Jump to content

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே....


Recommended Posts

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே

குழந்தைகளின் மன நலம் அமையும்..*

--------------------------------------------------------------------------------

பெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது.

அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றேhர் எந்த குறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறhர்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றேhர் மீதான மதிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றேhர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும்.

சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள் சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறhர்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தௌpவடையும் என்பதால், தாய்- தந்தை இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம்.

இதனால் பெற்றோர்களே* உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு இருந்தால் தாரளமாக வெளிப்படுத்த லாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.

நன்றி

தினகரன் :o

Link to comment
Share on other sites

பல பெற்றோர்கள் குழந்தைகள் அருகில் இருப்பதையே மறந்து மற்றவர்களைப்பற்றியோ அயலவர்களைப்பற்றியோ தப்பாக கதைப்பார்கள். உடனே அந்த பிள்ளைகளுக்கும் ஒ அவர்கள் கூடாது என்றா தப்பான அபிப்பாராயம் வந்து விடும்.

எமது காலத்தில் என்றாலும் இந்த வகையான தப்புகளை செய்யமால் இருப்போம்.

நல்லதொரு தகவலை இணைத்தமைக்கு நன்றிகள் ப்ரியசகி.

Link to comment
Share on other sites

நன்றி தகவலை இணைத்தமைக்கு. தாய் தந்தைக்கு இடையிலான நல்லுறவு மிக அத்தியாவசியமானது. பெற்றோர்களிடையே இருக்கும் பிரச்சனை குழந்தைகளை பாதிப்பதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி தகவலுக்கு நன்றி

குறை விளங்கவேண்டாம்.

எழுதுவதை நேரமெடுத்தாலும் மாதிரிக்காட்சியில் மீண்டும் ஒருமுறை வாசித்து ஆங்கில எழுத்துக்கள் கலந்திருந்தால் அவற்றை மாற்றிவிட்டு களத்திற்கு அனுப்புங்கள்.

நல்ல பாயாசத்தைக் குடிக்கும்போது சிறு சிறு கற்கள் இடையே கடிபடுவதைப்போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

தவறுக்கு மன்னிக்கவும் செல்வமுத்து அங்கிள்..

அனி சொல்லி திருத்தி போட்டேன்..ஆனாலும் அதையும் மீறி சில "h" இடையில் இருந்திருக்கின்றது. அது தமிழ் எழுத்துக்களோட இருக்கையில் நான் கவனிக்கவில்லை..

அடுத்த தலைப்புக்களில் அதை கவனத்தில் கொள்கிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மருமகள்!

நான் இலண்டனுக்கு வரும்போது எனது ஆசிரியை ஒருவர் எனது "ஓட்டோகிறாப்" புத்தகத்தில் "செய்வன திருந்தச் செய்" என்று எழுதிவிட்டிருந்தார். அந்த வசனம் நான் எதனைச் செய்தாலும் என் கண் முன்னே வந்து நிற்கும். கூடியளவு அவர் எழுதியபடியே செய்ய முற்படுவேன். இருந்தாலும் சிலவேளைகளில் முடிவதில்லை.

அவர் இப்போது கனடாவில் வாழ்கிறார். அவரிடமும் நான் இதுபற்றிக் கூறியிருக்கிறேன். அவருக்கு மிகுந்த சந்தோசம்.

அதுதான் அப்படி எழுதினேன்.

Link to comment
Share on other sites

பொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்

நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)

Link to comment
Share on other sites

பொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்

நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)

:shock: ஐயோ.. நண்பன் மனைவிக்கும் அடி விழுந்திருக்கலாம்..பிள்லை யாரை பார்த்து பழகிச்சோ..என்றாலும் இருவருமே ரொம்ப பாவம்..

இதுதான்..முந்தைய காலத்தில் அம்மா, அப்பா அல்லது பக்கத்து வீட்டார் ஏதும் பெரீய விசயங்கள் கதைப்பதென்றால் எங்களை வீட்டுக்குள்ளே போக சொல்வார்கள்..அது ஏன் என்று பின்பு தான் விளங்கியது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)

Link to comment
Share on other sites

பொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்

நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)

மாப்பிள்ளை முத்தான் நான் வாங்கா அடியா உண்ட நன்பன் வாங்கி இருப்பான்.

சந்தோசப்படுத்தினாலும் அடி சந்தோசப்படுத்தாவிட்டாலும் அடி :oops: :oops: :cry:

Link to comment
Share on other sites

வடிவேலு எழுதியது: மாப்பிள்ளை முத்தான் நான் வாங்கா அடியா உண்ட நன்பன் வாங்கி இருப்பான்.

சந்தோசப்படுத்தினாலும் அடி சந்தோசப்படுத்தாவிட்டாலும் அடி ³§Â¡---³§Â¡ ---þ¨¾ ±øÄ¡õ ¦ÅÇ¢Â¢Ä ¦º¡øÄôÀ¢¼¡Ð-- வடிவேலு º¡÷ :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.