Jump to content

‘பொங்குதமிழ் 2012 கருநாடகம்’


Recommended Posts

அன்பிற்கும், பாசத்திற்கும்,மதிப்பிற்குமுரிய தமிழின மக்களுக்கு ‘பொங்குதமிழ் 2012 கருநாடகம்’ விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள். யாழ் பல்கலையில் தொடங்கி எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் உலகெங்கும் நம்மின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியும், தமிழினம் தன் கலை, இலக்கியம், பண்பாடு இவற்றினூடாக இனவெழுச்சியுற்று, தடைகளைத் தகர்த்து ஒற்றுமையுடன் ஓரினமாய் கிளர்ந்தெழுந்து நம்மின விடுதலையை நோக்கி முன்னகரக்கூடிய சாத்தியத்தை உருவாக்கும் நிக்ழவாகப் ‘பொங்குதமிழ்’ விழா நம்மிடையே முன்னெடுக்கப்படுகிறது.

காலத்தின் கட்டாயத்தால் நாம் நம்மின வரலாற்றின் தவிர்க்கமுடியாத முக்கிய தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும், காட்டிக்கொடுப்புகளனைத்தையும் இதுவரை கண்டு, அனுபவித்த ஓரினம் இவ்வுலகில் உண்டென்றால் அது நம் தமிழினமேயாம். நம்மைச் சுற்றிப் பின்னப்படும் சதிகளைத் தகர்த்து முன்னேற ஒரு வழி உண்டென்றால் அது நம்மின ஒற்றுமையும், ஒருமைப்பாடுமன்றி வேறேதுமில்லை.

உலகெங்கிலும் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட ‘பொங்குதமிழ்’ நிகழ்வானது நம்மை தமிழன் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றுபட்டு, நம் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பண்பாட்டை காத்திடும் கருவியாகவும், உலகிற்கு நம்மின ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் இந்தியாவில் முதன்முறையாக கருநாடகத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

பொங்கு தமிழ் 2012 கருநாடகம் மாநாட்டிற்குத் தமிழர்களாகிய நாம் அனைவரும் நமது கட்டாயக் கடமையென்றெண்ணி தங்களின் இனத்திற்க்கான பங்கெடுப்பாகத் தம்மால் இயன்ற வகையில் அனைத்துவித்ததிலும் உடல், உள்ள, பொருளுதவிகளையும், முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும், நல்கி தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழர் ஒற்றுமைக்கும் துணை நிற்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

பொங்கு தமிழ் 2012, கருநாடகம்.

PayPal மூலம் தங்கள் பங்களிப்பை வழங்கிட : http://thaaitamil.com/?p=13673

Pongu-Tamizh-2012-Invitation.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.