Jump to content

கள விதி மீறல்களை கள உறவுகள் சுட்டிக்காட்டும் பக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம்.

இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவும் உதவும்..!

இங்கு சுட்டிக்காட்டிய பின்னும் கள விதிகள் தீவிரமாக தொடர்ந்து மீறப்பட்டு வந்தால் report மூலமோ தனிமடல் மூலமோ.. விதி மீறல்களை நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைப்பது நன்று. அது அவர்களுக்கு விதி மீறல்களை துரிதமாக இனங்காணவும்.. நடவடிக்கை எடுக்கவும்.. விதி மீறல்கள் தொடர்பான எச்சரிக்கை அல்லது அறிவுரை வழங்கவும் நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட உதவியாக இருக்கும்..!

நன்றி

நட்புடன் நெடுக்ஸ்.

களவிதி:

3. மொழி

  • யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும்.
  • ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:

    • அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும்.
    • அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும்
    • அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்

விதி மீறப்பட்ட சில தலைப்புக்கள்:

Brian Stewart: Why Canada is calling Sri Lanka to account Human rights violations are too big to ignore, Canada and the UN now say

http://www.yarl.com/...showtopic=99776

ANTHA NODIYIN NUNIYIL...TAMIL SHORT FILM

http://www.yarl.com/...=0

Bangladesh beat Sri Lanka to reach finals of Asia Cup

http://www.yarl.com/...=0

No more Coke .Pepsi, Sri Lankan monks

http://www.yarl.com/...showtopic=99761

(களவிதி மீறலுக்கு மேலாக.. இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் ஆங்கில மொழி அறியாத தமிழ் மற்றும் வேற்றுமொழி அறிந்த கள உறவுகள் சங்கடங்களை எதிர்நோக்க வேண்டி வரும்... என்பதை கவனத்தில் கொள்ளுதல் நன்று.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், சொந்தக் காசிலை, தனக்கே... சூனியம் வைக்கிறார். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், சொந்தக் காசிலை, தனக்கே... சூனியம் வைக்கிறார். :D:lol:

எல்லாரும் நல்ல பிள்ளையா இருந்தா.. நல்ல பிள்ளையா இருக்கிற நாங்கள் அப்படி இருப்பதில் சிரமம் இல்லைத் தானே சிறியண்ணா. இது சிலர் தவறு விட.. அது நம்மளையும் கெட்ட பிள்ளை ஆக்கிறதும்.. அதுக்கு பிறகு இவன் கெட்டவனுன்னு திட்டிட்டு திரியுறதிலும்.. இது நல்லது தானே. :):icon_idea:

Link to comment
Share on other sites

இந்த ரணகளத்திலும் அப்புச்சிக்கு ஒரு ,

ஒரு தனி தலைப்பு ஆரம்பிச்சு ..

I-Love-Myself-And-That-Is-All-That-Matters.jpg

உறவுகள குழப்புற /புகழுறகிளூகிளுப்பு

வேண்டிகெடக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரணகளத்திலும் அப்புச்சிக்கு ஒரு ,

ஒரு தனி தலைப்பு ஆரம்பிச்சு ..

I-Love-Myself-And-That-Is-All-That-Matters.jpg

உறவுகள குழப்புற /புகழுறகிளூகிளுப்பு

வேண்டிகெடக்கு!

நாங்கள் தங்களுக்கு முன்னரே ஒரு தலைப்பில் கூறி இருக்கிறோம்.. எங்களோடு நீங்கள் அநாவசியமான கருத்துப் பகிர்வை வைத்துக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று. மீண்டும் மீண்டும் ஆட்களைச் சீண்டிக்கொண்டிருந்தால்.. பதிலுக்கு நாமும் சீண்ட.. களம் சீரழிவதே நிகழ்கிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். களத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. உங்களின் வரவின் நோக்கமும் அதுவோ என்ற வலுவான சந்தேகம் இப்போ எமக்குள் தீவிரமாக ஏற்பட்டுள்ள நிலையில்.. தங்களைப் போன்றோரின் உபயோகமற்ற சீண்டல்களுக்கு பதிலிறுப்பதில்லை என்ற திடமான முடிவுக்கு வந்திருக்கிறோம்.

புரிந்து கொண்டு எம்மிடம் இருந்து தூர விலகி நின்று கொள்வது உங்களுக்கும் எமக்கும் களத்திற்கும் நல்லது.

நன்றி..!

நட்புடன் நெடுக்ஸ்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம்.

இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவும் உதவும்..!

இங்கு சுட்டிக்காட்டிய பின்னும் கள விதிகள் தீவிரமாக தொடர்ந்து மீறப்பட்டு வந்தால் report மூலமோ தனிமடல் மூலமோ.. விதி மீறல்களை நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைப்பது நன்று. அது அவர்களுக்கு விதி மீறல்களை துரிதமாக இனங்காணவும்.. நடவடிக்கை எடுக்கவும்.. விதி மீறல்கள் தொடர்பான எச்சரிக்கை அல்லது அறிவுரை வழங்கவும் நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட உதவியாக இருக்கும்..!

நன்றி

நட்புடன் நெடுக்ஸ்.

களவிதி:

விதி மீறப்பட்ட சில தலைப்புக்கள்:

Brian Stewart: Why Canada is calling Sri Lanka to account Human rights violations are too big to ignore, Canada and the UN now say

http://www.yarl.com/...showtopic=99776

ANTHA NODIYIN NUNIYIL...TAMIL SHORT FILM

http://www.yarl.com/...=0

Bangladesh beat Sri Lanka to reach finals of Asia Cup

http://www.yarl.com/...=0

No more Coke .Pepsi, Sri Lankan monks

http://www.yarl.com/...showtopic=99761

(களவிதி மீறலுக்கு மேலாக.. இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் ஆங்கில மொழி அறியாத தமிழ் மற்றும் வேற்றுமொழி அறிந்த கள உறவுகள் சங்கடங்களை எதிர்நோக்க வேண்டி வரும்... என்பதை கவனத்தில் கொள்ளுதல் நன்று.)

களவிதிகளை மீறியுள்ளதை சுட்டிக்காட்டிய நெடுக்ஸ்க்கு முதலில் நன்றி

தற்போது திருத்தம் செய்துள்ளேன், தவறுக்காக நிர்வாகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 30 நாள்கள் கள விதியை கடப்பிடித்து என்னத்தை பெரிசா சாதிக்க போகிறோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்.. இதோ உயிர் போகப் போகிறது என்று வரும் நோயாளிக்கும் உயிர் காக்கின்ற உதவுகின்ற நாங்கள் எங்களுக்கு இணைய வழி.. தமிழ் அறிவூட்டிய ஒரு அன்னையான யாழுக்கு உயிர் கொடுக்க பின்னிற்க மாட்டோம்..!

மோகன் அண்ணா தனது முடிவை மாற்றி அறிவிக்க அவரின் மனதோடு மனச்சாட்சியோடு பேச வேண்டின் நாங்கள் எங்களின் தவறை திருத்தும் பக்குவத்தைக் கொண்டவர்கள் என்பதை அவருக்கு உணர்த்தவும் அதைச் செயலில் காட்டவும் வேண்டும்..! அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பும்..ஒற்றுமையுமே அவசியம்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவிதிகளை மீறியுள்ளதை சுட்டிக்காட்டிய நெடுக்ஸ்க்கு முதலில் நன்றி

தற்போது திருத்தம் செய்துள்ளேன், தவறுக்காக நிர்வாகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன்.

நல்ல முன்மாதிரியான நடவடிக்கை. பாராட்டுக்கள் தமிழரசு..! இப்படி நாங்கள் எல்லோரும் ஒற்றுமையோடு கருத்தொருமிப்போடு விட்டுக்கொடுத்து நடப்பின் பல பிரச்சனைகள் தீர வழி ஏற்படும். மோகன் அண்ணாவிற்கும் களத்தை நடத்தனும் என்ற ஒரு ஆர்வம்.. ஆசை ஏற்படும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.