Jump to content

சொல்லடை ( சொலவடை )


Recommended Posts

எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . இந்தப் பதிவானது உங்கள் ஒத்துளைப்பும் , ஆதரவும் இல்லாமல் வாசகர்களைச் சென்றடையாது என்பது நிதர்சனமான உண்மை . முதலில் ஆரம்பித்துவைக்க எனக்குத் தெரிந்த சொல்லடைகளைத் தருகின்றேன் , எங்கே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்!!!!!!!!!!!!!!!!!

*************************************************************

1 .அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்

2 . ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சி போச்சாம் மண்ட.

3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. :wub:

இது ஓக்கேயா கோம்ஸ் அண்ணா??? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிடும் சொல்லடைக்கும்

பழமொழிகளுக்கும் தொடர்புண்டா கோமகன்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம்

2.ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம்

இது சரியோ கோமகன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தவர்கள் மட்டும் ஓ இப்படி எல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்களா என்று சந்தோசப்படலாம்..ஆனால் என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் மேலைத் தேய நாடுகளில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றுவரும் பிள்ளைகளுக்கு இந்த சொல்லடை,சொலவடை பற்றி சொல்லிக் கொடுப்பதோ இல்லை புரிய வைப்பதோ கொஞ்சம் கஸ்ரம்..

Link to comment
Share on other sites

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. :wub:

இது ஓக்கேயா கோம்ஸ் அண்ணா??? :rolleyes:

அதே...................... :D:D .

1.சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம் .

2.ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம் .

இது சரியோ கோமகன் அண்ணா

இதே கருத்தைத் தழுவி இன்னும் இரண்டு மூன்று சொல்லடைகள் உள்ளன . முயற்சி செய்யுங்கள் வாதவூரான் :):) .

Link to comment
Share on other sites

நீங்கள் குறிப்பிடும் சொல்லடைக்கும்

பழமொழிகளுக்கும் தொடர்புண்டா கோமகன்???

மேலோட்டமாகப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்று போலவே தெரியும் விசுகண்ணை . பழமொழிகள் சொல்லவந்த செய்தியினைச் சுருக்கமாகவும் , தெளிவாகவும் , சுவையுடனும் சொல்லப்படுவன . அத்துடன் அது சார்ந்த சமூகத்தின் அனுபவ முதிர்ச்சியையும் , அறிவுக்கூர்மையையும் எடுத்துச் சொல்கின்றன :):):) .

Link to comment
Share on other sites

வயது வந்தவர்கள் மட்டும் ஓ இப்படி எல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்களா என்று சந்தோசப்படலாம்..ஆனால் என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் மேலைத் தேய நாடுகளில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றுவரும் பிள்ளைகளுக்கு இந்த சொல்லடை,சொலவடை பற்றி சொல்லிக் கொடுப்பதோ இல்லை புரிய வைப்பதோ கொஞ்சம் கஸ்ரம்..

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் யாயினி . ஆனால் , இங்கும் இடியம்ஸ் ( idioms ) , புறோவேவ் (proverbs ) என்ற பகுதிகள் இளயவர்களுக்கு அந்தந்த மொழிகளில் இருக்கின்றன தானே . முடியாது என்ற நினைத்திருந்தால் இவ்வளவுதூரம் வந்திருப்போமா யாயினி :):):) ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.உடையார் வீட்டு மோருக்கு அகப்பை கணக்கில்லையாம்

2.ஒளிக்க தெரியாதவன் தலையாரி வீட்டுக்கை ஒளிச்சானாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடத் தெரியாதவள், கூடம் கோணல் எண்டாளாம்!

உழுகிற மாடு, ஊருக்குள்ள விலை போகும்!

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சியில தெரியும்!

போதுமா, கோமகன்? :D

Link to comment
Share on other sites

செல்லடிக்குப் பயந்து ஓடிப்போனவன்....... சொல்லடைக்கு வந்து சல்லடை போட்டானாம்!

எப்புடி...................... ? :lol: :lol: :lol:

கோ...! இது நம்ம சொந்த வடை! :lol:

ஜாலியாக இருந்த மனநிலையில் மனதில் வந்த சொல்லடை!

தப்பாக நினைக்கவேண்டாம்!

பழைய சொல்லடைகளை...... எத்தனை நாளைக்கு கேட்பது...?!

புதிதாய் நாம் எதையாவது சொன்னால்தானே....... நம் பூட்டப் பிள்ளைகளுக்கும் ஏதாவது மிஞ்சியிருக்கும்! அதனால்தான்...... இப்படி! :)

என்ன கோ? ஓகேதானே? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லம் காய்ச்சுறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்.

முக்கி முக்கி குத்தினவளுக்கு மூண்டாம் எட்டிஎட்டி பாத்தவளுக்கு எட்டாம்.

நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணிதான்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

இரும்பு புடிச்ச கையும் சிரங்கு புடிச்ச கையும் சும்மாய் இராது.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாளைக்கு.

கிட்ட உறவு முட்டப் பகை.

ஆடு பகை குட்டி உறவு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்....

வேலைக் கள்ளிக்குப் பிள்ளைப் பராக்கு..

ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கவேணும்

பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்கவேணும்

தானாடாவிட்டாலும் தசையாடும்

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தெரியும்..

எட்டாப்பழத்துக்கு கொட்டாவி விடாதை..

கழுதைக்குத் தெரியுமோ கற்பூர வாசனை...?

:D :D

____________________________________________

கோமகன் அண்ணா கலக்கல்த்திரி... தொடருங்கோ...

Link to comment
Share on other sites

எல்லாரும் ஏறி விழுந்த குதிரயில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாரம்

Link to comment
Share on other sites

3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

கோமகன் இது வைகுண்டம் போனானாம் என்று வர வேண்டும் என நினைக்கிறேன் .எனக்கும் சரியாக தெரியாது .பிழை என்றால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மிதித்துக் குஞ்சு சாவதில்லை!

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு, சக்கர சாமி வந்து, ஜிங்கு... ஜிங்கு.... எண்டு ஆடிச்சாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு எதற்கு போர்த் தேங்காய் :lol: [இது சரியோ தெரியவில்லை கேள்விப்பட்ட மாதிரி இருக்குது]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:

ஏனப்பா

பேச்சுவார்த்தை இழுக்குதா??? :D

Link to comment
Share on other sites

செல்லடிக்குப் பயந்து ஓடிப்போனவன்....... சொல்லடைக்கு வந்து சல்லடை போட்டானாம்!

எப்புடி...................... ? :lol:

கோ...! இது நம்ம சொந்த வடை!

ஜாலியாக இருந்த மனநிலையில் மனதில் வந்த சொல்லடை!

தப்பாக நினைக்கவேண்டாம்!

பழைய சொல்லடைகளை...... எத்தனை நாளைக்கு கேட்பது...?!

புதிதாய் நாம் எதையாவது சொன்னால்தானே....... நம் பூட்டப் பிள்ளைகளுக்கும் ஏதாவது மிஞ்சியிருக்கும்! அதனால்தான்...... இப்படி!

என்ன கோ? ஓகேதானே?

கவுத்திட்டியே ராசா :lol::lol: . இதுவரை யாருமே சொல்லாத புலம்பெயர் சொல்லடை . காப்புரிமையை இப்பவே தயார் பண்ணுங்கோ :D:D:icon_idea: .

Link to comment
Share on other sites

வெல்லம் காய்ச்சுறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்.

முக்கி முக்கி குத்தினவளுக்கு மூண்டாம்  எட்டிஎட்டி பாத்தவளுக்கு எட்டாம். :lol:   :lol::icon_idea: .

   நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணிதான்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

இரும்பு புடிச்ச கையும் சிரங்கு புடிச்ச கையும் சும்மாய் இராது.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு  நாளைக்கு.

கிட்ட உறவு முட்டப் பகை. ( பழமொழி )

ஆடு பகை குட்டி உறவு..  ( பழமொழி )

மிக்கநன்றிகள் குசா :)   :)  .

Link to comment
Share on other sites

3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

கோமகன் இது வைகுண்டம் போனானாம் என்று வர வேண்டும் என நினைக்கிறேன் .எனக்கும் சரியாக தெரியாது .பிழை என்றால் மன்னிக்கவும்

நீங்கள் சொன்னது சரியே நிகே தவறுக்கு வருந்துகின்றேன் :):):) .

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

நீங்கள் சொல்வது சரியே விசுகண்ணை பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் சில பழமொழிகளையும் இணைக்கின்றார்கள் :):) .

Link to comment
Share on other sites

சொல்லால் சொல்லடை தந்த கள உறவுகளான ஜீவா , விசுகு , வாதவூரான் , யாயினி புங்கையூரான் , கவிதை , குமாரசாமியண்ணை , சுபேஸ் ,யாவரும்நலம் , நிகே , தமிழ் சிறி , ரதி , சஜீவன் , ஆகியோருக்கு மிக்கநன்றிகள் :):):) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.