Jump to content

வாழ்க்கைப்பாடம் ( படித்ததும் பகிர்வும் )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையைக் கண்டு

பயந்தேன்!! அதன்

வசந்தத்தை அனுபவிக்காத

வரை!!

அன்பைக் கண்டு

பயந்தேன்!! அது என்

இதயத்தில் இருள்

போன்ற கருமையை

நீக்கி, நிகரில்லா

வெளிச்சத்தை வீசும் வரை!!

வெறுப்பைக் கண்டு

பயந்தேன்!! அது

அறியாமை என்று

அறியும் வரை!!

ஏளனங்களைக் கண்டு

பயந்தேன்!! எனக்குள்

சிரிக்கத் தெரியாதவரை!!

தனிமையைக் கண்டு

பயந்தேன்! நான் தனியாக

இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!!

தோல்விகளை கண்டு

பயந்தேன்!! தோல்வியே

வெற்றிக்கு அறிகுறி என்று

உணரும் வரை!!

வெற்றிகளை கண்டு

பயந்தேன்!! வெற்றியே

வாழ்க்கையின் சந்தோஷம்

என்று அறியும் வரை!!

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு

பயந்தேன்!! அவர்களுக்கும்

என்னைப் பற்றிய கருத்துக்கள்

இருக்கும் என்று உணரும் வரை!!

ஒதுக்கப்படுவதைக் கண்டு

பயந்தேன்!! எனக்குள்

தன்நம்பிக்கை வரும் வரை!!

வலிகளை கண்டு

பயந்தேன்!! அது

வளர்ச்சிக்கு தேவை

என்று அறியும் வரை!!

உண்மையைக் கண்டு

பயந்தேன்!! பொய்மையின்

உண்மைகளைப் பார்க்கும் வரை!!

வயதானதை அறிந்து

பயந்தேன்!! வாழ்க்கையில்

பண்பட்டு விட்டேன் என்று

உணரும் வரை!!

நடந்ததை நினைத்து

பயந்தேன்!! அது இனி

நடக்காது என்று

நம்பும் வரை!!

நடக்கப் போவதை

நினைத்து பயந்தேன்!!

நடந்தது எல்லாம்

நன்றாகவே நடந்தது,

நடக்கப் போவதெல்லாம்

நன்றாகவே நடக்கும்

என்று உணரும் வரை!!!

மரணத்தைக் கண்டு

பயந்தேன்!! அது முடிவல்ல

முடிவின் தொடக்கமே

என்று உணரும் வரை!!!

Link to comment
Share on other sites

மிக நல்ல கவிதை நிலாமதி ,

வாழ்க்கையோடு இணைந்த பயங்களையும், அதனிலிருந்து விடுபட்ட மனோதைரியத்தையும் அழகாக, அதே நேரம் தெளிவு பட்ட பண்போடு உரைத்த இக்கவிதையை இணைத்தமைக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் தங்கள் பகிர்வுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரைவாசிக்காலம் பயத்திலேயே முடிந்துவிட்டது போல! :D

கவிதைக்கு நன்றிகள், நிலாமதியக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணத்தைக் கண்டு

பயந்தேன்!! அது முடிவல்ல

முடிவின் தொடக்கமே

என்று உணரும் வரை!!! நல்ல கவிதை அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை அக்கா, வாழ்த்துகள் தொடர, இந்த வயதில் இதை பற்றி யோசிக்க கூடாது...

Link to comment
Share on other sites

பயத்தை பக்குவமாய் பதிந்திருக்கிறீர்கள்

நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சகோதரி .. :D

ஆகா சகோதரிக்கு ஒரு பச்சை குத்தியிருக்கங்காப்பா.. சகட்டு மேனிக்கு கண்ட கவிதைக்கெல்ல்லாம் பச்சை குத்தும் பெருமக்கள்.. இந்த கவிதைக்கு தினமும் பச்சை குத்த வேண்டியது எனது கடமை ஆகிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நிலாமதி அக்கா..நல்ல அர்த்தம்பொதிந்த கவிதையைப் பகிர்ந்ததற்க்கு...

Link to comment
Share on other sites

வலிகளை கண்டு

பயந்தேன்!! அது

வளர்ச்சிக்கு தேவை

என்று அறியும் வரை!!

மிகவும் அருமையாக... வாழ்க்கையின் யதார்த்தங்களை உரைக்கும் வரிகள்.

"படித்ததும் பகிர்வும்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அக்கா.

படித்துப் பெற்றதை பகிர்தல் நன்றே!

பட்டது வலிகள் என நொந்தேன்...!

அவை என் வாழ்க்கை அனுபவமென உணரும்வரை...!! - இனி,

கெட்டதென்று எதுவுமில்லை என் வாழ்வின் எல்லைவரை!!!

என் வாழ்த்துக்களும் நன்றிகளும்! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.