Jump to content

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு


Recommended Posts

ஆயுத போராட்டத்தின் கருத்து சுதந்திரத்தையும் மக்களாட்சி முறையின் கருத்து சுதந்திரத்தையும் ஒரே தட்டில் வைத்து அளவிடமுடியாது.

சிங்களம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகளின் கருத்துக்களையே மதிப்பதில்லை. அதாவது ஒரு மக்களாட்சி முறையில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படும்போழுது அது ஆயுத புரட்சிக்கு வழி சமைக்கலாம்.

ஆயுத புரட்சியை முன்னெடுப்பவர்கள் மத்தியில் முழுமையான கருத்து சுதந்திரத்தை எதிர்பார்ப்பது தவறு. அது அவர்கள் நோக்கமும் அல்ல.

மொத்தத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான கருத்து சுதந்திரத்தை மதித்திருந்தால் ஆயுத போராட்டமே தோன்றியிருக்காது.

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது. - நவம்.

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால்

அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

Link to comment
Share on other sites

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

தமிழர் தரப்பில் ஆயுத பலம் மேலோங்கி நின்றால் மட்டுமே சிங்களம் ஒரு அரசியல் தீர்வுக்கு வரும் என நம்பினார். அந்த உண்மையை இன்றுவரை மறுதலிக்க முடியாது. அதனால் தான் இராணுவ சமநிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால் அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

அதே ஆயுதம் கொண்டே சிங்களமும் தமிழரை அடக்கி ஆளுகின்றது.

சூடானின் அல் பசீர் ஒரு போர்குற்றவாளி, சிரியாவின் அசாத் நாளைய போர்குற்றவாளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே ஆயுதம் கொண்டே சிங்களமும் தமிழரை அடக்கி ஆளுகின்றது.

சூடானின் அல் பசீர் ஒரு போர்குற்றவாளி, சிரியாவின் அசாத் நாளைய போர்குற்றவாளி.

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

Link to comment
Share on other sites

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது. - நவம்.

அவர் ஆயுதத்தை மட்டும் நம்பினார் அதனால் தான் கடைசிவரை அவரால் எதையும் வெல்ல முடியவில்லை.

இன்று சூடான் தொட்டு சிரியா வரை நடப்பதை கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும்மீண்டும் ஆயுதத்தால்

அடக்கின்ற கதை கதைப்பவர்களை என்னசெய்வது.

ஏதோ அரசியல் செய்து சிங்களத்திடமும் ,பம்மாத்து உலகத்திடமும் உரிமையை பெற்று விட்டதாகவோ அல்லது பெறுவோம் என்று எதனை வைத்து சொல்கிறீர்கள்.அப்படியான அடையாளமே (sign)தெரியவில்லையே.

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

ஹி ஹி.இப்படித்தான் சதாமும், கடாபியும் ,முபாரக்கும் நினைத்தார்கள்.விதி யாரைத்தான் விட்டது??

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை 1983 வரை கருத்து என்பது பம்மாத்து என்ற சொல்லுக்கான வரைவிலக்கணமாக இருந்து.ஆறுமுகநாவலரில் இருந்து அமிர்தலிங்கம் வரை சொல்லுக்கும் செயலுக்கும் பாரிய இடைவெளியைக் கொண்டவர்களே தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட வரலாற்றைத் தானே நாங்கள் பார்த்தோம்.

இடது சாரித்தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களும் நிலவிலே பேசிய வரலாறும் தத்துவத்துக்கும் நடைமுடைக்கும் நீண்ட இடைவெளியைக் கொண்டிருந்த வரலாற்றையும் தான் நாங்கள் பார்த்தோம்.

துடிப்புள்ள இளைஞனாக ஆயதப்போராட்டத்தில் குதித்த தலைவர் பிரபாகரன் வாய்சொல்வீரம் பற்றி எச்சரிக்கையாக இருந்ததை தவறென்று சொல்லமுடியாது. அவர் பலத்தை பிரயோகிக்காவிட்டிருந்தால் தமிழ் சமூகத்தின் தலைமைத்துவத்தை ஒருபோதும் பெற்றிருக்க முடியாது.அதை ஒரு போதும் குடாநாட்டு அதிகார வர்க்கம் அனுமதித்தும் இருக்காது.

ஓரு ரஜனி திரணகமவினதும் ஒரு செல்வியினதும் கொலையை தூக்கிப் பிடித்துக்கொண்டு சிறீலங்கா அரசு செய்த ஓராயிரம் கிரிசாந்திகளினதும் கோணேஸ்வரிகளினதும் படுகொலைகளையும் மூடிமறைத்து நியாயப்படுத்திய திமிர்தனத்தை அடக்குவதற்கு ஆயுதவன்முறையை பயன்படுத்தியது தவறென்று நான் செல்லமாட்டேன்.

இந்த அதிகார வர்க்க திமிர்பிடித்த கூட்டம் விடுதலைப்புலிகளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் சமூகம் 30 அல்லது 40 வருடங்கள் பின் தள்ளிய ஒரு கொடூர நிலப்பிரபுத்துவ சமூகமாக மாற்றப்பட்டிருக்கும்.

அரசில் சித்தாந்தம் தத்துவம் யுத்ததந்திரம் எல்லாவற்றiயும் கரைத்துக்குடித்த அவற்றுக்கான வியாக்கியானங்களை எல்லாம் நூல்களாக எழுதிய லெனின் ஸ்டாலின் மாவோ போன்றவர்களது ஆட்சியில் பல இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை, பலதலைவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டதை,பலர் நாட்டைவிட்டு ஓடும்படி செய்யப்பட்டதை தத்துவார்த்த தவறு என்று சாக்குப் போக்கு சொல்லும் குடாநாட்டு மாற்றுக் கருத்து மாமணிகளுக்கு பிரபாகரன் செய்தது மட்டும் மாபெரும் குற்றமாம்.

பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதன் அல்ல. ஏதிரிகளோடு இரகசியக் கூட்டு வைத்துக்கொண்டு பெரும்பான்மையான தமிழ் சமுகத்தை ஏமாற்றி அடக்கி ஓடுக்கி சுரண்டி வந்த ஓரு சிறுபான்மை அதிகார வர்க்கத்துக்கு எதிரான சராசரி ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுதான் அவர்.

தமிழ் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த அகமுரண்பாடுகளை ஆயுத பலம் கொண்டே அடக்க முடியும் என்று அவர் நம்பியதை அரசியலைக் கண்டு அஞ்சிய கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.

நவம், ஆணித்தரமான கருத்து.செல்வி, திரணகம பற்றி சொல்வோர் இன்று புலிகளால் தப்பி இருக்கும் கூலை எண்ணிப்பார்க்க வேண்டும்.புலிகள் மககளிடமே இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை விட்டிருக்கலாம்.விட்டிருந்தால் கல்லெறி வாங்கியே பல துரோகிகள் கொல்லப்பட்டிருப்பார்கள்.ஆனால் தமது நெஞ்சில் குண்டு வாங்குவதில் இருந்து எல்லாவற்றையும் தாமே பொறுப்பாக எடுத்துக்கொண்டதால் இன்று புலிகலை கோழை என்போரின் முகத்தில் கரி பூசிவிட்டு சென்றுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

இதை ஒரு தமிழன் சொல்வது தான் தமிழரின் சாபம். :(

Link to comment
Share on other sites

ஆனால் மகிந்த மரிக்கும்வரை இலங்கையின் ஜனாதிபதி!

இலிபியாவின் கடாபி போன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி.இப்படித்தான் சதாமும், கடாபியும் ,முபாரக்கும் நினைத்தார்கள்.விதி யாரைத்தான் விட்டது??

இலிபியாவின் கடாபி போன்றா?

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

இதை ஒரு தமிழன் சொல்வது தான் தமிழரின் சாபம். :(

ஆமாம் தமிழர்கள் சபிக்கப்பட்டவர்கள்தான். ஆனால் சாபம் தமிழர்களால்தான் இடப்பட்டது!

Link to comment
Share on other sites

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர்.

மெலோசெவிச், அல் பசீர், லோரன்ஸ் டைலர் இவர்கள் மேற்குலக முறைப்படி வந்தவர்கள். பின்னர் குற்றவாளியானார்கள் .

எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

முதலில் ஐ.நா. ஒரு குழுவை நியமிக்காது என்றோம்.

பின்னர் அந்த அறிக்கை வெளியே வராது என்றோம்.

பின்னர் மனித உரிமை தொடரில் இந்தியா 'விடாது' என்கிறோம், போர்க்குற்றங்கள் வராது என்கிறோம்.

நாளை இறக்கப்போகின்றோம் என்பதற்காக இன்று சாப்பிடாமலா இருக்கின்றோம்? நம்பிக்கையோடு வாழ்பவன் தான் மனிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெலோசெவிச், அல் பசீர், லோரன்ஸ் டைலர் இவர்கள் மேற்குலக முறைப்படி வந்தவர்கள். பின்னர் குற்றவாளியானார்கள் .

முதலில் ஐ.நா. ஒரு குழுவை நியமிக்காது என்றோம்.

பின்னர் அந்த அறிக்கை வெளியே வராது என்றோம்.

பின்னர் மனித உரிமை தொடரில் இந்தியா 'விடாது' என்கிறோம், போர்க்குற்றங்கள் வராது என்கிறோம்.

நாளை இறக்கப்போகின்றோம் என்பதற்காக இன்று சாப்பிடாமலா இருக்கின்றோம்? நம்பிக்கையோடு வாழ்பவன் தான் மனிதன்.

நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதை மறுக்கவில்லை. எனினும் அதீத நம்பிக்கை அவநம்பிக்கையை உருவாக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் கூட்டமைப்பு ஜெனீவா போகாததுகூட அவநம்பிக்கையைத் தோற்றுவித்து அவர்கள் மீது கோபமாக மாறுகின்றது சிலரிடம்!

Link to comment
Share on other sites

தமிழர் தரப்பில் ஆயுத பலம் மேலோங்கி நின்றால் மட்டுமே சிங்களம் ஒரு அரசியல் தீர்வுக்கு வரும் என நம்பினார். அந்த உண்மையை இன்றுவரை மறுதலிக்க முடியாது. அதனால் தான் இராணுவ சமநிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

சிங்களவன் இராணுசமநிலையில் பின்நிலைவரும் போது பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இராணுவசமநிலையை வளர்த்தான் ஆனால் புலிகள் எந்த சூழ்நிலையிலும் இராணுவ சமநிலையை கூட்டத்தான் நினைத்தார்கள் ஆனால் அரசியல் வளர்ச்சி என்பது மிக மிக குறைவாகவே இருந்தது...

Link to comment
Share on other sites

நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதை மறுக்கவில்லை. எனினும் அதீத நம்பிக்கை அவநம்பிக்கையை உருவாக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் கூட்டமைப்பு ஜெனீவா போகாததுகூட அவநம்பிக்கையைத் தோற்றுவித்து அவர்கள் மீது கோபமாக மாறுகின்றது சிலரிடம்!

1. நமபிக்கையே வைக்காததை விட அதீத நம்பிக்கை வைத்து செயல்படுவது நன்று. சரிவாராவிட்டாலும் ஒன்று முயன்றோம் என்ற திருப்தி இருக்கும், அடுத்து அடுத்த தலைமுறைக்கு தூண்டுதலாக, வழிகாட்டியாக இருக்கும்.

2. சிலர் கூட்டமைப்பு மீதாக கோபப்படுவதை குறை சொல்லமுடியாது. கூட்டமைப்புத்தான் இந்த நிலை வரும் என தெரிந்து அதற்கு ஏற்றால் போல தனது செயற்பாடுகளை, அறிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சிங்களவன் இராணுசமநிலையில் பின்நிலைவரும் போது பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இராணுவசமநிலையை வளர்த்தான் ஆனால் புலிகள் எந்த சூழ்நிலையிலும் இராணுவ சமநிலையை கூட்டத்தான் நினைத்தார்கள் ஆனால் அரசியல் வளர்ச்சி என்பது மிக மிக குறைவாகவே இருந்தது...

உண்மைக்கு, சரித்திரத்திற்கு புறம்பான கருத்து.

Link to comment
Share on other sites

உண்மைக்கு, சரித்திரத்திற்கு புறம்பான கருத்து.

சமாதாண காலத்தில் போட்டுத்தள்ளும் அரசியலை சொல்கீறிங்களோ?

Link to comment
Share on other sites

சமாதாண காலத்தில் போட்டுத்தள்ளும் அரசியலை சொல்கீறிங்களோ?

இல்லை இப்பொழுது போட்டுத்தள்ளும் அரசியலையும் ஆயுத போராடத்திற்கு முன்னரான ...

Link to comment
Share on other sites

இல்லை இப்பொழுது போட்டுத்தள்ளும் அரசியலையும் ஆயுத போராடத்திற்கு முன்னரான ...

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

Link to comment
Share on other sites

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

ஜனநாயக சிங்கள அரசு ஒரு இலட்சத்திற்கும் மேலாக சாதாரண தமிழர்கள் போட்டுத்தள்ளப்படுள்ளர்களே?

கடந்த மாதம் மட்டும் பன்னிரண்டு பேர் காணாமல் போய் இல்லை கொல்லப்பட்டுள்ளனரே?

Link to comment
Share on other sites

ஜனநாயக சிங்கள அரசு ஒரு இலட்சத்திற்கும் மேலாக சாதாரண தமிழர்கள் போட்டுத்தள்ளப்படுள்ளர்களே?

கடந்த மாதம் மட்டும் பன்னிரண்டு பேர் காணாமல் போய் இல்லை கொல்லப்பட்டுள்ளனரே?

பொது எதிரி அவனின் ஒருபடுகொலைக்கும் 1 லட்சம் படுகொலையின் நோக்கமும் ஒன்றுதான் ஆனால் அந்த கொலைகளை தடுக்க போடப்பட்ட வேலி தான் அறிந்தும் அறியாமலும் பல ப்யிர்கொலைகளை செய்துவிட்டது.சிங்களவன் செய்த கொலைக்கு இலக்கங்களில் தொகைகளை கூறலாம் . ஆனால் சில கொலைகளுக்கு கணக்க்கே வைத்துஇருக்கவில்லை.

நியாப்படுத்திவதில் நியாயமில்லை ஆனால் பொது எதிரியை விழுத்த பொது இணக்கபபட்டுக்குவரவேண்டும்........

Link to comment
Share on other sites

அரசியலில் போட்டுத்ததள்ளும் உரிமை மக்களுக்கானது , இராணுவத்தன்மையுடன் போட்டுத்தள்ளும் உரிமை யார யாராழும் வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையில்லை.

பொது எதிரி அவனின் ஒருபடுகொலைக்கும் 1 லட்சம் படுகொலையின் நோக்கமும் ஒன்றுதான் ஆனால் அந்த கொலைகளை தடுக்க போடப்பட்ட வேலி தான் அறிந்தும் அறியாமலும் பல ப்யிர்கொலைகளை செய்துவிட்டது.சிங்களவன் செய்த கொலைக்கு இலக்கங்களில் தொகைகளை கூறலாம் . ஆனால் சில கொலைகளுக்கு கணக்க்கே வைத்துஇருக்கவில்லை.

நியாப்படுத்திவதில் நியாயமில்லை ஆனால் பொது எதிரியை விழுத்த பொது இணக்கபபட்டுக்குவரவேண்டும்........

இதுதான் எமக்குள் முழுமையான இணக்கப்பாடு வராமைக்கு உள்ள காரணங்களில் ஒன்று.

Link to comment
Share on other sites

சதாம், கடாபி, முபராக் எல்லோரும் மேற்குலக நாடுகளின் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். எனவே தமிழர்கள் என்னதான் மகிந்த சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்டாலும், அவர் சர்வாதிகாரியாக இருக்கின்ற போதும், மேற்குலக நாடுகளின் நலன்களுக்குப் பங்கம் வராதவரையில் கைவிடப்படமாட்டார். இந்த யதார்த்தத்தை அமெரிக்காவும், ஐ.நா.உம் மனிதவுரிமை கூட்டத்தொடரில் நடந்துகொள்ளும் முறையில் இருந்து அறிந்துகொள்ளலாம். போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை கோராமல் பார்ப்பதும், அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவரைத் தப்புவிக்க ராஜாங்கத் திணைக்களம் உதவிபுரிவதும் யார் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றதுதானே!

மகிந்த சீனாவோடு கூட்டு வைத்தது தான் அமெரிக்க/ மேற்கு நாடுகள் தமிழர் மீது பச்சாதாபம் காட்டுவது.இவர்கள் எப்படியாவது மகிந்தவை சிக்கலில் மாட்டுவார்கள்.எனவே ஆயுட்காலம் மட்டும் இலங்கை ஜனாதிபதியாக மகிந்த இருப்பார் எனும் உங்கள் கூற்று நடைமுறை சாத்தியமற்றது.

Link to comment
Share on other sites

இதுதான் எமக்குள் முழுமையான இணக்கப்பாடு வராமைக்கு உள்ள காரணங்களில் ஒன்று.

அதற்க்கான முக காரணங்களை கண்டறிந்து செயற்ப்பட்டால் இவை எல்லாம் காணாமல் போய்விடும்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் பிழைவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வேகமாக நடக்கவேண்டிவந்ததால் தடைகளையும் பாதையைச்செப்பனிடும்போது சில நல்லவையும் போனதும் உண்மைதான். ஆனால் அதில் ஒரு குறிக்கோளும் செய்யவேண்டிய அவசியம் அவசரமும் இருந்தது என்பது தான் உண்மை. அதையே தமிழ்மக்களும் உணர்ந்து ஆமோதித்திருந்தனர். தற்போது தோல்வியைக்காரணம் காட்டி தமிழர் பயத்தால் வாயடைத்திருந்தனர் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாள்களாக்கும் கைங்கரியம். அது எமது மக்களிடம் எடுபடாது. இனி எவர் வந்தாலும் இதுபோன்ற களை எடுப்பின்றி ஒரு படியைக்கூட தாண்டமுடியாது. ஏனெனில் களைகள் முன்னைவிட அதிகமாய் எம்மைச்சுற்றி படர்ந்து இறுகி விட்டன.

Link to comment
Share on other sites

புலிகள் பிழைவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வேகமாக நடக்கவேண்டிவந்ததால் தடைகளையும் பாதையைச்செப்பனிடும்போது சில நல்லவையும் போனதும் உண்மைதான். ஆனால் அதில் ஒரு குறிக்கோளும் செய்யவேண்டிய அவசியம் அவசரமும் இருந்தது என்பது தான் உண்மை. அதையே தமிழ்மக்களும் உணர்ந்து ஆமோதித்திருந்தனர். தற்போது தோல்வியைக்காரணம் காட்டி தமிழர் பயத்தால் வாயடைத்திருந்தனர் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாள்களாக்கும் கைங்கரியம். அது எமது மக்களிடம் எடுபடாது. இனி எவர் வந்தாலும் இதுபோன்ற களை எடுப்பின்றி ஒரு படியைக்கூட தாண்டமுடியாது. ஏனெனில் களைகள் முன்னைவிட அதிகமாய் எம்மைச்சுற்றி படர்ந்து இறுகி விட்டன.

உயிரின் மதிப்பு உங்களுக்கு அவ்வளவு மலிவாக போய்விட்டது.உங்களுக்கு அவசரம் என்றால் ஆப்பிட்டவனை போட்டுக்கொண்டே போய்விடுவீர்கள் .இதை இப்போ சிங்கள அரசும் சொல்லலாம் தானே ? புலிகளை முடிக்க வேண்டிய அவசரத்தில் பொதுமக்களையும் கொஞ்சம் போட வேண்டி வந்துவிட்டதேன்று.

களைகள் பற்றி இனி கனவும் காண வேண்டாம் ,படிக்காத மொக்கு கூட்டத்தை பொறுப்பில் விட இனி எந்த ஒருதமிழனும் தயாரில்லை .

Link to comment
Share on other sites

உயிரின் மதிப்பு உங்களுக்கு அவ்வளவு மலிவாக போய்விட்டது.உங்களுக்கு அவசரம் என்றால் ஆப்பிட்டவனை போட்டுக்கொண்டே போய்விடுவீர்கள் .இதை இப்போ சிங்கள அரசும் சொல்லலாம் தானே ? புலிகளை முடிக்க வேண்டிய அவசரத்தில் பொதுமக்களையும் கொஞ்சம் போட வேண்டி வந்துவிட்டதேன்று.

களைகள் பற்றி இனி கனவும் காண வேண்டாம் ,படிக்காத மொக்கு கூட்டத்தை பொறுப்பில் விட இனி எந்த ஒருதமிழனும் தயாரில்லை .

அர்ஜுன் படித்தவனை மட்டும் தான் பொறுப்பில் விடுவோம் என்றால்படித்தவன் என்று எதனை கொண்டு அளவிடப் போகிறீர்கள்? O/Lஆ , A/Lஆ அல்லது பட்டப்படிப்பா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.