Jump to content

யாரை கடுமையாக விமர்சனம் செய்வது சரி? புலிகளையா அல்லது ஏனைய தமிழ் பிரிவினரையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் போராட்டம் தோற்றது புலிகளினால்.தமிழ் மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியப்படுத்திய புலிகளின் பல செயல்களினால்.போராட வலுவுள்ள தலைமுறை போராட்ட காலத்தில் தாயகத்தை விட்டு புலம் பெயர்ந்தது ஏன்?புலிகளின் பாஸ் நடைமுறை இல்லாவிடின் எவ்வளவு மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்திருப்பார்கள்?இவ்விரண்டு கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிப்பீர்களானால் உண்மை அதுவென உணர்வீர்கள்.

மேற்கு நாடுகளில் விசா கட்டுப்பாடு இல்லையேல் எத்தனை பேர் தெற்காசியாவில் சொந்த நாட்டில் வாழுவினம்.. என்ற கேள்விக்கு நீங்கள் இதய பூர்வமாக பதில் அளியுங்கள்.. அப்புறம்.. புலிகளின் போர்க்கால நடைமுறைகளின் தேவை பற்றி விரிவாக விளக்கமாக நாம் உணர்த்தத் தயாராக இருக்கிறோம்.

இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆண்களை எல்லாம் போர்க்களத்துக்கு அனுப்பியது போன்று கூட புலிகளின் போர்க்கால தலைமைத்துவம் நடந்து கொள்ளவில்லை.

இன்றும் கூட சேர்ச்சிலின் போர்க்கால தலைமைத்துவப் பண்புகள் போற்றப்படுகின்றன. அதே தலைவர்.. அமைதிக் காலத்திற்கான சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் புலிகளிடம் இரண்டும் இருந்தது.

வெறுமனவே விடயங்களை புலிக் காய்ச்சல்.. காழ்ப்புணர்வோடு.. நோக்காமல்.. போர்.. போர் அழுத்தம்.. எதிரிகள் மக்கள் மீது திணித்த தடைகள்.. அழுத்தங்கள்.. பயங்கரமான சூழல்.. போர் சூழல் உருவாக்கிய.. மக்களுக்கு வெளிநாடுகளில் அகதி அந்தஸ்தும் நிரந்தர வதிவுரிமையும் கிடைக்க இருந்த வாய்ப்பு.. மற்றும் ஈபி.. ரெலோ.. புளொட்.. ஈபிடிபி.. ராசிக் குழு.. கருணா குழு.. போன்ற ஒட்டுக்குழுக்களின் பிள்ளை பிடி.. காட்டிக் கொடுப்புக்கள்...இவற்றையும் நீங்கள் ஒரு சேர நோக்கி விடயங்களை ஆராய வேண்டும். மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்துக்கு இடமில்லை என்றிருந்தால்.. அன்று எத்தனை பேர் பாஸ் கேட்டு கியூவில் நின்றிருப்பீர்கள் என்பதையும் உற்று நோக்க வேண்டும். உங்களை நோக்கிய சுய கேள்வியை அங்கு இட்டும் கொள்ள வேண்டும். அதற்கு இதய சுத்தியாக பதில் அளிக்கவும் முன் வர வேண்டும்..!

சிறீலங்கா அரசு கூட வடக்குக் கிழக்கிற்கு மக்களுக்கு பயணக்கட்டுப்பாடு வைத்திருந்து. அது பற்றி எவராவது சிங்களவனை கேள்வி கேட்டிருக்கினமா..???! தாண்டிக்குளத்தில் நடைபெற்ற கைதுகள்.. தடைகள் பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை..???!

வந்திட்டாங்கையா.. இதய சுத்தி பற்றி பேசிக் கொண்டு.. புலிகளை நோக்கி வைக்கப்படும்... அனைத்துக் கேள்விகளும் உங்களை நோக்கியே கேட்கப்பட வேண்டும்..??! அதுதான் நிஜ யதார்த்தம்..! இதய சுத்தி..! புலிகள் தமிழீழத்தை விரும்பிய மக்களுக்காக போராடினார்களே அன்றி.. தங்கள் பிழைப்புக்காக போராட்டம் நடத்தவில்லை. தமிழீழம் கேட்ட மக்களே தமிழீழத்தை விட்டு அந்நிய நாடுகளின் வதிவுரிமையில் மோகம் கொண்டு கிடந்ததற்கு புலிகள் என்ன செய்ய முடியும்..??!

ஏன் புளொட்.. ஈபி.. ஈபிடிபி ஒட்டுக்குழுக்காரங்கள் இருந்த காலத்தில் மக்கள் சாரை சாரையா நாட்டை விட்டு போகல்லையோ.. ???! இந்தியப் படைகள் காலத்தில் பலாலியில் இருந்து பக் பண்ணி.. கொழும்பில கொண்டு வந்து விட்டு காசு பார்க்கல்லையோ..??! வவுனியாவில் புளொட் நெருக்கடி என்று பலாலியில் இருந்து இருக்கைகள் அகற்றிய விமானங்களில் மக்கள் பொதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களின் அநேகர் இன்று மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்தும்.. நிரந்தர வதிவுரிமையும் பெற்று வாழினம். அவைக்கு ஏன் தமிழீழம் அமைவதில் அக்கறை வரனும்.. வராது..???! இதற்கும் புலிகள் தான் காரணமோ..???! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணியம் எங்கிருந்து கட்டமைக்கப்படுகிறது என்பதை ஹரி இராசலட்ச்சுமி இந்தக் கட்டுரையில் மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்...முரண்வெளி இணையத்தில் உள்ள ஹரியின் எழுத்துக்களைப் போல் மிகச்சிலரே இதுவரை இவ்வளவு உட்சென்று யாழ்ப்பாணியத்தின் உண்மைமுகத்தை போட்டுடைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..அநேகமான யாழ்ப்பாணத்து எழுத்தாளர்கள் இந்த சமூகப் புண்களைப் பற்றி வெளிப்படையாக எழுதவோ விமர்சிக்கவோ தாயாரில்லாதா பயந்தாங்கொள்ளிகளாக,இப்படி ஒன்று இப்பொழுது இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்..போராளிகளின் காலத்தில் ஒன்றுமே இலாததுபோல் வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே இந்தச் சமூகப்புண்கள் அவிந்து குமைந்து கொண்டிருந்தன..போராளிக்குழுக்கள் ஆரம்பகாலங்களில் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டாலும் அதில் இணைந்தவர்கள் இந்த சமூகத்தால் தயார்ப் படுத்தி அனுப்பபப் பட்டவர்களே..இந்தவிதமான மன நோயுடன் இருந்தவர்களால்தான் கொஞ்சம் கூடத்தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டத்தின் முளையிலேயே குத்து வெட்டுடன் பிரிவினைகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது..மாற்றங்கள் இந்த இனத்தின் அடிப்படை மனநிலையில் ஒருபோதும் உருவாகப் போவதில்லை..அது மிகவும் ஒரு பின் தங்கிய வர்க்க சமூக அமைப்பை தனது அடிப்படை இருப்பாக வனைந்து வைத்திருக்கிறது..எப்படி இஸ்லாம் என்னும் மதவாதத்தில் இருந்து ஒரு போதும் முஸ்லீம்களால் மீண்டு வரமுடியாதோ அப்படியே இந்த இனத்தினாலும் அது போர்த்தியிருக்கும் ஜாதி என்னும் போலி பிம்பத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது..அந்த போலி விம்பம் உடையாத வரைக்கும் தமிழ் இனம் என்ற ஒற்றை உணர்வு ஒருபோதும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவே வராது...வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே தமிழ்த்தேசியம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்...நடைமுறையில் ஊர்ப் பற்றும் ஜாதிஉணர்வுமே இன உணர்வை மேவித் தமிழர்களின் உடலில் ஓடி இன்னும் இன்னும் பின் தங்க வைத்து சமூகப்பிளவுகளையும் அதைத் தொடர்ந்து இன அழிவையும் நோக்கி அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும்...இது தமிழகத் தமிழனுக்கும் நிகழும்...நிகழ்ந்து கொண்டிருக்கிறது..

பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதீயமும் மதமேலாதிக்கமும்;

பிந்தைய நிலவரங்கள்

1

யாழ்ப்பாணத்தின் பிரபலமிக்க ஆண்கள் பாடசாலையான யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் நண்பர்கள் அக் கல்லூரியின் வெள்ளாள பார்ப்பனச் சாய்வு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பலவற்றை கூறுவார்கள். நாவலர் பற்றிய சரிநிகர் விவாதங்களை ஆழமாய்க் கற்று கறுப்பு போன்ற விளிம்புநிலைக்குரல்த் தொகுப்புகள் வாசித்துக் கருத்தாடும் நண்பரொருவரும் யாழ் இந்துவில் கல்விகற்பதனால் ஏற்படும் உடலுபாதைகள் பற்றி நகைச்சுவையாகக் கூறுவார். பலவகைகளிலும் யாழ் இந்து, சென் ஜோண்ஸ் பாடசாலைத் தோழர்களின் விபரிப்புகளே எனது கட்டுரைக்கான மூல்கங்களும் தூண்டுதல்களுமாகும். பெயர்வெளியிட முடியாத நிலையிலிருக்கும் அம்மாணவர்களுக்கான நன்றியுணர்வுடன் நாம் பாடசாலை விடயங்களுக்குள் நுழையலாம்.

***

நான் இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்கிற களம் பாடசாலைகளே. பல்கலைகழகம் போன்ற இதர கல்விநிறுவனங்களிலும் கீழ்விபரிக்கப்படும் சாதிமேலாதிக்கத்தின் இணைத்தன்மைகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் தரவு மற்றும் ஆதாரங்கள் போதாமையை மனங்கொண்டு அவை பற்றிய தகவல்கள் இங்கு தரப்படவில்லை.

***

எனக்குக் கிடைக்கும் வாய்மொழித் தகவல்களின்படி யாழ் இந்துவைவிட மற்றைய இந்துக்கல்லூரிகள் முற்போக்கானவையாகக் காட்டிக்கொள்ள முற்பட்டாலும் யாழ் இந்துவிற்கும் மற்றையவற்றுக்கும் இடையே துளியளவும் வித்தியாசம் கிடையாது என்பதுதான் உண்மை. கீழே பட்டியற்படுத்தப்படும் தகவல்கள் ஒன்றிரண்டு மாற்றங்களுடன் அனைத்து இந்துக்கல்லூரிகளுக்கும் பொருந்திப் போகக்கூடியவையே.

· பாடசாலைகளுக்கு புதுமுக மாணவர்களை உள்ளீர்க்கும் செயன்முறைகளின் போதே இந்துவேளாள வடிகட்டல் தொடங்கி விடுகிறது. தரம் ஐந்து புலமைப்பரிசிலும் நுழைவுத்தேர்வுகளும் அனுமதிக்கான முன்நிபந்தனைகள். புலமைப்பரிசிலில் பெரும்பான்மை புள்ளிகள் பெற்றுவருவது அதிகமும் டாக்குத்தர் இஞ்சினியர் லோயர் அன்ன பிறரின் பிள்ளைகளாகவே இருந்துவிடுவதால் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆயினும் பொஸ்கோ போன்ற கத்தோலிக்க வெள்ளாள பாடசாலைகளூடு புலமைப்பரிசிலைத் தட்டிவிடும் கிறிஸ்தவர்களும் அபூர்வமாக சித்தியடைந்துவிடும் தலித்துக்களும் புலம்பெயர் உறவுகளால் புதுப்பணக்காரர்களாகிய தலித்துக்களும் தான் இந்துக்கல்லூரிகளுக்கு இருக்கும் முக்கிய சவால்கள். நேர்முகத் தேர்வின் போது மேற்குறித்தவகை மாணவர்கள் வேறுபாடசாலைகள் குறித்துச் சிந்திக்கும்படி தூண்டப்படுகிறார்கள். நன்கொடைத்தொகையைக் கூட்டிக் கேட்டல் போன்ற பொருத்தமான உத்திகள் மூலம் இது நடக்கிறது.

· 8ம் வகுப்பு வரையான மாணவர்களிடம் மாத்திரமே வாத்தியார்களதும் சட்டம்பிமார்களதும் (கவனிக்க ஆசிரியர்கள் அல்ல) செல்வாக்கு எடுபடுகிறது. 9ம் 10ம் தரங்களில் ஆயுதக்கலாச்சாரம் ஊடுருவிவிடுவதால் வாத்திகள் பெரிதும் அடக்கியே வாசிக்கும். 8ம் ஆண்டு வரையிலான மாணவர்கள் அனுபவிப்பது நரகம். மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து வராத பட்சத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். ‘ஏன் அணிந்து வரவில்லை’ என்ற அதட்டலுக்கும் உறுக்கலுக்கும் பின்பே நீ வேதமா என்ற கேள்வி வரும்.

· பாடங்கள் தொடங்குகையில் சில ஆசிரியர்கள் தேவாரம் பாடியே கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றனர். கிறிஸ்தவ மாணவர்களும் மதாவனம்பிக்கையுடைய மாணவர்களும் கூட எழுந்து நிற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில் இந்தக்கட்டாயப் படுத்தலுக்கு எந்த தேவைகளும் இருப்பதில்லை; மாணவர்கள் தாமே எழுந்து நிற்கிறார்கள்.

· தண்டனை மற்றும் விசாரணைகளில் இருந்து பிராமண மாணவர்களும் பிரபலங்களின் பிள்ளைகளும் மிக இலகுவாக தப்ப முடிகிறது.

· கிறிஸ்தவ சமயம் இந்துக்கல்லூரிகளில் கற்பிக்கப்படுவது கிடையாது. மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லை. சமய பாட நேரங்களில் நூலகத்துக்கோ மைதானத்துக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள். ஆங்கிலமொழிவழிக் கல்வி வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை யாரேனுனுமொரு கிறிஸ்தவ மாணவன் பெற்றுவிடுகிற நிலையிலும் கூட இந்த அவலம் தொடர்கிறது. கிறிஸ்தவ மாணவர்கள் சைவசமயம் பாஸ்பண்ண இலகுவானது என்றவகைப் போதனைகள் மூலம் திசைதிருப்பப் ப்டுகிறார்கள். 2007 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதப் போகிற அணியில் இருக்கும் மாணவர்களில் இரு கிறிஸ்தவர்கள் சாதாரண தரத்தில் சைவ சமயத்தையே எழுதினார்கள். கிறிஸ்தவம் தொடர்பாக அவர்களுக்கு ஒன்று தெரியாது. தேவாரம் நன்றாகப் பாடுவார்கள்.

· பிரார்த்தனை ஒன்றுகூடலில் பஞ்சபுராணம், பஜனை, மந்திரம், தியானம் என்று நடாத்துகிறார்கள். உடற்பயிற்சி நடாத்தப்படுவதில்லை – ஓங்கார மூச்சுப் பயிற்சியில் அவ்வளவு நம்பிக்கை. எவ்வளவுதான் தாமதமானாலும் பார்ப்பன மாணவன் இருந்தால்தான் நடராஜர் சிலைக்கு வழிபாடு நடக்கும். மேலும் அனைத்து மாணவர்களும் தலா 2/= இந்துமாமன்றத்துக்கு வழங்க வேண்டும். கிறிஸ்தவ மாணவர்களுக்கென்று தனியாகப் பிரார்த்தனை நடாத்தப் படுவதில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் திருநீறணிந்து சப்பாத்துக்கழட்டிப் பிறகு பிரார்த்தனை மண்டபத்தினுள் நுழையலாம். பிறர் பிரார்த்தனை மண்டபத்துக்கு வெளியே கால் கடுக்க நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் பிரார்த்தனை நேரம் முடிய பாடசாலை வரலாம் / பிரார்த்தனை நேரங்களில் வகுப்பறைகளில் அமர்ந்திருக்கலாம் போன்ற் எவ்வித நெகிழ்வுகளும் நிர்வாகத்திடம் கிடையாது. வகுப்பில் உட்கார்ந்திருந்தால் மாணவத்தலைவர்களும் ஒழுங்குபேண் வாத்திகளும் அந்தரப்பட்டு எப்படியாவது விறாந்தைகளுக்கு விரட்டிவிடுவார்கள்.

· பாடசாலைக் கீதம் இசைக்கப் படுவதற்கு முன்பாக தேவாரம் இசையுடன் பாடப்படும். கிறிஸ்தவ மாணவர்களும் எழுந்து நின்று கண்மூடி கைகூப்ப வேண்டும். சற்றே முரண்டுபிடிக்கும் இளம் மாணவர்களுக்கு சொல்லப்படும் சமாதானம் ‘நீ உன்ர கடவுள நைச்சுக்கொள்’

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி உள்ளிட அனைத்துப் பாடசாலைகளிலும் வெள்ளாள மேலாதிக்கப் போக்கு சமீபகாலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வெறும் மேல்மட்டத் தோற்றப்பாடே தவிர உண்மையல்ல. மேலும் இந்தக் கேள்விக்குள்ளாக்கல் எவ்வாறு அமைகிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். (உதாரணங்கள் – மாணவர்களது விநோத சிகையலங்காரங்களை, ரைற்றாக ஜீன்ஸ் அணிவதை முன்புபோல் எதிர்க்க முடிவதில்லை, பெண்களை மிக மோசமாக துன்புறுத்தும் கேலிகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிப்பது கூட பெரும்பாடாய் இருக்கிறது) இப்படியான கேள்விக்குட்படுத்தல்கள் நமது சமூகம் வீழ்ந்துகொண்டிருக்கும் வீழ்ச்சியின் இன்னொரு நோய்க்கூறான சாட்சி என்பதற்கும் மேலாக எதிர்காலத்தில் அறநெறி/மதம் போன்றவற்றின் மீள்வலிதாக்கத்துக்கு துணைபோகக் கூடும்.

2

கிறிஸ்தவப் பாடசாலைகள்-முக்கியமாக அங்கிலிக்கன் திருச்சபையின் சமயப் பரப்புக் கருவியும் மறுகாலனியாதிக்க சக்தியுமான சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி மகளிர் போன்றவை- இதுக்கல்லூரிகளை விடவும் மிக நுண்மையான கட்டமைப்புகளைக் கொண்டியங்குபவை. மேலும் இவை வெளித்தள்ளும் மாணவ சமூகம் மேட்டுக்குடி கத்தோலிக்க வெள்ளாள சமூகத்தின் பிரதிகளாகவே பெரும்பாலும் அமைந்து விடுவர்.

இவை இந்துக்கல்லூரிகளைப் போலல்லாது சைவ சமயத்தைப் பேரளவிலாவது கற்பிக்கின்றன. சந்தனப் பொட்டு திருநீறு அணிந்து செல்லும் மாணவர்கள் முன்பெல்லாம் தண்டிக்கப் பட்டார்கள். 90களின் நடுப்பக்தியில் நிலவரங்கள் மாறி வெளிப்படையான தண்டனை நீக்கப் பட்டது. நுண்ணிய செயற்பாடுகள் மூலம் ‘சந்தனப் பொட்டு மாணவன்’ புறமொதுக்கலை உணரும் படி செய்யப் படுவான். யாழ்ப்பாணக் கல்லூரி பற்றிக்ஸ், திருக்குடும்பக் கன்னியர்மடம், சென்.ஜோன்ஸ், அன்னபிற பாடசாலைகளில் இதுதான் நிலமை.

நன்கொடையாளர்களைத் திருப்திப் படுத்தும் ஓர் உத்தியாகவும் இந்த semi-secular நிலைப்பாடு கடைப்பிடிக்கப் படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை. பொஸ்கோவிற்கு முன்புறமுள்ள பிள்ளையார் கோவிலில் நவராத்திரி காலப் பிரார்த்தனைகளுக்கு சைவப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள்.

சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி, போன்றவை தலித்துகளுக்கான கல்விக்கூடங்கள் அல்ல. கத்தோலிக்க வெள்ளாளர்களும் மேட்டுக்குடிக்குமான பாடசாலைகள் இவை. 90களுக்குப் பின்பு யாழ். சமூக அமைப்பில் உருவாகின்ற தலித் பணக்காரர்கள் (புலம்பெயர் உறவுகள் உதவியால்) மட்டும் விதிவிலக்காக இப்பாடசாலைகளில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. இவர்கள் நிர்வாகத்துக்குப் பெரும் தலையிடியாக இருப்பதில்லை. தலித் பணக்காரர்கள் மிக விரைவாகவே தம்மை நவவேளாளகுடிகளாய் வடிவமைத்துக் கொண்டுவிடுவதால் இப்பாடசாலைகளின் புனிதமிக்க நளினமிக்க இருப்பு பேணப்படுகிறது. புகுமுக வகுப்புகளில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து 75000/= வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. தவணைக்குத் தவணை அறவிடப்படும் கட்டணமும் சராசரிக்கு மிக அதிகமானது. இத்தனைக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் சீருடை பாடசாலையின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் அரசு கவனிக்கிறது. மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை பெரிதும் OBA க்கள் பொறுப்பேற்கிற நிலையில் நன்கொடையாகப் பெறப்படும் நிதிகளில் பெரும்பங்கு திருச்சபையின் சமயப் பரப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கே செல்கிறது.

இந்த பாடசாலைகள் மிக உறுதியான ஆனால் இலகுவில் கண்ணுக்குப் புலப்படாத பிரச்சாரக்கட்டமைப்பு ஒன்றை சமூகத்தினுள் நிறுவி வைத்திருக்கின்றன. பாடசாலை பற்றிய உயர்வான் எண்ணத்தை சமூகமனதில் பதிய வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பரப்புரைகளை நிறைப்பதற்கென்றே சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந்தொகைப் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது.

இந்த நுணுக்கமன செயன்முறை அடுக்குகள் குறித்து அறியமுடியாதளவு திறம்படச் செய்கிறார்கள். புலனாய்வுப் பத்திரிகையியல் கற்றுத் தேர்ந்தோர் கூட இந்த வலையமைப்புக்களின் துளைத்தறியமுடியா மூட்டத்தன்மையையும் சிக்கலையும் புரிந்து கொள்வதில் பல இடர்களுக்கு முகங்கொடுக்க நேரும்.

3

யாழ்ப்பாணத்து இந்துக்கல்லூரிகள் தொடர்ச்சியாகப் பண்ணிக்கொண்டிருக்கிற இந்துமயமாக்கல்/வேளாளமயமாக்கலுக்குத் தக்க சான்றாதாரங்கள் யா.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்டிருக்கும் நூற்றாண்டு விழா மலரில் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பின்வருமாறு:

· பக்.212 – அ.பி.மரியதாஸ் என்ற கிறிஸ்தவர் (வடிவமைக்கப் பட்ட இந்து?!) கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

‘மேலைத்தேய ஆட்சியாளரின் வலைக்குள் சிக்கிய பிரதேசங்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து வந்த பாதிரிமாரின் முயற்சியினால் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு ஆங்கிலக்கல்வி போதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி மெல்ல மெல்ல மக்கள் மத மாற்றத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச சலுகைகள் அவர்களின் முயற்சியை இலகுவாக்கின. கீழைத்தேய மக்களின் மேலைத்தேய நாகரீக மோகம் பாதிரிமாரின் நோக்கத்தை வெற்றி பெற வைத்தன.’

‘இரண்டாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட நம் பாரம்பரியப் பெருமை மெல்ல மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கும் விபரீதம் கண்ட சில தமிழ்ச்சான்றோர் அந்ந்நிலை தடுக்க முயன்றோர்’

..’இக்கிளர்ச்சியின் வெளிப்பாடே தமிழ்ப்பாடசாலைகளின் தோற்றமெனலாம். இப்பாடசாலைகளின் தோற்றத்துக்கு நாவலர் பெருமானின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும்.’

*—கட்டுரையாளர்— நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம் மரியதாஸ் கத்தோலிக்க மதகுருமாரை ‘பாதிரிமார்’ எனக் குறிப்பிடப் படுவதைத் தான். இந்துக்கள் தான் கத்தோலிக்க மதகுருக்களை பாதிரியென அழைப்பது வழக்கம். மற்றபடிக்கு வெறியிலிருக்கும் அதிருப்தியடைந்த மீனவர்கள் இவ்வாறு விளித்துத் திட்டுவது வழக்கம். பெரும்பாலும் ‘மதகுருமார்’ ‘மதத்தலைவர்கள்’ ‘சுவாமி’ ‘பங்குத்தந்தை’ போன்ற சொற்பிரயோகங்களே அச்சு ஊடகங்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

மேலும் மரியதாஸ் ஓர் வரலாற்றுண்மையைக் கவனிக்க விரும்பவில்லை. கத்தோலிக்க மதப் பரவலும் விளிம்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட விடுதலையும் உடனிகழ்வுகளாயிருந்த உண்மையை அவர் லாவகமாக மறைத்து இந்து வெள்ளாளனுக்கு உவப்பான உண்மையைக் கட்டமைக்கிறார்.

‘நாவலர் பிரான்’ பற்றிய கட்டுடைப்பு ஆய்வுகளை மரியதாஸ் அறிந்திருக்காவிடினும் கூட நாவலர் பற்றி யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் சுவாரசியமான வாய்மொழிக்கதைகளைக் கூடவா அறிந்து கதைக்கமுடியாமல் போயிருக்கிறது? இதைக் கூட மரியதாஸின் தெரிவுக்கானது என நாம் விட்டுவிடலாம். மேலும் மரியதாஸ் ஓர் இந்துவைப் போல வரலாற்றுண்மைகளைத் திசைதிருப்புவதும் அவரது தெரிவுக்கானதே. நமது கேள்வி என்னவெனில் அவரது இத்தகைய தெரிவுகளை மேற்கொள்ளும் படியாக அவரது மனத்தை வடிவமைத்தது எது என்பது தான்.—

· பக்.216 – சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் இவ்வாறு எழுதுகிறார்:

‘யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பெரும் அறிஞர்களையும், கல்விமான்களையும், ஆன்மீகவாதிகளையும் உருவாக்கிய பெரும் கோவில் ஆகும்’

‘காத்தார் சமூகத் தொண்டன். புகழுக்காக! விளம்பரத்துக்காக! சமூகத்திற்குள் நுழைந்தவர் அல்லர்! உண்மைக் கம்யூனிஸ்ட் இவர் இந்துக் கல்லூரியை நடாத்துவாரா என..’

*—கட்டுரையாளர்—செஞ்சொற்சொல்வருக்குக் கூற எம்மிடம் ஒன்றுமில்லை. வாசகர்கள் அவரது கூற்றுக்களுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய ஓர் பிற்குறிப்பு இது : ஆணாதிக்க, இந்துத்துவ, உயர்குடியாதிக்க மலத்தை தன் வாயாலேயே கழித்துவரும் கம்பவாரிதிகளையும் அசட்டுத்தனமாக கோவில் கோவிலாய் ஏறி கத்திக் கொண்டிருக்கும் சொல்லின் செல்வர்களையும் உருவாக்கிய அற்புத உன்னத கோவில் இந்த இந்துக்கல்லூரி.

· பக்.223 – செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுகனார் உரைப்பது யாதெனில்:

‘திரு.யோசேப் மரவேலை பொறிமுறை வரைதல் கற்பித்தவர் ஒரு கிறிஸ்தவர் என்றாலும் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தவறார். திரு சந்தியாபிள்ளை, திரு.மரியதாஸ் இவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள். ஆனால் கல்லூரியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் எம்மை நெறிப்படுத்துவதில் முதன்மை வகிப்பர். இந்துக்கல்லூரி ஒரு பெரிய குடுமபம்.’

*—கட்டுரையாளர்—இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் இந்து மயமாக்கலுக்கான உதாரணம்.

· பக்.253 – சமீப காலமாக இலக்கியவாதியாக அறியப்பட்டுவரும் த.ஜெயசீலன் (கைகளுக்குள் சிக்காத காற்று – அரச விருதொன்றைப் பெற்றது, வார்த்தைகளை இடைனடுவில் முறித்துப் போட்டவுடன் பிரசுரிக்கத் தயாராயிருக்கும் சிறுபத்திரிக்கைகளில் இவரது கவிதைகளைக் கண்ட ஞாபகம்) எழுதிய கவிதையிலிருந்து:

‘சந்தனப் பொட்டுப்பள்ளி

என்றவர் வாயடைக்க

விந்தை விஞ்ஞானம், நூறு

விளையாட்டு, கலைகள், கல்வி

என்றெந்தத் துறை என்றாலும்

“இந்துவே முதலில் இன்று”!

சந்தது சைவ மேன்மை

காக்குது.. தளராதிங்கு!’

*—கட்டுரையாளர்—ஜெயசீலன் நம்மையெல்லாம் பார்த்து அவரது கவிதையின் இறுதிப்பகுதி மூலம் ஒன்று கேட்கிறார்: ‘நாம் இந்துமைந்தர் என்னும் நட்புக்கெது ஈடாகும்?’ என்ன சொல்லலாம் தோழர்களே? தயவு செய்து ஒன்றும் கூறாதிருப்போம். நிச்சயமாய் நாம் அவருக்கு ஈடு கிடையாது தான்.

3

பாடசாலைகள் விடயம் சமூக அமைவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கு பெரிதுபண்ணப்பட வேண்டிய விடயம் கிடையாது என்று வாதிடுபவர்களுடன் குஸ்திபோடும் எண்ணம் எனக்கில்லை. பாடசாலைகளின் சமூகவடிவமைப்புச் சக்தியை விளங்கிக் கொள்ள நான் இக்கட்டுரைக்குச் சற்றும் பொருத்தமற்ற விடுதலைப் போராட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பேரினவாத சக்திகளுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் ஒரு பெரும் தலையிடியாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. எதிர்ப்பின் வலுமிக்க சக்தியாக அது இருந்து வருவதில் சந்தேகமில்லை. தமிழ்த்தேசியத்துக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த கல்லூரி என்கிறார் இ.விஸ்வநாதன் (பக்.18-19, நூற்றாண்டுவிழா மலர்) நூற்றாண்டுவிழா மலரில் கல்லூரியன் வரலாற்றை எழுதுகிற பேரா.ச.சத்தியசீலன் குறிப்பிடுகிறார்:

“தமிழீழ சுதந்திரப் போராட்டம் முளைவிட்ட காலத்தில் இருந்து யாழ் இந்துவின் மாணவ மணிகள் தங்களையும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலே இணைத்துக் கொண்டனர். இவ் விடுதலைப் போராட்டத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பொன்னுத்துரை சிவகுமாரன், உலகே அதிசயிக்கத் தக்க வகையில் தன்னுயிரை தமிழினத்துக்காக அர்ப்பணித்த தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) தளபதி இராதா எனப் பலர் இந்த வரிசையிலே திரள்வர்.”

தமிழீழ விடுதலைக்கென பல மாணவர்களைத் தளபதிகளாகவும் உயர்பீடங்களிலிருப்போராகவும் உருவாக்கிக்கொடுத்த யாழ்.இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழா மலரின் பக்கநிரப்பிகளாகத் தரப்பட்டிருக்கும் ‘பொன் மொழி’களில் சிலவற்றின் பட்டியல் இது. (தமிழீழத்துக்குப் பொருத்தமான குடிமக்களை வடிவமைப்பதற்கான ஒழுங்கு விதிகளாகவும் இவற்றை வாசிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.) அவர்கள் களங்களிலும் கோட்பாடுகளிலும் எட்டிய வெற்றியின் பின் யாழ்.இந்துவின் பங்களிப்பும் உள்ளது என்பது போலவே கறுப்புப் பக்கங்களுக்கும் யாழ் இந்துவும் காரணமாயிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் இதோ:

· நிலமைக்குத் தக்கபடி நடந்துகொள்

· உயரவேண்டுமானால் பணிவு வேண்டும்

· நாட்டுப்பற்றை விட அதிகமான அன்பு வேறொன்றில்லை

· இன்னுயிர் நீர்ப்பினும் நம் தமிழ் காப்போம்

· முதலில் கீழ்ப்படிதற்குக் கற்றுக்கொள், பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவே வந்து சேரும்

· நீ எதைச்செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு.

· எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

· அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்

· கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள், அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார்கள்.

· மன அமைதி வேண்டுமானால் பிறரிடம் குற்றம் காணாதே.

· சுடர்விடவேண்டுமானால் சூடுபட வேண்டும்.

***

தரவு தரு பிரதி : 1905-2005 நூற்றாண்டு மலர்

யாழ். இந்துக் கல்லூரி

பழைய மாணவர் சங்கம்.

நன்றி :http://muranveliarch...AE%B3%E0%AF%8D/

Link to comment
Share on other sites

சுகன், சுபேஸ் மற்றும் சசி

புலிகளின் போராட்டம் தோற்றது எதனால்???

சாதியால்

ஊர்ச்சண்டையால்

தமிழரிடையே உள்ள பிரிவுகளால்???

பதில்தரவும்.

சசி

தலைவர் எப்போ எங்கு எப்படி இறந்தார்

தகவல்களுடன் ஆதாரமும் தரவும்

உண்மையில் எனக்கு தெரியவில்லை.

நம்பி போராட போன போராளிகளை சயினைறைக் கூட கடிக்க கூடாது என்று அன்புக் கட்டளையிட்டு சரண்டைய சோன்னா போது ஒருமுறை, பெற்ற தாய் தந்தையைக் கூட காப்பாற்ற முடியாது எதிரியிடமே என்று உயிர் வாழ அனுமதித்தது, 140.000 மக்கள் இறந்த பின்னும் தான் மட்டும் தப்பிவிட்டேன் என்ற மாயயை உருவாக்குதலுக்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டது. கருணா , கேபி பிள்ளையான். நெடியவன், வினாயகம் ரெஜி என்று பல பஞ்சோந்திகளை உருவாக்கி விட்டடதில், இன்னும் நான் உயிரோடு இருக்கேன் என்ற தோற்றப்பாட்டுக்கு சில உண்மை விசுவாசிகளை உள்படுத்தி விட்டது. எப்படி எத்தனையோ சந்தர்ப்பத்தில் இறந்த ஒருவர் மீண்டும் வருவார் ஈழம் வாங்கி தருவார் என்று நம்புவோமாக?

இது ஒன்றும் யாழ்ப்பாணத்து ஜஸ்பழவான் இல்லை இன்றை போனால் நாளைக்கு வரும் போது வாங்கி தருவதுக்கு...........

யாழ்ப்பாணியம் எங்கிருந்து கட்டமைக்கப்படுகிறது என்பதை ஹரி இராசலட்ச்சுமி இந்தக் கட்டுரையில் மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்...முரண்வெளி இணையத்தில் உள்ள ஹரியின் எழுத்துக்களைப் போல் மிகச்சிலரே இதுவரை இவ்வளவு உட்சென்று யாழ்ப்பாணியத்தின் உண்மைமுகத்தை போட்டுடைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்..அநேகமான யாழ்ப்பாணத்து எழுத்தாளர்கள் இந்த சமூகப் புண்களைப் பற்றி வெளிப்படையாக எழுதவோ விமர்சிக்கவோ தாயாரில்லாதா பயந்தாங்கொள்ளிகளாக,இப்படி ஒன்று இப்பொழுது இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்..போராளிகளின் காலத்தில் ஒன்றுமே இலாததுபோல் வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே இந்தச் சமூகப்புண்கள் அவிந்து குமைந்து கொண்டிருந்தன..போராளிக்குழுக்கள் ஆரம்பகாலங்களில் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டாலும் அதில் இணைந்தவர்கள் இந்த சமூகத்தால் தயார்ப் படுத்தி அனுப்பபப் பட்டவர்களே..இந்தவிதமான மன நோயுடன் இருந்தவர்களால்தான் கொஞ்சம் கூடத்தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டத்தின் முளையிலேயே குத்து வெட்டுடன் பிரிவினைகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது..மாற்றங்கள் இந்த இனத்தின் அடிப்படை மனநிலையில் ஒருபோதும் உருவாகப் போவதில்லை..அது மிகவும் ஒரு பின் தங்கிய வர்க்க சமூக அமைப்பை தனது அடிப்படை இருப்பாக வனைந்து வைத்திருக்கிறது..எப்படி இஸ்லாம் என்னும் மதவாதத்தில் இருந்து ஒரு போதும் முஸ்லீம்களால் மீண்டு வரமுடியாதோ அப்படியே இந்த இனத்தினாலும் அது போர்த்தியிருக்கும் ஜாதி என்னும் போலி பிம்பத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது..அந்த போலி விம்பம் உடையாத வரைக்கும் தமிழ் இனம் என்ற ஒற்றை உணர்வு ஒருபோதும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவே வராது...வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே தமிழ்த்தேசியம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்...நடைமுறையில் ஊர்ப் பற்றும் ஜாதிஉணர்வுமே இன உணர்வை மேவித் தமிழர்களின் உடலில் ஓடி இன்னும் இன்னும் பின் தங்க வைத்து சமூகப்பிளவுகளையும் அதைத் தொடர்ந்து இன அழிவையும் நோக்கி அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும்...இது தமிழகத் தமிழனுக்கும் நிகழும்...நிகழ்ந்து கொண்டிருக்கிறது..

சாதி அழிக்க படவேண்டும் என்று நினைத்து இருந்தால்?????????? நினைப்பவன் உண்மையில் தன்னை விட சாதி குறைவானவர்கள் என்று தான் நினைக்கும் சாதியில் பெண்ணை விரும்பி திருமணம் செய்ய வேண்டும். மாறாக????????

Link to comment
Share on other sites

ஏன் சார் சும்மா அடிபடுறீங்க... சும்மா சங்கக் கடையில் தருகிற மிச்சாட்டு அரிசியையும் புழு நெளியிற கூப்பன் மாமாவையும் அதோடை அவங்கள் தாற சீத்தை துணியையும் மாசி கருவாடையும் பருப்பை வேண்டி திண்டுட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு ...சனத்துக்கு போராட்டத்தை ரசிக்கிற லும்பன் குணம் தான் இருந்திருக்குது ..தான் போராட தயாரில்லை...அதனால் இவை எல்லாரையும் வாடகைக்கு எடுத்து விட்ட மாதிரி வளர்த்து விட்டது தான் பிழை ...இதுகள் எல்லாத்துக்கும் சேர்த்து சனத்துக்கு தான் நாலு சாத்து சாத்தோணும் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தேசியம் வலுவற்ற அடித்தளத்தைக் கொண்டது. ஒரு மக்கள் கூட்டத்தை ஒன்றிணைக்கக் கூடிய வலுவான காரணம்தான் தேசியத்தைத் தீர்மானிப்பது. 83 கலவரத்தின் பின்னர் சிங்களவர்களின் ஆதிக்கம் தமிழர்களை ஒரு சில வருடங்கள்தான் ஒன்றிணைய வைத்தது. அதன் பின்னர் தமிழர்களுக்குள் இருந்த பல பிரச்சினைகள் மீண்டும் முளைவிட்டன. சுனாமி போன்ற பேரழிவுகள் வந்தபோது கூட, அல்லது முள்ளிவாய்க்காலில் மக்கள் பேரலவத்திற்குள் சிக்கியபோது கூட தமிழர்களால் துணிந்து ஒன்றிணைய முடியவில்லை. புலம் பெயர்ந்தவர்கள் ஒன்றிணைந்தார்கள் என்பதெல்லாம் அந்த அந்த நேரத்தில் அவர்களுக்கு இருந்த உணர்வைப் பொறுத்தது. தாயகத்தில் உயிருக்கு அஞ்சியே இருக்கப் பழகியதால் பெரும்பாலோனோர் எப்போதுமே வெளியே பாயத்தான் தருணம் பார்த்திருந்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தில் அனேகர் போராட்டத்தின் மையப் பகுதியான வட கிழக்குப் பகுதிக்கு வெளியேதான் ஓடினர். எனவே தமிழர்கள் தேசியத்தின் இறுக்கமான பற்றுடையவர்கள் என்பதெல்லாம் வெற்றுக் கோசம்தான்.

தற்போது உள்ள சூழலில் சிங்கள அரசு தமிழர்களின் பலவீனமான தேசிய உணர்வைக்கூட விட்டுவைக்கப் போவதில்லை. தேவையான வேலைத்திட்டங்களைத் தங்குதடையின்றிச் செயற்படுத்தித் தமிழர்கள் எப்போதுமே தமது அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து வீதியில் இறங்காமல் பார்த்துக்கொள்வார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் கொள்கை ரீதியான, செயற்பாட்டு ரீதியான பிளவுகளை அதிகரிக்கவும் பல வேலைத்திட்டங்கள் மும்முரமாக நடைபெறுகின்றன. எனவே எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக புலம் பெயர் தமிழர்களால் தாயகத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்த முடியாது,

இறுதியாக, தாயகத்தில் ஒரு உரிமைப் போராட்டம் ஆரம்பித்தால் அவர்கள் வன்முறை அரசியலோ அல்லது சாத்வீக அரசியலோ (அடி வேண்டுவதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நம்புவர்கள்) இல்லாத ஒரு புதுவடிவத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். எனினும் தேசிய உணர்வைப் பலப்படுத்தாத எந்தப் போராட்டமும் தோல்வியில்தான் முடியும்!

Link to comment
Share on other sites

இந்தத் திரி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?... என்பதற்கான காரணம், நிழலி அண்ணா அவர்களால் கொடுக்கப்பட்டிருந்தாலும்,

அதில் முழுமையான உடன்பாடு எனக்கு இல்லை! "இது எனது கருத்து மட்டுமே" என்பதனையும் முதலில் சொல்லிக் கொள்கின்றேன்.

அத்துடன்...

இந்தத் திரியின் போக்கில் பார்க்கும்போது,

ஏற்கனவே தெட்டத் தெளிவாக விளங்கும் ஒருவிடயம் புறம்போக்குகள் யார்... மக்களுக்காக உண்மையாக போராடியவர்கள் யார் என்பது. மற்றவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு... தியாகங்கள் நிறைந்த ஒரு போராட்டம் தோல்வியை சந்தித்து, நிலைதடுமாறி நிற்கும்போது..... இப்படியான தேவையற்ற கருத்தாடல்கள்... தியாக உணர்வோடு மாவீரர்களான எம் மாவீரர்களை கேவலப்படுத்துவதற்குச் சமனாகும். :(

ஒரு மட்டுறுத்துனராக இருக்கும் நிழலி அண்ணாவிடம் இருந்து இப்படியான "எம் மாவீரர்களை விமர்சிக்க சந்தர்ப்பம் கொடுக்கக்கூடிய" திரியொன்றினை எதிர்பார்க்கவில்லை! :(

தயவுசெய்து........................ (புரியும் என நினைக்கின்றேன்) :(

Link to comment
Share on other sites

அத்துடன்...

இந்தத் திரியின் போக்கில் பார்க்கும்போது,

ஏற்கனவே தெட்டத் தெளிவாக விளங்கும் ஒருவிடயம் புறம்போக்குகள் யார்... மக்களுக்காக உண்மையாக போராடியவர்கள் யார் என்பது. மற்றவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு... தியாகங்கள் நிறைந்த ஒரு போராட்டம் தோல்வியை சந்தித்து, நிலைதடுமாறி நிற்கும்போது..... இப்படியான தேவையற்ற கருத்தாடல்கள்... தியாக உணர்வோடு மாவீரர்களான எம் மாவீரர்களை கேவலப்படுத்துவதற்குச் சமனாகும். :(

ஒரு மட்டுறுத்துனராக இருக்கும் நிழலி அண்ணாவிடம் இருந்து இப்படியான "எம் மாவீரர்களை விமர்சிக்க சந்தர்ப்பம் கொடுக்கக்கூடிய" திரியொன்றினை எதிர்பார்க்கவில்லை! :(

கவிதை,

என்னைப் பொறுத்தவரைக்கும் புலிகளை தலைமையாகக் கொண்டு போராடிய எம் போராட்டம் படுதோல்வியில் முடிந்துவிட்டது. ஆயிரம் சாக்குப் போக்குச் சொன்னாலும் நாம் தோற்றுப் போய்விட்டோம் என்பதை மறுக்க முடியாது. போராட்டம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட இன்று அரசியல் நிலையிலும் இராணுவ நிலையிலும் பொருளாதார மற்றும் கல்வி நிலையிலும் மிக மிக கீழான நிலைக்குத் தான் வந்துள்ளோம்.

..ஆனால் இந்த நிலையிலும் கூட போராடமல் இருந்தால் முற்றாக அழிந்து விட வேண்டி வரும் என்ற நிலையில்தான் சிங்களமும் இந்தியாவும் சர்வதேசமும் எமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகின்றன

எனவே ஏதோ ஒரு விதத்தில் போராடுவது அவசியம் என்று ஆன நிலையில் நிச்சயம் அடுத்த தலைமுறை தனக்கான ஒரு வடிவில் போராட முற்படும். அப்படி முற்படும் சந்ததி நிச்சயம் ஒட்டுக் குழுக்களையோ அல்லது புளொட், ஈபிடிபி அல்லது கருணா குழுக்களையோ தம் பாடங்களாக கொண்டு முன்னகரப் போவதில்லை. நிச்சயம் புலிகளைத் தான் தம் முன்னால் உள்ள வழிகாட்டிகளாக் கொள்வர். தாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் எப்படி இருக்க கூடாது என்பதற்கும் புலிகளைத் தான் பின்பற்ற முனைவர்.

ஒருவரை அல்லது ஒன்றை விமர்சனத்துக்குட்படுத்த அந்த ஒருவர் அல்லது அமைப்பு குறைந்த பட்ச தகுதிகளைக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் ஒட்டுக் குழுக்கள் இதற்கான அடிப்படை எதுவும் அற்ற குழுவினர். வரலாற்றில் கருப்பு புள்ளிகளால் குறிப்பிடப்படப் போகும் குழுவினர் இவர்கள். மனித விரோதிள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே ஒழிய விமர்சிக்கப் படவேண்டியவர்கள் அல்ல

இதனால்தான் புலிகள் மீதான விமர்சனமே மிக மிக அவசியமாகின்றது. விமர்சனம் என்பது தமது காழ்ப்புணர்வுகளை கொட்டும் ஒன்றல்ல. மாறாக நடந்து முடிந்த ஒன்றில் இருக்கும், நடத்தி முடித்த ஒரு அமைப்பில் இருக்கும் தவறுகளை சரியான விதத்தில் முன்வைப்பது மட்டுமன்றி அவ் அமைப்பின் / அமைப்புகளின் நல்ல விடயங்களையும் முன்வைப்பதும் ஆகும்.

என் திரியில் நான் குறிப்பிட்டு இருந்தது

இறுதி வரைக்கும் தன்னாலான அனைத்து முறைகளிலும் போராடின புலிகளையா அல்லது சிங்கள இராணுவம் கூட செய்யத் தயங்கிய கொடூரங்களை தம் மக்களுக்கு செய்த மாற்று இயக்கங்களையா?

இந்தக் கேள்விக்கு உங்கள் அகநெஞ்சில் வரும் பதில் என்ன?

அந்த பதிலில் இருந்து முடிவு எடுப்போம்.........

நாம் எவர் செய்த தவறுகளை திருத்த யாரின் தவறுகளை சீர்தூக்கி பரிசீலனை செய்ய வேண்டும்?

தவறு நீக்கிய ஒரு போராட்டம் அவசியம் என்றால் அது புளொட்டின் அல்லது ஈபிடிபி யின் போராட்டமா, புலிகளின் போராட்டமா என?

தவறுகளில் இருந்து பாடம் படித்து நல்லவற்றை கற்க வேண்டுமெனில் அந்த நல்லவை எந்த தரப்பிடம் இருக்கு? புலிகளிடமா

அல்லது துணை இராணுவ குழுக்களிடமா?

எவரை விமர்சிக்க வேண்டும்?

இந்த திரியினை உருவாக்கியது இதன் நோக்கத்துக்காகவே

ஆனால் ஐ.வி.சசி இந்த திரியின் போக்கையே மாற்றி அருவருக்கத்தக்க விதத்தில் புலிகளின் உறுப்பினர்கள் மீதும் மாவீர்கள் மீதும் விமர்சிக்க ஆரம்பித்து முற்றாக மாற்றி விட்டார். அத்துடன், அவருக்கு மாறி மாறி பதில் எழுதியதன் மூலம் சசியின் அருவருக்கத்தக்க விமர்சனத்தை தொடர செய்து ஊக்குவித்து விட்டார். அத்துடன் விசுகும் வழக்கம் போன்று புலிகள் எந்த தவறும் செய்யவில்லை என்று எல்லாவிதமான விவாதங்களுக்கும் வைக்கும் ஒற்றைப் புள்ளியை வைத்து எழுதுகின்றார்.

எம் தமிழ் சமூகம் எதையும் விவாதத்தின் மூலம் கண்டறியாது என்பதுக்கும் ஒரு விவாதம் செய்யும் அளவுக்கான நேர்மையான தெளிவான சிந்தனை எம்மிடம் இல்லை என்பதும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகின்றது

இதற்கு மத்தியிலும் நல்ல கருத்துகளை எழுதிய சுகன், சுபேஸ், கிருபன் ஆகியோருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

விசுகு, on 27 January 2012 - 08:11 AM, said:

சுகன், சுபேஸ் மற்றும் சசி

புலிகளின் போராட்டம் தோற்றது எதனால்???

சாதியால்

ஊர்ச்சண்டையால்

தமிழரிடையே உள்ள பிரிவுகளால்???

பதில்தரவும்.

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்றே அணுக முற்படுகின்றேன். தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் என்பதுள் புலிகளும் அடக்கம்.

நீங்கள் குறிப்பிட்ட சாதியால் ஊர்ச்சண்டை (பிரதேசவாதம்)யால், தமிழர்களிடையே உள்ள உட்பிரிவால், (வர்க்கம் மதம் போன்றன) இவைகள் இனவிடுதலைப்போராட்ட காலத்திற்கு முன்பும் போராட்டகாலத்திலும் தற்போதும் இருந்துவருகின்றது. இவைகள் இனம் என்ற ஐக்கியப்பாட்டுக்கு ஏதிரான சக்திகள். இந்த சக்திகளை அழிக்காமல் இன ஐக்கியப்பாடு இல்லை. இன ஐக்கியப்பாடு இன்றி இனவிடுதலை இல்லை. இது வெளிப்படையான உண்மை.

இனவிடுதலையின் அவசியத்தை உணர்ந்தவர்கள் எல்லாம் இந்த இன ஐக்கியப்பாட்டுக்கு எதிரான காரணிகளை நன்கு உணர்ந்தனர். எல்லா இயக்கங்களிலும் எல்லாதரப்பைச் சேர்ந்தவர்களும் இணைந்தனர். எந்த ஒரு இயக்கமும் ஊர் அடிப்படையிலோ அல்லது சாதி வர்க்க அடிப்படையிலோ உருவாகவில்லை. இவ்வாறு இருந்தும் பிளவுபட்டு ஆளையாள் கொன்று குவித்தார்கள். சிங்கள பேரினவாதப் பூதம் எதிரே அச்சுறுத்திக்கொண்டிருந்தபோதும் இந்தக் குத்துப்பாடு நடந்தது.

ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்து முடியும் வரை தமிழகத்தைச் சேர்ந்த திரவிடக் கட்சிகளும் சரி இதர கட்சிகளும் சரி ஈழப்போராட்டம் என்ற ஒரு விடயத்துக்காகவேனும் கடசிவரை ஒரு அணியில் நிற்கவில்லை.அழிவின் உச்சக் கட்டத்திலும் நிற்கவில்லை. இத்தனைக்கும் சாதி மத தீண்டாமை பேதங்களுக்கு எதிரான கிளர்ச்சியில் உருவான கட்சிகள் இவை.

அவசரமான இக்கட்டான காலங்களில் ஐக்கியப்பாடு என்பது அவசியம் என்பதை உணர்ந்தும் அவற்றை இயக்கங்களோ கட்சிகளோ சிறு குழுக்களோ அல்லது தமிழகக் கட்சிகளோ அதை செய்யவில்லை. இன்னும் இந்த நிலை மாறவில்லை. தோல்வி என்பது இங்கே தான் அர்த்தத்தைப்பெறுகின்றது. இந்த நிலை ஏன் என்று வினாவ வேண்டிய அவசியம் இருக்கின்றது. இவற்றுக்கு விடை இன்றி எந்த ஒரு மாற்றமும் இனி நிகழப்போவதில்லை.

இவ்வாறு வினாவ முற்படும்போது மேலே குறிப்பிடும் வெளிப்படையான காரணிகளான சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் போன்றன ஒரு வக்கிர பிடிவாத மனநிலையை ஒவ்வொருவரிடமும் தோற்றுவித்துள்ளது. இதை அறிவால் வெல்ல முடியவில்லை. இதனால் திரும்பத் திரும்ப படுகுளியில் விழவேண்டும் என்பது விதியாகின்றது.

நடந்த உள் முரண்பாடுகளுக்கும் கொலைகளுக்கும் தனிநபர்களை காரணம் காட்டி நாமெல்லாம் யோக்கியர்களாக முடியாது என்ற அடிப்படையில் புலித்தலமையையோ அல்லது வேறெந்த இயக்கத்தலமையையோ குற்றவாளியாக்கமுடியாது.

புலிகள் இஸ்லாமியத் தமிழர்கள் மீது எடுத்த நடவடிக்கை இனவிடுதலைப்போராட்டப்பாதையில் ஒரு சறுக்கல் என்றால் இந்த முரண்பாடு தனியே ஒரு தரப்பிடம் இல்லை அடுத்தது இந்த முரண்பாடு புலிகள் காலத்திற்கு நூறு அண்டுகளுக்கு முன்பும் இருக்கின்றது புலிகள் காலத்திலும் இருந்தது இன்றும் இருக்கின்றது. அறிவுபூர்வமாக இந்த முரண்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாத முட்டாள்களாக நாம் ஏன் இருக்கின்றோம் என்பதே கேள்வி. இவ்வாறுதான் ஒவ்வொரு விசயத்திலும் முரண்பாடுகளின் விழைவுகள் ஒவ்வொரு தனிமனிதன் மனதையும் வக்கிரமாக்கி சமுதாயத்தையே முட்டாள்களாக்கிவிட்டது. முட்டாள்கள் எப்படி வெல்ல முடியும்? முட்டாள்களை சிங்களவன் இந்தியன் உலகம் முழுவதும் ஏமாற்றும்.

Link to comment
Share on other sites

போராளிகள் மீதோ அல்லது புலிகள் அமைப்பின் தலைமை மீதோ எனக்க் வெறுப்பு இல்லை மாறாக தங்களை தாங்களே சுய விமரசனம் செய்து போராட்டத்தை கொண்டு சென்று இருக்கலாம் என்பதே என் நிலை. அதை விட புலிகளுக்காக ப்ரிந்து பேசியவர்களுக்காகவே கடுமையான வார்த்தைகள் பாவிக்க பட்டது .. அதிலும் கருணா கேபி போன்றோயை வளர்த்து விட்டு தாங்கள் அழிந்து போனார்களே என்ற கோவமும் இருக்கு......

Link to comment
Share on other sites

இங்கை நான் புலிகள் கெட்டவர்கள் மாற்று இயக்கங்கள் நல்லவர்கள் என்று வாதாடவரவில்லை மாறாக மாற்று இயக்கதை சுடும் போது அவர்கள் செய் வந்த தை சேர்த்து புலிகள் செய்து இருக்க வேண்டும்..

புலி போராளிகளை சுட்டதுக்காக ரேலோ என்ற இயக்கத்கையும் அதன் தலைவரையும் அழிப்பது என்று புலிகள் முடிவிடுத்தது தவறில்லை என்றால் ராஜீவை கொன்றதுக்கு புலிகளை அழிக்க இந்தியா ஆதரித்தும் தவறில்லை தானே? நல்ல காலம் சிங்கல அரசுக்கு உதவி செய்தது என்று அமெரிக்க அல்லது சீன நாட்டு தலைவர்கள் மீது குண்டை வெடிக்கவைக்கவில்லை.......

Link to comment
Share on other sites

எனவே ஏதோ ஒரு விதத்தில் போராடுவது அவசியம் என்று ஆன நிலையில் நிச்சயம் அடுத்த தலைமுறை தனக்கான ஒரு வடிவில் போராட முற்படும். அப்படி முற்படும் சந்ததி நிச்சயம் ஒட்டுக் குழுக்களையோ அல்லது புளொட், ஈபிடிபி அல்லது கருணா குழுக்களையோ தம் பாடங்களாக கொண்டு முன்னகரப் போவதில்லை. நிச்சயம் புலிகளைத் தான் தம் முன்னால் உள்ள வழிகாட்டிகளாக் கொள்வர். தாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் எப்படி இருக்க கூடாது என்பதற்கும் புலிகளைத் தான் பின்பற்ற முனைவர்.

ஒருவரை அல்லது ஒன்றை விமர்சனத்துக்குட்படுத்த அந்த ஒருவர் அல்லது அமைப்பு குறைந்த பட்ச தகுதிகளைக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் ஒட்டுக் குழுக்கள் இதற்கான அடிப்படை எதுவும் அற்ற குழுவினர். வரலாற்றில் கருப்பு புள்ளிகளால் குறிப்பிடப்படப் போகும் குழுவினர் இவர்கள். மனித விரோதிள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே ஒழிய விமர்சிக்கப் படவேண்டியவர்கள் அல்ல

இதனால்தான் புலிகள் மீதான விமர்சனமே மிக மிக அவசியமாகின்றது. விமர்சனம் என்பது தமது காழ்ப்புணர்வுகளை கொட்டும் ஒன்றல்ல. மாறாக நடந்து முடிந்த ஒன்றில் இருக்கும், நடத்தி முடித்த ஒரு அமைப்பில் இருக்கும் தவறுகளை சரியான விதத்தில் முன்வைப்பது மட்டுமன்றி அவ் அமைப்பின் / அமைப்புகளின் நல்ல விடயங்களையும் முன்வைப்பதும் ஆகும்.

என் திரியில் நான் குறிப்பிட்டு இருந்தது

சரி உங்களை போன்று நானும் விவாதத்துக்கு வருகிறேன்,...

புலிகளை முன் நிறுத்தி போராட ஒரு அமைப்பு வெளிக்கிட்டா அது எப்படி இருக்கும்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை விமர்சனம் செய்வது என்பது,

செத்த பாம்பை, அடிப்பது மாதிரி.

ஒட்டுக்குழுக்கள் முழுத் தமிழினத்தையே... அழித்துவிட்டது.

Link to comment
Share on other sites

புலிகளை விமர்சனம் செய்வது என்பது,

செத்த பாம்பை, அடிப்பது மாதிரி.

ஒட்டுக்குழுக்கள் முழுத் தமிழினத்தையே... அழித்துவிட்டது.

இந்தியன் ஆமியை இலங்கையை விட்டு கலைக்க வெளிடும் போது சிங்கள அரசுடன் புலிகள் உறவும் ஆயுத பரிமாற்றமும் செய்தார்கள் அப்போது புலிகளும் ஒட்டுக் குழுவாக தான் தெரிந்தார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் ஆமியை இலங்கையை விட்டு கலைக்க வெளிடும் போது சிங்கள அரசுடன் புலிகள் உறவும் ஆயுத பரிமாற்றமும் செய்தார்கள் அப்போது புலிகளும் ஒட்டுக் குழுவாக தான் தெரிந்தார்கள்...

அங்கு இருந்தது தான்.... ராஜதந்திரம்.

ஆனால்... ஒட்டுக் குழுக்களுக்கு முன் தமிழன் மண்டியிட வேண்டி வந்தது.

இனி.. வாழ்க்கையில் , எல்லோரும்... செத்த பிணமாகவே.. வாழ்வோம்.

சந்தோசம் தானே...

Link to comment
Share on other sites

புலிகளின் முழு உருவமும் தெரியாதவர்கள் தான் உலகெங்கும் இன்றும் ஆவியாக அலைகின்றார்கள் .நிழலியும் அதற்கு விதி விலற்கல்ல.

ஒட்டு குழுவின் வரைவிலக்கணத்தை எவராலும் எழுத முடியுமா

Link to comment
Share on other sites

இந்தியன் ஆமியை இலங்கையை விட்டு கலைக்க வெளிடும் போது சிங்கள அரசுடன் புலிகள் உறவும் ஆயுத பரிமாற்றமும் செய்தார்கள் அப்போது புலிகளும் ஒட்டுக் குழுவாக தான் தெரிந்தார்கள்...

தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை எப்படியாவது விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைத்து புலிகள் தமது மக்களை காப்பாற்றியது எப்படி "ஓட்டுக்குழு" என்ற பதத்தை பெறும்.மக்களை காட்டிக்கொடுக்கவில்லை.மக்களை வன்புணர்வு செய்யவில்லை. மாறாக மக்களுக்காக உயிரை துறந்த பல மாவீரர்களை கொண்ட ஒரு விடுதலை இயக்கம் எப்படி ஒட்டுக்குழுவானது என்று உங்களால் விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

<p>ஓ உங்கள மாதிரி ஊரில் பிரச்சனை நடக்கும் போது பங்களிப்பு செய்யாமல் ஓடி வந்த ஆட்களுக்கு சாஸ்திரி மாதிரி ஆட்கள் பெரிதாகத் தான் தெரியும்.

ஆமா ஆமா எங்கட சவுண்டு சுந்தரி கடசி வரைக்கும் முள்ளிவாய்கால்ல நின்டு நண்டு பிடிச்சிட்டு இப்ப முடியாமா லண்டன்க்கு வந்திருக்கா நீங்க சொன்னா கரக்ட்டா தான் இருக்கமுங்கோ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முழு உருவமும் தெரியாதவர்கள் தான் உலகெங்கும் இன்றும் ஆவியாக அலைகின்றார்கள் .நிழலியும் அதற்கு விதி விலற்கல்ல.

ஒட்டு குழுவின் வரைவிலக்கணத்தை எவராலும் எழுத முடியுமா

தன் இனம் அழியும் போதும்... புலிக்காச்சலில் இருப்பது. தான் ஒட்டுக்குழுக்கள். நீங்கள் அதில் சேர்த்தியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் முழு உருவமும் தெரியாதவர்கள் தான் உலகெங்கும் இன்றும் ஆவியாக அலைகின்றார்கள் .நிழலியும் அதற்கு விதி விலற்கல்ல.

ஒட்டு குழுவின் வரைவிலக்கணத்தை எவராலும் எழுத முடியுமா

அப்ப உங்களுக்கு முழு உருவமும் தெரியும் என்று சொல்கிறீர்கள்!!!!! :lol:

Link to comment
Share on other sites

புலிகளின் முழு உருவமும் தெரியாதவர்கள் தான் உலகெங்கும் இன்றும் ஆவியாக அலைகின்றார்கள் .

ஒட்டு குழுவின் வரைவிலக்கணத்தை எவராலும் எழுத முடியுமா

ஓட்டுக்குழுவின் குணாம்சங்களை சொன்னால் நீங்கள் வரவிலக்கணத்தை எழுதிக்கொள்ளலாம்.

முதலாவது தனது இனத்தை பற்றி எந்த வித இனப்பற்றும் இல்லாதவர்கள்.உதாரணத்துக்கு மக்களிடம் கப்பம் கேட்டு கொல்லல், பணத்துக்கு கொல்லல்.சொந்த மக்களின் பணம்,நகை என்பனவற்றை திருடும் போது எதிரில் யார் அகப்பட்டாலும் கொல்லல்.

சொந்த மக்களையும் அவர்களுக்காக போராடுபவர்களையும் எதிரியுடன் ஒட்டி நின்று காட்டிக்கொடுத்தல்.விடுதலைப்போராளிகளையும் மக்களையும் அரச படைகளுடன் சேர்ந்து அழித்தல்.

மக்களுக்கு தாம் போராளிகள் என்று கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தல்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது அரசுடன் சேர்ந்து விடுதலைப்போராளிகளுக்கு எதிராக விமர்சனம் என்ற போர்வையில்பொய் மூட்டைகளை அவிழ்த்து விடல்.இன்னும் எதிரியின் படைகளுக்கு உளவாளிகளாகவும், தேவை ஏற்படின் எதிரிகளின் தாக்குதல்களுக்கு இராணுவ ரீதியாகவோ அல்லது உளவாளியாகவோ செய்ற்படல்.உ+ம்: ஆழ ஊடுருவும் படையாக செயற்படல்.மக்களோடு மக்களாக கலந்து மக்களை சுட்டு விட்டு விடுதலை இயக்கம் மக்களை சுட்டதாக புரளியை கிளப்பி விடுதல்.

Link to comment
Share on other sites

புலிகளின் முழு உருவமும் தெரியாதவர்கள் தான் உலகெங்கும் இன்றும் ஆவியாக அலைகின்றார்கள் .நிழலியும் அதற்கு விதி விலற்கல்ல.

ஒட்டு குழுவின் வரைவிலக்கணத்தை எவராலும் எழுத முடியுமா

ஒட்டுக் குழுக்கள்: புலி எதிர்த்ததனால் தமிழீழ கோரிக்கையை முற்றாக கைவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து தாம் ஒருகாலத்தில் யாருக்காக போராட வெளிக்கிட்டனரோ அவர்களுக்கே எதிராக (தமிழ் இனப்) படுகொலை செய்த குழுக்கள்

புலிகள்: தாம் செய்வது அனைத்தும் தமிழீழத்திற்கான விடிவு என்பதற்காய் அதை எதிர்த்த அனைவரையும் (இதில் இந்தியா + இலங்கை அரசு மாற்று இயக்கங்கள்) எதிர்த்து போரிட்ட இயக்கம்.

ஒட்டுக் குழுக்களின் அனைது செயல்களும் தம் அமைப்பின் / தம் சொந்த நலனில் அக்கறை கொண்டு முடிந்தன. புலிகளின் அனைத்து செயல்களும் தமிழ் ஈழத்துக்கானது என்ற நினைப்பில் அமைந்தன;

அர்ஜுன் ஒன்று கேட்கின்றேன்.

இன்று இலங்கையில் புலி இல்லை; ஆனால் அனைத்து ஒட்டு குழுக்களும் இருக்கின்றன

ஒரு சிங்கள காவாலி இன்று கிளிநொச்சியில் அல்லது கிழக்கில் உள்ள வாகரையில் ஒரு தமிழர் வீட்டினை தனதாக்கி திடீரென குடி புகுந்து குடும்ப பெண்களையும் வல்லுறவுக்குள்ளாக்கும் போது (மிக அண்மையில் இதே போன்ற ஒரு சம்பவம் தனங்கிளப்பில் இலங்கை இராணுவம் அல்லது ஒட்டுக் குழுவால் நடந்தது), பக்கத்தில் இருக்கும் ஒட்டுக் குழுக்கள் காப்பாற்றுவார்கள் என நினைப்பார்களா அல்லது இன்று புலி இல்லையே இந்த வேசமக்களுக்கு பதில் சொல்ல என்று நினைப்பார்களா?

....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

ஆமா ஆமா எங்கட சவுண்டு சுந்தரி கடசி வரைக்கும் முள்ளிவாய்கால்ல நின்டு நண்டு பிடிச்சிட்டு இப்ப முடியாமா லண்டன்க்கு வந்திருக்கா நீங்க சொன்னா கரக்ட்டா தான் இருக்கமுங்கோ........

போய் சுண்டலை சாப்பிட்டு விட்டு,பேஸ் புக்கில் கடலையைப் போட்டுக் கொண்டு குப்பிற விழுந்தடித்து படுக்கவும் ...உங்களப் போல் ஆட்களுக்கு இந்த விவாதத்தில் என்ன தேவையிருக்கு? ... தேவையில்லாமல் கதைத்து இந்த கருத்தாடலை திசை திருப்ப விருப்பமில்லை.
Link to comment
Share on other sites

அடிக்கடி புலிகள் சொல்லும் ஒரு வசனம் "சிங்கள அரசுதான் எம்மை ஆயுதம் தூக்க வைத்ததேன்று".

அதேபோல் தான் புலிகள் ஒட்டுக்குழுக்களை உருவாக்கியது நாட்டுக்காக போராட போனவர்கள் தான் அத்தனை பேரும், என்னிடமும் பண வசதி இருந்திராவிட்டால் நானும் வவுனியாவில் நின்று கப்பம் தான் கேட்டிருப்பேன் ஏனெனில் புலி எம்மை வாழாவிடாது.செல்வியையே கொன்ற புலிகள் எம்மை விட்டு வைக்குமா?

மணியம் எழுதும் தொடரை வாசிக்கவும் .உலகமே சொல்லுது பயங்கரவாதிகள் என்று அவர்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினால் அந்த மாதிரித்தான் இருக்கும் .

சாத்திரியின் கதையில் வந்தது போல் முன்னாள் ஈ.ப்பி ஒருவர் இங்கிருக்கின்றார் .இயக்கத்தை விட்டு விட்டு கம்பசில் படித்துக்கொண்டிருன்தவர் மாதம் இரு முறை புலிகள் முகாமில் போய் கையெழுத்து வைக்க வேண்டும் ,தான் ஒவ்வொரு முறையும் கையெழுத்து வைக்க போகும் போது முகாமிலிருந்த ஒரு புலி தனது ஒருபிடி மயிரை பிடிங்கி நக்கலாக சிரிக்குமாம் .தனக்கு ஒரு சந்தர்பம் வந்தால் அந்த நாயை (அவர் பாவித்த சொல்லு )எப்படியாவது கொல்வதென நினைதிருந்தாராம் ,ஆனால் இந்தியன் ஆமிவந்து அவரை போட்டுவிட்டதாக சொன்னார்.

தாங்கள் ஒரு நாப்பதுபேர் தப்ப மூன்று லட்சம் உயிர்களை காவு கொடுக்க நினைத்தவர்கள் புலிகள் .அவர்களின் ஒட்டுமொத்த வடிவமே தின்னவவேலியில் இருந்து முள்ளிவாய்கால் வரை அதுதான். .

Link to comment
Share on other sites

ஒட்டுக் குழுக்கள்: புலி எதிர்த்ததனால் தமிழீழ கோரிக்கையை முற்றாக கைவிட்டு சிங்களத்துடன் சேர்ந்து தாம் ஒருகாலத்தில் யாருக்காக போராட வெளிக்கிட்டனரோ அவர்களுக்கே எதிராக (தமிழ் இனப்) படுகொலை செய்த குழுக்கள்

புலிகள்: தாம் செய்வது அனைத்தும் தமிழீழத்திற்கான விடிவு என்பதற்காய் அதை எதிர்த்த அனைவரையும் (இதில் இந்தியா + இலங்கை அரசு மாற்று இயக்கங்கள்) எதிர்த்து போரிட்ட இயக்கம்.

ஒட்டுக் குழுக்களின் அனைது செயல்களும் தம் அமைப்பின் / தம் சொந்த நலனில் அக்கறை கொண்டு முடிந்தன. புலிகளின் அனைத்து செயல்களும் தமிழ் ஈழத்துக்கானது என்ற நினைப்பில் அமைந்தன;

அர்ஜுன் ஒன்று கேட்கின்றேன்.

இன்று இலங்கையில் புலி இல்லை; ஆனால் அனைத்து ஒட்டு குழுக்களும் இருக்கின்றன

ஒரு சிங்கள காவாலி இன்று கிளிநொச்சியில் அல்லது கிழக்கில் உள்ள வாகரையில் ஒரு தமிழர் வீட்டினை தனதாக்கி திடீரென குடி புகுந்து குடும்ப பெண்களையும் வல்லுறவுக்குள்ளாக்கும் போது (மிக அண்மையில் இதே போன்ற ஒரு சம்பவம் தனங்கிளப்பில் இலங்கை இராணுவம் அல்லது ஒட்டுக் குழுவால் நடந்தது), பக்கத்தில் இருக்கும் ஒட்டுக் குழுக்கள் காப்பாற்றுவார்கள் என நினைப்பார்களா அல்லது இன்று புலி இல்லையே இந்த வேசமக்களுக்கு பதில் சொல்ல என்று நினைப்பார்களா?

....

நிதானமா பேச தெரியலியா?

அவங்க என்ன நெனைப்பாங்கன்னு தெரியல...

ஆனா அர்ஜுன் அண்ணாவும்... நிழலிஅண்ணாவும் ,,,சேர்ந்து

யாழை.......யாழ் டாட் .காம் ஐ.....

ஐ மீன் புலி தேசத்த வாழவைப்பாங்க..........!!

நேரத்துக்கு ஒரு பேச்சு! :)

Link to comment
Share on other sites

அங்கு இருந்தது தான்.... ராஜதந்திரம்.

ஆனால்... ஒட்டுக் குழுக்களுக்கு முன் தமிழன் மண்டியிட வேண்டி வந்தது.

இனி.. வாழ்க்கையில் , எல்லோரும்... செத்த பிணமாகவே.. வாழ்வோம்.

சந்தோசம் தானே...

சிறி அண்ணை,

நான் மாற்று இயக்கங்கள் சிங்களவனோட்டு ஏன் சேரவேண்டி வந்தது என்றதை மட்டும் தான் சொன்னேன் மாறாக சேர்ந்த பின் அவர்கள் செயற்பட்ட விதத்தில்ல்லை.......

புலிகளை அழிக்காட்டிலும் புலிகளிடம் இருந்து தப்புவதுக்கு ஒரே வழி சிங்களவன் அல்லது இந்தியா வசதி படைத்தவர்கள் அர்ஜீன் அண்ணை போல வெளிநாடுகளில் வந்து விட்டார்கள்........

தாங்கள் நலவர்களாக வேண்டும் என்பதுக்காவே மற்ற இயக்கங்களை துரோகி ஆக்கினதும் போல் இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.