Jump to content

விவாகரத்தின் நன்மைகள் (Help America: Get Divorced!!)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

m1.jpg

உறவுகள் பொருளாதாரம் சார்ந்தவை. தனி நபர்களைக் கருத்தில் கொண்டால் இதை ஏற்பது கடினம். ஆனால் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தேக்கம் கடந்த சில ஆண்டுகளில் நிலை த்து நீடிக்கிறது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்யும்போது மேற்கண்டது போன்ற முடிவுகள் உறுதிப்படுகின்றன. அங்கு ஆண்டுக்கு ஆண்டு விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க மாகாணங்களில் எங்கெங்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதற்கான புள்ளியியல் ஆதாரங்கள் கிட்டியிருக்கின்றன. ஆனால் பொருளாதாரத் தேக்கம், வேலையின்மை ஆகியனவற்றால் விவாக முறிவுகள் குறைகின்றன என்பதை ஒரு நற்செய்தியாகக் கொள்ள முடியாது. கல்லூரிக் கல்வியை முடித்த மாணவர்கள் பெற்றோரை விட்டுப் பிரிவதில்லை, மணம்புரிய நினைக்கும் காதலர்கள் இணைந்து வாழத் தயங்குகிறார்கள். கூட்டுக் குடும்பங்கள் பொருளாதார தேக்க நிலையால் அதிகரிக்கின்றன, இவை ஒரு கோணத்தில் பழமை வாதிகளுக்கு மகிழ்வு தரலாம். ஆனால் அதே பழமை வாதிகளில் பலரும், ‘தன் காலிலேயே நிற்க வேண்டும்’, ‘பொருளாதாரத் தன்னிறைவு திருமணத்தின் அடிக்கல்’, ‘தொடர்ந்த வாய்ப்புகளைத் தருவது சந்தைப் பொருளாதாரம்’ என்றிப்படிப் பல முன்னுக்குப் பின் பொருந்தாத கருத்துகளையும் கொண்டவர்கள். அவர்களுக்கு வேலையில்லாமல் இளம் ஆண்கள் வீட்டைச் சுற்றி வருவது சிறிதும் பிடிக்க வாய்ப்பில்லை. எனவே இந்நிலைமை எந்தத் தலைமுறைக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதல்ல.

மணமாகாதவர்கள் மணம் புரிவதாலும், மணமானவர்கள் மணமுறிவு செய்து கொள்வதாலும் ஒரு இல்லம் இருக்கிற இடத்தில் இரண்டு உருவாகி, அதன்மூலம் புதிய வீடுகள், அவற்றுக்குத் தேவையான நுகர்பொருள் வர்த்தகம் மற்றும் செலவுகள் அதிகரித்து பொருளாதாரம் மேம்படும் என்பது ஒரு சுவையான முரண்நகை. இது குறித்த ஒரு சிறு குறிப்பு இங்கே இருக்கிறது.

http://solvanam.com/?p=19385#5

http://www.slate.com/articles/business/moneybox/2012/01/recession_and_divorce_how_the_recovery_will_cause_a_boom_in_failed_marriages_and_why_it_s_good_news_.html

Link to comment
Share on other sites

பணம் வந்தால் பத்தும் போகும் என்பார்கள், அதில் புரிந்துணர்வும் ஒன்று. பொருளாதார தேக்கம் மீண்டும் நினைவுபடுத்தும் சில நல்ல விடயங்களில் இதுவும் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாத கணவனோ, மனைவியோ... விவாகரத்து பெற்று விட்டு, சாப்பாட்டுக்கும்... தங்குமிடத்துக்கும் அரசாங்கம் தரும் சொற்ப பணத்தை நம்பியிராமல்... கூட்டாக வாழ்வதே... நல்லது.

ஆசிய நாடுகளில் விவாகரத்து குறைவாக இருந்து வந்ததற்கும் இதுவே... காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணம் முடிச்சால் தான் மண முறிவு வருவதற்கு..! மணம் முடிக்காட்டி.. வராது தானே. சிம்பிள்..!! இதுக்குப் போயி...! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணம் முடிச்சால் தான் மண முறிவு வருவதற்கு..! மணம் முடிக்காட்டி.. வராது தானே. சிம்பிள்..!! இதுக்குப் போயி...! :lol::icon_idea:

அதுக்காக... உலகத்திலை, உள்ள எல்லாரும்... உங்களைப் போல, கலியாணம் கட்டாமல் இருந்திட முடியுமா? :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தில் அளக்கப்படும் பொருளாதாரத்திற்கு, ஒருவேளை விவாகரத்துக்கள், அனுகூலமாக இருக்கலாம்! எனினும், மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து செல்வதையே இது காட்டுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக... உலகத்திலை, உள்ள எல்லாரும்... உங்களைப் போல, கலியாணம் கட்டாமல் இருந்திட முடியுமா? :lol::icon_mrgreen:

காக்கா. குருவி.. எல்லாம் கலியாணம் கட்டிக்கிட்டா இருக்குது. அதுகள் சந்தோசமா வாழேல்ல..! சிலது சோடி மாறாமலே வாழுதுகள். மனிசன் தான் இப்படி.. கலியாணம் என்று ஒரு சடங்கை வைக்கிறான்.. அப்புறம் அதை முறிக்கிறன் என்று அதுக்கு இன்னொரு மன்றம்.. நீதிமன்றம் என்று அங்க போறாங்க..! என்ன வித்தையா காட்டுறாங்க..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காக்கா. குருவி.. எல்லாம் கலியாணம் கட்டிக்கிட்டா இருக்குது. அதுகள் சந்தோசமா வாழேல்ல..! சிலது சோடி மாறாமலே வாழுதுகள். மனிசன் தான் இப்படி.. கலியாணம் என்று ஒரு சடங்கை வைக்கிறான்.. அப்புறம் அதை முறிக்கிறன் என்று அதுக்கு இன்னொரு மன்றம்.. நீதிமன்றம் என்று அங்க போறாங்க..! என்ன வித்தையா காட்டுறாங்க..! :icon_idea::lol:

வாழ்கையே ஒரு வித்தைதான்னே. சிறப்பாக காட்டுபவனை உலகம் உலகம் வியக்குகிறது, காட்டதவனை ஒதுக்குகிறது.

Link to comment
Share on other sites

கனடாவில் நிறைய தமிழ் ஆட்கள் அரசிடம் காசு வாங்குவதற்காக விவாகரத்து செய்துபோட்டு பின் ஒன்றாக வாழுகினம். அரசு மனைவிக்கு தரும் பணமும் பெரிய ஒரு வருமானமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நிறைய தமிழ் ஆட்கள் அரசிடம் காசு வாங்குவதற்காக விவாகரத்து செய்துபோட்டு பின் ஒன்றாக வாழுகினம். அரசு மனைவிக்கு தரும் பணமும் பெரிய ஒரு வருமானமாம்

இங்கிலாந்திலும் அப்படிப் பலர். நம்மவர்கள் அரசேய்புச் செய்வதில் சுழியன்கள்.. சுழிச்சிகள்..! :lol::icon_idea:

இப்படியானவர்களுக்கு 1000 பவுன் எல்லாம் சும்மா வீசி எறியுற பணம். அடுத்தவன் கஸ்டப்பட்டு வரிகட்ட.. உதுகள் அகதி என்று வந்து செய்யுற அக்கிரம் இருக்கே.. உலகமே தாங்காது..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திலும் அப்படிப் பலர். நம்மவர்கள் அரசேய்புச் செய்வதில் சுழியன்கள்.. சுழிச்சிகள்..! :lol::icon_idea:

இப்படியானவர்களுக்கு 1000 பவுன் எல்லாம் சும்மா வீசி எறியுற பணம். அடுத்தவன் கஸ்டப்பட்டு வரிகட்ட.. உதுகள் அகதி என்று வந்து செய்யுற அக்கிரம் இருக்கே.. உலகமே தாங்காது..! :)

தோழர் நெடுக்ஸ்..

ஒருவேளை அப்படி வாழும் போது குழந்தை பிறந்தால் .. யாருக்கு என்று கவர்மெண்ட் கணக்கு (விவகாரத்து முந்தியது எது பிந்தியது) எப்படி கேக்கமாட்டனா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நெடுக்ஸ்..

ஒருவேளை அப்படி வாழும் போது குழந்தை பிறந்தால் .. யாருக்கு என்று கவர்மெண்ட் கணக்கு (விவகாரத்து முந்தியது எது பிந்தியது) எப்படி கேக்கமாட்டனா..?

அதெல்லாம் குழந்தை பிறக்காது. உழைக்காட்டி.. வரி கட்டாட்டி.. அரசேய்புச் செய்துகிட்டு வாழ்ந்தா.. பெண்களுக்கு லூப்புகளை (loops) சும்மாவே செருகி விடுவாங்க. ஆண்களுக்கு.. இலவசமா கொண்டோம் பைக்கற்றுகள் கொடுப்பாங்க. பாவம் உழைக்கும் வர்க்கம் தான்.. எல்லாத்துக்கும் சேர்த்து உழைச்சு வரி கட்டனும்..!

தப்பி தவறி குழந்தை வந்திட்டாலும்.. NHS என்று உழைக்கிறவன் வரியில ஓடிற.. ஒரு தொண்டு நிறுவனம் இருக்குது.. அது உழைக்காட்டி.. வரிகட்டாட்டி... வருமானம் இல்லாதவங்க என்று.. இலவசமா கருக்கலைப்பு செய்து விடும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

கனடாவில் நிறைய தமிழ் ஆட்கள் அரசிடம் காசு வாங்குவதற்காக விவாகரத்து செய்துபோட்டு பின் ஒன்றாக வாழுகினம். அரசு மனைவிக்கு தரும் பணமும் பெரிய ஒரு வருமானமாம்

- எல்லா சமூகங்களிலும் இது உள்ளது

- சட்டத்தில் உள்ள ஓட்டைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காக்கா. குருவி.. எல்லாம் கலியாணம் கட்டிக்கிட்டா இருக்குது. அதுகள் சந்தோசமா வாழேல்ல..! சிலது சோடி மாறாமலே வாழுதுகள். மனிசன் தான் இப்படி.. கலியாணம் என்று ஒரு சடங்கை வைக்கிறான்.. அப்புறம் அதை முறிக்கிறன் என்று அதுக்கு இன்னொரு மன்றம்.. நீதிமன்றம் என்று அங்க போறாங்க..! என்ன வித்தையா காட்டுறாங்க..! :icon_idea::lol:

அன்று தொடக்கம் திருமணவிடயங்களிலும் சரி பெண்கள் விடயங்களிலும் சரி அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கின்றீர்கள்.படித்தவர்கள் பலனுறும் விடயங்களை அலசி ஆராய்வதே சிறந்தது?காக்கா குருவிகள் கோமணம் கட்டுவதில்லை மனிதன் கட்டுகிறான் ஏன்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திலும் அப்படிப் பலர். நம்மவர்கள் அரசேய்புச் செய்வதில் சுழியன்கள்.. சுழிச்சிகள்..! :lol::icon_idea:

இப்படியானவர்களுக்கு 1000 பவுன் எல்லாம் சும்மா வீசி எறியுற பணம். அடுத்தவன் கஸ்டப்பட்டு வரிகட்ட.. உதுகள் அகதி என்று வந்து செய்யுற அக்கிரம் இருக்கே.. உலகமே தாங்காது..! :)

படிக்க வந்தவனுக்கு அடுத்தவன் வரிப்பணத்தில் ஏன் அக்கறை??? :lol::icon_idea:

வந்தமாம்,படித்தமாம்,பட்டம் எடுத்தமாம் போனமாம்,நாட்டுக்கு சேவை செய்தமாம். :):wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.