Jump to content

சொல்லடை ( சொலவடை )


Recommended Posts

ஆபத்துக்கு உதவாத நண்பனும் , சமயத்துக்கு உதவாத பணமும் ஒன்றுதான் .

விளக்கம்:

ஒரு விடையத்தில் ஒன்று முக்கியத்துவம் இல்லாமல் போனால் குறிக்கச் சொல்லலாம் .

ஆயிரம் கொடுத்து யானை வாங்கினாலும் அது பல்லு மினுக்குதா ?

விளக்கம்:

ஒரு விடையத்தில் ஒருவர் தனது சுயத்தை இளக்கும் பொழுது சொல்லலாம் .

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply

ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடித்தால் நான் பிணக்காடாய் வெட்டுவேன் என்று முடவன் சொன்னானாம் .

விளக்கம் :

வெறும் வாய் சவாடல்களையும் வெத்து வேட்டுக்களையும் விட்டுக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து சொல்வது .

கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வரத்தான் வேணும் .

விளக்கம் :

ரகசியம் ஒருபோதும் நெடுங்காலத்திற்கு இருக்காது அது ஏதோ ஒர் நேரத்தில் அது ஒருவகையில் வெளிப்புடும் .

Link to comment
Share on other sites

ஆளை ஏய்க்குமாம் நரி அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு .

விளக்கம் :

ஒருவருடைய திறமையை மற்றவர் மதிக்கவேண்டும் . மதிக்காதவர்களை சொல்லப் பயன்படும் .

ஆத்திலை போனாலும் போவனே ஒழிய தெப்பக்காறனுக்கு காசு குடுக்கமாட்டன் எண்டானாம் .

விளக்கம் :

இலகுவாக காசு கொடுத்து செய்யவேண்டிய வேலையை இலவசமாக செய்ய எதிர்பார்ப்பவர்களை சொல்லச் சொல்லப்டும் .

Link to comment
Share on other sites

யானை அழிப்பது தெரியேலையாம் ஆடு அழிக்கிறது தெரியுதாம் .

விளக்கம் :

பெரிய பிரச்சனைகளை விட்டு விட்டு சிறிய அற்ப பிரைச்சனைகளை பூதாகரப் படுத்துவதைச் சொல்லலாம் .

யானை ஒரு குட்டி போடுறதும் பண்டி பல குட்டி போடுறதும் சரியாகுமோ ?

விளக்கம் :

ஒரு வேலையை பலனின்றி பல வழிகளில் செய்வதைவிட ஒரே வழியில் நிதானத்துடன் செய்வதே சிறந்தது .

Link to comment
Share on other sites

யானைக்கு கோபம் வந்தால் வீட்டைப் பிளக்குமாம் , பூனைக்கு கோபம் வந்தால் புல்லுப் பாயை விறாண்டுமாம் .

விளக்கம் :

ஆத்திரத்தின் விளைவு வலியவருக்கும் மெலியவருக்கும் ஒன்றானது .

யானைக்குட்டி கொழுக்கவில்லையே எண்டு உட்கார்ந்து அழுதிதாம் சிங்கக்குட்டி .

விளக்கம் :

போலிக்கு ஒருவரின் வீழ்ச்சியை பார்த்து கவலைப்படுகிறவரைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

யானை கலக்கின குட்டையில கொக்கு மீன் பிடிக்கப் போச்சுதாம் .

விளக்கம் :

திறமையானவர்களின் வெற்றியில் திமையற்றவர்கள் பலன் அடைவதைக் குறிக்கும் .

யானை தம்பட்டம் அடிக்க ஓனாய் ஒத்து ஊதீச்சுதாம் .

விளக்கம் :

தமது திறமை மேல் சந்தேகம் கொள்ளம் ஒரு சிலர் திறமையானவர்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

இறைக்கிறவன் இளிச்சவாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடுமாம் .

விளக்கம் :

இரக்க குணமும் இளகியமனமும் உள்ளவர்களிடம் பலர் பலன்களை எதிர்பார்பதைக் குறிக்கும் .

உள்ளங்கை பால்சோறைவிட்டுப் புறங்கையை நக்கினது போலையாம் .

விளக்கம் :

எது முக்கியமோ அதைச் செய்யாமல் விட்டு முக்கியமில்லாததைச் செய்வதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

யானையும் யானையும் தேய்க்க கொசுவுக்குப் பிடிச்சிதாம் சனி .

விளக்கம் :

வலிமையானவர்கள் மோதிக்கொள்ளும் பொழுது இடையில் இருக்கும்மெலியவர்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் .

உழுகிற காலத்திலை ஊர் சுத்திப்போட்டு அறுக்குற நேரத்திலை அரிவாளோடை போனானாம் .

விளக்கம் :

செய்யவேண்டிய நேரத்தில் வேலைகளைச் செய்யாது பின்பு ஒப்புக்காக நடிப்பதைக் குறிக்கும்.

Link to comment
Share on other sites

இடுப்பில ரெண்டு காசு இருந்தால் சுருக்கெண்டு ரெண்டு கதை வருமாம் .

விளக்கம் :

பணம் தருகின்ற ஆணவத்தால் தாறுமாறாக கதைப்பவர்களைக் குறிக்கும் .

எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவாம் மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவாம் .

விளக்கம் :

ஏழைக்கு ஏழையே துணையிருப்பான் என்பதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவனும் செவ்வாயாய்ச் சிரைப்பானாம் .

விளக்கம் :

ஒருவர் ஒழுக்கம் கடமை தவறாது இருந்தால் தவறுகள் ஏற்பட வழி இல்லை .

உயிரோடை இருக்கேக்கை ஒரு முத்தத்துக்கு வக்கில்லை செத்தாப்பிறகு கட்டிக்கட்டி முத்தம் கொடுத்தாளாம் .

விளக்கம் :

ஒருவரின் அருமை தெரியாது தூற்றி விட்டு இல்லாதபோது ஒப்புக்குப் புகழ்பாடுபவர்களைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

எட்டின மட்டும் வெட்டுமாம் கத்தி எட்டா மட்டும் வெட்டுமாம் பணம் .

விளக்கம் :

எந்தப் பிரச்சனையையும் காசு தீர்த்து வைக்கவல்லது என்பதைக் குறிக்கும் .

ஊர் பண்டம் உமியாம் தன்ரை பண்டம் தங்கமாம் .

விளக்கம் :

இலவசமாக கிடைக்கின்ற பொருளை ஊதாரித்தனமாக செலவளித்தலைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காதாம் .

விளக்கம் :

ஒரு சில பழக்கங்களை மனதில் கொண்டவர்கள் வாழ்நாள் முழுக்க அதை மறக்கமாட்டார்கள் .

உடையார் புக்கைக்கு அழுகிறாராம் லிங்கம் பஞ்சாமிர்தம் கேக்கிதாம் .

விளக்கம் :

முக்கியமான தேவைகள் இருக்கும்பொழுது முக்கியமில்லாத தேவைகளை முன்னிலைப் படுத்துவதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாளாம்....(அனுபவசாலிக்கு புதியவர்கள் அறிவுரை சொல்வதைக் குறிக்கும்)

வேலீலை போற மட்டத்தேளைப் பிடிச்சு சீலைக்குள்ளை விட்டிட்டு சீலைக்கை போகுது சீலைக்கை போகுது எண்டாளாம்...தேவையல்லாத விடயங்களுக்குள் தலையை நுழைத்து விட்டு அல்லாடுபவர்களைக் குறிக்கும்

Link to comment
Share on other sites

பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாளாம்....(அனுபவசாலிக்கு புதியவர்கள் அறிவுரை சொல்வதைக் குறிக்கும்)

முக்கி முக்கி குத்தினவளுக்கு மூண்டாம் எட்டிஎட்டி பாத்தவளுக்கு எட்டாம்.

வேலீலை போற மட்டத்தேளைப் பிடிச்சு சீலைக்குள்ளை விட்டிட்டு சீலைக்கை போகுது சீலைக்கை போகுது எண்டாளாம்...தேவையல்லாத விடயங்களுக்குள் தலையை நுழைத்து விட்டு அல்லாடுபவர்களைக் குறிக்கும்

கிட்ட முட்ட இதே பாணியில் குமாரசாமியர் ஒரு சொலவடையை ஆரம்பத்தில் சுட்டிருந்தார் . உண்மையில் சில நகைச்சுவையானதும் , நச்சென்று ஏற்றும் வகையானதே . உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் மணிவாசகன் .

Link to comment
Share on other sites

இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .

விளக்கம் :

ஒரு விடையத்தில் பலவீனமானவர் எச்சரிக்கையாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .

உழுகிற மாடு எங்கை போனாலும் ஏரும் கலப்பையும் முன்னுக்கு வருமாம் .

விளக்கம் :

முயற்சியும் திறமையும் ஆர்வமும் உடையவர்கள் எந்த இடத்திலும் எங்கு போனாலும் முன்னேறுவார்கள் .

Link to comment
Share on other sites

குட்டக் குட்ட குனியிறவனும் மடையன் குட்டிறவனும் மடையன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .

விளக்கம் :

ஒரு விடையத்தில் இருபக்கமும் பாதிப்பு வராமல் புத்திசாலித்தனமாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .

இதற்கான விளக்கம் தவறுபோல் உள்ளது.

இரு பக்ககமும் பாதிப்பு வராதே.

பலவீனமானவன் தான் பார்த்து நடக்கணும் என்று தான் வரணும் கோ...

(முள்ளில் விழுந்த சேலை போல......?)

Link to comment
Share on other sites

இதற்கான விளக்கம் தவறுபோல் உள்ளது.

இரு பக்ககமும் பாதிப்பு வராதே.

பலவீனமானவன் தான் பார்த்து நடக்கணும் என்று தான் வரணும் கோ...

(முள்ளில் விழுந்த சேலை போல......?)

தவறுக்கு வருந்துகின்றேன் . சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள் விசுகர் .

Link to comment
Share on other sites

சாப்பிடாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகேலாது .

விளக்கம் :

அவசியத்தைப் பொறுக்கலாம் அத்தியாவசியத்தைப் பொறுக்க முடியாது .

எண்ணைக் குடம் உடைந்தாலும் ஐயோ ! தண்ணீர் குடம் உடைத்தாலும் ஐயோ !

விளக்கம் :

ஒரு பிரச்னையின் அடி ஆழம் தெரியாது பிரச்சனைகளைப் பெரிதுபடுத்துவதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

எரியிற வீட்டை நூக்க கிணறு வெட்ட நாள் பாத்தது போலையாம் .

விளக்கம் :

அத்தியாவசியமான வேலையை செய்வதற்கு தேவையில்லாமல் இழுத்தடிப்பதைக் குறிக்கும் .

எவ்வளவு தான் திண்டாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்குமாம் .

விளக்கம் :

எவ்வளவுதான் நல்லது செய்தாலும் திருப்திப்படாதவர்களைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

ஒண்ட வந்த எலி எழும்பி நிண்டுதாம் அண்டியிருந்த பூனை அவதியாப் பறந்திதாம் .

விளக்கம்:

இரக்கம் காட்டி உதவி செய்ய வெளிக்கிட்டால் , உதவி செய்தவரையே தூக்கிச் சாப்பிடுபவர்களைக் குறிக்கும் .

கஞ்சி வாக்க ஆள் இல்லாட்டிலும் கச்சை கட்ட ஆள் இருக்கு .

விளக்கம் :

உருப்படியாக உதவி எதுவும் செய்யாமல் , உதவி செய்பவர்களிடையே கலகத்தை உருவாக்குபவர்களைச் சொல்லக் குறிக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வயிலிலை உழுது பருத்தி போடப்போறன் எண்டானாம் அப்பன் அதக்குள்ளை பெடி அந்த நூலிலை தனக்கு வேட்டி நெய்து தா எண்டானாம் .

விளக்கம் :

ஒரு முயற்சியின் பலனை அடைய முன்பு அந்தப் பலனைப் பற்றி கற்பனைகளில் மிதப்பதைக் குறிக்கும் .

ஒரு குருவி தீனி தேடுமாம் ஒன்பது குருவி வாய் திறக்குமாம் .

விளக்கம் :

ஒருவரின் வருமானத்தில் பலர் பயனடைவதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

சனிபிடிச்ச நாரை கெளுத்தி மீனைப் பிடிச்சு விழுங்கீச்சுதாம் .

விளக்கம் :

பிரச்சனைகளில் இருப்பவர் மேலும் பிரச்சனைகளில் தானாக விழுவதைக் குறிக்கும்

கொதி தண்ணியில விழுந்த பூனை பச்சைத் தண்ணியைக்கண்டாலும் பயப்பிடுமாம் .

விளக்கம்:

ஒருபிரச்சனையில் பிழையான அனுபவத்தை எடுத்தவர் எல்லா பிரச்சனைகளுக்குமே அதே பார்வையைப் பார்ப்பார்

Link to comment
Share on other sites

செத்துப்போன மாடு உயிரோடு இருந்திது எண்டால் , ஓட்டைச் செம்பாலை ஒம்பது செம்பு பால் கறப்பன் எண்டானாம் .

விளக்கம் :

பிரையோசனம் இல்லாத வீண் வெட்டிப் பேச்சுகள் கதைப்பவர்களைக் குறிக்கும்.

சோத்திலை கிடக்கிற கல்லைப் பொறுக்காதவன் , சொக்கநாதர் கோயில் அத்திவாரக்கல்லை பேர்ப்பன் எண்டானாம் .

விளக்கம் :

முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பெரும் எடுப்பில் கதைப்பவர்களைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்கு சிம்மாசனம் போட்டிச்சிதாம் .

விளக்கம்:

கஸ்ரமான நிலையில் இருந்துகொண்டு வெறும் பட்டிற்காக தகுதிக்கு மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்ய முயலுவதைக் குறிக்கும்

தடவிப் பிடிக்க மயிர் இல்லையாம் அவள்பேர் கூந்தல் அழகியாம் .

விளக்கம்:

திறமைகள் இல்லது புலுடா விட்டப் பெயர் எடுப்பதைக் குறிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.