Jump to content

அறிவித்தல்


Recommended Posts

களவிதிகளை மீறி பிரச்சனைகளை உருவாக்கிய உறவுக்கும், அதனை ஆதரித்து தலைப்புகளை ஆரம்பித்த சக உறவுகளுக்கும், பொறுப்பாளர் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் மோகன் அண்ணாவின் மனம் நோகும் படி நடந்து கொண்ட உறவுக்கும் நன்றிகள்... <_< <_< <_<

பகலவனின் கருத்தை வழிமொழிகிறேன்..! 2014 வரையிலாவது இக்களத்தை இழுத்து நடத்தினீர்களென்றால் நல்லது..! அதற்கான உதவிகளை நான் உட்பட பலர் செய்யக் காத்திருக்கிறார்கள்..! குழப்பம் விளைவிப்பவர்களை நீக்கிவிடுங்கள்..!

இசையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன் மோகன் அண்ணா...

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குதான் ஏழரை சனி எண்டால் யாழுக்குமா ?எனக்கு தான் அடிமேல் அடி போல கிடக்கு.எப்பிடிஎன்டாலும் ஏதாவது மனத்தாக்கம் வரும் போது யாழ்தான் ஒரு வடிகாலாக இருந்தது.அந்தவகையில் யாழுக்கும் மோகன் அண்ணாக்கும் மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா 13 வருடம் பூர்த்தி ஆகி 14 ஆவது வருடம் ஆரம்பிக்கும் மார்ச் 30 அன்று தளத்தை மாற்றி அமைத்து புதிய வடிவில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு அதற்காக நேரத்தினையும் பணத்தினையும் செலவழித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு இணையவன் தன்னாலான அனைத்து உதவிகளையும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரங்களில் செய்து கொண்டு இருந்தார். இருவருக்கும் சொந்த வாழ்க்கை, தொழில் என்பன இருந்தும் அவற்றுக்கான நேரம் போக கிடைக்கும் சில மணித்துளிகளில் தான் யாழை மாற்றி அமைத்து வேறு வடிவில் கொண்டு வர முயன்று கொண்டு இருந்தனர்.

இவ்வாறு யாழ் அடுத்த கட்டத்தினை நோக்கி அடி எடுக்கும் போதுதான், யாழை நிர்மூலமாக்கியே தீருவோம் என்று புறப்பட்டு சாத்திரியின் தடையை தமக்கு சாதகமாக்கி எல்லா வழிகளிலும் நிர்வாகத்தையும் மோகன் அண்ணாவையும் அவமானப் படுத்தி யாழை மூடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். இதில் ஈடுபட்டவர்களின் பெயர்களை முதல் வரிகளில் எழுதி விட்டு மோகன் அண்ணா அவர்களின் பெயரை வெளிவிடுவதை விரும்பமாட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அழித்து விட்டு தொடர்கின்றேன்.

எம் இனத்தின் சாபம் இங்கும் தொடர்கின்றது. எதிரிகளால் நிறுத்தப்படாத யாழ் எம் இனத்தின் கோடாரிக் காம்புகளால் நிறுத்தப்படுகின்றது.

மோகன் அண்ணாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஒரு இழி இனமான எமக்கு மோகன் அண்ணா போன்றோரும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்திலும் யாழை மெருகூட்ட எந்த வித பிரதிபலனும் இல்லாமல் மினக்கெட்ட இணையவன் போன்றோரும் தேவையில்லை. இவர்கள் இருவரும் சிங்கள இனத்தில் பிறக்காத தவறைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 'அம்மா' என்று முதல் மொழி சொல்வதற்கு பதிலாக 'அம்மே' என்று சொல்லி இருந்தால் இன்று இவர்களை சிங்கள இனம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்.

இதுக்கு மேலும் எழுத முற்படும் போது தூசனம் தான் வருகின்றது....

நன்றி

Link to comment
Share on other sites

காலையில் திண்ணையில் எழுத முயன்று முடியாமல் ஏமாந்து போய்விட்டேன்.

30ம் திகதியை வெகு விமர்சையாக கொண்டாடி மோகன் அண்ணாவை மகிழ்வித்து விடுங்கள். யாழ் 100 ஆண்டு காலம் வாழட்டும். இந்த திரியை அதற்கான வழிகளை ஆராயும் திரியாக மாற்றிவிடுங்கள் .

யாழ் போனால் நம் எல்லோராலும் தான் போனதாக வைத்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் கைகொடுத்தால் நிச்சயமாக மோகன் அண்ணாவுக்கு சாத்திரியாரின் விடையத்தை கையாள முடியும் என்று நம்புங்கள். எனவே யாழை கையில் எடுக்க முயலாமல் கருத்துகளை மட்டும் எழுதி பிரச்சனைகளைத் தீர்க்க முயலுங்கள்.

நாம் எல்லோரும் பிழைகள் விட்டிருக்கிறோம். நமது வீக்கத்திகேற்ப எதையாவது சாதித்துமிருக்கிறோம். ஆனால் யாழை எங்கள் எல்லோரையும் இணைத்து மோகன் அண்ணா இதுவரையும் நடத்தி வந்தது சாதனையே.

Link to comment
Share on other sites

பகலவனின் கருத்துக்களை ஆமோதித்து, இன்று என்றுமில்லாத ஒரு கால கட்டத்தில் எமது தாயக மக்கள் போராட்டம் நுழைந்துள்ள நிலையில் யாழ்கள தேவைகள் தொடரவேண்டும்.

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

முற்றுமுழுதாக உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன் அகூதா

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, தயவு செய்து யாழை மூடாதீர்கள். நான் யாழில் எழுதுவது குறைவுதான். ஆனால், யாழின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருக்கிறேன். உங்கள் களவிதிகளைக் கடுமையாகக் கடைப்பிடியுங்கள் அண்ணா. களவிதிகளை மதிக்காதவர்களைக் களைந்து விட்டு மேற்கொண்டு யாழை நடத்துங்கள். களவிதிகளை மதிப்பவர்களை மட்டும் கொண்டு யாழை நடத்துங்கள்.

இந்தப் புல்லுருவிகளுக்காகவெல்லாம் யாழை மூடாதீர்கள். வேறு காரணத்திற்காக மூடுவதாக இருந்தாலும் தயவு செய்து இந்த சந்தர்ப்பத்தில் மூடாதீர்கள். அப்படி மூடுவீர்களானால், அந்தப் புல்லுருவிகளுக்குப் பயந்து மூடுவதாக அவர்கள் வெற்றிக் களிப்பில் இருப்பார்கள். உங்களுக்கு அப்படியான ஒரு பெயர் வரக்கூடாது அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா இது அதிர்ச்சியான செய்தி, ஒரு பருவ வயதை எட்டும் யாழை இழுத்து மூடுவது, எமக்கு மட்டுமல்ல, யாழின் வாசகர்களுக்கும்தான் அதிர்ச்சி,

ஈழ மக்களுக்கான எஞ்சிருக்கும் ஒரு உறவு பாலத்தை தயவு செய்து மூடிவீடாதீர்கள்

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா இணையத்தை மூடுவது பற்றி மீள் பரிசிலனை செய்யமுடியாதா ? என்னைப்போன்றோருக்கு பெரிய இழப்பு மூடாதேங்கோ மோகன் அண்ணா அன்பாக கேட்டு கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

அகூதா அவர்களின் கருத்தே என்னுடையதும்.

நேற்றுத்தான் யாழில் இணைந்தேன். ஆனாலும் பலகாலமாய் யாழின் வாசகன்.

மோகன் அவர்கள் தனது முடிவை மாற்றுவார் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

கோடாரிக் காம்புகளுக்காக யாழை மூடுவது வெட்கக்கேடானது. இவர்களை கட்டாயம் யாழ் கள உறுப்பினர்கள் எல்லாருக்கும் வெளிப்படுத்த வேண்டும்.யாழ் கழத்தில் வாதிட முடியாமல் மோகன் அண்ணாவுக்கு மிரட்டல் விடுபவர்கள் தமிழராக இருக்க லாயக்கற்றவர்கள்.

யாழ்க்களத்தை இவ்வளவு காலமும் கொண்டு நடாத்திய மோகன் அண்ணாவுக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட எத்தனையோ சோதனைகள் வந்த போதெல்லாம் கலங்காக மோகன்

இப்போது இப்படியான முடிவை எடுத்திருப்பது வேதனையழிக்கிறது.

எதிரிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

அடுத்த ஆண்டிற்கான ஆயதங்களை தொடங்கிவிட்டு பின்னர் மூடதீர்மனித்திருப்பதேன்பது மனதை கொஞ்சம் நெருடுகின்றது .

கருத்துகளத்தில் எழுதுவதுடன் எனது அலுவல் முடிந்துவிடும் ,உள்ளே அப்படி என்ன பாரதூரமாக நடந்ததோ எனக்கு தெரியாது .

தனிநபர் தாக்குதல் என்று ஒன்றை (அது யார் மீதாகவும் இருக்கலாம் ) அனுமதித்தால் அது என்றோ ஒரு நாள் பிரச்சனைக்கு அடிகோலிவிடும் என்று மட்டும் உணர்ந்திருந்தேன் ,

முடிவை மீள்பரிசீலனை செய்து, விதிகளை சற்று இறுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்திற்குரிய விதிகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படுதல்

கருத்துக்களம் சின்னாபின்னமாகி அதற்குரிய தனித்துவத்தை இழந்துவிடுதல்.

பத்தோடு பதினொன்றாக சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ப யாழ் மாறுதல்

போன்ற நிலைமைகள் ஏற்படின் இதுவரை காலமும் யாழ் நடைபோட்ட பாதை களங்கமுறும்.

சிலரின் நிதானம் இழந்த செயல்கள் ஒரு கருத்துக்களத்தை முடக்கும் சக்தி வாய்ந்ததா?

இருந்தகாலம் வரையும் நிமிர்ந்து நின்றோம் என்ற பெருமையோடு நிறுத்தப்படுவதே சிறப்பிற்குரியது.

ஒரு பொதுத்தளத்தில் ஒரு சின்ன விடயத்தை செய்ய முற்பட்டாலே எவ்வளவு சவால்களையும் சங்கடங்களையும் தாண்ட வேண்டி இருக்கிறது. மோகனண்ணா நீங்கள் உங்கள் அமைதியைத் தொலைத்து இந்த சமூக வலைத்தளத்தால் மன உளைச்சல்களையே அதிகம் பெற்றிருப்பீர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே....

சில கருத்துக்களை வாசிக்கும் எமக்கே நிம்மதி தொலையும்போது அதனை அகற்றும் அல்லது மாற்றம் செய்யச் சொல்லி பதிவிட்டவரை அணுகும் மட்டுறுத்தினர்களுக்கு எவ்வகையான மனோநிலை ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது.

நிர்வாகத்தினரை கருத்தாளர்கள் உதாசீனப்படுத்துவதும், விதிமுறைகளை உதாசீனம் செய்வதும் கருத்துக்களத்திற்கு வெளியே நிர்வாகத்தினர் கொடுக்கும் எச்சரிக்கை மடலை பலருக்கு அனுப்பி உண்மையான நிலையை அறியாத அவர்களை, நிர்வாகத்திற்கு எதிராக எழுத உந்துவதும் இந்தக்கருத்துக்களத்தில் உலவும் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு விடயமாக இருக்கிறது. சமீப காலமாக இது ஒருவகைச் சுயவிளம்பரமாகவும் பயணிப்பதை அவதானிக்கமுடிகிறது. அந்தச் சுயவிளம்பிகளை இங்கு வெளிச்சம் போட்டுக்காட்டத்தேவையில்லை அநேகமாக பலருக்குத் தெரியும்.

இத்தகையோரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டால் போதும்.

இந்தக்கருத்துக்களம் நிறுத்தப்பட்டால்..... அண்மைக்காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்ற தடையின் நிமித்தம் இந்தக்கருத்துக்களம் சறுக்குண்டு அதன் நிமித்தம் நிறுத்தப்பட்டதாய் நிறையச் செய்திகள் தந்தியடிக்கும். புதிய உறுப்பினராக இருந்தாலும் பழைய உறுப்பினராக இருந்தாலும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவேண்டும். இன்று இணைய உலகில் யாழ் கருத்துக்களம் ஒரு நேர் கோட்டில் வாளின் கூர் முனையில் நிற்பதை உணர முடிகிறது. ஒரு பெரும் படைப்பாளி என்பதற்காக விதிமுறைகளைத் தளர்த்தினால் தொடர்ந்தும் மற்றவர்களுக்காகவும் மீண்டும் மீண்டும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் யாழ் கருத்துக்களம் அந்நிலைக்குத் தள்ளப்படும்.

யாழ் இணையம் இயங்கவேண்டும்

அதற்கு எவ்வகையில் என்னால் உதவ முடியும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்

யாழ் இணையத்தை மூடாதீர்கள் என்று மோகனண்ணாவிடம் கேட்க முடியாது.....

யாழ் கருத்துக்களம் தொடர்ந்து இயங்கினால் மகிழ்வடைவேன் .. நிறுத்தப்பட்டால் தாங்கிக் கொள்வேன்.

Link to comment
Share on other sites

செயல்படும் ஈழ இணையங்களில் மிகச் சிறப்பாக, சுயாதீனமாக செயற்பட்ட தளம். மோகனிற்கும் நிர்வாகத்திற்கும் நன்றி.

திண்ணையில் பிரச்சனைகள் ஆரம்பித்து, கருத்துக்களத்தில் பரவுவதை பகிடியாக 'யாழ் ஆளுமன்றத்தில்' பகிடியாகச் சொல்லி இருந்தேன்.

தங்கள் படைப்புக்களை பிரபலப்படுத்த பலர் இந்தக் களத்தை பயன்படுத்துகின்றனர் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நிழலி

யார் அந்தக் கோடாரிக்காம்புகள்.

கோடரிக்காம்புகளின் பெயர்களை, யாராகினும் துணிந்து கூறலாமே?

Link to comment
Share on other sites

இணையவெளியில், தமிழில், யாழ் களத்தில் மட்டுமே எழுதியுள்ளேன் என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளை மோகனிற்குத் தெரிவித்துக் கொள்வதோடு யாழின் முடிவு சார்ந்து கவலையினiயும் பதிவுசெய்து கொள்கிறேன்.

விவாதங்கள் வழியாக எவரையேனும் சங்கடப்படுததியிருந்தாலோ காயப்படுத்தியிருந்தாலோ மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

இது உங்கள் கண்டுபிடிப்பு? அதை மோகன் சொல்லட்டும் நான் விலகிக்கொள்கின்றேன். அடுத்தவனை நோக்கி விரலைக்காட்டாமல் யாழ் நிலைப்பதற்கு நீங்கள் எதை உருப்படியாய் செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்!

யாழை தொடர்ந்து நடத்துவதும் நடத்தாமல் உங்கள் தனிப்பட்டபிரச்சனை.ஓடுற வண்டியில் என்னைப்போன்றவர்கள் சேர்ந்து ஓடினமே தவிர....அதன் அனைத்து வலிகளும் சுமைகளும் தெரிந்திருக்கவுமில்லை.நீங்களும் அப்படித்தான் எங்களை நடத்தினீர்கள்!பல இடங்களில் கேள்விகளை கேட்டுவிட்டு அல்லது ஒரு விடயத்தை ஆரம்பித்துவிட்டு அதன் பதில்களுக்கு எந்தவொரு கருத்துக்களோ பதில்களோ நீங்கள் கொடுக்கவில்லை.சில இடங்களில் உங்கள் பதில்களுக்கு மூக்குச்சாத்திரம் பார்கவேண்டிய நிலையும் இருந்தது.

களம்,குடும்பம் என்றால் பலதும்பத்தும் இருக்கத்தான் செய்யும்.எடுத்ததிற்க்கெல்லாம் நல்லதே நடக்குமெனநினைத்தால் அது தவறு.எல்லோரும் நல்லதையே செய்வார்கள் எனநினைத்தால் அதுவும் தவறு.கூடப்பிறந்த சகோதரங்களுகிடையே ஆயிரம் வெட்டுப்பகை குத்துப்பகைகளை நேரடியாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.பெற்றதாய் தகப்பனையையே கவனிக்காத பிள்ளைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது இந்த உலகம்.

உதாரணத்திற்கு எமது விடுதலைப்போராட்டத்தினை அன்று தொடக்கம் கவனித்துப்பாருங்கள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் அழிவுகள்.

யாராக இருந்தாலும் யாழில் இடையூறு செய்பவர்களை (நானும் அடக்கம்)வெளியேற்றி விட்டு சிறந்தபடியாக யாழை முன்னெடுத்து செல்வதுதான் அழகு.இல்லை யாழ்களம் மூடப்படும் எடுத்தமுடிவு எடுத்ததுதான் என்றால் யாரால் என்ன செய்ய முடியும்?

இதுவரை காலமும் இங்கே நல்ல ஆக்கங்களை தந்தவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?.......பதிவெடுத்துக்கொள்ளுங்கள்???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மோகன் அண்ணாவின் உழைப்பினை புரியாது விட்ட வேதனையைப் புரிந்து கொள்கின்றேன். இதுவரை காலமும் யாழிற்காக செலவளித்த நேரம் மட்டுமல்லாமல், நேர்மை, சகிப்புத்தன்மை, இரகசியம் பேணல் தொடர்பான அனைத்து உயர் பண்புகளுக்குமாக மரியாதை செய்கின்றேன்.

புதினம் இணையத்தின் சகோதர இணையம் போலச் செயற்பட்ட இத்தளம், புதினம் முள்ளிவாய்க்கால்  துயரத்தோடு தன்னை நிறைவுசெய்த காலம் முதல், யாழும் விருப்பத்தோடு, விரும்பமின்றி இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம். நிச்சயமாக கடந்த 6 வருடங்களாகப் பழகித் தொடர்பில் இல்லாது போன பல உறவுகளை நினைவில் கொள்கின்றேன்.

எல்லாக் காலத்திலும் சண்டை, சச்சரவு, இருந்தது தான். ஆனால், அன்று நமக்கென்று எல்லோருமே இருந்தார்கள். நம் சொந்தங்கள், தலைவர், போராளிகள், உறவுகள்.... ஆனால் அதை இழந்து நிர்கதியாக ஆறுதல் தேடுகின்ற சூழலில், எரிச்சல்படுத்தும் விதமாக களத்தில் நடந்து கொள்ளும் விதம் சரியானதாகத் தெரியவில்லை என்பது தான் தனிஎன்றோ

என்றோ ஒருநாள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு.. அது சாத்தியமாக வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

தங்கள் சித்தமே எங்கள் பாக்கியம். உங்களின் மனநிலையில் வேறு சிலரும் இங்குளர் என்பதையும் நாங்களும் அறிவோம்..!

இதன் மூலம் யாழ் தொடர்ந்து இயங்கும் என்பதை மோகன் அண்ணா உறுதி செய்தால்.. நாம் நிச்சயமாக எமது ஐபி தடை செய்யப்பட கேட்டு.. இதில் இருந்து மிக மகிழ்ச்சியாக வெளியேறிக் கொள்வோம். எம்மால் எமது இனத்துக்கு நிகழப் போகின்ற ஒரு இணைய இழப்பை இவ்வழியில் தடுக்க முடியும் என்றால் நிச்சயம் அதை நாங்கள் செய்யத் தயாராகவே உள்ளோம்..!

யாழில் கற்றுக் கொண்ட இணையத் தமிழால் யாழில் எழுதப்பட்ட ஆக்கங்கள் யாழோடு சங்கமமாவதையே நாங்கள் விரும்புகின்றோம்..! எங்களுக்கும் எழுத இடமளித்த யாழிற்கு நன்றி..!

எங்களுக்கு யாழில் உள்ளவர்கள் எவரோடும் தனிப்பட்ட தொடர்புகள்.. தொடர்பாடல்கள் கிடையாது..! நாம் தொடர்ந்தும் அந்த நிலையைப் பேணுவதோடு.. யாழ் நிர்வாகத்திற்கு வெளியில் இருந்தோ உள்ளிருந்தோ.. இடர்கள் குறைகள் செய்ததும் இல்லை..! செய்யப் போவதும் இல்லை..! அந்த வகையில் எமது வெளியேற்றம் யாழை தொடந்து இயங்கச் செய்யும் என்ற வினீத் என்பவரின் அதி உச்ச கண்டுபிடிப்பை மதித்து.. மோகன் அண்ணா யாழை தொடர்ந்து இயங்க வைக்க எங்களை வெளியேற்றுவது குறித்து எந்த வித சங்கடங்களும் இன்றி முழுச் சுதந்திரத்தோடு முடிவெடுக்க இதயபூர்வமாக சம்மதிக்கிறோம்..!

நிச்சயம் ஒரு நாள் நியாயமும் உண்மையும் சத்தியமும் வெல்லும்..!

நன்றி.

என்றும்

நட்புடன் நெடுக்ஸ்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

மிக கவலையளிக்கும் முடிவு.

மோகன் தயவு செய்து உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள்.

தமிழினம் தன்னை நிலைநிறுத்தும் வரை தொடர்ந்து யாழை இயக்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

என்னுடைய சொந்த விடயம் என்றால்.. இந்த மூன்றாம் மனிதர்களை நான் மனிதர்களாகவே இனங்காண மாட்டேன். இவர்களின் வார்த்தைகள் கூச்சலை விட கேவலமாக கணிக்கப்பட்டிருக்கும்..! ஆனால்..

யாழ் என்பது ஒரு இனத்தின் இருப்புக்கான சமூக வலையமைப்பைப் பேணும் தளம். அந்த வகையில் அதன் இயக்கம் நின்று போவதற்கு நாங்கள் காரணமாக இருக்கக் கூடாது. அது மறைமுகமாக எமது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உதவி நிற்பது போன்றது. எக்காரணம் கொண்டும் எம் இனத்துரோகிகளும்.. எதிரிகளும் எம்மால் நன்மையடையக் கூடாது.

தமிழ்நாதம்.. புதினம்.. தமிழ்நேசன் என்று பல பெறுமதிமிக்க இனத்தொண்டாற்றி வந்த இணையங்கள் இழுத்து மூடப்பட்ட போதும் வேறு சில இணையங்கள் வழித்தடம் மாறிய போதும்.. நான் அடைந்த வேதனை சொல்லில் அடங்காது.

அந்த நிலை சிலரின் அடாத்தான தூண்டலின் பெயரால் எங்களின் பெயரால் யாழிற்கும்.. நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அந்த வகையில் மோகன் அண்ணா எங்களை எல்லாம் வெளியேற்றுவதன் மூலமாகத்தான்.. இந்த களத்தை.. இணையத்தை இயக்க வேண்டி இருப்பதாக எண்ணினால்.. அதற்கான முடிவை.. அவர் தயங்காமல் எடுக்க ஊக்குவிக்க வேண்டியது எமது இனத்தின் மேலான எமது கடமையும் கூட..!

அதையே தான் இங்கு சொல்லி இருக்கிறோம்.. தூயவன்..!

இவ்வளவு விளக்கமும் இத்தலைப்பில் போதும் என்று நினைக்கிறேன். எனி இதில் பதில் இடும் வகையில் எம்மை நோக்கி.. கேள்வி கேட்பதை கள உறவுகள் தயவுசெய்து தவிர்த்தீர்கள் என்றால் நல்லம்..!

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.