Jump to content

தாயக மக்களுக்கு பிரித்தானியா கொவன்றி மக்கள் மேம்மாபாட்டு மையம் உதவி


Recommended Posts

தாயக மக்களுக்கு பிரித்தானியா கொவன்றி மக்கள் மேம்மாபாட்டு மையம் உதவி

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடந்த 11-01-2012 அன்று பிரித்தானியாவில் இருந்து கொவன்றி மக்கள் மேம்பாட்டு மையத்தினரால் அனுப்பப்பட்ட பணம் பின்வரும் பயனாளிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தாயக மக்களின் எதிர்கால நல்வாழ்வை கருத்தில் கொண்டு தாங்கள் இந்த உதவியை வழங்கியைமைக்கு தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். சிலரது புகைப்படங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களது தொலை பேசி இலக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. அந்த இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுவதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

நன்றி

செ. கஜேந்திரன்

பொது செயலாளர்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

01 பெயர்:- திருமதி.தே.சாந்தகுமாரி

முகவரி:- அன்னங்கை, உரும்பிராய்

இறுதி யுத்தகால இடப்பெயர்வின்போது எறிகணைத் தாக்குதலில் காயடைந்துள்ளார். ஊடல் முழுவதும் பலத்த காயங்கள். இன்னமும் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். காலிலும், கையிலும் தகடுகள் வைக்கப்பட்டுள்ளது. எனினும் கடுமையான வறுமை காரணமாக மேலதிக சத்திரசிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ளார். நாளாந்ம் உணவுக்கே வழியில்லாத நிலையில் வாழ்கின்றனர். நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கூலி வேலை செய்ய முடியாதளவு உடல் பாதிப்புள்ளது. வெயிலில் அதிகநேரம் நிற்க முடியாதளவு வலிவேதனை உள்ளது. அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

முன்னாள் போராளியான கணவர் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக தற்போது வவுனியாவில் தங்கியுள்ளார்.

02 முழுப் பெயர்:- வேலுச்சாமி சிவராசா

முகவரி:- கும்புறுப்பிட்டி, திருகோணமலை

1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து தனது குடும்பத்தினருடன் வன்னிக்கு வந்திருந்தார். குடும்ப வறுமை காரணமாக காந்தறூபன் அறிவுச்சோலையில் வளர்ந்தார். அங்கிருந்து கல்விகற்று யாழ்பல்கலைக் கழகத்திற்கு தெரிவானார். பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த காலப்பகுதியில் 2006 அல் யுத்தம் ஆரபித்தபோது வன்னியில் தங்கியிருந்தார். யுத்தம் முடிவடைந்து முகாமுக்குச் சென்றபோது அங்கு வைத்து சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுப்பு முகாமில் ஆறு மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோது இவரும் விடுதலையானார். விடுதலையான பின்னர் அவரை அரவணைப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் கூலி வேலை செய்தும், நண்பர்களது உதவியுடனும் தனது கல்வியை தொடர்கின்றார். மிகவும் விரக்தியடைந்த நிலையில் உள்ளார்.

03 தேவராஐ; சுரேஸ்குமார்

முகவரி:- மாதாகோவிலடி, மந்துவில், புதுக்குடியிருப்பு

இவரது குடும்பம் மிகவும் வறுமையானது. தந்தை இறந்துள்ளார். தூய் கூலி செய்து பிழைப்பு நடாத்தி வந்தார். வறுமை காரணமாக காந்தறூபன் அறிவுச் சோலையில் வளர்ந்தார். அங்கிருந்து கல்வி கற்று பாழ்பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர் அவருக்கு உதவுவதற்க யாரும் அற்ற நிலையில் மிகவும் கஸ்ர நிலையில் உள்ளார். தாயார் வயது முதிர்ச்சியால் கூலி வேலையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். சுரேஸ்குமார் கூலி வேலை செய்தவாறு தனது தாயாரையுத் பராமரித்தவாறு கல்வியையும் தொடர்கின்றார். இடையிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவருக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

04 ஜோன்வர்கீஸ் மாக்கிரட்(80)

முகவரி- சின்னத்தோட்டம், 3ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை

இவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். கணவர் இந்திய இராணுவத்தினரால் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார். மகள் சித்திரா 20வயதில் 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மகன் ரமேஸ் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் nஐஸ்ரின் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மகள் மேரிமரில்டா 2004 ஆம் ஆண்டு சுனாமியில் மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் பலியானார்.

மிக மிக வறுமை நிலையில் உள்ளார்.

05 முழுப்பெயர்:- திருமதி மங்கயற்கரசி குமாரசிங்கம்

முகவரி:- அம்பிளாந்துறை வடக்கு, கொக்கட்டிச்சோலை

கணவர் சித்திரவேல் வசந்தராசா அவர்கள் 1996 ஆம் ஆண்டு தேங்காய் வியாபாரத்திற்காக சென்றபோது இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டு கோட்டைக்கல்லாற்றில் வீசப்பட்டார். ஆற்றிலிருந்து மீனவர்கள் உடலை கண்டெடுத்தனர். இவரை ஏற்கனவே இராணுவம் தேடித்திரிந்ததாக அவரது மனைவி கூறினார். நான்கு பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்.

இரண்டு பிள்ளைகள் பாடசாலையில் கல்வி பயில்கின்றனர். தொடர்ந்து படிப்பிக்க முடியாத நிலையில் உள்ளார்.

06 திருமதி சதீஸ் ஜெயக்குமாரி(35)

கணவர்:- காளிமுத்து சதீஸ் (காணாமல் போயுள்ளார்)

முகவரி:- அம்பிளாந்துறை வடக்கு, கொக்கட்டிச்சோலை.

மகன் சதீஸ் அதிசன் வயது 3

என்ர பெயர் nஐயக்குமாரி. நான் முன்னாள் போராளியாக இருந்தனான். 2004 ஆம் ஆண்டு சமாதான காலப்பகுதியில மட்டக்களப்பில் ஒரு கூட்டத்திற்கு பாபா அண்ணை ஆக்களோட போய் திரும்பி வந்து கொண்டிருக்கேக்குள்ள கருணா குழு ஆக்கள் மறைஞ்சிருந்து சுட்டத்தில எனர இரண்டு கால் எலும்பும், இரண்டு கை எலும்புகளும் நாலைஞ்சு இடத்தில முறிஞ்சு போச்சுது. விலா எலும்பு, நெஞ்சு எலும்பும் உடைஞ்சுபோச்சுது. இப்ப கை, கால் இரண்டிலயும் தகடு வைத்துப் பூட்டிஇருக்கு. நான் காயப்பட்ட பிறகு வன்னியில அங்கவீனமடைந்சாக்களை பராமரிக்கிற இடத்தில தங்கி இருந்தனான். ஆப்ப திருகோணமலையை சேர்ந்த சதீஸ் என்ற போராளி என்னை திருமணம் செய்ய தானாக விரும்பி முன்வந்படியால எனக்கும் அவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

இன்னும் ஒரு ஆளின்ர உதவி இல்லாமல் என்னால செயற்பட முடியாது. இடம்பெயரும்வரையும் எனக்கு ஆக்களின்ர உதவி இருந்தது. அவரும் என்னை அக்கறையாக பார்த்தவர். ஆனால் இடப்பெயர்வுக்குள்ள அவரும் என்னோட இருக்க முடியவில்லை. நான் பிள்ளையோட சரியா கஸ்ரப்பட்டுப்போனன். இடம்பெயந்து முள்ளிவாய்க்கால் வரையும் போன்னான். முள்ளிவாய்க்கால்ல 13 திகதி வைகாசி மாதம் 2009 ஆம் ஆண்டு அவரும் காயப்பட்டிட்டார். அவரை ஆஸ்பத்திரியில போட்டிருக்கு எண்டு கேள்விப்பட்டு வேற ஆக்களின்ர உதவியோட காயப்ப்டடவரை முள்ளிவாய்க்கால் ஆஸ்ப்பத்திரியில போய் பாத்தனன்;. ஆனால் என்னால அவரை என்னோட கூட்டிக் கொண்டுவர முடியாமல் போச்சுது.

காயப்பட்ட ஆக்கள தூக்கேக்குள்ள இவரையும் ஆமி தூக்கிக் கொண்டு போனது எண்டு கதைக்கினம். ஆனால் என்ன நடந்தெண்டு ஒண்டும் தெரியேல்ல. நானும் பிள்ளையும் ஒருமாதிரி ஆக்களின்ர உதவியோட முகாமுக்கு வந்து சேர்ந்தம். ஏன்ர மனிசனை இப்பவரைக்கும் தேடிக்கொண்டுதான் இருக்கிறன். ஆனா ஒரு தகவலும் கிடைக்கேல்ல.

முகாமில இருந்து என்ர சொந்த ஊருக்குப் போனன் அங்க எங்கட ஊர்ச் சனம் எங்களை நாயளவுக்கும் மதிக்குதில்லை. சின்ன உதவிக்கு கூட ஒருத்தரிட்டயும் போகமுடியேல்ல. உறவுகள் கூட திரும்பிப் பார்க்குதில்லை. நினைச்சால் தற்கொலை செய்ய வேணும் போல இருக்கு. ஆனா இந்த பிஞ்சுக் குழந்தைக்காக வாழ வேணும் எண்டு மனதை கல்லாக்கிக் கொண்டு இருக்கிறன்.

ஏன்ர அண்ணாவையும் முந்தி ஒருக்கா ஆமி கொண்டுபோய் கட்டி வைச்சு அடிச்சதில அவருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டிட்டுது. அவற்ரை மனிசியும் அவரை விட்டிட்டு பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு போட்டா. அவரும் அப்பாவோட தான் இருக்கிறார். தங்கச்சியின்ர கணவரும் காணாமல் போட்டார். அவவும் அப்பாவோடதான் இருக்கிறா. இப்ப நானும் அப்பாக்கு சுமையா போய் இருக்கினறன். நான் ஆரொக்கியமான ஆளாய் இருந்தால் கூட பறாவாயில்ல கூலி வேலை செய்தெண்டாலும் என்னையும் பிள்ளையையும் பாத்துக் கொள்ளுவன். என்ர அலுவலையே தனியா பாக்க முடியாமல் இருக்கிறன்.

அப்பாவுக்கும் இப்ப வயது 65 அவராலயும் கூலி வேலை செய்யேலாது. எப்படி என்ர பிள்ளையை வளத்து காப்பாத்தப் போறனெண்டே தெரியேல்ல.

முகாமுக்கால வந்தாப்பிறகு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கNஐந்திரனை தொடர்பு கொண்டு என்ர நிலைமையை சொன்னனான். அவர் வெளிநாட்டில இருக்கிற தனக்கு தெரிஞ்சாக்களிட்ட கதைச்சு உதவி எடுத்து தெல்லாம் எண்டு சொன்னவர். பிறகு கனடாவில இருக்கிற சிரிஆர் றேடியோ ஆக்களோட கதைச்சு ஒப்பிறேசன் செய்யுறதுக்கெண்டு காசு வாங்கி தந்தவர். நான் இருந்த வீட்டில தண்ணி அள்ளுறதுக்கு ஒரு கிணறு இல்லை. பக்கத்து வீட்டில போய் அள்ள முடியாத உடல் நிலை அதால அந்த காசில நான் ஒரு கிணத்தை வெட்டிப்போட்டன். அதுக்குப் பிறகு அவர்களிட்ட ஒப்பிறேசனுக்கு எண்டு சாசு கேக்கிறது சரியில்லை எண்டு நான் வேதனையையும் தாங்கிக் கொண்டு இருந்தனான். எண்டாலும் கஜேந்திரன் அண்ணை பத்மினி அக்கா ஆக்கள் இடைக்கிடை என்னோட தொடர்பு கொண்டு கதைக்கிறவை. காசு உதவியள் செய்யுறவை.

ஒருவருசத்துக்கு முதல்ல கைகால் வேதனை எண்டு சொல்லி யாழ்ப்பணம் போய் டொக்டரை சந்திச்சனான். அப்ப டொக்டர் எக்ஸ்றே எடுத்துப் பாத்துப்போட்டு, என்ர கையிலயும் கால்லையும் வைச்சிருக்கிற பிளேற்ரில பூட்டியிருந்த ஆணியள் நாலைஞ்சு கழண்டுபோட்டுதாம். உடன ஒப்பிறேசன் செய்ய வேணும் எண்டு ஒரு வருசத்துக்கு முதல் டொக்டர் சொன்னவர். ஆனால் கஸ்ரத்தில நான் ஒப்பிறேசன் செய்ய வெளிக்கிடேல்ல.

அனால் வேதினை தாங்கேலாமல் கNஐந்திரன் அண்ணையோடையும், பத்மினி அக்காவோடையும் என்ர நிலைமையை சொல்லி கதைச்சனான்.

ஆவை என்ர கதையை கேட்டு இரக்கப்பட்டு இப்ப திருப்பவும் ஒப்பிறேசன் செய்யுறதுக்கு பிரான்சில இருக்கிற கிருபா அண்ணா இராசாத்தி அக்காவை தொடர்பு படுத்தி விட்டிருக்கினது. அவையள் வெளிநாட்டில உள்ள ஆக்களிட்ட கேட்டு உதவி எடுத்து தெல்லாம் எண்டு சொல்லி இருக்கினம்.

அந்த உதவி நிச்சயம் பெற்றுத் தருவம் எண்டு ராசாத்தி அக்கா சொன்னவா. அதோட நான் யாழ்ப்பாணம் வாறத்துக்கும் உதவி செய்தவா. அவையள் சொன்னபடியால ஒப்பிறேசனுக்கெண்டு நான் யாழ்ப்பாணம் வந்தனான். . டொக்டரை போய் சந்திச்சு வாற மாதம் 2 ஆம் திகதி ஒப்பிறேசனுக்கு டேற் எடுத்துப் போட்டன்.

07 மகேந்திரம் கலைவாணி(33)

முகவரி:- 250பி- அன்னைவேளாங்கன்னி வீதி, மாயவனூhர்

வட்டக்கச்சி

கணவர் செல்லத்தம்பி மகேந்திரன்(34) முன்னாள் போராளி என்ற குற்றச்சாட்டில் பொலநறுவையிலுள்ள புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது சொந்தஇடம் மட்டக்களப்பு. 1996 இல் வவுணதீவில் துடையுடன் கால் துண்டிக்கப்பட்டது. மீண்டும் முள்ளிவாய்க்காலில் காயமடைந்துள்ளார்.

மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அடிக்கடி பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதி;க்கப்படும் நிலையில் உள்ளார். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கணவனை சென்று பார்ப்பதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவரை சென்று பார்க்க முடியாத பரிதாபகரமான நிலையில் உள்ளார். குடும்பம் மிக மிக வறுமை. பிள்ளைகளுக்கு உணவுக்கும் , பிள்ளைகளை கற்பிப்பதற்கும் வசதியில்லாத நிலையில் கண்ணீரோடு வாழ்கின்றார்.

08. இராஐரட்ணம் தேவானந்தராஜ்

த.முகவரி:- துரை வீதி, தாவடி வடக்கு

முன்னாள் போராளியான இவர் போராட்டத்தில் காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இடுப்புக்கு கீழ் உணர்வு இல்லாமல் உள்ளார்.

மிகவும் வறுமை நிலையில் உள்ளார். உணவு மற்றும் மருத்துவ தேவைகளைவேநிறைவு செய்ய முடியாது பெரும் அவதியுறுகின்றார். அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்றுவர வேண்டிய கட்டாய தேவை உள்ளது. படுக்கைப் புண் ஏற்பட்டு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். அதற்கான பணவசதி இல்லாததால் வேதனையை தாங்கிக் கொண்டு இருக்கின்றார். ஒருதடவை வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு ஆட்டோ செலவு அதிகம். அதனை விடவும் சலம் வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பை, மருந்துக் குளிசைகள், சலம் மலம் வெளியேற்றவதற்கு பயன்படுத்தப்படும் nஐல், படுக்கைப் புண்ணுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறே, கோஸ், பன்டேச், பிளாஸ்ரர் என எல்லாவற்றுக்கும் அதிகம் செலவாகின்றது. இந்த செலவுகள் எதனையும் சமாளிக்க முடியாது பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றார்.

09. சந்தனம் சசிகுமார்(36)

த.முகவரி:- வன்னியசிங்கம் வீதி, தாவடி வடக்கு, கோண்டாவில்;

நி.மு:- பெரியசாளம்பன்,தொட்டியடி, ஒட்டுசுட்டான்

மனைவி:- சசிகுமார் கோகிலவதனி(30)

மகன் ச.பரன் (வயது 6) ஆண்டு-01

மகள் ச.நிகல்யா(2.5வயது)

1994 ஆம் ஆண்டு காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டது. அதனால் கழுத்துக்கு கீழ் உணர்வு இல்லை. 2004 ஆம் ஆண்டளவில் மீண்டும் உணர்வு திரும்பியிருந்தது. முள்ளிவாய்க்காலில் மீண்டும் காயப்பட்டமையால் மீண்டும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளது. குடுமு;பம் மிக மிக வறுமை. மிகவும் வறுமை நிலையில் உள்ளனர்.

அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்றுபடுக்கைப் புண்ணுக்கு மருந்து கட்ட வேண்டியுள்ளது. ஒருதடவை வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு அதிகளவு ஆட்டோ செலவு ஏற்படுகின்றது. அதனால் புண்ணுக்கு மருந்து கட்டாமல் அவரது உடல் நிலை மோசமடைந்து கொண்டு செல்கின்றது. அதனை விடவும் சலம் வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பை, மருந்துக் குளிசைகள், சலம் மலம் வெளியேற்றவதற்கு பயன்படுத்தப்படும் nஐல், படுக்கைப் புண்ணுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறே, கோஸ், பன்டேச், பிளாஸ்ரர் என எல்லாவற்றுக்கும் அதிகம் செலவாகின்றது. இந்த செலவுகள் எதனையும் சமாளிக்க முடியாது பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றார்.

10. சத்தியசீலன் மகேந்திரவர்மன்

முகவரி:- முனைக்காடு வடக்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் 2006-2007 காலப்பகுதியில் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட ஆக்கரமிப்பு இராணுவ நடவடிக்கையின்போது சொத்துடமைகள் அனைத்தையும் இழந்து காயமடைந்துள்ளனர். மிகவும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர்.

11. திருச்செல்வம் சிவமலர்

முகவரி:- கிருஸண்ணபுரம், கிளிநொச்சி

2001ம் ஆண்டு போராட்டத்தில் காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் உள்ளார்.

குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்றுபடுக்கைப் புண்ணுக்கு மருந்து கட்ட வேண்டியுள்ளது. ஒருதடவை வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு அதிகளவு ஆட்டோ செலவு ஏற்படுகின்றது. அதனால் புண்ணுக்கு மருந்து கட்டாமல் அவரது உடல் நிலை மோசமடைந்து கொண்டு செல்கின்றது. அதனை விடவும் சலம் வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பை, மருந்துக் குளிசைகள், சலம் மலம் வெளியேற்றவதற்கு பயன்படுத்தப்படும் nஐல், படுக்கைப் புண்ணுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறே, கோஸ், பன்டேச், பிளாஸ்ரர் என எல்லாவற்றுக்கும் அதிகம் செலவாகின்றது. இந்த செலவுகள் எதனையும் சமாளிக்க முடியாது பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றார்.

http://www.pathivu.c...ticle_full.aspx

Link to comment
Share on other sites

உதவியவர்களுக்கும் உதவிய அமைப்புக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக கதைகளை அப்துல் கலாமுக்கு அனுப்பிவிட வேண்டும்

இதைக்கதைகள் என்று எழுதுவது சரியா நண்பரே?

Link to comment
Share on other sites

இதைக்கதைகள் என்று எழுதுவது சரியா நண்பரே?

கதைகள் என்ற பெயர்ச்சொல்

1. கதைகள்- பெயர்சொல் கதையின் பன்மை- ஆக்கங்கள்.

2. ஒருவர் இன்னோருவருடன் சம்பாசிக்கும் போது வருவது. கதை என்ற வினையிலிருந்து வருவது.

நான் பாதிக்க பட்ட மக்கள் தொண்டு நிறுவனங்களுடனும், ஊடகவியலாருடனும், கதைத்த போது சொன்ன வியபரங்கள் என்ற பொருள் படத்தான் பிரயோகித்தேன்.

இப்பொழுது சரித்திரங்கள் என்று மாற்றியுள்ளேன்.

குழப்பத்தை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

அப்துல் கலாம் பொது மக்களை சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தமையால் அவர் இப்படிப் பட்ட மக்களை சந்திக்க தயாரா என்ற பொருளில் தான் எழுதியிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

கொவன்றி தமிழர் முன்னேற்ற மையத்தினரால் (பிரித்தானியா) தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியினர் ஊடாக வழங்கிவருகின்றார் கடந்த (மார்ச்) மாதம் வழங்கப்பட்ட உதவிகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியினர் வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் வழங்கினர்

http://www.pathivu.com/news/20585/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.