Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து யாழ் தளத்தை நானும் (நிழலி), இணையவனும், வலைஞனும் பொறுப்பெடுத்து தொடர்ந்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம். மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார்.

எதிர்வரும் நாட்களில் யாழ் தொடர்பாக ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவும், யாழ் களத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் சில மாறுதல்களை, கள விதிகளிலும், ஏனைய விடயங்களிலும் செய்ய விரும்புகின்றோம். இது தொடர்பாக உங்களின் அனைத்து ஆதரவினையும் வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி..எப்படிப் பட்ட உதவிகள் யாழுக்கு தேவை என்று தெரியப்படுத்தினால் கண்டிப்பாக நானும் பார்வையாளராக இருக்காமல் இணைந்து கொள்வேன் நிழலி அண்ணா.நன்றி உங்கள் எல்லாராது முயற்சிக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை மூடும் எண்ணம் கைவிடப்பட்டதற்கு நன்றி

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நிழலி, நிச்சயமாக நான் தொடர்ந்து ஏன் ஒத்துழைப்பை வழங்குவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.உங்கள் புதிய நிர்வாக மாற்றமும்,செயற்பாடுகளும், வெற்றிநடை போடவும். வெகு சிறப்பாகவும் அமையவும் வாழ்த்துகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பயணிக்க எவ்வுதவியாக இருந்தாலும் நானும் செய்கிறேன் தொடர்ந்துவரும் நாட்களில் மேலதிக தகவல்களை எதிர்பார்க்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நிழலி!

பிரபாகரனுடன் எமது போராட்டம் முடிந்தது போல, யாழ் முடியக்கூடாது!

உங்கள் முகாமைத்துவத் திறமைக்குத் தலை வணங்குகிறேன்,நிழலி!

இணையவன், வலைஞன் உங்களுக்கும், இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஊற்றெடுக்கும், நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான செய்தி நிழலி.கலோ வலைஞன்!நான் கட்டாயம் தமிழ்தான் கதைப்பன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தளம் மற்றும் களம் தொடர்ந்து இயங்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நிர்வாக மாற்றம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அது உள்வீட்டு விவகாரம். கருத்துக்களைப் பதிவிடும் நாம்.. எம்மை நாமே நிர்வகித்துக் கொண்டு பதிவிடுவது.. எம்மை நாமும் களத்தையும் சிறப்பிக்க உதவும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

அந்த பயம் மனதில் இருக்கட்டும்...

எனது ஒரே ஒரு கருத்தை மட்டும் பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.

மோகன் அண்ணாவின் கையில் யாழிருந்த போது மோகன் அண்ணா கள உறுப்பினர்கள் இடையே வேற்றுமை காட்டியதான நான் உணரவில்லை. அதை நீங்களும் தொடர்ந்து பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன்....... :) :) ...

Link to comment
Share on other sites

நிழலி அண்ணா. யாழிற்கான உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தின் மீள் பரிசீலனைக்கு நன்றிகள் அதே நேரம் யாழ் இணையத்தை வியாபார நோக்கோடு இயக்கக முயற்சிகள் எடுப்பதோடு கருத்துக்களத்தில் சில பிரச்சனைகளை தவிர்ப்பாதற்கு சில ஆலோசனைகளை முன் வைக்கலாமென நினைக்கிறேன்.

1) ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட புனைபெயர்களில் வந்தால் அவரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதும் அவரிற்கு எச்சரிக்கை கொடுத்து தடை செய்தல்.(யாராக இருந்தாலும்)

2)யாழ் இணையத்திற்கென வருகின்ற வாசகர்கள் அங்கு இருக்கும் படைப்புக்களிற்காகவே அதிகம் வருகிறார்கள். கருத்துக்களை பகிர்கின்றார்கள். எனவே நிருவாகம் ஒரு கருத்தாளனின் கருத்தையும் ஒரு படைப்பாளியின் படைப்பினையும் ஒரே தராசில் நிறுத்து தீர்ப்பு வழங்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

3)ஒருவர் தடை செய்யப்படும் பொழுது அவர் மற்றையை பகுதிகள் அனைத்திலும் கருத்து எழுதும் உரிமத்தை தடை செய்து அதே நேரம் அவர் தன் பக்கத்து நியாயத்தினையும் எடுத்துரைக்க வசதியாக உறவோசை பகுதியில் அவரை அனுமதித்தல்.

4)ஒருவரின் கருத்துக்களிற்கு அல்லது தனிமனித தாக்குதல் சம்பவங்களிற்கு வேண்டுமானால் நிருவாகம். முறைப்பாட்டு முறையை (றிப்போட்)ஏற்று நடவடிக்கையை எடுக்கலாம் அனால் படைப்புகளிற்கு கருத்தாளர்கள் நிருவாகத்திடம் முறையிடாமல் தங்கள் விமர்சனங்களையோ எதிர்வினைகளையோ பகிரங்கமாக வைத்த பின்னர் அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்.

இவை என்னுடைய ஆலோசனைகள்தான் பரிசீலிப்பது நிருவாகத்தை பொறுத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய நிர்வாகத்தவர்களின் போக்கு நடைமுறைகளில் மாறுபாடு வரினும்.... மோகன் அண்ணாவின் பால் உள்ள நம்பிக்கையோடு (loyalty) உள்ள உறவுகளின் யாழுடனான இருப்பை தக்க வைக்க முயலவில்லை என்றால் அது யாழினை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்லலாம். அது பாதகமாகவும் அமையலாம். நன்மையாகவும் அமையலாம். :icon_idea::)

Link to comment
Share on other sites

யாழ் தொடர்வதில் மகிழ்ச்சி. மோகன் அண்ணாவுக்கு என் நன்றிகள்! :)

புதிய நிர்வாகத்துக்கு என் வாழ்த்துக்கள்! :)

Link to comment
Share on other sites

1) ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட புனைபெயர்களில் வந்தால் அவரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதும் அவரிற்கு எச்சரிக்கை கொடுத்து தடை செய்தல்.(யாராக இருந்தாலும்)

ஏன் இந்த லெலைவெறிடீ :D ? இப்ப தான் கட்டிஅயில் இருந்து கட்டு அவுத்து விட்டது அதுகிடையில முட்டனுமா? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை இழுத்து மூடாமல் வைக்க நிழலி, இணையவனுடன் ஒதுங்கியிருந்த வலைஞனும் முன்வந்தது மகிழ்ச்சியான விடயம்! மோகன் அண்ணா எப்போதும் யாழைச் சிறப்பாகச் செய்ய உதவி செய்வார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சதா மாறிக்கொண்டிருக்கும் உலகிற்கேற்ப யாழும் இயைபாக்கம் அடைவதுதான் யாழின் தனித்துவமான வளர்ச்சிக்கு உதவும்.. அதற்கு எப்போதும் என் ஆதரவு (எந்த வடிவிலும்) இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியுங்கோ...மோகனுக்கும் நன்றி...புதிய நிர்வாக குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் அங்கத்துவ பணம் செலுத்தும் யோசனைகள் இருந்தால் சொல்லவும்...

5000 கருத்துக்களை தொடலாம் போல கிடக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்றாட விடையங்களுடன் ஒன்றிப்போனவைகளில் யாழ் வலைக்களமும் ஒன்று, அது தொடர்ந்தும் இயங்குவதுபற்றிய செய்தி அறிந்தவுடன் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அனைவர்க்கும் எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சி,

நிழலி இணையவன் மற்றும் வலைஞன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .......

மோகன் அண்ணாவுக்கு நன்றிகள் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு வயித்தைகலக்குது :lol: ...நான் வந்து எதுக்கும் எவரெடி :mellow:

Link to comment
Share on other sites

நன்றிகள், நிழலி!

பிரபாகரனுடன் எமது போராட்டம் முடிந்தது போல, யாழ் முடியக்கூடாது!

உங்கள் முகாமைத்துவத் திறமைக்குத் தலை வணங்குகிறேன்,நிழலி!

இணையவன், வலைஞன் உங்களுக்கும், இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஊற்றெடுக்கும், நன்றிகள்!

______

யாழ் தொடர்ந்து இயங்கும் என்ற செய்திக்கு நன்றி, வாழ்த்துக்கள்! ....

சிவப்பு கலரினால் அடையாளப்படுத்திய அந்த(உதாரனம்) வசனம் தேவையா???

Link to comment
Share on other sites

முன்பு கூறியபடி 2012 வருட இறுதி வரை எமது நிறுவனத்தின் அனுசரணையும், ஆதரவும் உண்டு.

நன்றி

Link to comment
Share on other sites

நன்றி நன்றி

பயந்து விட்டோம். புதினம், தமிழ்நாதம், தமிழ்நேசன் வரிசையில் யாழும் முடங்கிவிடுமோ என

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.