Jump to content

முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

முல்லைப் பாட்டு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

ஆயிரம் காலங்களைக் கடந்த கடல்

ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல

இன்றும் புது அலைகளை எழுப்புகிறது.

அந்த அலைகளின் எல்லைக்குமேலே

யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த

இடைச்சிகளின் மேச்சல் நிலம்.

அந்தக் கானல் பொட்டலின்

கந்தல் குடையான சிறு மரம் நோக்கி

கத்திக் கம்போடும்

செல்பேசியோடும் பெயர்கிறாள்

ஒரு புல்வெளியின் இளவரசி.

நூல் பாவையாய்

அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம்

ஆடித் தொடர்கிறது நாய்.

அந்த நான்கு கண்களின் பார்வையில்

கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள்

செம்புழுதி போர்த்த பற்றைகளிடை

காடைகள் மிரளாமல் ஊரும்.

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

போகிற போக்கில் களவாய் உருவி வந்த

முற்றாத நெற்கதிர்களின் பால்

இன்னும் அவளது கடைவாயில் வழிகிறது.

அந்தியிலும் சூரியன் விழுந்து கிடந்து

எரிகிற புல்வெளிமேல்

கறுத்து, ஈழவரின் கவிதைகள்போல

சூல்கொண்டு அலைகிற முகில்கள்

ஈரலித்த நம்பிக்கையை பாடுகிறது.

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

பூம்புகாரன்ன பெருநகர்களே தொலைந்த

வங்கக் கரைப் புல்வெளியெங்கும் நிலைத்த

சங்கக் கவிஞர்களின்

மோர் கமழும் காதல் பாடல்கள்

இன்றும் நெய்தலும் முல்லையுமாய்ப் பூக்கிறது

கோணாத்திகளின் கூந்தலுக்காக.

கோணாத்தி - இடைச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

போகிற போக்கில் களவாய் உருவி வந்த

முற்றாத நெற்கதிர்களின் பால்

இன்னும் அவளது கடைவாயில் வழிகிறது.

ஆறே வரிகளில், இடையர்களின் காய்ந்த தரவை நிலத்தையும், இடையர்களின் கள்ளமில்லாத உள்ளத்தையும் கவிதையில் வடிக்க, உங்களால் மட்டுமே முடியும்!

அருமையான கவிதைக்கு நன்றிகள், பொயட்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக படைத்துள்ளீர்கள் வாழ்த்துகள், இழந்தை பழமும் முற்றாத நெற் கதிரும் சாப்பிட்டவர்களுக்குதான் அதன் சுவை தெரியும்.

Quote "அந்த நான்கு கண்களின் பார்வையில்

கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள்

செம்புழுதி போர்த்த பற்றைகளிடை

காடைகள் மிரளாமல் ஊரும்"

கண் முன்னால் காட்சிகளை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள், நன்றி

Link to comment
Share on other sites

முல்லைப் பாட்டு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

ஆயிரம் காலங்களைக் கடந்த கடல்

ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல

இன்றும் புது அலைகளை எழுப்புகிறது.

அந்த அலைகளின் எல்லைக்குமேலே

யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த

இடைச்சிகளின் மேச்சல் நிலம்.

அந்தக் கானல் பொட்டலின்

கந்தல் குடையான சிறு மரம் நோக்கி

கத்திக் கம்போடும்

செல்பேசியோடும் பெயர்கிறாள்

ஒரு புல்வெளியின் இளவரசி.

நூல் பாவையாய்

அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம்

ஆடித் தொடர்கிறது நாய்.

அந்த நான்கு கண்களின் பார்வையில்

கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள்

செம்புழுதி போர்த்த பற்றைகளிடை

காடைகள் மிரளாமல் ஊரும்.

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

போகிற போக்கில் களவாய் உருவி வந்த

முற்றாத நெற்கதிர்களின் பால்

இன்னும் அவளது கடைவாயில் வழிகிறது.

அந்தியிலும் சூரியன் விழுந்து கிடந்து

எரிகிற புல்வெளிமேல்

கறுத்து, ஈழவரின் கவிதைகள்போல

சூல்கொண்டு அலைகிற முகில்கள்

ஈரலித்த நம்பிக்கையை பாடுகிறது.

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

பூம்புகாரன்ன பெருநகர்களே தொலைந்த

வங்கக் கரைப் புல்வெளியெங்கும் நிலைத்த

சங்கக் கவிஞர்களின்

மோர் கமழும் காதல் பாடல்கள்

இன்றும் நெய்தலும் முல்லையுமாய்ப் பூக்கிறது

கோணாத்திகளின் கூந்தலுக்காக.

கோணாத்தி - இடைச்சி

நண்பரே! உங்கள் கவிதை என்னை ஒருமுறை சங்ககாலத்திற்கு அழைத்து சென்றுவிட்டது !! அத்தனை வரிகளும் அருமை!!

Link to comment
Share on other sites

நன்றி யாழ்கள தோழ தோழியர்களே,

இதுவரை என்கவிதைகள் வாசித்த 218 பேருக்கும் என் அன்பும் நல் வாழ்த்துக்களும்.

.

கருத்து எழுதிய புங்கையூரான் உடையார், மற்றும் விஜயகுமாருக்கு அன்பு வணக்கங்க்கள்;

உங்கள் கருத்துக்கள் கவிதை எழுதுவதற்க்கு அர்த்தம் சேர்க்கிறது

Link to comment
Share on other sites

முல்லைப்பாட்டு கவிதையை வாசித்த298 பேருக்கும் கருதெழுதிய மூவருக்கும் என் நன்றிகள். யாழ்கள நண்பர்களிடம் கவிதை வாசிக்கும் ஆர்வம் முன்னைப்போல இல்லை. ஒருவேழை கவிதை பொறுப்பாக இருக்கலாம். தொடர்ந்து கவிதைகளை இணைக்கும் ஆர்வம் எழவில்லை என்பதுதவிர வேறொன்றுமில்லை. .

முல்லைப்பாட்டு கவிதையை வாசித்த298 பேருக்கும் கருதெழுதிய மூவருக்கும் என் நன்றிகள். யாழ்கள நண்பர்களிடம் கவிதை வாசிக்கும் ஆர்வம் முன்னைப்போல இல்லை. ஒருவேழை கவிதை பொறுப்பாக இருக்கலாம். தொடர்ந்து கவிதைகளை இணைக்கும் ஆர்வம் எழவில்லை என்பதுதவிர வேறொன்றுமில்லை. .

Link to comment
Share on other sites

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

பூம்புகாரன்ன பெருநகர்களே தொலைந்த

வங்கக் கரைப் புல்வெளியெங்கும் நிலைத்த

சங்கக் கவிஞர்களின்

மோர் கமழும் காதல் பாடல்கள்

இன்றும் நெய்தலும் முல்லையுமாய்ப் பூக்கிறது

கோணாத்திகளின் கூந்தலுக்காக.

இலக்கியத்தை உங்கள் கவிதையில் ரசித்தேன்...

நெய்தலையும் முல்லையையும் உருவகித்திருப்பது நன்று.. பாராட்டுக்கள்.....

Link to comment
Share on other sites

நன்றி கல்வி.

தமிழில் பாரதியாரின் காலத்துடன் நவீன காவிதைகள் எழுச்சி பெறுகிறது. நான் நவீன கவிதைகட்க்குப் பின்னாடி சங்கக் கவிதைகலில் இருந்து ஆரம்பிக்க முயல்கிறேன். தங்கலிக்கும் என் கவிதையை வாசித்த 395 பேருக்கும் என் நண்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இன்று என்னை உசிப்பிவிட்ட தோழருக்கு

ஆசைக்குமுண்டோ......????

நன்றி கவிஞரே

நீர் எதை எழுதினாலும் அது அதுதான்

Link to comment
Share on other sites

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.

ஆனாலும் உங்களிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றதே அசத்தி விட்டீர்கள் தொடருங்கள்

Link to comment
Share on other sites

நன்றி விசுக்கு, நன்றி சாத்திரி, உங்கள் இலக்கிய ஆர்வம் எப்பவும் எனக்கு மகிழ்ச்சி தருவது. என்மீசை இப்பவே 2 படத்ஹுக்கும் 2 மாதிரி ஆகிவிட்டது.

Link to comment
Share on other sites

முல்லைப் பாட்டு

- வ.ஐ.ச.ஜெயபாலன்

யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த

இடைச்சிகளின் மேச்சல் நிலம்.

அந்தக் கானல் பொட்டலின்

கந்தல் குடையான சிறு மரம் நோக்கி

கத்திக் கம்போடும்

செல்பேசியோடும் பெயர்கிறாள்

ஒரு புல்வெளியின் இளவரசி.

நூல் பாவையாய்

அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம்

ஆடித் தொடர்கிறது நாய்.

அந்த நான்கு கண்களின் பார்வையில்

ஆயிரம் காலத்து வளமையாய்

நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு

பழமும் வைத்திருக்கிறது இலந்தை மரம்.

அந்தியிலும் சூரியன் விழுந்து கிடந்து

எரிகிற புல்வெளிமேல்

கறுத்து, ஈழவரின் கவிதைகள்போல

சூல்கொண்டு அலைகிற முகில்கள்

ஈரலித்த நம்பிக்கையை பாடுகிறது.

ஒரு நடிகனின் மீசையைப்போல

நிலையற்றது வாழ்வு.............! :)

கவிஞரே சொல்வித்தையால் செயல்வித்திட்டிருக்கின்றீர்கள்!

ஒவ்வொரு வரியிலும் நிகழ்காலமும் புரிகின்றது.

நீங்கள் எழுதிய இக்கவி சங்ககாலத்துக்குரியதல்ல. இக்காலத்துக்கும் பொருந்தும் விதமாய் தமிழ்த்தாயின் எச்சங்களால் இட்டிருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்களோடு நன்றிகளும் ...! :)

நல்ல கவிதான் கவி. எத்தனை பேருக்கு 'இப்போது' புரியும் தமிழ்???

வாசிக்கும் எண்ணிக்கை என்பதும்... இயல்பாய் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களுக்காக மட்டுந்தான்! அதிலும் பாதிக்குத்தான் கவிதைகள் முழுதாய்ப் புரியும்!

இயல்பு என்பது எம்மையும் மாற்றுகின்றதா....???

இயல்பான வரிகளுடன் கவி எழுதும் முறைமை பற்றி கவிகளில் தேர்ந்த தங்களிடம் கேட்கின்றேன் கவிஞரே! இதைப்பற்றி தங்களின் விளக்கம், கருத்து என்னவிதமாக இருக்கின்றது என்று தயவுசெய்து கொஞ்சம் விளக்குங்களேன்!

கவிதைகள் என்பதின்மேல் அவ்வளவு ஈடுபாடில்லாத ஒரு நடைமுறையை இப்போதைய தமிழ் சமுதாயத்தில் காண்பதனால்தான் இந்தக் கேள்வி தங்களிடம்.

தவறிருந்தால் மன்னிக்கவும் கவிஞரே! :(

Link to comment
Share on other sites

நன்றி கவிதை. உங்கள் கருத்துக்கு மட்டுமல்ல உங்கள் தமிழுக்கும்.

கவிதை எப்பவும் கவிதையாகவும் பாடலின்கூறுகளாகவும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வோர் சமயம் ஒவ்வோர் வடிவம் மேலோங்கி இருக்கிறது. இன்று போற்றப்படும் உரைநடை இலக்கியங்களுக்குள்ளும் கவிதை செல்வாக்குச் செலுத்துதல்லவா.

கவிதை சாகாது ஆனால் நம்ம தெரு பெண்ணைக் காதலிக்கிற ஒரு அயலூர் அயல்சமூகக் காதலனைப்போல வெவ்வேறு வடிவங்களோடு காரணங்களோடு நம்ம தெருவில் நம்மைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.