Jump to content

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு


Recommended Posts

ஆயுத போராட்டத்தின் கருத்து சுதந்திரத்தையும் மக்களாட்சி முறையின் கருத்து சுதந்திரத்தையும் ஒரே தட்டில் வைத்து அளவிடமுடியாது.

சிங்களம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகளின் கருத்துக்களையே மதிப்பதில்லை. அதாவது ஒரு மக்களாட்சி முறையில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படும்போழுது அது ஆயுத புரட்சிக்கு வழி சமைக்கலாம்.

ஆயுத புரட்சியை முன்னெடுப்பவர்கள் மத்தியில் முழுமையான கருத்து சுதந்திரத்தை எதிர்பார்ப்பது தவறு. அது அவர்கள் நோக்கமும் அல்ல.

மொத்தத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான கருத்து சுதந்திரத்தை மதித்திருந்தால் ஆயுத போராட்டமே தோன்றியிருக்காது.

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது. - நவம்.

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால்

அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

Link to comment
Share on other sites

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

தமிழர் தரப்பில் ஆயுத பலம் மேலோங்கி நின்றால் மட்டுமே சிங்களம் ஒரு அரசியல் தீர்வுக்கு வரும் என நம்பினார். அந்த உண்மையை இன்றுவரை மறுதலிக்க முடியாது. அதனால் தான் இராணுவ சமநிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால் அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

அதே ஆயுதம் கொண்டே சிங்களமும் தமிழரை அடக்கி ஆளுகின்றது.

சூடானின் அல் பசீர் ஒரு போர்குற்றவாளி, சிரியாவின் அசாத் நாளைய போர்குற்றவாளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே ஆயுதம் கொண்டே சிங்களமும் தமிழரை அடக்கி ஆளுகின்றது.

சூடானின் அல் பசீர் ஒரு போர்குற்றவாளி, சிரியாவின் அசாத் நாளைய போர்குற்றவாளி.

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

Link to comment
Share on other sites

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது. - நவம்.

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால்

அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

ஏதோ அரசியல் செய்து சிங்களத்திடமும் ,பம்மாத்து உலகத்திடமும் உரிமையை பெற்று விட்டதாகவோ அல்லது பெறுவோம் என்று எதனை வைத்து சொல்கிறீர்கள்.அப்படியான அடையாளமே (sign)தெரியவில்லையே.

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

ஹி ஹி.இப்படித்தான் சதாமும், கடாபியும் ,முபாரக்கும் நினைத்தார்கள்.விதி யாரைத்தான் விட்டது??

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை 1983 வரை கருத்து என்பது பம்மாத்து என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமாக இருந்து.ஆறுமுகநாவலரில் இருந்து அமிர்தலிங்கம் வரை சொல்லுக்கும் செயலுக்கும் பாரிய இடைவெளியைக் கொண்டவர்களே தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட வரலாற்றைத் தானே நாங்கள் பார்த்தோம்.

இடது சாரித்தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் நிலவிலே பேசிய வரலாறும் தத்துவத்துக்கும் நடைமுடைக்கும் நீண்ட இடைவெளியைக் கொண்டிருந்த வரலாற்றையும் தான் நாங்கள் பார்த்தோம்.

துடிப்புள்ள இளைஞனாக ஆயதப்போராட்டத்தில் குதித்த தலைவர் பிரபாகரன் வாய்சொல்வீரம் பற்றி எச்சரிக்கையாக இருந்ததை தவறென்று சொல்லமுடியாது. அவர் பலத்தை பிரயோகிக்காவிட்டிருந்தால் தமிழ் சமூகத்தின் தலைமைத்துவத்தை ஒருபோதும் பெற்றிருக்க முடியாது.அதை ஒரு போதும் குடாநாட்டு அதிகார வர்க்கம் அனுமதித்தும் இருக்காது.

ஓரு ரஜனி திரணகமவினதும் ஒரு செல்வியினதும் கொலையை தூக்கிப் பிடித்துக்கொண்டு சிறீலங்கா அரசு செய்த ஓராயிரம் கிரிசாந்திகளினதும் கோணேஸ்வரிகளினதும் படுகொலைகளையும் மூடிமறைத்து நியாயப்படுத்திய திமிர்தனத்தை அடக்குவதற்கு ஆயுதவன்முறையை பயன்படுத்தியது தவறென்று நான் செல்லமாட்டேன்.

இந்த அதிகார வர்க்க திமிர்பிடித்த கூட்டம் விடுதலைப்புலிகளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் சமூகம் 30 அல்லது 40 வருடங்கள் பின் தள்ளிய ஒரு கொடூர நிலப்பிரபுத்துவ சமூகமாக மாற்றப்பட்டிருக்கும்.

அரசில் சித்தாந்தம் தத்துவம் யுத்ததந்திரம் எல்லாவற்றiயும் கரைத்துக்குடித்த அவற்றுக்கான வியாக்கியானங்களை எல்லாம் நூல்களாக எழுதிய லெனின் ஸ்டாலின் மாவோ போன்றவர்களது ஆட்சியில் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை, பலதலைவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டதை,பலர் நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டதை தத்துவார்த்த தவறு என்று சாக்குப் போக்கு சொல்லும் குடாநாட்டு மாற்றுக் கருத்து மாமணிகளுக்கு பிரபாகரன் செய்தது மட்டும் மாபெரும் குற்றமாம்.

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதன் அல்ல. ஏதிரிகளோடு இரகசியக் கூட்டு வைத்துக்கொண்டு பெரும்பான்மையான தமிழ் சமுகத்தை ஏமாற்றி அடக்கி ஓடுக்கி சுரண்டி வந்த ஓரு சிறுபான்மை அதிகார வர்க்கத்துக்கு எதிரான சராசரி ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுதான் அவர்.

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.

நவம், ஆணித்தரமான கருத்து.செல்வி, திரணகம பற்றி சொல்வோர் இன்று புலிகளால் தப்பி இருக்கும் கூலை எண்ணிப்பார்க்க வேண்டும்.புலிகள் மககளிடமே இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை விட்டிருக்கலாம்.விட்டிருந்தால் கல்லெறி வாங்கியே பல துரோகிகள் கொல்லப்பட்டிருப்பார்கள்.ஆனால் தமது நெஞ்சில் குண்டு வாங்குவதில் இருந்து எல்லாவற்றையும் தாமே பொறுப்பாக எடுத்துக்கொண்டதால் இன்று புலிகலை கோழை என்போரின் முகத்தில் கரி பூசிவிட்டு சென்றுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

இதை ஒரு தமிழன் சொல்வது தான் தமிழரின் சாபம். :(

Link to comment
Share on other sites

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

இலிபியாவின் கடாபி போன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி.இப்படித்தான் சதாமும், கடாபியும் ,முபாரக்கும் நினைத்தார்கள்.விதி யாரைத்தான் விட்டது??

இலிபியாவின் கடாபி போன்றா?

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

இதை ஒரு தமிழன் சொல்வது தான் தமிழரின் சாபம். :(

ஆமாம் தமிழர்கள் சபிக்கப்பட்டவர்கள்தான். ஆனால் சாபம் தமிழர்களால்தான் இடப்பட்டது!

Link to comment
Share on other sites

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர்.

மெலோசெவிச், அல் பசீர், லோரன்ஸ் டைலர் இவர்கள் மேற்குலக முறைப்படி வந்தவர்கள். பின்னர் குற்றவாளியானார்கள் .

எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

முதலில் ஐ.நா. ஒரு குழுவை நியமிக்காது என்றோம்.

பின்னர் அந்த அறிக்கை வெளியே வராது என்றோம்.

பின்னர் மனித உரிமை தொடரில் இந்தியா 'விடாது' என்கிறோம், போர்க்குற்றங்கள் வராது என்கிறோம்.

நாளை இறக்கப்போகின்றோம் என்பதற்காக இன்று சாப்பிடாமலா இருக்கின்றோம்? நம்பிக்கையோடு வாழ்பவன் தான் மனிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெலோசெவிச், அல் பசீர், லோரன்ஸ் டைலர் இவர்கள் மேற்குலக முறைப்படி வந்தவர்கள். பின்னர் குற்றவாளியானார்கள் .

முதலில் ஐ.நா. ஒரு குழுவை நியமிக்காது என்றோம்.

பின்னர் அந்த அறிக்கை வெளியே வராது என்றோம்.

பின்னர் மனித உரிமை தொடரில் இந்தியா 'விடாது' என்கிறோம், போர்க்குற்றங்கள் வராது என்கிறோம்.

நாளை இறக்கப்போகின்றோம் என்பதற்காக இன்று சாப்பிடாமலா இருக்கின்றோம்? நம்பிக்கையோடு வாழ்பவன் தான் மனிதன்.

நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதை மறுக்கவில்லை. எனினும் அதீத நம்பிக்கை அவநம்பிக்கையை உருவாக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் கூட்டமைப்பு ஜெனீவா போகாததுகூட அவநம்பிக்கையைத் தோற்றுவித்து அவர்கள் மீது கோபமாக மாறுகின்றது சிலரிடம்!

Link to comment
Share on other sites

தமிழர் தரப்பில் ஆயுத பலம் மேலோங்கி நின்றால் மட்டுமே சிங்களம் ஒரு அரசியல் தீர்வுக்கு வரும் என நம்பினார். அந்த உண்மையை இன்றுவரை மறுதலிக்க முடியாது. அதனால் தான் இராணுவ சமநிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

சிங்களவன் இராணுசமநிலையில் பின்நிலைவரும் போது பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இராணுவசமநிலையை வளர்த்தான் ஆனால் புலிகள் எந்த சூழ்நிலையிலும் இராணுவ சமநிலையை கூட்டத்தான் நினைத்தார்கள் ஆனால் அரசியல் வளர்ச்சி என்பது மிக மிக குறைவாகவே இருந்தது...

Link to comment
Share on other sites

நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதை மறுக்கவில்லை. எனினும் அதீத நம்பிக்கை அவநம்பிக்கையை உருவாக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் கூட்டமைப்பு ஜெனீவா போகாததுகூட அவநம்பிக்கையைத் தோற்றுவித்து அவர்கள் மீது கோபமாக மாறுகின்றது சிலரிடம்!

1. நமபிக்கையே வைக்காததை விட அதீத நம்பிக்கை வைத்து செயல்படுவது நன்று. சரிவாராவிட்டாலும் ஒன்று முயன்றோம் என்ற திருப்தி இருக்கும், அடுத்து அடுத்த தலைமுறைக்கு தூண்டுதலாக, வழிகாட்டியாக இருக்கும்.

2. சிலர் கூட்டமைப்பு மீதாக கோபப்படுவதை குறை சொல்லமுடியாது. கூட்டமைப்புத்தான் இந்த நிலை வரும் என தெரிந்து அதற்கு ஏற்றால் போல தனது செயற்பாடுகளை, அறிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சிங்களவன் இராணுசமநிலையில் பின்நிலைவரும் போது பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இராணுவசமநிலையை வளர்த்தான் ஆனால் புலிகள் எந்த சூழ்நிலையிலும் இராணுவ சமநிலையை கூட்டத்தான் நினைத்தார்கள் ஆனால் அரசியல் வளர்ச்சி என்பது மிக மிக குறைவாகவே இருந்தது...

உண்மைக்கு, சரித்திரத்திற்கு புறம்பான கருத்து.

Link to comment
Share on other sites

உண்மைக்கு, சரித்திரத்திற்கு புறம்பான கருத்து.

சமாதாண காலத்தில் போட்டுத்தள்ளும் அரசியலை சொல்கீறிங்களோ?

Link to comment
Share on other sites

சமாதாண காலத்தில் போட்டுத்தள்ளும் அரசியலை சொல்கீறிங்களோ?

இல்லை இப்பொழுது போட்டுத்தள்ளும் அரசியலையும் ஆயுத போராடத்திற்கு முன்னரான ...

Link to comment
Share on other sites

இல்லை இப்பொழுது போட்டுத்தள்ளும் அரசியலையும் ஆயுத போராடத்திற்கு முன்னரான ...

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

Link to comment
Share on other sites

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

ஜனநாயக சிங்கள அரசு ஒரு இலட்சத்திற்கும் மேலாக சாதாரண தமிழர்கள் போட்டுத்தள்ளப்படுள்ளர்களே?

கடந்த மாதம் மட்டும் பன்னிரண்டு பேர் காணாமல் போய் இல்லை கொல்லப்பட்டுள்ளனரே?

Link to comment
Share on other sites

ஜனநாயக சிங்கள அரசு ஒரு இலட்சத்திற்கும் மேலாக சாதாரண தமிழர்கள் போட்டுத்தள்ளப்படுள்ளர்களே?

கடந்த மாதம் மட்டும் பன்னிரண்டு பேர் காணாமல் போய் இல்லை கொல்லப்பட்டுள்ளனரே?

பொது எதிரி அவனின் ஒருபடுகொலைக்கும் 1 லட்சம் படுகொலையின் நோக்கமும் ஒன்றுதான் ஆனால் அந்த கொலைகளை தடுக்க போடப்பட்ட வேலி தான் அறிந்தும் அறியாமலும் பல ப்யிர்கொலைகளை செய்துவிட்டது.சிங்களவன் செய்த கொலைக்கு இலக்கங்களில் தொகைகளை கூறலாம் . ஆனால் சில கொலைகளுக்கு கணக்க்கே வைத்துஇருக்கவில்லை.

நியாப்படுத்திவதில் நியாயமில்லை ஆனால் பொது எதிரியை விழுத்த பொது இணக்கபபட்டுக்குவரவேண்டும்........

Link to comment
Share on other sites

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

பொது எதிரி அவனின் ஒருபடுகொலைக்கும் 1 லட்சம் படுகொலையின் நோக்கமும் ஒன்றுதான் ஆனால் அந்த கொலைகளை தடுக்க போடப்பட்ட வேலி தான் அறிந்தும் அறியாமலும் பல ப்யிர்கொலைகளை செய்துவிட்டது.சிங்களவன் செய்த கொலைக்கு இலக்கங்களில் தொகைகளை கூறலாம் . ஆனால் சில கொலைகளுக்கு கணக்க்கே வைத்துஇருக்கவில்லை.

நியாப்படுத்திவதில் நியாயமில்லை ஆனால் பொது எதிரியை விழுத்த பொது இணக்கபபட்டுக்குவரவேண்டும்........

இதுதான் எமக்குள் முழுமையான இணக்கப்பாடு வராமைக்கு உள்ள காரணங்களில் ஒன்று.

Link to comment
Share on other sites

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

மகிந்த சீனாவோடு கூட்டு வைத்தது தான் அமெரிக்க/ மேற்கு நாடுகள் தமிழர் மீது பச்சாதாபம் காட்டுவது.இவர்கள் எப்படியாவது மகிந்தவை சிக்கலில் மாட்டுவார்கள்.எனவே ஆயுட்காலம் மட்டும் இலங்கை ஜனாதிபதியாக மகிந்த இருப்பார் எனும் உங்கள் கூற்று நடைமுறை சாத்தியமற்றது.

Link to comment
Share on other sites

இதுதான் எமக்குள் முழுமையான இணக்கப்பாடு வராமைக்கு உள்ள காரணங்களில் ஒன்று.

அதற்க்கான முக காரணங்களை கண்டறிந்து செயற்ப்பட்டால் இவை எல்லாம் காணாமல் போய்விடும்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பிழைவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வேகமாக நடக்கவேண்டிவந்ததால் தடைகளையும் பாதையைச்செப்பனிடும்போது சில நல்லவையும் போனதும் உண்மைதான். ஆனால் அதில் ஒரு குறிக்கோளும் செய்யவேண்டிய அவசியம் அவசரமும் இருந்தது என்பது தான் உண்மை. அதையே தமிழ்மக்களும் உணர்ந்து ஆமோதித்திருந்தனர். தற்போது தோல்வியைக்காரணம் காட்டி தமிழர் பயத்தால் வாயடைத்திருந்தனர் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாள்களாக்கும் கைங்கரியம். அது எமது மக்களிடம் எடுபடாது. இனி எவர் வந்தாலும் இதுபோன்ற களை எடுப்பின்றி ஒரு படியைக்கூட தாண்டமுடியாது. ஏனெனில் களைகள் முன்னைவிட அதிகமாய் எம்மைச்சுற்றி படர்ந்து இறுகி விட்டன.

Link to comment
Share on other sites

புலிகள் பிழைவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வேகமாக நடக்கவேண்டிவந்ததால் தடைகளையும் பாதையைச்செப்பனிடும்போது சில நல்லவையும் போனதும் உண்மைதான். ஆனால் அதில் ஒரு குறிக்கோளும் செய்யவேண்டிய அவசியம் அவசரமும் இருந்தது என்பது தான் உண்மை. அதையே தமிழ்மக்களும் உணர்ந்து ஆமோதித்திருந்தனர். தற்போது தோல்வியைக்காரணம் காட்டி தமிழர் பயத்தால் வாயடைத்திருந்தனர் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாள்களாக்கும் கைங்கரியம். அது எமது மக்களிடம் எடுபடாது. இனி எவர் வந்தாலும் இதுபோன்ற களை எடுப்பின்றி ஒரு படியைக்கூட தாண்டமுடியாது. ஏனெனில் களைகள் முன்னைவிட அதிகமாய் எம்மைச்சுற்றி படர்ந்து இறுகி விட்டன.

உயிரின் மதிப்பு உங்களுக்கு அவ்வளவு மலிவாக போய்விட்டது.உங்களுக்கு அவசரம் என்றால் ஆப்பிட்டவனை போட்டுக்கொண்டே போய்விடுவீர்கள் .இதை இப்போ சிங்கள அரசும் சொல்லலாம் தானே ? புலிகளை முடிக்க வேண்டிய அவசரத்தில் பொதுமக்களையும் கொஞ்சம் போட வேண்டி வந்துவிட்டதேன்று.

களைகள் பற்றி இனி கனவும் காண வேண்டாம் ,படிக்காத மொக்கு கூட்டத்தை பொறுப்பில் விட இனி எந்த ஒருதமிழனும் தயாரில்லை .

Link to comment
Share on other sites

உயிரின் மதிப்பு உங்களுக்கு அவ்வளவு மலிவாக போய்விட்டது.உங்களுக்கு அவசரம் என்றால் ஆப்பிட்டவனை போட்டுக்கொண்டே போய்விடுவீர்கள் .இதை இப்போ சிங்கள அரசும் சொல்லலாம் தானே ? புலிகளை முடிக்க வேண்டிய அவசரத்தில் பொதுமக்களையும் கொஞ்சம் போட வேண்டி வந்துவிட்டதேன்று.

களைகள் பற்றி இனி கனவும் காண வேண்டாம் ,படிக்காத மொக்கு கூட்டத்தை பொறுப்பில் விட இனி எந்த ஒருதமிழனும் தயாரில்லை .

அர்ஜுன் படித்தவனை மட்டும் தான் பொறுப்பில் விடுவோம் என்றால்படித்தவன் என்று எதனை கொண்டு அளவிடப் போகிறீர்கள்? O/Lஆ , A/Lஆ அல்லது பட்டப்படிப்பா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.