Jump to content

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா

ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும்

அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு

அகிலத்தில் இனி வருமா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன்

பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா.

நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா?

பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா?

உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா

எம் உயர்வுக்காய் உனை உருக்கி ஓடியோடி உழைத்ததற்கா? - நாம்

உடைந்துபோன நேரங்களில் உறுதுணையாய் நின்றதற்கா?

எம் திறமைகள் அனைத்திற்கும் திறவு கோலாய் இருந்ததற்கா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா.

கருத்தாய் கல்விக்கண் ஊட்டியே வளர்த்ததற்கா?

கடமையே உயர்வென்று கண்ணியத்தை போதித்ததற்கா?

ஊரார் மெச்ச எமை உயர்வாய் வாழ வைத்ததற்கா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா

துணையிழந்த எனக்கு என்றும் தூணாய் இருந்ததற்கா?

உன் வருத்தம் பாராமல் எமை உபசரித்து மகிழ்ந்ததற்கா?

சுறுசுறுப்பாய் நாம் வாழ சொல்லியே தந்ததற்கா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா

இறையுணர்வை எமக்குள் இயல்பாய் விதைத்ததற்கா?

நிறைவுடனே பிள்ளைகளை நினைத்துனை மறந்ததற்கா?

மருமக்கள்,பேரர், பூட்டர் மனமெல்லாம் நிறைந்ததற்கா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா

எமக்காக எத்தனையோ சிலுவைகளைச் சுமந்ததற்கா?

எண்ணமெல்லாம் எமைச் சுமந்து என்றுமே இளைத்ததற்கா?

எமக்கெல்லாம் நல்லமுன் மாதிரியாய் இருந்ததற்கா?

எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா

நீங்கள் செய்த அத்தனைக்கும் நெஞ்சார நன்றியம்மா

விடை தருகின்றோம் தாயே சந்தோசமாய் சென்று வாருங்கள்.

காவலூர் கண்மணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்த அத்தனைக்கும் நெஞ்சார நன்றியம்மா

விடை தருகின்றோம் தாயே சந்தோசமாய் சென்று வாருங்கள்.

அம்மாவின் சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

பலனை எதிர்பாராது வாழ்பவள் தாயவள்.

ஆயினும் பாராட்டி, சீராட்டி வளர்த்த அன்னைக்கு நன்றி சொல்ல ஒவ்வொரு அணுவும் துடிக்கும்.

அந்த அன்னை இல்லாத உலகு சூனியமாய்த் தெரியும்.

ஆயினும் தாங்கித்தான் ஆகவேண்டும்.

மனதை ஆற்றுங்கள் ! அந்த தாயே தெய்வமாய் தங்களை வழி நடத்துவாள்.....

அவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது...நானும் அண்மையில் அம்மாவை இழந்ததால் எனக்கும் அந்த வலி தெரியும்...நீங்கள் கொடுத்து வைத்தனீர்கள் அக்கா அம்மாவை இவ்வளவு நாளும் உங்களோடு வைத்திருக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது...உங்கள் கடமையை வடிவாக செய்தால் கவலை கொள்ளத் தேவையில்லை அக்கா...அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவின் சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அம்மா எனும் உறவு அற்புதமானது. உங்கள் தாயாரின் பிரிவுத்துயரில் நாமும் பங்குகொள்கின்றோம் கண்மணி அக்கா.

Link to comment
Share on other sites

உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

Link to comment
Share on other sites

தங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.