Jump to content

சொல்லடை ( சொலவடை )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லடை என்பது... ஊர்ப்பேச்சு வழக்கு.

ஒவ்வொரு கிராமம், நகரம், மாநிலம் எல்லாவற்றுக்கும் கேள்விப்படாத... சுவராசியம் மிக்க வசனங்கள்.

இதனை.. மறைந்த முன்னாள் நடிகை காந்திமதியின் படங்களில் அதிகமாக அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:

பயங்கர தத்துவம் நிறைஞ்ச வசனம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!! :D

Link to comment
Share on other sites

சொல்லடை என்பது... ஊர்ப்பேச்சு வழக்கு.

ஒவ்வொரு கிராமம், நகரம், மாநிலம் எல்லாவற்றுக்கும் கேள்விப்படாத... சுவராசியம் மிக்க வசனங்கள்.

இதனை.. மறைந்த முன்னாள் நடிகை காந்திமதியின் படங்களில் அதிகமாக அவதானிக்கலாம்.

உண்மை தமிழ் சிறி . இலகுவாக விளக்கியதிற்கு மிக்க நன்றிகள் :) .

"கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம்."

இது சரியா கோமகன்?

மிகவும் சரி . தம்பி உடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழிக்கு ஒப்பானது . மேலும் , ஒன்றுடன் நில்லாது மேலும் தொடர வாழ்த்துக்கள் கல்கி :) .

பயங்கர தத்துவம் நிறைஞ்ச வசனம்.

அதே ................. :lol: .

யங்கி போடாத, சீலைக்காரி... கட்டினாளாம் பாவாடை.

இதுக்கு அர்த்தம் சொன்னால் நாங்களும் அறியலாம் தானே தமிழ் சிறி :lol: .

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!!

எண்டாலும் என்ரை கூட்டாளியை இப்புடி கடுப்பேத்திறது எனக்குத் துண்டாய்ப் பிடிக்கேல :lol: .

Link to comment
Share on other sites

இந்த சொல்லடைகள் தப்பான நோக்கில் எழுதப்படவில்லை .

மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைப் பிடிச்சு சிரைச்சானாம் .

ஆனான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அழ , சொத்தியாடு ஒண்டு *********** க்கு அழுதீச்சுதாம் .

அண்டமா முனிவரெல்லாம் அடங்கினாரம் ஓமக்குண்டத்தில . ( முன்னைய காலத்தில் வேதவிற்பனர்களது அறிவு , திறமை யாவும் மக்களுக்கு நன்மை பயக்காது , அரசர்களது நன்மை கருதி யாகசாலையில் சிலவழிந்ததைக் குறிக்கின்றது ) .

Link to comment
Share on other sites

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறை

பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை

இளகின இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடிப்பானாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!! :D

தமிழின் பால் கொண்ட அன்பால் திரிவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கரிசனையிலும் ஓரு தொகுப்பை அல்லது வடிவத்தை எழுதும்போது அல்லது வாசிக்கும்போது அது பற்றிய தெளிவும் அதை மற்ற சந்ததிக்கு கடத்தும்போது கலப்பில்லாமலும் இருக்கணும் என்கின்ற ஆதங்கத்திலுமே

மீண்டும் மீண்டும் இங்கு கேள்வி எழுப்பினேன்.

இங்கு பதியப்பட்ட பல கருத்துக்களும் எல்லோரும் குழம்பிப்போயுள்ளதையே குறித்து நிற்கின்றன.

பள்ளியில் (மகாவித்தியாலயம்) படித்ததைவிட கூட வருடங்கள் வெளியில் வாழ்ந்துவிட்டோம். எனவே எது எது என பிரித்துப்பார்க்கும் சக்தி குறைவடைந்துள்ள நிலையிலேயே இந்தக்கேள்வி எழுகிறது.

Link to comment
Share on other sites

செலவடைக்குள் கிரமங்களில் பாவிக்கப்படும் சந்தர்பத்திற்கேற்ப உவமான வசனநடை மட்டுமல்லாது விடுகதைகளும் செலவடைக்குள் அடங்கும். உதாரணம் முட்டு வீட்டுக்குள் தட்டுப்பலகை. விடை நாக்கு ஆனால் இந்த விடுகதை கேள்வி செலவடைக்குள் அடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேழ்விப்பட்ட சில கல்லடி வேலனின் சிலேடைகள்.இதில் துப்ப்படாது என்று எழுதிஇருந்துதாம்.அவர் அதில் நன்றாக துப்பிவிட்டு கேட்டாராம்.இதில் துப்பினால் படுகுது தானே என்று. :lol:

ஒரு சாப்பாட்டுக்கடையில் கேட்டாராம் சாப்பிட குழம்புமோ என்று.அதற்க்கு கடைக்காரன் ஓம் என்று சொல்ல சாப்பபிடும் போது குழம்பும் என்றால் தான் சாப்பிட வில்லை என்று.

Link to comment
Share on other sites

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

நொங்கு திண்டவன் ஓடிப் போய்ட்டானாம்... அதை நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டானாம்...!

( சாமி... அப்பு... ராசா.... !!! நான் நொங்கு திண்டவனுமில்ல... அதை நோண்டித் திண்டவனுமில்ல...! அந்தப் பனங்காட்டுப் பக்கமாப் போனவன்! என்னப்போயி............ :( :o :lol: :lol: :lol:)

Link to comment
Share on other sites

நொங்கு திண்டவன் ஓடிப் போய்ட்டானாம்... அதை நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டானாம்...!

( சாமி... அப்பு... ராசா.... !!! நான் நொங்கு திண்டவனுமில்ல... அதை நோண்டித் திண்டவனுமில்ல...! அந்தப் பனங்காட்டுப் பக்கமாப் போனவன்! என்னப்போயி............ :lol:)

ஏன் ராசா................... :o இளனி குடிச்சது ஆரோ கோம்பை சூப்பினது ஆரோ :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

:lol::D:icon_idea: .

தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறை

பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை

இளகின இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடிப்பானாம். :lol::D:icon_idea: .

மிக்க நன்றிகள் சாத்திரி :) .

Link to comment
Share on other sites

செலவடைக்குள் கிரமங்களில் பாவிக்கப்படும் சந்தர்பத்திற்கேற்ப உவமான வசனநடை மட்டுமல்லாது விடுகதைகளும் செலவடைக்குள் அடங்கும். உதாரணம் முட்டு வீட்டுக்குள் தட்டுப்பலகை. விடை நாக்கு ஆனால் இந்த விடுகதை கேள்வி செலவடைக்குள் அடங்கும்.

அருமை . புதுமையான பார்வை . பதிவை நேராக்கிய சாத்திரிக்கு மிக்க நன்றிகள் :):) .

நான் கேழ்விப்பட்ட சில கல்லடி வேலனின் சிலேடைகள்.இதில் துப்ப்படாது என்று எழுதிஇருந்துதாம்.அவர் அதில் நன்றாக துப்பிவிட்டு கேட்டாராம்.இதில் துப்பினால் படுகுது தானே என்று. :lol:

ஒரு சாப்பாட்டுக்கடையில் கேட்டாராம் சாப்பிட குழம்புமோ என்று.அதற்க்கு கடைக்காரன் ஓம் என்று சொல்ல சாப்பபிடும் போது குழம்பும் என்றால் தான் சாப்பிட வில்லை என்று.

அருமை சஜீவன் . கல்லடி வேலரைப்பற்ரி நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன் :D:D:icon_idea: .

Link to comment
Share on other sites

தப்பான நோக்கில் எழுதப்படவில்லை .

வந்த புதிசில வண்ணான் வேட்டியை கரைகட்டி வெளுப்பானாம் .

இவை எனது புலத்து அனுபவங்களால் வந்த சொல்லடைகள் :

கபே குடிக்கிறவனுக்கு ஒரு யூறோ . கபே போட்டவனுக்கு முதலாளி குடுத்தது ஐம்பது யூறோவாம் .

இறைச்சி வாட்டினவன் வெக்கையில வேக , அதை ருசி பாத்தவன் பேர் செப் ஆம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேசன் வெற்றி

ஆள் அவுட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிச்சாத் தாங்க மாட்டாய் நாலு மாசம் தூங்க மாட்டாய்..

இது சொலவடையோ சினிமாவடையோ தெரியேல்ல...நம்ம விசய் அண்ணண் ஒரு படத்தில சொன்னாங்ணா... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

உண்ணாச்சொத்து மண்ணாகும். உடாப்புடவை வண்டூதும்.

உறுட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதைத்தின்றவன்

வண்டியன் ஆவான்

Link to comment
Share on other sites

கண்டதைத்தின்றவன்

வண்டியன் ஆவான்

ஆ ..........................வந்திட்டுது தொடருங்கோ :D:D:icon_idea: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேசன் வெற்றி

ஆள் அவுட்

வருத்தம் சுகம் ஆனால் ஆள் தப்பாது? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.