Jump to content

அரவான்


Recommended Posts

சனிக்கிழமை ஆறுதலாக இருந்து ஒரு சொட் அடிப்பம் என்று நண்பன் வாங்கித்தந்த AUCHENTOSHAN WHISKY ஐ கிளாசில் விட்டு (ஒரு மாதமாக குடிக்கவில்லை ஏனென்று முகபுத்தகத்தில் படங்கள் பார்த்தவர்களுக்கு தெரியும் ) வைத்துக்கொண்டு கொம்பியூட்டர் முன் குந்தினால் மனுசி வந்து அரவான் பார்க்க கூப்பிட்டார்.பத்து நிமிட ஓட்டம் தானே ,வசந்த பாலனின் படம் புறப்பட்டுவிட்டேன்.தியேட்டரில் இருந்தது இருபது பேர் .இடைவேளைக்கு யாரோ பெயர் சொல்லி கூப்பிட திரும்பிப் பார்த்தால் தங்கையும் கணவரும்,படம் முடிந்து வெளியே வர மற்ற தங்கை நண்பியுடன் நிற்கின்றார் .(நல்ல குடும்பம் )

சாகித்திய அகடமி பரிசு பெற்ற குமரேசனின் "காவல் கோட்டம்" தான் சில மாற்றங்களுடன் அரவான் ஆகியது.இடைவேளை வரை என்ன நடக்கின்றதேன்றே விளங்கவில்லை .சுத்த வேஸ்ட்.இடைவேளைக்கு பின் பிடித்திருந்தது .இருந்தும் நிறைய ஓட்டைகள்களும் இழுவையும்.

ஆதி,பசுபதி நடிப்பு நன்று .பாடல் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்மை.

Link to comment
Share on other sites

ARAVAN-2012-அரவான்/உலகசினிமா/இந்தியா /சஸ்பென்ஸ் திரில்லர்.

Watch-Aravaan-Movie-Online-300x300.jpg

பொதுவாய் இணையத்திலோ அல்லது பத்திரிக்கையில் எழுதப்படும் எந்த விமர்சனத்தையும் படித்து விட்டு படத்துக்கு போகும் ஆள் நான் அல்ல.. என் அம்மாவுக்கு கதையை தெரிந்து கொண்டும் படத்துக்கு போவது அவளுக்கு அறவே பிடிக்காது.. அது போலத்தான் என்னை திரைப்படத்தை பார்த்து ரசிக்க கற்றுக்கொடுத்தாள்..

இப்போதெல்லாம் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏற்கனவே படம் பார்த்த கேரக்டர்கள் இப்ப பாரேன்.. இது நடக்கும் அது நடக்கும் என்று கதை சொல்வது குறைந்து போய் இருக்கின்றது.. அல்லது என் கண்ணில் தென்படாமல் இருக்கலாம்.. எனக்கும் என் அம்மாவுக்கு இது போல படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கதை சொல்வது அறவே பிடிக்காது..

இணையத்தில் படத்தை விமர்சனம் செய்வதற்கு பதில் முழு கதையையும் சொல்லி விடுகின்றார்கள் என்பதால் எந்த விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் படித்தது இல்லை.. படம் பார்த்து விட்டு வேண்டுமானால் ஒத்த ரசனையுடைய அல்லது நக்கல் வீட்டு எழுதும் அதிமேதாவிதனமான விமர்சனங்களை படிப்பது உண்டு.,. ஆனால் படம் பார்க்கும் முன் எதையும் படிக்கவே மாட்டேன்..

அதே போல இப்போது இன்னோரு டிரெண்ட்.. பேஸ்புக்கில் படத்தை பற்றி இரண்டு வரியில் நல்லா இருக்கும் நல்லா இல்லை என்று எழுதி விடுகின்றார்கள்... அப்படி நல்லா இல்லை என்று சொல்லும் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றேன்... நல்லா இல்லை என்று சொன்ன படங்களை பார்த்து ரசித்த இருக்கிறேன்.. அதில் பலது என்னை ஏமாற்றியது இல்லை... ரசனை வேவ்வேறாய் இருக்கும்...

அதே போல மெத்த படித்த இலக்கியவாதிகள் விமர்சனத்தை நான் வாசிப்பதே இல்லை.. காரணம் இலக்கியம் படித்தவர்களுக்கு தான் மட்டுமே அதிகம் தெரிந்தவன் என்பதை நிரூபிக்க படங்களை விமர்சிக்க எடுத்து, குத்தி கிழித்து விடுகின்றார்கள்.. பட் எந்த ஒரு கருத்தையும் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.. அது தவறு என்று சொல்லவும் கூடாது...

ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகின்றது .. மெத்த படித்த இருவர் பேசிக்கொள்வது பைத்தியக்காரதனமாக இருக்கும்.. இரண்டு பாமரர்கள் பேசிக்கொள்வது அறிவாளித்தனமாக இருக்கும் என்று படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன...

முதலில் வசந்தபாலனுக்கு பாராட்டுகளை தெரிவித்து விடுவோம்...காரணம் வழக்கமாக அரைத்த மாவையே அரைக்காமல் 18ஆம் நூற்றாண்டு பக்கம் போனதுக்கு.... பேப்பரில் 18ஆம் நூற்றாண்டு என்று எழுதுவது மிக சுலபம்... எழுதியை படிப்பது அதை விட ரொம்ப சுலபம்.. ஆனால் 18ஆம் நூற்றாண்டை செல்லுலாய்டில் பதியவைப்பது பருப்பு எறைய வைக்கும் காரியம் என்பது பலருக்கு புரிவதில்லை..

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் வரலாற்று விஷயங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து, காதில் பூ சுற்றியது போல, இந்த படம் அந்த தவறை செய்யவில்லை என்பேன்..

நிறைய மொக்கையான உலகபடங்கள் பார்த்து இருக்கின்றேன்.. அது பல விருதுகளை கூட பெற்று இருக்கின்றது.அது போல இல்லாமல் இந்த படம் நன்றாகவே இருக்கின்றது..

18 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நகர , கிராமத்து மற்றும் கள்ளர் சமுகத்தை தமிழ் பட்ஜெட்டுக்கு முடிந்தவரை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்.. அதுக்காகவே பாராட்டப்படவேண்டும்...

aravaan-love-making1-586x419.jpg

==================

படத்தின் ஒன்லைன்...

காவல்காரன் வரிப்புலி (ஆதி) இருக்கும் ஊரில் ஒரு கொலை நடக்கின்றது.. ஊர் பலியாக ஆதி சூழ்ச்சியால் சிக்குகின்றான்.. கொலையாளி யார் என்ற உண்மையை கண்டறிந்தானா? என்பது தான் படத்தின் டூ லைன்...

===================

அரவான் படத்தின் கதை என்ன???

Aravaan.jpg

கதை நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டில் வேம்பூர் திருட்டு பசங்க வாழும் ஊர்.. தலைவன் கொம்பூதி (பசுபதி)... திருட்டே வாழ்க்கை .. திருட்டில் வரும் வருமானம்தான்.. அந்த கிராமத்து மக்களின் பசியை தீர்க்கின்றது..ஆனால் இவர்கள் வசிக்கும் வேம்பூரில் இருந்து வந்தவன் என சொல்லி துப்பு வாங்கி ஒரு சில கொள்ளைகள் நடக்க, அந்த கொள்ளை அடித்தவன் யார் என்று பார்த்தால் வரிப்புலி(ஆதி) என்பவன்..

இவர்கள் ஊர் பேர் சொல்லி அவன் கொள்ளை அடிப்பது தெரிகின்றது.. அவன் கொள்ளை அடித்த ராணியின் நகையை மீட்கும் இடத்தில் பசுபதி மற்றும் ஆதி நட்பாகின்றார்கள்.. யார் என்ன என்று விசாரிக்கும் போது அவன் தான் ஒரு அனாதை என்று சொல்லுகின்றான்..

அனால் பசுபதிக்கு ஆதி அனாதை இல்லை என்றும், அவன் பொய் சொல்லுகின்றான் என்று மனதை அரிக்கின்றது...படம் பார்க்கப்போனால் உங்களுக்கும் அந்த சந்தேகம் ஏற்ப்படலாம்..அவன் யார்? அவன் அனாதை என்று எது சொல்லவைத்தது.. போன்ற ஆர்வமிக்க விஷயங்களை தியேட்டரில் போய் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

==============================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

திருட்டு செய்ய கும்பலாக பசுபதி டீம் கிளம்பி போகும் போதே நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றார்கள். நிமிர்ந்து உட்கார வைக்கின்றார்கள்..

சரியாக பத்து நிமிடத்துக்கு மேல்....... அதிகமான டயலாக் இல்லாமல், பரபரப்பாக செய்து இருக்கும் அந்த திருட்டு சீன் கம்பபோசிஷன் அருமை..

18ஆம் நூற்றாண்டில் ஒரு கொலை... அப்பாவி ஒருவன் செய்யாத தப்புக்கு பலிக்கடாவாக மாறுகின்றான்.. அவன் அந்த கொலையை கண்டுபிடிக்க துப்பை தேடி பயணிக்கின்றான் என்று பரபரப்பான அசத்தலான கதை...

aravaan+movie+stills00-6.jpg

பசுபதி அசத்தி இருக்கின்றார்... அதே போல ஆதி உடல்மொழி நன்றாகவே இருக்கின்றது...உடம்பையும் அற்புதமாக வைத்து இருக்கின்றார்-.

தனிஷ்க்கா ஒரு பாட்டுக்கு உதடு சுழித்து ஆட்டம் போட்டு விட்டு, கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்து இருக்கின்றார்..

பரத் அஞ்சலி இருவரும் தங்களுக்கு திரைப்பட வாழ்க்கையில் திரும்பு முனை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் என்பதால் சின்ன கேரக்டரில் நடித்து தங்கள் விசுவாசத்தை காட்டி இருக்கின்றார்கள்.

பரத்தாவது பரவாயில்லை.. அஞ்சலி இரண்டு தீப்பந்தம் சுற்றி விட்டு இனிமே அவனை பார்க்கவே மாட்டேன்பா என்று ஒரு வரி டயலாக்கோடு பொட்டிக்கட்டி விடுகின்றார்...

பரத் கொடுத்து வைத்த ராசா.. பாளையத்து ராணி அம்சமா இருக்கறது போல என் கண்ணுக்கு படறார்... உதடு சுழித்து அத்தர் விற்க்க வரும் பரத்தை பார்க்கும் போது எனக்கு உள்ளம் சுழித்து போனது...

திருட்டுக்கு போகும் முன் செய்யும் முன் ஏற்பாடுகள்.. மற்றும் வாக்கு தவறாத மக்கள்.. அரசன் பேச்சை எதிர்பேச்சு பேசாத அப்படியே நம்பும் சமுகம்......ஜல்லிக்கட்டு,பெருமைக்காக யோசிக்காமல் இறங்கும் முன் கோபம், என்று நம் கண்முன் அந்தகாலத்து மக்களை அப்படியே பிரதிபலிக்க முடிந்தவரை இயக்குனர் வசந்தபாலன் முயன்று இருக்கின்றார்..

aravaan-pictures-024.jpg

படத்தல் சிரிக்க வைக்கும் டயலாக் பேசுபவர்... சிங்கம்புலி மட்டுமே.. பொண்டாட்டியை எப்படி வேனா பார்த்துட்டு போலாம்..ஆனா என்னோட மச்சினிச்சியை அப்படி பார்க்க என்னால அனுமதிக்க முடியாது என்று சொல்லும் காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்கின்றது...

ஒளிப்பதிவு சிறப்பு... லோ பட்ஜெட்டில் என்ன செய்ய முடியமோ? அதை சித்தார்த் செய்து இருக்கின்றார்.. நிறைய ஷாட் கம்போசிஷன்கள் ஆங்கில படத்தின் காட்சிகளை நினைவுக்கு வருவதை தவிற்க்க முடியவில்லை..

ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்..கொடுத்தவேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்...

வசனங்கள் இயல்பாய் இருப்பது படத்திற்க்கு பலம்..வசனம் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதி இருக்கின்றார்..

இசை பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போக முடியாது.. சில இடங்களில் ரசிக்க வைக்கின்றார்..பாடகர் கார்த்திக்.. சாரி இசைஅமைப்பாளர் கார்த்திக்.

படத்தில நிறைய குறைகள் இருக்கின்றது.. செல்போன் டவர் மற்றும் மின் உயர கோபுரம் இல்லாத இடமாக நான்கு மாதத்திற்கு மேல் லோக்கேஷன் தேடி அலைந்து இருக்கின்றார்கள்.. இந்த பெரிய வரலாற்று பட முயற்சிக்கு முன்னால் அதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

aravaan-pictures-080.jpg

18ஆம் நுற்றாண்டு வாழ்க்கை முறையையும் இன்னும் பல விஷயங்களை இந்த படம் இன்றைய தலைமுறைக்கு சொல்லுகின்றது.. இந்த பீரியட் படத்தை எடுக்க எடுத்த முயற்சிக்கு வசந்தபாலனுக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.

படக்குழுவினர் விபரம்.

Directed by Vasanthabalan

Produced by T. Siva

Screenplay by Vasanthabalan

Based on Kaavalkottam by

Su. Venkatesan

Starring Aadhi

Pasupathy

Dhansika

Archana Kavi

Music by Karthik

Cinematography Siddharth

Editing by Praveen K. L.

N. B. Srikanth

Studio Amma Creations

Distributed by Vendhar Movies[1]

Release date(s) March 2, 2012

Country India

Language Tamil

=======================

பைனல்கிக்.

இந்த படம் பத்தோடு பதினொன்று என்று சொல்ல முடியாது.. படம் முழுவதும் உழைப்பு விரவிக்கிடைக்கின்றது...சிலர் இந்த படம் மொக்கை என்று சொல்லுகின்றார்கள்.. அவர்கள் ரசனை அவ்வளவுதான்...

படம் பார்க்கும் போது அப்பகலிப்டோ,பிரேவ் ஹார்ட், கிளடியேட்டர் போன்ற படங்களில் வரும் காட்சிகளையும் கோணங்களையும் நியாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை....நன்றாக எழுத நிறைய படிக்க வேண்டும்.. அது போலத்தான் திரைப்படமும்...

நிறைய பார்த்த படங்களின் தாக்கம் இல்லாமல் எந்த திரைப்படத்தையும் எடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை...இந்த படம் தமிழில் நல்ல முயற்சி.. இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..

http://www.jackiesekar.com/2012/03/aravan-2012.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ARAVAN-2012-அரவான்/உலகசினிமா/இந்தியா /சஸ்பென்ஸ் திரில்லர்.

Watch-Aravaan-Movie-Online-300x300.jpg

பொதுவாய் இணையத்திலோ அல்லது பத்திரிக்கையில் எழுதப்படும் எந்த விமர்சனத்தையும் படித்து விட்டு படத்துக்கு போகும் ஆள் நான் அல்ல.. என் அம்மாவுக்கு கதையை தெரிந்து கொண்டும் படத்துக்கு போவது அவளுக்கு அறவே பிடிக்காது.. அது போலத்தான் என்னை திரைப்படத்தை பார்த்து ரசிக்க கற்றுக்கொடுத்தாள்..

இப்போதெல்லாம் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏற்கனவே படம் பார்த்த கேரக்டர்கள் இப்ப பாரேன்.. இது நடக்கும் அது நடக்கும் என்று கதை சொல்வது குறைந்து போய் இருக்கின்றது.. அல்லது என் கண்ணில் தென்படாமல் இருக்கலாம்.. எனக்கும் என் அம்மாவுக்கு இது போல படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கதை சொல்வது அறவே பிடிக்காது..

இணையத்தில் படத்தை விமர்சனம் செய்வதற்கு பதில் முழு கதையையும் சொல்லி விடுகின்றார்கள் என்பதால் எந்த விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் படித்தது இல்லை.. படம் பார்த்து விட்டு வேண்டுமானால் ஒத்த ரசனையுடைய அல்லது நக்கல் வீட்டு எழுதும் அதிமேதாவிதனமான விமர்சனங்களை படிப்பது உண்டு.,. ஆனால் படம் பார்க்கும் முன் எதையும் படிக்கவே மாட்டேன்..

அதே போல இப்போது இன்னோரு டிரெண்ட்.. பேஸ்புக்கில் படத்தை பற்றி இரண்டு வரியில் நல்லா இருக்கும் நல்லா இல்லை என்று எழுதி விடுகின்றார்கள்... அப்படி நல்லா இல்லை என்று சொல்லும் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றேன்... நல்லா இல்லை என்று சொன்ன படங்களை பார்த்து ரசித்த இருக்கிறேன்.. அதில் பலது என்னை ஏமாற்றியது இல்லை... ரசனை வேவ்வேறாய் இருக்கும்...

அதே போல மெத்த படித்த இலக்கியவாதிகள் விமர்சனத்தை நான் வாசிப்பதே இல்லை.. காரணம் இலக்கியம் படித்தவர்களுக்கு தான் மட்டுமே அதிகம் தெரிந்தவன் என்பதை நிரூபிக்க படங்களை விமர்சிக்க எடுத்து, குத்தி கிழித்து விடுகின்றார்கள்.. பட் எந்த ஒரு கருத்தையும் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.. அது தவறு என்று சொல்லவும் கூடாது...

ஒரு வரி எனக்கு நினைவுக்கு வருகின்றது .. மெத்த படித்த இருவர் பேசிக்கொள்வது பைத்தியக்காரதனமாக இருக்கும்.. இரண்டு பாமரர்கள் பேசிக்கொள்வது அறிவாளித்தனமாக இருக்கும் என்று படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன...

முதலில் வசந்தபாலனுக்கு பாராட்டுகளை தெரிவித்து விடுவோம்...காரணம் வழக்கமாக அரைத்த மாவையே அரைக்காமல் 18ஆம் நூற்றாண்டு பக்கம் போனதுக்கு.... பேப்பரில் 18ஆம் நூற்றாண்டு என்று எழுதுவது மிக சுலபம்... எழுதியை படிப்பது அதை விட ரொம்ப சுலபம்.. ஆனால் 18ஆம் நூற்றாண்டை செல்லுலாய்டில் பதியவைப்பது பருப்பு எறைய வைக்கும் காரியம் என்பது பலருக்கு புரிவதில்லை..

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் வரலாற்று விஷயங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து, காதில் பூ சுற்றியது போல, இந்த படம் அந்த தவறை செய்யவில்லை என்பேன்..

நிறைய மொக்கையான உலகபடங்கள் பார்த்து இருக்கின்றேன்.. அது பல விருதுகளை கூட பெற்று இருக்கின்றது.அது போல இல்லாமல் இந்த படம் நன்றாகவே இருக்கின்றது..

18 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நகர , கிராமத்து மற்றும் கள்ளர் சமுகத்தை தமிழ் பட்ஜெட்டுக்கு முடிந்தவரை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்.. அதுக்காகவே பாராட்டப்படவேண்டும்...

aravaan-love-making1-586x419.jpg

==================

படத்தின் ஒன்லைன்...

காவல்காரன் வரிப்புலி (ஆதி) இருக்கும் ஊரில் ஒரு கொலை நடக்கின்றது.. ஊர் பலியாக ஆதி சூழ்ச்சியால் சிக்குகின்றான்.. கொலையாளி யார் என்ற உண்மையை கண்டறிந்தானா? என்பது தான் படத்தின் டூ லைன்...

===================

அரவான் படத்தின் கதை என்ன???

Aravaan.jpg

கதை நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டில் வேம்பூர் திருட்டு பசங்க வாழும் ஊர்.. தலைவன் கொம்பூதி (பசுபதி)... திருட்டே வாழ்க்கை .. திருட்டில் வரும் வருமானம்தான்.. அந்த கிராமத்து மக்களின் பசியை தீர்க்கின்றது..ஆனால் இவர்கள் வசிக்கும் வேம்பூரில் இருந்து வந்தவன் என சொல்லி துப்பு வாங்கி ஒரு சில கொள்ளைகள் நடக்க, அந்த கொள்ளை அடித்தவன் யார் என்று பார்த்தால் வரிப்புலி(ஆதி) என்பவன்..

இவர்கள் ஊர் பேர் சொல்லி அவன் கொள்ளை அடிப்பது தெரிகின்றது.. அவன் கொள்ளை அடித்த ராணியின் நகையை மீட்கும் இடத்தில் பசுபதி மற்றும் ஆதி நட்பாகின்றார்கள்.. யார் என்ன என்று விசாரிக்கும் போது அவன் தான் ஒரு அனாதை என்று சொல்லுகின்றான்..

அனால் பசுபதிக்கு ஆதி அனாதை இல்லை என்றும், அவன் பொய் சொல்லுகின்றான் என்று மனதை அரிக்கின்றது...படம் பார்க்கப்போனால் உங்களுக்கும் அந்த சந்தேகம் ஏற்ப்படலாம்..அவன் யார்? அவன் அனாதை என்று எது சொல்லவைத்தது.. போன்ற ஆர்வமிக்க விஷயங்களை தியேட்டரில் போய் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

==============================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

திருட்டு செய்ய கும்பலாக பசுபதி டீம் கிளம்பி போகும் போதே நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றார்கள். நிமிர்ந்து உட்கார வைக்கின்றார்கள்..

சரியாக பத்து நிமிடத்துக்கு மேல்....... அதிகமான டயலாக் இல்லாமல், பரபரப்பாக செய்து இருக்கும் அந்த திருட்டு சீன் கம்பபோசிஷன் அருமை..

18ஆம் நூற்றாண்டில் ஒரு கொலை... அப்பாவி ஒருவன் செய்யாத தப்புக்கு பலிக்கடாவாக மாறுகின்றான்.. அவன் அந்த கொலையை கண்டுபிடிக்க துப்பை தேடி பயணிக்கின்றான் என்று பரபரப்பான அசத்தலான கதை...

aravaan+movie+stills00-6.jpg

பசுபதி அசத்தி இருக்கின்றார்... அதே போல ஆதி உடல்மொழி நன்றாகவே இருக்கின்றது...உடம்பையும் அற்புதமாக வைத்து இருக்கின்றார்-.

தனிஷ்க்கா ஒரு பாட்டுக்கு உதடு சுழித்து ஆட்டம் போட்டு விட்டு, கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்து இருக்கின்றார்..

பரத் அஞ்சலி இருவரும் தங்களுக்கு திரைப்பட வாழ்க்கையில் திரும்பு முனை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் என்பதால் சின்ன கேரக்டரில் நடித்து தங்கள் விசுவாசத்தை காட்டி இருக்கின்றார்கள்.

பரத்தாவது பரவாயில்லை.. அஞ்சலி இரண்டு தீப்பந்தம் சுற்றி விட்டு இனிமே அவனை பார்க்கவே மாட்டேன்பா என்று ஒரு வரி டயலாக்கோடு பொட்டிக்கட்டி விடுகின்றார்...

பரத் கொடுத்து வைத்த ராசா.. பாளையத்து ராணி அம்சமா இருக்கறது போல என் கண்ணுக்கு படறார்... உதடு சுழித்து அத்தர் விற்க்க வரும் பரத்தை பார்க்கும் போது எனக்கு உள்ளம் சுழித்து போனது...

திருட்டுக்கு போகும் முன் செய்யும் முன் ஏற்பாடுகள்.. மற்றும் வாக்கு தவறாத மக்கள்.. அரசன் பேச்சை எதிர்பேச்சு பேசாத அப்படியே நம்பும் சமுகம்......ஜல்லிக்கட்டு,பெருமைக்காக யோசிக்காமல் இறங்கும் முன் கோபம், என்று நம் கண்முன் அந்தகாலத்து மக்களை அப்படியே பிரதிபலிக்க முடிந்தவரை இயக்குனர் வசந்தபாலன் முயன்று இருக்கின்றார்..

aravaan-pictures-024.jpg

படத்தல் சிரிக்க வைக்கும் டயலாக் பேசுபவர்... சிங்கம்புலி மட்டுமே.. பொண்டாட்டியை எப்படி வேனா பார்த்துட்டு போலாம்..ஆனா என்னோட மச்சினிச்சியை அப்படி பார்க்க என்னால அனுமதிக்க முடியாது என்று சொல்லும் காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்கின்றது...

ஒளிப்பதிவு சிறப்பு... லோ பட்ஜெட்டில் என்ன செய்ய முடியமோ? அதை சித்தார்த் செய்து இருக்கின்றார்.. நிறைய ஷாட் கம்போசிஷன்கள் ஆங்கில படத்தின் காட்சிகளை நினைவுக்கு வருவதை தவிற்க்க முடியவில்லை..

ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்..கொடுத்தவேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்...

வசனங்கள் இயல்பாய் இருப்பது படத்திற்க்கு பலம்..வசனம் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதி இருக்கின்றார்..

இசை பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போக முடியாது.. சில இடங்களில் ரசிக்க வைக்கின்றார்..பாடகர் கார்த்திக்.. சாரி இசைஅமைப்பாளர் கார்த்திக்.

படத்தில நிறைய குறைகள் இருக்கின்றது.. செல்போன் டவர் மற்றும் மின் உயர கோபுரம் இல்லாத இடமாக நான்கு மாதத்திற்கு மேல் லோக்கேஷன் தேடி அலைந்து இருக்கின்றார்கள்.. இந்த பெரிய வரலாற்று பட முயற்சிக்கு முன்னால் அதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

aravaan-pictures-080.jpg

18ஆம் நுற்றாண்டு வாழ்க்கை முறையையும் இன்னும் பல விஷயங்களை இந்த படம் இன்றைய தலைமுறைக்கு சொல்லுகின்றது.. இந்த பீரியட் படத்தை எடுக்க எடுத்த முயற்சிக்கு வசந்தபாலனுக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.

படக்குழுவினர் விபரம்.

Directed by Vasanthabalan

Produced by T. Siva

Screenplay by Vasanthabalan

Based on Kaavalkottam by

Su. Venkatesan

Starring Aadhi

Pasupathy

Dhansika

Archana Kavi

Music by Karthik

Cinematography Siddharth

Editing by Praveen K. L.

N. B. Srikanth

Studio Amma Creations

Distributed by Vendhar Movies[1]

Release date(s) March 2, 2012

Country India

Language Tamil

=======================

பைனல்கிக்.

இந்த படம் பத்தோடு பதினொன்று என்று சொல்ல முடியாது.. படம் முழுவதும் உழைப்பு விரவிக்கிடைக்கின்றது...சிலர் இந்த படம் மொக்கை என்று சொல்லுகின்றார்கள்.. அவர்கள் ரசனை அவ்வளவுதான்...

படம் பார்க்கும் போது அப்பகலிப்டோ,பிரேவ் ஹார்ட், கிளடியேட்டர் போன்ற படங்களில் வரும் காட்சிகளையும் கோணங்களையும் நியாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை....நன்றாக எழுத நிறைய படிக்க வேண்டும்.. அது போலத்தான் திரைப்படமும்...

நிறைய பார்த்த படங்களின் தாக்கம் இல்லாமல் எந்த திரைப்படத்தையும் எடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை...இந்த படம் தமிழில் நல்ல முயற்சி.. இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..

http://www.jackiesek...ravan-2012.html

நான் விமர்சனங்களை பார்த்த பின்னர்தான் படம் பார்க தொடங்குவேன்

, எனது நேரத்தை நான் வீண் விரயம் செய்வதில்லை, இந்த விமர்சனம் இந்த படத்தை என்னை பார்க்க தூண்டுகிறது. இனைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

முன்னூறு வருடத்திற்கு முன் உள்ள தமிழ் சமூகத்தின் வாழ்க்கையை கண்முன் ஓட விடுகிறார்.

  • உணவுக்காக களவு செய்யும் குழு. அக்களவையும் நேரம், திசை பார்த்து செய்யும் ஒழுங்கு.
  • கோவில் கட்டுவதற்கும், கிணறு வெட்டுவதற்கும் கூட நரபலி கொடுக்கும் சமூகம்
  • திண்டு கொளுத்து காமத்தில் புரளும் பளையத்துக் காரர்கள்.

பல விடயங்களை தொட்டுச் செல்கிறார். செலவராகவன் போல் அதீத கற்பனையை கலக்காமல் வரலாற்றை அதன் தன்மையிலே சொல்லியிருக்கிறார்.எனக்கு மிகவும் பிடித்தப் போனது. பார்க்க வேண்டிய படம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.