Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரிஷி புலனாய்வு அரசியலில்...
#21
--------------------------------------------------------------------------------
இந்திய - அமெரிக்க உறவு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழ் புலமையாளர் மத்தியில் விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து முக்கியம் பெறுகிறதொன்றாகும். ஒருவர் பிராந்திய சக்தி மற்றவர் சர்வதேச சக்தி. இவ்விரு நாடுகளை அளந்துகொண்டே ஈழவிடுதலைப் போராட்டத்தை நகர்த்தும் சூழலுக்குள் தமிழர்களின் விடுதலைப் போராட்டமுள்ளது.
அந்த வகையில் அண்மையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிகழ்ந்த இராணுப் பாதுகாப்பு உடன்படிக்கை எத்தகைய புறச்சூழலை உருவாக்கியதென்பதும் அதன் தாக்கம் எப்படியானதென்பதையும் நோக்குவோம்.

முதலில் இரண்டு நாடுகளது கடந்த கால உறவு நிலையை மேலோட்டமாகப் பார்ப்போம். BJP அரசாங்கத்திற்குப் பின்பு ஆட்சியை அமைத்த காங்கிரஸ் கூட்டணியினர் அமெரிக்க எதிர்ப்பு வாதத்தை கொண்டவர்கள் போலவே காணப்பட்டனர். ஆனால் அமெரிக்காவின் எதிரியுமில்லை நண்பனுமில்லை என்ற நிலைக்குள் இருப்பது போலவே ஆட்சியாளரால் மட்டுமல்ல இந்திய புலமையாளர்களால் பேசப்பட்டது. அது இந்தியாவுக்குள்ளேயும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும் மேலே தயார் செய்யப்பட்டிருந்தது. உண்மையில் காங்கிரஸ் கட்சியும் அதன் பிரதமரும் அமெரிக்காவுடன் நெருக்கத்தையும் உறவையும் பலப்படுத்த பலதடவை முயன்றதோடு பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவை முறிக்க பல தடவை முயன்றதை அண்மைக்காலத்தில் காணமுடிந்தது. இதற்கான அணுகுமுறை F-16 ரக விமானத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவது பற்றிய விடயத்தில் மிக நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டது. இந்த நெருக்கடியை தீர்க்க அமெரிக்கா இலகுவான சமன்பாடொன்றை வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு F-16 வழங்கினால் இந்தியா F-18 ஐ வாங்கலாம் என்பதுபோல் அச்சமப்படுத்தல் காணப்பட்டது.

வாஜ்பாய் அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட பல இராணுவ ஆயுத தளபாட உற்பத்தி பற்றிய உடன்பாடுகளிலிருந்து புதிய அரசு விலகமுடியாமலும் அதே நேரத்தில் பாகிஸ்தானை முறியடிக்க முடியாதநிலையிலும் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் மன்மோன்சிங், அரசாங்கம் இடதுசாரிகளின் நெருக்கடிக்கு அஞ்சியே செயல்பட்டதுடன் தற்போது அமெரிக்காவின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமலேயே உடன்பாட்டுக்கு இணங்கியுள்ளது. இது பற்றி இடதுசாரிகள் கருத்துக் கூறுகையில் இவ்உடன்படிக்கை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு ஏற்கனவே பாதுகாப்பு உடன்படிக்கையை கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையே அமெரிக்காவால் இந்தியாவுக்கு ஏற்படப்போகின்றது என எச்சரித்துள்ளன. மன்மோகன்சிங்குக்கு இடதுசாரிகளை சமாளிப்பதைவிட அமெரிக்காவை சமாளிப்பது கடினமாகவுள்ளது. F-16 ஐ வைத்துக்கொண்டு அமெரிக்கா இந்த உடன்பாட்டுக்கு இந்தியாவை வரவழைத்துள்ளது. பாகிஸ்தான் - இந்திய உறவு நிலையை தீர்மானிக்கும் வலு அமெரிக்காவிடமே உண்டு என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

எனவே இந்தியாவும் - அமெரிக்காவும் கூட்டாக ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் அவற்றை விநியோகிப்பதும் எட்டப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டில் உண்டு என்றாலும் அதனால் ஏற்படப் போகும் இராணுவ - அரசியல் தன்மை எந்தளவுக்கு இந்தியாவுக்கு சாதகமானது என்பது கேள்விக்குரியதாகும்.

மன்மோகன்சிங் அரசாங்கம் ராஜீவ் காந்தியின் அமெரிக்கா சார்ந்த கொள்கையைப் பின்பற்றுவது போன்றே காணப்படுகின்றது. ராஜீவின் கொள்கைகள் ராஐPவ்காந்தி காலத்திலேயே செல்லு படியற்றதொன்றாக விளங்கியது என்பது சிங் ஆட்சியில் எவ்வளவு பிற்படுத்தப்பட்டதாக அமையுமென்பது தெளிவாகும். அதனால் அமெரிக்காவை நோக்கிய இந்திய ஆட்சியாளர்களின் போக்கு யதார்த்தத்திற்கு முரணாக அமைவதோடு தெளிவற்றதாகவும் அமைந்துள்ளது.

இந்திய - அமெரிக்கப் பாதுகாப்பு உடன்பாட்டில் இந்தியாவைவிட அமெரிக்கா அதிகம் சாதித்துள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் பற்றிய கொள்கைக்கு வரையறை போடுவதில் அமெரிக்கா வெற்றிகண்டுள்ளது. இந்தியாவின் ஆயுத தளபாட உற்பத்தியின் வலுவை இனங்காண்பதில் அமெரிக்கா முன்னேறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான உபாயங்களை இராணுவ - தொழிநுட்ப அலைவரிசைக்கூடாக இனங்காண்பதிலும் அமெரிக்காவுக்கு இலாபகரமானதாகும்.

இது இவ்வாறு அமையும் போது அமெரிக்கர்கள் இன்னோர் அதிசயத்தையும் இந்தியாவுக்கு காட்டியுள்ளனர். எப்படி வீட்டோ அற்ற உறுப்புரிமையை இந்தியாவுக்கு வழங்க ஏற்பாடு செய்ததோ அதே போன்று இந்தியப் பிரதமரை ஸ்கொட்லாந்தில் நடைபெறும் G-8 மாநாட்டுக்கு அழைத்துள்ளது. இந்தியர்கள் பெரிதாகக் கருதலாம். மன்மோகன்சிங்கே முதலில் இம்மாநாட்டில் கலந்த இந்தியன் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் இவையாவும் இந்தியாவை தமது செல்வாக்குக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைத்துக்கொள்ள அமெரிக்கா முயலுகின்றதென்பதே அடிப்படையான விளக்கமாகும்.

ஒரு வகையில் பாதுகாப்பு உடன்பாட்டின் மகிழ்ச்சிக்கான விருந்தாகக் கூட அமையலாம். புஷ் நிர்வாகத்தில் வெளிவிவகார செயலாளராக பதவியேற்ற ரைஸின் இந்திய விஜயத்தின் பின்பு புஷ் இந்திய - அமெரிக்க உறவின் புதிய அத்தியாயம் தோன்றும் என்றார். தனது ஆட்சிக்காலத்தில் நெருக்கடிக்கான ஆரம்பமாகவே அமையுமென்பது கடந்தகால வரலாறு.

G-8 மாநாடு நடைபெறும் காலத்திலேயே ஷங்காய் மாநாடும் கஜகஸ்தான் தலைநகரத்தில் நடைபெறுகிறது. ஷங்காய் மாநாட்டிலும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் கலந்துகொள்கின்றார். நட்வர்சிங் கலந்து கொள்ளும் அமைப்பு அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான அமைப்பாகும். அதன் பிரதான குறிக்கோள் கிழக்கு ஐரோப்பாவுக்குள் மட்டுமல்ல மத்திய ஆசிய குடியரசுகளுக்குள் அமெரிக்காவினதும், நேட்டோவினதும் ஊடுருவலைத் தடுப்பதற்கான அமைப்பாகும். அதற்கு இந்தியா கொடுத்த முக்கியத்துவத்தைவிட G-8 க்கு கொடுத்த முக்கியத்துவம் அதிகமானதென்பது விருந்தினரைக் கொண்டே அளவீடு செய்யலாம். G-8 என்பது மேற்கு நாடுகளின் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியலை பயன்படுத்துவது போன்றே தெரிகிறது. யாரும் கூறலாம் G-8 பொருளாதார மாநாடு ஷங்காய் அரசியல் மாநாடு என்று. ஆனால் அது உண்மையானதல்ல. G-8 என்பது மேற்குநாடுகளின் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை சரிசெய்வதற்கான சந்திப்பாகும். தற்போதைய மாநாட்டில் கூட ஆபிரிக்காவின் வறுமையை அழிப்பது எப்படி என்பதும், KOYOTO உடன்பாட்டில் அமெரிக்காவை கையெழுத்திட வைப்பதும் பிரதான நிகழ்ச்சித் திட்டமாகும்.

ஆபிரிக்கக் கண்டத்தையே அழித்தவர்களிடம் எப்படி வறுமையை ஒழிப்பது என்று கேட்பது வேடிக்கையாகவல்லவா இருக்கின்றது. இந்த நாடுகள் மீண்டும் ஆபிரிக்காவை சூறையாடுவதற்கு திட்டமிடப் போகின்றன. அதற்கு இந்தியாவையும் துணைக்கு அழைத்துள்ளனர். காரணம் இந்தியர்களும், சீனர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஆபிரிக்காவை சுரண்ட ஆரம்பித்துள்ளன. இதனை வளர்ந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியர்கள் விரும்புவார்கள். அதனை பயன்படுத்தி இந்தியாவையும் தமது பட்டியலில் இணைப்பதோடு பயன்படுத்த G-8 நாடுகள் முடிவெடுத்துள்ளன. உண்மையில் ஷங்காய்க்கு இந்தியர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் காரணம் அதில் சீனா, ரஷ்யா முதன்மை வகிப்பதோடு அமெரிக்க கொள்கைக்கு எதிரான அணிபோல விளங்குகிறது. அப்படி ஒரு அமைப்பு பெரியளவில் வளரமுடியாதென கூறினாலும் அதற்குரிய வாய்ப்புக்களை இந்திய ஆட்சியாளர்கள் தவறவிடுகின்றனர்.

இந்தியர்கள் இலங்கையோடு இராணுவப் பாதுகாப்பு உடன்பாட்டுக்கு முந்திக்கொள்ள முயலும் போது அமெரிக்கா இந்தியாவுடன் உடன்பாடு எட்டியுள்ளமை இந்தியத் தரப்புக்கு ஆச்சரிய மானதாகவே அமையும். இதனால் இலங்கையுடனான உடன்பாட்டுக்கான காலம் மேலும் தாமதமாகலாம். அமெரிக்க - இலங்கை உறவு இலகுவாக கைவிடப்படக் கூடியதொன்றல்ல. இந்தியாவின் மேலாதிக்கத் தின் எல்லையை அமெரிக்கா பாகிஸ்தான் விடயத்தில் வைத்திருப்பது போல் இலங்கை விடயத்தில் இல்லாது விட்டாலும் வைத்துக் கொள்ள முயலுகின்றது. அதற்கான தெரிவையே இந்திய - அமெரிக்க உடன்பாட்டில் காணக் கூடியதாகும்.

இவ்விரு இழுபறி நிலையிலிருந்தும் ஈழ விடுதலைப் போராட்டம் நகர்த்தப்படுதல் வேண்டும். இரண்டு சக்திகளும் கூட்டாக நகர்ந் தாலும் தனித்தனியே நகர்ந்தாலும் ஈழவிடுதலைப் போராட்டம் தனித்துவமாகவே
Reply
#22
மியன்மாரில், இந்நாட்டில் தனக்கு சார்பாக ஜனநாயகத்தை தோற்றுவிக்க அமெரிக்கா முனைந்து வருகின்றது. மியான்மாரில் அமெரிக்க சார்பு அரசாங்கம் ஏற்படுமானால், இந்தியாவையும் சீனாவையும் சுற்றிவளைக்கும் திட்டங்களின் பொதுப்புள்ளியாக அது விளங்கும்.

இந்தியாவை சுற்றிவளைக்கும் அமெரிக்க மூலோபாயத்தின் முக்கிய புள்ளி இலங்கையாகும். இலங்கையைத் தனது செல்வாக்கு வட்டத்திற்குள் கொண்டு வருவதன் மூலமே சுற்றிவளைப்பு மூலோபாயத்தை அமெரிக்காவால் முழுமைப் படுத்த முடியும். அத்துடன் இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளமையும் அமெரிக்கத் திட்டத்திற்கும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

இதற்காக அமெரிக்கா பல்வேறு தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகின்றது.

கடந்த காலத்தில் அமெரிக்கா விடுதலைப்புலிகளை இலங்கை அரசு போரில் தோற்கடிக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு இலங்கை அரசிற்கு முழுமையான ஆதரவை வழங்கியது. அவ்வாறு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால், தனக்குச் சார்பான சிங்கள அரசாங்கத்தை பேணுவதன் மூலம் இந்தியாவிற்கு தெற்கில் தான் வலுவாகக் காலூன்றி விடலாம் என்று திட்டமிட்டது.

அமெரிக்காவின் திட்டத்தைக் களத்தில் சிங்களப்படைகளை சின்னாபின்னமாக்கிய புலியணிகள் சிதறடித்துவிட்டன. ஆயுதங்களை வழங்கி போரியல் திட்டங்கள் தீட்டிக் கொடுத்து கிறீன் பெர விசேடபடையணிகளினால் பயிற்சியளித்தும் இலங்கை இராணுவம் அடிக்கு மேல் அடி வாங்கியதால் தனது தந்திரோபாயம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதை உணர்ந்த அமெரிக்கா, மாற்றுத் தந்திரோபாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது.

இத்தந்திரோபாயம் புதிதாக வடிவமைக்கப்பட்டதல்ல ஏற்கனவே, வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். நாடுகளைப் பொறுத்தவரை அவை தம் நலன்களுக்கான குறித்த ஒரு விடயம் குறித்து பல திட்டங்களை தீட்டிவைத்திருப்பது வழமையாகும். முதலாவது திட்டம் சரிவராமல் போனால் இரண்டாவது திட்டம் அதுவும் இல்லாவிட்டால் மற்றையது என்ற ரீதியில் இத்திட்டங்கள் அணுகப்படலாம். அல்லது முதலாவது திட்டத்தை செயற்படுத்த முயற்சிக்கும் பொழுதே, இரண்டாவது திட்டத்தினையும் பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இது இரண்டாவது அணுகுமுறையை அமெரிக்கா 90 களின் மத்தியிலிருந்து கையாளத் தொடங்கியது. இலங்கை இராணுவத்திற்கு விசேட பயிற்சிகள் வழங்கியதும் அதேவேளையில் நோர்வேயை பேச்சுக்களத்திற்கு மறைமுகமாக இறக்கிவிட்டதும் இரண்டு தந்திரோபாயங்களும் ஒரே நேரத்தில் கையாளப்பட்டதைக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் இரண்டாவது திட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்தியாவின் மிக மோசமான இராஜதந்திர தவறொன்றாகும்.

தமிழர் பிரச்சினையில் தவறான கண்ணோட்டம், ஒப்பந்தத் திணிப்பு அதன் பின்னர் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வேட்டையாடப்பட்ட இந்திய அமைதிப்படையின் வருகை என்பவற்றின் தொடர்விளைவாக ராஜீவ் கொலைச்சம்பவம் இடம் பெற்றது.

ராஜீவ் கொலை வழக்கில் புலிகளின் தலைவரின் பெயரையும் இந்திய அதிகார வர்க்கம் சேர்த்துக் கொண்டது. அவ்வேளையில் தூரநோக்குள்ள சில இந்திய இராஜதந்திரிகள் கொலையில் புலிகளின் தலைவரின் பெயரை இணைக்க வேண்டாம் என்றும் அவருடன் எதிர்காலத்தில் பேச்சுக்களில் ஈடுபட்டே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டே தீரும் என்றும் இவ்வாறு சேர்ப்பதனால் அதற்கான வாயில்கள் மூடப்படுவதுடன் நீண்டகால நோக்கில் இந்தியாவின் நலன்கள் சிக்கலுக்குள்ளாகும் என்று அந்நாட்டு அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களுக்கும் ஆலோசனை வழங்கியதாக இந்திய சஞ்சிகை ஒன்று தெரிவித்திருந்தது.

ஆனால், கவளத்திலும் இராஜதந்திரமுனையிலும் ஏற்பட்ட படுதோல்வியும் அவமானமும் , இக்கொலையைப் பரப்புரை செய்வதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் புலிகள் மீதான வெறுப்பை விதைக்க முடியும் என்ற குறுமதியும் சேர்ந்து அதிகார வர்க்கத்தை அந்த யோசனையை புறந்தள்ள வைத்தது. உண்மையில் இந்திய அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தின் அம் முடிவானது சாணக்கியன் பிறந்த தேசத்தை இராஜதந்திர அவலத்திற்குள் தள்ளியுள்ளது.

இந்தியா தன்னைத்தானே வலைக்குள் சிக்கவைத்துக் கொண்டமை அமெரிக்காவிற்கு அதிஷ்டம் அடித்தது போலானது. இந்தியா - புலிகளின் உறவின் விரிசல் இலகுவில் அடைக்கப்பட முடியாது என்பதை கண்டு பூரித்த அமெரிக்கா இரண்டாவது திட்டத்தை வகுத்துக் கொண்டது.

இத்திட்டமானது வட, கிழக்கில் புலிகளை அங்கீகரிக்கும் அதேவேளை தென்னிலங்கையில் அமெரிக்கா சார்பு அரசை நிறுவுவதாகும். இதற்கான நகர்வுகளே 90 களில் நோர்வே ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டன. நோர்வேக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள நெருக்கமான உறவினை அதிகம் விபரிக்க வேண்டியதில்லை. இஸ்ரேலிற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையில் நோர்வேயின் உதவியுடன் ஒஸ்லோவில் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் விளைவான உடன்பா வாஷிங்டனில் பகிரங்க கைச்சாத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதே இதனைப் புரிந்து கொள்ளப் போதுமானதொன்றாகும்.

இரண்டாவது திட்டமானது முதலாவது திட்டத்தைவிட அமெரிக்காவிற்கு உறுதியான சாதகத்தன்மையை வழங்கக் கூடியதாக உள்ளது. முதலாவது திட்டத்தின்படி இலங்கை அரசாங்கம் புலிகளை வெற்றி கொண்டிருந்தாலும் தென்னிலங்கையில் அமையக்கூடிய அமெரிக்க சார்பு அரசாங்கத்தை, எதிர்க்கட்சிகளை தனது பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் கவிழ்க்கக்கூடிய வாய்ப்பை இந்தியா கொண்டிருந்திருக்கும்.

ஆனால், புலிகளையும் தன்னுடைய ஆதரவு வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்வதை உள்ளடக்கிய இரண்டாவது திட்டமானது வெற்றிபெறுமாயின் அமெரிக்க நலனில் தென்னிலங்கை பிறந்தாலும் வட, கிழக்கில் அமெரிக்க நலன்ககள் தொடர்ந்தும் உறுதியாகப் பேணப்படும். வடகிழக்கு தனி நாடாக உருவாவது கூட அமெரிக்க நலன்களுக்கோ அதன் மூலோபாயங்களுக்கோ பாதிப்பை் ஏற்படுத்தாதென்பதால் அவ்வாறான சூழல் உருவாவதை அமெரிக்கா உள்ளூர விரும்பவும் கூடும்.

அவ்வாறானால் அமெரிக்கா ஏன் புலிகளை தடை செய்ததென்ற கேள்வி இவ்வேளையில் எழலாம். புலிகள் மீதான தடை என்பது முஸ்லிம் ஆயுத சக்திகளை மட்டும் தனது பயங்காரவாத அமைப்புக்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பதைக் காட்டும் யுத்தியாக அமைகின்ற அதேவேளை அதற்கு வேறு முக்கிய காரணங்களும் உண்டு.

தென்னிலங்கையில் தனது நம்பகத்தன்மையை வலுப்படுத்தல் தனது இரண்டாவது திட்டத்தை இந்தியா இலகுவில் அறிந்து விடாமல் இருக்க அதன் கண்ணில் மண்ணைத் தூவுதல் புலிகளை தன்வழிக்குக் கொண்டுவருதல் என்பனவே அக்காரணங்களாகும்.

இந்தியா இந்த சிக்கலில் இருந்து, விடுபட வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி புலிகளுடன் பழையதை மறப்போம். புதுயுகம் படைப்போம் என்ற ரீதியில் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வது மட்டுமேயாகும். அமெரிக்க அணுகுண்டால் பேரழிவைச் சந்தித்த ஜப்பானும், அமெரிக்க படைகளால் பாரிய இழப்புகளை சந்தித்த வியட்நாமும் அவ்விரு நாடுகளாலும் தற்கால பெரும் இழப்புகளை சந்தித்த அமெரிக்காவும் தங்களின் தற்கால, எதிர்கால நலன்கருதி தங்களிடையேயான பழைய வரலாற்றுக் கசப்பை மறந்து. நல்லுறவை வலுப்படுத்தியிருப்பதை இந்தியா முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்தியா 15 வருடங்களுக்கு முற்பட்ட படு தோல்வியில் முடிவடைந்த வரதராஜப் பொருமாள் காலத்து தமிழ்த் தேசிய இராணுவத்தை உருவாக்கிய உழுத்துப் போன அச்சை வைத்து மக்கள் செல்வாக்கற்ற மோசடிக்காரர்களை எல்லாம் அதில் போட்டு எடுத்து புலிகளுக்கு எதிராக செயற்படவைக்க முடியுமென்று முயற்சி ப்பதிலேயே பொழுதைக் கழிக்கின்றது. ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தை தமிழர் தாயகத்தில் வைத்திருந்த போதே வெற்றிபெறாத அம் முயற்சி இனி எப்பொழுதும் வெற்றிபெறப் போவதில்லை என்பதை உணர்ந்து கொள்வதே எதிர்கால வரலாறு. இந்தியாவை எள்ளி நகையாடாமல் இருப்பதற்கான வழியைக் காட்டும்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான பொது நலன்களுக்குரியதாக இலங்கை அமையவில்லை. உண்மையில் தனது தென் புறத்தில் தனக்கு ஆபத்தான உலக சக்திகள் காலூன்றுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கையை தன் செல்வாக்கிற்குள் வைத்திருக்க இந்தியா கடுமையாக முயல்கின்றது. அதேவேளை, இந்து சமுத்திரக் கப்பல் பாதையில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தினாலும் மற்றும் இந்திய உலக சக்தியாக உருவெடுக்கும் சாத்தியமுள்ளதனால்லும் அதனை சுற்றிவளைக்கும் தனது மூலோபாயத்தின் முக்கிய புள்ளியாக இலங்கை அமைவதாலும் அதனை தன்செல்வாக்கு கோளத்திற்குள் கொண்டுவருவதற்கான நகர்வுகளை அமெரிக்கா செய்கிறது.

இலங்கைத் தீவு தொடர்பில் இரு நாடுகளின் நலன்களும் முற்றிலும் முரண்படுவதுடன் ஒன்றுக்கொன்று எதிரானவகையாக அமைந்துள்ளன. எனவே விரிவுரையாளராக குறிப்பிட்டது போன்று அவ்விரண்டு நாடுகளும் புலிகளுக்கு எதிரான ஒரே நிலையை எடுக்கும் சாத்தியமில்லை
Reply
#23
"இந்தியா தனது ஈழத்தமிழர்களூக்கான கதவை ஒவ்வொன்றாக முடப்போகின்றது "
"அதை நாசுக்காக செய்யப்போகின்றது"-ரிசி

இந்த இந்தியா எப்ப ஈழத்தமிழர்களுக்காக கதவ துறந்து வைச்சிச்சு? இனி மூட..!
Reply
#24
அட்சரன் தயவு செய்து கட்டுரைகளை வெட்டி ஒட்டும் போது அதன் மூலத்தையும் குறிப்பிடவும்,மேலுள்ள கட்டுரை தினக்குரலில் இன்று வந்தது அதை எழுதிஉள்ளவர் நர்த்த்தன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விரிவுரையாளர் என விழித்திருப்பது யாரை என்று விளங்கவில்லை.

http://www.thinakural.com/New%20web%20site...7/Article-8.htm
Reply
#25
எல்லா நாடுகளும் தமது பொருளாதாரத்தையும் வளமான எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ள அரசியல் இராஜதந்திர இராணுவ நகர்வுகளை தூர நோக்கோடு மேற்கொள்ளுவது வழமை. அமெரிக்காவை பொறுத்தவரை தனது உலகின் முதலாவது பொருளாதாரம் மற்றும் அதிவல்லரசு (hyper-power) என்ற நிலையை பேணவேண்டும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அமெரிக்காவின் பொருளாதார பலம் இராணுவ பலம் தொழில்நுட்ப்ப பலம் அரசியல்-இராஜதந்திரப் பலம் என்பன ஒன்றையொன்று தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. ஜா.நா தனது முக்கிய அன்பளிப்பாளரின் கைகளில் சிக்குண்டு தவிப்பது இதன் ஒரு அங்கம்.

இவை அனைத்திற்கும் அடிப்படையான வளம் ஒன்று உண்டு அது தான் மனிதவளம். பொருளாதார வழர்ச்சி கண்ட இயந்திர வாழ்கை நடத்தும் சமுதாயங்களில் சனத்தொகை குன்றுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்தியா சீனாவின் மொத்த சனத்தொகை இன்று உலக சனத்தொகையின் கிட்டத்தட்ட 66 வீதம். இவ்விரு நாடுகளும் தற்பொழுது அனுபவித்து வரும் பொருளாதார வழர்ச்சி எதிர்காலத்தில் கணிசமான அளவு நுகர்வோர் சந்தையாக மாறும்பட்சத்தில் உலகின் சக்திமிக்க பொருளாதாரங்களாக மாறப்போகின்றன. அது மட்டுமல்ல அவர்களுடைய மனிதவளங்கள் அந்நாடுகளின் தொழில்நுட்பவளர்சி மற்றும் உற்பத்தித்திறனின் அத்திவாரங்களாக இருக்கப்போகின்றன. எற்கனவே மேற்குலக நாடுகளின் பல கீள்மட்ட தொழில்வாய்ப்புக்கள் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் குறைந்த செலவில் செய்ய அனுப்பப்பட்டன, இப்பொழுது சில பெறுமதிமிக்க நுட்பமான (skilled & high value)தொழில்களிலும் பல இந்தியா சீன போன்ற நாடுகளினால் இலக்குவைக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மேற்குலக நாடுகளில் சில தொழில்துறையையே முற்றாக கேள்விக்குறியாக்கும் வேகத்தில் நடைபெறுகின்றன.

மேற்குலக நாடுகள் தமது முதன்மைத்துவத்தை படிப்படியாக சீனா விற்கு இழப்பதென்பது தவிர்கமுடியாததொன்று. அமெரிக்காவைப் பொறுத்த வரை சீனாவின் எதிர்கால பொருளாதார அரசியல் ஆதிக்கத்தை எதிர்கொள்ள தனது வழமையான அரசியல்-இராஜதந்திர நண்பரான பிரித்தானியாவையோ பொருளாதார பங்காளியான யப்பானையோ (தற்பொழுது உலகின் இரண்டாவது பொருளாதாரம்) நம்பியிருக்க முடியாது. அதற்குத் தகுதியுடைய நாடு இந்தியாவே. இரண்டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டு போட்டு அழித்த யப்பானை மீளக்கட்டியெழுப்புவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. யப்பான் இன்று தொழில்நுட்பத்தில் முன்நிலையில் இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் இருப்பது மனிதவளம் மட்டுமே, இயற்கை வளத்தை பொறுத்தவரை ஒரு வறிய நாடு என்று கூறுவார்கள். இயற்கை வளங்கள்; என கனிமங்கள் உலோகங்கள் எண்ணை வாயு, நிலக்கரி அல்லது விவசாயரீதியில் விசேடமாக எதையும் பயிர்ச் செய்கை செய்து எற்றுமதி செய்து நாட்டின் வருவாயை தேடக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தமது மனித வளங்கள் மூலம் பெறுமதியைக்கூட்டி நுகர்வுப்பொருட்களாக ஏற்றுமதி செய்வதில் தான் நாட்டின் வருமான தங்கியுள்ளது. பிரித்தானியாவும் ஒருவகையில் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை வறிய நாடு என கூறுவர் சிலர். அதனால் தான் முகாமைத்துவம் பண்டமாற்று தொழில்நுட்பம் போன்று மனித வளத்தை அடிப்படையாக கொண்ட துறைகளில் இவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள், அப்படியான தேவையும் இருக்கிறது.

யப்பான் உலக யுத்தத்தில் ஈடுபடக்காரணம் ஆக்கிரமிப்பு மூலம் தனது ஏற்றுமதி சந்தைகளை விருத்தி செய்யவும் தேவையான மூலப்பொருட்களை வழங்கலை உறுதி செய்யவுமே. மீள்கட்டியெழுப்பலில் உதவி செய்த அமெரிக்கா யப்பானில் செய்த முதலீடுகள் மூலம் தனக்கு பொருளாதாரரீதியில் (இரணுவரீதியில் விசப்பல் பிடுங்கப்பட்ட பாம்பாகத்தான் இரண்டாம் உலகயுத்த சரணடைவு விதிகளின் படி இன்றுவரையுள்ளது) ஒரு சவாலாக வராமல் பாத்து கொள்கிறது. யப்பானின் பொருளாதார மீள்ட்சியில் முழுக்கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இல்லாது போனாலும் தற்போது சீனாவின் வளர்ச்சியில் இருக்கும் எந்தவித கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கவில்லை. இன்நிலையில் ஒரு தகுந்த பங்காளியை அரவணைத்து சில சலுகைகளை வழங்கி ஒப்பந்தங்களை தூரநோக்கிய சிந்தனையோடு எற்படுத்தினால் தனது மறைமுக ஆளமையின் கீள் எதிர்காலத்தில் கொண்டுவரலாம்.

யுத்தத்தினால் அழிவுற்ற யப்பானிற்கு பொருளாதார தொழில்நுட்ப்பத் தேவைகள் இருந்தது. இந்தியாவிற்கு சில தொழிநுட்ப்பத்தேவைகள் இருக்கு அதைவிட முக்கியமாக உலகின் சக்தி மிக்க வல்லரசுகளில் ஒன்றென்ட அந்தஸ்த்து அங்கீகாரம் தேவை. ஆனாலும் இந்தியாவின் வளர்ச்சியும் ஆதிக்கமும் எதிர் காலத்தில் தனது நிலையை கேள்விக்கூறியாதவாறு அமெரிக்கா பாத்துக் கொள்ளும். இந்தியாவை திருப்திப்படுத்தி நம்பிகையை அதிகரிக்கும் தேவைக்காகவே தமிழ் ஈழ விடுதலைப்போராட்டம் பயன்படுத்தப்படலாம். இந்தியாவை எதிர்காலத்தின் ஒரு முக்கிய பங்காளியாக பார்ப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துவிட்டால் திருகோணமலைத்துறைமுகம் அமெரிக்காவிடம் இருந்தால் என்ன இந்தியாவிடம் இருந்தால் என்ன? அமெரிக்காவின் தமிழ் ஈழ விடுதலைப்போராட்டம் மீதான அண்மைக்கால அனுதாபப் பார்வையை இப்படி ஒரு பின்னணியோடு பார்க்கலாம் என நினைக்கிறேன் உங்கள் கருத்துக்கள் என்ன?
Reply
#26
சரி இந்தியாவை ஒரு முக்கிய பங்காளியாக்க அமெரிக்கா விரும்ப்புகிறது என்றால் அது இந்தியாவின் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலயை அல்லவா எடுக்க வேண்டும்,இது எவ்வாறு அனுதாபப் பார்வை ஆகலாம்.

சரி அவ்வாறே அமெரிக்கா ஈழ விடுதலைக்கு எதிரான இந்திய நிலைப் பாட்டை ஆதரித்தால் அதற்கு எதிரான அல்லது சமன் செய்யக் கூடிய எவற்றை நாம் மேற்கொள்ளலாம்.

சீனாவுடன் ஏன் நாம் உறவுகளை ஏற்படுத்த முடியாது?
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் பின் ஏன் நாம் சீனாவுடன் ஆன
உறவுகளை ஏன் ஏற்படுத்தவில்லை.

சர்வதேச நலன் சார் அரசியலில் உள்ள முரண் நிலைகளை ஏன் நாம் முழுமையாகப் பயன் படுத்தமுடியாது?
Reply
#27
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சர்வதேச நலன் சார் அரசியலில் உள்ள முரண் நிலைகளை ஏன் நாம் முழுமையாகப் பயன் படுத்தமுடியாது?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களுக்கு தெரியாததில்லை....... என்றாலும் மீள ஞபகப்படுத்துகிறேன். இந்தியாவுடனான போர் ஆரம்பிக்கவும் முன்னம் 17 புலிகளை சிங்களக்கடற்படை கைதுசெய்த நேரம். புலிகளின் தளபதி ஒருவர் பலாலி முகாம் சென்று அந்தப் போரளிகளைப் பார்த்து உணவு கொடுத்தபின், இந்திய ராணுவத்தளபதி லெப்ஜெனரல் கல்கட் மெஜர் ஜெனரல் திபோர்ந்தசிங், அதோடு இந்திய வெளியுறவு அமைச்சர் தீக்சிற் உடன் பேசுகின்றார். அப்போது அவர்கள் உங்களின் ஆயுதங்கள் எல்லாவற்றையும் ஒப்படையுங்கள் இவர்களை விடுதலை செய்கிறோம் என்கிறார்கள், (திபோர்ந்தர் சிங்கின் யாழில் வளங்கப்பட்ட பணி என்ற புத்தகத்தில் இருந்தது)

அப்போ தலைவர் அவகளை தொடர்புகொண்ட அந்த தளபதி தலவருக்கு விளக்கிச் சொல்ல. தலைவர் சொன்ன பதில் அவர்களிடம் சொல் "பேரம் பேசுவது புலிகளுக்கு பிடிக்காது"

இப்போவும் அப்பிடித்தான் சீனாவுடன் கூட்டுச்சேர்ந்தாலும் நாங்கள் விட்டுக்கொடுக்கவேணும். அதவிட அமெரிக்காவுக்கே விட்டுக்கொடுக்கலாம் தடைகளாவது நீங்கும்.

தலைவருடைய நம்பிக்கை என்பது மக்களின் ஆதரவில இருக்கு அது அவருக்கு இருக்கும் வரை யாருக்கும் அடிபணியமாட்டார்..
::
Reply
#28
தல நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள் போல் தெரிகிறது. நாம் இப்போது ஒரு பலமான நிலயில் இருத்தே பேரம் பேசுகிறோம்.சர்வதேச அரசியலில் ஒவ்வோரு நாடும் தமக்குள்ள பலத்தை அதாவது துருப்புச் சீட்டுக்களை வைத்தே பேரம் பேசுகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்தியா-பாக்கிஸ்தான் மற்றும் அமேரிக்கா- சீனா என்கின்ற முரண் நிலைகளையே இவ்வளவு நாளும் பயன் படுத்தியது.

எமது துருப்புச் சீட்டுக்கள் எமது அரசியல் ஒற்றுமை,தனி யாட்சி,கட்டுப் பாட்டுப் பிரதேசம்,தமிழ் ஈழ இராணுவ பலம்.இதில் இருந்தே எமது பேரம் பேசுவத்ற்கான அல்லது பேச்சுவார்த்தைக்கான அடித்தளம் இருக்குது.

நாம் ஒரு அணி சார்த்தில்லாது இருந்தால் ,எம்மால் சர்வதேசரீதியாக உள்ள முரண் நிலைகளைப் பயன்படுத்தி எமக்குத் தேவயான அதி கூடிய பயனை பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே எனது கருத்து.
Reply
#29
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->தல  நீங்கள் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள் போல் தெரிகிறது. நாம் இப்போது ஒரு பலமான  நிலயில் இருத்தே பேரம் பேசுகிறோம்.சர்வதேச அரசியலில் ஒவ்வோரு  நாடும் தமக்குள்ள பலத்தை அதாவது துருப்புச் சீட்டுக்களை வைத்தே பேரம் பேசுகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்தியா-பாக்கிஸ்தான் மற்றும் அமேரிக்கா- சீனா என்கின்ற முரண்  நிலைகளையே இவ்வளவு  நாளும் பயன் படுத்தியது.  

எமது துருப்புச் சீட்டுக்கள் எமது அரசியல் ஒற்றுமை,தனி யாட்சி,கட்டுப் பாட்டுப் பிரதேசம்,தமிழ் ஈழ இராணுவ பலம்.இதில் இருந்தே எமது பேரம் பேசுவத்ற்கான அல்லது பேச்சுவார்த்தைக்கான அடித்தளம் இருக்குது.

நாம் ஒரு அணி சார்த்தில்லாது இருந்தால் ,எம்மால் சர்வதேசரீதியாக உள்ள முரண்  நிலைகளைப் பயன்படுத்தி எமக்குத் தேவயான அதி கூடிய பயனை பெற்றுக் கொள்ளலாம் என்பதுவே எனது கருத்து.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒத்துக்கொள்கிறன் நாரதா :!: .....
ஆனால் தமிழ்மக்களின் (புலிகளின்) பலம் என்பது அரசாங்கத்தின் இயலாமை அல்லது கையாலாகாத்தனத்தில் தான் தங்கி இருக்கிறது. இப்போ பொருளாதார ரீதியில் நாங்கள் வல்லமை வாய்ந்தவர்கள் இல்லை அப்பிடி இருக்கும் போது இப்போ பேரம் பேசுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் நாங்கள் இழக்க வேண்டியதன் அளவு (விட்டுக்கொடுப்பு) பெரிதாகலாம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வதை நடைமுறைப் படுத்த நாட்கள் செல்ல வேண்டும்.
::
Reply
#30
நாங்கள் சீனாவுடன் சும்மா நலம் விசாரிச்சு பேசினாலேயே அமெரிக்காவும்,இந்தியாவுக்கும் குறு,குறுக்கும் ,
இவங்கள் இவையோட என்ன பேசுறாங்கள் என்டு.இது ஒன்றே அமெரிக்கா தடைய நீக்க காரணம் ஆகலாம்.ஏனென்றால் ஏற்கனவே ஒரு அம்மையார் அமெரிக்கத் தடையானது இராஜதந்திர நடவடிக்கைய்களுக்குத் தடையாக இருக்குது எண்டு சொல்லி இருக்கிறா.மேலும் இந்தியாவும் தடையப் பற்றி யோசிக்கும்.
நாங்கள் சீனாவோட பேசுறதால எதையும் இழக்கப் போறேல்ல.
Reply
#31
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->நாங்கள் சீனாவுடன் சும்மா  நலம் விசாரிச்சு பேசினாலேயே அமெரிக்காவும்,இந்தியாவுக்கும் குறு,குறுக்கும் ,
இவங்கள் இவையோட என்ன பேசுறாங்கள் என்டு.இது ஒன்றே அமெரிக்கா தடைய  நீக்க காரணம் ஆகலாம்.ஏனென்றால் ஏற்கனவே ஒரு அம்மையார் அமெரிக்கத் தடையானது இராஜதந்திர  நடவடிக்கைய்களுக்குத் தடையாக இருக்குது எண்டு சொல்லி இருக்கிறா.மேலும் இந்தியாவும் தடையப் பற்றி யோசிக்கும்.
நாங்கள் சீனாவோட பேசுறதால  எதையும் இழக்கப் போறேல்ல.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நியாயந்தான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::
Reply
#32
தற்பொழுது தான் அமெரிக்கா அனுதாபமாகவோ (அல்லது கொஞ்சம் பக்கச்சார்பற்ற முறையில் அறிக்கைள் விட்டு) நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளது. அதை நாங்கள் ஒரு கோணத்தில் (ஆழமாக சிந்திக்காது?) பார்த்தால் நல்லது தானே நடக்கிறது எனலாம். ஆனால் இன்னெருகோணத்தில் அவர்களின் கடந்த கால நடவடிக்கைகளோடு இணைத்து பார்ப்போம்.

யுத்தநிறுத்தம் புலிகளையும் இலங்கை அரசாங்கத்தையும் சமனான தரப்பாக வைத்தது உருவானதற்கு, படுதோல்வி கண்ட தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை மற்றும் கட்டுநாயக்கா தாக்குதலில் உணர்த்தப்பட் இராணுவச்சமநிலை. ஆரம்பக்கட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் யுத்தநிறுத்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படலும் இந்த மனோபாவத்தோடுதான் அணுகப்பட்டது. இந்த சமதரப்புப்பார்வை என்பது இனவாதிகளுக்கும் அரச தரப்பிற்கும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும் கள நிலமைகளின் யதார்த்தத்தை நிராகரிக்க முடியாதவர்களாக இருந்தனர்.

நோர்வே ஊடாக அமெரிக்கா உட்பட வேறு சில வெளிச்சக்திகளின் தூண்டுதலில் (சில இனவாதிகளால் நெருக்குதலாக பிரச்சாரிக்கப்பட்டது) ரணில் அரசாங்கம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. தமிழர் இராணுவ மேலாண்மையை நிலை நாட்டி தமிழீழத்தை முழுமையாக மீட்டு இலங்கை துண்டாடப்படுவதை தடுக்கவே இந்த யுத்த நிறுத்தத்திற்கு வெளிச்சக்திகளின் ஆதரவு இருந்தது. இதை உணர்ந்தவர்கள் ரணில், பீரிஸ் போன்ற "சமாதானப்பிரயர்கள்". உண்மையில் இனவாதிகள் மற்றும் புலிகளை யுத்தத்தால் வெல்லலாம் என எண்ணுபவர்களின் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான எதிர்ப்புக்கள், சர்வதேச பின்னணியோடு புலிகளை ஒரு சதிவலையில் வீழ்த்த ரணிலின் எடுத்த முயற்சிகளை ஒரு சமாதான முயற்சியாக காட்ட உதவியது. எனவே சர்வதேச சமுhகத்தின் ஆர்வம் தமிழரிற்கு போச்சுவார்த்தை மூலம் நியாயமான ஒரு தீர்வை பெற்றுதருவது அல்ல என்ற கசப்பான உண்மையை நாம் உணரவேண்டும்.

சமாதானப் பேச்சுவார்தைகளின் முன்னேற்றத்தோடு புனரமைப்பிற்கான நிதியுதவி வழங்கலை இணைத்ததன் மூலம் யுத்த நிறுத்தத்திற்கு அப்பால் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவேண்டிய தேவையை இலங்கை அரசாங்கத்திற்கு உணர்த்தி நிர்பந்திப்பதாக காட்டியதன் மூலம் சர்வதேச சக்திகள் தமது சமாதான முயற்சியின் விசுவாசத்தன்மையை காட்டமுனைந்தனர். தமிழர் தரப்பிற்கும் சர்வதேசம் தம்பக்கம் இருப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. இனவாதிகளுக்கு அவர்கள் வெள்ளைப்புலிகளாக தெரிந்தார்கள்.இலங்கைக்கான உதவிவழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்று திட்டமிட்டு யப்பானில் ஒழுங்குபடுத்தப்பட்டது, புலிகளும் அரச தரப்பும் அழைக்கப்பட்டிருந்தனர். திடீர் என அக்கூட்டத்திற்கான தயார்ப்படுத்தல் கூட்டம் என ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டு அதற்கு புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்றரீதியில் சட்டச்சிக்கலினால் அழைப்புவிடப்படவில்லை என்ற பிரமிப்பை சாதாரண பார்வைக்கு ஏற்படுத்தியது. ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற சதியின் உண்மை முகம் அந்த நகர்வில் தெளிவானது. புலிகளை சம அந்தஸ்தில் வைத்து யுத்த நிறுத்த உடன்படிக்கை விதிகளை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பினால் திணறிக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு ஒரு உதவிக்கரம் நாசுக்காக இராஜதந்திரரீதியில் வழங்கப்பட்டது. நிதி உதிவிகள் வழங்கப்பட எந்த சமாதானப் பேச்சுவார்தையில் முன்னேற்றம் வேண்டும் என்ற நிபந்தனையை போட்டார்களோ அதற்கு அடிநாதமான சம-அந்தஸ்தை புலிகளிடம் இருந்து பறித்து புரிந்துணர்வை சிதைத்தனர். பேச்சுவார்தை மூலம் தீர்வுகாணலாம் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு உச்சியில் இருந்த சமயம் அமெரிக்காவினால் அன்று எடுக்கப்பட்டது இந்த நகர்வு. மூன்று வருடங்களிற்கும் மேலாக ஏமாற்றப்பட்டு 70க்கும் மேற்பட்ட போரளிகள் இழக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் நம்பிக்கையிளந்து மாற்றானின் கருணையிலும் பெருந்தன்மையிலும் தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படமுடியாதென்பதை உணர்ந்தவர்களாக, சதியை பெறுத்திருந்து தோலுருத்துக் காட்டியவர்களாக தமிழினம் போர் கோலம் கொள்ளும் பொழுது ஏன் கருணைகாட்ட முற்படுகிறது இன்று அமெரிக்கா?

சதியின் முதலாவது கட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. சமாதான தீர்வு முயற்சி என்ற நாடகத்தின் பின்னணியில் ஆரவாரங்களின்றி பல நகர்வுகள் புலிகளின் சுயாதீன-தன்நிறைவான பொருளாதார வணிக மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை சர்வதேசரீதில் தடுக்க முயற்சிகளாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலப்பகுதியில் வெளிப்பார்வைக்கு ஊடகங்கள் ஆரவாரித்ததெல்லாம் "வெளிநாடு சென்று திரும்பும் புலிகளின் பயணப் பொதிகள் சேதிக்கப்படவில்லை" "கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம்; VSAT தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ளது" "சக்தி மிக்க ஒலிபரப்பு சாதனங்கள் புலிகளின் குரலுக்கு வழங்கப்பட்டுள்ளன" "ரணில் அரசு தீர்வையற்ற இறக்குமதி சலுகை வழங்கிறது புலிகளிற்கு". இதை உண்மையில் நன்கு திட்டமிட்டு புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உளவியல்ரீதியான யுத்;தமாக கூட பார்க்கலாம். இப்படியான ஒரு யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பறவர்களாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் அதன் மறைந்த தலைவர் அரபாத்தையும் பார்க்கலாம்.

அதாவது அங்கீகாரம் சலுகைள் மத்தியில் தன்நிறைவான நடவடிக்கைள் முயற்சிகள் அர்த்தமற்றதாக உணர்த்த புலிகளிற்கும் ஆதரவாளர்களிற்கும் உளவியல்ரீதியில் முயற்சிக்கப்பட்டது. இந்த முயற்சியில் சர்வதேசமும் ரணிலின் அரசாங்கமும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியும் கண்டனர். இதை நன்கு உணர்ந்தவர்களாக தான் புலிகளின் பதில் நடவடிக்கைகளும் இருந்தது. எதிர்பாராதவிதமாக இந்த இக்கட்டான நிலையை முடிவிற் கொண்டுவர உதவியவர்கள் வேறுயாருமல்ல சிங்கள சுயநல இனவாத அரசியல்வாதிகளும்; அயல்நாட்டு மேலாண்மைவாத வல்லாதிக்க கொள்கைவகுப்பாளர்களும் தான்.
Reply
#33
இந்தியா இலங்கை மீது போர் ஆரம்பித்தால் அது தோல்வியில் முடிவடையும் - அமெரிக்க ஆய்பு மையம்

இலங்கை இன விவகாரத்திற்கு தீர்வுகாண இந்தியா மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் அது தோல்வியிலே முடிவடையும் என அமெரிக்கா ஆய்வு மையம் கருத்து வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தியா இலங்கை மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என பிரித்தானியாவில் இயங்கி வரும் சமூக விவகாரங்களுக்கான அமெரிக்க ஆய்வு மையம் என்ற அமைப்பே இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழக பேராசிரியர் பிறைட்ஓடுப்பி புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றி இதனைத் தெரிவத்துள்ளார்.

இலங்கை சமாதான முயற்சியில் இந்தியா பார்வையாளராக இருப்பதை விட்டு நோர்வே போன்று அனுசரனையாளராக பங்காற்றுகிற சமயம் நெருங்கிவருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி பதிவு.கொம்
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
kurukaalapoovan Wrote:சதியின் முதலாவது கட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. சமாதான தீர்வு முயற்சி என்ற நாடகத்தின் பின்னணியில் ஆரவாரங்களின்றி பல நகர்வுகள் புலிகளின் சுயாதீன-தன்நிறைவான பொருளாதார வணிக மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை சர்வதேசரீதில் தடுக்க முயற்சிகளாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலப்பகுதியில் வெளிப்பார்வைக்கு ஊடகங்கள் ஆரவாரித்ததெல்லாம் "வெளிநாடு சென்று திரும்பும் புலிகளின் பயணப் பொதிகள் சேதிக்கப்படவில்லை" "கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம்; VSAT தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்து வழங்கியுள்ளது" "சக்தி மிக்க ஒலிபரப்பு சாதனங்கள் புலிகளின் குரலுக்கு வழங்கப்பட்டுள்ளன" "ரணில் அரசு தீர்வையற்ற இறக்குமதி சலுகை வழங்கிறது புலிகளிற்கு". இதை உண்மையில் நன்கு திட்டமிட்டு புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உளவியல்ரீதியான யுத்;தமாக கூட பார்க்கலாம். இப்படியான ஒரு யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பறவர்களாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தையும் அதன் மறைந்த தலைவர் அரபாத்தையும் பார்க்கலாம்.
.

சரியான விடயம் தான் குருக்ஸ். இதே மாதிரியான கருத்தைத்தான் அமரர் மாமனிதர் சிவராமும் தமிழ்தேசியத் தொலைக் காட்சியின் பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார். அதில் அவர் புரிந்துனர்வு ஒப்பந்தத்துக்கு முன்னர் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம்தான். தீச்சுவாலை நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் தயார்படுத்தலுக்கு உதவியது என்றும் அதுக்கு தூண்டுதலாய் இருந்தது அமெரிக்கா என்றும் சொல்லி இருந்தார்.

ஆனால் அப்போது பார்த்தபோது அப்படித்தான் இருந்தது. அனால் இப்போதுதான் தெரிகிறது அவர்கள் விரித்த வலைக்கருகிலேயே புலிகளும் தங்களது வலையை விரித்து வைத்திருந்தனர் என்று. காரணமாக ஒன்ரைச்சொல்லலாம் அது அப்போது இல்லாத அளவு இப்போது அரசாங்கம் உட்பட்டிருக்கும் சர்வதேச அழுத்தம். ஏன் சொல்கிறேன் என்றால் புலிகளுக்கு நன்குதெரியும் இந்தியாவைப்பற்றியும் அமெரிக்காவப்பற்றியும் அவர்களது வெளியுறவுக்கொள்கைகள் பற்றியும்.

எது எப்படியானாலும் சிவராம் அவர்கள் சொன்னதன் சுருக்கம் என்னவென்றால் தமிழர்கள்தான் அவர்களின் தலை விதியை எழுதிக்கொள்ள வேண்டும், தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
::
Reply
#35
http://www.thinakural.com/New%20web%20site...0/Article-1.htm

இந்து, பசுபிக் சமுத்திரங்களில் கெடுபிடி யுத்தத்திற்கான சாத்தியம்

அண்டை நாடுகளுக்கு மட்டுமன்றி வல்லரசுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ள சீனக் கடற்படை வளர்ச்சி

-என். சிவேந்திரன்-

சீனாவின் கடற்படை வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கும் உலகின் பெருவல்லரசான அமெரிக்காவிற்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, இவ்வருட அமெரிக்கா மற்றும் ஜப்பானின் பாதுகாப்பு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. அவ்வறிக்கைகள் சீனாவுடன் சர்ச்சையை ஏற்படுத்த காரணமாகவும் அமைந்தன.

சீனாவின் பொருளாதாரம் துரித வளர்ச்சியடைந்து வருகின்றது. அது இவ்வாறே தொடர்ந்து வளர்ச்சியடையுமானால் 2025 ஆம் ஆண்டில் ஜப்பானிய பொருளாதாரத்தை மிஞ்சி விடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கான எரிபொருள் மற்றும் உலோகங்கள் போன்ற மூலப் பொருட்களிற்கான தேவை அந்நாட்டிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

90களிலிருந்து அதன் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை விடவும் உள்நாட்டு நுகர்வானது அதிகரிக்க ஆரம்பித்தது. இதன் தேவையை ஈடு செய்வதற்கு சீனா பெருமளவிற்கு வெளிநாட்டு இறக்குமதியையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியின் முக்கிய மையமான மத்திய கிழக்கிலிருந்து எரிபொருட்களை இடையூறின்றிப் பெற்றுக் கொள்வதைப் பற்றிய சீனாவின் கவலை அதன் ஆழ்கடல் கடற்படையின் திட்டமிடலிற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன், தைவானுடனான முறுகல் நிலை அதிகரித்து யுத்தமாக வெடித்தால், வெல்வதற்கு கடற்படை முக்கியமான பங்கை ஆற்றும் என்பதையும் உணர்ந்துள்ளது.

ஆயினும், சீனாவின் கடற்படை வளர்ச்சியானது அதன் அண்டை நாடுகளாலும் உலகின் மற்றைய முக்கிய நாடுகளாலும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது.

இம்மாதம் இரண்டாம் திகதி வெளியான ஐப்பானிய பாதுகாப்பு அறிக்கை இதனைத் தெளிவாகக் காட்டியுள்ளது.

ஆழ்கடல் கடற்படைக்குரியதாகத் தோன்றும் திட்டங்கள் உட்பட சீனாவின் இராணுவ நவீனமயமாக்கல் அதன் சுய பாதுகாப்பிற்கான தேவைகளையும் விட அதிகமாகின்றதா என்பதைத் தீர்மானிப்பதற்கு நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் வெளியான அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையை பிரதிபலிப்பதாக இவ் அறிக்கை அமைந்துள்ளது.

"அண்மைக்காலத்தில் சீனாவின் இராணுவ நவீனமயமாக்கலின் பிரதான குவிவுமையம் தைவான் நீரிணையில் ஏற்படச் சாத்தியமான மோதலிற்கு தயாராக இருப்பது போன்று தென்படுவதாக இருந்த போதிலும் தைவானிற்கு அப்பாலான தந்திரோபாய தோற்றப்பாடு குறித்தும் சீனாவில் சில இராணுவத் திட்டமிடலாளர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.

தைவான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக்கு அதன் கடற் பாதுகாப்பும் புற எல்லையை மேலும் கடலை நோக்கி நகர்த்துவதை சாத்தியமாக்குவதுடன் போக்குவரத்திற்கான பிராந்திய கடல்வழிகளில் செல்வாக்கு செலுத்தும் பீஜிங்கின் ஆற்றலை மேம்படுத்தும் என்ற கண்ணோட்டத்தை சில சீன இராணுவ ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்"என்று அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது அதன் இராணுவ நவீனமயமாக்கலினை சாத்தியமாக்குவதாக அமைந்துள்ளது.

"தொடரும் பொருளாதார வளர்ச்சியும் சீர்திருத்தமும் மக்கள் விடுதலை இராணுவத்தின் நவீன மயமாக்கலிற்கு அத்தியாவசியமானதாகும். தொழிற்துறை, தொழில்நுட்பம், மற்றும் மனித வளங்களில் சீனாவின் பொருளாதார திறன்களை பரந்த அடிப்படையிலான வளர்ச்சியும் நவீன மயமாக்கலும் விரிவுபடுத்துவதுடன் அதன் தலைவர்கள் இராணுவ நவீனமயமாக்கலை விரைவுபடுத்துவதையும் இயலுமானதாக்கியுள்ளது." என்று கூறும் அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை,

கடந்த காலப் போக்குகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டளவில் சீனாவின் பொருளாதாரம் 6.4 ரில்லியன் அளவிற்கு விரிவடைய முடியும். தொடரும் சகல வழிகளிலுமான பொருளாதார செயற்பாடுகளால் சீனாவின் பாதுகாப்பு பிரிவு அநேகமாக அனுகூலங்களைப் பெறும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சீனாவானது மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையான கடல்வழிகளில் தந்திரோபாயத் தொடர்புகளை கட்டியெழுப்பி வருகின்றது. சீனாவின் சக்தி வளத்திற்கான நலன்களினைப் பாதுகாப்பதற்கான நிலைப்படுத்தல்கள் என்று இதனை கருதினாலும் கூட, இது பரந்த பாதுகாப்பு விடயங்களிற்கும் பயன்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரிற்காக தயாரிக்கப்பட்ட " ஆசியாவில் சக்திவள எதிர்காலம்" என்ற தலைப்பிலான உள் அறிக்கை தெரிவிப்பதாக "வாஷிங்டன் டைம்ஸ்" இவ்வாண்டு ஜனவரியில் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானிலுள்ள குவாடாரில் அமைத்து வரும் கடற்படைத்தளம் உட்பட மத்திய கிழக்கிலிருந்து தென் சீன வரையும் நீண்ட தளங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளினுடைய "முத்துக்கள் கோர்க்கப்பட்ட இழை" (குœணூடிணஞ் ணிஞூ கஞுச்ணூடூண்) என்ற தந்திரோபாயத்தை சீனா திட்டமிட்டுப் பின்பற்றுவதாக அந்த உள் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானைத் தவிர, பங்களாதேஷுடனான உறவினை சீனா வலுப்படுத்தி வருகின்றதுடன் சிட்டாகொங்கில் கொள்கலன் துறைமுக வசதியை உருவாக்கி வருகின்றது. மாலைதீவுடனும் கடற்படை வசதிகளிற்கான தளம் ஒன்று குறித்து உடன்பாட்டை இது உருவாக்கியுள்ளது.

மலாக்கா நீரிணையை கண்காணிக்கக்கூடிய பூகோள வசதியுடைய மியான்மாரின் இராணுவ ஆட்சியாளர்களுடன் சீனா நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது. அதன் கொக்கோ தீவுகளில் கடற்படைக்கான தளத்தை ஏற்படுத்தி வருவதுடன் இலத்திரனியல் புலனாய்வு சேகரிப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

கம்போடியா, தாய்லாந்து போன்றவற்றுடனும் சீனா தனது கடல்சார் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது.

தனது சக்தி வளம் பாதுகாப்பிற்கு தேவை என்ற காரணத்தைப் பீஜிங் முன்னிறுத்தினாலும் இவற்றின் இராணுவ நோக்கிலான இதர பயன்பாடுகள் பாரியவையாகும். இதை எதிர்கொள்ள ஏனைய நாடுகள் தீவிரமாக முனையும். இதனால் எதிர்வரும் காலத்தில் பசுபிக் மற்றும் இந்து சமுத்திரத்தில் ஒரு கடற் பனிப் போரிற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளன.
Reply
#36
இதைவிட என்னொமொன்றை குறிப்பிட வேண்டு.. உலகத்திலேயே அதிகளவு நாட்களாக சண்டை செய்யாமல்(கடைசியாக இந்தியாவோடு பல நூற்றாண்டுகளுக்குமுன்னராக இருக்கவேண்டும்..???) தனது இராணுவத்தை மிகவும் கட்டுக்கோப்புடன்,, அமெரிக்க, ரஸ்யா படைகளுடன் ஒப்பிடக்கூடிய விதத்தில் நவீன மயமாக வைத்திருக்கும் மிகபெரும் பலத்தை மனித எண்ணிக்கைமூலம் வைத்திருக்கும் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.. பிற்க்காலத்தில் அமெரிக்க இந்திய நாடுகளை ஆட்டிப்படைக்கும் சக்தியாக உருவெடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
Danklas Wrote:இதைவிட என்னொமொன்றை குறிப்பிட வேண்டு.. உலகத்திலேயே அதிகளவு நாட்களாக சண்டை செய்யாமல்(கடைசியாக இந்தியாவோடு பல நூற்றாண்டுகளுக்குமுன்னராக இருக்கவேண்டும்..???) தனது இராணுவத்தை மிகவும் கட்டுக்கோப்புடன்,, அமெரிக்க, ரஸ்யா படைகளுடன் ஒப்பிடக்கூடிய விதத்தில் நவீன மயமாக வைத்திருக்கும் மிகபெரும் பலத்தை மனித எண்ணிக்கைமூலம் வைத்திருக்கும் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.. பிற்க்காலத்தில் அமெரிக்க இந்திய நாடுகளை <b>ஆட்டிப்படைக்கும் சக்தியாக உருவெடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை</b>... Idea

உருவெடுத்தாலும் இல்ல <b>உருவெடுத்தாச்சு</b>.. தற்போதய நிலமையின்படி அமெரிக்கா சீனாவுக்கு பலகோடி மில்லியன் டொலர் கடன் பணம் திருப்பிவளங்க வேண்டி உள்ளது. எல்லாம் கடனுக்கு பொருட்கள் வங்கி இருக்கிறார்கள். அதுதான் அமெரிக்கா எப்பவும் சீனா விசயத்தில் அடக்கி வாசிக்கிறது என்கிறார்கள்..
::
Reply
#38
படிக்கவேண்டிய பத்திரிகை பரபரப்பு;
Reply
#39
[quote=Danklas]இதைவிட என்னொமொன்றை குறிப்பிட வேண்டு.. உலகத்திலேயே அதிகளவு நாட்களாக சண்டை செய்யாமல்(கடைசியாக இந்தியாவோடு பல நூற்றாண்டுகளுக்குமுன்னராக இருக்கவேண்டும்..???

இந்திய சீன எல்லை யுத்தம்... 1962 இல் நடந்தது...இப்போ தாய்வான் மூலம் அமெரிக்கா சீனாவுக்கு தலை வலி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது...! அதுபோக சீனாவுக்குள் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பரப்பி விடவும் அமெரிக்கா திட்டம் வைத்திருக்கிறது...! இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது அமெரிக்க உச்சரிப்பில் அல்கொய்டா பயங்கரவாதம் என்பது சோவியத் படைகளுக்கு எதிராக ஆப்கானில் அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்றே கூறலாம்..!

சீனாவின் பொருளியல் வளர்ச்சி அபரிமிதமாக உள்ள போதும் நாடு இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறது...! பெரிய சனத்தொகை உள்ள நாடுகளின் பலவீனம் சீனாவுக்கும் உள்ளது...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
இந்தியத் தூதுவர் யாழுக்கு இரகசிய விஜயம்!!
ஜவியாழக்கிழமைஇ 25 ஓகஸ்ட் 2005இ 05:28 ஈழம்ஸ ஜதாயக செய்தியாளர்ஸ
இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் நேற்று புதன்கிழமை யாழ். குடாநாட்டிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டார்.


நேற்று மாலை சிறிலங்கா விமானப்படையினருக்கு சொந்தமான விசேட ஹெலிகொப்டர் மூலம் யாழ். சென்ற இந்திய தூதுவர்இ யாழ். குடாநாட்டிற்கான சிறிலங்கா பதில் செயலாளருடனும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்ற இச்சந்திப்பு குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு யாழ். குடாநாட்டின் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நனறி புதினம்
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)