Jump to content

'புற்றுநோயைத் தடுக்கும் ஆஸ்பிரின்': புதிய ஆய்வு


Recommended Posts

120321112025_aspirin_304x171__nocredit.jpg

ஆஸ்பிரின் மாத்திரையின் புற்றுநோய்க்கு எதிரான இயல்புகள் குறித்து புதிய நம்பிக்கை

தினந்தோறும் சிறிதளவு ஆஸ்பிரினை உட்கொள்வதன்மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்பதுடன் பெரும்பாலும் குணப்படுத்தவும் கூட முடியும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

மருத்துவ சஞ்சிகையான த லான்சட் இல் வெளியாகியுள்ள ஆய்வுகள், அஸ்பிரின் மருந்தின் புற்றுநோய்க்கு எதிரான இயல்புகள் குறித்த புதிய நம்பிக்கையை அளித்துள்ளன.

மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்காக பலர் தினந்தோறும் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது.

ஆனால், இந்த மருந்து புற்றுநோயையும் அதனால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளையும் தடுக்கக்கூடியது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லையெனவும், அதனால் வயிற்றில் இரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் அதிகரிக்கலாம் என்றும் ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்தனர்.

3-5 ஆண்டுகளில் முன்னேற்றம்

ஆனால் தற்போதைய புதிய ஆய்வை நடத்திய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ரொத்வேல், அஸ்பிரினால் சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று முன்னரே தெரிவித்திருந்தார்.- 10 ஆண்டுகள் போன்ற நீண்டகாலப்போக்கிலேயே ஆஸ்பிரின் மருந்தினால் நல்ல பலன்களைக் காணமுடியும் என்றும் அப்போது கூறப்பட்டது.

ஆனால் தற்போது 77 ஆயிரம் பேருக்கும் அதிகமான நோயாளிகளிடத்தில் நடத்தப்பட்ட 51 பரீட்சார்த்த ஆய்வுகளின்போது ஆஸ்பிரின் மருந்தினால் 3 இலிருந்து 5 ஆண்டுகள் வரையான காலப்பகுதிக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று பேராசியர் பீட்டர் ரொத்வேல் தலைமையிலான விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களை ஆஸ்பிரின் குறைப்பது மட்டுமன்றி, புற்றுநோய்கள் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதையும் அதனால் தடுக்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப்பேர், உயிரிழந்தவர்கள் எத்தனைப்பேர் என்பதற்கும் அவர்களின் ஆஸ்பிரின் உபயோகத்துக்கும் இடையே தொடர்பு இருக்கின்றமையே இந்த ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

75 முதல் 300 மைக்ரோ கிராம் வரை தினந்தோறும் அஸ்பிரின் உட்கொண்டவர்களிடத்தில் நடத்திய ஆய்வில் புற்றுநோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கால்வாசிப் பங்களவு குறைந்திருந்தது.

புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் 5 ஆண்டு காலப்போக்கில் 15 வீதத்தால் குறைந்திருப்பதாகவும் அவ்வாறே ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் அவர்கள் ஆஸ்பிரினை தொடர்ந்தும் எடுத்துக்கொண்டால் உயிரிழப்புகளின் வீதத்தை மேலும் 37 வீதத்தால் குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் வயிற்றுக்குள் இரத்தக் கசிவுகள் ஏற்பட இந்த நீண்டநாள் ஆஸ்பிரின் பாவனை காரணமாவதாக சுட்டிக்காட்டப்படுகின்றமையையும் இங்கு கவனத்தில் கொண்டாகவேண்டும்.

எது எவ்வாறு இருப்பினும் ஆரோக்கியமான மனிதர்கள் புகைத்தலைக் கைவிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற வழிமுறைகள் மூலம் புற்றுநோய் ஆபத்துக்களை இலகுவில் தடுத்துவிட முடியும் என்பதுதான் பேராசிரியர் ரொத்வேல் போன்றோர் அழுத்தமாகக் கூறுகின்ற விடயம்.

http://www.bbc.co.uk/news/uk-17468909

Link to comment
Share on other sites

ஆஸ்பிரின் - அதிசய மருந்து , குளுசை (Magic Pill) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்பிறின் நல்லதோ கெட்டதோ நான் கட்டாயம் டெய்லி விழுங்கோணும் :D ......அதுக்கையும் பலதராதரங்கள் இருக்கு.....மலிஞ்சகுளிசையளை போட்டால் வயித்திலை அப்பப்ப சின்ன விக்கனங்கள் வரும்.கொஞ்சம் விலைகூடின(100 குளிசை 8யூரோ) பாவிச்சால் பெரிசாய் பிரச்சனையள் இல்லையெண்டு சொன்னவ :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்பிரின் முழுமையாக நன்மை பயக்கக் கூடிய மாத்திரை அல்ல. அது ஆபத்தான பக்க விளைவுகளையும் உருவாக்கவல்லது. இருந்தாலும்.. அதன் மூலம் இப்படியான நன்மைகளும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக குறைந்த அளவு எடையுள்ள (low dose) மாத்திரைகளை தினமும் எடுப்பதே இந்த நன்மைக்கு வழி வகுக்கும் என்பதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் இவை இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டாக வேண்டிய நிலையில் இருக்கின்றன.

எனவே மக்கள் இந்த வகையான claims குறித்து சரியாக ஆராய்ந்து முடிவெடுப்பதும்.. இது குறித்து.. குடும்ப நல வைத்தியரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்..!

=======================================

Daily aspirin 'prevents and possibly treats cancer'

_59209208_jex_1356540_de50-1.jpg

Report author Professor Peter Rothwell: "There are risks of aspirin as well as benefits"Continue reading the main story

Related Stories

Taking a low dose of aspirin every day can prevent and possibly even treat cancer, fresh evidence suggests.

The three new studies published by The Lancet add to mounting evidence of the drug's anti-cancer effects.

Many people already take daily aspirin as a heart drug.

But experts warn that there is still not enough proof to recommend it to prevent cancer cases and deaths and warn that the drug can cause dangerous side effects like stomach bleeds.

Prof Peter Rothwell, from Oxford University, and colleagues, who carried out the latest work, had already linked aspirin with a lower risk of certain cancers, particularly bowel cancer.

But their previous work suggested people needed to take the drug for about 10 years to get any protection.

Now the same experts believe the protective effect occurs much sooner - within three to five years - based on a new analysis of data from 51 trials involving more than 77,000 patients.

And aspirin appears not only to reduce the risk of developing many different cancers in the first place, but may also stop cancers spreading around the body.

The trials were designed to compare aspirin with no treatment for the prevention of heart disease.

But when Prof Rothwell's team examined how many of the participants developed and died from cancer, they found this was also related to aspirin use.

http://www.bbc.co.uk...health-17443454

Link to comment
Share on other sites

அஸ்பிரின் கிட்டத்தட்ட ஒரு வருடத்திக்கு எனது குடும்ப நல வைத்தியரின் ஆலோசனையின் படி எடுத்துவந்தேன்... அஸ்பிரின் எடுக்கும் போது கண்டிப்பாக தண்ணீரில் நன்கு கரைத்த பின்பு சாப்பாட்டோடு சேர்த்தே எடுக்கும் படி அறிவுத்தப்பட்டிருந்தது. போனவருடம் அவசரமாக வைத்தியசாலைக்குப் போனபோது அங்கு என்னைப் பரிசோத்தித்த வைத்தியர் நான் அன்றாடம் மருத்துவரின் ஆலோசனையில் எடுக்கும் மருந்துகள் பற்றியும் அவற்றை எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்றும் கேட்ட போது எனது குடும்ப நல வைத்தியரின் ஆலோசனையின் பெயரில் எடுக்கும் மருந்துகளைக் குறிப்பிட்டேன், அதில் ஒன்று அஸ்பிரின். ஒரு வருடத்திற்குத் தொடர்ந்தது அஸ்பிரின் எடுப்பது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை என்று அதனை உடனே நிறுத்தும் படி அறிவுரை கூறினார். காரணம், குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குருதிக் கசிவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். அன்றோடு அதனை நிறுத்திவிட்டேன்!

Link to comment
Share on other sites

என்னத்துக்காக அஸ்பிரின் தினமும் எடுக்கிறது? நான் இதை பாவித்ததே இல்லை..! :unsure:

Link to comment
Share on other sites

என்னத்துக்காக அஸ்பிரின் தினமும் எடுக்கிறது? நான் இதை பாவித்ததே இல்லை..! :unsure:

Aspirin is called a "blood thinner" but it does not "thin" the blood: it makes the clotting time of the blood longer but there is no actual "thinning" involved. Platelets are small particles in the blood that cause blood clots to form. Aspirin prevents the platelets from forming blood clots. Therefore, aspirin can increase bleeding by preventing blood from clotting though it also can be used therapeutically to prevent clots from causing heart attacks and strokes.

http://wiki.answers.com/Q/Does_aspirin_thin_blood

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்பிரின் கிட்டத்தட்ட ஒரு வருடத்திக்கு எனது குடும்ப நல வைத்தியரின் ஆலோசனையின் படி எடுத்துவந்தேன்... அஸ்பிரின் எடுக்கும் போது கண்டிப்பாக தண்ணீரில் நன்கு கரைத்த பின்பு சாப்பாட்டோடு சேர்த்தே எடுக்கும் படி அறிவுத்தப்பட்டிருந்தது. போனவருடம் அவசரமாக வைத்தியசாலைக்குப் போனபோது அங்கு என்னைப் பரிசோத்தித்த வைத்தியர் நான் அன்றாடம் மருத்துவரின் ஆலோசனையில் எடுக்கும் மருந்துகள் பற்றியும் அவற்றை எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்றும் கேட்ட போது எனது குடும்ப நல வைத்தியரின் ஆலோசனையின் பெயரில் எடுக்கும் மருந்துகளைக் குறிப்பிட்டேன், அதில் ஒன்று அஸ்பிரின். ஒரு வருடத்திற்குத் தொடர்ந்தது அஸ்பிரின் எடுப்பது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை என்று அதனை உடனே நிறுத்தும் படி அறிவுரை கூறினார். காரணம், குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குருதிக் கசிவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். அன்றோடு அதனை நிறுத்திவிட்டேன்!

குட்டியர்!அஸ்பிரின் எண்டால் எல்லாம் ஒருமாதிரியில்லை அதுக்கையும் வேறைவேறை பிரிவுகள் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்துக்காக அஸ்பிரின் தினமும் எடுக்கிறது? நான் இதை பாவித்ததே இல்லை..! :unsure:

அவையள்! மாதத்திலை ஒருக்கால் வாற ரெஞ்சனுக்காகவும் எடுப்பினம்....அப்ப நீங்கள் கடமை,கண்ணியம்,கட்டுப்பாடெண்டு இருப்பியளாம். :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

குட்டியர்!அஸ்பிரின் எண்டால் எல்லாம் ஒருமாதிரியில்லை அதுக்கையும் வேறைவேறை பிரிவுகள் இருக்கு.

ஓம் கு.சா. அண்ணா... இருந்தாலும் 500mg இரண்டு அல்லது மூன்று வேளை எடுத்தால் கொஞ்சம் அதிகம் என்று தான் நினைக்கிறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் கு.சா. அண்ணா... இருந்தாலும் 500mg இரண்டு அல்லது மூன்று வேளை எடுத்தால் கொஞ்சம் அதிகம் என்று தான் நினைக்கிறன்...

நான் ஒரு நாளைக்கு ஒருக்கால் 100mg ASS Stada Protect .....500mg ?உங்கடை கணக்கிலை ஏதோ பிழை போலை குட்டி.

Link to comment
Share on other sites

எனக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதால் ஒவ்வொரு நாளும் 5 மில்லி கிராம் அஸ்பிரினை எடுக்கச் சொல்லி குடும்ப டாக்குத்தர் ஒரே சொல்லுவார்...ம்ஹும்...மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வாரன் இவ்வளவு நாளும்

Link to comment
Share on other sites

நான் ஒரு நாளைக்கு ஒருக்கால் 100mg ASS Stada Protect .....500mg ?உங்கடை கணக்கிலை ஏதோ பிழை போலை குட்டி.

6, 7 மாதங்களுக்கு மேல் 500mg தான் எடுத்திருந்தேன் கு.சா. அண்ணா... அதன் பின்பு 300mg க்கு குறைக்கப்பட்டது...

Link to comment
Share on other sites

எனக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதால் ஒவ்வொரு நாளும் 5 மில்லி கிராம் அஸ்பிரினை எடுக்கச் சொல்லி குடும்ப டாக்குத்தர் ஒரே சொல்லுவார்...ம்ஹும்...மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வாரன் இவ்வளவு நாளும்

நீங்கள் குளுசை போடாததன் விளைவை யாழில் தெரிகிறது. :lol::D:icon_idea: 15 நாள் முடியட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதால் ஒவ்வொரு நாளும் 5 மில்லி கிராம் அஸ்பிரினை எடுக்கச் சொல்லி குடும்ப டாக்குத்தர் ஒரே சொல்லுவார்...ம்ஹும்...மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வாரன் இவ்வளவு நாளும்

தொடர்ந்து இதுக்கையே நிண்டு என்னைப்போலை ஆக்களோடை டீல் பண்ணிக்கொண்டியளெண்டால் 500mgமுக்கு மேலைவரும் கவனம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தொடர்ந்து இதுக்கையே நிண்டு என்னைப்போலை ஆக்களோடை டீல் பண்ணிக்கொண்டியளெண்டால் 500mgமுக்கு மேலைவரும் கவனம் :icon_mrgreen:

எவ்வளவு இரத்தஅழுத்தம் வந்தாலும் உங்கள் இரண்டு பதிவுகளைப் பார்த்து சிரித்து விட்டால் வந்த அழுத்தம் பஞ்சாக பறந்து விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குளுசை போடாததன் விளைவை யாழில்  தெரிகிறது. :lol::D:icon_idea:  15 நாள் முடியட்டும்.

:lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Aprin பற்றி இன்றைய ரொரன்டோ ஸ்ராரில் வந்த ஒரு கட்டுரை மேலதிக சில தகவல்களை கொடுத்துள்ளது, மாரடைப்பு சில வகை புற்றுநோய்கள், ஸ்ரோக் போன்றவை வரமால் கட்டுப்படுத்தக் கூடியது என்று கூறியுள்ளனர். அதேவேளை அனைவரின் நாளாந்த பாவனைக்கு இதனை சிபாரிசு செய்ய முடியாதளவுக்கு இதனை தொடர்ந்து உண்டால் சில பின்விளைவுகளும் ஏற்படுமாம்

Is Aspirin a miracle drug?

More and more research is emerging on the benefits of taking a low daily dose of the cheap painkiller — from preventing heart attacks and strokes to possibly preventing different forms of cancer.

Why, more than 100 years after it was discovered, is Aspirin still surprising the medical community?

“(It’s) a combination of factors: it’s been around a long time, a lot of people use it, a lot of people are studying it, and there’s a lot of information on its use in the laboratory setting, which provides us with a lot of data to really understand its potential uses,” says Dr. Andrew Chan, an associate professor of medicine at Harvard Medical School and assistant professor of medicine, gastroenterology at Massachusetts General Hospital.

HISTORY

German chemist Felix Hoffman, working for eventual international pharmaceutical giant Bayer, created acetylsalicylic acid (ASA) in 1897 in chemical form. Two years later, Bayer began selling the drug under the trade name Aspirin.

It has been used for decades to relieve headaches, muscle aches and fever.

In the 1970s, British pharmacologist John Vane discovered the science behind Aspirin’s anti-inflammatory properties — the pain reliever stops the production of hormone-like substances called prostaglandins by blocking an enzyme in the body known as cyclooxygenase.

Vane was awarded the Nobel Prize in medicine in 1982 for his research.

A daily low dose (around 75 milligrams) of the anti-inflammatory has also been said to reduce the risk of cardiovascular disease, ease arthritis pain and stop the formation of blood clots, since it acts as a blood thinner.

Aspirin’s image as a “preventive agent” got a boost last month with a series of studies in medical journals The Lancet and The Lancet Oncology focusing on how the pain reliever can reduce the risk of cancer deaths.

Oncologists already know that a long-term, low daily dosage of Aspirin may reduce cancer-related deaths, specifically colon cancer. But the latest studies, led by Dr. Peter Rothwell, professor of clinical neurology at the University of Oxford, found that daily Aspirin also has the potential to prevent and to stop the spread of certain forms of cancer when taken in short — three- to five-year — periods.

In one study Rothwell and his team found that after taking Aspirin daily for three years the threat of developing cancer was cut to about 25 per cent compared to those not taking the drug; after five years of taking the painkiller, the risk of dying from cancer was cut to 37 per cent.

TRANSFORMATIVE DRUG

“Aspirin clearly has benefits beyond what we previously considered,” says Chan, who wrote a commentary in The Lancet on Rothwell’s studies.

Due to Aspirin’s potential to fight two leading causes of death in the developed world — cancer and cardiovascular disease — plus the ongoing research around it, it’s fair to call it “a transformative drug” in terms of disease prevention, he says.

Next may be discovering if Aspirin can prevent dementia, Chan says.

SIDE EFFECTS

Despite the discoveries, Aspirin’s side effects pose serious concerns.

Chan says it’s too early for the drug to be recommended on a daily basis for the general public as side effects include gastrointestinal bleeding, bleeding strokes and brain hemorrhaging.

More data needs to be collected before it becomes a general recommendation, Chan says.

“At this point . . . I think people need to individualize their use of Aspirin and discuss it with their doctors to determine whether the potential benefits . . . outweigh the risks,” he says.

http://www.thestar.com/news/world/article/1160448--aspirin-still-surprising-the-medical-community-more-than-100-year-later

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.