12-26-2003, 09:52 PM
தமிழ் கலைநிகழ்வுகள் எதுவும் நடக்கிறதென்று தெரிஞ்சால் காணும் முண்டியடிச்சுக்கொண்டு போய் ஒரு மூலையிலை உக்காந்திடுவன். போனகிழமை ஜேர்மன் பிராங்பொட் தமிழ்மன்றத்தின்ரை ஆண்டுவிழா என்று கேள்விப்பட்டு வேளைக்கே போய் உக்காந்திட்டன்.
வழமைபோல தாமதமாக ஆரம்பிச்சு வழமையான சொதப்பல் நிகழ்ச்சியளுக்கு இடையிலை கவியரங்கமொன்று இடம்பெற்றது. பங்குபற்றிய கவிஞரில் சிலர் உரத்துப்படிப்பதுவே உன்னத கவியென்று எண்ணித் தொண்டை நரம்பு புடைக்க கவியுரைக்க மற்றும் சில முதுகவிகளோ அழகிய உன் மேனி என்ற கவியரங்கின் தலைப்பைப் பார்த்து கவிபுனைவதற்கு எடுத்துக்கொண்ட சிரத்தையைவிட தம் தலைக்கு சாயம் பூசுதற்கும் தம்மேனியை அழகுபடுத்துவதற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையுமே அதிகமோ என எண்ணத்தக்க கவிவடித்தனர். இவர்களுக்கிடையில் ஒருசிலர் அற்புத கவிவடித்தும் சென்றதையும் காணமுடிந்தது. பழசுகளின் பந்தாவுகளுக்கு மத்தியில் சின்னப் பெண்ணொன்றும் அழகிய உன் மேனி என்ற தலைப்புக்கு சில வரிகளிலேயே சின்னதாய் மிளகுபோன்று காரசாரமான கவிடித்தது, யாரது என்று நிமிர்ந்தால் ஆச்சரியம் உச்சிவரை ஊடுருவிய அந்தவரிகளின் சொந்தக்காரியாக மேடையில் நம்ம சாந்தி.
வாழ்த்துக்கள் கூற ஆளைத்தேட முதல் அடுத்த ஆனந்த அதிர்ச்சி தமிழ்மன்றம் தனது 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியிலும் சாந்திக்கே முதற்பரிசு. ஆனந்தத்தில் அந்தப்பெண்ணுடன் பேசி வழியனுப்பிய கையோடு பக்கத்தில் நின்ற என்ரை செல்லம்மாவிட்டை, என்ன மனுசரோ நீங்கள் அந்தப்பெண்ணு பரிசு பெற்றதுக்கு ஒருசிறு வாழ்த்துக்கூடச் சொல்லாமலுக்கு என்று வாங்கிக்கட்டிக் கொண்டன்.
வயசான இந்தக் கிழவன் தாமதமாய் சொல்லும் இந்த வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுமம்மா சாந்தி. நல் தமிழ் ஈழத்து இலக்கியத்துக்கு அணிகலனாய் இன்னும் அரிய பல படைப்புக்கள் படைத்து பரிசுகள்பல பெற்று நம்மவர் வாழும்வரை உன்பெயர் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்
வழமைபோல தாமதமாக ஆரம்பிச்சு வழமையான சொதப்பல் நிகழ்ச்சியளுக்கு இடையிலை கவியரங்கமொன்று இடம்பெற்றது. பங்குபற்றிய கவிஞரில் சிலர் உரத்துப்படிப்பதுவே உன்னத கவியென்று எண்ணித் தொண்டை நரம்பு புடைக்க கவியுரைக்க மற்றும் சில முதுகவிகளோ அழகிய உன் மேனி என்ற கவியரங்கின் தலைப்பைப் பார்த்து கவிபுனைவதற்கு எடுத்துக்கொண்ட சிரத்தையைவிட தம் தலைக்கு சாயம் பூசுதற்கும் தம்மேனியை அழகுபடுத்துவதற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையுமே அதிகமோ என எண்ணத்தக்க கவிவடித்தனர். இவர்களுக்கிடையில் ஒருசிலர் அற்புத கவிவடித்தும் சென்றதையும் காணமுடிந்தது. பழசுகளின் பந்தாவுகளுக்கு மத்தியில் சின்னப் பெண்ணொன்றும் அழகிய உன் மேனி என்ற தலைப்புக்கு சில வரிகளிலேயே சின்னதாய் மிளகுபோன்று காரசாரமான கவிடித்தது, யாரது என்று நிமிர்ந்தால் ஆச்சரியம் உச்சிவரை ஊடுருவிய அந்தவரிகளின் சொந்தக்காரியாக மேடையில் நம்ம சாந்தி.
வாழ்த்துக்கள் கூற ஆளைத்தேட முதல் அடுத்த ஆனந்த அதிர்ச்சி தமிழ்மன்றம் தனது 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியிலும் சாந்திக்கே முதற்பரிசு. ஆனந்தத்தில் அந்தப்பெண்ணுடன் பேசி வழியனுப்பிய கையோடு பக்கத்தில் நின்ற என்ரை செல்லம்மாவிட்டை, என்ன மனுசரோ நீங்கள் அந்தப்பெண்ணு பரிசு பெற்றதுக்கு ஒருசிறு வாழ்த்துக்கூடச் சொல்லாமலுக்கு என்று வாங்கிக்கட்டிக் கொண்டன்.
வயசான இந்தக் கிழவன் தாமதமாய் சொல்லும் இந்த வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுமம்மா சாந்தி. நல் தமிழ் ஈழத்து இலக்கியத்துக்கு அணிகலனாய் இன்னும் அரிய பல படைப்புக்கள் படைத்து பரிசுகள்பல பெற்று நம்மவர் வாழும்வரை உன்பெயர் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்