Jump to content

ஐ நா தீர்மானத்துக்கு வட பகுதி மக்கள் ஆதரவு!


Recommended Posts

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் வடக்கில் உள்ள மக்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பிரேரணையைத் தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்றும் ஒருவர் தெரிவித்தார். போரின் இறுதிக் காலத்தில் பிணங்களின் மீது தாம் நடந்து வந்ததாக கண்ணீரோடு குறிப்பிட்ட மற்றொருவர் பல பிணங்கள் பதுங்குகுழிகளிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறினார்.

போர் முடிந்தும் வடக்கில் தொடர்ந்து அதிக அளவிலான இராணுவத்தினர் இருப்பதால் சுதந்திரமாக நடமாடமுடியவில்லை தம்மால் சுதந்திரமாக ஏதும் கருத்து கூற முடியவில்லை என்றும் வேறு சிலர் கூறினர்.கட்டாய ஆள்சேர்ப்பு உள்ளிட்ட சில விடயங்களை விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்றாலும் அரசு தரப்புதான் அதிக அளவிலான அழிவுகளை ஏற்படுத்தியது என்று தமிழோசையிடம் தெரிவித்த ஒரு பெண்மணி, இனியாவது மக்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றார். கடந்த கால சம்பவங்களுக்கு பொறுப்பு சுமத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிங்களவர் கருத்து

வவுனியாவைச் சேர்ந்த சிங்களவரான ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமே நீதி வழங்கப்பட வேண்டும் என்ற தோரணையில் இந்த பிரேரணை அமைந்திருப்பது வருத்தத்திற்குரியது என்றார். .

"யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தமிழ் மக்களைப் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது. ஆனால் சிங்கள மக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றி பேசுவதற்கு எவருமில்லை. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நீதி வழங்குமாறு கேட்பதற்கும் எவருமில்லை. யுத்த காலத்தில் பௌத்த குருமார்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களது கொலைக்குக் காரணமானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு நீதி வழங்குவதற்குத்தான் எவருமில்லை" என்றார் அவர்.

http://www.bbc.co.uk...esolution.shtml

Link to comment
Share on other sites

வவுனியாவைச் சேர்ந்த சிங்களவரான ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற அதேவேளை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமே நீதி வழங்கப்பட வேண்டும் என்ற தோரணையில் இந்த பிரேரணை அமைந்திருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.

சிங்களத்தலைமைகள் மாதிரியே இவரின் கருத்தும் உள்ளது. கொன்றவர்களே விசாரிக்கவேண்டும் என்கிறார்கள் தலைமைகள். பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்காக யார்ரும் இல்லை என்கிறார் இந்த பாதித்த சிங்களவர். அடுத்தது சிங்கள அரசுடனேயே ஆட்சி செய்யும் முஸ்லீம்கள், தங்களுக்கும் தீர்வில் இடம் வேண்டுமாம்.

யாரை எவ்வாறு நோவது தமிழர்கள்?

Link to comment
Share on other sites

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் வடக்கில் உள்ள மக்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பிரேரணையைத் தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

ஈழ மக்கள் தெளிவாக உள்ளனர், தமக்கு என்ன வேண்டும் என்பதயும் கூறி வருகிறார்கள்.

ஐ.நா. ஊடான ஒரு சுயநிர்ணய வாக்குரிமையை நாம் அனைவரும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தாயாக மக்களின் மன உணர்வு எமக்கு தெரிந்திருந்தாலும், அதை முன்னணி ஊடகங்களில் செய்தியாக வருவது போரட்டத்துக்கு இன்னும் பலம் சேர்க்கும். இதை பீ.பீ.சி. தமிழில் மட்டுமே போட்டுள்ளது. ஆங்கில பதிப்பில் போடவில்லை. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.