Jump to content

ஈழத் தமிழ் மக்கள் ஏன் போராடுகின்றார்கள் - இந்திய மக்களுக்கு


Recommended Posts

ஈழப் போராட்டத்தைப் பற்றி இந்திய மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு எந்தத் தெளிபும் கிடையாது. ஆனாலும் இப்படியும் நினைக்கின்றார்கள் என்பதை அன்பர் பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய "இந்தியாவும் வான்புலிகளும்" என்ற கட்டுரை வாசிக்கநேர்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பது நோயில்லாது வாழ்வதற்கு அருமருந்தென்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்கின்றது. சிரித்துச் சிரித்து களைத்தே விட்டேன் ஐயா. ஆய்வு செய்திருக்கின்றார். பக்கா ஆய்வு. அனைவரும் படித்துப் பரவசம் அடைய வேண்டும். சில உதாரணங்கள். விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருக்கிறார்களாம். நான்கு நபர் பயணம் செய்யக் கூடியது. கல்பாக்கம்

அணுமின் நிலையம் மற்றும் கேரளா சென்னை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறிவைக்கப் படலாமாம். எந்த நூற்றாண்டுக் கதை இது என்பது விளங்கவில்லை. அவை ஏற்கனவே பாகிஸ்தானின் ஏவுகணைகளாலும் சீனாவின் ஏவு கணைகளாலும் குறிவைக்கப்பட்டுத்தான் இருக்கின்றது என்பதை யாராவது அவருக்குக் கூறுங்கள். இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புச் செலவினம் கூடுகின்றது என்ற ஒரு பட்டியல் வேறு. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை அடக்கி அழிக்க முயல்கிறது. செலவு கூடுகின்றது. சர்வ வல்லமை படைத்த பிராந்திய வல்லரசு இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகளும் பல பில்லியன்களில் தான் இருக்கின்றது. ஏன் என்று கேட்கின்றோமா?

ஈழப் போராட்டம் என்பது ஒரு இனத்தின் விடுதலைக்கான -பிறிதொரு இனத்தால் சகல வழிகளிலும் ஒடுக்கப்பட்டதனால் அவ்வொடுக்கு முறையில் இருந்து விடுபடவும், தப்பி உயிர் வாழவும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கவும் நடை பெறுகின்ற போராட்டம். வல்லரசு ஆசையிலோ அன்னிய நாடு பிடிக்கும் ஆசையிலோ நடத்தப்படுவதல்ல. இந்த இனவிடுதலையில் இந்தியாவிற்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஈழத்தமிழ் மக்களால் தங்களுக்காக நடாத்தப் படும் இன விடுதலைப் போர். பலஸ்தீன மக்களுக்கெல்லாம் ஆதரவு கொடுக்கிறீர்களே, அப்படியொரு ஆதரவைத் தான் உங்களிடமும் மற்றும் நாடுகளிடமும் எதிர்பார்த்தோம். ஆதரவு தருவதாக வந்தீர்கள். இலங்கையை உங்கள் அடிதொழும் நாடாக வைத்திருப்பதற்காக தமிழர்களுக்கு உதவுவது போல உதவினீர்கள். பிற நாடுகளின் கருத்துக்களையோ ஐ.நாவின் அபிப்பிராயத்தையோ எதிர்பாராது சோத்துப் பார்சல் போட்டீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறியது. சிங்கள அரசு ஓடி வந்து உங்களுடன் ஒப்பந்தம் போட்டது. உங்கள் இராணுவம் தமிழ் மண்ணிற்கு வந்தபோது பூரண கும்பம் வைத்து சந்தன மாலை போட்டு வரவேற்றோம் ஐயா. எங்களை ராங்கிகளின் சங்கிலியின் கீழ்ப் போட்டு அரைத்துப் போட்டீர்களே. பெண்களையெல்லாம் கற்பழித்து பெண்ணுறுப்பில் குண்டு வைத்து வெடித்தீர்களே. எதைச் சொல்வது எதை விடுவது. சமாதானப் படையாக வந்த நீங்கள் இரண்டிலொரு பகுதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத பட்சத்தில் விட்டு விலக விரும்புகின்ற பட்சத்தில் அந்தக் கணத்திலேயே "நீங்களே என்னவோ செய்து கொள்ளுங்கள் நாங்கள் போய் வருகின்றோம் "என்று கனவான்களாக திரும்பிப் போயிருக்க வேண்டும். அகிம்ஸை தேசத்தின் புகழ் வான் முட்டியிருக்கும். யாருக்குப் பாதுகாப்பு என்று ஓடிவந்தீர்களோ அவர்களையே சுட்டுப் போடுவது எந்த விதத்தில் நியாயமானது. இரஜீவ் காந்தியின் மரணம் பற்றி பேசுகிறீர்கள். யார் முதலில் துப்பாக்கி ஏந்தியது. சண்டையை வலிந்து திணித்தது. இந்திரா காந்தி சீக்கியரின் பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். கண்ணைப் போல காத்த பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டார். நீங்களும் ஆயிரம் ஆயிரம் சீக்கியர்களை வீதிகளில் கொன்று போட்டீர்கள்.அத்துடன் பிரச்சனையை முடித்து விட்டீர்களே. இதோ ஒரு சீக்கிய மகனிடமே நாட்டை நம்பி கொடுத்திருக்கிறீர்களே. இன்னும் சீக்கியர்களுடன் விரோதமா பாராட்டுகிறீர்கள்.

ஈழத் தமிழ் மக்களுடன் உங்களுக்குத் தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவிற்கு அயல் நாடுகள் அனைத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டுமென்ற தேவை இருக்கின்றது. உங்கள் வல்லரசுக் கனவு சாத்தியமாகும். அன்றைய தினம் பாகிஸ்தானும் சீனாவும் பங்களாதேசமும் உலகப் படத்தில் இருந்து இல்லாது போக வேண்டும். அந்த நல் நாள் உங்கள் கனவு நிறைவேறும் நாள்.

இராணுவம் என்பது அரசின் அடக்குமுறைக்கான ஒரு ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத ஒரு இராணுவம் ஒரு மண்ணில் இருக்கின்றதென்றால் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது அர்த்தமாகின்றது. ஐ.நா வின் அனுமதி இன்றி அமெரிக்கப் படைகள் ஈராக்கிற்குச் சென்ற போது அது ஆக்கிரமிப்பு யுத்தம் என்று உங்கள் படைகளை அனுப்பாது மெளனம் காத்தீர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர் தரப்பின் எந்த சம்மதமும் இல்லாத ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இலங்கைக்கு வந்தீர்கள். தமிழர் தரப்பிற்காக சிங்கள அரசுடன் நீங்களே ஒப்பம் இட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்போது இந்தியாவின் குடிமக்கள் ஆனோம். பாதுகாக்க வந்தவர்களே எம்மக்களை கொன்று கொன்று பாடையில் அனுப்பினீர்கள்.

நீங்கள் செய்தது சரியென்றால் தமிழ் நாட்டுமக்கள் உங்களைச் செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்க வேண்டும். செய்யவில்லையே. ஈழத்தமிழ் மக்களா சொன்னார்கள் வரவேற்பு அளிக்க வேண்டாமென்று. இல்லையே, சகோதர மக்கள் துன்பத்தில் செத்தொழிந்தது கண்டு இரத்தக் கண்ணீர் விட்ட தமிழ் சகோதரர்கள். தமிழ் நாட்டு சகோதரர்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் மேல் ஒரு மனத்தாங்கல் உண்டு. தாங்கள் போற்றிய தலைவனைக் கொன்று போட்டார்கள் என்று. தங்கள் தலைவன் தாண்டவம் ஆடும் போது தடுக்காது விட்டதனால் அத்துர் மரணத்தில் அவர்களுக்கும் பங்குண்டே. யாரால் மறுக்க முடியும்.

இத்தனைக்கும் காரணம் ஹிந்திப் பெரும்பான்மையைக் கொண்ட இராமாயண இராமனின் மேலாண்மையை விரும்பும் நடுவண் அரசின் நீதியில்லாத நடைமுறையே. தமிழ் நாட்டு மக்கள் சொன்னால் உடனும் கேட்டு செயல்படுத்தக் கூடியவர்களா அவர்கள். யார் யாரினதோ முதுகில் ஏறி ஆட்சி செய்பவர்கள் சொல் கேட்பார்களா? இல்லாவிட்டால் ஒரு மாநில மக்களின் ஜீவாதார உரிமையான காவேரித் தண்ணீருக்கே இத்தனை காலம் கடத்துவார்களா? ஏன் நீங்களும் இந்தியக் குடி மக்கள் தானே ? ஏன் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இழுத்தடிக்கப் படுகின்றது. யாராவது கேட்க முடியுமா? கேட்டது கிடைக்காவிட்டால் உங்களால் அவர்களை என்ன செய்து விட முடியும். 21 ஆம் நூற்றாண்டிலும் வயிற்றுப் பசிக்காக எலிகளைச் சாப்பிடும் மக்கள் ஏன் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள்.

ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பாவப்பட்ட மக்களை ஒரு வல்லரசின் போட்டியாகப் பார்ப்பதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா? தமிழீழம் தான் உங்களுக்கு ஆபத்தென்றால் பாகிஸ்தானும் பங்களாதேசமும் உங்களைக் கபளீகரம் செய்து விட எத்தனை நேரம் ஆகும். அவ்வளவு வல்லமையற்றதா இந்திய நாடு . நடுவண் அரசின் பூச்சுற்றல்களைத் தங்கள் பிரச்சாரப் பீரங்கிகளில் ஊதிக் கொண்டிருக்கும் இவர்களை எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறீர்கள். இரஜீவை துப்பாக்கியினால் அடித்த சிங்களவருடன் உங்களுக்கு அப்படியென்ன பற்றுதல். சிங்களவர்க்கும் இன்னும் புரியவில்லை தாங்களும் பலியாடுகளே என்று. தெரிகின்ற காலம் வரும். அப்போது இதே போராட்டம் தமிழ் சிங்களம் என்ற இரு நாடுகளில் நடக்கக் கூடும்.

ஈழத்து மக்கள் இந்தியாவைச் சீண்டியிருக்கிறார்களா? இல்லை இந்தியா ஈழத்தமிழ் மக்களைச் சீண்டிக் கொண்டிருக்கின்றதா? 1991 இரஜீவின் மரணத்தின் பின்னால் உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட பாதிப்பைப் பட்டியல் இடுங்கள் பார்ப்போம். இந்தியாவால் ஈழப் போராட்டத்திற்கு ஏற்பட்ட சீண்டல்களுக்கு எங்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.

நாம் இந்தியா என்று நினைப்பது தமிழ் நாட்டு மக்களைத் தான். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு சங்க காலத்தில் இருந்தே இருக்கின்றது. நிறைந்தளவு சாட்சியங்கள் இருக்கின்றது. எங்கள் மன்னன் எல்லாளன் ஒரு சோழ இளவரசன் தான். 44 ஆண்டுகள் அநுராத புரத்திலிருந்து அரசாண்டான். இராசேந்திர சோழமன்னன் பொலநறுவையில் இருந்து அரசாண்டான். வெள்ளையருக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே கிடையாது. சேர சோழ பாண்டிய நாடுகள் என்று தமிழ் நாடுகள் இருந்தது. அவற்றுடன் எங்களுக்கு இரத்த உறவுகள் இருந்தது. நீங்கள் இந்தியராய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தமிழர்கள். அந்த உறவுதான் எங்களுக்கும் உங்களுக்கும். அதற்கு முன்னாலும் பின்னாலும் எதுவும் கிடையாது.

எங்கள் போராட்டம் எங்கள் இருப்புக்கான போராட்டம். யாருடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நடந்தே தீரும். சரித்திரம் அப்படித்தான் சொல்கின்றது. உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தை எந்த ஆயுதமும் நசித்துவிட முடியாது.

அன்பர் பாஸ்டன் பாலாஜியின் "இந்தியாவும் வான் புலிகளும்" பார்க்க www.tamiloviam.com/unicode/06300505.asp

நன்றி>சிந்து

http://ilanthirayan.blogspot.com/2006/02/b...0581539428.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த "இந்தியாவும் வான் புலிகளும்" என்ற கட்டுரையை நான் சில வாரங்கள் முன்பே பார்த்துவிட்டேன். இவர்கள் என்னத்திற்கு பயப்படுகிறார்களோ தெரியாது. இவர்கள் பயத்தை தீர்க்க நாம் என்னத்தை செய்ய???

இவர்களுக்கெல்லாம் நான் கூறக்கூடியது என்னவென்றால் "The power of Nightmare" என்ற documentry படத்தை இவர்களுக்கு காண்பிக்க வேண்டும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.