Jump to content

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு


Recommended Posts

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 பிப்ரவரி, 2012 - 18:01 ஜிஎம்டி

111201170809_sampanthar_tna_304x171_bbc_nocredit.jpg

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் செவ்வி

"ஜெனீவா புறக்கணிப்பு ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு":சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தை த.தே.கூ புறக்கணிக்கும் என்பது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவென்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/02/120226_tnaongenevaboycott.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப்பிளவுகள் வரலாம்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்கணும்

அதுவே இன்றைய தேவை.

Link to comment
Share on other sites

கருத்துப்பிளவுகள் வரலாம்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்கணும்

அதுவே இன்றைய தேவை.

யூதர்கள் மத்தியில் இல்லாத கருத்துப் பிளவா? அவர்களது பாராளுமன்றத்தைப் பார்த்தால், தமிழக சட்ட சபை எவ்வளவோ மேல், ஆனால் தமது நாடு இனம் என்று வரும் போது ஒன்றையும் விட்டுக் கொடுக்க மாட்டர்கள், சம்பந்தன், பிரேமச்சந்திரனுக்கிடைலான பிரச்சனை எவ்வாறு இலக்கை அடையலாம் என்று இருக்கும் வரை அது நல்ல விடயம் தான்

Link to comment
Share on other sites

கருத்துப்பிளவுகள் வரலாம்

கட்சியை பிளவு படுத்தாமல் இருக்கணும்

அதுவே இன்றைய தேவை.

மிகவும் சரியான கருத்துக்கள்.

இங்கே வெல்லவேண்டியது ஒட்டு மொத்த தமிழினத்தின் அரசியல் அபிலாசைகள். அதற்கு வரும் கருத்து வேறுபாடுகளையும் தாண்டி இலக்கை நோக்கி நகரும் பக்குவமும் பொறுமையும் தேவை.

Link to comment
Share on other sites

இன்னமும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. விரைந்து ஒருசிலர் அங்கு சென்று நிலைமைகளை அவதானிக்கலாம். அதே நேரம் சர்வதேச பிரதிநிதிகளை, சர்வதேச ஊடகவியலாளர்களை தனிப்பட்ட முறையில் சந்திப்பதும், சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணங்களை கையளிப்பதும் மிக முக்கியமான நடவடிக்கைகள்.

அதேவேளை, ந. க. தா. ஈ. அரச பிரதிநிதிகளும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சியினரும் தமக்குள்ள பெரும் கடமைகளை உணர்ந்து நேரடியாக சர்வதேச பிரதிநிதிகளை, சர்வதேச ஊடகவியலாளர்களை முறையில் சந்திப்பதும், சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணங்களை கையளிப்பதும் மிக முக்கியமான நடவடிக்கைகள்.

தமிழினப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலி போல செயற்படும் சுமந்திரனும், இந்தியக் காட்டுமிராண்டிகளின் கைக்கூலி போல செயற்படும் சம்பந்தனும் நீண்ட காலமாக எதேச்சாதிகாரமாக செயற்படுவதை கட்டுப்படுத்த ஏனைய உறுப்பினர்கள் தவறியிருந்தனர். அவர்களும் இந்தியப் பயங்கரவாதிகளை மட்டும் நம்பியவர்களாகவும் இருந்திருந்தனர். அதன் பலன் இன்று அனுபவிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் மற்றும் சுமந்திரனை உடனடியாக தமிழீழ மக்கள் தூக்கி கடாச வேண்டும்... கிந்தியா கிந்தாயா .. தொடர்ந்து இஞ்சிமரபாதான் கொடுப்பார்கள்... என்னை மறுபடி இதை கூறுவதால் ரோ உளவாளி அது இது என்றால் செருப்பால் அடிப்பேன்.... :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.