்துரைக்கிறது. கதையின் காலகட்டங்கள் முன்னுக்கு பின் நகர்ந்து மூவரின் அவல வாழ்க்கையை கூறும் உத்தி மிக லாவகமாக கையாளப்பட்டுள்ளது

http://platonicwave.blogspot.com/2012/02/1_21.html?spref=tw

கோடாக் மற்றும் பிளாக்பெரியின் வியாபார வீழ்ச்சி வட அமெரிக்க நிறுவன அதிகாரிகளுக்கு ஒரு பாடம்..!

இங்குள்ள நிறுவன அதிகாரிகள் காலத்திற்கேற்ப மாறாமல் ஏற்கனவே கண்டுபிடித்து வெற்றிபெற்ற சமன்பாட்டையே பின்பற்ற முயல்கிறார்கள்..! இதனால் அவர்களது நிறுவனங்களின் முன்னேற்றத்தில் தேக்கம் ஏற்படுகிறது..! :rolleyes:

கோடாக் இவ்வளவு காலமும் தாக்குப்பிடிக்கக் காரணம் அவர்கள் தொண்ணூறுகளிலேயே கண்டுபிடித்து Patent பண்ணிய தொழில்நுட்பங்களின்மூலம் வந்த வருமானம் என அண்மையில் கேள்விப்பட்டேன்..! அந்த வருமானமும் முடிய இப்போது வங்குரோத்துநிலைக்கு வந்துவிட்டார்கள்..!

இதில் கொடுமை என்னவென்றால் புத்துப்புது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தபோதெல்லாம் அங்கே பணியாற்றிய தொழில்நுட்பவியலாளர்களின் ஆலோசனையைக் காதில் வாங்காது படச்சுருள் வியாபாரத்திலேயே கவனத்தைச் செலுத்தியிருந்தார்கள் நிறுவன அதிகாரிகள்..! :rolleyes:

நன்றி அண்ணா உங்களின் மேலதிக தகவல்களுக்கு..:)

Link to comment
Share on other sites

“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக, நான் நிறைய செய்ய முடியும்.

கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.

இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.

இந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றை தெரிந்துக்கொள்ளவேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையை படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கை ஒர் வரலாற்று நிகழ்வுப்போலவே ஆனது.

அந்த மனிதன்.. அரசன்அல்ல, தலைவன் அல்ல, புரட்சி வீரனும்மல்ல. உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன் தான். ஆனால் அவனின் வாழ்வாதாரப்போராட்டம் என்பது, அவனின் சுயவளர்ச்சியாக மட்டுமில்லை. அவனின் இன எழுச்சியாகவும் இருந்தது.

அது, அவன் மக்களின் உரிமைக்கான அங்கீகாரத்தை, ‘கேட்டுப்பெறுவதல்ல எப்போதும் அவர்களோடு இருப்பது’ என்பதை உலகிற்கு அறிவிப்பதாக இருந்தது.

ஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டம் எப்படி ஒரு இனத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் அந்த மனிதனின் வாழ்க்கையை பார்க்கவேண்டும்.

அந்த மனிதனின் பெயர் 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்'. பிறந்தது ஜனவரி 17,1942 ஆம் ஆண்டு, அமெரிக்காவில். ஒரு 'ஆப்பிரிக்க-அமெரிக்கன்' குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை. ஏழ்மையான குடும்பம்.

பனிரெண்டாவது வயதில் தன் மிதிவண்டியை திருடக் கொடுத்துவிட்டு, திருடனை அடிக்க வேண்டும் என விரும்பியவனை கண்ட ஒரு போலிஸ்காரர் அவனுக்கு குத்துச்சண்டையை பயிற்றுவித்தார். உள்ளூர் போட்டிகளில் பணத்திற்காக கலந்துக்கொண்டான். தொடர்ந்து வெற்றிதான். அவ்வெற்றிகள் அவனை, 1960-இல் 'ரோமில்' நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வெல்லும் வரை கொண்டு சென்றது. இங்கே இருந்துதான் அவன் வாழ்க்கை திசைமாறுகிறது. அதுநாள் வரை 'அமெச்சூர் பாக்ஸராக' இருந்தவன் ஒரு 'தொழில்முறை பாக்ஸராக' உறுமாறுகிறான்.

1960-63 -க்கு இடைப்பட்ட காலத்தில், 19-0 என்ற கணக்கில் கலந்துக்கொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறான். அதில் 15 நாக்-அவுட்ஸ்.

அவனிடம் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்தது. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன்னோடு மோதும் எதிராளியை எந்த ரவுண்டில் தோற்கடிப்பான் என்று சொல்லுவதும், அதை அப்படியே நிறைவேற்றுவதும். சொல்லி அடிப்பது என்பார்களே அது இதுதான் போல.

அதேப்போல மற்றொறு பழக்கமும் அவனிடமிருந்தது. தன்னோடு போட்டிப்போடும் போட்டியாளரின் முன், தன்னைப்பற்றி பெருமையாகவும் அவனைத் தாழ்த்தியும் பேசுவது. பல நேரங்களில் அது தற்பெருமையாக, ஆணவப் பிரகடனமாக இருக்கும். அவ்வார்த்தைகள் எல்லாம், பின்நாட்களில் மேற்கோள்களாக ஆகியன. காரணம் அத்தனை வார்த்தைகளையும் மெய்பித்தான் அவன்.

“I am the Greatest.” - நானே மிகச் சிறந்தவன்

“I won’t be who you want me to be!” - நீங்கள் என்னை யாராக இருக்கச்சொல்லுகிறீர்களோ அவனாக நான் இருக்க மாட்டேன்.

ali_photos_0002_Layer+14.jpg

இப்படி அவன் சொன்ன வார்த்தைகள் ஏராளம். தான் வாழ்ந்த வாழ்க்கையால், அத்தனை வார்த்தைகளையும் சரித்திர குறிப்பேட்டில் குறிக்கச் செய்தான். அதை உலகம் ஒருபோதும் மறுத்ததில்லை.

எதிராளியை போட்டிகளுக்கு முன்பாகத் திட்டுவதும், அவர்களின் மனோதிடத்தை உருகுலைப்பதும் அவனுக்கு கைவந்தக் கலை. 'நீ ஒரு அசிங்கமான கரடி' .. 'நீ என்னைத் தாக்கவே முடியாது, ஏனெனில் உன் கண்களால் பார்க்க முடியாததை உன் கைகள் எப்படித் தாக்கும்?' என்று 'சன்னி லிஸ்டனோடு மோதியப் போட்டியின் போது அவனைப்பார்த்து சொன்னான். மேலும், 'நான் வண்ணத்துப்பூச்சியைப்போல் மிதப்பேன், தேனீயைப்போல் தாக்குவேன்' ("float like a butterfly and sting like a bee,") என்றான்.

இப்படிப்பேசுவதும் வழக்கமான முறையில் சண்டையிடாமல், தனக்கே உரிய மாறுபட்ட யுத்திகளையும் வடிவமைத்துக்கொண்டான். போட்டிகளின் போது தன் கால்களை அதிகம் பயன்படுத்தினான். ஒரு இடத்தில் நிற்காமல், வேகமாக நகர்ந்துக்கொண்டே இருந்தான்.

அதேபோல் அவனுடைய பேச்சுகள் ஒருவித நயத்தோடு இருக்கும். அது அவனுக்கு ‘குத்துச்சண்டை கவிஞன்’ என்ற பெயரை எடுத்துக்கொடுத்தது.

ali_photos_0013_Layer+3.jpg

1964-இல் 'சன்னி லிஸ்டனோடு' மோதி வெற்றி பெற்று, தன் முதன் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றான். அப்போது அவனின் வயது 22. உலகில் முதன்முறையாக, மிகக்குறைந்த வயதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் அப்பட்டதை வென்றது அவன் தான்.

தன்னுடைய வெற்றிகளை, அவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையின் சுய வளர்ச்சியாக மட்டும் பார்க்கவில்லை. தன் இனத்தின் வெற்றியாக, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்கான அங்கிகாரமாக, மாற்ற முயன்றான். ஒரு போதும் அவன் தன்னை ஒருவனாக, தனி மனிதனாக கருதியதேயில்லை. தான் ஒரு இனத்தின் அங்கம் என்பதும், தான் என்பது தன் இனத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என்பதும் அவனின் வெளிப்பாடாக இருந்தது.

தான் நம்பியது மட்டுமல்லாமல், உலகமும் அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றான். அது அவனை இன்னும் பலமானவனாக உணரச்செய்தது. மூர்கமானவனாக மாற்றிற்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் அல்லவா?.. அதன் ஒட்டு மொத்த எழுச்சியாகவே அவனின் செயல்பாடுகள் இருந்தன.

ஆம்.. நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவன் தன்னை உலக சாம்பியன் என்று நிருபித்ததும் செய்த முதல் செயல் என்னத் தெரியுமா?

ali_photos_0004_Layer+12.jpg

தன்னையும் தன் இனத்தையும் இதுநாள் வரை அடிமையாக ஆண்டதுமில்லாமல், அதை குறிக்கும் வகையில் தன் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் 'கிளே' என்ற பெயரை கலைய நினைத்தான். மேலும் கிருத்துவனாக இருப்பதிலிருந்தும் மாற நினைத்தான். தான் சுதந்திரமானவன் என்பதை தன் மதம் மற்றும் பெயரை மாற்றி இந்த உலகத்திற்கு அறிவித்தான். அவன் மாறிய மதம் இஸ்லாம், மாற்றிய பெயர் 'முகமத் அலி'.

ஆம் தோழர்களே! உலகத்தின் ஆகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் 'முகமத் அலி' தான் அவர். அவரின் முந்திய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என்ற பெயரில் நாம் அவரை நினைவில் கொள்வதில்லை. அது மிகச் சரியானதுதான். ஏனெனில், அது அவர் அடிமை என்பதை குறிப்பதாக இடப்பட்டது. தான் அடிமையில்லை, சுதந்திரமானவன் என்பதுதான் அலியின் அறிவிப்பு. இதை மற்றவர்கள் ஏற்காதபோதும், மறுக்கும்போதும் அலிக்கு வரும் கோபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

Ernie Terrell-என்ற குத்துச்சண்டை வீரரோடு மோதிய ஒரு போட்டியின் போது Terrell அலியைப்பார்த்து, 'கேசியஸ் கிளே' என அழைத்துவிட்டார். அது அலியை கோபப்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதினார். சாம்பியன் தன்னை இழிவுப் படுத்தியதிற்கு தண்டிக்க நினைத்தார்.

அந்த போட்டி முடியும் முன்பாக "என் பெயர் என்ன என்பதை உனக்கு தெரிய வைக்கிறேன்" என்று Terrell-இடம் சொன்னார். அவ்வளவுதான் அப்போட்டி முடியும்வரை, ஒவ்வொரு குத்தின் போதும் "What's my name, Uncle Tom ... What's my name?" என்று டெரிலிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

டெரில் மிக மூர்க்கமாக தாக்கப்பட்டார். குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிக அசிங்கமான (uglier fights) சண்டை என அதைச் சொல்லுகிறார்கள். மிக மோசமாக தண்டித்தார் அலி. பதினைந்து சுற்றும் நடந்தது அந்தச்சண்டை. அலி நினைத்திருந்தால் அந்தச் சண்டையை முன்பே முடித்திருக்க முடியும், ஆனால் Ernie Terrell-ஐ தண்டிக்க நினைத்ததனால்தான், பதினைந்து சுற்று வரை கொண்டுவந்து அவனை தாக்கினார் அலி என்கிறார்கள்.

ali_photos_0010_Layer+6.jpg

பெயரை மாற்றிச் சொன்னதற்கா இந்த அடி? இல்லை. அது அவரின் சுதந்திரத்தை மறுத்ததற்கான அடி. அவரின் சார்பாக மட்டுமல்லை, ஒட்டுமொத்த அவரின் இனத்தின் சார்பாக விழுந்த அடி அது. இந்த சுதந்திர பிரகடனத்தை அவர் தனிமனிதர்களிடத்தில் மட்டும் காட்டவில்லை. ஒரு தேசத்திடமே காட்டினார். அதுவும் அவர் வாழ்ந்த ஆனானப்பட்ட அமெரிக்காவிடமே காட்டினார்.

MuhammedAli.jpg

அது 1966 ஆம் ஆண்டு. வட அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி, முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார்.

“நான் ஏன் போகவேண்டும், எனக்கு எவ்வித சச்சரவும் வியட்காங்கிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”.

"இல்லை, நான் போகப்போவதில்லை, 10,000 மைல் தாண்டிபோய், மக்களை கொன்று, அவர்களின் உடைமைகளை கொளுத்தி, வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதை தொடர்வதற்கு உதவப்போவதில்லை"

"எதற்காக என்னை சீருடை அணிந்து பல்லாயிரம் மைல் கடந்து சென்று ‘Brown People’ மீது குண்டுப்போடச்சொல்லுகிறார்கள். இங்கே 'நீக்ரோ' என அழைக்கப்படும் என் மக்கள், மனித உரிமைகள் எதுவும் அற்று நாய்களைப்போல நடத்தப்படும்போது"

இவை, அலியின் புகழ்ப் பெற்ற வியட்நாம் போருக்கான எதிர்ப்பு வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார். ஏனெனில் அது, அவர் இனத்தைப் போன்ற இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை உணர்ந்திருந்ததனால்.

இந்த எதிர்ப்பை அவர், இராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது காட்டினார். ஒரு இராணுவ அதிகாரி அலியை, அவரின் முந்திய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என அழைத்தார். அலி தன் இடத்திலிருந்து நகராமல் இருந்தார். மூன்று முறை அழைக்கப்பட்டார். அப்போதும் அலி அசையாமல் இருந்தார். காவல் அதிகாரி அலியின் முன் வந்து "கிளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா? அடுத்த முறை நீங்கள் பதிலளிக்காவிட்டால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், ஐந்தாண்டு சிறையும் பத்தாயிரம் டாலர் அபதாரமும் விதிக்கப்படும்" என்றார்.

மறுமுறை அவரின் பெயர் அழைக்கப்பட்ட போது.. அலி நகராமல் இருந்தார். உடனடியாக அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின், குத்துச்சண்டைக்கான உரிமத்தை ரத்துசெய்தது மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது.

தன் சுதந்திரத்திற்கான, அங்கிகாரத்திற்காக, போராடி பெற்ற பட்டத்தையும் தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார். ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனது.

அலி மக்களோடுப் பேசினார். மக்கள் அவரோடு இணைந்து, போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். 1971-இல் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடிச்செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.

ali_photos_0000_Layer+1.jpg

பிறகு அக்டோபர் 30,1974-இல் நடந்த போட்டியில் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' வென்று இரண்டாவது முறையாக உலகச்சாம்பியன் பட்டத்தை பெற்றார். ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அப்போட்டி "The Rumble In The Jungle" என்று அழைக்கப்படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் 'ஜார்ஜ் ஃபோர்மேன்' அப்போதைய நடப்பு சாம்பியன். அவரை வெல்லுவது மிகக்கடினம் என கருத்துக் கணிப்புகள் சொல்லியன.

அதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம். எதிராளியை குத்துகளாலேயே மண்டியிடவைக்க கூடியவர். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர்களாலேயே நம்பப்பட்டது.

அப்போட்டியின் போதுதான், நாம் இந்த கட்டுரையின் முதல் பாராவில் பார்த்த வரிகளை அலி சொன்னார். இப்போது அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அதனுடைய அர்த்தம் முழுமையாக புரியும்.

“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக, நான் நிறைய செய்ய முடியும்.

கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.

இப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.

அச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுத்தியை இப்போட்டியில் பயன்படுத்தினார். சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துக்கொண்டு அடிகளை தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார்.

ஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் முழுமையாக சோர்வடைந்திருந்தார். இதைக் கண்ட அலி, உற்சாகமானார். அவர் காத்திருந்தது இதற்காகத்தான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டது இதற்குத்தான். எட்டாவது சுற்று துவங்கிய போதே, அலி தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார்.

இதன்மூலம் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த யுத்தி "The Rope-A-Dope" என்று அழைக்கபடுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு 'When We Were Kings'(மன்னர்களா நாம் இருந்தபோது) என்ற பெயரில் திரையிடப்பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர்(1996) விருதையும் பெற்றது.

1978 மீண்டும் மூன்றாவது முறையாக, அலி உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 27, 1979-இல் அலி ஓய்வுப்பெற்றார். அவர் கலந்துக்கொண்ட சண்டைகள் மொத்தம் 61, வெற்றி பெற்றது 56, அதில் 'நாக் அவுட்டில்' வெற்றிப்பெற்றது 37. இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள் அவை. அவர் சண்டையிட்ட காலத்தை குத்துச் சண்டை வரலாற்றின் பொற்காலம் என்கிறார்கள்.

அதன்பின், பல பொது காரியங்களில் ஈடுபட்டு, தன் இனமக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார். மக்கள் எங்கெல்லாம் அவதிப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று உதவுகிறார். இருபத்திரெண்டு மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார் என்கிறார்கள்.

1991-இல் ஐ.நா. வின் சார்பில் ஈராக் சென்று 'சதாம் உசைனை' சந்தித்து, அமெரிக்க பிணையக் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக பேசி இருக்கிறார். 1998-இருந்து 2008 வரை ஐ.நாவின் அமைதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 2002-இல் அமைதிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் சிறந்த குடிமகனுக்கான பெரிய விருதுகளான 'Presidential Citizens Medal' மற்றும் 'Presidential Medal of Freedom' ஆகிய விருதுகளை 2005-இல் அதிபர் புஷ்ஷின் கைகளால் பெற்றிருக்கிறார். எந்த அரசாங்கத்தோடு அவர் மோதினாரோ, அதே அரசாங்கம் இவரை சிறந்த குடிமகன் என்று விருது கொடுத்து கௌரவித்தது. இதைதாண்டி பல நாட்டு விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

1984-இருந்து 'பர்கின்சன்ஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று உண்டு.

1960-இல் ரோம் ஒலிம்பிக்கில் வாங்கிய தங்கப்பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்திருக்கிறார். காரணம் ஒரு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும்தான் உணவுத்தரப்படும் என்று சொன்னதனால் கோபப்பட்டு. பின்பு 1996-இல் அட்லாண்ட ஒலிம்பிக்கின் போது, தூக்கி எறிந்த பதக்கத்திற்கு பதிலாக மாற்று தங்கப்பதக்கம் இவருக்கு தரப்பட்டது.

இவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அலி(Ali) 2001-இல் வெளிவந்தது. புகழ்ப்பெற்ற இயக்குனர் 'மைக்கேல் மேன்' இயக்கத்தில் 'வில் ஸ்மித்' முகமத் அலியாக நடித்தார். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பது, ஒருவரின் சிறுவயது முதல் மரணம் வரை அல்லது சாதனைகள் வரை சொல்லப்படும். ஆனால் இப்படம் அப்படி எடுக்கப்படவில்லை.

இப்படம் ஒரு தனிமனிதனின் இனம் சார்ந்தப் போராட்டமாக, அரசியல் பார்வையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அலி தன் முதல் உலகச் சாம்பியன் பட்டம் பெறுவதில் தொடங்கி, அவரின் அரசியல் பார்வையில் சென்று, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பிறகு மீண்டும், இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டதை அவர் மீட்டெடுப்பது வரை சொல்லப்பட்டிருக்கிறது...

அற்புதமான படம். மிகுந்த தொழில்நுட்பத்தில், சிறந்த நடிப்பில், ரசனையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச்செல்லுகிறது.

ஒரு திரைப்படம் என்பது அதன் கதையம்சம், கருத்து, பொழுதுப்போக்கு என எல்லாம் தாண்டி ஒருவித உணர்வை நமக்குள் தூண்டும். என்னை பொருத்தவரை அவ்வுணர்வைக் கொண்டுதான் திரைப்படங்களை மதிப்பிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம், அது என்ன மாதிரியான படமாகவும் இருக்கலாம். ஆக்சன், த்ரிலர், நகைச்சுவை, சோகம் என ஏதோ ஒன்று, அதன் முடிவில் அது ஏற்படுத்தும் உணர்வை, முழுமையான நான் அடைந்தால் மட்டுமே, அப்படத்தை என்வரையில் நல்லபடமாக கருதுகிறேன்.

சிலப்படங்கள் நம்மை காதலில் நெகிழச்செய்யும், சோகத்தில் தள்ளாட செய்யும், நல்லவனாக இருப்பதில் சுகமிருப்பதாக நம்பச்செய்யும், உண்மையே வாழ்நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைக்கத்தூண்டும். சிலப்படங்கள் சினிமாவே இனி பார்க்க வேண்டாம் என எண்ணத்தூண்டும், அது வேறு வகை..!

இப்படம் பார்க்கும்போதே, நம்மை நம் அரசியல் அறிவோடு இணைத்துவிடுகிறது. அது தூண்டும் அறிவுப்பூர்வமான விடைகளை நோக்கிய பயணம், நம்மை ஒரு வரலாறு நிகழும் சமயத்தில் உடனிருந்த நிலையில் வைத்திருக்கிறது.

இந்தத்திரைப்படத்தின் கட்டுமானத்தை புரிந்துக்கொண்டாலும், அதை ஒரு தொழில்நுட்பாலனாக இங்கே முயற்சித்தாலும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்று. மிக கடினமான கட்டுமானத்தை கொண்டது இப்படம். இசை, ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என மாற்றி மாற்றி பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு புதிய அனுபவம். பின்னனியிசை படத்தின் முக்கால்வாசி நேரங்கள் பாடல்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

"நானே மிகச் சிறந்தவன், நானே அறிந்துக்கொள்வதற்கு முன்பாகவே அதை சொல்லிவிட்டேன்"

-முகமத் அலி

"நானே மிகச் சிறந்தவன்" என்று உலகத்திற்கு அவர் சொன்னபோது அவருக்கு வயது இருபது.

தன் வாழ்க்கையை ஒரு தனிமனிதனின் போராட்டமாக, சாதனையாக அவர் எப்போதும் பார்த்ததில்லை. தன் வெற்றி தன் இனத்தின் வெற்றியாகப் பார்த்தவர் அவர். தன் அங்கீகாரம் தன் இனத்தின் சுதந்திரத்திற்கான அங்கீகாரமாக இருக்கவேண்டும் என போராடியவர். அவர் இளம் பருவத்தில் 'மால்கம் எக்ஸ்' போன்றவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். தன் காலத்தில் 'மால்கம் எக்ஸ்' மற்றும் 'மார்டீன் லூதர் கிங்' போன்றவர்களின் படுகொலைகளைப் பார்த்தவர். அவர் காலத்திலேயே ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக ஆக முடியும் என்பதையும் கண்டவர்.

ஒடுக்கப்பட்ட இனத்தின் தனிமனித முயற்சிகள், தனிமனித சாதனைகள் யாவும் அவ்வினத்தின் அடையாளமாகவே கொள்ளப்படவேண்டும். தனிமனிதச் சாதனைகளோடு இனத்தின் விடுதலையும் சேர்த்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும், போராடினால் எதுவும் சாத்தியம் என்பதும், 'முகமத் அலி' வாழ்ந்துக்காட்டிய பாடம்.

அலி தன்னுடைய முதல் உலகச் சாம்பியன் வெற்றிக்குப் பிறகு அம்மேடையில் சொன்னார் "I shook up the world!" . அது உண்மைதான். நம்மில் பலர், நம்மால் இவ்வுலகத்தை அதிர வைக்க முடியும், அலியைப்போல என்று நம்புவதுகூட இல்லை. பெரும்பான்மையோர் தெரிந்துவைத்திருப்பதில்லை மேன்மையும், நன்மைம் பிரகாசிக்க தாங்கள் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை.

அலியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுவது நாம் இன்னும் சிறப்பானவர்களாக இருக்கலாம் (we can be more) என்பதைத்தான். நம்புங்கள் நண்பர்களே நாம் முயன்றால் இந்த உலகத்தை அதிரவைக்க முடியும்.

" மற்றவர்களுக்கு சேவை செய்வது நீங்கள் இந்த பூமியில் இருப்பதற்கு செலுத்தும் வாடகை" -முகமத் அலி

http://blog.vijayarmstrong.com/2010/06/when-we-were-kings.html

Link to comment
Share on other sites

சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - முதல் அத்தியாயம்

வில்லாடோ

சேகுவாரை புதைத்த மனிதன் அமைதியாக நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவனுக்கு உண்மைகள் எல்லாம் தெரியும். கஸ்ட்டோவோ வில்லோடோ. அமெரிக்காவின் ஒரு மூலையில் ரகசியமான இடத்தில் மாந்தோப்பு பண்ணையில் இருக்கிறான். சேகுவாராவை வேட்டையாட அலைந்தவன் அவன். சி.ஐ.ஏவின் ஏஜண்ட்டான அவனுக்கு சேகுவாராவையும், காஸ்ட்ரோவையும் பழிவாங்க வேண்டும் என்பது அடியாழத்தில் இருந்தது.

1959 ஜனவரி 1ம் தேதி கியூபாவில் பாடிஸ்டா அரசு வீழ்த்தப்பட்ட சில நாட்களில் வில்லோடோ கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறைவைக்கப்படுகிறான். உதிரி பாகங்களைவாங்கி கார்களை உருவாக்குகிற அவனது தந்தையின் கம்பெனியிலிருந்துபணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் முறையீட்டினால் அரசு இதனை செய்தது. அடுத்து கொஞ்ச நாட்களில் முந்தைய பாடிஸ்டா அரசிடமிருந்து முறையற்ற சலுகைகள் பெற்றிருப்பதாக கூறி அங்கிருந்த 360 கார்களோடு கம்பெனியையும் அரசே எடுத்துக் கொள்வதாக சேகுவாரா அறிவிக்கிறார்.

பிப்ரவர் 16ம் தேதி வில்லோடோவின் தந்தை ஏராளமான தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்து போகிறார். காஸ்ட்ரோவையும், சேகுவாரவையும் பற்றி குற்றச்சாட்டுகள் சுமத்தி நிறைய எழுதிவைத்திருந்தார். 29 நாட்கள் கழித்து வில்லோடோ கியூபாவை விட்டு வெளியேறுகிறான். கம்யூனிசத்திற்கு எதிராக மியாமியில் இருந்த அகதிகளோடு சேர்ந்து கொள்கிறான். அமெரிக்க தூண்டுதலால் காஸ்ட்ரோ அரசை எதிர்த்து கியூபாவின் மீதான பிக் வளைகுடா தாக்குதலில் பங்குபெற்று, அபாயகரமான சூழலில் உயிர்பிழைத்து நிகாரகுவாவுக்கு செல்கிறான். அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்து கொரில்லாக்கள் மற்றும் அதனை எதிர்கொள்வது பற்றியுமான பயிற்சிகள் பெறுகிறான். 1964ல் சி.ஐ.ஏவில் சேர்ந்தான்.1959லிருந்து 1970க்குள் நாற்பது தடவைக்கு மேல் கியூபாவுக்குள் ரகசியமாக நுழைந்து சி.ஐ.ஏவின் பணிகளைச்செய்திருப்பதாக கூறுகிறான். என் தந்தையை அழித்த அமைப்பை நான் முற்றிலும் எதிர்க்கிறேன் என்கிறான்.

1965ல் காஸ்ட்ரோவின் புரட்சியை இதர நாடுகளுக்கும் பரவச்செய்ய வேண்டும் என்று சே நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தகவல் வந்ததும், சி.ஐ.ஏ வில்லோடாவையும், இதர கியூப அமெரிக்கர்களையும்களத்தில் இறக்கியது.

டொமினிக் குடியரசில் சே இருப்பதாக தகவல் கிடைத்ததும் வில்லோடோ அங்கு ரகசியமாக சென்றான். அங்கு அவர் இல்லை என்பது தெளிவாகியது. பிறகு அதே வருடத்தின் கடைசியில் வில்லோடோ காங்கோ சென்றான். அங்கு கலகக்காரர்களை அரசு முறியடித்ததும் சே தப்பி விட்டதாக அறிந்தான். சி.ஐ.ஏ அவனுக்கு இட்ட பணி சே எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. சேவை உயிரோடோ அல்லது உயிரற்றோ பிடிக்க வேண்டும் என்பதே வில்லோடாவுக்கு நினைப்பாயிருந்தது.

காங்கோவுக்கு பிறகு சே மாதக்கணக்கில் மறைவாகவே இருந்தார். எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாமல் இருந்தது. முதல் எட்டு மாதங்களும் கொரில்லாத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் திட்டம் தீட்டுவதிலுமாக இருந்தார். நான்கு மாதங்கள் அமெரிக்க இராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பொலிவிய இராணுவத்திடம் கிடைக்காமல் இருந்தார். வில்லோடோ, ரொட்ரிப்கியுஸ், ஜூலியா கார்சியா ஆகிய மூன்று கியூப அமெரிக்கர்களை பொலிவியாவிற்கு சேவை கண்டுபிடிக்க சி.ஐ.ஏ அனுப்பியது.

வில்லோடோ பொலிவிய இராணுவ உடைகளையே அணிந்திருந்தான். பொலிவிய இராணுவ அதிகாரிகளுக்கே அவன் ஒரு சி.ஐஏ வின் ஆள் என்பது தெரியாமல் இருந்தது. பொலிவிய காடுகளில் சேகுவாராவோடு இருந்த பிரெஞ்சு சோசலிஸ்ட் தீப்ரேவை இராணுவம் பிடித்தது. அவரை வில்லோடோதான் விசாரணை செய்திருக்கிறான்.

சேவின் உடல் வாலேகிராண்டுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மணி நேரத்தில் வில்லோடோ அங்கே சென்றிருக்கிறான். நூற்றுக்கனக்கில் பத்திரிக்கையாளர்களும், அந்த நகரத்தின் மனிதர்களும் அங்கே குழுமி இருந்தனர்."நான் சேவை உயிரோடு பார்க்கவில்லை. அவருடன் பேச வேண்டும் என்று அக்கறையுமில்லை" என்கிறான் வில்லோடோ. மேலும்," அவர் என் தந்தையின்மரணத்திற்கு காரணமானவர் என்ற போதிலும் எனக்கு அது ஒரு பணி. அவ்வளவே" என்கிறான்.

அக்டோபர் 10ம் தேதி வாலேகிராண்டேவில் உள்ள ஒரே விடுதியானஇரண்டு மாடிக் கட்டிடமான டெரசிட்டாவில் பொலிவிய இராணுவ உயர் அதிகாரிகளும்,சி.ஐ.ஏ அதிகாரிகளும்சேவின் உடலை என்ன செய்வது என்று திட்டமிட்டனர். சேவின் உறவினர்கள் சேவின் உடலை பெற வாலேகிராண்டேவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்திருந்தது. வில்லோடா உடலை காணமல் போகச் செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கிறான்."காஸ்ட்ரோவுக்கு சேவின் எலும்புகள் கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தோம். அதை வைத்து பெரிய நினைவிடம் எழுப்பி சித்தாந்த வஞ்சனை செய்யக்கூடாது என நினைத்தோம்" என்கிறான் வில்லோடோ.

யாரோ ஒருவர் எரித்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு வில்லோடோ"அப்படி எரித்தாலும் நாம் வெளிப்படையாகச் செய்ய முடியாது. ரகசியமாக எரிப்பது என்பது காலம் காலமாக பொலிவிய இராணுவத்தை இழிவாக பேசுவதில்தான் முடியும்". என்று சொல்லி இருக்கிறான். ஜெனரல் ஒவாண்டா யாருக்கும் தெரியாமல் சேகுவாராவை புதைக்கும் பொறுப்பை வில்லோடாவிடம் ஒப்படைத்திருக்கிறான். மருத்துவ பரிசோதனை செய்த போது டாக்டர்களின் தோள்களுக்கு பின்னால் நின்று எட்டி பார்த்தபடி இருந்தான். பத்திரிக்கையாளர்கள் சென்ற பிறகு சேகுவாராவின் கைகள் அடையாளத்திற்காக வெட்டப்பட்டன. வில்லோடோ சேகுவாராவின் முடிகளை கொஞ்சம் வெட்டி வைத்துக்கொண்டானாம். இப்போதும் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கிறானாம்.

வில்லோடாவுக்கு ஒரு மெய்காப்பாளனும், கொரில்லாக்களின் உடல்களை எடுத்துச் செல்ல ஒரு டிரக்கர்டிரைவரும், மண்ணைத்தோண்டி மூட ஒரு புல்டோசர் டிரைவரும் உதவியாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

***************************************************************************************************************************************************************************************888

.

(2 ம் அத்தியாயம் கிடைக்க வில்லை கிடைச்சால் இணைக்கிறேன்)

சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 3ம் அத்தியாயம்

அமெரிக்க உளவுத்துறை...பைத்தியம் என்று சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன.

சேகுவாராவை சோவியத்தின் எதிர்ப்பாளராக சித்தரிக்கிறது இந்த ஆவணம்.

ஆனால் அமெரிக்காவிலேயே இருந்து கொண்டு 1964 டிசம்பர் 11ல் ஐ.நா சபையில் சேகுவாரா பேசியதை எங்கே கொண்டு போய் ஒளித்துவைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

அமெரிக்காவை சுட்டிக்காட்டி உலகறிய சொன்னார்:

"...நாங்கள் மார்க்சீய லெனினியவாதிகளாக இருந்தாலும் எங்களது நாடும் நடுநிலை நாடு என்று பிரகடனம் செய்கிறோம். ஏனெனில் நடுநிலை நாடுகளும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகின்றன. நாங்கள் எங்களது மக்களுக்கு உன்னதமான வாழ்க்கையை அமைத்துத் தர விரும்புகிறோம். ஏகாதிபத்தியமோ ஆத்திரமூட்டிக் கொண்டு இருக்கிறது..."

அமெரிக்கா சார்பாக பேசிய ஸ்டீவன்சன் சேகுவாராவை தாக்கி பேசினார்.

அமெரிக்க விதித்த தடையால் கியூபாவுக்கு நேர்ந்த பொருளாதாரக் கஷ்டங்களை பற்றி பேசியதற்காகவும், கம்யூனிஸ்டாக இருப்பதற்காகவும் குற்றம்சாட்டினார்.

சேகுவாரா பதில் சொன்னார்:

"கியூபாவுக்கு எதிரான அமெரிக்கப் பொருளாதாரத் தடையின் உண்மை வரலாற்றை நான் மீண்டும் கூறப்போவதில்லை. சோஷலிச நாடுகளின் சகோதர உதவியால், குறிப்பாக சோவியத் யூனியன் உதவியால் நாங்கள் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை வென்று வருகிறோம். எதிர்காலத்திலும் வெல்லுவோம் என்று கூறிக் கொள்கிறேன்".

சோவியத் யூனியன் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த ஒரு மனிதரைத்தான் சி.ஐ.ஏ ஆவணம் தன் இஷ்டம் போல சிதைக்க முயற்சிக்கிறது.

புரட்சி பற்றிய சில விமர்சனங்கள் என்னும் தனது கட்டுரையில் சே எழுதுகிறார்... "கியூபாவை மண்டியிடச் செய்ய வேண்டுமென்று விரும்பிய எதிரிகள் கியூபாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்திய போது சோவியத் துறைமுகங்களில் இருந்து தேவையான அளவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சோவியத் கப்பல்கள் கியூபா நோக்கி புறப்பட்டன. கியூபாவை அடிபணியச் செய்ய வேண்டுமென்று விரும்பிய எதிரிகள் சர்க்கரை வாங்க மறுத்த போது சோவியத் வாங்கிக் கொண்டது. அமெரிக்க மண்ணிலிருந்து செலுத்தப்பட்ட படையெடுப்பு ஆயத்தங்களை சோவியத்தின் எச்சரிக்கை தடுத்து நிறுத்தியிருப்பதால்தான் கியூபா இன்று இறையாண்மையோடு இருக்க முடிகிறது".

சேவின் இந்த வார்த்தைகள் சி.ஐ.ஏவின் வார்த்தைகளை சுட்டு வீழ்த்துகின்றன.

via fb,,,

Link to comment
Share on other sites

வரலாற்று நாயகி!

"திருமணம் ஆகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் மகளாக பிறந்தவள் நான், அதனால் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். சிறிய வயதில் தாய் தந்தையரின் அன்புக்கு ஏங்கிய எனது சுட்டித்தனத்தை பொறுக்க முடியாமல் என் பாட்டி என் அம்மா வீட்டுக்கு துரத்தி விட்டார். நான் அங்கு வந்தது பிடிக்காத என் தாய் என்னை வெறுத்தார். அந்தக்கால கட்டத்தில் என் தாயின் உறவினர் சிலர் சிறுமி என்று கூட பாராமல் என்னை கதற கதற கற்பழித்தனர். பதினான்காவது வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையும் பெற்றேன். குறை பிரசவத்தில் பிறந்த அந்தக் குழந்தை சில நாட்களிலேயே இறந்து போனது. எவருடைய மடியிலாவது முகம் புதைத்து வலி தீரும் வரை அழ வேண்டும் போல இருந்தது"

பிரபலத்தின் உச்சியில் இருந்த ஒரு பெண் தன் கெளரவம் பாதிக்கப்படுமே என்று கொஞ்சமும் அஞ்சாமல் மில்லியன் கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தக் கதையைக் கூறியபோது ஒரு தேசமே வாயடைத்துப் போனது.

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்பதுதான் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்பு. அந்த நிகழ்ச்சியை வழிநடத்தியவரே கூறிய தன் சொந்தக்கதை அது. அதன்பிறகு பலர் தங்களது கருத்துக்களைகூற "குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்" என்று ஒரு புதிய சட்டத்தையே அறிமுகம் செய்தது அந்த தேசம். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் அந்தப்பெண் எதைப்பற்றி பேசினாலும் அந்தக் கருத்துகள் நாடு தழுவிய அளவில் சிந்தனைகளை தூண்டிவிட்டன, பலரின் மனசாட்சிகளை கிண்டிவிட்டன. மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதன் முன் மண்டியிட்டன. அவரது நிகழ்ச்சியில் முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளர் தோன்றினால் அடுத்த நாளே அவர் எழுதிய புத்தகங்களின் விற்பனை விண்ணை முட்டும். ஒருமுறை மாடுகளுக்கு ஏற்படும் மூளைக் காய்ச்சல் நோய் பரவியிருந்த சமயத்தில் தனக்கு 'ஹேம்பர்கர்' சாப்பிட பயமாக இருக்கிறது என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்ன ஒரு வார்த்தையால் அந்த தேசத்தின் மாட்டிறைச்சி வியாபாரமே நொடித்து போகுமளவுக்கு மோசமடைந்தது.

அந்த அதிசயப்பெண் யார்? என்பது இந்நேரம் உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இன்று 132 நாடுகளில் அவரது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமெரிக்காவில் மட்டும் தினசரி சுமார் 22 மில்லியன் பேர் சலிப்பு தட்டாமல் அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கின்றனர். இத்தனைக்கு அது ஒரு இசை நிகழ்ச்சியோ, விளையாட்டு நிகழ்ச்சியோ, கதம்ப நிகழ்ச்சியோ அல்ல. Talk Show எனப்படும் பேச்சு நிகழ்ச்சி. ஆம் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத சிகரங்களை தொட்டு இன்றும் சின்னத்திரையின் ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் ஆப்ரா வின்ஃப்ரெயைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

1954 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாநிலத்தில் Kosciusko என்ற ஊரில் பிறந்தார் Oprah Gail Winfrey. திருமணம் செய்து கொள்ளாத Vernon Winfrey & Vernita Lee இருவரும் மகள் ஆப்ரா பிறந்தவுடனேயே பிரிந்தனர். பெற்றோரின் அன்பும் அரவனைப்பும் இல்லாமல் பாட்டியின் வீட்டில் வளர்ந்தார் ஆப்ரா. ஆறு வயதானபோது அவர் தாயுடன் வாழச் சென்றார். அந்தக்கால கட்டத்தில்தான் உறவினர்களின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஆப்ரா இளம் குற்றவாளிகளை தடுத்து வைக்கும் இல்லத்திற்கு முதலில் அனுப்பப்பட்டார் அங்கே இடம் இல்லாததால் உடலிலும், மனதிலும் பல ரணங்களை சுமந்து கொண்டு தனது 14 ஆவது வயதில் Nashville-யில் இருந்த தனது தந்தையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

முடி திருத்தும் வேலை செய்து வந்த தந்தை மிகவும் கண்டிப்பானவர். தனது மகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துக் கொடுத்து அவற்றைப் பின்பற்ற சொன்னார். வாழ்க்கைக்கு வழிகாட்டினார் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி அறிக்கை எழுத வேண்டும். தினசரி ஐந்து புதிய சொற்களை கற்றுக்கொள்ளா விட்டால் ஆப்ராவுக்கு இரவு உணவு கிடையாது. இரவில் வெகுநேரம் வெளியில் இல்லாமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடையே கட்டுக்கோப்பாக வளர்ந்தார் ஆப்ரா. நிறைய வாசித்ததால் அவருக்கு நன்றாகவும், சுவாரசியமாகவும் பேசும் தைரியம் வந்தது. பள்ளியில் நாடகக் குழுவில் சேர்ந்து சிறந்த பேச்சாளருக்கான ஆயிரம் டாலர் பரிசை வென்றார்.

Oprah-Winfreys-School-Photo1.jpg

Nashville - நகரத்தின் Miss Fire Prevention - என்ற தீ தடுப்புப் பட்டத்தை வென்றார். அதனை வென்ற முதல் கருப்பினப் பெண் அவர் என்பது குறிப்பிடதக்கது. 1971- ஆம் ஆண்டில் அவருக்கு 17 வயதானபோது Miss Black Tennessee என்ற கருப்பு அழகி பட்டத்தை வென்றார். அதே ஆண்டு W-VOL என்ற வானொலியில் அவருக்கு பகுதிநேர செய்தி வாசிப்பாளர் வேலை கிடைத்தது. ஒளிப்பரப்புத் துறையில்தான் பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய ஆப்ராவுக்கு படித்துக் கொண்டிருந்தபோதே CBS தொலைக்காட்சியில் இரவு செய்திகள் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியை செய்து கொண்டே 1976 ஆம் ஆண்டு டென்னஸி ஸ்டேட் ( Tennessee State University) பல்கலைக்கழகத்தில் பேச்சுத்தொடர்பு மற்றும் நாடக கலைத் துறைகளில் பட்டம் பெற்றார். அதன் பிறகு Baltimore வந்த ஆப்ரா இன்னொரு புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ABC-யில் ஒரு நிருபராகவும், செய்தி வாசிப்பாளராகவும் சேர்ந்தார்.

செய்தி வாசிக்கும்போது எதாவது தவறு செய்தால் மற்றவர்கள் மன்னிக்கவும் என்று சொல்வார்கள். ஆனால் ஆப்ரா கணிரென்று சிரித்து விடுவார். ஒருமுறை விபத்து ஒன்றில் பொதுமக்கள் இறந்த செய்தியை தொலைக்காட்சியில் வாசித்த போது அழுது விட்டார். இவற்றால் அவரை செய்திப் பிரிவிலிருந்து தூக்கி Talk Show எனப்படும் பேச்சு நிகழ்ச்சிக்கு மாற்றியது நிர்வாகம். எழுதியதை வாசிப்பதை விட பேச்சு நிகழ்ச்சியில் இயல்பாக பேச முடியும் என்பதால் ஆப்ராவின் பல்வேறு பரிணாமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கின. 1984 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிக்காக்கோ வந்த ஆப்ராவுக்கு பிரபலத்தில் அடிமட்டத்தில் இருந்த AM Chicago என்ற காலை நேர பேச்சு நிகழ்ச்சியை பிரபலமாக்கும் கடினமான பொறுப்பு வழங்கப்பட்டது. ஒரே ஆண்டின் அதனை சிக்காக்கோவில் அதிக பேர் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக மாற்றிக் காட்டினார் ஆப்ரா.

50913.opahanddaniparents.jpg

அவரது திறமையைப் பார்த்து மலைத்துப்போன அந்த தொலைக்காட்சி நிறுவனம் அடுத்த ஆண்டே அந்த நிகழ்ச்சியை "The Oprah Winfrey Show" என்று பெயர் மாற்றம் செய்தது. 1985 செப்டம்பரில் தொடங்கிய அந்த நிகழ்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் ஓர் அசாதாரண சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டே அந்த நிகழ்ச்சி அமெரிக்கா முழுவதும் ஒளிபரப்பத் தொடங்கியது. அதன் பிறகு ஆப்ராவும், அவரது நிகழ்ச்சியும் வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளை பட்டியலிட நேரம் போதாது. 1985-ஆம் ஆண்டில் 'The Color Purple' என்ற திரைப்படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார் ஆப்ரா. 1986-ஆம் ஆண்டு 'Harpo Productions' என்ற தனது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு தனது சொந்த நிகழ்ச்சியின் உரிமையை வாங்கினார்.

oprahindex.jpg

வரலாற்றில் 'Talk Show' நிகழ்ச்சியை சொந்தமாக தயாரித்து விநியோகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1993-ஆம் ஆண்டு அவரது உந்துதலின் பேரில்தான் பிள்ளைப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார் அப்போதையை அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன். அந்த சட்டம் "ஆப்ரா மசோதா" என்றே அழைக்கப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு "Oprah's Book Club" என்ற புத்தகச் சங்கத்தை நிறுவினார். அவரது நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்படும் எல்லாம் புத்தகங்களும் அசுர வேகத்தில் விற்று முடியத் தொடங்கின. 1997 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய "Oprah's Angel Network" என்ற அறநிதி அமைப்பு பல்வேறு அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. 2000-ஆம் ஆண்டு தொடங்கி அந்த அமைப்பு ஒவ்வொரு திங்கட்கிழமையும் "Use Your Life" எனப்படும் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்துங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பரிசை வழங்கி வருகிறது.

osmond1_468x352.jpg

ஒவ்வொரு வாரமும் தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கைக்கு நன்மை செய்யும் ஒருவருக்கு நூறாயிரம் அமெரிக்க டாலரை பரிசாக வழங்குகிறார் ஆப்ரா. 1998-ஆம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க தேசிய தொலைக்காட்சிக் கழகம். 2000-ஆம் ஆண்டில் தமது சொந்த சஞ்சிகையைத் தொடங்கினார். மாதம் இரண்டரை மில்லியன் பிரதிகள் விற்பனையாகின்றன. இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க நூறு பேரின் பட்டியலில் ஆப்ராவுக்கும் இடம் தந்திருக்கிறது டைம் சஞ்சிகை. 2003- ஆம் ஆண்டில் பில்லியனர் அதாவது ஆயிரம் மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆப்ரா என்று அறிவித்தது ஃபாக்ஸ் சஞ்சிகை. அந்த பெருமையை பெற்ற முதல் அமெரிக்க ஆப்பிரிக்கா வம்சா வழி பெண் ஆப்ரா என்பது குறிப்பிடதக்கது.

Oprah-Winfrey_Charity.jpg

என்ன மூலதனத்தைக் கொண்டு ஆப்ரா வின்ஃப்ரெ இவ்வுளவு பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார். கருப்பினத்தவர் என்ற பின்னடைவையும், திருமணம் ஆகாதோருக்கு பிறந்தவர் என்ற களங்கத்தையும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர் என்ற வலிகளையும், மற்ற பல ரணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவரால் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்க முடிகிறதென்றால் அதற்கு தன்னம்பிக்கையும், கடும் உழைப்பும், விடாமுயற்சியும், சமூகசீர்கேடுகள் தீர வேண்டும் என்ற உயரிய எண்ணமும், சமூக கடப்பாடும் காரணமாக அல்லாமல் வேறு எவை காரணங்களாக இருந்திருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்....ஆப்ரா வின்ஃப்ரெயைப் போன்று நமக்கும் சில ரணங்களும், வலிகளும் இருந்தாலும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் கடினமாக உழைத்தால் உலகில் நம்மாலும் மாற்றங்களை கொண்டு வரமுடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்!.

www.urssimbu.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு நன்றி வீணா

Link to comment
Share on other sites

கொஞ்சம் நல்ல தகவல்கள்

மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது

*****************************************************************************************************************************************

யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் “Jerry and David’s Guide to the World Wide Web” என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் “Yet Another Hierarchical Officious Oracle” என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

********************************************************

கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “Googol” என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு “Google” என்ற பெயர் கிடைத்தது. அது கூட இ...ந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் “Google”" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்

****************************************************************************************************************************************

அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது..

***************************************************************************************************************************************

ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – “Bite into an Apple” என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் “Think Different” என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க ...வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

***************************************************************************************************************************************************

ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, ...இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

******************************************************************************************************************************************************

இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை “Moore Noyce” என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள...். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் Integrated Electronics என்ற பெயரைச் சுருக்கிI NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது

**************************************************************************************************************************************************************

via facebook..

நல்லதொரு பதிவு நன்றி வீணா

நன்றி ரதி அக்கா அடிக்கடி வாங்க இந்த பக்கம்..:)

Link to comment
Share on other sites

fidal-castro.jpg

50 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட பிடல் காஸ்ட்ரோ சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவினால் சகோதரர்.ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தனது பதவியில் இருந்து விலகினார்.பொதுவாக நீண்டகாலம் ஒருவர் நாட்டை ஆளுவது என்பது இலகுவான காரியம் இல்லை அதுவும் மக்கள் மனங்களை வெல்வது அதைவிட கடினம்.பிடல் காஸ்ட்ரோவில் கியூபா மக்கள் வைத்திருக்கும் அன்பும்,மரியாதையும் தான் அவரால் கியூபாவை உலக அரங்கில் பேச வைக்க முடிந்தது.

4-20-2011-3-fidel-castro-resigns-from-cuba.jpg

இன்று வரை கியூபா ஒரு கம்யூனிச தேசமாக இருப்பதற்கும் இந்த நிமிடம் வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம். பிடல் காஸ்ட்ரோ என்ற மனிதர் தான்.

பிடல் காஸ்ட்ரோ சில குறிப்புக்கள்

1926 ஆகஸ்ட்13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு

1945-50 – அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.

1952 – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.

1953 –ஜுலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். இரண்டாண்கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.

1955 – ஜுலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.

1956 -டிசம்பர் 2 – கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.

che_and_fidel_castro.jpg

சேகுவரா & பிடல் காஸ்ட்ரே

1959 – காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.

1960 – குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.

1961 – அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.

1962 – கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.

1976 – கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.

1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.

1980 – அகதி நெருக்கடி – சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.

1991 – சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.

1993 – கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.

1996 – கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.

2000 – ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!

2002 – ‘தீய நாடுகளின்’ அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.

2006 – ஜுலை – அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.

2008 – பெப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகளை அறிவிக்கிறார்.

#########################################################################################

பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன் சே குவேரா

உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள்.ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர். ஆம் உலகில் பெரும்பாலான விடுதலை வீரர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு தேசவிடுதலைக்காக போராடி.அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து இன்னும் ஒரு தேசத்திற்காக போராட சென்று.துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன்.

che1.jpg

செல்வந்த குடும்பத்தில் பிறந்து,ஒரு மருத்துவராக பட்டம் பெற்ற சேகுவரா நினைத்திருந்தால் தன் காலம் முழுவதும் வசதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்க முடியும் ஆனால் அனைத்தையும் துறந்து ஓடுக்கப்படும் மக்களுக்காக அதுவும் வேறு நாட்டு மக்களுக்காக போராடிய இவரை என்னவென்று புகழ்வது?

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் (Argentina) உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் (Ernesto Guevara Lynch), சிசிலியா டெ ல செர்னா (Sisiliya de la Serna) தம்பதியர்களுக்கு முதல் மகனாக பிறக்கின்றார். அவர்கள் தங்களுக்கு பிறந்த முதல் குழந்தையை முத்தமிட்டு மகிழ்ந்தனர்.

அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா (Ernesto Guevara de la Serna) என பெயர் சூட்டினர்.

அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை இந்தக்குழந்தை எதிர்காலத்தில் உலகவரலாற்றில் மாவீரனாகவும்,இன்னும் ஒரு தேசத்தின் விடிவை பெற்றுக்கொடுக்கும் சூரியனாக திகழ்வான் என்று.

சே குவேராவிற்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும்.

நீச்சல் ஈடுபாடு கொண்ட அவரது தாய், ஒரு குளிர் காலைப்பொழுதில் நதிக்கு தன் குழந்தையை அழைத்துச் சென்றார். நடுக்கமூட்டும் குளிர் நதியில் தன் குழந்தையை அவர் நீராடவைக்க, ஈர உடையில் கிடுகிடுத்துக்கிடந்த குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, ஆஸ்துமா அவரை இறுகப்பற்றியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார்.

இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். ஆடுகளத்தில் பின்னிருந்து ஆடும் தடுப்பாட்டக்காரனின் நிலையிலேயே பெரும்பாலும் விளையாடுவார்.. இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ரக்பியும் அவருக்குப் பிடித்தமான மற்றொரு விளையாட்டான சதுரங்கமும், எதிரிகளை வீழ்த்தும் தந்திரங்களைக் கொண்டு இருந்தது ஆச்சர்யமான ஒன்று. பிற்காலத்தில் போர்க்களத்துக்குத் தேவையான மன இயக்கத்தை, சிறுவயதிலிருந்தே அவருக்கே தெரியாமல் அவருக்கான சூழல்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார்.

தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம். பெரு (Peru) நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது.

தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்துவிளையாடிய ‘சே குவேராவின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.

பொதுவுடமை சமூகத்தில்,உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும். எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும். மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது அறவே தவிர்க்கப்படுகிறது. இந்த வளங்களை கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய வர்க்க மக்களின் வாழ்க்கைதரம் மேம்படுத்தப்படுகிறது. பொருளியல் துறை சார்ந்தவர்கள் இது தொடர்பில் அறிந்திருக்கலாம்.

இந்தகொள்கை தொடர்பான அறிவு சேவிற்கு வரக் காரணம் நூல்கள் மட்டுமன்றி இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே மார்க்சியம் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

மார்க்சியம் என்பது கார்ல் மார்க்கஸ் போன்ற மேய்யியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ஆகும். மார்க்சியம் (Marxism) என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமானது, இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது. இதனை பொது உடமை என்றும் வரையறுக்கின்றார்கள். 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே குவேரா முழுவதுமாக மாறியிருந்தார்.

இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜென்டீனாவுக்குத் (Argentina) திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல், மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா (Bolivia) , பெரு (Peru), ஈக்குவடோர் (Ecuador), பனாமா (Panama), கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா (Nicaragua ), ஹொண்டூராஸ் (Honduras), எல் சல்வடோர் (El Salvador ) ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்.

உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார். ஏற்கெனவே அவருக்குள் உருவாகியிருந்த அமெரிக்கா மீதான கோபத்தை குவேதமாலாவின் அரசியல் சூழல் அதிகப்படுத்தியது. குவேதமாலா கம்யூனிஸ்ட் ஆதரவு அரசைக்கவிழ்க்க, அமெரிக்கா தன் சி.ஐ.ஏ. மூலமாக தீவிரமாகச் செயல்பட்ட தருணம்.

குவாத்தாமாலா நகரில், ஹில்டா கடேயா (Hilda Gadea) அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவரை பிற்காலத்தில் சே குவேரா திருமணம் புரிந்தார் இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக்காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

சே’, அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத் துக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், அமெரிக்கா தனது எண்ணத்தைச் சுலபமாக நிறை வேற்றி ஜேக்கப் அர்பான்சோ அரசைக் கவிழ்த்தது. 1954ம் ஆண்டு ஜூன் மாதம் குவாத்தாமாலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவர் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார். அது குறித்த ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். விவசாயிகளிடம் குவேதமாலா அரசு, ஆயுதங்களைக் கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபடச் செய்திருந்தால் அமெரிக்காவின் சதியை முறியடித்திருக்கலாம் எனும் பார்வையில், ‘சே’ கட்டுரைகள் எழுதினார். இதனால் சி.ஐ.ஏவின் பார்வைக்கு இலக்கானார். பாதுகாப்புக்காக அர்ஜென்டினா தூதரகத்தில் தங்கநேரிட்டது.

.இச்சமயத்தில், அவரது எண்ணங்களால் ஒரு கியூபா போராளி வசீகரிக்கப்பட்டார். அவர் பெயர் நிக்கோ லோபஸ். கியூபாவின் ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்ட்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் ஒரு புரட்சி ஏற்படுத்திய ‘ஜூலை 26’ எனும் இயக்கம் அப்போதுதான் தோல்வியைச் சந்தித்திருந்தது.

நிக்கோலோபஸ்க்கு, குவேத மாலாவில் ‘சே’வைச் சந்தித்தபோது புத்துணர்ச்சி ஏற்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.

பிடல் காஸ்ட்ரோவுடனான சந்திப்பும்,கியூபாவில் போராட்டமும்

castrche.jpg

பிடல் காஸ்ரோ ,சே குவேரா

கியூபா மண்ணின் தலைஎழுத்தை மாற்றிய அந்த சந்திப்பு 1955, ஜூலை மாதம், ஒரு இரவில் மெக்ஸிகோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நடக்கின்றது. அடுத்த சில நொடிகளில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நிகழ்ந்தது. சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் வெவ்வேறு துருவங்கள். காஸ்ட்ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை. ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்த போது… சக்திகள் இடம் மாறின.

இரண்டு மகத்தான சக்திகள் இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அத்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார்.

புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது. காலநிலையில் ஏற்பட்ட சிக்கலால் படகு எதிர்பார்த்த இடத்தை எதிர்பார்த்த நேரத்தில் அடைய முடியாமல் போகின்றது. இதனால் இராணுவம் சுதாரித்துக் கொள்கின்றது. இச் சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழக்கின்றனர். மிஞ்சியவர்களின் துணையோடு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வரும் இரயில் கவிழக்கபடுகின்றது இராணுவத்தினர் சிறைபிடிக்கபடுகின்றனர்.

70175308_8eb8fb247c_o.jpg

சே குவேரா ரால் காஸ்ட்ரோ மற்றும் பிடல் காஸ்ரோ

1957, ஜனவரி 17ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற ‘சே’, தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார்.. கொரில்லாப் படைக்குக் கமாண்டராக அறிவிக்கப்பட்ட ‘சே’ கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர் காடுகளிலும், மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார்.

”சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்’’போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு தெம்பூட்டி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் ‘சே’வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. 1958ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் (Santa Clara) கைப்பற்றினார் . கியூபாவை ஆண்ட கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான். 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த்தியது.

1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் சேகுவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டார். விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் ‘சே’. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். ‘சே’ மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார்.

அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்’’ என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்நிலையில் காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்துக்குப் பிறகு, ‘சே’ 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார்.

விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு ‘சே’ நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு ‘சே’வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ (Raul castro) ‘சே’வை சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது ‘சே’வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் ‘சே’ கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு.

அது மட்டுமன்றி வேறு சில காரணங்களும் சொல்லபடுகின்றது அவை 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.

1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டார். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினார்

.

சே எங்கே?’ பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. ‘சே’வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது.

காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ‘சே எங்கே?’ எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ

உண்மையில் ‘சே குவேரா பிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தார்.

அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தார். அவரது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார். காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற போராளிகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தார்.

இந்த மாவீரனின் தோல்விக்கான வரலாறு எழுதப்பட தயாராகி கொண்டிருக்கின்றது இதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவர்.

1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் தீவு நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் .

இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது.

பொலிவியாவில் நடந்த கொரில்லாப் புரட்சியின் போது பொலிவியக் காடுகளில் பதுங்கி இருந்தார். தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம்.

இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து ‘சே’வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் ‘சே’ காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30… காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் ‘சே’. நான்இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார்.

chestretcherr_468x317.jpg

காலில் குண்டு அடிபட்ட நிலையில் சே குவேரா

மாலை 5.30… அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.

இரவு 7.00… ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது.. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று ‘சே’ கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்டோபர் 9அதிகாலை 6.00… லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.

பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. ‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.

4545_1157427621744_1409354433_30422467_5748699_n.jpg

காலை 10.00 ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏவிடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’… 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது.. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப்

பணியமர்த்தப்படுகிறார்.

நண்பகல் 1.00 கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார்.

தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!

மணி 1.10 மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றது. ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

அக்டோபர் 18…. கியூபா… ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.

சேகுவேரா உண்மையில் இறந்தது அக்டோபர் மாதம் 9ம் தேதியாகயிருப்பினும், கியூபாவில் இன்றும் ஒவ்வொரு அக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின் நினைவு நாளாக அவனது பங்களிப்புக்கு தலை வணங்கி போற்றுகின்றனர். குவேராவின் நினைவாக நிகழ்வுகளும், கியூபாவின் அரசு தரப்பிலிருந்து வெளிவரும் நாளேடான ‘க்ரான்மா ‘வில் நினைவஞ்சலியாக பல பக்கங்கள் ஒதுக்குவதும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் இயக்கமான ‘பயனீயர்ஸ் ‘ என்ற இயக்கத்தில் ஆறு வயது சிறுவர்கள் சேர்ந்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

அப்போது அவர்கள் சுயநலமில்லாமல் சமுதாயத்திற்கே தங்களை அர்ப்பணிக்க உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

எந்த மண்ணிலோ பிறந்து எந்த மண்ணிற்காகவோ போராடி எந்த மண்ணிலோ துணிச்சலாக மரணத்தை சந்தித்த சே குவேரா இந்த யுகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த விடுதலைப்போராளி.

”புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”

http://www.nanparkal.com

Link to comment
Share on other sites

புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் (வரலாற்று நாயகர்)

நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.

1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ.

Bruce_Lee_Biography.jpg

1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்' அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ.

இயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்கு இருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர்.

அப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாக ஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோன புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.

bruce-lee-wallpaper-1.jpg

தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.

Bruce-Lee-bruce-lee-120953_690_709.jpg

அதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம் தந்த வெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டுக்காக “என்டர் தி டிராகன்” என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுர வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன.

“என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது அவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில் அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை.

51Q6WG3H75L.jpg

புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த “என்டர் தி டிராகன்” படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளை முடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின் கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையே சேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமான இளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்கு சான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம் என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவது என்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லி போன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார்.

bruce-lee-wallpaper-3.jpg

அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல் இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும் தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டிய உழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தை வசப்படுத்தின. நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல தேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடா முயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக் கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!

இவையும் உங்களுக்கு பிடித்து இருக்கலாம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96935&view=findpost&p=734580

http://http://www.yarl.com/forum3/index.php?showtopic=96935&view=findpost&p=737836

http://urssimbu.blogspot.com

Link to comment
Share on other sites

இயக்குநர் விக்ரமன் ..!

பல நல்ல விஷயங்களின் துவக்கத்திற்கு பின்புலமாக சில கசப்பான உண்மைகள் நிச்சயம் இருக்கும்..! பல சாதனைகளுக்குப் பின்னால் நிச்சயமாக சில வேதனைகளும் இருக்கத்தான் செய்யும்.. சாதனைகளையும், துவக்கத்தையும் மட்டுமே நாம பேசுவோமே தவிர.. அதற்குத் தூண்டுதலாக இருந்தது எது என்பதையும், அதனை அடைய சாதனையாளர்களும், ஊக்கப்படுத்தியவர்களும் பட்ட கஷ்டத்தை நாம் அறியோம்..!

தமிழ்ச் சினிமாவில் 'வித்தக இயக்குநரான' இயக்குநர் விக்ரமன், புதிய இயக்குநர்களுக்கெல்லாம் முன்னோடி.. புதிதாக திரையுலகில் நுழையத் துடிக்கும் தற்போதைய இயக்குநர்களுக்கெல்லாம் நிச்சயமாக ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 'புது வசந்த'த்தில் ஆரம்பித்து இன்றுவரையிலும் தனது டிரேட் மார்க்கை இம்மியும் விலகாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்..! குடும்பத்தோடு படம் பார்க்கச் செல்ல 'விக்ரமன்' என்ற பெயர் போஸ்டரில் இருந்தாலே போதும் என்னும் அளவுக்கு பெயர் பெற்றிருப்பவர்..!

திரைத்துறையில் இன்னொரு நல்ல பெயரும் அவருக்கு உண்டு. அது உதவி இயக்குநர்கள் பலரும் நன்றியுணர்வோடு நினைவு கூர்கிறார்கள் அண்ணன் விக்ரமனின் பாசத்தை.. "மாசம் பிறந்தால் துணை, உதவி இயக்குநர்களுக்கான சம்பளக் கவர் அவரது அலுவலகத்தில் தயாராக இருக்கும்.. என்றைக்கும் தாமதமாகாது..! வேலையே இல்லை என்ற காலத்தில்கூட உடன் இருப்பவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் கொடுப்பதை நிறுத்தாதவர் எங்க டைரக்டர்.." என்கிறார்கள்..!

'புது வசந்தம்' படத்தில் இவர் துவக்கி வைத்த ஒரு புதிய அலை, இன்றுவரையிலும் ஓயவில்லை..! அத்தோடு இவரும் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இணைந்து கொடுத்த பல மெலடிகள் இன்றைக்கும் இசையுலகில் பேசப்பட்டு வருகிறது..! இதைவிடவும், பல புதிய, புதிய கவிஞர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்வித்த விக்ரமனின் பரந்த சேவைதான் இன்றைக்கு தமிழ்ச் சினிமாவுலகத்தில் இத்தனை புதிய கவிஞர்களுக்கு வருகைக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது..! அண்ணன் விக்ரமனின் இந்த அறிமுக வெறிக்கு, பின்புலமாக ஏதாவது காரணம் இருக்குமோ என்று யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.. ஆனால் இருந்திருக்கிறது.

நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற 'அமிர்தயோகம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்தான் இதனை வெளியிட்டார் அண்ணன் விக்ரமன்..!

amirtha-yogam-pictures059.jpg

இவருக்கு முன்பாகவே அந்த விழாவில் பேசிய அப்படத்தின் இசையமைப்பாளர் திரு.ஆர்.கே.சுந்தர், “இப்போதைய தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள், இசைஞானி இளையராஜா வாங்கும் சம்பளத்தைவிட ஒரு பைசாகூட அதிகம் வாங்கத் தகுதியில்லாதவர்கள்..!” என்றார் ஆணித்தரமாக.. அதேபோல் பாடல் கம்போஸிற்காக வெளிநாடுகளுக்கு பறக்கும் கலாச்சாரத்தையும் கண்டித்தார்.. “தாய் நாட்டில், சொந்த ஊரில் வராத இசை அறிவு, தாய்லாந்து போனால் மட்டும் வந்துவிடுமா என்ன..? அப்படி நாடு, நாடாக சுற்றி செலவு செய்யும் காசை படத்தில் போட்டாலாவது தயாரிப்பாளருக்கு உதவுமே..?” என்றார்..

இதன் பின்பு பேச வந்த அண்ணன் விக்ரமன் “நானும் நிறைய பட விழாக்கள்ல கலந்துக்குவேன். ஆனா அடுத்த நாள் பேப்பர்ல பார்த்தா என் பேரே இருக்காது..” என்று துவக்கத்திலேயே பத்திரிகையாளர்களை வாரிவிட்டார். தொடர்ந்து இசையமைப்பாளர் ஆர்.கே.சுந்தரின் பேச்சை ஒட்டியே பேசிய விக்ரமன், தான் படமெடுத்த காலத்தில் பெரும் கவிஞர் ஒருவருக்கும், அவருக்கும் நடந்த மோதல் பற்றி சுவாரஸ்யமாகச் சொன்னார்.

vikraman.jpg

“புதிய மன்னர்கள்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைச்சார். அந்தப் படத்துக்கு பாட்டு எழுதினாரு ஒரு பெரிய கவிஞர்.. அவர் எழுதின ஒரு பாட்டுல சில இடத்துல எனக்கு திருப்தியில்லை. அதுனால இடைல இடைல நான் திருத்தம் சொல்லிக்கிட்டேயிருந்தேன். அவரும் செஞ்சாரு.. 9, 10 முறை திருத்தம் சொன்னப்புறம், “நான் பாரதிராஜா, பாலசந்தர் முதற்கொண்டு, பெரிய இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் பாட்டு எழுதியிருக்கேன். ஆனா யாரும் உங்களை மாதிரி இப்படி திருத்தம் சொன்னதே இல்லை. நீங்க மட்டும் ஏன் இப்படி பண்றீங்க..?”ன்னு கேட்டார். நான் எந்தப் பதிலும் சொல்லலை. அமைதியா இருந்துட்டேன்..

உடனேயே அங்கேயிருந்து நேரா ரஹ்மான்கிட்ட போனேன்.. ‘ஸார்.. இந்த செட்டப் எனக்கு ஒத்து வராதுன்னு ஃபீல் பண்றேன்.. அதுனால அவர்கூட வொர்க் பண்ண முடியாதுன்னு'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..! அதுக்கப்புறமா அந்தப் பாட்டுக்கு பழநிபாரதியை எழுத வைச்சு அதைப் பயன்படுத்திக்கிட்டேன்..!

ஆனா அந்தச் சம்பவம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சுச்சு.. அந்தக் கவிஞர் அளவுக்கு நான் இலக்கியம் படிச்சவனில்லைன்னாலும், 50 சதவிகிதமாவது தமிழ் இலக்கியம் பத்தி எனக்கும் தெரியும்.. ஏன்னா நான் பிளஸ் டூலேயே சிறப்புத் தமிழ் படிச்சவன். நான் எந்த அளவுக்கு புத்தகங்களை வாசிச்சவன்.. நேசிக்கிறவன்.. படிச்சவன்றது தமிழ் இண்டஸ்ட்ரில நிறைய பேருக்கு தெரியும்..! ஆனாலும் அவர் ‘நீங்க ஏன் திருத்தம் சொல்றீங்க?’ன்னு கேட்டது என்னை புண்படுத்துச்சு.

அதுக்கப்புறமாத்தான் இனிமே எல்லா படத்துலேயும் புதிய, புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியே ஆகணும்னு எனக்கு வெறியே வந்திருச்சு. அதையும் செஞ்சேன்.. இப்போ கணக்கற்ற அளவுக்கு புதிய கவிஞர்கள் தமிழ்ச் சினிமாவுக்கு கிடைச்சிருக்காங்க.. இதுக்குப் பின்புலமா நான் இருந்திருக்கேன்னாலும், முக்கியக் காரணம், அந்தக் கவிஞர்தான்..” என்றார்.

அந்தக் கவிஞர் யார் என்பதை அண்ணன் விக்ரமன் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இதைப் படிப்பவர்கள் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்..!

ஆக.. ஒரு கவிஞரின் கோபம்.. கோபத்தைத் தாங்க முடியாத இயக்குநரின் அறச்சீற்றம்.. இவையிரண்டும் சேர்ந்து தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு நிறைய கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் நல்ல இசை கிடைக்க வாய்ப்பாக இருந்திருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சினிமா நியூஸ்..!

அண்ணன் விக்ரமனை பத்தி ரொம்ப நாளா உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைச்சுக்கிட்டேயிருந்தேன். இப்போ இட்லி-வடை பதிவுகளை நான் எழுதாததால 'படித்ததில் பிடித்தது' பகுதி இல்லாம, இதை போட முடியலை. இதுதான் சாக்குன்னு நினைச்சு இந்த இடத்துல இதையும் சேர்த்துக்குறேன்..

அண்ணன் விக்ரமன் தனது திரையுலக அனுபவங்களை “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற தலைப்புல புத்தகமா வெளியிட்டிருக்காரு. அதுல நான் படிச்சு கண்ணு கலங்குன ஒரு பகுதியை இங்கே உங்களுக்காக டைப்பி தர்றேன்.. படிச்சுப் பாருங்க..! சினிமாவுலகத்தின் உண்மையான கலைஞர்கள் எங்கேயிருந்து, எப்படி உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்..!

“புது வசந்தம்’ படத்தோட புரஜக்சன் போட்டிருக்காங்க. அப்ப படம் பார்த்தவங்களும் 'படம் சூப்பர்'ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.. அது மட்டுமில்ல.. படத்தை வாங்க யாருமே முன் வராத நிலைமை மாறி, ஏரியாவுக்கு இருபது லட்சம், முப்பது லட்சம்ன்னு விலை கேட்டிருக்காங்க.. 22 லட்சம் ரூபாய் பர்ஸ்ட் காப்பில எடுத்த, ‘புது வசந்தம்’ படத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ஆஃபர் வந்துக்கிட்டிருக்கு..

‘புது வசந்தம்’ படம் இந்த அளவுக்குப் பரபரப்பா பேசப்பட்டிருக்கிற இதே நேரம்.. நானோ சாப்பாட்டுக்கு வழியில்லாம ரூமுல படுத்துக் கிடக்கிறேன்.. பாக்கெட்டுல பத்து காசு இல்லை. டேப் ரிக்கார்டரை வித்தாச்சு.. பழைய பேப்பரை எடைக்குப் போட்டாச்சு.. மோதிரத்தை அடகு வைச்சாச்சு.. வாட்ச்சை அடகு வைச்சாச்சு.. இனிமே விக்குறதுக்கோ, அடகு வைக்கவோ ஒண்ணுமில்லை.. இன்னும் பச்சையா சொல்லப் போனா, இரண்டு பேண்ட்டையும் வித்துட்டேன்.. அப்படியும் வறுமை தீரலை. மூணு நாளா பட்டினி கிடக்கிறேன்..

சூப்பர் குட் பிலிம்ஸ்ல டிரைவரா இருந்த விஸ்வம்பரன்ங்கிறவர் ரெண்டு, மூணு தடவை வந்து, ‘ஸார்(ஆர்.பி.செளத்ரி) கூப்பிடறார்’ன்னு கூப்பிட்டார். நான் போகலை. அப்புறம் என் அஸிஸ்டெண்ட் ஒருத்தர் புரஜக்சன் போயிருக்கார். அவர்கிட்டேயும் என்னை வரச் சொல்லி அனுப்பியிருக்கார் செளத்ரி ஸார்.

‘விக்ரமனை நான் அவசியம் பார்க்கணும். அவர் வரலைன்னா, நான் வேண்ணா அவர் ரூமுக்கு வரட்டுமா..?’ என்று கேட்டிருக்கார். இந்த விஷயத்தை என் அஸிஸ்டெண்ட் வந்து சொன்னதும், என் பிடிவாதத்தைத் தளர்த்திட்டு, மறுநாள் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆபீஸுக்கு போனேன்.

‘ஏன் வர்றதே இல்லை..?’ என்று செளத்ரி ஸார் கேட்டார்..

‘நான் வந்தப்ப நீங்க்கூட என் முகம் கொடுத்துப் பேசலை.. நான் என்னவோ தப்பான கிளைமாக்ஸை எடுத்திட்டதா மத்தவங்க சொன்னதைக் கேட்டு இப்படி நடந்துக்கிட்டீங்க.. அதனாலதான் நா வர்றதை நிப்பாட்டிட்டேன்.. இப்ப பாருங்க.. எல்லாரும் கிளைமாக்ஸை பாராட்டுறாங்க..’ என்று நான் வருத்தப்பட்டேன்..

‘நான் அப்படிச் சொல்ல்லை.. எல்லாரும் என்னை பயம் காட்டிட்டாங்க.. நானும் ஃப்ர்ஸ்ட் படம்தானே எடுக்கிறேன்.. நான் என்ன பண்றது..?’ - நடந்த சம்பவங்களுக்காக அவரும் வருத்தப்பட்டார்.

அதுக்கப்புறம் போட்ட எல்லா புரஜக்சன்லேயும் படத்துக்கு நல்ல ரிப்போர்ட். ‘ஆஸ்கார் பிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் ஸார் படத்தைப் பார்த்துட்டு ஒரு ஏரியா வாங்கினார். ஏரியா வாங்கினது மட்டுமில்லே.. இன்னொரு காரியமும் பண்ணினார் அவர்.

அந்த நாளை என்னிக்குமே என்னால மறக்க முடியாது..!

அன்னைக்கு எனக்கு பிறந்த நாள். காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. என்கிட்ட காசு இல்லை.. மூணு நாள் பட்டினி வேற கிடந்திருக்கேன். வேற வழி தெரியாம எடிட்டர் தணிகாசலத்தைப் பார்க்கப் போனேன்..

‘உங்ககிட்ட நூறு ரூபாய் இருக்குமா?’ என்று அவர்கிட்ட கேட்டேன்..

'எதுக்கு..?'

'காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. ஆட்டோல போயிட்டு வர்றதுக்கு நாப்பது ரூபாய் ஆகும். அர்ச்சனை பண்றதுக்கு இருபது ரூபாயாகும். நான் மூணு நாளா சாப்பிடலை.. அதுக்கும் காசு வேணும்.. அதான் நூறு ரூபாய் கேட்டேன்..'

- நான் இப்படிச் சொன்னதும் தணிகாசலம் அதிர்ச்சியாயிட்டார்.. ‘மூணு நாளா சாப்பிடலை’ன்னு சொன்னதை அவரால தாங்க முடியலை.. உடனே அவர் போட்டிருந்த மோதிரத்தை அடகு வைச்சு 300 ரூபாயோ, 400 ரூபாயோ கொடுத்தார். இன்னைக்கும் அதை நான் எல்லா பேட்டிகளிலும் மறக்காம சொல்லிக்கிட்டிருக்கேன்..! அதுக்கப்புறம் அவர் என்னோடு ஐந்து படங்கள் பண்ணினார். அப்புறம் பண்ணலை. ஆனாலும், அன்னைக்கு அவர் பண்ணின உதவியை என்னால எப்பவும் மறக்க முடியாது..

தணிகாசலம் பணம் கொடுத்த்தும் காலைல கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். மதியானம் அவரை பார்த்தப்ப, சவேரா ஹோட்டல்ல இருந்த பிரிவியூ தியேட்டர்ல புரஜக்சன் நடக்குதுன்னு என்னைக் கூப்பிட்டார்.

நான் அங்கே போனப்ப படம் முடிஞ்சு ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஸார், வெளியே வர்றார். என்னைப் பார்த்த்தும் நேரா கிட்ட வந்தார். படத்தைப் பத்தி பாராட்டிட்டு கைல வைச்சிருந்த சூட்கேஸைத் திறந்து காட்டினார். உள்ளே ஏகப்பட்ட பணக்கட்டுக்கள்..!

‘விக்ரமன் ஸார்.. இதிலே இவ்வளவு பணம் இருக்கு.. வாங்கிக்கங்க. அடுத்த படம் எனக்குத்தான் பண்ண்ணும்.. இது அட்வான்ஸ்தான்.. படம் ஹிட்டாகி நீங்க என்ன சம்பளம் சொன்னாலும், அதுக்கு நான் ஒத்துக்குறேன்..’ என்று சொன்னார். நான் அவ்வளவு பணத்தைப் பார்த்ததும் ஷாக்காயிட்டேன்..! ‘இல்ல ஸார்.. ரெண்டாவது படம் சூப்பர் குட்டுக்கு பண்றதா செளத்ரி ஸார்கிட்ட வாக்குக் கொடுத்திருக்கேன். அதை முடிச்சிட்டு வேண்ணா உங்களுக்கு பண்றேன்’னு சொல்லிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டேன்.. அதுக்கப்புறமும் படத்தைப் பார்த்த பல பேர் அட்வான்ஸ் கொடுக்க வந்தாங்க. நான் வாங்கலை..

காலைல பிச்சைக்காரன்.. சாயந்தரம் கோடீஸ்வரன்.. இதுதான் சினிமா..!”

http://truetamilans.blogspot.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

kadalamai.jpg

புரிந்து கொண்டால் மட்டுமே அதன்மேல் அக்கறை காட்ட முடியும்

அக்கறையோடு இருந்தால் மட்டுமே அதற்காக உதவ முடியும்

உதவினால் மட்டுமே அதை காப்பாற்ற முடியும்

-டாக்டர்.ஜேன் குட்ஆல் (இயற்கை ஆர்வலர்)

வங்காள விரிகுடா கடல்பகுதியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த்த கருணா என்கிற அந்த கடலாமைக்கு வயது 11. கடலாமைகளுக்கே உள்ள பொதுவான குணம் கருணாவிடமும் இருந்தது. மகப்பேறு காலத்தில் தாய்வீட்டுக்கு வரும் மகளைப்போல , கடலாமைகளும் அவை எந்த இடத்தில் பிறந்ததோ அதே இடத்திற்கு திரும்பிவந்து முட்டையிடும்.

பல நூறு ஆண்டுகளாக கடலாமைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடற்கரைகளில்தான் முட்டையிடுகின்றன. சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களே இந்த ஆமைகளுக்கு மிகப்பிடித்த இடமாக இருக்கிறது. அப்படித்தான் கருணாவும் சென்னையை நோக்கி பயணமானது.

மகிழ்ச்சியாக கடலில் நீந்தி சென்னைக்கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்த கருணாவின் துடுப்புகள் எதிலோ சிக்கிக்கொண்டது. துடுப்புகளை அசைக்க இயலவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அது மீனவர்களின் படகில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. கையில் கத்தியுடன் ஒரு மீனவர் கருணாவை நோக்கி வருவதுதான் கருணாவிற்கு கடைசியாக தெரிந்தது. கருணாவின் நான்கு துடுப்புகளில் மூன்று வெட்டப்பட்டன. ஒற்றை துடுப்புடன் ரத்தம் சொட்ட கடலில் வீசப்பட்டது. துடுப்புகளில்லாமல் நீந்த முயன்று தோல்வியடைந்து மயங்கி கடலில் மிதந்தது கருணா.

kadalami.jpg

அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து கரையொதுங்கிய கருணாவை ‘’ட்ரீ பவுண்டேசன்’’ அமைப்பினர் காப்பாற்றினர். கால்நடை மருத்துவர்களைக் கொண்டு அவசர சிகிச்சை அளித்தனர். வெட்டப்பட்ட துடுப்புகளில் வழிந்த ரத்தம் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடம் தைக்கப்பட்டது. இனி கருணாவிற்கு மீண்டும் துடுப்புகள் வளராது. இனி கடலில் சுதந்திரமாய் சுற்றமுடியாது.

சராசரியாக 60 ஆண்டுகள் வாழும் கடலாமைகள் இனத்தைச் சேர்ந்த கருணாவின் அடுத்த 50 ஆண்டுகள் ஒரு சின்ன தண்ணீர் தொட்டியில்தான். நடக்க முடியாது. நீந்த முடியாது. தண்ணீரில் போட்டால் மிதக்கலாம். யாராவது உணவுகள் தந்தால் சாப்பிடலாம்.

மீனவர்களையும் குற்றஞ்சொல்ல முடியாது. காஸ்ட்லியான தங்களுடைய வலைகளை அறுத்தெரிய முடியாமல் ஆமைகளின் துடுப்புகளை வெட்டியெறிந்துவிடுகின்றனர். உண்மையில் கடலாமைகளை மீனவர்களின் நண்பர்கள் என்று அழைக்கலாம். ஆனால் அது மீனவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம்.

பவழப்பாறைகள் நிறைந்தது நம்முடைய கடற்ப்பகுதிகள். அதில் வளரும் பாசி,புல் முதலான கடற்தாவரங்களை தின்று அவற்றை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு கடலாமைகளுடையது, அப்படி சுத்தம் செய்யப்படும் இடங்கள் மீன்கள் முட்டையிட ஏற்ற சூழலை உருவாக்குகிறது கடலாமைகளின் அழிவு கடலின் மற்ற வளங்களை பாதிக்கும். இந்த கடலாமைகளின் பாதுகாப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்புடையது.

தினமும் இரவு நேரங்களில் ட்ரீ பவுன்டேஷன் அமைப்பினர் தங்களுடைய கடல் ஆமை பாதுகாவலர்களோடு கிளம்புகின்றனர். இதை ட்ர்ட்டிள் வாக் என்கின்றனர். இது நவம்பர் தொடங்கி ஏப்ரல் வரை தொடர்கிறது. இந்த காலங்களில்தான் ஆமைகள் நம் கடல்பகுதிகளுக்கு மகப்பேறுக்காக படையெடுக்கின்றன.

ஆமைகள் கடலோரங்களில் முட்டையிட ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்து குழிதோண்டி முட்டையிடுகின்றன. அடைகாப்பது கிடையாது. அதனால் தனித்துவிடப்படும் முட்டைகளை பறவைகள்,நாய்கள் சேதப்படுத்திவிடுவதுண்டு. சமயங்களில் குழந்தைகள் விளையாடக்கூட உபயோகிக்கின்றனர். இன்னும் சில கிராமங்களில் உணவுக்கும் கூட இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி பகுதிகளில் ஆமையின் முட்டைகளும் அதன் ரத்தமும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறதாம்.

இரவில் நிலா மற்றும் நட்சத்திரத்தின் ஒளி கடலில் பிரதிபலிக்கும் , முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் ஒளி வரும் திசைநோக்கியே நகரும் தன்மை கொண்டவை. நிலவொளியை வைத்துதான் கடலுக்குள் செல்லும் குணம் கொண்டவை. கடற்கரைகளில் வைக்கப்பட்டுள்ள அலங்கார விளக்குகளின் ஒளியை நிலவொளி என எண்ணி சாலையை நோக்கி வரத்தொடங்கிவிடுகின்றன. இதில் வாகனங்களில் மோதியும் , அதிக வெப்பத்தாலும் இந்த ஆமைக்குஞ்சுகள் மடிகின்றன.

இத்தனையையும் தாண்டி உயிர் பிழைக்கும் ஆமை குஞ்சுகளில் கடலுக்கு செல்லும் 1000 ஆமைகளில் ஒன்றுதான் பிழைக்கும். மீதமுள்ள 999ம் கடலில் வாழும் பிற உயிரினங்களுக்கு உணவாகும் என்பது இயற்கையின் உணவு சங்கிலியில் ஒரு பகுதி.

24nxg_turtlewalk_jp_485646a.jpg

இப்படி கடலுக்கு திரும்பிச்செல்லும் கடலாமைகளின் எண்ணிக்கையை அதிகமாக்க ‘’ட்ரீ பவுண்டேஷன் அமைப்பு’’ டர்ட்டிள் வாக்கின் போது கடலோரங்களில் ஆமைகள் முட்டை வைக்கும் இடத்திற்கு சென்று , முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து வேறு இடத்தில் தகுந்த வெப்பநிலையில் அடைகாக்கப்படுகின்றன. சரியான வெப்பநிலைகள் கூட மருத்துவர்களை கொண்டு கண்காணிக்கப்படுகிறது. 48முதல் 50 நாட்களுக்கு பின் இந்த முட்டைகளிலிருந்து வெளியேறும் ஆமைக்குஞ்சுகள் சில மணிநேரங்களில் மீண்டும் கடலுக்கே பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுகின்றன. இப்படி இதுவரை 50,000க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதவிர படகுகளில் அடிபட்டு , வலைகளில் சிக்கி வெட்டப்பட்டு கரையொதுங்கும் பெரிய ஆமைகளை பாதுகாப்பாக மீட்கப்படுகிறது. அவை தகுந்த சிகிச்சைக்குப் பின் மீண்டும் கடலிலேயே விடப்படுகிறது. அவற்றால் கடலில் மீண்டும் பழையபடி இயங்க முடிகிறதா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.

லயோலா கல்லுரி, வனத்துறை மற்றும் கடலோர காவல்படையினரின் உதவியோடு இந்த பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இது தவிர கார்பரேட் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் சுற்றுசுழல் பணிகளில் பங்கேற்று வருகின்றனர். இறந்த ஆமைகள் கடற்கரைகளில் தென்பட்டால் அவற்றை வனத்துறையின் அனுமதியோடு பெற்று அவற்றை ஆராய்ந்து எதனால் ஆமைகள் மடிகின்றன என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.

‘’சென்ற மாதம் கூட இரண்டு ஆமைகள் செயற்கைகோளுடன் தொடர்பு கொள்ள உதவும் கருவிகள் பொருத்தப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது, செயற்கை கோள் மூலம் அதனுடைய இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை குறித்து ஆராய இது உதவும். இது கடலாமைகள் பாதுகாப்பில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். அந்த தகவல்களின் அடிப்படையில் மீன்வளம் குறித்தும் ஆராய உள்ளோம். இப்படி செயவது இந்தியாவிலேயே இரண்டாவது முறை , இது இந்திய கடற்பகுதிகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு மேலும் உதவும்.

03nxg_p6_7_turtle_walk_g6f25oi7u103nxg_turtle2.jpg

கடல் ஆமை பாதுகாப்பு மீனவ சமூகத்திலும் கடலின் சுற்றுசூழலிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. தற்போது தமிழக கடற்கரைகளில் மட்டுமே செய்யப்படும் இந்த பணிகள் இந்தியா முழுக்க செயல்படுத்த முனைவோம் , ஆமைகள் காயமடைந்து கரைகளில் ஒதுங்கும் போது அவற்றை மீட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் கிடைப்பதில்லை. அது ஒன்றுதான் பிரச்சனை‘’ என்று கூறுகிறார் ட்ரீ பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சுப்ரஜா.

http://www.athishaonline.com/2012/04/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா இணைப்புகளுக்கு.....நல்ல பிரயோசனமான திரி...தொடர்ந்து இணையுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட‌ காலத்தில் பின் வீணாவின் பதிவு யாழில் என்ன நட‌ந்தது?

Link to comment
Share on other sites

வீணா.. உங்களிடம் ஒரு வேண்டுகோள்..

ஒரே தலைப்பின்கீழ் இணைக்கிறதால் பலசமயங்களில் விடுபட்டுப் போகுது.. எது புதுசு எது பழசு என்று தெரிவதில்லை.. புதிய தலைப்பில் இணைத்துவிட்டு, அதற்கான இணைப்பை "படித்ததும் பகிர்ந்ததும்" திரியில் இணைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்குமே?? :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி வீணா இணைப்புகளுக்கு.....நல்ல பிரயோசனமான திரி...தொடர்ந்து இணையுங்கள்....

நன்றிகள் சுபேஸ் இண்டைக்கு தான் இந்த பக்கம் வந்திருக்கீங்க போல இடைக்கிடை எட்டி பாருங்க

நீண்ட‌ காலத்தில் பின் வீணாவின் பதிவு யாழில் என்ன நட‌ந்தது?

ஒரு பக்கம் நான் இருக்கும் நாட்டில் வேலை தேடி கொண்டு வேலை கிடைக்காவிட்டால் தாயகம் திரும்ப ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன் ரதி அக்கா அனேகமாக இன்னும் இரண்டு மாதங்கள் வரை தான் YARL க்கு வர முடியும்ன்னு நினைக்கிறன்

வீணா.. உங்களிடம் ஒரு வேண்டுகோள்..

ஒரே தலைப்பின்கீழ் இணைக்கிறதால் பலசமயங்களில் விடுபட்டுப் போகுது.. எது புதுசு எது பழசு என்று தெரிவதில்லை.. புதிய தலைப்பில் இணைத்துவிட்டு, அதற்கான இணைப்பை "படித்ததும் பகிர்ந்ததும்" திரியில் இணைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்குமே?? :rolleyes:

முயற்சி செய்கிறேன் இசை அண்ணா.. அடுத்த முறை இணைக்கும் போது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.