Jump to content

இந்திய வல்லாதிக்கக் கனவுகளும் புஸ்ஸின் வருகையும்


Recommended Posts

சோவியத்தின் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின்னால் உலக நாடுகள் இரண்டு கோஸ்டிகளாகப் பிரியும் சாத்தியங்கள் தோன்றினாலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னான காலகட்டத்திலேயே கிட்லரின் ஜெர்மனியின் வீழ்ச்சியுடன் இப்பிளவு கொள்கை மற்றும் நாடுகள் ரீதியாக வலுப்பெற்றிருந்தது.

சோவியத் சார்பு சோஷலிச நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு முதலாளித்துவ நாடுகள் என்ற சார்பு நிலையில் உலகம் இரண்டாகப் பிரிந்து கொண்டது. இரண்டு பக்கமும் பிரிய முடியா வளர்முக நாடுகள் கலப்புப் பொருளாதாரம் என்னும் இடைநிலையை எடுத்து அணிசேராநாடுகள் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தன. சோஷலிச சார்பு நாடுகளுக்கும் முதலாளித்துவ சார்பு நாடுகளுக்கும் இடையிலான பிளவும் போட்டாபோட்டிகளும் சகல துறைகளிலும் ஆக்ரோஷத்துடன் முனைப்புப் பெற்றிருந்தன. ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்தனவாயும் ஒன்றில் இருந்து ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலும் ஆயுத உற்பத்தியை முன்னிறுத்தி மேலாண்மையைப் பெற்றுக் கொள்ளும் செயற் பாடுகளில் அதி தீவிரம் காட்டின. அதன் பலன் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய அணு ஆயுதங்களை கண்டுபிடித்துக் கொண்டனர். பனிப்போர்க்காலம் என அழைக்கப்பட்ட இக்காலகட்டம் உலக அழிவுக்கான பல ஆபத்தான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றது.

இன்று சோவியத்தின் வீழ்ச்சி அல்லது சிதைவு இந்நெருக்கடியில் இருந்து உலகை நிம்மதிப் பெரு மூச்சை விடச்செய்திருக்கும் போதிலும் வேறு வகையான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.

அமெரிக்காவை தட்டிக்கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டன் வேடத்தை எடுத்துக் கொள்ள வைத்திருக்கின்றது.

இதுவரை காலமும் சோவியத் சார்பு நிலையிலிருந்த நாடுகள் சோவியத்தின் வீழ்ச்சியின் பின் இரண்டும் கெட்டான் சங்கடத்திற்குள் உள்ளாகின. இந்தியா அணிசேரா நாடுகள் என்றும் சோவியத் அணிநாடு என்றும் இரண்டு வேடங்களைப் போட்டிருந்தது. அதற்கும் மேலாக அமெரிக்காவின் எதிரணி அல்லது நம்பகத்தன்மையற்ற நாடு என்னும் எண்ணத்தையே பெற்றிருந்தது.

சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஆயுததளபாட உதவிகளும் நேரடி பாதுகாப்பும் இல்லாதொழிந்த வேளையில் இந்தியா உட்பட பலநாடுகள் சுய அளவில் படைப் பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிடப்பட்டன.

தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப்பிரசண்டனாக அமெரிக்கா உலகைத் தன் ஆளுமைக்கும் செல்வாக்கிற்கும் உட்படுத்தி வைக்கும் செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடத்தொடங்கியது.

அணு ஆயுதத்தின் பரம்பலைத் தடை செய்யவும் அணு ஆயுத வலிமையை வேறு நாடுகள் பெற்றுக் கொள்வதைத் தடை செய்யவும் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் "வீற்றோ" எனப்படும் அதிகாரம் பெற்ற அதி முக்கிய நாடுகளான இங்கிலாந்து, ரஷ்யா,சீனா,பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவர் (International Atomic Energy Agency - IAEA ) என்ற ஒரு பக்கச் சார்பான நீதியான நோக்கமற்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது. உலக நாடுகளில் அணு ஆயுத உற்பத்தியை கண்காளிப்பதும் தடை செய்வதுமே இதன் முதன்மையான நோக்கமாகும். அணு ஆயுத உற்பத்தியை உலகில் தடை செய்வது உலக நன்மைக்கான விடயமெனினும்

அமெரிக்கா உட்பட இந்த ஐந்து நாடுகளையும் அவற்றின் அணு ஆயுத உற்பத்தியையும் வைத்திருப்பையும் இவ்வமைப்பு கட்டுப்படுத்தாது என்பதே இதிலுள்ள குறைபாடாகும். இதே நேரம் அணு ஆயுதக் குவிப்பு தடுப்பு (Nuclear Non-Proliferation Treaty -NPT) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் உலக நாடுகளை வலியுறுத்தி வருகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதத்தின் முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டலைத் தடைசெய்தலும் உலக நாடுகளின் அணு ஆயுத உலைகளை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு முகவரின் கண்காணிப்பிற்குத் திறந்து விடுதலும் ஆகும்.

இவ்வாறு உலக நாடுகளின் அணு ஆயுத உற்பத்தியையும் அதனால் பெறக் கூடிய மேலாதிக்கத்தைத் தடை செய்வதும் அமெரிக்காவின் குள்ள நரித் தந்திரமாகும். இதே காரணங்களிற்கு உட்பட மறுத்தமையைக் காரணங்காட்டியே வடகொரியாவையும் ஈரானையும் சாத்தானின் அச்சில் சேர்த்து அமெரிக்கா பிரகடனம் செய்திருந்தது. இன்று ஈரானுக்கான பொருளாதாரத் தடையையும் ஆயுத விற்பனையைத் தடை செய்வதையும் ஐ.நாவிற்கூடாக நிறைவேற்றியிருக்கின்றது. இதற்கான கால அவகாசம் கொடுக்கப் பட்டபோதிலும் ஈரான் இத்திட்டத்திற்கு உடன் படப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது. அதே நேரம் அணு ஆயுத உற்பத்திக்கான யுரேனியச் செறிவாக்கலை துரிதப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இதே தேவைகள் இந்தியாவிற்கும் இருக்கின்ற போதிலும் ஈரானிற்கு எதிரான அத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணிந்து போய் விட்டதாக இடது சாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்றைய புஸ்ஸின் இந்திய விஜயம் இதே நெருக்கடியை இந்தியாவிற்கும் வலிந்து திணித்துள்ளது. சோவியத்தின் ஆதரவை இழந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளது. காஸ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டினை அமெரிக்காவை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் பாகிஸ்தானினூடாக கட்டவிழ்த்து விடப்படும் தீவிரவாதத்தாக்குதல்களைத் தணித்துக் கொள்வதற்கும் அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவிற்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றது. தீவிரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கப் பாகிஸ்தானைத் தூண்டி இந்தியாவை அடிபணியச் செய்வதில் அமெரிக்கா வெற்றி கொண்டிருக்கின்றது என்பதை இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒத்துக் கொண்டிருக்கின்றது என்பதாலேயே புரிந்து கொள்ளலாம். இந்தியாவிற்கான "உதவிகளைச்" செய்வதற்கான விலையாக அமெரிக்கா போடும் நிபந்தனைகள் நீதியற்ற ஒருபக்கச் சார்பான இந்தியாவின் இறைமையில் தலையிடும் அதிகப்பிரசங்கித் தனமான அசுறுத்தல் விளைவிக்கக் கூடியவையாகும்.

அணு ஆயுத உலைகளின் பட்டியலை சமூகநலன் கருதியவை இராணுவ நலன் கருதியவை எனப்பிரித்து வெளியிட வேண்டுமென கோரியிருக்கின்றது. இந்த அளவில் இந்தியாவும் ஒத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் புஸ்ஸும் வாஷிங்டனில் ஒரு கூட்டறிக்கையையும் வெலியிட்டிருந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு அதனையும் தாண்டி இந்தியாவின் இராணுவ நலன் சார்ந்த கல்பாக்கம் அதிவேக ஈனுலை அணுத்திட்டத்தையும் பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மைசூரிலுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தையும் சமூக நலன் கருதியபட்டியலில் அதாவது சர்வதேச அணுசக்தி கன்காணிப்பு முகவர் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வரக்கூடிய வ்அகையில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனை கோரி நிற்கின்றது.

இந்நிபந்தனக்கு இந்தியா அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து உடன் படுமாயின் இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு அடிக்கப் படும் சாவு மணியாகவே இது இருக்கும். இந்தியாவின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ஒருவரின் கூற்றைப் போல " எமது இடையறாத உழைப்பின் வெற்றியை பகிரங்கப் படுத்தக் கேட்பது நீதியற்றதும் ஒருதலைப்பட்சமானதுமாகும்" என்ற கூற்றிலிருந்தே அமெரிக்காவின் கபடத் தனத்தையும் இந்தியாவின் கையறு நிலையையும் விளங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவின் வல்லாதிக்கக் கனவிற்கு வைக்கப்படும் "செக்" ஆகவே உலகச் சண்டப்பிரசண்டன் புஸ்ஸின் வருகை பார்க்கப்படுகின்றது.

நன்றி>சிந்து

http://ilanthirayan.blogspot.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.