08-05-2005, 10:06 PM
sinnakuddy Wrote:இந்தியாக்காரனுக்கு நேரு காலத்திலிருந்து இந்திய விஸ்தரிப்பு வாதகொள்கை இருந்தது இலங்கை நேபாளம் மாலை தீவு பூட்டான் தனது எல்லைக்குட்பட்ட நாடுகளாகவே கருதுகிறது. இந்து சமுத்திரத்துக்குள் வேறு ஒருவரும் ஆதிக்க செலுத்தவிடாது என்று கொளகையுடையது.
80களில் ஜேஆர் இந்தியா மீறி எடுத்த முடிவுகளால் இந்தியா வுக்கு கவலை அளித்தது.முக்கியமாக புத்தளத்திலுள்ள Volce of america radio branch கட்ட ஜே ஆர் அனுமதி வழங்கு நிலையில் இருந்தார். புத்த ளத்தில் உள்ள அமெரிக்க டிரான்ஸ்மீற்றர் இனால் இந்து சமுத்திரத்திலுள்ள இந்திய நீர்மூழ்கி கப்பல்களின் சிக்னல் பரிமாற்றத்தை அறியகூடியதாயிருக்கும்.அப்பொழுது கோல்ட் வார் காலகட்டம ரஸ்யாவுடன் பாதுகாப்புரீதியாக நெருங்கிய காலகட்டம் .ஜேஆரை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர இந்தியா முடிவெடுத்தது.தமிழ்மக்களின் தேசிய போராட்டத்தினூடாக அதை விளையாட வெளிக்கிட்டது.இளைஞர்களளுக்கு ஆயதம் பயிற்ச்சி வழங்கி குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இலங்கையை சரணடைய வைக்கலாமென்று நினைத்தது அதில் ஓரளவு வெற்றியும் கண்டது.பின் தமிழ்தேசியத்துக்கு எதிரி யாக காட்டிகெண்டமாயாலும் 1987 பெர்லின் சுவர் உடைத்தாபிறகு கோல்வார் முற்று பெற்றமையாலும் இந்தியா இலங்கை விவகாரங்களில் அக்கறையை குறைத்தக்கொண்டது இந்தியா தமிழ் தேசியநலனுக்கு எதிராகவே எப்பவும் நடக்கும். ஏனெனில் தமிழ் தேசியம் முனைப்பு பெறுவது தனது நலனுக்கு ஆபத்தென்று பயம் கொள்ள தொடங்கிவிட்டது அதனால் ரிசி கூறுவதுபோல் நடக்குமென்று நானும நம்புகிறேன்
இந்தியா எதிரா நடக்கும் என்றால் இதுவரை அப்பிடி நடக்கவில்லை என்றாகும். இதைவிட மோசமாய் நடப்பது என்றால் வெளிப்படையான சண்டை தான். அப்பிடியானால் அமெரிக்காவும் சேந்தா இல்லையா?.. அல்லது இந்தியா எம்மீது கனிவான போக்கு வைதிருந்தது என்றல் எப்படி வைத்திருந்தது? இப்படி நிறையக் கேள்விகள் எழுகின்றது.
அதை எல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இலைமறை காயாய்த்தெரிவது புலிகள் மீதான அமெரிக்க கரிசனம் சமாதானவிரும்பிகளாய் அதுகாட்டும் ஆர்வம். இலங்கையில் சமாதானம் வரவேண்டும் என்று அது போடும் வேடம் எல்லாம் தனது இலங்கை வியாபாரத்துக்கு அல்லது நலனுக்கு போரினால் ஏதும் பங்கம் வரக்கூடாதென்ற கரிசனம். போர் நடக்கும் பூமியில் இயல்பான வியாபாரம் அல்லது போக்குவரத்து சாத்தியப்படாது...
இப்போ இந்தியாவின் நோக்கம் புலிகளை முடிந்த அளவு பலவீனப் படுத்துவது அல்லது பிளவுபடுத்திவிடுவது தான் இதில் இருந்து அவர்கள் மாறவில்லை அல்லது மாறப்போவது இல்லை..
அப்படியானால் அமெரிக்க இந்திய கூட்டு இலங்கையில் எப்படிச்சாத்தியமாகும். தவிர நன்கு பயிற்றப்பட்ட புலி உறுப்பினர்களை பிரித்து ஒரு கட்டுக்குள் இல்லாமல் சிதற விடும் பட்சத்தில். பாதிப்புக்கள் அமெரிக்காவுக்கோ அல்லது இந்தியாவுக்கோதான் இதை அமெரிக்கா ஈராக்கில் நன்கு அனுபவிக்கிறது.
<b>சூடு கண்டபூனை அமெரிக்கா</b>(ஆப்கான், ஈராக், வியற்நாம்) <b>அடுப்படியை நாடாது........</b>
::