Jump to content

என் அக்காச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் அக்காச்சி

அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய்

பிறந்தவள் என் அக்காச்சி .

அவளின் வேண்டுதலால் ஈரைந்து வருடங்களின் பின்

வந்திதுத்த் செல்லப் பயல் நான்

ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை

சீராட்டி பால் புகட்டி தூக்கி திரிந்தவள்.

துள்ளித்திரியும் பருவத்தே துடுக்கடக்கி

தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள்.

சக நட்புடன் சண்டை என்றால்

கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள்.

சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள்.

அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய

வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து

சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட .

உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில்

விழி நிறைந்த கண்களுடன் வழியனுப்பி வைத்தவள்.

பட்டம் நான்பெற்ற போது என் பரிசை மாரோடு

அணைத்து மகிழ்ந்தவள்.

ஊரெலாம் என் தம்பி என்று மார் தட்டி நின்றவள்.

முதல் மாதச்சம்பளத்தில் , நான் எடுத்த சேலை யணிந்து

திருவிழா செல்கையில் யார் இந்த தேவதைஎன ஊர் பார்க்க வியந்தவள்.

திருமண வயதில் தேடி வந்து பெண் கேட் திலகம் மாஸ்டர் முன்

நாணிக் கோணி நிற்கையில் என் இதயம் களவு போவதை எண்ணி ,

உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக நலமாக நீ வாழ் வேண்டும்

என நேர்த்தி வைத்து என இதயம் வாழ்த்தியது .

திருமணமாகி மறு வீடு செல்கையில் பின் சென்ற

என் இதயம் துக்கத்தால் துவண்டது .

கருவொன்று உருவாக்கி மகபேற்று விடுமுறையில்

வாழ்ந்த வீடு வந்த போது மட்டிலா மகிழ்வு கொண்டு ,

என் உயிரில் தாங்கினேன்.

பெண் மகவொன்று வந்துதிக் உனக்கு தான் என்னவள்

என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி

என்னை மனமுருக வைத்தவளே .

மறுபடியும் மகவா என் வாழ்வில் மகராசி வரவேண்டும்

Link to comment
Share on other sites

சகோதர பாசத்தின் அருமையை உணர்த்திய கவிதை இங்கு அருமை.

இவ்வுலகில் எதையும் பெற்றிடலாம் . ஆனால் கூடப் பிறந்தவரை மீளவும் பெறுதல் இயலாதது. சகோதரத்துவத்தின் சிறப்பினை நன்கு கூறியுள்ள கவிதை இது. மிக்க நன்றி!!

Link to comment
Share on other sites

என் அக்காச்சி

அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய்

பிறந்தவள் என் அக்காச்சி .

அவளின் வேண்டுதலால் ஈரைந்து வருடங்களின் பின்

வந்திதுத்த் செல்லப் பயல் நான்

ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை

சீராட்டி பால் புகட்டி தூக்கி திரிந்தவள்.

துள்ளித்திரியும் பருவத்தே துடுக்கடக்கி

தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள்.

சக நட்புடன் சண்டை என்றால்

கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள்.

சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள்.

அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய

வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து

சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட .

உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில்

விழி நிறைந்த கண்களுடன் வழியனுப்பி வைத்தவள்.

பட்டம் நான்பெற்ற போது என் பரிசை மாரோடு

அணைத்து மகிழ்ந்தவள்.

ஊரெலாம் என் தம்பி என்று மார் தட்டி நின்றவள்.

முதல் மாதச்சம்பளத்தில் , நான் எடுத்த சேலை யணிந்து

திருவிழா செல்கையில் யார் இந்த தேவதைஎன ஊர் பார்க்க வியந்தவள்.

திருமண வயதில் தேடி வந்து பெண் கேட் திலகம் மாஸ்டர் முன்

நாணிக் கோணி நிற்கையில் என் இதயம் களவு போவதை எண்ணி ,

உள் நெஞ்சு உதிரம் கொட்ட வளமாக நலமாக நீ வாழ் வேண்டும்

என நேர்த்தி வைத்து என இதயம் வாழ்த்தியது .

திருமணமாகி மறு வீடு செல்கையில் பின் சென்ற

என் இதயம் துக்கத்தால் துவண்டது .

கருவொன்று உருவாக்கி மகபேற்று விடுமுறையில்

வாழ்ந்த வீடு வந்த போது மட்டிலா மகிழ்வு கொண்டு ,

என் உயிரில் தாங்கினேன்.

பெண் மகவொன்று வந்துதிக் உனக்கு தான் என்னவள்

என்று கேலி செய்த போது மறுபடியும் தாயாகி

என்னை மனமுருக வைத்தவளே .

மறுபடியும் மகவா என் வாழ்வில் மகராசி வரவேண்டும்

நிலவுக்கு கவிதைதான் வருமோ ??????????? எனது மூத்த அக்காவை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் . தொடர்ந்து நிலையுங்கள் :):):) 1 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் அக்காச்சி

நீங்கள் தான் என் அக்காச்சி என அகில உலகத்திற்குமே தெரியுமே சகோதரி...

தங்க்ளுக்கும் அக்கா இருக்கிறார்களா ? இந்த கவிதையை அவர்களுக்கே அர்பணித்து விடுங்கள்...

:) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு அக்காவில்லையே என்ற ஏக்கம் இதுவரை இருந்ததில்லை!

உங்கள் கவிதையைப் பார்த்ததும், இருந்திருக்கலாமோ என எண்ணத்த தோன்றுகின்றது!

தொடர்ந்து எழுதுங்கள், நிலாமதியக்கா!!!

Link to comment
Share on other sites

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் கவிதை படித்ததில் சந்தோசம் .

உணர்ச்சி போர்வமான வரிகள் .வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

அக்காவைப் பற்றிய பாடல்களும் கவிதைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. அந்தக் குறையை உங்களுடைய கவிதை போக்கிவிட்டது. அருமையான கவிதை!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.