Jump to content

'13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்!


Recommended Posts

'13 பிளஸ்' எனப்படுவது செனட் சபைதான்! - இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அறிவிப்பு!!

சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கு மேலாக (13+) என்று சொல்வது செனட் சபையைத் தான் என சிறிலங்கா அரசாங்கம் இன்று மீண்டும் தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்கா அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, '13 பிளஸ் எனக் கூறப்படுவது செனட் சபையாகும். இது தொடர்பாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது' எனக் குறிப்பிட்டார்.

13 பிளஸ் என்பது தொடர்பாக குழப்பான அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே சிறிலங்காவின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

'13 பிளஸ் என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் எந்தவிதமான குழப்பமும் இல்லை. 13 பிளஸ் என்பது செனட் சபைதான். இந்தியாவிடமும் இது தொடர்பாக நாம் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம்' எனவும் சிறிலங்காவின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தன்னுடனான பேச்சுக்களின் போது அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் மேலாகச் சென்று இன நெருக்கடிக்குத் தீர்வைக்வைக் காண்பதற்கு தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3cd63a77-f47b-48e5-a903-e4dec8397607

Link to comment
Share on other sites

அரசு 13+ஆல் பிளவுபடும்: ஐ.தே.க.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகத் தீர்வு என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பச்சைகொடியைக் காட்டியுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி ஆவல் கொண்டிருப்பதாக சற்றுமுன் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் அதில் இணைந்து கொள்வது தொடர்பில் ஐ.தே.க. ஆராயும் என்றும் கூறினார்.

அத்துடன் அரசியல் தீர்வுக்குச் செல்ல அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்று கேள்வியெழுப்பிய கிரியெல்ல எம்.பி 13+ நிறைவேற்றினால் மஹிந்த அரசு பிளவுபடும் என்றும் தெரிவித்தார்.

ஆணைக்குழு அறிக்கையிலுள்ள ஒரு பரிந்துரையேனும் நிறைவேறவில்லை

சர்வதேச நாடுகளிலிருந்து எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக பதிலளிக்கப்படும் என்று அரசாங்கம் தம்பட்டம் அடித்தது.

எனினும் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்து மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதன் ஒரு பரிந்துறையையேனும் அரசு நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=95033

Link to comment
Share on other sites

அரசு 13+ஆல் பிளவுபடும்: ஐ.தே.க.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தமது கட்சி ஆவல் கொண்டிருப்பதாக சற்றுமுன் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் அதில் இணைந்து கொள்வது தொடர்பில் ஐ.தே.க. ஆராயும் என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு அவசியம்! - தெரிவுக்குழு நிலைப்பாட்டிலும் மாற்றமில்லை!! - சுரேஸ்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பு பங்குகொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இவ்விருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்துள்ள போதிலும், இப்பேச்சுவார்த்தைகளில் ஒரு அங்குல அளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பின் பங்கு அவசியமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வுகாண முடியாத கட்டத்தில் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2002ஆம் ஆண்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு நோர்வே சமாதான நடவடிக்கைகளில் மத்தியஸ்தம் வகித்தது. தற்போதும் அவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மூன்றாம் தரப்பின் அவசியம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறியிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டால் மட்டுமே அதில் கூட்டமைப்பு இணைந்து கொள்ளும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளுமாறு தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவது தொடர்பாகக் கேட்டபோதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

'நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பாக நாம் எமது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். சிறிலங்கா அரசாங்கத் தரப்புடன் நாம் கடந்த ஒரு வருடமாக நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு ஏற்பட்டால் மட்டும் அதனைப் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டு சென்று விவாதிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். சிறிலங்கா அரசாங்கத்துடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான இணக்கப்பாடும் ஏற்பட்டுவிடவில்லை. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் எம்மை அழைக்கின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமான முறையில் எமக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. எமது நிலைப்பாடு என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் தெளிவாக எடுத்துக் கூறியும் இருக்கின்றோம்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முதலில் ஒரு இணக்கப்பாடு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம். இருந்தபோதிலும் எமது நியாயப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் பரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை' என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=373b5caa-a6fb-4b12-a649-25a3ab2046aa

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.