Jump to content

கோபம் இல்லாத, மனைவி தேவையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Angry-Wife.pngfarjun.jpeg

கோபம் இல்லாத, மனைவி தேவையா? - இதோ... சில தகவல்கள்!

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:

1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் 'மூடு அவுட்'டாக வாய்ப்பு அதிகம்.

4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், தமிழ் சிறி!

அடுத்ததாகக் 'கோபம் இல்லாத கணவன் தேவையா?" இணைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பெண்களை எப்படி எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்றுதான் எல்லோரும் சிந்திக்கிறார்கள். பாவப்பட்ட ஆண்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அஜெஸ்ட்மெண்ட் செய்து மனைவிமாரட்ட வாங்கிற நிம்மதிக்கு... போசாம.. ஆச்சிரமத்தில போய் தியானம் செய்துகிட்டு இருக்கலாம்..! :lol::icon_idea:

பெண்களை எப்படி எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்றுதான் எல்லோரும் சிந்திக்கிறார்கள். பாவப்பட்ட ஆண்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை.

சரியாய் சொன்னீங்க..! ஆண்கள் பலர் பொம்பிளப் பைத்தியங்கள். அவர்களுக்கு தங்கட சொந்த நிலையின் பரிதாப நிலை தெரிவதில்லை..! இவங்கள் எல்லாம் ஆம்பிளைன்னு... அதிலும்.. மனிசனுன்னு வாழ்றதுக்கே லாய்க்கில்ல..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை எப்படி எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம் என்றுதான் எல்லோரும் சிந்திக்கிறார்கள். பாவப்பட்ட ஆண்களை ஒருவரும் கண்டுகொள்வதில்லை.

மனைவிமார் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் கணவன் மார் நிம்மதியாக இருக்கலாம் என்பதால்தான் இந்த சிந்தனை. அதாவது நிம்மதியை இழந்த கனவன் மார்களுக்காக் சிந்திக்க பட்ட சிந்தனை இது.

இவ்வளவு அஜெஸ்ட்மெண்ட் செய்து மனைவிமாரட்ட வாங்கிற நிம்மதிக்கு... போசாம.. ஆச்சிரமத்தில போய் தியானம் செய்துகிட்டு இருக்கலாம்..! :lol::icon_idea:

சரியாய் சொன்னீங்க..! ஆண்கள் பலர் பொம்பிளப் பைத்தியங்கள். அவர்களுக்கு தங்கட சொந்த நிலையின் பரிதாப நிலை தெரிவதில்லை..! இவங்கள் எல்லாம் ஆம்பிளைன்னு... அதிலும்.. மனிசனுன்னு வாழ்றதுக்கே லாய்க்கில்ல..! :lol::icon_idea:

கரும்பை ருசித்து பார்காதவன் சொன்னானாம் கரும்பின்ர சேப் சரி இல்லை இது கசக்கும் என்று

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பை ருசித்து பார்காதவன் சொன்னானாம் கரும்பின்ர சேப் சரி இல்லை இது கசக்கும் என்று

:icon_idea:

கரும்பாய் இருந்தா ருசிக்கலாம்.. இரும்பாய் இருந்தால்.. என்ன செய்வீங்க..???! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்பாய் இருந்தா ருசிக்கலாம்.. இரும்பாய் இருந்தால்.. என்ன செய்வீங்க..???! :lol::D:icon_idea:

கரும்புக்கும், இரும்புக்கு வேறுபாடு தெரியாத சிறுவனா நீங்ககள். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புக்கும், இரும்புக்கு வேறுபாடு தெரியாத சிறுவனா நீங்ககள். :lol: :lol: :lol:

பெண்கள் அநேகமா இரும்பு போல.. துருப்பிடிக்கிறவங்க. அவங்க அழகும்.. அன்பும் நிரந்தரமில்லாதது. துருப்பிடிச்சு அழிஞ்சிடக் கூடியது..! கலியாணத்துக்கு அப்புறம்.. அநேகம் பெண்கள் துருப்பிடிச்சு.. உப்பிப் பெருத்து இருக்கிறத நீங்க காணேல்ல..! அவங்களப் போயி கரும்போட உவமைக்கிறது.. இயற்கைக்கே அடுக்காது. வேணுன்னா.. பெண்கள்.. சப்பித் துப்பின கரும்புச் சக்கை போல எண்டுங்க.. ஒத்துக்கலாம். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் அநேகமா இரும்பு போல.. துருப்பிடிக்கிறவங்க. அவங்க அழகும்.. அன்பும் நிரந்தரமில்லாதது. துருப்பிடிச்சு அழிஞ்சிடக் கூடியது..! கலியாணத்துக்கு அப்புறம்.. அநேகம் பெண்கள் துருப்பிடிச்சு.. உப்பிப் பெருத்து இருக்கிறத நீங்க காணேல்ல..! :lol::D

ஆண்கள் மட்டும் என்ன என்றும் மார்கண்டேயனா? எல்லாரும் துருப்பிடித்து மண்ணுக்கு போக கிறவர்கள்தான், இருக்கும் வரை இளமையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், முடிந்த வரை நேர்மையாக் இருக்க வேண்டும், இயன்றவரை உதவிகள் செய்யவேண்டும், மன்ணுக்கு போது ஒரு உயிரினம் ஏன் உலகுக்கு வருகிறது என்பதன் நோக்கத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். :icon_idea:

பெண்கள் அநேகமா இரும்பு போல.. துருப்பிடிக்கிறவங்க. அவங்க அழகும்.. அன்பும் நிரந்தரமில்லாதது. துருப்பிடிச்சு அழிஞ்சிடக் கூடியது..! கலியாணத்துக்கு அப்புறம்.. அநேகம் பெண்கள் துருப்பிடிச்சு.. உப்பிப் பெருத்து இருக்கிறத நீங்க காணேல்ல..! அவங்களப் போயி கரும்போட உவமைக்கிறது.. இயற்கைக்கே அடுக்காது. வேணுன்னா.. பெண்கள்.. சப்பித் துப்பின கரும்புச் சக்கை போல எண்டுங்க.. ஒத்துக்கலாம். :lol::D

அதுக்கு காரணம், சாறை ருசிப்பவர்கள் யார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் மட்டும் என்ன என்றும் மார்கண்டேயனா? எல்லாரும் துருப்பிடித்து மண்ணுக்கு போக கிறவர்கள்தான், இருக்கும் வரை இளமையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், முடிந்த வரை நேர்மையாக் இருக்க வேண்டும், இயன்றவரை உதவிகள் செய்யவேண்டும், மன்ணுக்கு போது ஒரு உயிரினம் ஏன் உலகுக்கு வருகிறது என்பதன் நோக்கத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். :icon_idea:

மண்ணுக்க எத்தனையோ கோடி விந்துகளும் முட்டைகளும் தான் வருகுது. அத்தனையும் குழந்தை குட்டியாவா ஆகிக்கிட்டு இருக்குதுங்க..???! உருவான கோடிகளையே ஒழுங்கா காப்பாத்த முடியல்ல.. பசி பட்டினி.. பிணி.. போர் என்று சாவுது. இதுக்குள்ள... இன்னும் இறைச்சிக்கிட்டு இருக்கனுமா.. என்ன...???! :lol::D

அதுக்கு காரணம், சாறை ருசிப்பவர்கள் யார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும். :lol:

சாறை ருசிப்பவர்களுக்கு சாறை அள்ளிக்கொடுக்கிற க(இ)ரும்புகளும்.. யோசிக்க வேண்டாமோ..???! அதுகளுக்கு எங்க போறது புத்தி..???! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத்தம்பி

பெண்கள் இரும்பென்றே ஏற்றுக்கொள்கின்றேன்

நாங்கள் அது துருப்பிடித்தால் உலக சுகாதாரத்துக்கு ஆபத்து என்பதால் அதை பாவிக்கின்றோம் என்ற நிலைக்காகவாவது எம்மை ஏற்றுக்கொள்ளக்கூடாதா ராசா??? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணுக்க எத்தனையோ கோடி விந்துகளும் முட்டைகளும் தான் வருகுது. அத்தனையும் குழந்தை குட்டியாவா ஆகிக்கிட்டு இருக்குதுங்க..???! உருவான கோடிகளையே ஒழுங்கா காப்பாத்த முடியல்ல.. பசி பட்டினி.. பிணி.. போர் என்று சாவுது. இதுக்குள்ள... இன்னும் இறைச்சிக்கிட்டு இருக்கனுமா.. என்ன...???! :lol::D

சாறை ருசிப்பவர்களுக்கு சாறை அள்ளிக்கொடுக்கிற க(இ)ரும்புகளும்.. யோசிக்க வேண்டாமோ..???! அதுகளுக்கு எங்க போறது புத்தி..???! :lol::icon_idea:

ஒரு உயிரினத்தின் பூமிக்கு வருவதற்காக கோட்பாடு என்ன?

கிணற்றி இருந்து வாட்டபம் நீரை உறுஞ்சி இறைக்கிறது இதற்காக கிணற்றை கோவிக்கலாமா? வாட்டபம்மை கோவிக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிரினத்தின் பூமிக்கு வருவதற்காக கோட்பாடு என்ன?

அங்க ஒரு கோட்பாடும்.. இல்ல. கூப்பாடும் இல்ல. எல்லாம் தற்செயலா நடக்குது..! :lol::icon_idea:

கிணற்றி இருந்து வாட்டபம் நீரை உறுஞ்சி இறைக்கிறது இதற்காக கிணற்றை கோவிக்கலாமா? வாட்டபம்மை கோவிக்கலாம்?

கிணற்றையும் வாட்டபம்மையும் கண்டுபிடிச்சவனை தான் கோவிக்கனும்..! அதுக்காக கிணறு பெரிய திரவியம் கிடையாது..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசிலருக்கு சிறுவயதில் ஏற்பட்ட சொல்லணாத்துயரங்கள்..... வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றது. :(

Link to comment
Share on other sites

நானும் மனைவியைப்பார்த்து புன்னகைப்பேன். என்ன விசரே பிடிச்சிருக்கு எனத் திருப்பிக் கேட்கிறாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மனைவியைப்பார்த்து புன்னகைப்பேன். என்ன விசரே பிடிச்சிருக்கு எனத் திருப்பிக் கேட்கிறாள்.

நான் நினைக்கிறன்.. மனைவியை சக மனிதன் என்று எண்ணிக் கொண்டு பழகினாலே போதும். இங்கு சிலர் விபரிப்பது போல.. மனைவியை விசித்திரமாக நோக்கிப் பழகப் போறதுதான்.. கோபத்துக்கே முக்கிய காரணமுன்னு..!

சிலர் ஊருக்கு நல்லா உபதேசிப்பாங்க.. தாங்க உள்ள மோசமான விளைவுகளை எல்லாம் சந்திச்சுக் கிட்டு சகித்துக்கிட்டு இருப்பாங்க. அப்படியான ஆட்களின் ஆலோசனைகளே.. அடுத்தவனுக்கு அறிவுரையாக வருவது அதிகம். ஈசனைப் போல ஓரிருவர் தான் உண்மை நிலையை.. நிகழ்வதைச் சொல்லுறது..!

மனைவியை விசித்திரமாக நோக்கத் தேவையில்ல. அவளும் உங்களைப் போன்ற ஒரு ஜென்மம் என்று எண்ணி முழு அக்கறையோடு பழகிக் கொண்டாலே.. இந்த ஆலோசனைகள்.. அறிவுரைகள்.. பெண்ணின் மனசு ஆழம் மண்ணாங்கட்டி எனறு சமூகத்தின் மத்தியில் போலி கருத்துக்களோடு.. கற்பனைகள் உள்ளடக்கிய ஓசி அறிவுரை விளையாட்டு விளையாடத் தேவையில்லை..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  ..  குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 
    • Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.