Jump to content

உயிரின் அடுத்த நிலை என்ன..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மற்ற்வரில் இருந்து மாறுபாட்டு "நான்" சிந்திக்கிறேன் என ஒவ்வொருவரும் கேட்டுகொண்டால்  இந்த "நான்" என்பது இயற்கை உருவாக்கிய அகங்காரத்தில் இருந்து பிறப்பதாகும் .. ஒருவர்  உங்களை உங்களை போல உங்களுடைய பெயரினை கொண்ட பலரின் மத்தியில் நிற்கவைத்து.. உங்களின் பெயரை சொல்லி அழைக்கும் போது நீங்கள் உட்பட அனைவரும் திரும்பிபார்ப்பார்கள் .. அதுதான் "நான்" .. உண்மையில் சற்று கூர்ந்து நோக்கினால் இதுதான் இயற்கை.... "நான்" என்பது இயற்கையின் அகங்காரத்தில் விகாரமாகும்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 156
  • Created
  • Last Reply

சிங்கப்பூர் தமிழர்கள் யாரவது இந்த ஆளோட நம்பகத்தன்மையை விளக்கமுடியுமா?

2012 hoax இவரும் பணம் பண்ணுவதற்கான வழியா?

Link to comment
Share on other sites

ம்.

ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதில் விட ஒருமுறை தன் உடலை Light Body ஆக மாற்றிக்காட்டினாலே போதுமே. :lol: :lol:

மனிதர்களின் “ஆராய்ந்து அறியும்” குணாதிசயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே இப்படியானவர்கள் எதை சொன்னாலும் அவற்றை நம்ப வேண்டிய கட்டாயத்துக்கு சாதாரண மனிதர்கள் ஆட்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

The Fabric of the Cosmos: What Is Space?

இந்த காண்ஒளியின் இறுதிப்பகுதியில் வரும் விவரங்கள் கொஞ்சம் வில்லங்கமாகத்தான் இருக்கிறது. எம்மை பற்றிய தரவுகள் சேமித்து வைக்க இறைவனுக்கு கிடைத்த hard disk .......black hole

http://www.youtube.com/watch?v=wy9gXKwRpXc

கடைசியில் எமது நித்தியப்பெருவாழ்வு ....black hole இலா ? அப்போ யமன் என்று சொல்லும் கருப்பு உருவம் இதுதானா?

Link to comment
Share on other sites

கரும் துளைகள் இருக்கக்கூடிய இடங்களை கணித ரீதியாக தருவிக்க முடியும், பிரபஞ்சத்தின் சக்தி ஊற்று இந்த கருந்துளைகள். காலம் இந்த கருந்துளைகளில் காணாமற் போய்விடும்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மா என்பது எது ?

ஆன்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது.அதன் சக்தி கோடி சூரிய பிரகாசம் உடையது.அதில் இருந்துதான் உயிர் உண்டாகிறது.இது எல்லா ஜீவ

ராசிகளிலும் உள்ளதாகும் பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில் ,மனித தேகம் எடுக்கிறது. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார்கள் நம்முடைய பெரியவர்கள் .

இது மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால்,மனிதேகத்தில் புருவமத்தியில் இருந்துகொண்டு உள்ளது .அதற்கு லலாடம் ஸ்தானம் என்பார்கள் .அதன் வண்ணம் கால பங்கு பொன்மை.முக்கால் பங்கு வெண்மை நிறம் கொண்டதாகும் .பல பிறவிகள் எடுத்த பதிவுகள் ,அதன் செயல்பாடுகள் எல்லாம் அந்த ஆன்மாவில் பதிவாகி இருக்கும் .அந்த பதிவுகளை களைந்து ,[அதாவது நீக்கி ]உண்மையான அதன் தன்மையைத் தெரிந்துக் கொள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது .

அதன செயல் பாட்டிற்க்காக ஐம புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது .அதற்குப் பெயர் உபகாரக் கருவிகலாகும்.அதுதான் கண், காது,மூக்கு,வாய் உடம்பு என்பதாகும் .இவை கண்களுக்குத் தெரியும் .இவைகள் மூலமாக உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகள் ஏராளம் .அதில் முக்கியமானது.

இந்திரியங்கள் என்னும்;-- கண்,காத்து ,மூக்கு,வாய்,உடம்பு என்பதாகும்

கரணங்கள் என்னும் ;--,மனம், புத்தி,சித்தம் .அகங்காரம் .ஆச்சர்யம் ,என்பதாகும்

ஜீவன் என்னும் ;--உயிராகும் .

ஆன்மா என்பது .;--அருள் நிறைந்த ஆற்றல் என்னும் ஒளி அணுவாகும்.

ஆன்மா எனபது இல்லை என்றால் எதுவும் இயங்காது .ஆன்மாவின் தேவைக்காக அனைத்து கருவி காரணங்களையும்,அதுவே உருவாக்கிக் கொண்டு உள்ளதாகும்.ஆதலால் ''நான் என்பது ஆன்மாவே'' என்பது உண்மையாகும்.

ஆன்மா உண்மையை அறிந்து கொள்ள கருவிகளை இந்திரியங்கள்,கரணங்கள், ஜீவன் என்னும் புறக் கருவிகளுக்கு வேலை கொடுள்ளது.ஆனால் புறத தோற்ற க் கருவிகளான ஐம புலன்கள் கண் ,காத்து மூக்கு,வாய்,உடம்பு போன்ற கருவிகள், வெளியில் உள்ள மாயா தோற்றம் உள்ள அழகில் மயங்கி,மனம் புத்தி,சித்தம் அகங்காரம்,ஆச்சர்யம் .போன்ற கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது .இவற்றை ஜீவனும் ஆன்மாவும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் உண்டாகி விடுகிறது .அந்த அளவிருக்கு மாயா சத்தியின் பலம் உள்ளது, மாயா சத்திக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது [.இதை விரிக்கில் பேருக்கும் ].

அதனால்தான் புறக் கருவிகளை வெளியில் செல்ல விடாமல் உண்மையை அறிந்து கொள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உண்மையை அறிந்த ஞானிகள் மக்களுக்கு பல வழிகளில் பலவிதமாக சொல்லி உள்ளார்கள் .மண் ஆசை,பெண் ஆசை,பொன் ஆசை.இந்த மூன்று ஆசைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி உள்ளார்கள் .

உடம்பின் முக்கிய கருவிகள் எது என்றால் .கண் ,மனம் ,என்பாதாகும் .கண்களில் பார்ப்பது மனதில் பதிவாகும் மனதில் பதிவானது அனைத்தும் செய்யும் .அதனால்தான் மனதை அடக்க வேண்டும் என்கிறார்கள் .கண்ணும் மனமும் எப்படி அடங்கும் .கண் போகும் இடம் மனம் போகும் .கண்கள் வெளியே செல்லாமல் புருவ மத்தியில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.எப்படி தொடர்பு கொள்ள முடியும்? அதற்குததான் தியானம் ,தவம .யோகம ,வழிபாடு என்று வைத்துள்ளார்கள். இதனால் ஆன்மாவில் உள்ள பதிவுகள் நீங்கி விடுமா என்றால் நீங்காது என்கிறார் வள்ளலார் .

ஆன்மாவின் பதிவுகள் எப்படி நீங்கும் என்றால் உயிர்களுக்கு உபகாரம் செய்தால்தான் நீங்கும் என்கிறார் வள்ளலார் .ஏன் அப்படி செய்ய வேண்டும் ?என்ற கேள்விகள் எல்லாருடைய மனதில் உருவாகும் இல்லையா?நாம் மாயா சத்திகள் மூலமாக பல உயிர்களின் உதவியால்தான் அனைத்தும் அனுபவித்து உள்ளோம் .அதை திருப்பி தரவேண்டும் இல்லையா ?அதுவே நாம் வாங்க்கியக் கடனாகும் ,அந்தக் கடனை திருப்பித் தராமல் .தியானம் ,தவம ,யோகம ,வழிபாடு என்று செய்தால் .கடன் தீர்ந்து விடுமா ?தீராது .அதைத் தீர்ப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார் வள்ளலார் .ஜீவ காருனயமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்,சாவி இல்லாமல் போனால் ஆண்டவரின் மேல் வீட்டுக்கதவு திறக்காது.உங்கள் ஆன்மாவை சுத்தமாக்க வேண்டுமானால் ஜீவ காருண்யமே வழியாகும் என்றார்.ஜீவ காருண்யமே,வழிபாடு என்றார் .வேறு எந்த வழிகளில் சென்றாலும் உண்மையான இறை நிலையை அடையமுடியாது என்று திட்டவட்டமாக ''திருஅருட்பா'' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.

சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார் .அவர்போல் வாழ்ந்தால்தான்.மரணத்தை வென்று இறைவனை காண முடியும் .வேறு எந்த வழியாலும் காணமுடியாது அருள் பெற முடியாது ''நான என்னும் ஆன்மாவை'' காண இதுவே வழியாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ;--

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே

உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்தது இல்லீரே

விண்டதினால் என்ன நீர் சமரச சன்மார்க்க

மெய் நெறியைக் கடைபிடித்து மெய் பொருள் நன்கு உணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

அடுத்து ஒரு பாடல் .;-

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்

உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே அறிவீர்

மடம் புகு பே ய் மனத்தாலே மயங்குகின்றீர் மனதை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி வகையை அறியீர்

இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே

எண்ணி எண்ணி இளைகின்றீர் ஏழை உலகிலீர்

நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

http://suddhasanmargham.blogspot.in/2011/09/blog-post_15.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது வந்து ஏதாவது பதியுங்கப்பா.. செத்து செத்து விளையாடிதான் மறுபடியும் பதியணும் போல கிடக்கு

<_< <_<

Link to comment
Share on other sites

இங்கு பிறவியிலே கண் தெரியாத பெண்ணும் விபரிக்கிறார் தனது இறப்பு அனுபவத்தை ....

பிறவியிலேயே கண்தெரியாத பெண் இவ்வளவு மொழித்தேர்ச்சியோடு உரையாடுவது, நன்கு கற்றவரைப் போல் தகவல் செறிவோடு பேசுவதும்உண்மையில் நடக்கக்கூடியதல்ல.. :D

Link to comment
Share on other sites

பிறவியிலேயே கண்தெரியாத பெண் இவ்வளவு மொழித்தேர்ச்சியோடு உரையாடுவது, நன்கு கற்றவரைப் போல் தகவல் செறிவோடு பேசுவதும்உண்மையில் நடக்கக்கூடியதல்ல.. :D

பீத்தோவன் உலக புகழ் பெற்ற இசைமேதை . அவருக்கு பிறவியிலே காது கேளாது . இப்படியான விடயங்களில் எமக்கு சந்தேகம் ஏற்படாது .ஆனால் மரணத்துக்கு பின்னதான நிலை என்பதை யார் வந்து சொன்னாலும் நாம் ஏற்று கொள்வது சற்று கடினம்தான் . ஒவ்வொருவரினதும் மரணத்தின் பின்னதான் அனுபவங்கள் NDE இல் ஆயிரக்கணக்கில் இருக்கிறது . வெவ்வேறு நாடுகளில் இருந்தும் , வெவ்வேறு மொழிகளில் இருந்தும் அவர்கள் பெற்ற அனுபவங்கள் 70% ஒரே மாதிரியானவை . புலன்களை கொண்டு அதை அளக்க முடியாது . அது புலன்களை தாண்டிய நிலை . மரணத்தின் பின்தான் அந்த பேரொளியை பார்க்க முடியும் என்றில்லை . தியானத்தில் சித்தர்களும் , ரிஷிகளும் கண்டது அந்த ஒளியைத்தான் .

Link to comment
Share on other sites

இது கடவுளுடன் சம்பந்தப்பட்ட பிரச்னை ...............புரட்சி ............இதைப்பற்றி நீங்கள் அறியவேண்டுமென்றால் கடவுளைப்போல் வாழ [மாற]வேண்டும் :rolleyes::lol: .................மனிதர்களாக வாழும்வரை இதைப்பற்றி கற்பனைக்கதைகளையும் ,விஞ்சான ஆராய்ச்சி கதைகளையும் மட்டும்தான் உங்களுக்கு

மிஞ்சும்......................சாதாரணமாக சொன்னால் கடவுளை நம்புகிறவர்கள் உயிரின் மகத்துவத்தை மதிப்பார்கள்.................கடவுளை நம்பாதவர்களுக்கு அது வெறும் தூசு போல்தான் இருக்கும்..............முதலில் கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்ற ஆராச்சியை நடத்துவோம் :D .....அதன் பின் உயிரின் ஆராச்சியை நடத்தினால் தெளிவான விடை கிடைக்கும் என நான் நினைக்கிறேன்.............. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கடவுளுடன் சம்பந்தப்பட்ட பிரச்னை ...............புரட்சி ............இதைப்பற்றி நீங்கள் அறியவேண்டுமென்றால் கடவுளைப்போல் வாழ [மாற]வேண்டும் :rolleyes::lol: .................மனிதர்களாக வாழும்வரை இதைப்பற்றி கற்பனைக்கதைகளையும் ,விஞ்சான ஆராய்ச்சி கதைகளையும் மட்டும்தான் உங்களுக்கு

மிஞ்சும்......................சாதாரணமாக சொன்னால் கடவுளை நம்புகிறவர்கள் உயிரின் மகத்துவத்தை மதிப்பார்கள்.................கடவுளை நம்பாதவர்களுக்கு அது வெறும் தூசு போல்தான் இருக்கும்..............முதலில் கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்ற ஆராச்சியை நடத்துவோம் :D .....அதன் பின் உயிரின் ஆராச்சியை நடத்தினால் தெளிவான விடை கிடைக்கும் என நான் நினைக்கிறேன்.............. :icon_idea:

தோழர் கடவுளை காண குரு வழிகாட்டல் அவசியம் வேண்டும் தனியாக எல்லாம் உட்கார்ந்து தியானம் செய்தால் மெண்டல் ஆகிடுவம்.... எனக்கு நித்தியனந்த சுவாமிஜி சரியாக படுகிறார்.. நான் அவருடைய சீடர் ஆகலாம் என இருக்கன்... :lol: :lol:

Link to comment
Share on other sites

தோழர் கடவுளை காண குரு வழிகாட்டல் அவசியம் வேண்டும் தனியாக எல்லாம் உட்கார்ந்து தியானம் செய்தால் மெண்டல் ஆகிடுவம்.... எனக்கு நித்தியனந்த சுவாமிஜி சரியாக படுகிறார்.. நான் அவருடைய சீடர் ஆகலாம் என இருக்கன்... :lol: :lol:

எனக்கும் அது தான் நீண்ட நாள் கனவு தோழர்............

:D :D :icon_idea:

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மா என்றால் என்ன?

 

ஐயாம் டோட்டலி கன்பூஸ்டு ...முக்திய கொடுக்க கூடிய கடவுள்கள்  இரண்டு ஒன்று  வில்வ இலை

 

மற்றோன்று துளசி இலை

உலக பொது நன்மை கருதிதான் இணைக்கிறோம்  மரணம் எப்படியானதாக இருக்கம் ஏன்று விஷத்தை வேண்டி விரும்பி சாப்பிட்ட தத்துவ அறிஞர்கள் உண்டு.... இறந்த பிறகு அடுத்த நிலை என்ன என்று உங்களுக்கு தெரியுமா ?உண்ணா நிலை இருந்து உயிர் துறந்த தோழர் தீலிபனுக்கு தெரியுமா..? அவர் தமீழீழ தேசம் விடுதலை அடைவதை வானத்தில் இருந்து காண்பேன் என்று சொன்னார்.. சாதாரணமாக ரோட்டில் திரிபவர்களுக்கு அது தெரியுமா ?

டிஸ்கி :

ரெல் மீ  ரெல் மீ உங்களின்ட மிருந்து ஆன்மா உயிர் குறித்து  மேலதிகமான தகவல்களை  பெற விரும்புகின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.hotstar.com/tv/hara-hara-mahadeva/10026/parvati-heads-for-amarnath/1000156194

நன்றி :

ஆட் ஸ்டார் ..

 

ஆன்மா குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்க.. ஏன்னா இறந்ததற்கு  அப்புறம் நமளின்ட கதி குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கடப்பாடு உள்ளது.. ஏனைய இஸ்லாம்  மற்றும் சிங்களம் அனைவரும் வந்து கருத்து எழுதுங்க பிளீஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

krishna_arjun.jpg

 

கர்மயோகம் ..

அது என்னங்க கர்ம யோகம் ..??  கர்மயோகம் என்பது உங்களை சந்நியாசியாக போகவும் சொல்லவும் இல்லை!! கோயில் கோயிலாக சுற்றவும் சொல்லவில்லை .!! நீங்க உங்கள் இடத்திலே இருக்கலாம் . ஆனால் மனது மட்டும் இறைவனிடத்தில் இருக்க வேண்டும் ...அதாவது வெளியால் நடப்பதை வெளியால் பார்த்து கொண்டு மனது மட்டும் இறைவனிடத்தில் இருக்க வேண்டும்  ..அதாவது உள்ளுக்குள்ள சந்நியாசி வெளியாள சுகவாசி..

டிஸ்கி:


நம் நிகழ்வாழ்வில் ஒருவர் அப்படி இருக்கமுடியுமா ? கர்மயோகத்தால் முக்தியடைந்த ஜனக மகராஜா  கதையை கீதை காட்டும் பாதையில் விவேகனந்தர் சுட்டி காட்டுகிறார்.. அவரின்ட வயல் நிலத்தில் கிடைத்த குழந்தைக்கு மாகாலட்சுமிக்கு உண்டான அத்தனை அம்சங்களையும் காண்கிறார் (சீதை) ஆனால் ஐந்து பைசா கூட சம்பாரிக்கவில்லை .. தத்தெடுத்த பின்னரும் ..திருமணம் செய்த பின்னரும்.. தன் மகள் காட்டில் ராமனோடு உலவுகிறாள் என்று கவலைபடவும் இல்லை..அவர் அவராகத்தான் பிறந்தார் .. வாழ்ந்தார் ..செத்தார்..


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 http://www.hotstar.com/tv/hara-hara-mahadeva/10026/mahadeva-unites-with-parvati/1000156565

 

மேற்கண்ட சீரியலை எல்லாரும் பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறன் ..

இதில்  சிவனாக நடித்த வினய்கோ அல்லது பார்வதியாக நடித்த பிரியங்காவிற்கோ அல்லது மகாவிஸ்ணுவாக நடித்த அரியன் ராஜ் ஆக இருக்கட்டும் அது அவர்கள் தொழில் ....நமக்கு மறு பிறவி கருத்துகள்தானே முக்கியம் ..

#முதலில் கங்கா தேவி பூமிக்கு வரும் முன் என்ன சொல்கிறார்.. ?

சரி நீ சென்று வா.. இனி பூமிக்குள் வர இறக்கும் சண்டைகளே!! இந்த தண்ணீரால்தான் வர போகுது என்கிறார்.. !!அப்போ சிவபெருமான் சொன்னதுபடி பெட்ரோல் டீசலும் அவரின்ட கணக்கு படி தண்ணீராகத்தான் இருக்க முடியும்.. !!உண்மையிலே காவிரி/சிறுவாணி/பாலாறு/முல்லைபெரியாறு விடயத்தை பார்க்கும் போது அது உண்மை என்று தோன்றுகிறது ..!!

#இரண்டாவது விடயம்: அன்பு என்றால் என்ன  ? பார்வதி தேவி கேட்கிறாள்:
இதற்கு அவர் சொல்வது என்ன? நீ ஏன் மறுபடி மறுபடி என்னை அடைய வேண்டி எப்படி இறந்து இறந்து பிறக்கிறாய் ? என்பதுதான்.

டிஸ்கி:
கூர்ந்து கவனியுங்க...! சிவபெருமான் பார்வதிக்கு காட்சியளிக்கும் நேரத்தில் மூன்று பிறவிகளின் பேர்களை  சொல்லி அழைக்கிறார் .. அதில் அவர் அதில் கண்ணை திறந்தது எது..?

அ ) உமா
ஆ) சதி
இ) அபர்ணா
ஈ) பார்வதி

டிஸ்கிக்கு டிஸ்கி :

தெய்வங்களுக்கு ஓகே ..

Quote

மறுபிறவி மனுசனுக்கு தாங்காது குமாரு

இன்னும் பல மறுபிறவி குறித்த கருத்துக்கள் தொடர்ச்சியாக வர இருக்கின்றன.. 

விரும்பாதவர்கள் துன்பத்தை பொறுத்தருள்க ..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊதாங்குழல் தத்துவம் ..

அது என்னங்க ஊதங்குழல் தத்துவம் .?

 மண்பானை அடுப்பு இருக்கு .. அதற்கு மேல புரியாணி குண்டானும் இருக்குது .. நன்றாக விறகு பற்றி எரிய சிறிய இரும்புகுழல் கொண்ட பைப்பு  அல்லது உள்ளே ஓட்டை உள்ள மரக்குச்சியை பயன்படுத்தி நம்முடைய காற்றை முக்கினால் அடுப்பு நன்றாக எரியும் .. சரி நாம் விடயத்திற்கு வருவம் .. கீழே உள்ள அடுப்புதான் பிரம்மம் .. அதாவது ஊத ஊத அதில் பறக்கும் நெருப்பு துகள்கள் உயிர்களாக பிறக்கின்றன....ஆனால் அடுப்பின் மேல் இருக்கும் குண்டான் (பாத்திரத்தில்) கோழி அல்லது எதாவது கேரட்டு  பீட்ரூட் வேகிறது .. அதாவது கீழ ஒன்று பிறக்கிறது மேலே ஒன்று இறந்து வேகிறது (தாவரங்களுக்கும் ஒரு அறிவு இருக்கப்பா)

நாம தத்துவ விவாதற்கு வருவம் :

பூனைகளின் எண்ணிக்கை கணக்கெடுத்து அதற்கு ஏற்ப எலிகளை பிறக்க வைக்கிறான் பாம்புகளை கணக்கெடுத்து கீரிகள்  பிறக்கின்றன.. மனிதனை கணக்கெடுத்து அதற்கு எதிராக எந்த உயிரினங்கள் பிறக்கின்றன ? ஒன்றுமே கிடையாது.. மனிதனுக்கு எதிராக மனிதனே  பிறக்கிறான்..

கலி தேவன் வரங்கேட்டது :


கலி காலத்தில் மனிதன் நாசமாக வரங்ககேட்டது ஒன்று மது  மாது சூது மற்றும் நோய் .. இதெல்லாம் போதாது லட்சுமியை (ஆதாங்க காசு)அளிக்க வேண்டும் என்று கேட்டனாம் ..உண்மையில் அதான் பொய் பிராடு மக்களையெல்லாம் இன்றுவரை காப்பாற்றி வருகிறது

டிஸ்கி :

நாம மறுபிறவி குறித்த விவாத்ததிற்கு வருவம் .. பிறவிகள் நமக்கு வந்து கொண்டு உள்ளது .  ஆனால் ஊதாங்குழல் நாங்களா நீங்களா என்று சைவமும் வைஸ்ணமும் அடித்து கொண்டுள்ளது .. அதாவது இருக்கிறதில் இருந்துதான் இல்லாதது வரமுடியும் என்பது அவர்களின்ட கருத்து .. ஆனால் எதிர்தரப்பினரின் கருத்தோ நாங்கதான் அல்ரெடி எல்லா இடத்திலயும் இருக்கிறம் . அதெப்படி புதுசா வரமுடியும் என்பது ..? அதாவது கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்தா/ பிரம்மம் ஒன்றுதான் அதை சுகர் முதலான முனிவர்களே தொட்டு பார்க்க பயந்து ஓடிவிட்டார்களாம் ..

டிஸ்கிக்கு டிஸ்கி :

ஆதி சக்தி மற்றும் வாசுதேவன் அதாவது சைவம் மற்றும் வைஸ்னாவம் மறுபிறவி குறித்து நமக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன..

அது குறித்து நாளை விரிவாக பதிவிட போகிறம் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவன் வேண்டுமென்றாலும் உலகத்தை படைத்துவிட்டு போகட்டும்,,
டிஸ்கி
அட மண்ட கசாயினி எங்களை ஏன் மறை கழற வைக்கிறீங்க.. அடபோங்கப்பா..

13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எவன் வேண்டுமென்றாலும் உலகத்தை படைத்துவிட்டு போகட்டும்,,
டிஸ்கி
அட மண்ட கசாயினி எங்களை ஏன் மறை கழற வைக்கிறீங்க.. அடபோங்கப்பா..

நன்றி  z டிவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மா குறித்த அடிப்படை பார்வை :

நாய்களுக்கும் இருக்கு ...நமக்கும் இருக்கு... அதாவது 5 அறிவோ அல்லது ஆறாவது அறிவோ ஆனால் தெய்வங்கள் மகிழ்வது எப்போது..?

அது எவனுக்கும் தெரியாது .. நீங்களும் தான் தினமும் பூஜை செய்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவம் . நீங்கள் நினைத்து கொள்வீர்கள் தெய்வம் மகிழ்ந்து விட்டதென்று . ஆனால் உண்மை அதுவன்று .. ஒரு வெள்ளகெண்ணையும் கிடையாது ..மகாபலி சக்ரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்த போது சிவன் கோயில் எரியும் எண்ணையை திருடி தின்பதற்காக தினமும் வருவானாம் .. அதை சிவனும் போனால் போகுது என்று கண்டு கொள்ளவில்லை .. ஆனால் ஒரு நாள் இடி... மின்னலுடன் மழை ... அதிக காற்று  .. தீபம் அணையும் நேரத்தில் திருட  வந்த எலி.. சற்றே வாலை அசைத்து போட்டது  அந்த தீபம் எரியும் திரியை நோக்கி..!!அந்த எலி வாலின் புண்ணியத்தால் தீபம் மறுபடியும் கொழுந்து விட்டு எரிந்தது.. அக மகிழ்ந்த சிவன் . அந்த எலிக்கு அடுத்த பிறவியில் சக்ரவர்த்தியாக பிறக்க வைத்து  3 உலகங்களையும் ஆண்டு முக்தி அடையவைக்கிறார்..

அதே போல பூஜை அபிசேகம் எதுவும் இன்றி பல காலம் கிடந்த சிவலிங்கம் .. அதன் அருகில் ஒரு வில்வமரம் .. அதன் மேல் ஒரு குரங்கு அங்கும் இங்கும் சேஸ்டை ஆடியது .. ஆனால் அதற்கே தெரியாது நமக்கு ஒரு பெரிய வரம் கிடைக்க போகுது என்று .. அது ஆடிய சேஸ்டையால் ஒரே ஒரு வில்வ இலை சிவனின் லிங்கத்தின் மீது விழுந்தது.. அப்புறம் என்ன ..? அதை உங்க பார்வைக்கே விட்டுவம்..


டிஸ்கி :

சரி...


உங்களுக்கு ஞான மார்க்க்கதிலும் முக்தி சிக்கவில்லை..
பக்தி மார்கத்திலும் கடவுள் சிக்கவில்லை..
அப்போ முக்தி அடைய என்னதான் வழி .. ?

பவுத்தமும் சமணமும்

Mahamasthakabhisheka.jpg

 

நீங்கள் உங்களையே துறந்துவிடுவதுதான் ஒரே வழி .. அதாவது பாவமும் புண்ணியம்  சம அளவில் இருந்தாலொ அல்லது இரண்டுமே இல்லாது ஒரு நிலையில் இருந்தாலோ  கட்டாயம் முக்தி நிச்சயம்.. அதைத்தான் பொளத்தமும் சொல்கிறது சமணமும் சொல்கிறது .. இது கட்டாயம் ஒரு நல்ல தத்துவம்.. நாம ஏன் அடுத்தடுத்து பிறக்க வேண்டும் ? நாமளே கோவணாடி ஆகிவிடுவம் என்று சமணர்கள் சுற்றுகிறார்கள் ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பது இரண்டுக்கும் பொதுமையான( பவுத்தமும் சமணமும்) ஒன்று  ஆனால் பொளத்தர்கள் கதைதான் வில்லங்கமாக  உள்ளது .. அசோகர் மகன் மகேந்திரன் சங்கமித்திரை  வரை ஓக்கே.. இதில் குறுக்குசால் வெட்டியது யார்  ..? கனிஸ்கர் ... கீனயானம் கோணயானம் என்று பிரித்து போட்டார்.. அடபோங்கப்பா... நாம ஆன்மா குறித்த நல்ல தகவல்களோடு அடுத்து சந்திப்பம் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.hotstar.com/tv/hara-hara-mahadeva/10026/lord-vishnu-performs-the-ceremony/1000157043

கடவுள் எல்லாம் ஒன்றாகி போட்டங்கள்  ஆனால் மனுசன் ... ??

டிஸ்கி :

நம்பள பிறக்கவைக்கிறதுக்கு இவுங்க யார் ? ரைட்ஸ் எங்க இருந்து வருது ? எவ்வளவு ரத்த  களரி ..

நமக்கு இன்னும் ஆராய்ச்சி செய்யவேண்டி கிடக்கு ..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் ஊசலாடுகின்றது அடுத்து கருவறையா அல்லது கல்லறையா என்று.... வந்து கவனியுங்கள் புரட்சி .....!  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.