Jump to content

சொல்லமுடியாத கதை


sathiri

Recommended Posts

நல்லதொரு படைப்பு .வாழ்த்துக்கள் சாத்திரி

நீண்டநாளிற்கு பின்னர் யாழில் கண்டது மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)கொடுத்தவிலைகளிற்கு ஒரு வீதம்கூட பயன்இல்லையே என்கிற விரக்தி.

2)தூரத்தில் நம்பிக்கை தரும் ஒரு சிறு வெளிச்சம்கூடத் தெரியவில்லை

3)வயசாயிட்டுது

நாய் வித்த காசு குரைக்காது. ஆனால் கடிச்சுப்போட்டுது பாத்தியளோ ?

Link to comment
Share on other sites

சொல்ல முடியவில்லைக் கருத்தொன்றும். எல்லா உழைப்பும் அர்ப்பணிப்புகளும் வீணாகி.................... :mellow::huh:

Link to comment
Share on other sites

தேவையற்ற வசனங்கள் இல்லாமல், கதை நல்ல திரில்லர் மாதிரி இருக்கிறது.

எல்லாம் வீணாப் போயிற்று.

நன்றிகள் தப்பிலி எனக்கு கதைகளிற்கு பெரியளவு ஆலாபனைகள் பிடிக்காது.

Link to comment
Share on other sites

கதை வழமை போலவே சூப்பர் சாத்திரி அண்ணா. விறுவிறுப்பா இங்கிலிஸ் படம் பார்த்த மாதிரி இருந்திச்சு. பச்சை முடிஞ்சு போச்சு. வரதர், சுகந்தி, ரவியர் சம்பந்தப்பட்ட மத்திய வங்கி குண்டு வெடிப்பு பற்றி முன்னர் நீங்களோ வேறு யாரோ எழுதிய ஞாபகம். நீங்கள் எழுதிய "மசாயிர்", "ராஜு" அல்லது "கிட்டு" என நினைக்கிறன்.

நீங்கள் எழுதிய சில பெயர்கள் இறுதி சம்பவத்துடன் தொடர்புபட்டவை பின்னர் சிலர் சிறையிலிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையென்று வாசிக்கும் போது நன்றாக இருக்கின்றது.

நிஜத்தில் அந்த இளைஞன் பட்ட பாடு கண்ணீரைத் தருகின்றது

Link to comment
Share on other sites

இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது.... எழுத்து நடை நல்லா இருக்கு.

சலாவுதீனால் ஒரு முறை விசாரிக்கப்பட்டு இருக்கின்றேன்.

அந்த சிங்கள அதிகாரி, 'உடுபொல' வா அல்லது உடுகம்பொலவா?

Link to comment
Share on other sites

இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது.... எழுத்து நடை நல்லா இருக்கு.

சலாவுதீனால் ஒரு முறை விசாரிக்கப்பட்டு இருக்கின்றேன்.

அந்த சிங்கள அதிகாரி, 'உடுபொல' வா அல்லது உடுகம்பொலவா?

உடுகம்பொல என்றும் ஒருவன் இருந்தவன் அவன் பேலீஸ்எஸ்.பி தர அதிகாரியென நினைக்கிறேன். ஜேவி.பி யினரை மூர்க்கமாக ஒடுக்கியதில் பேர்போனவன். கைது செய்யப்படும் ஜே.வி. பி உனுப்பினர்களின் காதுகளில் இரண்டு பக்கமும் பேனையை வைத்து கைகளால் ஓங்கி அடித்து கொலைசெய்வது அவனது பாணி.. ஆனால் கதையில் வரும் வரும் உடுகொல சிஜடி இங்ஸ்பெக்ரர். .கதையை படிசச்சதும் அட சே ராணியாலை விசாரிக்கப்பட்டிருக்கலாமே என்டொரு பீலிங் தோன்றேல்லையா நிழலி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால முடிஞ்சது. ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது. நன்றிகள்.

*தூரத்தில் நம்பிக்கை தரும் ஒரு சிறு வெளிச்சம்கூடத் தெரியவில்லை*

.......... வரிகள் எல்லோர் மனத்திலும் தீராக ஏக்கமாக அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

பல சமயங்களில் கற்பனைகளை உண்மைச்சம்பவங்கள் மிஞ்சிவிடுகின்றது.

உங்கள் எழுத்துநடை மிக அருமை. தனித்துவமாக இருக்கின்றது. தொடருங்கள்.

கற்பனையே பண்ணி பார்க்கமுடியாத சம்பவங்களும் நடந்தவைதான் எமது போராட்டம். அதற்கு உதாரணங்கள் போராட்டத்தில் புளொட் மற்றும் ஈரோஸ் ஈ.பி ஆகியன் 84 களிலேயே வெளி போராட்ட அமைப்புக்களான பாலஸ்தீன அமைப்புக்கள். ஆபிக்க எரித்திய அமைப்புக்களுடன் தொர்பகளை ஏற்படுத்தி கூட்டுப் பயிற்சிகளும் எடுத்திருந்தன். எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய் எமது போராட்டத்திற்கு தார்மீக உதவிகளை வழங்க புளொட் அமைப்பிற்கு மொறீசியஸ் நாடும். பின்னர் புலிகள் அமைப்பிற்கு ஜெர்மனியும் முன்வந்திருந்தன. ஆனால் எல்லமே சரியாக கையாளப்படவில்லை எல்லமே சரியாக ஒன்று சேர்ந்திருப்பின். 85 தமிழீழம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய உளவமைப்பின் பிடியிலிருந்து ஈழ அமைப்புக்கள் தந்திரமாக காய் நகர்த்தியிருக்கவேண்டும்.அதற்கான தந்திர புத்தி எந்த இயக்க தலைவர்களிற்கும் இருந்திருக்கவில்லையென்பதே சோகமான உண்மை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் போராட்ட வாழ்வில் கற்பனைகள் எல்லாமே துச்சமாகி விடுகின்றன! நன்றி சாத்திரியார்!!

Link to comment
Share on other sites

நன்றிகள் தப்பிலி எனக்கு கதைகளிற்கு பெரியளவு ஆலாபனைகள் பிடிக்காது.

நீங்கள் இவ்வாறு எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை . ஒரு கதை அல்லது நாவலுக்கு வெளிப்புறவர்ணனைகள் தேவையில்லை , உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்கின்றீர்கள் . ஒரு கதையில் அல்லது நாவலில் வெளிப்புற வர்ணனைகள் இல்லாவிட்டால் , ஆடைகள் இல்லாத மனிதரைப் பார்ப்பது போல் இருக்கும் :unsure::unsure:^_^:icon_idea: .

Link to comment
Share on other sites

நீங்கள் இவ்வாறு எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை . ஒரு கதை அல்லது நாவலுக்கு வெளிப்புறவர்ணனைகள் தேவையில்லை , உங்களுக்குப் பிடிக்காது என்று சொல்கின்றீர்கள் . ஒரு கதையில் அல்லது நாவலில் வெளிப்புற வர்ணனைகள் இல்லாவிட்டால் , ஆடைகள் இல்லாத மனிதரைப் பார்ப்பது போல் இருக்கும் :unsure::unsure:^_^:icon_idea: .

கோமகன் நான் எழுதுகின்ற நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான மற்றும் துயரம் சம்பந்தமான கதைகளைக்குறித்துத்தான் அப்படி கூறியிருந்தேன்.மற்றும்படி பொதுவான கதைகள் உதாரணமாக காதல் மற்றும் உறவுகள் குறித்தகதைகளில் இந்த வர்ணனைகள் ஆலாபனைகள் மெருகேற்றும். என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அதே நேரம் ஒரு கருவை மட்டுமே கதையாக்குவதற்கு நிச்சயமாக இந்த ஆலாபனைகள் தேவைதான். ஆனால் சில நேரங்களில் சிலர் அதனை அதிகமாக்குவதும் வேண்டத்தாகாததே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் நான் எழுதுகின்ற நடந்த சம்பவங்களின் அடிப்படையிலான மற்றும் துயரம் சம்பந்தமான கதைகளைக்குறித்துத்தான் அப்படி கூறியிருந்தேன்.மற்றும்படி பொதுவான கதைகள் உதாரணமாக காதல் மற்றும் உறவுகள் குறித்தகதைகளில் இந்த வர்ணனைகள் ஆலாபனைகள் மெருகேற்றும். என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. அதே நேரம் ஒரு கருவை மட்டுமே கதையாக்குவதற்கு நிச்சயமாக இந்த ஆலாபனைகள் தேவைதான். ஆனால் சில நேரங்களில் சிலர் அதனை அதிகமாக்குவதும் வேண்டத்தாகாததே

இந்தக்கதையிலும் ஆலாபனை இருந்திருக்குது.ஆனால் கதையின் சீரியசான போக்கால் சிலர் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.என்னதான் அடக்கினாலும் நகைச்சுவை ததும்ப எழுதும் கதாசிரியரையும் மீறி அது வந்துதான் ஆகும்.முன்பு கவிதை எழுதிய கதைக்கு சாத்திரி எழுதிய கருத்து இப்ப அவரின் கதையில் எட்டிப்பாத்துள்ளது.நான் மிகவவும் ரசித்தேன் என்பதை விட அதை அந்த இடத்தில் இடைச்சொருகல் என்று நினைக்க வைக்கதமாதிரி புகுத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

திண்ணையில் விசுகு மூன்று நாளைக்கு முதல் ஒரு கேள்வி கேட்டவர்

தமிழீழத்துக்கு ஆதரவு வழங்கிய புத்தி ஜீவிகள் எல்லாரும் எங்கே?

அதற்கு என் பதில்.இந்த கதையை வரைந்தவரும் அப்படியான ஒருவராகும்.காரணம் இவர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் என்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

உண்மை கலந்த கதைக்கு நன்றி.சாத்திரியார்,தொடர்ந்து யாழ் களத்தில் எழுதுங்கள்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று கொலன்னாவை தாக்குதலா?

Link to comment
Share on other sites

கற்பனையே பண்ணி பார்க்கமுடியாத சம்பவங்களும் நடந்தவைதான் எமது போராட்டம். அதற்கு உதாரணங்கள் போராட்டத்தில் புளொட் மற்றும் ஈரோஸ் ஈ.பி ஆகியன் 84 களிலேயே வெளி போராட்ட அமைப்புக்களான பாலஸ்தீன அமைப்புக்கள். ஆபிக்க எரித்திய அமைப்புக்களுடன் தொர்பகளை ஏற்படுத்தி கூட்டுப் பயிற்சிகளும் எடுத்திருந்தன். எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய் எமது போராட்டத்திற்கு தார்மீக உதவிகளை வழங்க புளொட் அமைப்பிற்கு மொறீசியஸ் நாடும். பின்னர் புலிகள் அமைப்பிற்கு ஜெர்மனியும் முன்வந்திருந்தன. ஆனால் எல்லமே சரியாக கையாளப்படவில்லை எல்லமே சரியாக ஒன்று சேர்ந்திருப்பின். 85 தமிழீழம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்திய உளவமைப்பின் பிடியிலிருந்து ஈழ அமைப்புக்கள் தந்திரமாக காய் நகர்த்தியிருக்கவேண்டும்.அதற்கான தந்திர புத்தி எந்த இயக்க தலைவர்களிற்கும் இருந்திருக்கவில்லையென்பதே சோகமான உண்மை. :(

உண்மையே. இந்திய உளவமைப்பின் தலையீடு மிகப்பெரியதே.

90 களின் பின்னர் தமிழர் மீட்புப் படை என்ற போர்வையில் தமிழகத்தில் இருந்து ஈழம்வந்து புலிகளிடம் பயிற்சியெடுத்தவர்களில் பெரும்பான்மையானோர் உளவுத்துறையினர் என்று சில கதைகள் உண்டு. மேலதிகமாக எதுவும் தெரியது. தமிழகத்தையும் உள்ளடக்கிய அகண்ட தமிழீழம் என்ற ஒரு சிறு எண்ணமும் தமிழர் மீட்புப் படையை உருவாக்க முனைந்தமையும் தான் ராஜீவ் கொலையை விட புலிகளை கருவறுப்பது என்ற இந்திய முடிவுக்கு காரணம் என்று நம்பப் படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன ? முன்னர் புலிகள் மீதான் தடையை நீக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் இந்த அகண்ட தமிழீழம் என்பது குறித்து வைக்கோவிடம் கேட்டதும் அவர் மறுத்ததும் செய்தியாகியிருந்தது.

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010

புலிகள் அகண்ட தமிழீழ கொள்கை வைத்திருந்தார்களா? நீதிபதிகள் வைகோவை கேட்டனர்.

புலிகள் தமது தமிழீழ நாட்டுடன் தமிழ் நாட்டையும் இணைக்கும் திட்டம் இருந்ததா என விடுதலைப்புலிகள் தடை மீதான விவாதத்தினை நடாத்தி வரும் நீதிபதிகள் வைக்கோவிடம் கேட்டனர். வைகோ அதற்கு இல்லை என பதிலளித்தார். விடுதலைப்புலிகள் அகண்ட தமிழீழ திட்டத்தை எப்போதுமே வைத்திருந்ததில்லை. அவர்களின் எந்த ஆவனத்திலும் அப்படி இல்லை. இது ஓர் மாயை, கற்பனை. இப்படியான பலவேறு கற்பனாவாதங்களால்தான் புலிகள் மீதான தடை உள்ளது. என்றார் வைக்கோ.

விடுதலைப்புலிகள் தடை என்பது காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டு அரசின் அரசியல் பழிவாங்கல். இந்த தடையால் கைதுகள், சிறைவைப்புக்கள், துன்புறுத்தல்கள் நடந்தேறுகின்றன எனவே புலிகள் மீதான தடையினை நீக்க கேட்கின்றேன் என்றார் வைக்கோ.

ஆங்கிலவடிவம் இங்கே அழுத்துக. http://www.eelanatham.info/?p=867

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77064

Link to comment
Share on other sites

உண்மை கலந்த கதைக்கு நன்றி.சாத்திரியார்,தொடர்ந்து யாழ் களத்தில் எழுதுங்கள்.

இரண்டு சம்பவங்களில் ஒன்று கொலன்னாவை தாக்குதலா?

பட்டிலந்தை( பாலத்தோட்டை) குண்டுவெடிப்பு காமினிதிசா நாயக்கா மற்றும் ஜ.தே.கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 62 பேர் அனைவரும் கொல்லப்பட்ட சம்பவம். சந்திரிக்கா வெல்வாரென தேர்தலிற்கு முன்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின்போது புலிகள் அமைப்பு சந்திரிக்காவிடம் தெரிவித்திருந்தனர். காமினி இறந்ததும் காமினியின் மனைவி வஜிரா தேர்தலில் நிறுத்தபட்டார். வழைமையாக தற்கொலை குண்டுதாரிகளின் உடல் சிதறினாலும் தலைசேதமடைவதில்லை. தலையை வைத்து குண்டுதாரியை அடையாளம் காண்பது வழைமை ஆனால் இந்தக் குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரியான பெண்ணின் தலையும் சேதமடைந்திருந்ததால் இலங்கை புலனாய்வுத்துறை ஸ்கொட்லாண் யாட்டின் உதவியை நாடியிருந்தது. ஸ்கொட்லாண் நாட்டு சிறப்பு அணியொன்று இலங்கையில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து சிதறிப்போன பெண்ணின் தலையின் பாகங்களை பரிசோதனை செய்து பெண்ணின் உருவத்தினை கணணியின் உதவியுடன் வரைந்து கொடுத்திருந்தனர். ஸ்கொட்லாண் யாட்டிற்கு இது ஒரு பயிற்சி களமாகவும் அமைந்திருந்தது அன்றைகாலங்களில் செய்திகளாக வெளியாகியிருந்தது

சம்பவம் நடைபெற்ற இடத்தின் சரியான சிங்களப்பெயர் தொட்டலங்க. தமிழ் பாலத்தோட்டை .எம்மவர் இரண்டையும் கலந்து பட்டிலந்தை சந்தை என்றே அழைப்பது வழைமை.

திண்ணையில் விசுகு மூன்று நாளைக்கு முதல் ஒரு கேள்வி கேட்டவர்

தமிழீழத்துக்கு ஆதரவு வழங்கிய புத்தி ஜீவிகள் எல்லாரும் எங்கே?

அதற்கு என் பதில்.இந்த கதையை வரைந்தவரும் அப்படியான ஒருவராகும்.காரணம் இவர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் என்பது தெரிகிறது.

கதையை வரைந்தவர் புத்திசீவியா நாசமா போக :lol: :lol:

Link to comment
Share on other sites

சாத்ஸ் அண்ணை! சத்தியமாகச் சொல்லுகின்றேன். கதையைப் படிச்சிட்டு... தலைசுத்தி விழுந்துபோட்டன்! கதையை கசக்கிப் பிழிஞ்சு எழுதியிருக்குறியள். :rolleyes::lol:

துன்பத்திலயும் ஒரு இன்பத்தை செருகி நல்லாத்தான் கொண்டு போயிருக்குறீங்கள். :wub:

கதையின் நடை,சுவாரசியம், விறுவிறுப்பு எல்லாமே நன்றாக இருந்தாலும் ... யாழில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதனால் பரவாயில்லை. :lol:

ஆனால் நான்தான் பாவம்! :o ரொம்ப உணர்சிவசப்பட்டுடுவன். அப்புறம்.....? :wub::lol:

ஒரு கவிதை கதையை பார்த்து உணர்ச்சிவசப்பட்டிருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல விறுவிறுப்பாக வாசிக்கும்படி உண்மைச்சம்பவத்தினைத் தந்திருக்கிறார் சாத்திரி அவர்கள்.

மத்தியவங்கித்தாக்குதல் பற்றி விக்கிபீடியாவில் இருக்கும் தகவல்

http://en.wikipedia.org/wiki/Central_Bank_bombing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்தண்ணா பகிர்வுக்கு,

கறுவல் - செந்தில் கவுண்டரை பார்த்து கேட்ட கேள்வியா இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.