விளையாட்டுத் திடல்

Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

1 week 5 days ago
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

 

யாழில் ஓட்டப் போட்டியில் அசத்திய 76 வயது மூதாட்டி!

1 week 5 days ago
news-6.jpg

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது.

போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

news-02-9.jpg

https://thinakkural.lk/article/295984

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - செய்திகள்

2 weeks 2 days ago
செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
12 MAR, 2024 | 11:47 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் செவிபுலனற்ற கிரிக்கெட் அணிகள் இன்று (12) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  

உலக சம்பியனை தீர்மானமிக்கவுள்ள இறுதிப் போட்டியானது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

செவிபுலனற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை  எதிர்கொண்ட இலங்கை அணியானது, சுப்பர் ஓவரில் 9 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

கடந்த 6 ஆம் திகதியன்ற ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இப்போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (11) நடைபெற்றன.

இப்போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை , இந்திய அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை குகே்கவே போட்டியில் சமநிலையில் முடிந்தது. 

இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ghgj.gif

சுப்பர் ஓவரில் இலங்கை சார்பாக துடுப்பெடுத்தாட கிமந்து மெல்கம், பாலகிருஷ்ணன் தர்மசீலன் களமிறங்கினர். இலங்கை அணி 14 ஓட்டங்களை குவித்து, இந்திய அணிக்கு 15 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

சுப்பர் ஓவரில் இந்திய அணி 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதால்,  9 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிக்கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  

இப்போட்டிக்கு முன்னதாக நடை‍பெற்ற  அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. 

fhgd.gif

இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (12) நடைபெறவுள்ள உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன.

https://www.virakesari.lk/article/178508

700 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை!

2 weeks 5 days ago
james-anderson.jpg

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும், தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். இதேபோல் இறுதியில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 30 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை குறித்துள்ளது.

இங்கிலாந்து அணி தரப்பில் 173 ரங்களை விட்டுக் கொடுத்த ஷோயப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் அண்டசன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ஜேம்ஸ் அண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 700ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடித்து வருகிறார்.

இந்த பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடனும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஜேம்ஸ் எண்டர்சனின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்டர்சன் மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/295064

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய முதலாவது வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் எனும் சாதனைக்கும் உரியவராகிறார்.

james.jpg

james1.jpg

ஜேம்ஸ் அண்டர்சனின் பந்துவீச்சு பெறுதியின் அட்டவணை.

அஸ்வினின் 100வது டெஸ்ட்

3 weeks ago
அஸ்வினின் 100வது டெஸ்ட்: இந்திய மண்ணில் சாதித்தவர் வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்?
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

39 நிமிடங்களுக்கு முன்னர்

“ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே எளிதல்ல. அதிலும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலே அது சிறப்புதான். அதிலும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டால் அற்புதமான வீரர் என்றுதான் கூற வேண்டும்.”

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், பயிற்சியாளருமான ராகுல் திராவிட், ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி குறித்து இப்படி வெளிப்படையாகப் பேசினார். ராகுல் திராவிட் தனது வாழ்நாளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சாதனையான செயல்தான். பேட்டராக இருந்தாலும் சரி, பந்துவீச்சாளராக இருந்தாலும் 100 போட்டிகளிலும் திறமையில் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினால்தான் தன் இருப்பை அணியில் வெளிப்படுத்த முடியும்.

தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய அல்லது பேட் செய்த எத்தனையோ வீரர்கள் 50 டெஸ்ட் போட்டிகளைக்கூட கடக்க முடியாமல் ஓய்வை அறிவித்துச் சென்ற கதைகள் உண்டு. ஆனால், 100 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை எட்டிப் பிடிக்க, முதல் போட்டியில் அறிமுகமாகும்போது இருந்த உற்சாகத்தை 100வது போட்டிவரை கடத்தி வந்தால்தான் இத்தகைய மைல்கல்லை அடைய முடியும்.

 

கடந்த 1968ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்டர் கோலின் கோவ்ட்ரே இந்த மைல்கல்லை முதலில் எட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் இன்று உலகளவில் பல வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை கடந்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துவிட்டார்.

தரம்சாலாவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவில் இதுவரை 313 டெஸ்ட் வீரர்கள் வந்துள்ள நிலையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதுவரை அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 93.21 , எகானமி ரேட் 2.79 , ஸ்ட்ரைக் ரேட் 51.3 என அஸ்வின் வைத்துள்ளார்.

 
உள்நாட்டில் சாதனை
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 விக்கெட்டுகளில் 358 விக்கெட்டுகள் உள்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. இந்திய அணியைச் சேர்ந்த இதுவரை எந்த பந்துவீச்சாளரும் எட்ட முடியாத உயரத்தை அஸ்வின் எட்டியுள்ளார்.

அதாவது ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்நாட்டில்(350) விக்கெட்டுகள், ஹர்பஜன் சிங்(265), கபில் தேவ்(219) விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். ஆனால், அஸ்வின் 350 விக்கெட்டுகளையும் கடந்து பயணித்து வருகிறார்.

அஸ்வினின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துக் கொண்டால் சேனா நாடுகளுக்கு எதிராக சுமாராகவும், ஆசிய நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாகவும் வைத்துள்ளார்.

சேனா(SENA) நாடுகளில் சறுக்கல்

வேகப்பந்துவீச்ச மைதானங்கள் அதிகம் இருக்கும் சேனா நாடுகளில் சுழற்பந்துவீச்சில் சாதிப்பது எளிதான காரியம் அல்ல. அங்கு அஸ்வின் தனது பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினாலும், சேனா நாடு அணிகளுக்கு எதிராக பெரிதாக விக்கெட் வீழ்த்தியதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. சேனா நாடுகளின் மைதானங்களில் நடந்த போட்டிகளிலும் அஸ்வினின் 71 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி, சராசரி 39.4 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 83.7 ஆகவும் வைத்துள்ளார்.

அதுவே, கரீபியன் நாடுகளின் மைதானங்களில் அஸ்வின் சராசரி 19.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.4 ஆகவும் இருக்கிறது. இலங்கையில் அஸ்வினின் சராசரி 21.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.1 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் அஸ்வினின் பந்துவீச்சு சராசரி 21.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 46.6 ஆகவும் இருக்கிறது.

வேகப்பந்துவீச்சு மைதானங்களாகப் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும் சேனா நாடுகளில் மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அங்கு அவர் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 
இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனம்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அது உண்மைதான். அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்ட விக்கெட்டுகள் சௌத்பா எனப்படும் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 254(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 டெஸ்ட் விக்கெட்டுகளில் 254 விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 49.7% ஆக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை. ஆனால், அஸ்வின் இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே கிரிக்கெட் உலகில் திகழ்ந்து வருகிறார். அஸ்வினுக்கு அடுத்தாற்போல் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லேயான் இருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை இரையாக்கியுள்ளார். அடுத்தாற்போல் டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டார் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என இடதுகை பேட்டர்கள் பெயர் பட்டியல் நீள்கிறது. சர்வதேச அளவிலான இடதுகை பேட்டர்கள் 15 பேரில் ஆன்டர்சன், நேதன் லேயான், மோர்க்கல் ஆகியோர் மட்டுமே டெய்லெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில் அஸ்வின் பந்துவீச வருகிறார் என்றாலே இடதுகை பேட்டர்களுக்கு தொடை நடுங்கும் என்று கூறலாம்.

 
ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பு
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்ட் கிரிக்கெட்டில் 197 பந்துவீச்சாளர்கள் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். ஒரு பந்துவீச்சாளரின் ஸ்ட்ரைக் ரேட்தான், அவர் எத்தகைய திறமையான பந்துவீச்சாளர் என்பதை அறிய முடியும். பொதுவாக ஸ்ட்ரைக் ரேட்டை சுழற்பந்துவீச்சாளர்களைவிட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வைத்திருப்பார்கள்.

ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களில் சிறப்பாக ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். முதல் 120 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். இது முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் ஸ்ட்ரைக் ரேட்டைவிட அதிகம்.

வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சுழற் பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்ன் 54.7 ஸ்ட்ரைக் ரேட்டையும், வேகப்பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெயின் 45.5 ஸ்ட்ரைக் ரேட்டையும் சிறப்பாக வைத்துள்ளனர்.

அஸ்வின் இவர்களைவிட சளைத்தவர்கள் இல்லை என்றாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 62.1 ஆக இருக்கிறது. அதாவது 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை அஸ்வின் வீழ்த்துகிறார்.

 
உள்நாட்டில் தவிர்க்க முடியாத வீரர்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நூறு டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் விளையாடுகிறார் என்றால், அவரின் ‘டிராக் ரெக்கார்டு’ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். உள்நாட்டு டெஸ்ட் போட்டி அல்லது வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் என்றாலே தானாகவே ‘ப்ளேயிங் லெவனில்’ இடம் பெறும் வீரராக இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத வீரராக அமைய வேண்டும்.

அந்த வகையில் அஸ்வின் இந்திய அணிக்குள் அறிமுகமானதில் இருந்து டெஸ்ட் போட்டி என்றாலே தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அஸ்வின் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது அவர் பங்கேற்கும் போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டும் அல்ல, எப்போதுமே இந்திய அணியின் வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னராக வலம் வந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம்.

அதற்கு சேனா(SENA) நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளும், சராசரியும், ஸ்ட்ரைக் ரேட்டும் ஆசிய நாடுகளுக்கு எதிராக அஸ்வினின் முத்தாய்ப்பான விக்கெட்டுகளுமே சாட்சி.

ஆனால், இந்தியாவுக்கு வரும் சேனா நாடு அணிகளுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினால், சேனா நாடுகளில் நடந்த போட்டிகளில் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் அவர் திறமையின் மீது தொக்கி நிற்கும் கேள்வி.

நுட்பமான பந்துவீச்சாளர் அஸ்வின்

இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களான குலாம் அகமது முதல் எர்ரபள்ளி பிரசன்னா வரை, ஸ்ரீநிவாஸ் வெங்கட்ராகவன் முதல் ஹர்பஜன் சிங் வரை எடுத்துக்கொண்டால், கிரிக்கெட்டில் நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், டாஸ் செய்வது, நக்குல் பால் என ஒரு ஒவரில் 6 பந்துகளையும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வீசக்கூடிய திறமை படைத்தவர், அஸ்வின் என்று கூற முடியும்.

இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனித்து நிற்கக் காரணம், அவரின் பந்துவீச்சில் செய்யும் பரிசோதனை முயற்சி, தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சைச் சிறப்பாக மாற்றச் செய்யும் முயற்சி, போராட்ட குணம், ஒவ்வொரு பந்திலும் விக்கெட் வீழ்த்த வேண்டும், பேட்டரை ஷாட் அடிக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற நுட்பத்துடன் பந்துவீசும் உத்வேகம்தான் காரணம்.

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் மட்டும் அஸ்வினால் சிறப்பாகப் பந்துவீச முடிகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சேனா நாடுகளின் ஆடுகளங்களில் பெரிதாக அஸ்வினால் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் தவிர்க்க முடியாதது. ஆனால், அஸ்வினுக்கு குருநாதராகக் கருதப்படும் அனில் கும்ப்ளே சேனா நாடுகளிலும் தனது பந்துவீச்சால் கோலோச்சியுள்ளார் என்பது அவரின் பந்துவீச்சு தரத்துக்குச் சான்று.

அஸ்வின் பந்துவீச்சு என்பது கடினமான, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மெல்போர்ன், வான்டரர்ஸ், சிட்னி, நியூசிலாந்து மைதானங்களுக்கு சரிவராது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மைதானங்களில்கூட நேதன் லேயான், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கும்ப்ளே போன்ற பந்துவீச்சாளர்கள் பந்தை பம்பரம்போல் சுழலவிட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துக் காட்டியுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அஸ்வின் திறமையான பந்துவீச்சாளர்தான், ஆனால் சிறந்த பந்துவீச்சாளரா என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைக்கும் கேள்வி.

"தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு தமிழர் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது, உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது போன்றவை என்றென்றும் பெருமைக்குரியது. ஆனால், இவை அனைத்தும் சிறந்த பந்துவீச்சாளராக அவரை உருவகப்படுத்திவிடுமா?" என்று விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளரான ஆர். முத்துக்குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
பெருமைக்குரிய விஷயம்
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அவர் கூறுகையில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரரும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. சிவராமகிருஷ்ணன், வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் எனப் பல ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடினாலும் யாரும் 100 டெஸ்ட் விளையாடியதில்லை. இதை அஸ்வின் செய்திருப்பது மகத்தான சாதனை.

இந்திய ஆடுகளங்களில் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அஸ்வின் இல்லாமல் இந்திய அணி வெல்வது என்பதை கடந்த காலங்களில் விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பந்தை டர்ன் செய்வதில் சிறந்த பந்துவீச்சாளர் என்று அஸ்வினை குறிப்பிட முடியாது," என்கிறார் அவர்.

முரளிதரன், நேதன் லேயன் போன்று பந்தை டர்ன் செய்யும் வீரர் அஸ்வின் என்று கூற முடியாது எனும் ஆர். முத்துக்குமார் "அரவுண்ட் தி விக்கெட்டில் அஸ்வின் பந்துவீசி வலது கை பேட்டர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் சிறந்தவர்தான். ஆனால், அஸ்வினிடம் சிறந்த விஷயம் என்னவென்றால், கற்றுக்கொண்டே இருப்பார், புதிது புதிதாக நுட்பங்களைப் பயன்படுத்துவார். நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அஸ்வினால், முறையான ஆஃப் ஸ்பின் எடுக்கும் ஆடுகளங்களில் விக்கெட் எடுக்க முடியவில்லை," என்றார்.

மேலும் அவர், "ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் அந்த ஆஃப் ஸ்பின்னை எந்த அளவுக்கு வலிமையான ஆயுதமாக மாற்ற முடியும் என்பதில் இருக்கிறது. அனில் கும்ப்ளே மாதிரி துல்லியம், லைன் லென்த்தில் பந்தைச் சிதறவிடாமல் அஸ்வின் பந்துவீசுவது சிறப்பு. இதனால், அஸ்வின் பந்துவீச்சை பேட்டர் கவனமாகக் கையாள வேண்டும், சிறிது கவனக் குறைவாக விளையாடினால்கூட பேட்டர் விக்கெட்டை இழக்க நேரிடும். இதுதான் அஸ்வினின் சிறப்பு,” எனத் தெரிவித்தார்.

பந்தை டர்ன் செய்யாமலே சாதிக்கும் வீரராக அஸ்வின் இருப்பதுதான் அவருக்குரிய தனிச்சிறப்பு என்று முத்துக்குமார் தெரிவித்தார். அவர் அதுகுறித்துக் கூறுகையில், “இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் சிம்மசொப்பனம்தான் என்பதை மறுக்கவில்லை. இடதுகை பேட்டர்களை ஆட்டமிழக்க வைக்க லேசான டர்ன் பந்தில் இருந்தால் போதும், அதைத்தான் அஸ்வின் செய்கிறார். மற்ற வகையில் நல்ல டர்ன் செய்யக்கூடிய பந்துகளை வீசவில்லை,” எனத் தெரிவித்தார்.

 
சேனா நாடுகளில் சோதனை
இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய ஆடுகளங்களின் உதவியுடன்தான் 500 விக்கெட்டுகளை அஸ்வினால் தொட முடிந்தது என்று முத்துக்குமார் விமர்சனம் வைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்திய ஆடுகளின் தன்மையால்தான் அஸ்வின் 350 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அஸ்வின் சாதனைக்கு இந்திய ஆடுகளங்கள் உதவியுள்ளன. ஆனால், சேனா நாடுகளில் சென்று அஸ்வினால் பெரிதாக விக்கெட்டுகளை ஏன் வீழ்த்தமுடியவில்லை?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

கும்ப்ளே முதலில் இந்திய ஆடுகளங்களில் மட்டும்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் காலப்போக்கில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். மெல்போர்னில் முதல் டெஸ்ட் முதல் நாளிலேயே கும்ப்ளே 5 விக்கெட்டை வீழ்த்தினார். கும்ப்ளே பந்துவீச்சைப் பார்த்து ஷேன் வார்னே பாராட்டினார்.

ஆனால், "அஸ்வின் பந்துவீச்சில் பந்து டர்ன் ஆகாமல் இருப்பதால்தான் அவரால் சேனா நாடுகளின் அணிகளுக்கு எதிராக சாதிக்க முடியவில்லை. அஸ்வின் தன்னுடைய ஆஃப் ஸ்பின்னை வளர்த்தெடுக்காமல், ஓவருக்கு 6 பந்துகளையும் பலவிதமாக வீசுவதில்தான் கவனம் செலுத்தினார். அஸ்வின் நல்ல வீரர். ஆனால், சிறந்த வீரர் என்று ஏற்க முடியாது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/crgv609x1l3o

யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.

3 weeks ago
DSC_2222-750x375.jpg ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது.

117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசி சாதனைப் படைத்தார் தென்ஆப்பிரிக்கா வீராங்கனை

3 weeks 1 day ago

மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3 ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2 ஆவது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.

Capture-9.jpg

இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது.

இதற்கு முன்னதாக 2016 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 63 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

https://thinakkural.lk/article/294615

பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்

3 weeks 2 days ago
பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை!

Published By: RAJEEBAN   04 MAR, 2024 | 11:01 PM

image

(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.


குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் என்பன இலங்கை வெற்றி அடைவதற்கு உதவின.

குறிப்பாக தசுன் ஷானக்க கடைசி ஓவரை சிறப்பாக வீசி 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியமை அணியின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்தது.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.


மொத்த எண்ணிக்கை 4 ஓட்டங்களாக இருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ (4), 37 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் (19) ஆகிய இருவரும் களம் விட்டகழ இலங்கை ஆட்டம் கண்டது.


ஆனால், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தினர்.


குசல் மெண்டிஸ் 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.


அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.


சதீர சமரவிக்ரம 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 61 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 21 பந்தகளில் 6 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.


207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.


பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.


ஆனால், 17 மாதங்களின் பின்னர் ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட மஹ்முதுல்லாவும் தனது 5ஆவது ரி20 போட்டியில் விளையாடும் ஜாக்கர் அலியும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.


மஹ்முதுல்லா 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.


அவர் ஆட்டம் இழந்தபின்னர் ஜாக்கர் அலி, மஹேதி ஹசன் (16) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர். (180 - 6 விக்.)கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் பங்களாதேஷுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.


ஆனால் அவர் பந்துவீச்சு எல்லையில் இருந்ததால் இலங்கைக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
கடைசி ஓவரை வீசிய தசுன் ஷானக்க முதல் பந்தில் ரிஷாத் ஹொசெய்னின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.


ஆனால், தசுன் ஷானக்கவின் அடுத்த பந்து வைடானது. 2ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை ஷானக்க கொடுக்க, ஜாக்கர் அலி துடுப்பாட்ட எல்லைக்கு வந்தார். ஆனால், அவரது விக்கெட்டை அடுத்த பந்தில் தசுன் ஷானக்க கைப்பற்றினார். ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அடுத்து களம் புகுந்த ஷொரிபுல் இஸ்லாம் பவண்டறி ஒன்றை விளாசினார்.
இந் நிலையில் கடைசி 2 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு ஒரு சிக்ஸ் தேவைப்பட்டது.

ஆனால் தசுன் ஷானக்க அடுத்து இரண்டு பந்துகளையும் சரியான இலக்குகளில் வீசி லெக் பை ஒன்றையும் ஒரு ஓட்டத்தையும் மாத்திரம் கொடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.


பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


ஆட்டநாயகன்: சரித் அசலன்க

https://www.virakesari.lk/article/177913

நியூஸிலாந்து - அவுஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்

3 weeks 6 days ago
ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல் 174 : நியூஸிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள்
01 MAR, 2024 | 04:18 PM
image

(நெவில் அன்தனி)

வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வீரர் கெமரன் க்றீன் தனித்து ஆட்டம் இழக்காமல் 174 ஓட்டங்களைக் குவிக்க, நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு 116 ஓட்டங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 383 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த இணைப்பாட்டமானது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அவுஸ்திரேலியாவின் கடைசி விக்கெட் ஜோடியினரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

நியூஸிலாந்துக்கு எதிராக 2004ஆம் ஆண்டு க்ளென் மெக்ராவும் ஜேசன் கிலெஸ்பியும் 10ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 114 ஓட்டங்களே முன்னைய சாதனையாக இருந்தது.

மேலும் கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் பகிர்ந்த இணைப்பாட்டமே அவுஸ்திரேலியாவின் முதலாவது இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

போட்டியின் முதாலாம் நாளான வியாழக்கிழமை (29) மொத்த எண்ணிக்கை 267 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவைப் பலப்படுத்தினர்.

கடைசி விக்கெட் இணைப்பாட்டத்தில் ஹேஸ்ல்வூடின் பங்களிப்பு 22 ஓட்டங்களாகும்.

கெமரன் க்றீன் 6 மணித்தியாலங்கள, 36 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 275 பந்தகளை எதிர்கொண்டு 174 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக 41 உதிரிகள் அமைந்தது.

மிச்செல் மாஷ் 40 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 33 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மெட் ஹென்றி 70 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்கொட் குகெலின் 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில்லியம் ஓ'றூக் 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

டொம் லெதம் (5), கேன் வில்லியம்சன் (0), ரச்சின் ரவிந்த்ரா (0), டெரில் மிச்செல் (11), வில் யங் (9) ஆகிய 5 முன்வரிசை வீரர்களும் ஆஸி.யின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தனர். (29 - 5 விக்.)

எனினும் டொம் ப்ளெண்டலும் க்ளென் பிலிப்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

டொம் ப்ளெண்டல் 33 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஸ்கொட் குகேலின் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். (113 - 7 விக்.)

இந் நிலையில் க்ளென் பிலிப்ஸ், மெட் ஹென்றி ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்தனர்.

எனினும் மொத்த எண்ணிக்கை 161 ஓட்டங்களாக இருந்தபோது  க்ளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

கடைசியாக ஆட்டம் இழந்த மெட் ஹென்றி 42 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நேதன் லயன் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க 217 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

0103_cameren_green_aus_vs_nz.png

0103_matt_henry_nz_vs_aus.png

0103_josh_hazlewood_aus_vs_nz.png

https://www.virakesari.lk/article/177689

அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை - நமிபியா வீரர் ஈட்டன்

1 month ago
நமிபியா வீரர் ஈட்டன் அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை
27 FEB, 2024 | 04:54 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் நமிபியா வீரர் ஜான் லொஃப்டி ஈட்டன் அதிவேக சதம் குவித்து புதிய உலக சாதனை நிலைநாட்டியுள்ளார்.

நேபாளத்தின் கீர்த்திபூரில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில்  லொஃப்டி ஈட்டன்  33 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளார்.

நேபாள வீரர் குஷால் மல்லாவினால் நிலைநாட்டப்பட்ட சாதனையை ஈட்டன் முறியடித்திருப்பது விசேட அம்சமாகும்.

சீனாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டு விழா ரி20 கிரிக்கெட் போட்டியில் மொங்கோலியாவுக்கு எதிராக மல்லா 34 பந்துகளில் சதம் குவித்து முன்னைய  உலக   சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

11ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் களம் புகுந்த 22 வயதான லொஃப்டி ஈட்டன் 36 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

கடந்த 32 ரி20 போட்டிகளில் அவர் வெறும் 182 ஓட்டங்களையே பெற்று 10.70 என்ற மிக மோசமான சராசரியைக் கொண்டிருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் சாதனை படைத்து ஹீரோவானார்.

ஆரம்ப வீரர் மாலன் க்ருஜர் 48 பந்துகளை எதிர்கொண்டு 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அப் போட்டியில் நமிபியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ரி20 அதிவேக சதங்கள் (முதல் 5 வீரர்கள்)

லொஃப்டி ஈட்டன் (நமிபியா) - 33  பந்துகளில்

குஷால் மல்லா (நேபாளம்) - 34 பந்துகளில்

டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா), ரோஹித் ஷர்மா (இந்தியா), இலங்கை வம்சாவளி சுதேஷ் விக்ரமசேகர (செக் குடியரசு) - மூவரும் 35 பந்துகளில் சதம்.

https://www.virakesari.lk/article/177436

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்

1 month ago

Published By: VISHNU   23 FEB, 2024 | 09:56 PM

image

(நெவில் அன்தனி)

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பிறீமியர் லீக்கின் (WPL 2024) இரண்டாவது அத்தியாயம் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகிறது.

th.jpg

ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன.

th__1_.jpg

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்திவரும் வீராங்கனைகள் பலர் இவ் வருட மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றனர்.

wpl_opening_ceremony_2.png

இன்றைய போட்டிக்கு முன்பதாக சினிமா நட்சத்திரங்களின் பங்கேற்புடன் பிரமாண்டமான ஆரம்ப விழா வைபவம் பெங்களூருவில் நடைபெற்றது.

wpl_opening_ceremony_1.png

இம்முறை டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இண்டியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், யூபி வொரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இரண்டு சுற்றுகளில் விளையாடுகின்றன.

WPL-2024-Bollywood-stars-will-perform-in

இந்த அணிகளின் தலைவிகளாக  முறையே மெக் லெனிங், பெத் மூனி, ஹாமன்ப்ரீத் கோர், ஸ்ம்ரிதி மந்தானா, அலிசா ஹீலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

wpl_opening_ceremony_3.png

போட்டிகள் பெங்களூருவிலும் டெல்ஹியிலும் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/177158

விராட் – அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை

1 month ago
1708484311-vir-2-300x200.jpg

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பெப்ரவரி 15 ஆம் திகதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்பு மற்றும் வாழ்த்துக்களை எதிர்நோக்குகிறோம். இந்த நேரத்தில் எங்களின் தனிமைக்கு மரியாதை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். அன்பும், நன்றியும், விராட் மற்றும் அனுஷ்கா,” என குறிப்பிட்டுள்ளார்.

Capture-19.jpg

https://thinakkural.lk/article/292729

தென் ஆபிரிக்காவுடனான 92 வருட டெஸ்ட் வரலாற்றில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி

1 month 1 week ago
16 FEB, 2024 | 03:22 PM
image

(நெவில் அன்தனி)

ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

நியூஸிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி 1932இல் நடைபெற்று 92 வருடங்கள் கடந்த நிலையில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடர் ஒன்றில் நியூஸிலாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் 1932இலிருந்து இதுவரை 17 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளதுடன் அவற்றில் 14 தொடர்களில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது. 4 தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தன. நியூஸிலாந்தின் ஒரே ஒரு தொடர் வெற்றி இன்றைய தினம் பதிவானது.

ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் அதிகூடிய வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அந்த இலக்கை அடைந்து வரலாறு படைத்தது.

267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நிதானத்துடன் குவித்த சதத்தின் உதவியுடன் வெற்றியை இலகுவாக்கிக்கொண்டது.

தனது 98ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் குவித்த 32ஆவது சதம் இதுவாகும்.

172ஆவது இன்னிங்ஸில் 32ஆவது சதத்தைக் குவித்ததன் மூலம் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அடைந்த வீரர் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்றார்.

32 டெஸ்ட் சதங்களை ரிக்கி பொன்டிங் 172 இன்னிங்ஸ்களிலும் ரிக்கி பொன்டிங் 176 இன்னிங்ஸ்களிலும் சச்சின் டெண்டுல்கர் 179 இன்னிங்ஸ்களிலும் பெற்றிருந்தனர்.

கேன் வில்லியம்சனுக்கு பக்க பலமாகத் துடுப்பெடுத்தாடிய வில் யங் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 157 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்டதாக அமைந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து பெற்ற 269 ஓட்டங்களே அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களைப் பெற நியூஸிலாந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 235 ஓட்டங்களைப் பெற்றது.

தென் ஆபிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸில் திறமையாக துடுப்பெடுத்தாடிய டேவிட் பெடிங்ஹாம் தனது கன்னிச் சதத்தை பெற்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம் ஓ'ரூக் 93 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களைக் கைபற்றியதன் மூலம் நியூஸிலாந்து சார்பாக அறிமுக வீரராக அதிசிறந்த பந்துவிச்சுப் பெறுதியைப் பதிவுசெய்த வீரரானார்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் போட்டியாகவும் இது அமைந்ததால் நியூஸிலாந்தின் 2 வெற்றிகளுக்கு 24 புள்ளிகள் வழங்கப்பட்டது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து, 261 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

2ஆவது போட்டி எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 242 (ருவான் டி ஸ்வாட் 64, டேவிட் பெடிங்ஹாம் 39, ஷோன் வொன் பேர்க் 38, வில்லியம் ஓ'ரூக் 59 - 4 விக்., ரச்சின் ரவிந்த்ரா 33 - 3 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (கேன் வில்லியம்சன் 43, டொம் லெதம் 40, வில் யங் 36, டேன் பீட் 89 - 5 விக்., டேன் பீட்டர்சன் 39 - 3 விக்.)

தென் ஆபிரிக்கா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 235 (டேவிட் பெடிங்ஹாம் 110, கீகன் பீட்டர்சன் 43, நீல் ப்ராண்ட் 34, வில்லியம் ஓ'ரூக் 34 - 5 விக்., க்லென் பிலிப்ஸ் 50 - 2 விக்.)

நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 267) 2ஆவது இன்: 269 - 3 விக். (கேன் வில்லியம்சன் 133 ஆ.இ., வில் யங் 60 ஆ.இ., டொம் லெதம் 30, டேன் பீட் 93 - 3 விக்.)

ஆட்டநாயகன்: வில்லியம் ஓ'ரூக், தொடர் நாயகன்: கேன் வில்லியம்சன்.

download__2_.jpg

download__3_.jpg

https://www.virakesari.lk/article/176538

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் முதலாம் இடத்திற்கு மொஹமத் நபி

1 month 2 weeks ago
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஷக்கிப்பின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டினார் நபி

Published By: VISHNU   14 FEB, 2024 | 07:31 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) அரங்கில் ஐசிசி சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமத் நபி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்ததை அடுத்து சகலதுறை வீரருக்கான தரவரிசையில் நபி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த சகலதுறை வீரருக்கான தரவரிசையில் 2019 மே 7ஆம் திகதியிலிருந்து 2024 பெப்ரவரி 9ஆம் திகதிவரை 1739 நாட்கள் முதலிடத்தில் இருந்தவாறு ஷக்கிப் அல் ஹசன் செலுத்திவந்த ஆதிக்கத்தை மொஹமத் நபி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

மொஹமத் நபி 314 தரவரிசை புள்ளிகளைப் பெற்று ஷக்கிப் அல் ஹசனைவிட 4 புள்ளிகள் விததியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

mhd_nabi_batting.png

ஷக்கிப் அல் ஹசனுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ரஷித் கான் முதலிடத்தில் இருந்துவந்தார்.

இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 136 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் 39 வயதான மொஹமத் நபி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளார்.

mhd_nabi_bowling.png

இதன் மூலம் மிகக் கூடிய வயதில் (39 வருடங்கள், ஒரு நாள்) சகலதுறை வீரருக்கான தரவரிசையில் முதல் இடத்தை அடைந்தவர் என்ற சாதனையை மொஹமத் நபி நிலைநாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சாதனை இலங்கையின் திலக்கரட்ன டில்ஷானுக்கு சொந்தமாக இருந்தது. டில்ஷான் 2015ஆம் ஆண்டு தரவரிசையில் முதலிடத்தை அடைந்தபோது அவரது வயது 38 வருடங்கள், 8 நாட்களாகும்.

https://www.virakesari.lk/article/176395

உலக சாதனை மரதன் வீரர் கிப்டுன் உயிரிழப்பு

1 month 2 weeks ago
உலக சாதனை மரதன் வீரர் கிப்டுன் உயிரிழப்பு
damithFebruary 13, 2024
12-1.jpg

ஆடவர் மரதன் ஓட்டப்போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவின் 24 வயது கெல்வின் கிப்டுன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் அவருடன் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டின் கர்வைஸ் ஹகிசமானாவும் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தில் 42 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணி மற்றும் 35 விநாடிகளில் பூர்த்தி செய்து கிப்டுன் உலக சாதனை படைத்திருந்தார். இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மரதன் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

https://www.thinakaran.lk/2024/02/13/sports/42019/உலக-சாதனை-மரதன்-வீரர்-கிப/

வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்!

1 month 2 weeks ago

வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்!

வடமாகாண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள்!



இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (10) வைபவ ரீதியாக ஆரம்பமானது.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக "கொமான்டோஸ் கப்" வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.

11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

தனது ஆரம்ப உரையில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன தெரிவிக்கையில்,

இலங்கை விமானப்படையின் 73 ஆம் ஆண்டு நிறைவையொட்டி சமூக பாதுகாப்பினை இலக்காக கொண்டு இந்த போட்டியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த போட்டியின் ஊடாக நட்புறவை வளர்ப்பதுடன், விமானப்படைக்கும் உங்களிற்கும் இடையில் நல்ல உறவை கட்டியெழுப்புவதுமே எமது இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகம் இடப்பெற்றதுடன், குழுப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியில் கிளிநொச்சி வவுனியா அணிகள் மோதின. முதலாவது கோலை கிளிநொச்சி லீக் அணி பெற்றது.

 

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=183863

இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago

Published By: VISHNU   09 FEB, 2024 | 06:51 PM

image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

001.png

அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்  இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட முன்னைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

002.png

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களை இலங்கை குவித்தது. 

அந்த மொத்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக பதவானது.

003.png

பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசி 10ஆவது வீரராக இரட்டைச் சதம் குவித்தார்.

பெத்தும் நிஸ்ஸன்க, 88 ஓட்டங்களைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோவுடன் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களையும் 44 ஓட்டங்களைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 3ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

https://www.virakesari.lk/article/175999

ஐசிசி பவுலிங் தரவரிசையில் பும்ரா முதலிடம்

1 month 2 weeks ago
ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம்: கபில் தேவால் முடியாததை சாதித்துக் காட்டிய பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா மியாபுரம்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 37 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர்.

இந்தத் தரவரிசையின் மூலம், பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார்.

ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வீரர் கபில்தேவ் கிட்டத்தட்ட முதலிடத்தை நெருங்கினார். ஆனால், அவரால் முதலிடத்தைப் பெற முடியவில்லை. 1979-80 ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் கபில் தேவ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் செய்ய முடியாத சாதனையை தற்போது பும்ரா செய்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்ஸ்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சமீபத்திய தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி, 881 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். ஐசிசி தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை.

இந்த வரிசையில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினை (841 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார் பும்ரா. அஸ்வின் மார்ச் 2023இல் இருந்து தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

இதற்கு முன், தரவரிசைப் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடத்தைப் பிடித்ததே அவரின் முந்தைய சாதனைகளில் சிறந்தது.

 
சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பாராட்டு
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டினத்திலும் நடைபெற்றது. விசாகப்பட்டினம் டெஸ்ட்டில் பும்ரா ‘ஆட்ட நாயகன்` விருதை வென்றார்.

இந்தப் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சிறப்புப் பிரிவு பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாத்தியமான, அற்புதமான இன்ஸ்விங் யார்க்கர் மூலம் பும்ரா, ஆலி போப்பின் மிடில் மற்றும் லெக் ஸ்டம்புகளை வீசிய விதத்தைப் பாராட்டினார். தான் பார்த்த சிறந்த யார்க்கர்களில் இதுவும் ஒன்று என்றார்.

இந்தியாவிலிருந்து நான்காவது பந்து வீச்சாளர்

விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பும்ரா 45 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரே இன்னிங்ஸில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது இது பத்தாவது முறையாகும்.

பும்ரா 34 டெஸ்ட் போட்டிகளில், பத்து முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா. ஐதராபாத் டெஸ்ட் போட்டியிலும் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தத் தொடரில் இதுவரை இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பும்ரா. அவர் 10.67 என்ற சராசரியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இதுவரை நான்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மட்டுமே முதலிடத்தைப் பிடித்துள்ளனர். நான்காவது பந்து வீச்சாளர் மற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. பும்ராவுக்கு முன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோர் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்தனர்.

 
வித்தியாசமான பந்துவீச்சும் காயங்களும்
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ராவின் பந்துவீச்சு வித்தியாசமானது. இந்தத் தனித்துவமான பந்துவீச்சு நடவடிக்கையின் காரணமாக, பும்ரா குறைந்த ரன்-அப்பில் அதிக வேகத்தை அடைய முடிந்தது. ஆனால், இதிலுள்ள பிரச்னை என்னவென்றால், இத்தகைய அதிவேக பந்துவீச்சு முதுகுத்தண்டில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

பும்ரா தனது சர்வதேச போட்டிகளை தொடங்கியதில் இருந்து இந்த பந்துவீச்சு நடவடிக்கையால் நீண்ட நேரம் பந்து வீச முடியாது என்று ஆய்வாளர்கள் கருதினர்.

வயது மற்றும் உடற்தகுதி காரணமாக, முதல் ஐந்து ஆண்டுகளில் பும்ரா எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக அவருக்குக் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவருக்குப் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டில், இடதுகை கட்டைவிரல் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை. ஆனால், அவர் காயத்தில் இருந்து மீண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கடந்த 2019ஆம் ஆண்டில், பும்ரா கீழ் முதுகு அழுத்த எலும்பு முறிவு பிரச்னையால் அவதிப்பட்டார். வழக்கமான கதிரியக்க பரிசோதனையின்போது இந்தச் சிக்கல் கண்டறியப்பட்டது. இதனால் அவர் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார்.

பிரிட்டனில் சிகிச்சை பெற்று வந்த அவர், இந்தியா-நியூசிலாந்து தொடருக்காக இந்திய அணிக்குத் திரும்பினார்.

 
முதுகு வலியிலிருந்து மீண்ட பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ரா 2022இல், கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை. இந்தப் பிரச்னையில் இருந்து மீள குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், இதிலிருந்து மீள கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆனது.

இதனால், 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் பும்ரா தவறவிட்டார்.

மார்ச் 2023இல் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் கழித்த பிறகு, ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு எதிரான T20I தொடருக்கான இந்திய கேப்டனாக பும்ரா அணிக்குத் திரும்பினார். அதன்பிறகு அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 19, 2023 வரை இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பும்ரா 11 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தப் போட்டியில் பும்ராவின் ஆட்டத்தைப் பற்றிப் பேசிய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "அவர் ஒரு தலைமுறைக்கானவர்" என்று அவரை பாராட்டினார்.

பும்ரா அனைத்து வடிவங்களிலும் விளையாடும் திறன் மற்றும் போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவர் என டிராவிட் பாராட்டினார். அவர்தான் போட்டியின் வெற்றியாளர் என்று கூறினார்.

பும்ரா மீண்டும் களமிறங்கிய பிறகு சிறப்பாகச் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் களமிறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறுவதைவிட தற்போது நிம்மதியாக இருக்கிறது என பும்ரா கூறினார். இதிலிருந்து குணமடைவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்ததாகக் கூறினார்.

அதன் பிறகு பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தொடங்கி சமீபத்தில் நடைபெற்ற விசாகப்பட்டினம் டெஸ்ட் வரை விளையாடிய ஏழு போட்டிகளில் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 
'முழு பலத்தையும் பயன்படுத்துவேன்'
ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு, தான் எண்கள் குறித்துக் கவலைப்படுவதில்லை என்றும் எண்களில் அக்கறை காட்டினால் மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

“இந்தியாவின் வெற்றிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என அவர் தெரிவித்தார்.

"விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு யார்க்கர் மட்டுமே ஒரே வழி என்று நான் நினைத்தேன். அதனால்தான் ஆலி போப்பிற்கு யார்க்கர் வீசினேன்" என்றும் அவர் கூறினார்.

"வேகப்பந்து வீச்சுக்கு நான் தலைவர் அல்ல. ஆனால், மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவது எனது பொறுப்பு" என்றார்.

"ஒவ்வொரு விக்கெட்டும் வித்தியாசமானது. விக்கெட்டை எடுக்க எனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும்" என்று பும்ரா கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c3g0536g0geo

45 ஆண்டு சாதனையை உடைத்த அஸ்வின்; காத்திருக்கும் புதிய சாதனைகள்

1 month 3 weeks ago
ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

45 ஆண்டுகளுக்குப்பின் இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொடுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே அஸ்வினுக்குத் தேவைப்படுகிறது.

சென்னைச் சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமானார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நிச்சயம் இந்த புதிய மைல்கல்லை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன

டாப்-5 பந்துவீச்சாளர்களில் இடம்பிடித்த அஸ்வின்

21-ஆம் நூற்றாண்டில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வரிசைப்படுத்தினால், அதில் அஸ்வின் பெயர் முதல் 5 இடங்களுக்குள் இடம் பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சென்னை தெருக்களில் டென்னிஸ் பந்து வைத்து கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களையும், திறமைகளையும் கற்றுக் கொண்டவர் அஸ்வின்.

குறிப்பாக அஸ்வினின் சொடுக்கு பந்துவீச்சு, கேரம் பந்துவீச்சு ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய மரியாதையையும், பெயரையும் பெற்றுக்கொடுத்தன. சுழற்பந்துவீச்சில் உள்ள பல்வேறு நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெற்ற அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஆடுகளமாக இருந்தாலும் பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகவே இருந்து வந்துள்ளார்.

அஸ்வினின் புத்திக்கூர்மை, அவரின் நுணுக்கமான ‘கேரம் பந்துவீச்சு’, ‘ஆர்ம் பந்துவீச்சு’, ஆஃப் ஸ்பின்னை கட்டுக்கோப்புடன் ‘லைன் லென்த்தில்’ வீசுவது ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்கள். அஸ்வின் ஒரு ஓவரை வீசினால், 6 பந்துகளும் வெவ்வேறு வகையில்தான் வீசுவாரே தவிர, ஒரே மாதிரியாக பெரும்பாலும் வீசியது இல்லை என்பதை பலரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி, பேட்டர்களை திணறடிப்பதில் அஸ்வின் தேர்ந்தவர். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அஸ்வின் பேட்டர்களுக்கு எதிராக தனி ராஜ்ஜியமே நடத்துவார்.

 
அணிக்கு நெருக்கடியான காலத்தில் அறிமுகமான அஸ்வின்

இந்திய அணிக்குள் அஸ்வின் வந்தபோது, அணி சற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஏனென்றால் அது கும்ப்ளேவுக்கு அடுத்தாற்போல் நல்ல சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜனைத் தவிர வேறுயாரும் அடையாளம் காணப்படாத காலம்.

பகுதிநேரப் பந்துவீச்சாளராக யுவராஜ் சிங் மட்டுமே இருந்தார். அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் இடம் பெற்ற அஸ்வின், கும்ப்ளே இல்லாத குறையை நிவர்த்தி செய்தார்.

அஸ்வின் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி டெல்லியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று வியப்பில் ஆழ்த்தினார்.

ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்

அதிவேக சாதனைகளை நிகழ்த்திய அஸ்வின்

அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிவேகமாக 250 முதல் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 90 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளையும், ஓர் ஆண்டுக்கு 50 விக்கெட்டுகள் என 4 முறை வீழ்த்தியுள்ளார்.

2016-17-ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் 28 விக்கெட்டுகளையும், வங்கதேசத்துக்கு எதிதாரன டெஸ்டில் ஒரே ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

 
ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கும்போது, அஸ்வின் 96 டெஸ்ட் போட்டிகளில் 496 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால், முதலிரு டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து 499 விக்கெட்டுகளுடன் நின்றுவிட்டார்.

அடுத்த டெஸ்டில் 500-வது விக்கெட்டை அஸ்வின் எட்டிவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறு அஸ்வின் சாதனை படைத்தால், 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த 2-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெறுவார்.

ஒருவேளை 500வது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் அடுத்த டெஸ்டில் எடுத்துவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.

இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

இங்கிலாந்துக்கு எதிராக ‘செஞ்சுரி விக்கெட்’

அது மட்டுமல்லாமல் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதற்குமுன் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் இங்கிலாந்துக்கு எதிராக 95 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 45 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் முறியடித்து 100 விக்கெட்டுகளை எட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக பகவத் சந்திரசேகர் 95 விக்கெட்டுகள், அதைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே 92 விக்கெட்டுகள், பிஷன் சிங் பேடி, கபில் தேவ் தலா 85 விக்கெட்டுகள், இசாந்த் சர்மா 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே உள்நாட்டில் மட்டும் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை அஸ்வின் எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் எட்டினால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் அஸ்வினின் எகனாமி ரேட் 2.78 ரன்கள்தான்.

 
ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார்

அஸ்வினின் பந்துவீச்சு சாதனைகள்
  • அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 499 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச அளவில் 9-வது இடத்தில் இருக்கிறார்.
  • அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 34 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார்.
  • தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை 8 முறை வீழ்த்தி 5-வது இடத்தில் அஸ்வின் உள்ளார்.
  • ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 13-வது வயதான வீரர் (36 வயது, 298 நாட்கள்) சாதனையையும் அஸ்வின் வைத்துள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பேட்டர்களை போல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்து 9-வது இடத்தில் அஸ்வின் உள்ளார்.
  • 250 முதல் 350 விக்கெட்டுகள் வரை அதிகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்று முதலிடத்தில் அஸ்வின் உள்ளார்.
  • 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளையும், 54 போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும், 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
  • 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகவேகமாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை வைத்துள்ள அஸ்வின், 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியும் 2-வது பந்துவீச்சாளராக சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 10 முறை தொடர் நாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cjk6ljnmv05o

நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட்

1 month 3 weeks ago
ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம்! Recent Match Report - New Zealand vs South Africa 1st Test 2023/24 |  ESPNcricinfo.com

நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 511 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் கடந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

366 பந்துகளை எதிர்கொண்ட ரச்சின் ரவீந்திரா 26 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ரச்சின் ரவீந்திரா தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/290568

Checked
Thu, 03/28/2024 - 22:25
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed