Jump to content

அறிவித்தல்


Recommended Posts

களவிதிகளை மீறி பிரச்சனைகளை உருவாக்கிய உறவுக்கும், அதனை ஆதரித்து தலைப்புகளை ஆரம்பித்த சக உறவுகளுக்கும், பொறுப்பாளர் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் மோகன் அண்ணாவின் மனம் நோகும் படி நடந்து கொண்ட உறவுக்கும் நன்றிகள்... <_< <_< <_<

பகலவனின் கருத்தை வழிமொழிகிறேன்..! 2014 வரையிலாவது இக்களத்தை இழுத்து நடத்தினீர்களென்றால் நல்லது..! அதற்கான உதவிகளை நான் உட்பட பலர் செய்யக் காத்திருக்கிறார்கள்..! குழப்பம் விளைவிப்பவர்களை நீக்கிவிடுங்கள்..!

இசையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன் மோகன் அண்ணா...

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குதான் ஏழரை சனி எண்டால் யாழுக்குமா ?எனக்கு தான் அடிமேல் அடி போல கிடக்கு.எப்பிடிஎன்டாலும் ஏதாவது மனத்தாக்கம் வரும் போது யாழ்தான் ஒரு வடிகாலாக இருந்தது.அந்தவகையில் யாழுக்கும் மோகன் அண்ணாக்கும் மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா 13 வருடம் பூர்த்தி ஆகி 14 ஆவது வருடம் ஆரம்பிக்கும் மார்ச் 30 அன்று தளத்தை மாற்றி அமைத்து புதிய வடிவில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு அதற்காக நேரத்தினையும் பணத்தினையும் செலவழித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு இணையவன் தன்னாலான அனைத்து உதவிகளையும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரங்களில் செய்து கொண்டு இருந்தார். இருவருக்கும் சொந்த வாழ்க்கை, தொழில் என்பன இருந்தும் அவற்றுக்கான நேரம் போக கிடைக்கும் சில மணித்துளிகளில் தான் யாழை மாற்றி அமைத்து வேறு வடிவில் கொண்டு வர முயன்று கொண்டு இருந்தனர்.

இவ்வாறு யாழ் அடுத்த கட்டத்தினை நோக்கி அடி எடுக்கும் போதுதான், யாழை நிர்மூலமாக்கியே தீருவோம் என்று புறப்பட்டு சாத்திரியின் தடையை தமக்கு சாதகமாக்கி எல்லா வழிகளிலும் நிர்வாகத்தையும் மோகன் அண்ணாவையும் அவமானப் படுத்தி யாழை மூடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். இதில் ஈடுபட்டவர்களின் பெயர்களை முதல் வரிகளில் எழுதி விட்டு மோகன் அண்ணா அவர்களின் பெயரை வெளிவிடுவதை விரும்பமாட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அழித்து விட்டு தொடர்கின்றேன்.

எம் இனத்தின் சாபம் இங்கும் தொடர்கின்றது. எதிரிகளால் நிறுத்தப்படாத யாழ் எம் இனத்தின் கோடாரிக் காம்புகளால் நிறுத்தப்படுகின்றது.

மோகன் அண்ணாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஒரு இழி இனமான எமக்கு மோகன் அண்ணா போன்றோரும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்திலும் யாழை மெருகூட்ட எந்த வித பிரதிபலனும் இல்லாமல் மினக்கெட்ட இணையவன் போன்றோரும் தேவையில்லை. இவர்கள் இருவரும் சிங்கள இனத்தில் பிறக்காத தவறைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 'அம்மா' என்று முதல் மொழி சொல்வதற்கு பதிலாக 'அம்மே' என்று சொல்லி இருந்தால் இன்று இவர்களை சிங்கள இனம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்.

இதுக்கு மேலும் எழுத முற்படும் போது தூசனம் தான் வருகின்றது....

நன்றி

Link to comment
Share on other sites

காலையில் திண்ணையில் எழுத முயன்று முடியாமல் ஏமாந்து போய்விட்டேன்.

30ம் திகதியை வெகு விமர்சையாக கொண்டாடி மோகன் அண்ணாவை மகிழ்வித்து விடுங்கள். யாழ் 100 ஆண்டு காலம் வாழட்டும். இந்த திரியை அதற்கான வழிகளை ஆராயும் திரியாக மாற்றிவிடுங்கள் .

யாழ் போனால் நம் எல்லோராலும் தான் போனதாக வைத்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் கைகொடுத்தால் நிச்சயமாக மோகன் அண்ணாவுக்கு சாத்திரியாரின் விடையத்தை கையாள முடியும் என்று நம்புங்கள். எனவே யாழை கையில் எடுக்க முயலாமல் கருத்துகளை மட்டும் எழுதி பிரச்சனைகளைத் தீர்க்க முயலுங்கள்.

நாம் எல்லோரும் பிழைகள் விட்டிருக்கிறோம். நமது வீக்கத்திகேற்ப எதையாவது சாதித்துமிருக்கிறோம். ஆனால் யாழை எங்கள் எல்லோரையும் இணைத்து மோகன் அண்ணா இதுவரையும் நடத்தி வந்தது சாதனையே.

Link to comment
Share on other sites

பகலவனின் கருத்துக்களை ஆமோதித்து, இன்று என்றுமில்லாத ஒரு கால கட்டத்தில் எமது தாயக மக்கள் போராட்டம் நுழைந்துள்ள நிலையில் யாழ்கள தேவைகள் தொடரவேண்டும்.

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

முற்றுமுழுதாக உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன் அகூதா

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, தயவு செய்து யாழை மூடாதீர்கள். நான் யாழில் எழுதுவது குறைவுதான். ஆனால், யாழின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருக்கிறேன். உங்கள் களவிதிகளைக் கடுமையாகக் கடைப்பிடியுங்கள் அண்ணா. களவிதிகளை மதிக்காதவர்களைக் களைந்து விட்டு மேற்கொண்டு யாழை நடத்துங்கள். களவிதிகளை மதிப்பவர்களை மட்டும் கொண்டு யாழை நடத்துங்கள்.

இந்தப் புல்லுருவிகளுக்காகவெல்லாம் யாழை மூடாதீர்கள். வேறு காரணத்திற்காக மூடுவதாக இருந்தாலும் தயவு செய்து இந்த சந்தர்ப்பத்தில் மூடாதீர்கள். அப்படி மூடுவீர்களானால், அந்தப் புல்லுருவிகளுக்குப் பயந்து மூடுவதாக அவர்கள் வெற்றிக் களிப்பில் இருப்பார்கள். உங்களுக்கு அப்படியான ஒரு பெயர் வரக்கூடாது அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா இது அதிர்ச்சியான செய்தி, ஒரு பருவ வயதை எட்டும் யாழை இழுத்து மூடுவது, எமக்கு மட்டுமல்ல, யாழின் வாசகர்களுக்கும்தான் அதிர்ச்சி,

ஈழ மக்களுக்கான எஞ்சிருக்கும் ஒரு உறவு பாலத்தை தயவு செய்து மூடிவீடாதீர்கள்

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா இணையத்தை மூடுவது பற்றி மீள் பரிசிலனை செய்யமுடியாதா ? என்னைப்போன்றோருக்கு பெரிய இழப்பு மூடாதேங்கோ மோகன் அண்ணா அன்பாக கேட்டு கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

அகூதா அவர்களின் கருத்தே என்னுடையதும்.

நேற்றுத்தான் யாழில் இணைந்தேன். ஆனாலும் பலகாலமாய் யாழின் வாசகன்.

மோகன் அவர்கள் தனது முடிவை மாற்றுவார் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

கோடாரிக் காம்புகளுக்காக யாழை மூடுவது வெட்கக்கேடானது. இவர்களை கட்டாயம் யாழ் கள உறுப்பினர்கள் எல்லாருக்கும் வெளிப்படுத்த வேண்டும்.யாழ் கழத்தில் வாதிட முடியாமல் மோகன் அண்ணாவுக்கு மிரட்டல் விடுபவர்கள் தமிழராக இருக்க லாயக்கற்றவர்கள்.

யாழ்க்களத்தை இவ்வளவு காலமும் கொண்டு நடாத்திய மோகன் அண்ணாவுக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட எத்தனையோ சோதனைகள் வந்த போதெல்லாம் கலங்காக மோகன்

இப்போது இப்படியான முடிவை எடுத்திருப்பது வேதனையழிக்கிறது.

எதிரிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

அடுத்த ஆண்டிற்கான ஆயதங்களை தொடங்கிவிட்டு பின்னர் மூடதீர்மனித்திருப்பதேன்பது மனதை கொஞ்சம் நெருடுகின்றது .

கருத்துகளத்தில் எழுதுவதுடன் எனது அலுவல் முடிந்துவிடும் ,உள்ளே அப்படி என்ன பாரதூரமாக நடந்ததோ எனக்கு தெரியாது .

தனிநபர் தாக்குதல் என்று ஒன்றை (அது யார் மீதாகவும் இருக்கலாம் ) அனுமதித்தால் அது என்றோ ஒரு நாள் பிரச்சனைக்கு அடிகோலிவிடும் என்று மட்டும் உணர்ந்திருந்தேன் ,

முடிவை மீள்பரிசீலனை செய்து, விதிகளை சற்று இறுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்திற்குரிய விதிகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படுதல்

கருத்துக்களம் சின்னாபின்னமாகி அதற்குரிய தனித்துவத்தை இழந்துவிடுதல்.

பத்தோடு பதினொன்றாக சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ப யாழ் மாறுதல்

போன்ற நிலைமைகள் ஏற்படின் இதுவரை காலமும் யாழ் நடைபோட்ட பாதை களங்கமுறும்.

சிலரின் நிதானம் இழந்த செயல்கள் ஒரு கருத்துக்களத்தை முடக்கும் சக்தி வாய்ந்ததா?

இருந்தகாலம் வரையும் நிமிர்ந்து நின்றோம் என்ற பெருமையோடு நிறுத்தப்படுவதே சிறப்பிற்குரியது.

ஒரு பொதுத்தளத்தில் ஒரு சின்ன விடயத்தை செய்ய முற்பட்டாலே எவ்வளவு சவால்களையும் சங்கடங்களையும் தாண்ட வேண்டி இருக்கிறது. மோகனண்ணா நீங்கள் உங்கள் அமைதியைத் தொலைத்து இந்த சமூக வலைத்தளத்தால் மன உளைச்சல்களையே அதிகம் பெற்றிருப்பீர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே....

சில கருத்துக்களை வாசிக்கும் எமக்கே நிம்மதி தொலையும்போது அதனை அகற்றும் அல்லது மாற்றம் செய்யச் சொல்லி பதிவிட்டவரை அணுகும் மட்டுறுத்தினர்களுக்கு எவ்வகையான மனோநிலை ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது.

நிர்வாகத்தினரை கருத்தாளர்கள் உதாசீனப்படுத்துவதும், விதிமுறைகளை உதாசீனம் செய்வதும் கருத்துக்களத்திற்கு வெளியே நிர்வாகத்தினர் கொடுக்கும் எச்சரிக்கை மடலை பலருக்கு அனுப்பி உண்மையான நிலையை அறியாத அவர்களை, நிர்வாகத்திற்கு எதிராக எழுத உந்துவதும் இந்தக்கருத்துக்களத்தில் உலவும் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு விடயமாக இருக்கிறது. சமீப காலமாக இது ஒருவகைச் சுயவிளம்பரமாகவும் பயணிப்பதை அவதானிக்கமுடிகிறது. அந்தச் சுயவிளம்பிகளை இங்கு வெளிச்சம் போட்டுக்காட்டத்தேவையில்லை அநேகமாக பலருக்குத் தெரியும்.

இத்தகையோரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டால் போதும்.

இந்தக்கருத்துக்களம் நிறுத்தப்பட்டால்..... அண்மைக்காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்ற தடையின் நிமித்தம் இந்தக்கருத்துக்களம் சறுக்குண்டு அதன் நிமித்தம் நிறுத்தப்பட்டதாய் நிறையச் செய்திகள் தந்தியடிக்கும். புதிய உறுப்பினராக இருந்தாலும் பழைய உறுப்பினராக இருந்தாலும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவேண்டும். இன்று இணைய உலகில் யாழ் கருத்துக்களம் ஒரு நேர் கோட்டில் வாளின் கூர் முனையில் நிற்பதை உணர முடிகிறது. ஒரு பெரும் படைப்பாளி என்பதற்காக விதிமுறைகளைத் தளர்த்தினால் தொடர்ந்தும் மற்றவர்களுக்காகவும் மீண்டும் மீண்டும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் யாழ் கருத்துக்களம் அந்நிலைக்குத் தள்ளப்படும்.

யாழ் இணையம் இயங்கவேண்டும்

அதற்கு எவ்வகையில் என்னால் உதவ முடியும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்

யாழ் இணையத்தை மூடாதீர்கள் என்று மோகனண்ணாவிடம் கேட்க முடியாது.....

யாழ் கருத்துக்களம் தொடர்ந்து இயங்கினால் மகிழ்வடைவேன் .. நிறுத்தப்பட்டால் தாங்கிக் கொள்வேன்.

Link to comment
Share on other sites

செயல்படும் ஈழ இணையங்களில் மிகச் சிறப்பாக, சுயாதீனமாக செயற்பட்ட தளம். மோகனிற்கும் நிர்வாகத்திற்கும் நன்றி.

திண்ணையில் பிரச்சனைகள் ஆரம்பித்து, கருத்துக்களத்தில் பரவுவதை பகிடியாக 'யாழ் ஆளுமன்றத்தில்' பகிடியாகச் சொல்லி இருந்தேன்.

தங்கள் படைப்புக்களை பிரபலப்படுத்த பலர் இந்தக் களத்தை பயன்படுத்துகின்றனர் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நிழலி

யார் அந்தக் கோடாரிக்காம்புகள்.

கோடரிக்காம்புகளின் பெயர்களை, யாராகினும் துணிந்து கூறலாமே?

Link to comment
Share on other sites

இணையவெளியில், தமிழில், யாழ் களத்தில் மட்டுமே எழுதியுள்ளேன் என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளை மோகனிற்குத் தெரிவித்துக் கொள்வதோடு யாழின் முடிவு சார்ந்து கவலையினiயும் பதிவுசெய்து கொள்கிறேன்.

விவாதங்கள் வழியாக எவரையேனும் சங்கடப்படுததியிருந்தாலோ காயப்படுத்தியிருந்தாலோ மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

இது உங்கள் கண்டுபிடிப்பு? அதை மோகன் சொல்லட்டும் நான் விலகிக்கொள்கின்றேன். அடுத்தவனை நோக்கி விரலைக்காட்டாமல் யாழ் நிலைப்பதற்கு நீங்கள் எதை உருப்படியாய் செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன்!

யாழை தொடர்ந்து நடத்துவதும் நடத்தாமல் உங்கள் தனிப்பட்டபிரச்சனை.ஓடுற வண்டியில் என்னைப்போன்றவர்கள் சேர்ந்து ஓடினமே தவிர....அதன் அனைத்து வலிகளும் சுமைகளும் தெரிந்திருக்கவுமில்லை.நீங்களும் அப்படித்தான் எங்களை நடத்தினீர்கள்!பல இடங்களில் கேள்விகளை கேட்டுவிட்டு அல்லது ஒரு விடயத்தை ஆரம்பித்துவிட்டு அதன் பதில்களுக்கு எந்தவொரு கருத்துக்களோ பதில்களோ நீங்கள் கொடுக்கவில்லை.சில இடங்களில் உங்கள் பதில்களுக்கு மூக்குச்சாத்திரம் பார்கவேண்டிய நிலையும் இருந்தது.

களம்,குடும்பம் என்றால் பலதும்பத்தும் இருக்கத்தான் செய்யும்.எடுத்ததிற்க்கெல்லாம் நல்லதே நடக்குமெனநினைத்தால் அது தவறு.எல்லோரும் நல்லதையே செய்வார்கள் எனநினைத்தால் அதுவும் தவறு.கூடப்பிறந்த சகோதரங்களுகிடையே ஆயிரம் வெட்டுப்பகை குத்துப்பகைகளை நேரடியாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.பெற்றதாய் தகப்பனையையே கவனிக்காத பிள்ளைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது இந்த உலகம்.

உதாரணத்திற்கு எமது விடுதலைப்போராட்டத்தினை அன்று தொடக்கம் கவனித்துப்பாருங்கள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் அழிவுகள்.

யாராக இருந்தாலும் யாழில் இடையூறு செய்பவர்களை (நானும் அடக்கம்)வெளியேற்றி விட்டு சிறந்தபடியாக யாழை முன்னெடுத்து செல்வதுதான் அழகு.இல்லை யாழ்களம் மூடப்படும் எடுத்தமுடிவு எடுத்ததுதான் என்றால் யாரால் என்ன செய்ய முடியும்?

இதுவரை காலமும் இங்கே நல்ல ஆக்கங்களை தந்தவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?.......பதிவெடுத்துக்கொள்ளுங்கள்???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மோகன் அண்ணாவின் உழைப்பினை புரியாது விட்ட வேதனையைப் புரிந்து கொள்கின்றேன். இதுவரை காலமும் யாழிற்காக செலவளித்த நேரம் மட்டுமல்லாமல், நேர்மை, சகிப்புத்தன்மை, இரகசியம் பேணல் தொடர்பான அனைத்து உயர் பண்புகளுக்குமாக மரியாதை செய்கின்றேன்.

புதினம் இணையத்தின் சகோதர இணையம் போலச் செயற்பட்ட இத்தளம், புதினம் முள்ளிவாய்க்கால்  துயரத்தோடு தன்னை நிறைவுசெய்த காலம் முதல், யாழும் விருப்பத்தோடு, விரும்பமின்றி இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம். நிச்சயமாக கடந்த 6 வருடங்களாகப் பழகித் தொடர்பில் இல்லாது போன பல உறவுகளை நினைவில் கொள்கின்றேன்.

எல்லாக் காலத்திலும் சண்டை, சச்சரவு, இருந்தது தான். ஆனால், அன்று நமக்கென்று எல்லோருமே இருந்தார்கள். நம் சொந்தங்கள், தலைவர், போராளிகள், உறவுகள்.... ஆனால் அதை இழந்து நிர்கதியாக ஆறுதல் தேடுகின்ற சூழலில், எரிச்சல்படுத்தும் விதமாக களத்தில் நடந்து கொள்ளும் விதம் சரியானதாகத் தெரியவில்லை என்பது தான் தனிஎன்றோ

என்றோ ஒருநாள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு.. அது சாத்தியமாக வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றேன்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

தங்கள் சித்தமே எங்கள் பாக்கியம். உங்களின் மனநிலையில் வேறு சிலரும் இங்குளர் என்பதையும் நாங்களும் அறிவோம்..!

இதன் மூலம் யாழ் தொடர்ந்து இயங்கும் என்பதை மோகன் அண்ணா உறுதி செய்தால்.. நாம் நிச்சயமாக எமது ஐபி தடை செய்யப்பட கேட்டு.. இதில் இருந்து மிக மகிழ்ச்சியாக வெளியேறிக் கொள்வோம். எம்மால் எமது இனத்துக்கு நிகழப் போகின்ற ஒரு இணைய இழப்பை இவ்வழியில் தடுக்க முடியும் என்றால் நிச்சயம் அதை நாங்கள் செய்யத் தயாராகவே உள்ளோம்..!

யாழில் கற்றுக் கொண்ட இணையத் தமிழால் யாழில் எழுதப்பட்ட ஆக்கங்கள் யாழோடு சங்கமமாவதையே நாங்கள் விரும்புகின்றோம்..! எங்களுக்கும் எழுத இடமளித்த யாழிற்கு நன்றி..!

எங்களுக்கு யாழில் உள்ளவர்கள் எவரோடும் தனிப்பட்ட தொடர்புகள்.. தொடர்பாடல்கள் கிடையாது..! நாம் தொடர்ந்தும் அந்த நிலையைப் பேணுவதோடு.. யாழ் நிர்வாகத்திற்கு வெளியில் இருந்தோ உள்ளிருந்தோ.. இடர்கள் குறைகள் செய்ததும் இல்லை..! செய்யப் போவதும் இல்லை..! அந்த வகையில் எமது வெளியேற்றம் யாழை தொடந்து இயங்கச் செய்யும் என்ற வினீத் என்பவரின் அதி உச்ச கண்டுபிடிப்பை மதித்து.. மோகன் அண்ணா யாழை தொடர்ந்து இயங்க வைக்க எங்களை வெளியேற்றுவது குறித்து எந்த வித சங்கடங்களும் இன்றி முழுச் சுதந்திரத்தோடு முடிவெடுக்க இதயபூர்வமாக சம்மதிக்கிறோம்..!

நிச்சயம் ஒரு நாள் நியாயமும் உண்மையும் சத்தியமும் வெல்லும்..!

நன்றி.

என்றும்

நட்புடன் நெடுக்ஸ்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

மிக கவலையளிக்கும் முடிவு.

மோகன் தயவு செய்து உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள்.

தமிழினம் தன்னை நிலைநிறுத்தும் வரை தொடர்ந்து யாழை இயக்குங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

என்னுடைய சொந்த விடயம் என்றால்.. இந்த மூன்றாம் மனிதர்களை நான் மனிதர்களாகவே இனங்காண மாட்டேன். இவர்களின் வார்த்தைகள் கூச்சலை விட கேவலமாக கணிக்கப்பட்டிருக்கும்..! ஆனால்..

யாழ் என்பது ஒரு இனத்தின் இருப்புக்கான சமூக வலையமைப்பைப் பேணும் தளம். அந்த வகையில் அதன் இயக்கம் நின்று போவதற்கு நாங்கள் காரணமாக இருக்கக் கூடாது. அது மறைமுகமாக எமது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உதவி நிற்பது போன்றது. எக்காரணம் கொண்டும் எம் இனத்துரோகிகளும்.. எதிரிகளும் எம்மால் நன்மையடையக் கூடாது.

தமிழ்நாதம்.. புதினம்.. தமிழ்நேசன் என்று பல பெறுமதிமிக்க இனத்தொண்டாற்றி வந்த இணையங்கள் இழுத்து மூடப்பட்ட போதும் வேறு சில இணையங்கள் வழித்தடம் மாறிய போதும்.. நான் அடைந்த வேதனை சொல்லில் அடங்காது.

அந்த நிலை சிலரின் அடாத்தான தூண்டலின் பெயரால் எங்களின் பெயரால் யாழிற்கும்.. நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அந்த வகையில் மோகன் அண்ணா எங்களை எல்லாம் வெளியேற்றுவதன் மூலமாகத்தான்.. இந்த களத்தை.. இணையத்தை இயக்க வேண்டி இருப்பதாக எண்ணினால்.. அதற்கான முடிவை.. அவர் தயங்காமல் எடுக்க ஊக்குவிக்க வேண்டியது எமது இனத்தின் மேலான எமது கடமையும் கூட..!

அதையே தான் இங்கு சொல்லி இருக்கிறோம்.. தூயவன்..!

இவ்வளவு விளக்கமும் இத்தலைப்பில் போதும் என்று நினைக்கிறேன். எனி இதில் பதில் இடும் வகையில் எம்மை நோக்கி.. கேள்வி கேட்பதை கள உறவுகள் தயவுசெய்து தவிர்த்தீர்கள் என்றால் நல்லம்..!

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.